Jump to content

ஹிக்ஸ் போசொன் பற்றிய அறிவிப்பு இன்று.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

9906026_01_layout_sch.jpg

எப்படி நாங்கள் வாழும் இந்தப் பூமி உட்பட்ட பல கோடி கிரகங்களும்.. பல கோடி நட்சத்திரங்களும் அடங்கிய.. பல கோடி.. அகிலங்களும்.. கொண்ட.. எண்ணிப் பார்க்க முடியாத பரிமானமுடையதுமான இந்தப் பிரபஞ்சம் தோன்றியது என்று கேட்டால்.. அதற்கு இன்றளவில் சொல்லக் கூடிய காத்திரமான

பதில்.. பெரு வெடிப்பு.. அல்லது பிக் பாங்.

இந்த பெரு வெடிப்பின் பின் தோன்றிய துணிக்கைகளில் ஒன்றாக கருதப்படும்.. ஹிக்ஸ் பொசொன்..Higgs boson.. தான் அணுக்கள் என்ற கட்டமைப்பினூடு.. திடப்பொருட்கள் உருவாகக் காரணம் என்று சொல்லப்படுகிறது. இதனை பரிசோதனை ரீதியில் நிரூபிக்க என்று..

27 கிலோமீற்றர்கள் சுற்றளவைக் கொண்ட துணிக்கைகள் மோதும் மொத்துகைக் கூடம் (LHC) சுவிஸ் - பிரான்ஸ் எல்லையை ஒட்டி சுமார் 10 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் ஆரம்பிக்கட்டு.. கடந்த சில ஆண்டுகளாக எமது உடல் உட்பட திடப் பொருட்களை (திண்மம்.. திரவம்.. வாயு) ஆக்கியுள்ள.. அணுவின் கருவில் உள்ள நேர் துணிக்கை புரத்தோன்களை மோதவிட்டு ஆராய்ந்ததில் ஒரு கட்டத்தில்.. சுமார் 50 ஆண்டுகளாக கொள்கை அளவில் கண்டறியப்பட்ட ஹிக்ஸ் போசொன் (கடவுளின் துணிக்கை) குறித்தான சில சமிக்ஞைகள் கிடைக்கப்பெற்றதாக விஞ்ஞானிகள் கூறி வந்தனர்.

இன்று அது உண்மையில் கண்டறியப்பட்டதா என்ற அறிவிப்பிற்கான நாள் ஆகும். இந்த ஹிக்ஸ் போசொன் ஒருவேளை கண்டறியப்பட்டாலும்.. அது நிச்சயமாக கடவுளின் இருப்பை பற்றி எதுவும் சொல்லப் போறதில்லை. காரணம்.. ஹிக்ஸ் போசொனின் கண்டுபிடிப்பு கூட இன்னும் பல ஆயிரம் கேள்விகளின் ஆரம்பமாக இருக்குமே தவிர.. முடிவாக இருக்காது என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

அறிவியலுக்குத் தான் வயதில்லையே. எதிர்கால சந்ததி.. இந்த அறிவியல் தேடலில்.. தன்னை இணைத்துக் கொள்வதன் மூலம்.. இன்னும் பலவற்றை புதிதாக கண்டறியவும்.. இந்தப் பிரபஞ்சம் பற்றிய மர்மங்கள் துலங்கவும்.. அதன் பயனாக புதிய தேவைகளை மனிதன் நிறைவு செய்யவும் வழிகள் தோன்றலாம்..!

இது ஹிக்ஸ் போசொன் அறிவிப்புக்கான நாள்.. சார்ந்து.. நெடுக்ஸ் வழங்கும் ஒரு சிறிய குறிப்பு..!

Higgs%2C_Peter_%281929%293.jpg

ஹிக்ஸ் எமக்கான ஒரு வழிகாட்டி.. அறிவியலாளர். நாம் தேடல் செய்ய இந்தப் பிரபஞ்சத்தையும் கடந்த பரிமானம் உள்ள விடயங்கள் உள்ளன என்பதை இனங்காட்டியுள்ள அறிவியலாளர்.

