Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

’பெருமழைக்காலம்-மலையாள படம்-2

Featured Replies

கணவனை இழந்த பெண் ஒருபுறம், கணவனை காப்பாற்றப் போராடும் ஒரு பெண் என இருபெண்களின் கதை ‘’பெருமழைக்காலம்’’ திரைப்படம்… துக்கத்திலோ, மகிழ்ச்சியிலோ அழுவதை விட நெகிழ்ச்சியில் அழுவது எப்போதாவது தான் வாய்க்கிறது.. அப்படி நெகிழும் தருணங்கள் இந்தப் படத்தில் கதாபாத்திரங்களுக்கு மட்டுமல்ல, நமக்கும் நிறையமுறை நடக்கிறது..

கோழிக்கோட்டில் வசிக்கும் இஸ்லாமியப் பெண் ரஸியா(மீரா ஜாஸ்மின்). திருமணமானவுடன் சவுதிக்கு சென்ற கணவனுக்காக கைக்குழந்தையுடன் காத்திருக்கிறார். கணவன் அக்பர் (திலீப்) விரைவில் வீடு திரும்ப இருப்பதால், அதுகுறித்தே தன் உப்பாவுடன் பேசிக் கொண்டிருக்கிறாள் அவள். துருதுருவென சுற்றித்திரியும் ரஸியாவைத் தேடி துயரச்செய்தி ஒன்று வருகிறது. சவுதியில் வசிக்கும் அக்பர் பாலக்காட்டை சேர்ந்த தன் அறை நண்பர் ரகுராமனை கொலை செய்து விட்டதாகவும், போலீஸ் அவரைக் கைது செய்துவிட்டதாகவும் சவுதியில் இருக்கும் அக்பரின் நண்பர்கள் ஃபோன் செய்கததாக ரஸியாவின் உறவினர் வந்து சொல்கிறார். வெளியே மழை கொட்டிக் கொண்டிருக்கிறது…

அன்று வெள்ளிக்கிழமை. பாலக்காட்டில் கல்பாத்தி அக்ரஹாரத்தில் கங்கா (காவ்யா மாதவன்) தன் கணவன் ரகுராமனின் (வினீத்) ஃபோனுக்காக காத்திருக்கிறார். வீட்டின் ஆண்கள் ரகுராமன் கொல்லப்பட்ட செய்தியை பெண்களிடம் சொல்லத் தயங்குகிறார்கள். ‘’அவரோட ஃபோன் இப்ப வரும். நான் சுபத்ரா வீட்டுக்கு போய் வெயிட் பண்றேன். நீங்க சொன்னதா எதாவது சொல்லணுமா?’’ என கேட்டுவிட்டு சிரித்தபடி செல்கிறாள். ‘’பாடி வந்து சேர ஒருவாரம் ஆகும். அதுவரை இவ பொட்டோடவும், பூவோடவும் வெளியே திரியறது நல்லாவா இருக்கு. அதனால அவன் செத்ததை சீக்கிரம் சொல்லுங்க’’ என நச்சரிக்கிறார் ஒருவர்… விடாது பெயது கொண்டிருக்கிறது மழை…

கைது செய்யப்பட்ட அக்பருக்கு என்ன தண்டனை கிடைக்குமோ என பதறியபடி காத்திருக்கிறாள் ரஸியா. வீட்டின் வெளியே காத்திருக்கும் ஊர்மக்கள் சவுதி அரேபியாவின் ஷரியத் தண்டனை குறித்து ஆளுக்கொன்றாக சொல்கிறார்கள். விடாது கண்ணீரோடு பிரார்த்திக் கொண்டிருக்கிறாள் ரஸியா… கண்ணீருக்கு இணையாக மழையும் நிற்காமல் பெய்கிறது.

பாலக்காட்டில் கங்காவுக்கு வெள்ளைப்புடவை அணிவிக்கப்படுகிறது. சிரிக்கும் தன் கைக்குழந்தையோடு வெறித்தபடி அமர்ந்திருக்கிறாள் கங்கா. சவுதியில் அக்பருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட செய்தியறிந்து வீடே பழிதீர்த்த உணர்வில் சந்தோஷம் கொள்கிறது. கங்காவுக்கும் அந்த தண்டனை சின்ன நிம்மதியைத் தருகிறது.

