Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரச்சனைகளுடன் தொடங்கிய 9வது சென்னை சர்வதேச படவிழா/2011

Featured Replies

Friday, December 16, 2011

பிரச்சனைகளுடன் தொடங்கிய 9வது சென்னை சர்வதேச படவிழா/2011

DSC_0316.JPG

சென்னை பிலிம்பெஸ்ட்டிவல் இனிதே தொடங்கியது என்றுதான் இதுவரை அந்த தகவலை பகிர்ந்து இருக்கின்றேன்...

ஆனால் தமிழ்நாட்டில் தலைநகரம் சென்னையில் நடக்கும் ஒரு சர்வதேச திரைப்படவிழாவில் விருது பெற்ற தமிழ் படங்கள் அதுவும் இந்திய சென்சார் போர்டு அனுமதி அளித்து பல விருதுகளை பெற்ற படங்கள் புறக்கணிக்கபட்டு இருக்கின்றன..

அவற்றுள் முக்கியமானது.. செங்கடல் மற்றும் தென்மேற்கு பருவகாற்று போன்ற படங்கள் திரையிட அனுமதி அளிக்காமல் புறக்கணிக்கபட்டது என்பதுதான் போராட்டத்துக்கான அடிப்படை..

DSC_0321.JPG

DSC_0324.JPG

DSC_0326.JPGநேற்று சென்னையில் தொடக்கவிழா நிகழ்சி நடந்து கொண்டு இருக்கும் போதே....திடிர் என்று கூட்டத்தில் பெரிய சலகலப்பு...எடிட்டர் லெனின்,லீனா மணிமேகலை போன்றவர்கள் தங்கள் குழுவினருடன் அரங்கத்தின் உள்னே வந்து போராட்டத்தை நடத்தினார்கள்...

அதில் சர்வதேச படவிழவில் தணிக்கையை அனுமதிக்காதே.. தமிழ்படத்தை தமிழ்நாட்டு திரைப்படவிழாவில் திரையிட முடியவில்லை என்றால் இலங்கையிலா திரையிட முடியும்? என்பதாக கோஷங்கள் மற்றும் எதிர்ப்பு அட்டைகள் தாங்கி பிடித்து போராட்டம் நடைபெற்றது..

DSC_0325.JPG

DSC_0340.JPGஇதனை விழாக்குழுவினர் சற்றும் எதிர்பார்க்கவில்லை...போராட்டம் செய்தவர்களை என்ன செய்வது என்று கை பிசைந்து கொண்டு நின்றார்கள்.. காரணம் எடிட்டர் லெனின் போராட்டகாரர்களில் ஒருவர்...அதன் பின் நடிகர் சரத்குமார் தலையீட்டு உரிய நடவடிக்கைஎடுக்கப்படும் என்று உறுதி அளித்த பிறகே போராட்டம் கைவிடப்பட்டது..

அடுத்து பேச வந்த விழாவின் நாயகன்....இயக்குனர் சேகர்கபூர்படம் எடுத்து அந்த படம் திரையிட முடியவில்லை என்றால் அதை விட் கொடுமை வேறு எதுவும் இருக்க முடியாது என்றும்.. தான் எடுத்து பாண்டிட்குயின் படம் இது போல ஒரு எதிர்ப்பை சந்தித்தது என்று சொன்னார்...

DSC_0333.JPG

படம் ஆரம்பிச்ச 15 நிமிடத்துக்கு மேல யாரு வந்தாலும் உள்ள விடமாட்டேன் என்று அறிவிப்பை வைத்தார்கள்..இப்போது தியேட்டரின் சைடு கதவு வழியாக விடுவோம் என்று சொல்லி இருக்கின்றார்கள்..பர்மிஷன் எல்லாம் போட்டு விட்டு படம் பார்க்க வருபவர்கள் 20 நிமிடம் லேட்டாக வந்து விட்டார்கள் என்று காரணம் காட்டி உள்ளே அனுமதிக்காமல் இருப்பது கேவலம்...

DSC_0320.JPG

போன முறை போல இந்த முறை வாலின்டியராக பெண்களை போடாமல் இந்த முறை தடி தடி ஆம்பளை பசங்களை போட்டு விட்டதால், படம் பார்க்க வந்த ரசிகர்களை.. பச்சை கலர் சட்டை போட்ட வாலிண்டியர் பசங்க..ஏதோ இந்திய பிரதமர் பதவியே தனக்கு கொடுத்து விட்டது போல முதல்நாள் எல்லோரிடமும் எகிற...பலர் சண்டைக்கு வரிந்து கட்டிக்கொண்டு சென்றதால் இப்போது அடங்கி இருக்கின்றார்கள்..

DSC_0318.JPG

முன்பு போல செல்போன் ரிங்டோன் அதிகம் படம் பார்க்கும் போது டிஸ்டர்ப் செய்யவில்லை என்பது பெரிய ஆறுதல்.. அந்த விஷயத்தில் அந்த பச்சைகலர் டிசர்ட் போட்ட வாலின்டியர்களை பாராட்டியே ஆக வேண்டும்..

இந்த முறை 25 லட்சம் தமிழக அரசு சார்பாக இந்த விழாவுக்கு முதல்வர் ஜெ கொடுத்து இருக்கின்றார்கள்.

DSC_0322.JPG

வழக்கம் போல சந்தானபாரதி,ரமேஷ்கண்ணா,பாத்திமாபாபு,சீஆர் சரஸ்வதி,போன்றவர்கள் ரசிகர்களுடன் ஆஜர்..

DSC_0319.JPG

நினைப்பது அல்ல நீ

நிரூபிப்பதே நீ.....

EVER YOURS...

F30F913F85685D6949F90EB0E42B1E9D.png

http://www.jackiesekar.com/2011/12/9-2011.html

thirai_logo.png

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.