Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வன்னியின் முதல் பதிவருடன் நடந்த ஒரு விபரீதச் சந்திப்பு

Featured Replies

வன்னியின் முதல் பதிவருடன் நடந்த ஒரு விபரீதச் சந்திப்பு

சில அதிசயங்கள் ரகசியமாகவே நடந்தேறிவிடுகிறது. நடந்தேறிவிட்ட ரகசியங்கள் கூட சிலவேளைகளில் மட்டும் தான் எம் காதுகளுக்கு எட்டுகிறது.

யாரிந்தப் பதிவர் என்பதே இந்த வருட ஆரம்பத்தில் தான் எனக்குக் கிடைத்தது.

older+brother+and+sister.jpg

எமது முதல் அறிமுகம் ஒரு சர்ச்சையில் நாம் சிக்கும் போது எழுதிய பெரும் மடல் ஒன்றிலிருந்து தான் ஆரம்பித்தது. அத்தொடர்பிற்கு எமது கவிக்கிழவனாக இருந்த யாதவண்ணா தான் காரணமாக இருந்தார்.

அன்றொரு நாள் ஒரு மெயில் வந்திருந்தது “தம்பி விரைவில் வெளிநாடு ஒன்றிலிருந்து ஊர் வருகிறேன். உங்களைச் சந்திக்க வேண்டும்“ என்று இருந்தது. அத்துடன் தானும் வன்னியின் இறுதிப் போர் வரை அங்கே இருந்த ஒரு நபர் எனவும் குறிப்பிட்டிருந்தார். யாரிவர் என நுழைந்து பார்த்தால் அவரும் ஒரு பதிவர் தான் என்றிருந்தது.

அவர் பதிவை பார்த்ததும் நானே ஒரு கணம் குழம்பிவிட்டேன் காரணம் அது 2008 ல் ஆரம்பிக்கப்பட்ட ஒரு வலைப்பதிவாகும்.

பதிவுகளைப் பார்த்தால் ஒரு ரிதத்தில் இடப்பட்டிருந்தது. ஆரம்பத்தில் எனக்கு ஒரு சந்தேகம் எழுத்தது. யார் இவர். ஏன் இப்படி ஒரு பித்தலாட்டம் ஆடுகிறார். ஏற்கனவே புலம்பெயர் தேசத்தில் இருந்து ஏமாற்றிப் பணம் பறிக்கும் ஒரு கூட்டம் ஒரு சில நாளுக்கு முன் தான் என் மீது கடுப்பாகி தொலைபேசி ஒன்றில் வாழ்த்து மாரி பொழிந்திருந்தார்கள்.

நண்பரிடம் கேட்ட போது அவர் சொன்னார். சந்திக்க அவசரப்படாதே வந்தவர் நிற்பார் தானே. அத்துடன் ஒரு பொது இடத்தில் சந்தி காரணம் ஏதாவது கதை கொடுத்து வாங்கிவிட்டு அதை அங்கே போய் நின்று வடிவாகத் திசை திருப்பிப் போடலாம் என்றார்.

ஆரம்பத்தில் எனக்கும் அவர் சொல்வது சரியெனவேபட்டது அதனால் பெரிதாகக் கவனத்தில் எடுக்கவில்லை. அடுத்த வாரத்தில் மீண்டும் ஒரு மடல் வந்தது “தம்பி அங்கிருந்து வரும் போது தங்களைப் பார்க்கலாம் என்ற ஒரு ஆசையோடு தான் வந்தேன். அந்த காரமான மனிதன் எப்படி இருப்பான் என் ஆயிரம் ஆசையோ தான் வந்தேன் பரவாயில்லை நான் விரைவில் நாடு திரும்பிவிடுவேன்“ என்று இருந்தது.

அம்மடலைப் பார்த்ததும் எனக்குள் ஏதோ செய்தது. காலை எழுத்ததும் முதல் வேலையாக என் தொலைபேசி அழைப்பையெடுத்தேன். “அக்கா எங்கே நிற்கிறீர்கள் உங்களை பார்க்க வேணும் போல இருக்கிறது” என்றேன். தான் கொக்குவிலில் ஒரு வீட்டில் நிற்பதாகச் சொன்னார். உடனேயே கிளம்பிப் போனேன்.

வாசலில் போய் நின்று தொலைபேசி அழைப்பெடுத்துச் சொன்னேன். எதிரே ஒரு உருவம் “வாங்க தம்பி இப்பத் தான் அக்காவை பார்க்கணும் என்று தோணிச்சோ” என்றார். நான் கூனிக் குறுகிப் போனேன். அவரிடம் விடயத்தை சொல்ல மனம் ஒப்பவில்லை. அதனால் ஏதோ ஒரு பொய் சொன்னேன்.

sister+and+younger+brother.jpg

எத்தனையோ நாள் பழகிய ஒருவர் போல கதைத்தார். தான் எப்படி வெளிநாடு போனதாக சொன்னார். அவர் கடவுள் பத்தியை பார்த்து வியந்து போனேன். ஒரு பெண்ணாக இவ்வளவு எதிர்ப்பையும் கடந்தார் என்பது இப்போதும் என்னால் நம்ப முடியாத அதிசயம்.

