Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

என்ன செய்யப் போகிறோம்?

Featured Replies

என்ன செய்யப் போகிறோம்?

தமிழ் திரையுலகத்துக்கு உள்ள சக்தியை நம்மால் அளவிட முடியாது. 20, 30 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான திரைப்படத்தின் பாடலை நாம் வானொலியில் கேட்டிருப்போம். அந்தப் பாடலை இப்போது கேட்டாலும் அது குறிப்பிட்ட திரைப்படத்தின் பாடல்தான் என உடனே நமது நினைவுக்கு வரும். இது அன்றைய திரைப்படப் பாடல்களுக்கு உள்ள தனிச் சிறப்பு.

இதைச் செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயமும், அவசியத் தேவையும் கூட.

பாரதியார் எழுதிய பாடல்களில் "நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே நீங்களெல்லாம் சொற்பனந்தானோ?' - இந்தப் பாடல் சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான "பாரதி' என்ற திரைப்படத்தில் இடம்பெற்றிருந்தது. அந்தப் பாடலைப் பாடிய திரைப்படப் பின்னணிப் பாடகருக்கு தேசிய விருதும் கிடைத்தது. இது தமிழுக்கு கிடைத்த தனிச் சிறப்பு.

சுதந்திரப் போராட்டத்தின்போது பாடல்கள் மூலம் மக்களிடையே சுதந்திர உணர்வு தூண்டப்பட்டன. அதேபோல, திரைப்படப் பாடல்களுக்கும் சிறப்பு உண்டு. அன்றைய காலகட்டத்தில் வெளியான பல திரைப்படப் பாடல்கள் காலத்தை வென்றவை.

உதாரணமாக, "பாசமலர்' படத்தில் வரும் "மலர்ந்தும், மலராத' பாடலையும், "கர்ணன்' படத்தில் வரும் "உள்ளத்தில் நல்ல உள்ளம்' பாடலையும் இன்றைக்கு நாம் கேட்டாலும் நமது உள்ளத்தை வருடும்.

அதேபோல, "ரோஜா' திரைப்படப் பாடலான "தமிழா தமிழா நாளை நம் நாடே' என்ற பாடலைக் கேட்டால் நாம் உணர்ச்சி வசப்படுவோம். அந்த அளவுக்கு திரைப்படப் பாடல்களுக்கு சக்தி உண்டு என்பது நிதர்சனம்.

ஆனால், தற்பொழுது வெளியாகும் திரைப்படப் பாடல்கள் வன்முறையைத் தூண்டும் வகையிலும், பெண்களை கொச்சைப்படுத்தும் வகையிலும் உள்ளன.

உதாரணமாக, "எவண்டி உன்ன பெத்தான், அவன் கையில கிடைச்சா செத்தான்' என்ற பாடலும், "பெத்தவங்க பார்த்த பொண்ண எனக்கு புடிக்கல்ல' என்ற பாடலும், "காதல் என் கண்ணீர்' என்ற பாடலில் அடிடா அவளை, உதடா அவளை, விடுறா அவளை என்றும் உள்ளன.

"ஓய் திஸ் கொல வெறி, கொல வெறி' என்ற பாடல் இப்பொழுது உலக அளவில் பிரபலமாகி வருவதாகக் கூறப்படுகிறது.

இப்படிப்பட்ட பாடல்களை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கேட்கின்றனர். இதனால் அவர்களின் மனதில் வன்முறை எளிதாகத் தூண்டப்படும்.

அதீத வளர்ச்சி பெற்ற விஞ்ஞானத்தின் மைல் கல்லாக யூ டியூப், பேஸ் புக் ஆகியவற்றின் மூலம் உலகத்தின் அனைத்து மூலைகளுக்கும் இவை எளிதாகச் சென்றுவிடுகின்றன.

தமிழகத்தில் உள்ள பெற்றோர் தங்களது குழந்தைகளை ஆங்கிலப் பள்ளிகளில்தான் படிக்க வைக்கின்றனர். போதாக்குறைக்கு தமிழைச் சிதைக்கும் இந்த மாதிரியான பாடல்கள் வேறு. செம்மொழி அந்தஸ்து பெற்ற தமிழில் இப்படிப்பட்ட பாடல்கள் வெளிவருவது வருத்தத்துக்குரியது.

