Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீனாவின் வளர்ச்சி – ஒரு பார்வை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சீனாவின் வளர்ச்சி – ஒரு பார்வை

– ஜி.விஸ்வநாதன்

a_China_visvanathan.jpg

கல்வி தொடர்பான தகவல் பரிமாற்றத்துக்காக வெவ்வேறு சமயங்களில் சீனா சென்று வரும் வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தர் ஜி.விஸ்வநாதன், பல்வேறு துறைகளில் சீனா கண்டுள்ள வளர்ச்சி, அதற்கான காரணங்கள், சீனாவிடம் இருந்து இந்தியா கற்க வேண்டிய பாடம் ஆகியவற்றை, இந்த குறுகிய கட்டுரைத் தொடரில் விளக்குகிறார்.

படம்: சீனப் பிரதமருடன் ஜி.விஸ்வநாதன்...

வளர்ந்து வரும் நாடுகள் என்று குறிப்பிடப்படும் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா (BRIC Countries) ஆகியவற்றின் செயல்பாடுகளை உலகம் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறது. இந்த நான்கு நாடுகளில் இந்தியாவும், சீனாவும்தான் மக்கள் தொகையில் மிகப் பெரிய எண்ணிக்கையைக் கொண்டவை. ஆகவே, இந்த இரு நாடுகளையும் ஒப்பிட்டுப் பார்ப்பது நமது வளர்ச்சிக்கு உதவும். முதலில் சீனா கண்டுள்ள வளர்ச்சியைச் சுருக்கமாகப் பார்ப்போம்.

பதினேழு மற்றும் 18-ஆம் நூற்றாண்டுகளில் உலகத்தின் மொத்த உற்பத்தி விகிதத்தில் (G.D.P.) இந்தியாவும், சீனாவும் சேர்ந்து 50 சதவிகித அளவு கொண்டிருந்தது. பின்னர் மேற்கத்திய நாடுகளின் ஆதிக்கம் பெருகியதும், இவ்விரு நாடுகளும் பின்தங்கின. 1920-1930 கால கட்டத்தில் சீனாவில் சன்யாட்சன் தலைமையின் கீழ் மறுமலர்ச்சி தொடங்கியது. 1949-ல் சீனாவில் மாசேதுங் ஆட்சி அமைந்ததும் சீன வளர்ச்சிக்கு வித்திடப்பட்டது.

எனினும், இறுக்கமான கம்யூனிஸக் கொள்கையில் இருந்து விலகி, 1978-ல் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை சீன அதிபராக இருந்த டெங் - தான் தொடங்கி வைத்தார். தாராளமயம் மூலம் தனியார் முதலீடுகள் அனுமதிக்கப்பட்டன. அதன் பிறகு, அந்நாடு கண்டு வரும் வளர்ச்சி அபாரமானது.

1991-ல் இந்தியாவில் புதிய பொருளாதாரக் கொள்கை அமலுக்கு வந்தது. ஆனாலும் சீனா கண்டு வரும் வளர்ச்சியை நாம் நெருங்கக் கூட முடியவில்லை. அதற்கு என்ன காரணம் என்பதை பிறகு பார்ப்போம். முதலில் சீனா கண்டுள்ள வியக்கத்தக்க வளர்ச்சியைச் சுருக்கமாக விளக்குகிறேன்.

a_made-in-China.jpgவளர்ந்த நாடுகள் என்ற பட்டியலில் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளும், ஆசியாவில் ஜப்பான், கொரியா ஆகிய நாடுகளும் இடம் பெற்றுள்ளன. தற்போது இந்நாடுகளுக்குச் சமமாக சீனா விரைவான வளர்ச்சியைக் கண்டு வருகிறது என்றால் அது மிகையல்ல. இதை அறுதியிட்டுக் கூறுவதற்குப் பல சான்றுகள் உள்ளன. பொருளாதார வளர்ச்சி விகிதத்தில் முதல் மூன்று இடங்களை முறையே அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி ஆகிய மூன்று நாடுகளும் வகித்து வந்தன. 2005-ல் சீனா, ஜெர்மனியை பின்னுக்குத் தள்ளி மூன்றாம் இடத்தைப் பிடித்தது. பின்னர் மேலும் முன்னேற்றம் கண்டு 2010-ல் ஜப்பானையும் பின்னுக்குத் தள்ளி, இரண்டாம் இடத்துக்கு சீனா முன்னேறியுள்ளது.