எனது எழுத்து இவ்வளவு அந்நியோன்யத்தை ஏற்படுத்தியதா என என்னாலும் நம்ப முடியாமல் இருந்தது. மீண்டும் கிளம்பும் முன் சந்திக்க வேண்டும் என இருவரும் திட்டமிட்டுக் கொண்டாலும். எனது வன்னிப்பயணமும் அவரது வெளியூர் பயணமும் மீண்டும் சந்திக்க விடாமல் தடுத்து விட்டது.

poonkothai.JPG

ஆனால் அவர் தந்து விட்டுப் போன அவர் குரலில் அமைந்த பாடல் இறுவட்டுத் தான் எனக்கு வந்த ஒரு இக்கட்டான தனிமைக் காலத்தில் என்னை ஒரு தாயாக அரவணைத்தது. அப்பாடல் இது தான்.

அவர்யாரென இனியும் சொல்லாமல் போவது தப்பல்லவா அவர் பெயர் பூங்கோதை. அவரும் ஒரு கலைக் குடும்பத்தின் வாரிசு. அவர்கள் குடும்பம் இந்தத் யுத்தத்தின் வடுக்களை தாங்கிய ஒரு உணர்வாளர் குடும்பம் தான். அவர் தந்தையோ நான் கண்டு வியந்த ஒரு எழுத்தாளர் ஏனென்று கேட்கிறீர்களா? வன்னியில் பெரும்பாலனவர் பேருக்கும் பதவிக்குமாக குழைந்து வாழ்கையில் ஒரு தவறை தவறென நூல் ஆக எழுதிய பெரும் துணிவாளன். அதை எழுதியதற்காகவே அந்த மாபெரும் ஒப்பற்ற கலைஞனை ஒரு நாயிலும் கேவலமாக சிலர் நடத்தியது நான் முன்பே அறிவேன். உடல் நோய் வாய்ப்பட்ட நிலையில் ஒரு பொறுப்பாளரை சந்திக்கச் சென்ற வேளை அவரை வெளி வாங்கில் வேண்டுமென்றே 2,3 மணித்தியாலம் காக்க வைத்திருந்த சம்பவமும் இருக்கிறது. ஆனால் அவர் எனக்காக ஒரு அக்காவை பெற்று வைத்திருப்பது எனக்கு அப்போது தெரியாமல் போய்விட்டது.

அவர் அங்கே போய் எழுதிய என்னைச் சந்தித்ததைப் பற்றி ஒரு கவியாகவே எழுதியிருந்தார். உண்மையில் அதில் சில வரிகளை வாசிக்கையில் நானே என்னை நினைத்து வாய் விட்டுச் சிரித்தேன். இதோ அப்பதிவு...

இந்தக் கடுகுதான் இத்தனை காரமா?

அழகிய மொழிநடை..... அத்தனையும் தனிநடை

காரமான விடயங்கள்... காத்திரமான கருத்துக்கள்

அன்புடன் தம்பி..... இப்படித் தொடங்கியது தான் அந்த உறவு

எத்தனை பெரிய விடயத்தையும் இத்தனை

இலகுவாய் இனிக்கத் தருகிறானே...

சிற்பத்தை இரசித்த எனக்கு அந்த சிற்பியைக் காண ஆசை

எப்படியிருப்பான்... எழுத்தின் படியே கொஞ்சம்

எடுப்பாக.. கடுப்பாக... எப்படியோ.. அவனைக் காணவேண்டும்

அந்த எழுத்துக்காக... அதன் வலிமைக்காக....

மீண்டும் எழுதினேன்... அன்புடன் தம்பி...

ஊருக்கு வருகிறேன்... உன்னைக் காணலாமா....

பதிலில்லை... பரிதவித்துப் போனேன்...

பதிலைக் காணோமே... பயந்தாங்கொள்ளியோ...

பலவாறு எண்ணம் ஓட கொஞ்சம் கவலை...

எதிர்பாராத ஒரு நாளில் என் தொலைபேசியில் அவன்...

எங்கே நிற்கிறீர்கள்... இதோ வந்து கொண்டிருக்கிறேன்..

அடுத்த சில மணிகளிலே... வீட்டு வாசலிலே...மோட்டார் சைக்கிளிலே...

அடேயப்பா... இந்தக் கடுகா... அத்தனை காரம்.....

கடுகு உருவத்தில் மட்டும் தான்....

இந்தக் குழந்தைச் சிhpப்பு அதன் எழுத்துகளில்

இம்மியளவுகூட இல்லையே...

ஆனால் அந்தக் காத்திரமான கருத்துக்கள்

அவன் பேச்சிலும் கூட....

யாழ்மண்ணில் ஒளிர்கின்ற பிரமாண்ட மின்குமிழ்...

நிச்சயமாய் அவன் எதிர்காலம் நின்று ஜொலிக்கும்...

சமூகத்தை நேசிக்கும் அவன் சரித்திரத்தில் நிமிர்வான்...

தனக்குத் தொpந்ததை எல்லோருக்கும் கற்றுக் கொடுக்கும்

தாராள மனம் படைத்தவன்.....

அட.... யாரது என்று யோசிக்கிறீர்களா...

வேற யாரு... நம்ம சுதா... மதிசுதா தானுங்கோ....

அவன் பெயருக்கு முன்னால் அந்த மதி...

அவனுக்குப் பொருத்தமானதே...

வாழ்க நீ.... வளர்க உன் திறன்...

நீள்க உன் சேவை.... நிறைவோடு வாழ்க...

(யாராவது பொறாமைப்படாதீங்க.... எனக்கு காய்ச்சல் வந்திடும்!!!)

அவரது வலைத்தளத் தொடுப்பு -

Edited by BLUE BIRD

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள், நீலப் பறவை!

நல்லதோர் வலைப்பூ ஒன்றை, அறிமுகப் படுத்தியதற்கு!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.