தன் கணவனின் தண்டனையை ரத்துசெய்யக் கோரி, தன் அப்பாவுடன் எம்.எல்.ஏ.வை சந்தித்து ஏதாவது செய்ய முடியுமா எனக் கேட்கிறார் ரஸியா. சவுதியில் இருந்து வரும் அக்பரின் நண்பன் ஜார்ஜ் (பிஜூ மேனன்) அக்பரின் வீடு கட்டும் கனவையும், அவன் ரஸியாவையும், குழந்தையையும் எவ்வளவு நேசித்தான் என்றும் சொல்கிறான். அக்பரும், ரகுராமனும் நெருங்கிய நண்பர்கள் என்றும், ஹனீபா என்பவருக்கு அக்பர் கொடுத்த கடனை திருப்பிக் கேட்க, அவர் கொடுக்க மறுக்க நடந்த சண்டையில், எதிர்பாராமல் ரகுராமன் இறந்து விட்டதாகவும், திட்டமிட்டு எதுவும் நடக்கவில்லை என்றும் சொல்கிறான். அப்போதும் வெளியே மழை பெய்கிறது.

ரகுராமனின் மனைவி கங்கா அக்பரை மன்னிப்பதாக ஒரு கையெழுத்து இட்டால், அக்பரின் தண்டனையை குறைக்கலாம் எனச் சொல்கிறான் ஜார்ஜ். தன் கைக்குழந்தையோடும், உப்பாவோடும் கங்காவைத் தேடி பாலக்காடு செல்கிறாள் ரஸியா. வழியெங்கும் மழை பெய்கிறது. உப்பாவின் நண்பர் வீட்டில் தங்கும் அவர்கள் கங்காவின் வீட்டிற்கு செல்கிறார்கள். தொடர்ந்து இரண்டு நாட்கள் ரஸியா எவ்வளவோ கெஞ்சியும், கங்காவை சந்திக்கவே அவளது குடும்பத்தினர் அனுமதி கொடுக்க மறுக்கின்றனர். கங்காவை ஒருமுறை சந்திக்க வேண்டும் என ரஸியா கெஞ்ச, துணி துவைத்துக் கொண்டிருக்கும் சோப்புத் தண்ணீரை எடுத்து அவள் தலையில் கொட்டுகிறான் கங்காவின் மைத்துனன். அழுகையோடும், இயலாமையோடும் கொட்டும் மழையில் நிற்கும் ரஸியாவை மாடியில் இருந்து பார்க்கும் கங்காவிற்கு அவள்மீது இரக்கம் வருகிறது.

மறுநாள் மீண்டும் கங்காவை சந்திக்க வருகிறாள் ரஸியா. கோயிலில் இருந்து வெளியே வரும் கங்காவிடம் தன் நிலைசொல்லி கதறுகிறாள் ரஸியா. ’’உன் கணவரை காப்பாற்ற என்கிட்ட வந்து நிக்கிறே.. உன்னால என் கணவரை திருப்பித்தர முடியுமா?’’ என்கிற கங்காவின் கேள்விக்கு ரஸியாவிடம் பதிலில்லை. மழையில் அப்படியே நனைந்தபடியே வெகுநேரம் நிற்கிறாள்.

தண்டனைக்கு ஒருவாரமே இருக்கும் நிலையில், மறுநாள் கையெழுத்து கிடைத்தால் தான் எதாவது செய்ய முடியும் என்று ஜார்ஜ் சொல்ல, கண்ணீரோடும், பதட்டத்தோடும் மறுநாளும் கங்காவை தேடிச் செல்கிறாள் ரஸியா. கோயில் வாசலில் கங்காவின் காலைப்பிடித்து கையெழுத்து போடச்சொல்லி கெஞ்சுகிறாள். கங்காவின் குடும்பத்தினர் வலுக்கட்டாயமாக அவளைப் பிடித்துத் தள்ளுகிறார்கள். அவள்மீது இரக்கம் வந்தாலும், குடும்பத்தை மீறி எதுவும் செய்ய முடியாமல் அவளது பிடியை விட்டு ஓடுகிறாள் கங்கா. துரத்தித் துரத்தி அவளிடம் கெஞ்சுகிறாள் ரஸியா. மண்ணில் புரண்டு அழும் ரஸியாவிடம், தொலைக்காட்சி நிருபர், ‘’கையெழுத்து கேட்பது ஒரு முஸ்லிம் பெண். போட மறுப்பது ஒரு இந்து பிராமணப் பெண். இது ஒரு மதப் பிரச்னையா?’’ என்று ஆரம்பிக்க, ஆவேசத்தோடு அவர்மீது சேற்றை வாரி எறிகிறாள் ரஸியா.