இதுபோன்ற பாடல்கள் தமிழில் வெளிவர ஆரம்பித்தால் இளைய சமுதாயம் சீரழிய ஆரம்பித்துவிடும். இப்படிப்பட்ட பாடல்கள் தமிழின் புகழை மெல்ல, மெல்ல குறைக்கும் தன்மை கொண்டவை என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

இலங்கையைச் சேர்ந்த யாழ்ப்பாணத் தமிழர் ஜெர்ரி ஸ்டாலின் எழுத்தில், இசையில் வெளியாகியுள்ள "யாழ்ப்பாணத்திலிருந்து கொலைவெறிடா' பாடல் யூ டியூப் மூலம் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

"என் தமிழ் மொழி மேல் உனக்கேனிந்த கொலை வெறிடா' எனத் தொடங்கும் பாடல் வரிகள் ஒரு தமிழ் இளைஞரின் கோபத்தை ஆக்ரோஷமாகக் கொப்பளிக்கிறது.

யாழ்ப்பாணத் தமிழருக்கு தமிழ் மேல் இருக்கும் அக்கறை, தமிழகத்தில் வாழும் நமக்கு ஏன் ஏற்படவில்லை என்பது தெரியவில்லை.

தமிழையும், தமிழின் புகழையும் சிதைக்கும் தரமில்லாத திரைப்படப் பாடல்கள் குறித்து பொதுநல விரும்பிகளும், தமிழ் ஆர்வலர்களும் தங்களது ஆதங்கத்தை அழுத்தமாகத் தெரிவிக்க வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற பாடல்கள் வெளிவருவது தடுக்கப்படும்.

http://dinamani.com/edition/Story.aspx?SectionName=Editorial

:D
  • தொடங்கியவர்

coma_open.gif

இக்கட்டுரை ஆசிரியருக்கும் வெளிட்டுள்ள தினமணிக்கும் நன்றி. தமிழுணர்வை தூண்டும் இதுபோன்ற சொற்களை நாம் படித்து நன்கு சிந்திக்க வேண்டிய ஒரு கால கட்டத்தில் தமிழர்களாகிய நாம் இன்று உள்ளோம். " தமிழகத்தில் உள்ள பெற்றோர் தங்களது குழந்தைகளை ஆங்கிலப் பள்ளிகளில்தான் படிக்க வைக்கின்றனர். "- இது நம் வரலாற்றில் ஏற்பட்டுள்ள ஒரு கட்டாயம்!

இதுவரை மெட்ரிக் பள்ளிகள் மற்றும் ஆங்கிலோ இந்திய பள்ளிகள் இருந்தது போய் , இப்போது இங்கே எல்லாம் பன்னாட்டு பள்ளிகளும் இதர வித்யாலங்களும் பெருகிவருகின்றன. இவை எல்லாம் மொத்தமாக தமிழன் என்ற உணர்வையே இனி வரும் தலைமுறைகளுக்கு அகற்றிவிடும். வருத்தப்பட்டு பயனில்லை. இங்கே ஒரு பெரும் இந்திய தேசிய தொழில் அதிபர் உள்ளார்.

எப்போதும் தமிழின் உயர்வை பற்றி வாழ் முழுவதும் பேசி வந்துள்ளார். ஆனால் அவர் தலைமை ப்ரௌப்பில் உள்ள சர்க்கரை ஆலை சரக்கு மற்றும் பயணிகள் போக்குவரத்து நிறுவன செயலகத்தில் தமிழில் பெயரில்லை. " இதுபோன்ற பாடல்கள் தமிழில் வெளிவர ஆரம்பித்தால் இளைய சமுதாயம் சீரழிய ஆரம்பித்துவிடும். இப்படிப்பட்ட பாடல்கள் தமிழின் புகழை மெல்ல, மெல்ல குறைக்கும் தன்மை கொண்டவை என்பதையும் ந

coma_close.gif

coma_open.gif

" யாழ்ப்பாணத் தமிழருக்கு தமிழ் மேல் இருக்கும் அக்கறை, தமிழகத்தில் வாழும் நமக்கு ஏன் ஏற்படவில்லை என்பது தெரியவில்லை_- அவர்களின் வரலாறு வேறு. அவர்களும் நல்ல மொழிபற்று இருந்ததால் தான் தங்களுக்கு உரிமையுடைய மண்ணில் தமிழ் ஈழம் நாட்டையே தனியே வேண்டி போராடினார்கள். இந்தியா அதை திட்டமிட்டே அழித்தது! இங்கயும் நாம் தமிழர்களாக இல்லாமல் இந்தியர்களாக வரலாற்று போக்கில் மாறி உள்ளதின் ஒரு மோசமான விளைவு தான் வளரும் தலைமுறையும் இனி வரும் தலைமுறைகளும் தமிழை மறப்பதற்கு காரணம். தமிழ் திரைபடங்கள் இன்று வணிக முயர்ச்சிகளே! அவை மொழிபற்றை , தமிழ்நாடு பற்றை வளர்த்த காலம் முடிந்து விட்டது.

coma_close.gif - P .Padmanaabhan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.