இன்னும் சொல்லப் போனால், பொருளாதார நிபுணர்களின் ஆய்வின்படி 2040-2050 காலகட்டத்தில் உலகத்தில் முதலிடத்தை சீனா பிடித்து விடும். அந்த அளவுக்கு பல துறைகளில் அதன் வளர்ச்சி அமைந்திருக்கிறது. சீன நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பு 6 டிரில்லியன் டாலர் என்று கூறப்படுகிறது. அதாவது, 6 லட்சம் கோடி டாலர்.

ஒரு நாடு எவ்வளவு வளமாக உள்ளது என்பதற்கு அளவுகோலாக, அந்த நாட்டிடம் அன்னியச் செலாவணி கையிருப்பு எவ்வளவு உள்ளது என்பதைப் பார்ப்பார்கள். பல ஆண்டுகளாக அன்னியச் செலாவணி கையிருப்பில் ஜப்பான் முதலிடத்தில் இருந்து வருகிறது. ஜப்பானிடம் உள்ள அந்நியச் செலாவணி கையிருப்பு, 700 முதல் 800 மில்லியன் டாலர் என்று மதிப்பிடப்படுகிறது. அதாவது, இந்திய மதிப்பில் 40 லட்சம் கோடி ரூபாய். சீனா கடந்த 30 ஆண்டுகளாக மேற்கொண்ட நடவடிக்கைகளால், அந்நாட்டில் உற்பத்தி பெருகியதாலும், ஏற்றுமதி அதிகரித்ததாலும், சீனா தற்போது, ஜப்பானை விட 3 மடங்கு அதிகமாக, அதாவது 2500 பில்லியன் டாலர் அளவுக்கு அன்னியச் செலாவணியைக் கையிருப்பு வைத்துள்ளது.

மேலும், கடந்த 30 ஆண்டுகளில், அதன் தொடர் நடவடிக்கைகளால், சீனாவில் தனி நபர் வருமானம் 11 மடங்கு அதிகரித்துள்ளது. அந்நாட்டு அரசு, வறுமைக் கோட்டிற்குக் கீழ் இருந்த 40 கோடி மக்களை, அந்நிலையில் இருந்து மீட்டு, அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தியுள்ளது. இதற்குக் காரணம், விவசாயம், கல்வி, உள்கட்டமைப்பு பெருக்கம், தொழில் உற்பத்தி முதலான முக்கிய துறைகளில் அந்த அரசு தீவிரமாகக் கவனம் செலுத்தி வந்ததுதான்.

உதாரணமாகச் சொல்வதானால், உள்கட்டமைப்பு வசதியை அதிகரிப்பதற்காக மட்டும் - அதாவது சாலைகள் மேம்பாடு மற்றும் பாலங்கள், அணைகள், விமான நிலையங்கள் கட்டுவது ஆகிய பணிகளுக்காக மட்டும் – ஒருநாளைக்கு 5000 கோடி ரூபாயை சீன அரசு செலவிடுகிறது.