அந்த அடைமழையிலும், படிப்புரை ஓரத்தில் தன் உப்பாவுடன், கங்காவின் மனமாற்றத்துக்காக அன்று முழுவதும் காத்திருக்கிறாள் ரஸியா. ஜன்னல் வழியே அவர்களை பார்க்கும் கங்காவுக்கும் அழுகை வருகிறது. அதிகாலையில், வீட்டை விட்டு வெளியே வந்து இருவரையும் தேடுகிறாள் கங்கா. அவர்கள் மழையில் ஒரு நிழல்போல் கடந்து போனதாகச் சொல்கிறார் பக்கத்து வீட்டு மணிமாமா. நான் கையெழுத்து போடப் போகிறேன் என கங்கா சொல்ல, நீ வெளியே வந்தது தெரிந்தாலே வீட்டில் கலவரம் நடக்கும் என சொல்கிறார் மணிமாமா. கங்காவின் பிடிவாதத்தை பார்த்து பாலக்காட்டில் அவர்கள் தங்கியிருந்த வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார் மணிமாமா.

அவர்கள் அங்கிருந்து கோழிக்கோடு கிளம்பி விட்டதை அறிந்து, யோசிக்காமல் கோழிக்கோடு புறப்படுகிறாள் கங்கா. அங்கு பிரமை பிடித்ததுபோல் அசையாமல் உட்கார்ந்திருக்கும் ரஸியாவை பிடித்து உலுக்கிறாள். ‘’இன்னும் நேரமிருக்கு. அக்பரை காப்பாற்றிடலாம். எங்கே கையெழுத்து போடணும்’’ எனக் கேட்கும் கங்காவின் கால்பிடித்து நன்றி சொல்கிறாள் கங்கா. பாலக்காட்டிற்கு திரும்பி வரும் கங்காவை அக்ரஹாரத்தை விட்டே வெளியேற்றுகிறது குடும்பமும், ஊரும்…

கடைசிக் காட்சியில், தண்டனை முடிந்து வரும் கணவனுக்காக வளர்ந்த தன் மகளோடு காத்திருக்கிறாள் ரஸியா. அக்பர் மனைவியிடம் கங்காவை பார்க்க வேண்டும் எனச் சொல்கிறான். ஊருக்கு வெளியே ஒரு சிறிய வீட்டில் இரு பெண்களோடு வெள்ளைப் புடவையில் பலகாரம் சுட்டுக் கொண்டிருக்கிறாள் கங்கா. வெளியே விளையாடிக் கொண்டிருக்கிறது குழந்தை.

இவர்களை பார்த்ததும் யாரென்று கேட்கும் குழந்தையிடம், ‘’உங்க அப்பாவின் நண்பரும், அவரோட மனைவி குழந்தையும்’’ என அறிமுகப்படுத்துகிறாள் கங்கா. அவருக்கு கைகூப்பி மன்னிப்பு கேட்டு, நன்றி சொல்கிறான் அக்பர். ’’எங்களால் தானே உங்களுக்கு இந்த நிலைமை’’ என ரஸியா கலங்க, அவளது கைப்பிடித்து, ‘’என் குழந்தையை திருப்பிக் கொடுத்தாங்களே அதுவே போதும். இனி அவளை வளர்த்து ஆளாக்க வேண்டியது தான்.’’ என்று சிரிக்கிறாள் கங்கா. வெளியே குழந்தைகள் இணைந்து விளையாடத் தொடங்குகிறார்கள்… படம் முடிகிறது….

ஒரு பெருமழைக் காலத்தில் நடக்கும் இரு பெண்களின் துயரங்கள் நம்மையும் தொற்றிக் கொள்கிறது. அதை மேன்மையுடன் அவர்கள் கடக்கும் விதமோ நெகிழ வைக்கிறது… இதேபோன்ற படங்கள் தமிழில் வராதா என்கிற ஏக்கம் வருவதையும் தவிர்க்க முடியவில்லை…

இயக்கம் : கமல்

via-facebook(thanks- priya thambi)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.