ஆதாரங்கள்:

http://www.bbc.co.uk...onment-16153804

http://news.bbc.co.u...ght/9657547.stm

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹிக்ஸ் போசொன் (கடவுளின் துகள்) கண்டுபிடிப்பு அறுதியில்லை.

_57297354_57290147.jpg

பெரும் பரபரப்புடன் இயற்பியல் அல்லது பெளதீகவியல் உலகம் எதிர்பார்த்த CERN இன் LHC பரிசோதனைக் கண்டுபிடிப்புக்கள் ஹிக்ஸ் போசொன் (இந்தப் பிரபஞ்சத்தில் திடப்பொருட்கள் தோன்ற காரணமான அடிப்படை கூறு என்று நம்பப்படும்.. கடவுளின் துகள் என்று சொல்லப்படும் துகள்) பற்றி அறுதி இட்டு ஆதாரங்களை சமர்ப்பிக்க தவறிவிட்டது. இருந்தாலும்.. ஹிக்ஸ் போசொன் இருப்பதற்கான வாய்ப்பை அது உறுதி செய்ய முயன்றிருக்கிறது.

Atlas மற்றும் CMS ஆகிய இரண்டு மையங்களில் இருந்து சுயாதீன செயற்பாடுகளைக் கொண்ட இரண்டு, வெவ்வேறான விஞ்ஞானிகளைக் கொண்ட குழுமங்கள் இந்த ஆய்வில் ஈடுபட்டிருந்துள்ளன.

அப்படி ஹிக்ஸ் போசொன் இருக்குமானால் அது 124-125 gigaelectronvolts (GeV) எடை கொண்டதாக இருக்கும் என்றும் இந்த எடை அளவு புரோத்தனின் எடையை விட 130 மடங்கு அதிகம் என்றும் இந்த ஆய்வில் ஈடுபட்டிருந்த வெவ்வேறான இரண்டு விஞ்ஞானிகள் குழுமங்களுமே.. கிட்டத்தட்ட ஒரே வகையாக கணிப்பிட்டுள்ளன. இதுதான் ஹிக்ஸ் போசொனின் இருப்புக் குறித்தான இந்த ஆய்வில்.. விஞ்ஞானிகளை மெய்சிலிர்க்க வைத்துள்ள நிகழ்வாகும்.

ஒரு கண்டுபிடிப்பை கண்டுபிடிப்பாக அறிவிக்க 5 சிக்மா நிச்சயத்தன்மை (certainty) அவசியம். ஆனால் இந்த ஆய்வில் ஹிக்ஸ் போசொன் இருப்பிற்கான ஆதாரங்கள் வெறும் 2 சிக்மா certainty ஐ மட்டுமே கொண்டுள்ளதால்.. இதை ஒரு கண்டுபிடிப்பாக விஞ்ஞானிகள் கருதாமல்.. ஹிக்ஸ் போசொன் இருப்பதற்கான சாத்தியப் பாடு குறித்து பேச மட்டுமே பாவித்துள்ளனர்.

இதற்கிடையே ஹிக்ஸ் போசொன் கண்டுபிடிப்பு அறுதித் தன்மையை எட்டாததால் எதிர்காலத்தில் ஹிக்ஸ் போசொனை வேறு வழிகளில் கண்டறிய விஞ்ஞானிகள் முயற்சிகளை மேற்கொள்ளப் பரிந்துரைத்துள்ளதுடன் ஹிக்ஸ் போசொன் விரைந்து அழிவடைகிறது அல்லது வேறு திடமான துணிக்கையாக மாறிவிடுகிறது என்றும் எதிர்வுகூற விளைந்துள்ளனர்.

எதுஎப்படியாக இருந்தாலும் ஹிக்ஸ் போசொனுக்கான பல பில்லியன் டொலர் செலவழிப்புத் தேடல் அதன் இருப்பை அறியும் வரை அல்லது நிரந்தரமாக நிராகரிக்கும் வரை ஓயமாட்டாது என்பதாகவே விஞ்ஞானிகளின் 13-11-2011 அறிவிப்பு தெரிவிக்கிறது.

