Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அமெரிக்காவின் பிரேரணை எம்மை தூக்குமேடைக்கு ஏற்றும் திட்டம்

Featured Replies

அமெரிக்காவின் பிரேரணை எம்மை தூக்குமேடைக்கு ஏற்றும் திட்டம்

நாட்டில் ஜனநாயகத்தை நிலைநிறுத்தி தற்போதைய அரசியலமைப்பைக் ‘கிழித்தெறிவதன்’ மூலமே எமது நாட்டுக்கு எதிரான ஏகாதிபத்தியவாதிகளின் தலையீட்டைத் தடுக்க முடியும் என்று அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியான ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

மார்பில் அடித்துக் கொண்டு தாய்நாடு தாய்நாடு எனப் புலம்புவதாலும் உணர்ச்சிகளைத் தூண்டும் விதத்தில் உரையாற்றுவதாலும் எதுவுமே நடக்கப் போவதில்லையென்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பாக தேசிய மொழிகள் மற்றும் இனங்களிடையேயான நல்லிணக்கத்திற்கான அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மேலும் தெரிவித்துள்ளதாவது,

நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரைகளை நிறைவேற்று ஆலோசனை மற்றும் தொழில்நுட்ப உதவிகள் வழங்கப்படுமென எமக்கெதிராக ஜெனீவாவில் அமெரிக்காவினால் முன் வைக்கப்பட்டுள்ள பிரேரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிக்கையின் இவ் வசனங்கள் படுபயங்கரமானவையாகும்.

எம்மைத் தூக்கு மேடையில் ஏற்றுவதற்கான திட்டமே இதுவாகும்.

நாம் பெற்ற வெற்றியை தலைகீழாக மாற்றி இலங்கையின் சுயாதிபத்தியம், இறைமை ஆகியவற்றிற்கு மரண ஊர்வலம் நடத்துவதற்கான முயற்சியாகும்.

தெற்காசிய வலயத்தின் அரசியல் நிலைப்பாட்டை மாற்றும் யுத்த திட்டத்திற்கமைய இலங்கை முக்கியமான கேந்திர நிலையமாகும். அத்தோடு அமெரிக்கா உட்பட ஐரோப்பிய நாடுகள் இந்து சமுத்திரத்தில் எண்ணெய் வளம் தொடர்பிலும் “கண்” வைத்துள்ளன. இதனால் இவர்களுக்கு ஈடுகொடுக்கும் கைப்பொம்மையான ஆட்சியாளரை இலங்கையில் ஏற்படுத்துவதே எமக்கெதிரான சதித் திட்டங்களுக்கு காரணமாகும்.

புலிகள் சார்பான சர்வதேச தமிழ் குழுக்களும், தமிழ் தேசியக் கூட்டமைப்பும் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வை வழங்குவதை தடுக்கவே முயற்சிக்கின்றன.

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்ற அரசாங்கம் தயாராக இருக்கும் சூழ்நிலையிலும் அமெரிக்கா எமக்கெதிராக பிரேரணையை முன் வைத்து பொறியில் சிக்க வைக்க முயற்சிக்கின்றது. எனவே இந்தியா, பாகிஸ்தான் உட்பட தென்னாபிரிக்க நாடுகளுடன் எமது நட்புறவைப் பலப்படுத்தி நாட்டுக்குள் ஜனநாயகத்தை நிலைநிறுத்தி மக்களுக்கு சலுகைகளை வழங்கி அனைவரையும் ஓரணியில் இணைத்துக் கொள்வதன் மூலமே எமக்கெதிரான சக்திகளை தோல்வியடையச் செய்ய முடியும்.

அதைவிடுத்து தாய் நாடு தாய் நாடு எனக் கூறுவதாலும் உணர்ச்சிகளை தூண்டும் விதத்தில் உரையாற்றுவதாலும் நாட்டுக்கு எதுவிதமான நன்மைகளும் கிடைக்கப் போவதில்லை என்றார்.

http://www.alaikal.com/news/?p=99629

இந்தச் செய்தியின் தலைப்பை படித்தவுடன் எனக்கு உடனடியாக இந்தச் செய்தி தான் நினைவுக்கு வந்தது

அடிப்படையில் இரண்டும் ஒன்றுக்கு ஒன்று ஓத்துப் போவதை கவனிக்கலாம்.

