Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூடங்குளம் அணு மின் நிலையத்தை துவங்கக் கூடாது. பிரதமரின் முடிவுக்கு எதிர்ப்பு.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Jayalalith%20meeting1_CI.jpg

இன்னும் 15 நாளில் கூடங்குளம் அணு உலை செயல்படத் துவங்கும் என்று ரஷ்யாவில் இருந்து இந்திய பிரதமர் அறிவித்தார். அவர் அறிவித்த சில மணி நேரங்களில் கூடங்குளம் போராட்டம் பரபரப்புக் களமானது. மேலதிகமான துணை ராணுவப்படையும் போலீஸ் கலவர வாகனங்களும் அங்கு நிறுத்தப்பட்டுள்ள நிலையில், போராட்டக் குழுவினர் இன்று மாலை தொடர் போராட்டங்களை அறிவித்தனர். நாளை பிரமாண்ட பேரணி, அணு உலை முற்றுகை என போராட்டங்களை அறிவித்துள்ள நிலையில் தமிழக அமைச்சர்கள், போலீஸ் அதிகாரிகளுடன் தமிழக முதல்வர் அவசர ஆலோசனை நடத்தினார். இதன் தொடர்ச்சியாக இந்திய பிரதமருக்கு கடும் கண்டனம் தெரிவித்து கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் கூ்டங்குளம் அணு உலை இன்னும் இரண்டு வாரத்தில் செயல்படும் என தாங்கள் ரஷ்யாவில் போய் அறிவித்தது அதிர்ச்சியளிக்கிறது என்றும். மக்களின் அச்சத்தைப் போக்க வேண்டிய கடமை மத்திய அரசுக்கு உண்டு என்றும். மக்களின் அச்சம் போக்கும் வரை கூடங்குளம் அணு உலையை செயல் படுத்த வேண்டாம் என்றும் கேட்டு கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில்...

கூடங்குளம் அணுமின் திட்ட பணிகள் இன்னும் சில வாரங்களில் துவங்கும் என்று நீங்கள் ரஷ்ய அதிபருடன் இணைந்து கூட்டாக வெளியிட்ட ஊடக சந்திப்பில் பேசியதாக நான் பத்திரிகைகளில் படித்தேன். அதைக் கண்டு மிகவும் ஆச்சரியப்பட்டேன்.

இது தொடர்பாக தமிழகசட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட அமைச்சரவைத் தீர்மானம் குறித்து உங்கள்கவனத்துக்கு கொண்டுவர விரும்புகிறேன். பொது மக்களின் அச்சத்தைப் போக்கும் வரையில் அங்கே எந்தப் பணிகளும் துவங்கக்கூடாது என்ற அந்தத் தீர்மான நகலை தமிழக நிதி அமைச்சர், சட்டப்பேரவை உறுப்பினர் குழுவுடன் வந்து உங்களிடம் அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, இந்திய அரசு, பொதுமக்களின் சார்பில் உள்ள அதிருப்தியாளர்கள் குழுவுடன் பேசுவதற்கு ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் அதிகாரிகள் மூலம் மாநில அரசு பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறது.தமிழக அரசுக்கு அந்த மக்கள் திருப்திகரமாக இதனை ஏற்பது மிகப் பெரும் விஷயமாகும். அங்கே எந்தப் பணிகளையும் தொடங்குவதற்கு முன்னர் மக்களின் அச்சத்தைப் போக்கி திருப்தியடையச் செய்வது மிகவும் அவசியமானதும் கண்டிப்பானதும் ஆகும் என்றவாறு அந்தக் கடிதத்தில் பிரதமருக்கு எழுதியுள்ளார் முதல்வர்.

http://www.globaltam...IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்திற்கு சாதகமாக உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு வரும்

Chidambaram_2_0.jpg

x.pngகேரள இடைத்தேர்தலை வைத்து முல்லைப் பெரியாறு அணை விவகாரம் கிளப்பப்படுகிறது: தமிழகத்திற்கு சாதகமாக உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு வரும்: மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் நம்பிக்கைrestore.png

