Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் அரச அதிபரின் அதிரடிச் சுற்றறிக்கை - ஆய்வு

Featured Replies

Imelda_Sukumar.gifமுல்லைத்தீவு அரச அதிபராகப் பதவி வகித்த திருமதி இமெல்டா சுகுமார் 2010 யூலை 13ம் நாள் யாழ் அரச அதிபராகப் பதவியேற்றார் அவருக்கு முன்பு யாழ் அதிபராக க.கணேஷ் பதவி வகித்தார் அவர் வவுனியா அரச அதிபராக இருந்த பின் யாழ்ப்பாணத்திற்கு மாற்றலாக வந்தார்.

2010ம் ஆண்டு கே.கணேஷ் 69 வயதினராக இருந்தார். கொழும்பு அரசுக்குச் சிறந்த ஒத்துழைப்பு வழங்கியதால் இளைப்பாறும் வயதிற்க்குப் பிறகும் அவருக்குப் பதவி நீடிப்பு வழங்கப்பட்டது. மீண்டுமொரு நீடிப்பு வழங்கப்படலாம் என்று இருக்கையில் இமெல்டா சுகுமாருக்கு பதவி உயர்வு வழங்க வேண்டிய தேவை எழுந்தது.

இதன் காரணமாக கணேஷ் இளைப்பாற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்திரசிறியும் அமைச்சர் டக்கிளஸ் தேவானந்தாவும் யாழ் அதிபராக இமெல்டா சுகுமாரை அமர்த்துவதில் தீவிர அக்கறை காட்டினார்கள். அவர் முல்லைத்தீவு அரச அதிபராக இருந்த காலத்தில் வன்னியில் புலிகள் ஆட்சி நடைபெற்றது

மீனுக்கும் பாம்புக்கும் சமகாலத்தில் தோழமை காட்டியதால் சிறந்த இராசதந்தரி என்ற பாராட்டும் இமெல்டாவுக்கு கிடைத்தது. அவர் பாம்பா மீனா என்பது விரைவில் தெரிய வந்தது. இராணுவ வெற்றியின் இரண்டாம் வருடத் கொண்டாட்டங்கள் கொழும்பில் நடந்த போது இராணுவத்தைப் பாராட்டியும் விடுதலைப் புலிகளைக் கடுமையாக விமர்சித்தும் அவர் பேருரை ஆற்றினார்

யாழ் அரச அதிபர் பதவியைப் பெற்றுக் கொடுத்த இராணுவ ஆளுநருக்கு செய்யும் நன்றிக் கடனாகவும் அது அமைந்தது முல்லைத்தீவில் பதவி வகித்த தாலத்தில் அவர் என்ன விதமான இரகசியத் தகவல்களைக் கொழும்புக்கு அனுப்பி கொண்டிருந்தார் என்று புலிகள் இப்போது தான் சிந்திக்கிறார்கள்.

யாழ் அரச அதிபராகப் பதவியேற்ற பிறகு இமெல்டாவின் நிர்வாகத் திறமை சிறிதளவேனும் புலப்படவில்லை. ஆளுநர் சந்திரசிறியின் நிழலில் நிறைவேற்று அதிகாரங்கள் அற்றவராக அவர் இடம்பெற்றார். பழைய பூங்கா கட்டிடம் இடிக்கப்பட்ட போது “என்ன நடக்குதென்று எனக்குத் தெரியவில்லை” என்று அவர் புலம்பினார்

ஒரு அரச அதிபர் இப்படியா புலம்புவது? யாழ்ப்பாணத்தில் ஒரு பொம்மலாட்டம் நடக்கிறது. நடப்பது இராணுவ ஆட்சி சொல்லப்படுவது சிவில் நிர்வாகம். இப்போது இமெல்டா தனது கை வரிசையைக் காட்டுவதற்கு ஒரு அதிரடி உத்தரவைப் பிறப்பித்திருக்கிறார்.

யாழ் மாவட்டத்தில் பிரதேச செயலகங்கள், உதவி அரச அதிபர் காரியாலயங்கள், யாழ் அரச அதிபர் காரியாலயம் ஆகியவற்றில் பணியாற்றும் பதவி நிலை மற்றும் மத்திய தர அதிகாரிகள் ஒவ்வொரு நாளும் கழுத்துப் பட்டி, முழுக்கை சேட்டு, நீண்ட கால் சட்டை அணிந்து அலுவலகத்தில் கடமையாற்ற வேண்டுமாம்.

இராணுவ ஆட்சியில் பெருமளவு பெண்கள் மேற்கூறிய பதவி நிலை மற்றும் மத்திய தர அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் என்ன விதமான ஆடை அலங்காரத்துடன் அலுவலகப்; பணியாற்ற வேண்டும் என்று இமெல்டாவின் சுற்றறிக்கை குறிப்பிடவில்லை. தன்னுடைய ஆடை பற்றியும் இமெல்டா குறிப்பிடாமல் விட்டுள்ளார்.

முல்லைத்தீவில் பதவி வகிக்கும் போது வீட்டில் அணியும் ஹவுஸ் கோட்டுடன் அலுவலகப் பணி புரிந்ததைக் கண்டதாகச் சிலர் சொல்கிறார்கள். எதற்காக இந்த அதிரடி உத்தரவை இமெல்டா போட்டார் என்று தெரியவில்லை. இப்போது ஆசிய ஆபிரிக்க நாடுகளில் கழுத்து பட்டிக்கு, அதை ஆங்கிலத்தில் ரை என்று சொல்வார்கள் மதிப்பும் மரியாhதையும் கிடையாது.

இலங்கையின் நட்பு நாடு ஈரானில் கழுத்துப் பட்டி தடை செய்யப்பட்டுள்ளது.. யாழ் மக்கள் திறமையான நிர்வாகத்தை மாத்திரம் கேட்கிறார்கள். சிலு சிலுப்பு வேண்டாம் பணியாரத்தை தா என்பது அவர்கள் கோரிக்கை. பொது மக்களையும் அதிகாரிகளையும் வேறுபடுத்திப் பார்க்க முடியவில்லையாம். ரையும் நீட்டுக் கைச் சேட்டும் அணிந்தால் அதிகாரிகளை இனங்காண முடியும் என்கிறார் இமெல்டா.

அரசன் வீற்றிருந்த அரண்மனை இடிந்து மண் மேடாக மாறிய பிறகு அதில் கழுதைகள் புல் மேய்ந்ததாக ஒரு வரலாறு உண்டு. புலிகளுடைய நிர்வாகத் திறமை பற்றிப் பேசப்படும் இக்கால கட்டத்தில் ரையும் நீண்ட கைச் சேட்டும் திறமைக்கு ஈடாகுமா? துடைப்பக் கட்டைக்கு பட்டுக் குஞ்சம் சுற்றுகிறார் இமெல்டா. அவ்வளவு தான்.

http://yarlanpu.blogspot.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.