மேலும்.. இந்த நிச்சயமற்ற நிலை.. ஹிக்ஸ் போசொன் கடந்தும் துணிக்கைப் பெளதீகவியல் பற்றி காத்திரமாக சிந்திக்க தூண்டியுள்ளது.

மேலதிக இணைப்பு -1

http://kuruvikal.blogspot.com/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தாய்லாந்தில், விசேஷ உணவாக பாம்பு சாப்பிடுவதை வலைத்தளங்களில் பாத்திருக்கிறேன். பாம்பிறைச்சிப்பிரியர்கள் துடிக்கிறார்களோ என்னவோ?
    • ஆரம்பத்தில் ஆங்கிலேய ஆட்சியின் போது ஆங்கில மூலக்கல்வி இருந்தது, ஆங்கில கல்வி கற்றவர்கள் அதன் மூலம் அரச உயர் உத்தியோகங்களை பெற்று முன்னேறி செல்ல அதனை தொடர்ந்து அனைத்து மக்களும் ஆங்கில கல்வி பெற்று அரச உத்தியோகம் பெறும் நிலை வரும் போது அதனை தடுக்க  தாய் மொழிக்கல்வியினை கொண்டு வந்து தமக்கு சேவகம் செய்ய ஒரு ஆண்டான் அடிமை அடிப்படையான ஒரு நிலையினை உருவாக்கியதாக கூறப்படுகிறது (இந்த கூற்று தவறாகவும் இருக்கலாம்). இதனால் தமிழ் மொழி வளர்ச்சி பெற்றது என கூறி தமிழிற்கு சேவை செய்தார், மதத்திற்கு சேவை செய்தார் என நுண்ணிய அரசியல் செய்ததைப்போலவே (இந்த கூற்று தவறாகவும் இருக்கலாம்) தமிழ் நாட்டில் பிராமனர் ஈடுபட்டனர், இந்தியாவில் இவ்வாறு பிற்படுத்தப்பட்ட சமூகங்களை பொருளாதார ரீதியாக தர முயர்த்த பல சலுகைகள் அங்குள்ள பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு உள்ளது ஆனால் எமது சமூகம் அவ்வாறான நிலையின் உருவாக்க விரும்பாத நிலையே இன்னமும் அடிப்படை கல்வியினை பெறமுடியாத வறுமை சூழ்நிலையிலேயே வறுமைக்கோட்டிற்க்கு கீழே பல தலைமுறைகளாக வாழும் நிலை காணப்படுகிறது. ஊரில் ஒருவரது மாடு காணாமல் போய்விட்டது அவர் தமிழீழ காவல்துறையில் சென்று முறயிட்டார், அவரிடம் உங்களுக்கு யார் மேலாவது சந்தேகம் உண்டா என கேட்டார்கள் அதற்கு அவர் சாதிய வார்த்தையில் விழித்து அவர்கள் மேல்தான சந்தேகம் உள்ளது என்றார், அவருக்கு 5000 ரூபா அபராதம் விதிதார்கள், அமெரிக்காவில் ஆபிரிக்க வம்சாவளியினரை குற்றப்பரம்பரையாக பார்ப்பது போல பார்க்கும் நிலை எம்மிடமும் உள்ளது. என்னை பொறுத்தவரை தமக்கான உரிமைகளை இழந்து பல தலைமுறைகளாக சைவர், தமிழர் என தமது சுயத்தினை இழந்து  தமிழ் சமூகம் எனும் போர்வையில் அடிமைகளாக  இருப்பதனை விட வேறு மதம், இனம் என்பதன் மூலம் சாதாரண மனிதர்கள் போல சகல உரிமைகளோடு வாழ வேண்டும். நீங்கள் கூறுவது போல திருமண பந்தத்திற்கு மட்டும் சாதி பார்ப்பதாக எடுத்து கொன்டாலும், இந்த வேற்றுமையினை எதிர்பார்க்கின்ற சமூகமாக இருந்த வண்ணம் எவ்வாறு தமிழர், மதம் எனும் ஒருமைப்பாட்டுற்குள் வரவேண்டும் என எதிர்பார்ப்பது நியாமாக இருக்குமா? உண்மையாக உங்கள் கருத்திற்கு எதிரான கருத்தல்ல, அத்துடன் தனிப்பட்ட  ரீதியில் சமய, மொழி எனும் அடிப்படையில் பெயர் பெற்ற காலமானவர்கள் மேல் எனக்கு எந்த காழ்ப்புணர்வும் இல்லை, ஆனால் இந்த பிற்போக்குவாதத்தினை கடந்து தமிழராக நாம் எல்லோரும் ஒன்றிணைய வேண்டும். 
