Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இவர்கள் ஏன் யாழ்ப்பாணம் போகிறார்கள்!

Featured Replies

இலங்கை அரசின் சுற்றுலா உதயம் என்ற வேலைத் திட்டம் 2011ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களை சுற்றுலாத் துறையில் ஈடுபடச் செய்யும் இலக்கை இந்த வேலைத் திட்டம் கொண்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுப் பயணிகள் எதிர்பார்க்கைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் நாட்டைத் தயார்ப்படுத்தும் இலக்கும் இதிலடங்கும்.

உள்ளுர் வாசிகளின் சுற்றுப் பயணங்கள் வடக்கு கிழக்கை நோக்கி இடம்பெறுகின்றன. போர் ஓய்ந்த பிறகு சிங்கள மக்கள் அலை அலையாக வடக்கு கிழக்கு நகரங்களுக்கு படையெடுக்கின்றனர். மாதமொன்றுக்கு மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட சிங்கள மக்கள் குடும்பம் குடும்பமாக மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, மன்னார், யாழ்பாணம் போன்ற நகரங்களுக்குச் செல்கின்றனர்.

110212%20006.jpg

இந்தப் பயணிகள் நகர்ப்புறத் தங்குமிடங்களைத் தவிர்க்கின்றனர். தமிழர்களின் கிராமப் புறங்களுக்கு சென்று அவர்களுடைய நாகரிகம் பழக்கவழக்கங்களை அவதானிக்கக் கூடுதலாக விரும்புகின்றனர். இந்தச் செயற்பாட்டில் ஒரு வித்தியாசமான உள்நோக்கம் புலப்படுகிறது. முப்பது ஆண்டுகளுக்கு மேலாக சிங்கள அரசிற்குச் சிம்ம சொப்பனமாக இருந்த தமிழர்கள் தோல்விகண்ட பிறகு எப்படி வாழ்கிறார்கள் என்று பார்க்க விரும்புகிறார்கள்.

சுற்றுப் பயணிகள் முகத்தில் வெற்றிக் களிப்பு தெளிவாகத் தெரிகிறது. தாம் வெற்றி கொண்ட மக்களை உயிரியல் பூங்காவில் அடைக்கப்பட்ட விலங்குகளைப் போல் பார்க்கிறார்கள். தமக்குத் தெரிந்த கொச்சைத் தமிழில் உரையாடி மகிழ்கிறார்கள். கோவில் உற்சவங்களையும் சென்று பார்க்கிறார்கள். உரத்த குரலில் தமது மொழியில் தமக்கிடையில் பேசிக் கொள்கிறார்கள்.

போர் சுவடுகள் அப்படியே இருக்கின்றன. இடிந்த சுவர்கள் சூட்டுக் காயங்களுடன் வீடுகள், எறிகணை வீச்சில் தலையிழந்த பனை, தென்னைகள் இவற்றை அவர்கள் தமது கைபேசிப் படக்கருவியில் பதிவு செய்கிறார்கள். ஆனையிறவில் புலிகள் பயன்படுத்திய ஒரு துருப்பிடித்த போர்த் தாங்கி காணப்படுகிறது.

110212%20007.jpg

அதற்குப் பக்கத்தில் நின்று படம் பிடிப்பது ஒரு வித சம்பிரதாயமாகி விட்டது. கிளிநொச்சி நகரில் ஒரு தண்ணீர் தாங்கி தலை குப்புற வீழ்ந்து தரையில் கிடக்கிறது. அதுகும் இந்த சுற்றுப் பயணிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. பனையால் வீழ்ந்தவனை மாடு ஏறி மிதிப்பது போன்ற செயற்பாடுகள் நடக்கின்றன. தமிழர்களால் இதைத் தடுப்பதற்கு ஒன்றும் செய்ய முடியாது.

ஈழத் தமிழர்களின் அவலம் அவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழ் நாட்டு உல்லாசப் பயணிகளும் கணிசமானளவில் வருகிறார்கள். அவர்களிற் பலர் ஈழத் தமிழர்களுக்காக் கண்ணீர் விடாத குறையாகக் கவலைப்படுகிறார்கள். ஒரு சிலர் தாம் உற்ற நேரத்தில் உதவத் தவறியமைக்காக வாய்ச்சொல் மூலம் வருந்தியதையும் பார்க்கவும் கேட்கவும் முடிகிறது.

குடும்பத்தோடு யாழ் வரும் சிங்களச் சுற்றுப் பயணிகள் தம்மோடு சமையல் பாத்திரங்கள், அரிசி, பருப்பு, மரக்கறி வகைகள், தகர மீன், எரிவாயு சிலின்டர்; போன்றவற்றை தமது வாகனங்களில் ஏற்றி வருகிறார்கள். விரும்பிய இடத்தில் சமைத்துச் சாப்பிடுகிறார்கள். பொதுக் கிணறுகள், தனியார் வீட்டுக் கிணறுகளில் எதுவித தயக்கமின்றி நீரை எடுக்கிறார்கள். தம்மைச் சுத்தம் செய்யவும் இந்த நீரைப் பயன்படுத்துகிறார்கள்.

யாழ்ப்பாண மக்களுக்கு இதெல்லாம் இப்போது பழக்கமாகி விட்டது. யாழ் மண்ணில் வாழும் உரிமை தமிழர்களுக்கு இருந்தாலும் சொத்துரிமை சிங்களவர்கள் வசமே இருக்கிறது. அவர்கள் நாட்டின் எப்பகுதிக்கும் தங்கு தடையின்றிச் செல்லலாம். அவர்களுக்கு இராணுவமும் பொலிசும் பாதுகாப்பு வழங்குகிறது. தமிழர்கள் இரண்டாம் தரக் குடிமக்களாகி விட்டனர்.

முன்பு பெருமளவு சிங்களவர்கள் வல்வெட்டித்துறைக்குச் சென்று தேசியத் தலைவரின் வீட்டைப் பார்க்க விரம்பினார்கள். இதை இராணுவம் விரும்பவில்லை. வீடு தரைமட்டமாகி விட்டது. வீட்டுக் காணியைச் சுற்றி முட்கம்பி வேலி போடப்பட்டுள்ளது. அந்தப் பகுதிக்குப் போவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணச் சிறு வியாபாரிகள் சுற்றுப் பயணிகள் மூலம் இலாபமடைகின்றனர். பொதி செய்யப்பட்ட கச்சான் கடலை, எள்ளுறுண்டை, மிக்சர், புளுக்கொடியல் போன்றவற்றை விற்றுப் பணமாக்குகின்றனர்.மீன் வியாபாரிகள் சமைத்துச் சாப்பிடும் பயணிகளுக்கு மீன் விற்கிறார்கள். சிங்களவர்கள் கோழி தவிர்ந்த பிற இறைச்சி வகைகளை உண்பதில்லை.

புலிகள் கற்றுக் கொடுத்த தமிழுணர்வு யாழ்ப்பாண சிறு வியாபாரிகளிடம் படிப்படியாகக் குறைகிறது. சிங்களவன் தமிழில் பேசத் தொடங்க அதை இடைநிறுத்தி இவர்கள் சிங்களத்தில் கதை விடுகிறார்கள.; இதையெல்லாம் மவுனமாக உணர்வுமிக்க தமிழர் இளைஞர்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

“காலம் ஒரு நாள் மாறும்,

எங்கள் கவலைகள் எல்லாம் தீரும்”

www.tamilkathir.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.