Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

(2ம் இணைப்பு) சர்வதேச அழுத்தம் அதிகரிப்பு! சவேந்திர சிவ்வாவின் பதவி பறிபோனது - ஐ.நா. அமைதி காக்கும் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் புறக்கணிக்கப்பட்டார்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

sawendra-silva150Enews.jpg

சர்வதேச அழுத்தம் அதிகரித்துள்ளமையினால் ஐக்கிய நாடுகள் சபை செயலாளர்நாயகத்தின் அமைதிகாக்கும் படை பிரிவின் ஆலோசகர் குழுவில் இருந்து ஐநாவிற்கான இலங்கையின் பிரதிநிரந்தர வதிவிடப்பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா அதிரடியாகநீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆனாலும் நேற்று இடம்பெற்ற ஐ.நா செயலாளர்நாயகத்தின் அமைதிகாக்கும் படைப்பிரிவின் ஆலோசகர் குழு கூட்டத்தில் சவேந்திர சில்வாகலந்து கொண்டதாக தெரிவிக்கப்படும் அதேவேளை குறித்த ஆலோசகர் குழு கூட்ட அறையில்சவேந்திர சில்வா அமர்ந்திருந்த போதும் அவருடன் வேறு ஆலோசகர்கள் எவரும் உரையாடவில்லைஎன்பதோடு, எவ்வித ஆவணத்தையும் அவரிடம் கையளிக்கவில்லை எனவும்தெரிவிக்கப்படுகின்றது.

ஆசிய - பசுபிக் வலய நாடுகளால் ஐக்கியநாடுகள் சபை செயலாளர் நாயகத்தின் அமைதி காக்கும் படை பிரிவின் ஆலோசகர்கள் குழுவிற்குத்தெரிவு செய்யப்பட்ட சவேந்திர சில்வா, ஆலோசகர்கள் குழு கூட்டத்தில் கலந்து கொள்ளமாட்டார் என அக்குழுவில் உள்ள கனேடிய ஆலோசகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபை செயலாளர்நாயகத்தின் அமைதி காக்கும் படை பிரிவில் சவேந்திர சில்வாவின் பெயர்உள்ளடக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து மனித உரிமை அமைப்புக்கள் மற்றும் ஐநா மனித உரிமைஉயர்ஸ்தானிகரம் என்பன அவரது நியமனத்தை கேள்விக்குட்படுத்தியிருந்தன. குறிப்பாக இந்த நியமனம் தொடர்பில்பான் கீ மூனுக்கு கடிதம் எழுதியிருந்த ஐநா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை,போர்குற்றவாளியை எப்படி அமைதி காக்கும் படையின் ஆலோசகர் குழுவில் இணைத்தீர்கள் எனகேள்வி எழுப்பியிருந்தார்.

எனினும் தாம் நியமனத்தை வழங்கவில்லைஎனவும் ஆசிய நாட்டு நிறுவனங்களே அவரை நியமித்ததாகவும் அது குறித்து பொறுப்புக் கூற முடியாதுஎனவும் ஐநா செயலாளர் நாயகம் சார்பில் கூறப்பட்டது. இந்த நிலையில் குறித்த ஆலோசனைக்குழுவில் இருந்து சவேந்திர சில்வா நீக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன.

ஆலோசகர் குழுவில் சவேந்திர சில்வாவின்பங்களிப்பு பயனுள்ளதாக, உதவியளிக்கக்கூடியதாக இருக்காது என ஐநா முன்னாள் பிரதிசெயலாளர் நாயகமும் அமைதி காக்கும்படை ஆலோசகர் குழு தலைவருமான லூயிஸ் பிரச்செட்விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சவேந்திரசில்வா தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவை ஐநா மனித உரிமை கண்காணிப்பகம்வரவேற்றுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

http://www.seithy.com/breifNews.php?newsID=56205&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.