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • வவுனியா மாவட்டத்தின் வாக்களிப்பு நிலைவரம்! ஒன்பதாவது ஜனாதிபதி தேர்தலிற்கான வாக்குப்பதிவுகள் இன்று காலை 07.00 மணி முதல் ஆரம்பமாகி சுமுகமான முறையில் இடம்பெற்று வருகின்றது.   வவுனியா மாவட்டத்தில் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பதை அவதானிக்க கூடியதாக உள்ளதுடன், இராஜாங்க அமைச்சர் கே.கே.மஸ்தான் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை செலுத்தியிருந்தார். https://athavannews.com/2024/1400351   ##################  ##################    ###################     மலையக பெருந்தோட்ட மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு!   இலங்கையின் 9வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகி தற்போது இடம்பெற்று வருகின்றது. குறிப்பாக மலையகத்தை பொருத்தவரை பெருந்தோட்ட மக்கள் உட்பட அனைவரும் வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று தங்களுடைய வாக்குகளை பயன்படுத்துவதை காணக்கூடியதாக இருக்கின்றது. அதன்படி நுவரெலியா-மஸ்கெலியா தேர்தல் தொகுதியில் 347,646 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.aகொத்மலை தேர்தல் தொகுதியில் 88219 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். அத்துடன் 90,990 வாக்காளர்கள் வலப்பனை தேர்தல் தொகுதியில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதோடு ஹங்குராங்கெத்த தேர்தல் தொகுதியில் 78,437 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். நுவரெலியா மாவட்டத்தில் 534 வாக்களிப்பு நிலையங்களில் வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர். மேலும், 52 வாக்கு எண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குகளை எண்ணுவதற்காக நுவரெலியா காமினி தேசிய கல்லூரியில் 41 வாக்கு எண்ணும் நிலையங்களும், நுவரெலியா மாவட்ட செயலகத்தில் தபால் வாக்குகள் எண்ணுவதற்காக 11 வாக்கு எண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல் மத்திய மாகாணத்தில் கண்டி, மாத்தளை போன்ற பகுதிகளிலும் ஊவா மாகாணத்தில் பதுளை, பண்டாரவளை ஆகிய பகுதிகளிலும் வாக்களிப்பு மிகவும் நீதியாகவும் சுதந்திரமான முறையிலும் நடைபெற்று வருவதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் தெரிவிக்கின்றன. https://athavannews.com/2024/1400359 #################  ##################    ################### மன்னாரில் அமைதியான முறையில் வாக்களிப்புகள் ஆரம்பம்! மன்னாரில் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி ஆகிய நிலையில் இன்றைய தினம் காலை 7 மணி முதல் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்புகள் இடம்பெற்று வருகின்றது. இன்னிலையில் வன்னி மாவட்டம் மன்னார் தேர்தல் தொகுதியில் 98 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்புகள் இடம்பெற்று வருகின்றது. மன்னார் மாவட்டத்தில் 90 ஆயிரத்து 607 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர் என்றும் மன்னார் மாவட்டத்தில் உள்ள வாக்களிப்பு நிலையங்களுக்கு உள்ளூர் மற்றும் வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்பு குழுவினர் சென்று வாக்களிப்பை அவதானித்து வருகின்றனர். குறிப்பாக ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்புக் குழுவினர் விஜயம் செய்து கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மன்னார் மாவட்டத்தில் அமைதியான முறையில் வாக்களிப்புகள் இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1400362
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.