Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேடகம் -நோர்வே அறிக்கை மீள்பார்வை

Featured Replies

ர்வே அமைதி முயற்சியின் மீள்பார்வை அறிக்கை மீது உரையாடல்

THEDAKAM1-300x225.jpg‘தேடகம்’ அமைப்பினர் ஒழுங்கமைத்த நோர்வேயின் அறிக்கை மீதான கலந்துரையாடல் 29 யனவரி 2012 அன்று கனடா ஸ்காபுரோவில் நடைபெற்றது. கலந்துரையாடலை ரதன் ரகு வழிநடத்தினார். வில்லவராயன் ஆனந்தராம் நோர்வேயின் அறிக்கையை சுருக்கமாக கலந்துரையாடல் தொடங்குவதற்குரிய வகையில் முன்வைத்தார். (Pawns of Peace: Evaluation of Norwegian peace efforts in Sri Lanka, 1997-2009)

இந்த கலந்துரையாடல் அல்லது பகுப்பாய்வு உரையாடல் மிகவும் பயனுள்ள வகையில் அமைந்திருந்தது. கருத்து நிலையில் பல முனைகளிலும் உள்ளோர் வந்து கலந்துகொண்டனர். தற்போது கனடாவில் தமிழர்களிடையே இருக்கும் அறிவார்ந்த தளங்களில் சிந்திப்போரிடையே நிலவும் ஓர் மிகவும் உற்சாகம் தரக்கூடிய சூழலாகவே இதைப் பார்க்கமுடியும்.

ஒரு சமூகம் தன்னை வழிநடத்திக் கொள்வதற்கு சரியான திசைவழிப்படுத்தல்கள் தேவை. அதற்கான கூறுகளை இந்த உரையாடல்களில் நாம் காணமுடியும். இப்படிப்பட்ட உரையாடல்கள் மிகச் சரியான கருத்துக்களுடன் இருக்கமுடியாது. ஆனால் சரியான உரையாடலாக இருக்கமுடியும். பலதரப்பட்ட கருத்துக்களும் கொடுக்கல் வாங்கல் நிலையில் உள்வாங்கப்படும். கருத்து நிலை உரையாடல் வெற்றிதோல்வியை நோக்கியதல்ல. அந்த மனப்பாங்கு இந்த உரையாடல்களில் தொனிப்பது மிகவும் மகிழ்ச்சிய தருவது.

THEDAKAM2-300x225.jpgஇந்த முயற்சியைத் தேடகம் அமைப்பினர் தொடர்ந்தும் செய்து வரவேண்டும் என்பது பங்கேற்ற பலரதும் விருப்பாக இருந்தது. ஒரு காலத்தில் தமிழர்கள் தமிழர்களிடையேயே பேசுவதற்கு தயங்கிய அல்லது பயந்த நிலை இருந்தது. அந்நிலை இன்று இல்லை. அந்தச் சூழமைவும் இந்த உரையாடல் வளர்ச்சிக்கு ஒரு காரணம்.

இப்படிப்பட்ட உரையாடல்கள் நடக்கும் இடங்களில் பல நூற்களில் படித்துப்பெறும் தரவுகளையும் செய்திகளையும் பெற்றுக்கொள்ளமுடியும்.

இந்த கலந்துரையாடல் குறித்து ரமேஸ் எழுதிய முக நூல் குறிப்பின் ஒரு பகுதியையும் இங்கு தருகின்றோம். முக நூலில் காற்றில் கலந்த பேரோசையாக அனைத்தும் காணாமல் போய்விடும் பேராபத்து நிலையும் இருக்கிறது. எனவே அதைப் பதிவாக்க (வடிவம் திருத்தி) இங்கே பதிவாக்குகின்றோம். இது சுய விமர்சனமே தேவை என்ற தலைப்பில் வந்திருந்தது:

“இந்தக் கலந்துரையாடல் குறிப்பிட்ட தலைப்பின் ஊடாக உரையாடப்பட்டிருந்தாலும், அதனுடன்தொடர்புடையதும், தொடர்பற்றதுமான பல விடயங்களும் பேசப்பட்டன என்பது உண்மை. முடிந்தளவிற்கு குறுகீடுகள் குறைவாக இருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது. இதில் பேசியவர்களில் அனேகமானவர்கள், நோர்வே தொடக்கம், மேற்குலக நாடுகள், இந்தியா, இலங்கை போன்ற நாடுகள் நேர்மையற்ற முறையிலேயே இலங்கை இனப்பிரச்சினையை கையாண்டார்கள் என்றும் அதிலும் நோர்வை கூட இந்த பிரச்சினையை மிகவும் உள்நோக்கத்துடன் நடந்துகொண்டது என்றும் பேசினார்கள்.

