Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிங்கப்பூர் ஆகப்போகும் நெடுந்தீவு???

Featured Replies

... கடந்த தேர்தல்களில் மகிந்தருக்கு இலங்கையில் அதிக்கப்படியான வாக்குகளை பெற்றுக்கொடுத்ததும், ஈபிடிபியின் கோட்டையாக வைத்திருந்த ... நெடுந்தீவு மக்களுக்கு கிடைத்த பரிசு!!!!!

வன்புணர்வின் பின் தலையைக் குத்திச் சிதைத்து நெடுந்தீவு சிறுமி லக்சினி கொடூரமாகக் கொலை; உடல்கூற்றுப் பரிசோதனையில் தெரிவிப்பு: ஈ.பி.டி.பி. முன்னாள் உறுப்பினர் கைது

ne.jpg

நெடுந்தீவைச் சேர்ந்த 13 வயதுச் சிறுமி ஜேசுதாசன் லக்சினி, கொடூரமாகப் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் கல்லால் குத்தி தலை சிதைக்கப்பட்டுக் கொல்லப்பட்டார் என்று நேற்று நடத்தப்பட்ட உடற்கூற்றுப் பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கொலை தொடர்பான சந்தேகத்தில் ஒருவரை நேற்றுமுன்தினம் இரவே நெடுந்தீவு மக்கள் மடக்கிப்பிடித்துக் கடுமையாகத் தாக்கியவேளை, கடற்படையினரும் பொலிஸாரும் தலையிட்டு அந்த நபருக்கு உயிராபத்து ஏற்படாமல் காப்பாற்றியதுடன் அவரைக் கைது செய்தனர்.

கந்தசாமி ஜெகதீஸ்வரன் (வயது 31) என்ற நபரே கைது செய்யப்பட்டுள்ளார். இவர் ஈ.பி.டி.பி. உறுப்பினர் என்று நெடுந்தீவு மக்கள் கூறுகின்றனர். ஆனால் வழக்கம்போல, சந்தேகநபர் தமது கட்சியின் முன்னாள் உறுப்பினர் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

ஊடகவியலாளர் நிமலராஜன் கொலையில் மூன்றாவது சந்தேகநபர் ஜெகதீஸ்வரன். ஈ.பி.டி.பி. கட்சியின் முன்னணித் தளபதியாக இருந்தவரான நெப்போலியனின் வலதுகரமாகச் செயற்பட்டவர் என்றும் நெடுந்தீவு வாழ் மக்கள் கூறினர்.

மூன்று மாதங்களுக்கு முன்னர் "பிஸ்ரல்'' துப்பாக்கியைக் காட்டி பெண் ஒருவரைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்றார் என்று கடற்படையினரிடம் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து அவர்கள் இவரைப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்திருந்தனர். இந்த முறைப்பாடு தொடர்பில் ஒவ்வொரு வாரமும் பொலிஸ் நிலையத்துக்குச் சென்று கையெழுத்திட வேண்டும் என்று நீதிமன்றம் இவருக்கு உத்தரவு பிறப்பித்திருந்தது.

கடந்த இரு நாள்களுக்கு முன்னும் வேறு இரு சிறுமிகளை தனியிடத்துக்கு தவறான நோக்கத்துடன் அணுகினார் என்று இவர் மீது குற்றச்சாட்டுத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையிலேயே இவர் லக்சினியை மிருகத்தனமாக வன்புணர்வு செய்து கொடூரமாகக் கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தைக்குச் சென்று கொண்டிருந்த சிறுமியை அங்கு கொண்டு சென்றுவிடுவதாகக் கூறித் தனது சைக்கிளில் ஏற்றிச் சென்றே இவர் இக் கொடூரத்தைப் புரிந்தார் என்று மக்கள் தெரிவிக்கின்றனர்.

விடயம் தெரிய வந்ததும் ஆத்திரமடைந்த நெடுந்தீவு மக்கள் நெடுந்தீவு பத்தாம் வட்டாரத்தில் உள்ள சந்தேகநபரின் வீட்டுக்குள் புகுந்து அவரை நையப்புடைத்தனர். தாக்கியபடியே கடற்கரை நோக்கி ஜெகதீஸ்வரனை அவர்கள் இழுத்துச்சென்ற போது இடைமறித்த கடற்படையினரும் பொலிஸாரும் அவரைக் காப்பாற்றிக் கைது செய்தனர்.