விவசாய உற்பத்தியை அதிகரிக்க, முதலில் பாசன கட்டமைப்பு வலுப்படுத்தப்பட வேண்டும். அந்த வகையில், அதில் சிறப்புக் கவனம் செலுத்தி, பல்வேறு பெரிய அணைகளைச் சீனா கட்டியுள்ளது. உலக அளவில் 50 ஆயிரம் பெரிய அணைகள் உள்ளன என்று ஒரு கணக்கு கூறுகிறது. அவற்றுள் 25 ஆயிரம் அணைகள் சீனாவில் அமைந்துள்ளன. இவை தவிர, சிறிய மற்றும் நடுத்தர அளவிலான 85 ஆயிரம் அணைகள் அங்கு கட்டப்பட்டுள்ளன. தண்ணீரை அவர்கள் துளியும் வீணாக்குவதில்லை. நீர் மூலம் உற்பத்தி செய்யப்படும் புனல் மின்சார நிலையங்களும் அங்குதான் அதிகம் அமைக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு வருடமும் 1 லட்சம் மெகாவாட் மின்சாரத்தை கூடுதலாக உற்பத்தி செய்யுமளவு சீனாவிடம் கட்டமைப்பு வசதியும், அதற்கான சக்தியும் உள்ளது என்பதைக் கேள்விப்பட்டபோது மலைப்பாக இருந்தது. நம் நாட்டின் மொத்த மின்சார உற்பத்தியே 1 லட்சம் மெகாவாட். சீனாவின் உற்பத்தி 4 லட்சம் மெகாவாட். அங்கு மின்சாரப் பற்றாக்குறை என்ற பேச்சே இல்லை.

அணு மின்சாரம் தேவையா, அது நல்லதா என்று இங்கே விவாதம் நடத்தி முட்டுக்கட்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், மின்சாரத் தேவையில் தன்னிறைவு பெற்றுள்ள சீனா, புனல் மின் நிலையங்கள் போதாதென்று அணு மின்நிலையங்களைக் கட்டுவதிலும் முழுக் கவனம் செலுத்தி வருகிறது. உலகம் முழுவதும் (பிற நாடுகளில்) 15 அணு உலைகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால், சீனாவில் மட்டும் 2020-க்குள் 50 புதிய அணுமின் நிலையங்களை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. புனல் மற்றும் அணுமின் உற்பத்தியைத் தவிர, மரபு சாரா எரிசக்தியிலும் தீவிர கவனம் செலுத்தி, சூரிய ஒளி உற்பத்தியில் தற்போது சீனா முதலிடத்துக்கு வந்து விட்டது.

சீனா எப்படி வளர்ச்சி கண்டிருக்கிறது என்பதற்கு மற்றுமொரு எடுத்துக்காட்டாக, மூலப் பொருட்கள் பயன்பாட்டு அளவைப் பார்க்கலாம். உலக அளவில் உற்பத்தியாகும் சிமென்ட்டில் பாதியை சீனா பயன்படுத்துகிறது. இரும்பு மற்றும் எஃகு ஆகியவற்றை எடுத்துக் கொண்டால், உலகின் மொத்த உற்பத்தியில் மூன்றில் ஒரு பகுதியையும், அலுமினியத்தைப் பொறுத்த வரையில் மொத்த உற்பத்தியில் நான்கில் ஒரு பகுதியையும் சீனா பயன்படுத்துகிறது.

தவிர, சீனாவிடம் அதிக அளவு பணம் கையிருப்பில் இருப்பதால், ஆஸ்திரேலியா, ஆஃப்ரிக்கா, தென்அமெரிக்கா, மற்றும் ஆசிய நாடுகளில் இருந்து நிலக்கரி, பெட்ரோலியம், செம்பு போன்றவற்றை எதிர்காலத் திட்டங்களுக்காகப் பெருமளவில் கொள்முதல் செய்து வருகிறது.

