Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாகிஸ்தானின் பாதுகாப்புச் செயலர் பதவி நீக்கம்

Featured Replies

பாகிஸ்தானின் பாதுகாப்புச் செயலர் பதவி நீக்கம்

120111152131_kiyani_gilani_304x171_ap_nocredit.jpg

நாட்டின் பிரதமரும் இராணுவத் தலைவரும்

பாகிஸ்தானின் பாதுகாப்புச் செயலர் காலித் நதீம் லோடி பிரதமர் யூசூஃப் ராஜா கீலானியால் பதவி திடீரென பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த நடவடிக்கையை யாரும் எதிர்பாக்கவில்லை என்றும், அது திடீரென இடம்பெற்றுள்ளது என்றும் கூறுகிறார் பிபிசியின் உருது மொழி ஒலிபரப்பின் ஆசிரியர் ஆமீர் அஹமது கான்.

“பாகிஸ்தானின் சிவில் மற்றும் இராணுவத் தலைமைகளிடையே பல காலமாக நீறுபூத்த நெருப்பு போல இருந்து வந்த உறவுகளின் பிரதிபலிப்புதான் இந்த நடவடிக்கை”

தீவிரவாதிகளுக்கு எதிரான யுத்தத்தை எப்படி முன்னெடுத்துச் செல்வது என்பது குறித்த விஷயம் உட்பட பல விஷயங்களில் இராணுவத்துக்கும் சிவில் நிர்வாகத்துக்கும் இடையே மோதல்கள் தொடர்ந்து வரும் நிலையில் பிரதமரின் இந்த நடவடிக்கை வந்துள்ளது.

அமெரிக்கவுடனான தொடர்புகள் போன்றவற்றில் கொள்கை முடிவுகளை யார் எடுப்பது குறித்தும் இருதரப்பினரிடையே ஒரு நெருடல் இருந்து வருகிறது எனவும் ஆமீர்

அஹமது கான் சுட்டிக்காட்டுகிறார்.

எனவே பாதுகாப்புச் செயலர் நீக்கப்பட்டிருப்பது இப்படியான மோதல்களின் வெளிப்பாடுதான் எனவும் அவர் கூறுகிறார்.

பாகிஸ்தானில் சிவில் நிர்வாகத்துக்கும் இராணுவத்துக்கும் இடையேயான உறவுகள் எதுவுமே சரியாக இல்லை என்பது மீண்டும் வெளிப்படையாகியுள்ளது எனவும் அவர் தமிழோசையிடம் தெரிவித்தார்.

மோதல் ஏன்?

120110120815_pakistan-blast_304x171_afp_nocredit.jpg

அந்நாட்டின் இராணுவத் தளபதி சீனாவுக்கான விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்த போது, சீனாவின் பீப்பிள்ஸ் டெய்லி பத்திரிகைக்கு பிரதமர் கீலானி ஒரு பேட்டியளித்திருந்தார்.

அதில் நாட்டின் உச்சநீதிமன்றத்துக்கு உளவுத்துறை தலைவரும், இராணுவத் தளபதியும் சர்ச்சைகுரிய ஒரு அறிக்கை குறித்து தெரிவித்திருந்த விஷயங்கள் சட்டவிரோதமானவை என்று கூறியிருந்தார்.

அதாவது பாகிஸ்தானில் ஒரு இராணுவப் புரட்சி ஏற்பாடாமல் தடுக்க அமெரிக்கா உதவ வேண்டும் என்று, அதிபருக்கு தெரிந்து எழுதப்பட்ட ஒரு இரகசியக் கடிதம் கசிந்த விவகாரத்தில் சர்ச்சைகள் நிலவி வருவது தொடர்பிலேயே அவர்கள் உச்சநீதிமன்றத்துக்கு தெரிவித்த கருத்துக்களை சட்டவிரோதமானவை என்று பிரதமர் அந்தப் பேட்டியில் கூறியிருந்தார்.

அரசின் மூலமாக முறைப்படி அனுப்பபடாத ஒரு அறிக்கை சட்டவிரோதமானது என்பது பிரதமரின் வாதம்.

இராணுவத் தலைவர் சீனாவில் இருக்கும் போது சீன இதழ் ஒன்றுக்கு இப்படியான பேட்டியை அளித்தது அவருக்கு மிகவும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது.

இராணுவம் எச்சரிக்கை

120101165829_pakistan_frontier_corps_fc_304x171__nocredit.jpg

பாதுகாப்புச் செயலரின் பதவி நீக்கம் கடும் விளைவுகளை ஏற்படுத்தும் என்று இராணுவம் கூறியுள்ளது.

அது அந்நாட்டின் சிவில் நிர்வாகத்துக்கு விடுக்கப்பட்ட ஒரு அச்சுறுத்தலாகவே பார்க்கப்படுகிறது.

இருந்தாலும் நாட்டில் இராணுவப் புரட்சியின் மூலம் இராணுவம் ஆட்சியை கைப்பற்றுவதற்கான வாய்ப்பு தற்போது இல்லை என்றும் ஆமீர் அஹ்மது கான் கூறுகிறார்.

ஏனென்றால் நாட்டுக்கு உள்ளேயும், வெளியேயும் அப்படியான ஒரு தேவை இருப்பதாக உணரபப்டவில்லை என்றும், சரித்திர ரீதியாகப் பார்த்தால், நாட்டில் ஏதவது பெரிய அளவிலான உள்நாட்டுப் பிரச்சினையோ அல்லது நாட்டுக்கு வெளிநாட்டிலிருந்து அச்சுறுத்தல் இருந்த போதே, இராணுவம் தலையிட்டு ஆட்சியை கைப்பற்றியுள்ளது என்றும் கூறும் அவர். தற்போது அப்படியான சூழல் ஏதும் இல்லை எனவும் கூறுகிறார்.

அதே நேரம் நாட்டின் பல விஷயங்களில் தங்களுக்கு உள்ள ஆளுமையையும் அதிகாரத்தையும் விட்டுக் கொடுக்க இராணுவம் தயாராக இல்லை என்கிற செய்தியும் வெளியாகியுள்ளது. அதில் நாட்டின் வெளிவிவகாரக் கொள்கையும் அடங்கும்.

மேலும் பாகிஸ்தானில் ஜனநாயக நிறுவனங்களும் இராணுவத்துடன் இணைந்தே செயல்படவேண்டிய ஒரு நிலையும் அங்கு தொடர்ந்து இருந்து வருகிறது.

இதே வேளை உச்சநீதிமன்றம் அண்மையில் ஆளும் தரப்பினர் மீது கடுமையான விமர்சனங்களை தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தகுந்தது.

http://www.bbc.co.uk...ec_sacked.shtml

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தான் சுதந்திரம் பெற்ற 64 வருடங்களில், 30 வருடங்கள் இராணுவ ஆட்சி நடந்துள்ளது.

மீண்டும் இராணுவ ஆட்சி ஏற்படலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.