"இல்லையேல் நாங்கள் அந்த .......யை அடித்தே கொன்றிருப்போம்'' என்றார் நெடுந்தீவு வாசி ஒருவர்.

சம்பவ இடத்துக்கு நேற்று அதிகாலையிலேயே சென்றுவிட்ட ஊர்காவற்றுறை நீதிவான் ஆர்.எஸ்.எம்.மகேந்திரராஜா சடலத்தைப் பார்வையிட்டு மரண விசாரணை நடத்தினார்.

உடற்கூற்றுப் பரிசோதனை மற்றும் மரண விசாரணையைத் தொடர்ந்து சிறுமியின் சடலம் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

நெடுந்தீவு மயானத்தில் நேற்றைய தினமே சிறுமியின் உடல் புதைக்கப்பட்டது.

சந்தேகநபர் நேற்று மாலை நெடுந்தீவுப் பொலிஸாரால் யாழ்ப்பாணம் கொண்டுவரப்பட்டார் என்று ஒரு தகவல் தெரிவித்தது.

http://184.107.230.1...227880005461597

நெடுந்தீவு மக்கள் நேற்று கொந்தளித்து ஆர்ப்பாட்டம்; கொலையாளி மீது நீதியான நடவடிக்கைக்கு வலியுறுத்து

news

nedu.jpg

மாணவி லக்சினியின் கொலையால் நெடுந்தீவு மக்கள் கொந்தளித்துப்போய் உள்ளார்கள். கொலைச் சந்தேகநபரான கந்தசாமி ஜெகதீஸ்வரனைத் தப்பிக்க விடாது தகுந்த தண்டனை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி நேற்று நெடுந்தீவு மக்கள் கிளர்ந்தெழுந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சந்தேகநபரைத் தங்களிடம் ஒப்படைத்தால் தாங்களே தகுந்த தண்டனை வழங்குவோம் என்றும் அவர்கள் கோபாவேசத்துடன் முழங்கினர். ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முன்னாள் உறுப்பினர் என்று கூறப்படும் சந்தேகநபர் நேற்று நெடுந்தீவுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். எனினும் அவர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தியும் சிறுமியின் கொலையைக் கண்டித்தும் நேற்றுக் காலை தொடக்கம் நெடுந்தீவிலுள்ள கடைகள் அனைத்தும் மூடப்பட்டு கறுப்புக் கொடிகள் பறக்க விடப்பட்டிருந்தன.

தீவு வெறிச்சோடிக் காணப்பட்டது. பகலில் சுலோகங்கள், கோஷங்களுடன் ஒன்றுகூடிய சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட மக்கள் நெடுந்தீவு வைத்தியசாலைக்கு முன்பாகக் கூடினர் பின்னர் அங்குள்ள பொலிஸ் நிலையத்தைச் சூழ்ந்து நின்று கோஷம் எழுப்பினார்கள்.

"சந்தேகநபரை எம்மிடம் ஒப்படை, நாம் தகுந்த தண்டனை வழங்குகிவோம்'', "எமக்கு நீதி வேண்டும்'', "கொலைகாரனுக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும்'' என்று அவர்கள் பலமாகக் கோஷமிட்டனர்.

ஆர்ப்பாட்டம் செய்தவர்களைக் கலைந்து செல்லுமாறு பொலிஸார் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து அங்குள்ள ஈ.பி.டி.பி அலுவலகத்துக்குள் நுழைந்த பொதுமக்கள் அங்கும் ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது அலுவலகத்திலிருந்த கட்சி உறுப்பினர்கள் ஓடித் தலைமறைவாகி விட்டனர்.

அங்கிருந்து நெடுந்தீவுத் துறைமுகம் வரையும் மக்கள் ஆர்ப்பாட்டம் செய்தபடியே சென்றனர். சந்தேகநபர் தப்பிச் சென்றுவிடலாம் என்பதால், தமக்கு ஒரு சரியான தீர்வு கிடைக்காத வரைக்கும் எந்தவொரு படகும் துறைமுகத்தைவிட்டு வெறியேறக்கூடாது என்று அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

எனினும் பொலிஸாரும் நாடாளுமன்ற உறுப்பினரான சில்வேதிரி அலன்ரீனும், ""உரிய நடவடிக்கை எடுக்கப்படும். எனவே ஆர்ப்பாட்டம் செய்வதை விடுத்து கலைந்து செல்லுங்கள்'' என்று மக்களிடம் கேட்டுக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டக் காரர்கள் கலைந்து சென்றனர்.

http://184.107.230.1...404880105262110

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.