302rn5v.png 1/1 lzkux.png

சென்னை, டிச.18 -​கேரள காங்கிரஸ் அரசு இடைத்தேர்தலை மனதில் வைத்து முல்லைப்பெரியாறு அணையை கிளப்பி வருகிறது. இடைத்தேர்தல் முடிந்தவுடன் பிரச்சினை தீர்ந்து விடும். உச்சநீதிமன்ற தீர்ப்பு தமிழகத்திற்கு சாதகமாக வரும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிம்பரம் மிகுந்த நம்பிக்கையுடன் பேசினார். சென்னையில் நடந்த சோனியா காந்தி பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டு ப.சிதம்பரம் பேசியபோது, லோக்பால் மசோதா நடந்து வரும் பாராளுமன்ற கூட்டத்தொடரில் லோக்பால் மசோதா கண்டிப்பாக நிறைவேற்றப்படும். உணவு பாதுகாப்பு மசோதா வரும் திங்களன்று நிறைவேறும் என எதிர்பார்க்கப்படுகிறதாகவும் கூறினார். மேலும் கூடங்குளம் பிரச்சினை குறித்து கூறுகையில், பொது மக்களின் அச்சங்களையும், சந்தேகங்களையும் தீர்த்து வைத்து பல கோடி மதிப்பிலான அணுமின் உற்பத்தி தொடங்கப்படும். மக்களின் பாதுகாப்புக்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் எனவும் கூறியுள்ளார்.

முல்லைப்பெரியாறு அணை தமிழ்நாட்டுக்காகத்தான் கட்டப்பட்டது. கேரளத்துக்கு உள்ள அக்கறை தமிழ்நாட்டுக்கும் உள்ளது. அணையில் 142 அடி வரை தண்ணீர் தேக்கிக் கொள்ளலாம் என்று தீர்ப்பு வழங்கியுள்ளது. படிப்படியாக 152 அடியாக உயர்த்தி கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் நீர்மட்டத்தை 120 அடியாக குறைக்க வேண்டும் என்ற கேரள அரசின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு விட்டது. 2,000 ஆண்டுகளுக்கு முன்பு கரிகாலனால் கட்டப்பட்ட கல்லணை இன்னும் உறுதியாக உள்ளது. எனவே நூறாண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட முல்லைப்பெரியாறு அணை உடைந்து விடும் என்பது கேரள அரசின் தேவையற்ற அச்சம். இது நிரந்தர அச்சம், இடைக்கால அச்சம் என்று சொல்வதை விட இடைத் தேர்தல் அச்சம் என்று சொல்லலாம். அங்கு இடைத்தேர்தல் முடிந்தவுடன் இந்த அச்சமும் போய் விடும்.

வருகிற பிப்ரவரி முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் நீதிபதிகள் கொண்ட குழு தனது ஆய்வு அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பிறகு தமிழகத்துக்கு சாதகமான ஒரு நல்ல தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளது. எனவே சகோதரர்களாகிய தமிழர்கள்- மலையாளிகள் இடையே மோதல் போக்கு கூடாது. இந்த நல்லுறவு பல்லாயிரம் ஆண்டுகள் தொடர வேண்டும். இப்போது கேரளாவில் தலைமை செயலாளராக இருப்பவர் ஒரு தமிழர்தான்.

இதேபோல் பல கேரளத்தவர்கள் இங்கு தமிழகத்தில் தலைமை செயலாளர்களாக இருந்துள்ளனர். தமிழகத்தில் கேரள மக்களும், கேரளாவில் தமிழக மக்களும் அதிகளவில் வசிக்கின்றனர். இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு அனைவரும் கண்ணியம் காக்க வேண்டும். தமிழன் என்றொரு இனம் உண்டு, தனியே அவருக்கோர் குணம் உண்டு என்று நிரூபிக்கும் வகையில் அனைவரும் செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

http://www.thinaboomi.com/2011/12/17/9050.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.