அத்தோடு தமிழர் பிரச்சினையில் புலிகளும் இதேபோன்ற அணுகுமுறையுடனேயே நடந்துகொண்டார்கள் என்பதையும் சிலர் குறிப்பிட்டிருந்தார்கள். இந்த உரையாடல்களை முழுவதுமாக பார்த்துக்கொண்டிருந்தபோது எனக்குப் பட்டது, இலங்கை இனப்பிரச்சினையில் நாம் எல்லோரும் தெளிவாகவும், சரியாகவும் இருப்பதாகவும், நேர்வே தொடக்கம், இந்தியா, ஏனைய ஐரோப்பிய நாடுகள் எல்லாம் எமது பிரச்சினையில் வஞ்சகத்தனமாகவும், அரசியல் உள்நோக்கத்துடனும் நடந்து கொண்டது, நடந்துகொள்கிறது. என்ற அபிப்பிராயத்திலேயே பலரின் பேச்சுக்கள் இருந்தன. அது உண்மையும் கூட.

ஆனால் இந்த யுத்த நிறுத்த ஒப்பந்தமாக இருந்தாலும் சரி, சமாதானப் பேச்சுவார்தையாக இருந்தாலும் சரி இந்த விடத்தில் தமிழர் தரப்பு நடந்துகொண்ட முறையில் சாதக பாதக நிலமைகளை விரிவாக ஆரயப்படவில்லை. ஒருவேளை ‘நோர்வேயின் சமாதான முயற்சியும் நாமும்’ என்ற தலைப்பிடப்பட்டிருந்தால் அது சாத்தியமாக இருந்திருக்குமோ என்னவோ? இன்றைய சூழலில் நமது அரசியல், சமூக சிந்தனையில் சுயவிமர்சனம் செய்யப்படவேண்டும் என்று சொல்லுபவர்களின் கருத்துடனேயே நானும் ஒத்துப்போகிறேன். எமது இன்றைய பார்வையின் மீதே நாம் விமர்சனம் செய்யவேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம். காரணம் நாம் தொடர்ச்சியாக மற்றவர்கள் மீது குற்றம் சுமத்திப் பழக்கப்பட்டவர்களாக இருந்ததனாலும், எம்மீதான விமர்சனப்பார்வை எம்மிடம் இல்லாததினாலும் தான் நாமும், நமது சமூகமும் இன்றுள்ள நிலையில் இருக்கிறோம் என்பதும் எனது கருத்து. ‘தேடகம்’ இவ்வாறான கலந்துரையாடல்களை தொடர்ச்சியாக கனடாவில் செய்துவருவது அரோக்கியமான விடயமே!

பல்வேறு மாற்றுக் கருத்துக்கொண்டர்வர்களை ஒரே இடத்தில் உரையாடும் வசதியை ஏற்படுத்திக் கொடுப்பதில் தேடகத்தின் தேவை, தேவையே. உதாரணமாக நாடு கடந்த அரசாங்கத்தின் சபாநாயகர் பொன் பால்ராஜ் போன்றவர்களோடு கருத்துக்கள் பரிமாறப்படும்போது குறிப்பிட்ட கருத்துக்கள் இன்னொரு சூழலுக்கு கடத்தப்படுகின்றதையும், அல்லது அவர் போன்றவர்கள் மாற்றுக்கருத்துக் கொண்டவர்களின் சூழலுக்குள் வந்து உரையாடல்கள் நிகழ்த்தப்படுவது நல்ல சமிஞ்ஞையாகவே எனக்குப் படுகிறது.”

ஒரு காலத்தில் தமிழர்கள் தமிழர்களிடையேயே பேசுவதற்கு தயங்கிய அல்லது பயந்த நிலை இருந்தது. அந்நிலை இன்று இல்லை. அந்தச் சூழமைவும் இந்த உரையாடல் வளர்ச்சிக்கு ஒரு காரணம்.

