Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முடிவில் மாற்றமில்லை என்கிறார் சுமந்திரன்

Featured Replies

பேச்சை நிறுத்துவது உடன்பாட்டு மீறல்தெரிவுக்குழு தொடர்பான கூட்டமைப்பின் முடிவில் மாற்றமில்லை என்கிறார் சுமந்திரன்

இனப்பிரச்சினைத் தீர்வுக்கான நாடாளுமன்றத் தெரிவுக்குழுவிற்குப் பெயர்களைக் கூட்டமைப்பு தரும்வரை தீர்வுப் பேச்சுகளைத் தொடர்வதில்லையென்று அமைச்சரவை முடிவு செய்திருப்பதாக வெளியாகும் தகவல்கள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிர்ச்சியும், கவலையும் வெளியிட்டுள்ளது.

"இப்படியான உறுதியான தீர்மானமொன்றை அமைச்சரவை எடுத்திருக்குமாயின், தீர்வுப் பேச்சுகளைத் தொடர்வதற்கு அரசானது தமிழ்க் கூட்டமைப்புடன் செய்துகொண்ட உடன்பாட்டையே மீறும் செயல்" அதுவென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு: அரசுடன் நாம் நடத்தும் பேச்சுகளின்போது தெரிவுக்குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் அங்கம் வகிக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டதால் முன்னர் ஒரு முடக்கம் ஏற்பட்டது. இதன் பின்னர் நாம் எமது நிலைப்பாட்டை அரசுக்குத் தெளிவாகச் சொல்லிவிட்டோம். முதலில் பேச்சு மேசையில் இணக்கப்பாட்டிற்கு வருவது, பின்னர் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவிற்கு எமது தரப்பின் பெயர்களை அனுப்புவது என்ற எமது நிலைப்பாட்டை நாம் மிகவும் தெளிவுபடக் கூறியிருந்தோம். எமது இந்த நிலைப்பாட்டை அரசும், பேச்சுக்குழுவும் ஏற்றுக்கொண்டன. இதனடிப்படையில்தான் டிசம்பர் மாதத்தில் பேச்சு தொடர்ந்து நடந்தது. இதுதான் களநிலைமை.

இப்போது அரசு அமைச்சரவையில் இப்படி முடிவை எடுத்திருக்கிறது என நாங்கள் இன்னமும் உத்தியோகபூர்வமாக அறியவில்லை. அரசு அப்படியான உறுதியான தீர்மானம் எடுத்திருக்குமாயின், பேச்சு மேசையில் எட்டப்பட்ட உடன்பாட்டை ஆரோக்கியமான முறையில் பேச்சு தொடரும் ஒரு நிலைமையை அரசே மீறுவதாகவே நாம் கருதமுடியும். எமது நிலைப்பாட்டை நாம் ஏலவே அறிவித்திருப்பதால் அதனடிப்படையில் தீர்வுப்பேச்சைத் தொடர நாம் எப்போதும் தயாராகவே இருக்கிறோம். என்றார் சுமந்திரன்.

http://184.107.230.170/~onlineut/News_More.php?id=66826753913862080

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிர்ச்சியும், கவலையும் வெளியிட்டுள்ளது."

இப்படித்தான் ஸ்ரீ லங்கா கூட்டமும், இரானிய கொங்கிரஸ் கூட்டமும் எழுபது வருசமா அதிர்ச்சியும், கவலையையும் தருகிறார்கள்.

என்றாலும் எங்களுக்கு கொத்தாக எங்களை கொன்று கொண்டிருப்பவர்களில் நம்பிக்கை கொஞ்சம் கூட தான்.

  • தொடங்கியவர்

பேச்சுவார்த்தையை தொடர தமிழ் கூட்டமைப்பு இணக்கம்

சாதக சமிக்ஞையென அரசாங்கம் அறிவிப்பு

அரசாங்கத்துடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்த தமிழ் தேசிய கூட்டமைப்பு இணங்கியிருப்பது அரசியல் பிரச்சினைக்கு தீர்வு காணும் விடயத்தில் சாதகமான சமிக்ஞையை காட்டுவதாக அமைச்சரவை பேச்சாளரும் தகவல் ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

பொலிஸ் மற்றும் காணி அதிகாரம் வழங்குவது தொடர்பில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு விடாப்பிடியாக இருந்த போதிலும் இவற்றில் சில பகுதிகளை வழங்குவது தொடர்பில் அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளதாக வெளியில் எவ்வளவு தான் பேசினாலும் இறுதித் தீர்விற்கு பாராளுமன்றத்திற்கே வர வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. அரசாங்கத்திற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குமிடையிலான பேச்சுவார்த்தை முறிவடையும் நிலையில் இருப்பது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர், பல்வேறு சந்தர்ப்பங்களில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பேச்சுவார்த்தையை தொடர்ந்து முன்னெடுக்காது ஒதுங்குவதாக அறிவித்து வந்துள்ளது. திம்பு பேச்சுவார்த்தை முதல் அந்தக் கட்சி இவ்வாறு செயற்பட்டு வந்துள்ளது. பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை தர வேண்டும் என்று த. தே. கூ. விடாப்பிடியாக இருந்தது. ஆனால், தொடர்ந்து பேச்சுவார்த்தையில் பங்கேற்கத் தயாரென இரா சம்பந்தன் எம்.பி. அறிவித்துள்ளார். இது சாதகமான சமிக்ஞையாகும்.

பொலிஸ், காணி அதிகாரங்கள் தொடர்பில் அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளது. சில சில பகுதிகளை வழங்கக்கூடியதாக உள்ளது. பாராளுமன்றத்துக்கு வெளியில் எவ்வளவு தான் பேசினாலும் பிரச்சினைக்கு தீர்வு காண யாப்பில் திருத்தம் செய்ய பாராளுமன்றத்திற்கு வந்தாக வேண்டும். அதனால் தேசிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்றக் குழுவில் த. தே. கூட்டமைப்பு அங்கம் வகிக்க வேண்டும். அதனூடாகவே தீர்வு காண முடியும். இந்த நிலைப்பாடடிலே அரசாங்கம் தொடர்ந்தும் உள்ளது.

அரசாங்கத்துக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குமிடையிலான கடைசியாக நடந்த பேச்சுவார்த்தையில் அடுத்த கட்ட பேச்சுவாரத்தையை 17 ஆம் திகதி நடத்த தீர்மானிக்கப்பட்டது. இதன்படி இரு தரப்பினருக்குமிடையி லான அடுத்த சுற்று பேச்சுவார்த்தை எதிர்வரும் 17 ஆம் திகதி பாராளுமன்றத் தில் நடைபெறும் என்று எதிர்பார்க் கப்படுகிறது.

http://www.thinakaran.lk/2012/01/13/?fn=n1201131

தீர்வுப் பேச்சுகளைத் தொடர்வதில்லையென்று அமைச்சரவை முடிவு செய்திருப்பதாக வெளியாகும் தகவல்கள் குறித்து ........ அதிர்ச்சியும், கவலையும் வெளியிட்டுள்ளது.

" ... தமிழ்க் கூட்டமைப்புடன் செய்துகொண்ட உடன்பாட்டையே மீறும் செயல்" அதுவென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

சிங்கள அரச பயங்கரவாதிகளின் இனிப்பான பேச்சுக்களில் மயங்கி தமிழினத்தின் உரிமைகளை கேலிப் பொருளாக்கிய, விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்திய சுமந்திரனுக்கு இது அதிர்ச்சியாகத் இருக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.