சீனாவில் உள்ள ஒரு மாகாணத்தின் பெயர் குவாண்டான். இங்குதான் எலெக்ட்ரானிக் பொருட்கள் முதல் ஃபர்னிச்சர் வரை மிக அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டு, உலகின் பல பகுதிகளுக்கு சப்ளை செய்யப்படுகிறது. இவ்வாறு உபகரணங்களை ஏற்றுமதி செய்வதில் ஜெர்மனி முதலிடத்தில் இருந்தது. தற்போது அந்த இடத்தையும் சீனா பிடித்து விட்டது. உலகம் முழுவதும் நடைபெற்று வரும் வாணிபத்தில் 31 சதவிகிதம் சீனாவில் தயாரானவை என்ற நிலை உருவாகியுள்ளது.

a_Train.jpg

உலகிலேயே கார்களை அதிகமாக வாங்குவது அமெரிக்கா; வைரத்தை அதிகமாக வாங்குவது ஜப்பான்; தங்கம் அதிகமாக வாங்குவது இந்தியா. இப்போது இந்த மூன்றையும் வாங்குவதில் மற்றவர்களை விட சீனர்கள் மிஞ்சி வருகிறார்கள் என்பதிலிருந்து, அங்கு ஏற்பட்டுள்ள பொருளாதார வளர்ச்சியை உணரலாம்.

உற்பத்தித் துறையில் மட்டுமின்றி, தொழில் நுட்ப மற்றும் விஞ்ஞான வளர்ச்சியிலும் தங்கள் நாடு முன்னேற்றம் காண வேண்டும் என்பதில் சீன அரசு தனி அக்கறை எடுத்துக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இதற்கு ஒரு உதாரணமாக, உலகிலேயே அதிவேக ரயில் சீனாவில்தான் இயங்கி வருகிறது என்பதைச் சொல்லலாம்.

சீனாவின் இரு நகரங்களுக்கு இடையிலான 1120 கிலோ மீட்டர் தூரத்தை அந்த அதிவேக ரயில் 5 மணி நேரத்தில் கடக்கிறது. இதே அளவு தூரத்தை கடக்க அமெரிக்காவில் ஓடும் ரயில் 18 மணி நேரத்தை எடுத்துக் கொள்கிறது என்பதிலிருந்து, சீன தொழில் நுட்ப வளர்ச்சியைப் புரிந்து கொள்ளலாம்.

பாதுகாப்பு, கல்வி போன்ற துறைகளில் சீனாவுக்கும், நமக்கும் உள்ள இடைவெளி மற்றும் சீனா கண்ட வளர்ச்சிக்கான காரணங்களையும், அதன் பலவீனங்களையும் வரும் இதழ்களில் பார்ப்போம்.

(குறிப்பு: சீனப் பயணங்களின் போது அங்கு பல துறை முக்கியஸ்தர்களுடன் பேசி அறிந்த தகவல்களையும், சில அயல்நாட்டு பத்திரிகைகளில் இடம் பெற்ற செய்தி மற்றும் கட்டுரைகளைப் படித்து அதன் மூலம் அறிந்தவற்றையும் இங்கு நான் பயன்படுத்தியுள்ளேன்.)

நன்றி: http://thuglak.com/

சீனா வளர்ந்துவருவதும் அது முதலாவது இடத்திற்கு செல்லக்கூடியதும் சாத்தியம். ஆனால் அந்த இடத்தில் நிலைக்குமா? என்பது கேள்வியே.

சீனாவின் கையிருப்பில் அதிகம் அந்நிய செலாவாணி இருந்தாலும் அது அதன் வளர்ச்சிக்கு அதைப்பயன்படுத்துவதுடன் தனது கடன் நிலுவையையும் குறைக்கின்றது (ஏற்றுமதியை கூட்ட). அத்துடன் அதன் மக்கள் தொகையில் சிறுபான்மை மக்களே பொருளாதார பலன் கொண்டவர்களாக உள்ளனர்.

சீனாவுக்கு நண்பர்கள் கிடையாது. அமெரிக்காவுக்கோ வளர்ந்த நாடுகள் எல்லாமே நண்பர்கள் - அது பாரிய பலம். அடுத்து அமேரிக்கா ஆராய்சியில் பல படிகள் முன்னிற்கிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.