இன்று தாயகத்தில் எமது உறவுகள் பயந்த நிலையிலேயே வாழுகின்றனர். அதைப்பற்றி இவர்கள் ஏதும் கலந்துரையாடினார்களா?

  • தொடங்கியவர்

தலைப்பை விட்டு விலகி எவரும் பேச வேண்டாம் என்று அழுத்தமாக சொன்னார்கள் .

பல மாறுபட்ட தளங்களிலும் இருந்து கருத்துக்கள் வந்தன ஆனால் முடிவு ,

நோர்வே தனது பங்களிப்பை சரிவர செய்யவில்லை என்பதை எல்லோரும் ஒப்பு கொண்டார்கள் ,அதை நோர்வே கூட ஒப்புக்கொண்டே இருந்தது .ஆசிய நாடுகளில் இருக்கும் அரசியல் தன்மைக்கு மேற்குலகம் வைக்கும் தீர்வு என்பது ஒவ்வாமையில் தான் முடியும் என்பதை தாங்கள் கற்று கொண்டார்கள் என்று முடித்திருந்தார்கள் .ஆனால் உண்மை அதுவல்ல என்பதே பெரும்பான்மையினரது கருத்து. பேச்சு வார்த்தைக்கு வரும் போதே புலிகளை அழிக்கும் நோக்கில் தான் நோர்வே வந்ததாக சொன்னார்கள் .

நான் வைத்த கருத்து .இலங்கை -இந்திய ஒப்பந்தத்தின் இரண்டாம் பாகமாகவே இதை நான் பார்த்தேன் .இந்தியா புலிகளை தடை செய்திருப்பதால் ஒரு மூன்றாம் தரப்பாக மேற்கு நாடுகளின் அனுசரணையுடன் நோர்வேயை கொண்டுவந்தது (எரிக் சொல்கெய்ம் எந்த நாளும் இந்தியா போய் வந்ததை பார்த்தாலே புரியும் ).புலிகள் தமிழீழத்தை தவிர எதையும் ஏற்றுக்கொள்ள தயாராகவில்லை .(கருணா -பாலசிங்கம் உரையாடல் ). சிங்கள அரசை வழிக்கு கொண்டுவருவதை விட புலிகளை வழிக்கு கொண்டுவருவதில் தான் நோர்வே கஷ்டப்பட்டது .

இந்திரா-சிறிமா ,ராஜீவ்-ஜே .ஆர் ரணில்-பிரபா வரையிலான நிலைமை ,போர்நிறுத்த ஒப்பந்தம் ,கண்காணிப்புக்குழு அறிக்கை எல்லாம் தொட்டே பேசினேன் .விரும்பியோ விரும்பாமலோ இந்தியா தான் எமது எந்த ஒரு தீர்வையும் தீர்மானிக்கும் என அடித்து கூறினேன்.பலர் அங்கும் இங்கும் தலையை ஆட்டினார்கள் .நாடு கடந்த அரசின் சபாநாயகர் பொன்-பாலராஜன் சொன்னார் தான் எரிக் சொல்கெய்மமையும் கனேடியன் வெளிவிவகார அமைச்சரையும் (முன்னாள் பீற்றர் மாக்கே ) சந்தித்ததாகவும் இந்தியாவை தவிர்த்து ஒரு தீர்வை எங்களால் ஒரு போதும் கொண்டு வரமுடியாது என்று .

நாலு பேரை சந்தித்தவர்களின் முடிவு இதுதான் , வீர வசனம் பேசுபவர்களின் முடிவு எவரும் தேவையில்லை எமக்கு எல்லாம் தெரியும் என்பது

இன்று தாயகத்தில் எமது உறவுகள் பயந்த நிலையிலேயே வாழுகின்றனர். அதைப்பற்றி இவர்கள் ஏதும் கலந்துரையாடினார்களா?

நீங்கள் சொல்வது உண்மை தான் ஆனால் அந்த பயம் பொது எதிரியான சிங்களவனின் அடக்குமுறைக்கு மட்டும் தான். ஆனால் முந்தி அப்படியில்லை............

தலைப்பை விட்டு விலகி எவரும் பேச வேண்டாம் என்று அழுத்தமாக சொன்னார்கள் .

பல மாறுபட்ட தளங்களிலும் இருந்து கருத்துக்கள் வந்தன ஆனால் முடிவு ,

நோர்வே தனது பங்களிப்பை சரிவர செய்யவில்லை என்பதை எல்லோரும் ஒப்பு கொண்டார்கள் ,அதை நோர்வே கூட ஒப்புக்கொண்டே இருந்தது .ஆசிய நாடுகளில் இருக்கும் அரசியல் தன்மைக்கு மேற்குலகம் வைக்கும் தீர்வு என்பது ஒவ்வாமையில் தான் முடியும் என்பதை தாங்கள் கற்று கொண்டார்கள் என்று முடித்திருந்தார்கள் .ஆனால் உண்மை அதுவல்ல என்பதே பெரும்பான்மையினரது கருத்து. பேச்சு வார்த்தைக்கு வரும் போதே புலிகளை அழிக்கும் நோக்கில் தான் நோர்வே வந்ததாக சொன்னார்கள் .

நான் வைத்த கருத்து .இலங்கை -இந்திய ஒப்பந்தத்தின் இரண்டாம் பாகமாகவே இதை நான் பார்த்தேன் .இந்தியா புலிகளை தடை செய்திருப்பதால் ஒரு மூன்றாம் தரப்பாக மேற்கு நாடுகளின் அனுசரணையுடன் நோர்வேயை கொண்டுவந்தது (எரிக் சொல்கெய்ம் எந்த நாளும் இந்தியா போய் வந்ததை பார்த்தாலே புரியும் ).புலிகள் தமிழீழத்தை தவிர எதையும் ஏற்றுக்கொள்ள தயாராகவில்லை .(கருணா -பாலசிங்கம் உரையாடல் ). சிங்கள அரசை வழிக்கு கொண்டுவருவதை விட புலிகளை வழிக்கு கொண்டுவருவதில் தான் நோர்வே கஷ்டப்பட்டது .

இந்திரா-சிறிமா ,ராஜீவ்-ஜே .ஆர் ரணில்-பிரபா வரையிலான நிலைமை ,போர்நிறுத்த ஒப்பந்தம் ,கண்காணிப்புக்குழு அறிக்கை எல்லாம் தொட்டே பேசினேன் .விரும்பியோ விரும்பாமலோ இந்தியா தான் எமது எந்த ஒரு தீர்வையும் தீர்மானிக்கும் என அடித்து கூறினேன்.பலர் அங்கும் இங்கும் தலையை ஆட்டினார்கள் .நாடு கடந்த அரசின் சபாநாயகர் பொன்-பாலராஜன் சொன்னார் தான் எரிக் சொல்கெய்மமையும் கனேடியன் வெளிவிவகார அமைச்சரையும் (முன்னாள் பீற்றர் மாக்கே ) சந்தித்ததாகவும் இந்தியாவை தவிர்த்து ஒரு தீர்வை எங்களால் ஒரு போதும் கொண்டு வரமுடியாது என்று .

நாலு பேரை சந்தித்தவர்களின் முடிவு இதுதான் , வீர வசனம் பேசுபவர்களின் முடிவு எவரும் தேவையில்லை எமக்கு எல்லாம் தெரியும் என்பது

இப்படியான கருத்துக்களை 2002இல் ன் இருந்து வைப்பதுக்கான சூழலை தமிழ்ச் சமுகம் உருவாக்காதது பெரும் தவறு.

நீங்கள் சொல்வது உண்மை தான் ஆனால் அந்த பயம் பொது எதிரியான சிங்களவனின் அடக்குமுறைக்கு மட்டும் தான். ஆனால் முந்தி அப்படியில்லை............

கோழியிலிருந்து முட்டை வந்ததா இல்லை மாறியா?

மீண்டும் ஒரு ஆயுத கலாச்சாரம், அழிவு ஏற்படாமல் இருக்க மக்களுக்கு தேவை அடிப்படை உரிமையும் சுதந்திரமும். அது அன்று இல்லாதமையால் போராடினோம். அவ்வாறு மீண்டும் இடம்பெறாமல் ஒரு தீர்வை காண எல்லோரும் முயற்சிக்கவேண்டும்.

முடிந்தால் தேடக அங்கத்துவர்கள் கனடாவில் உள்ள 47 நாடுகளுடன் தொடர்புகளை மேற்கொண்டு ஐ.நா. மனித உரிமை நாடுகளின் மாநாட்டில் எமது தரப்புக்கு பலம் சேர்க்கலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.