தமிழ் மக்களின் நலன் என்ற பெயரில் மகிந்த கும்பலின் நலனுக்கா உழைப்பவர்களின் சாயம் வெளுக்க ஆரம்பித்தவிட்டது

மேற்குலகின் முயற்சிகள் வெறும் கண்துடைப்புக்களா?- டென்மார்க் தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம்

[ புதன்கிழமை, 14 மார்ச் 2012, 12:43.12 PM GMT ]

un_meeting_003.jpgதமிழீழத் தனியரச நிர்வாக காலத்தில் மேற்குலகம் தமிழ் மக்கள்மீது காட்டியளவு கவனத்தினை, தொடர்ந்தும் காட்டிவருகின்றதென்பதையே ஜ.நாவின் மனிதவுரிமைகள் அமர்வில் அமெரிக்காவால் கொண்டுவரப்பட்டுள்ள பிரேரணைகள் எடுத்துக்காட்டுகின்றன.

தமிழர்களிற்குச் சிறிலங்காவில் பாதுகாப்பில்லையென்பதையும், மனித உரிமைமீறல்கள் நடைபெற்றுள்ளதென்பதையும் ஜ.நாசபையில் முதல் முதலாக வல்லரசொன்று சொல்ல முன்வந்துள்ளதானது வரவேற்கத்தக்க விடயமாகும்.

அதற்காக அமெரிக்காவிற்கு எமது நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றோம். ஆனால் சிறிலங்காவிற்கெதிராக அமெரிக்கா கொண்டுவந்துள்ள பிரேரணை தமிழர்களின் நலனென்பதைவிட தனது ஆதிக்கத்திற்கு ராஜபக்சவை அடிபணிய வைக்கமுடியாமையே முக்கிய காரணமாகும்.

தமிழர்களின் நலன் கருதி அமெரிக்கா நடந்திருக்குமேயானால் குறைந்த பட்சம் ஜ.நா. நிபுணர் குழுவால் முன்வைக்கப்பட்ட பிரேரணைகளை, அது ஜ.நா மனிதவுரிமை ஆணையகத்தில்

முன்வைப்பதோடு அதற்கான அங்கீகாரத்திற்கும் பாடுபட்டிருக்கும். இதனிடையே ஏன் அமெரிக்கா தமிழர்களிற்காக பாடுபடவேண்டுமென்ற கேள்வியினையும் நாம் கேட்டுக்கொள்ளத்தவறக் கூடாது.

ஒரு கொலைகார அரசானது, துப்பாக்கி முனையில் சாட்சியங்களை விசாரித்து தன்னைத்தானே நிரபராதியென்று தீர்ப்பு வழங்குவதானது, ஒன்றும் அதிர்ச்சியானதோ அல்லது அதிசயப்படக்கூடிய விடயமோ அல்ல. ஆனால் கொலைகாரர்ககள் தாங்களாகவே தயாரித்த பிரேரணைகளை நடைமுறைப்படுத்த மறுப்பதும் இதனை நடைமுறைப்படுத்துவதற்கு அமெரிக்கா (ஜ.நா ழூலம்) திணிப்பதும்

நகைப்பிற்குரிய விடயமாகும்.

மாறிமாறி பதவிக்கு வந்த சிங்கள அரசுகள் கொலைகார அரசுகளென்றும், தமிழர்கள் திட்டமிடப்பட்ட இனப்படுகொலைக்கு உள்ளாகியுள்ளார்களென்பதையும் பல்லாயிரம் தடவைகள் தமிழ் மக்கள் ஆதாரபுர்வமாக எடுத்துச்சொல்லியும் சர்வதேச சமூகம் அதனை உள்வாங்கத் தயங்குவதானது மனவருத்தத்திற்குரிய விடயமாகும்.

உலகத்தில் அமெரிக்காவும் மேற்கைரோப்பிய நாடுகளும் தமது செல்வாக்கினை இழந்துகொண்டு வருவதாலும், உலகின் மக்கள்தொகை கூடிய நாடுகளான சீனா, இந்தியாவுடன், ரஸ்யா போன்ற நாடுகள் கைகோர்த்து அமெரிக்காவிற்கெதிராக நடந்து கொள்வதாலும் தனது செல்வாக்கிற்குள் கொண்டுவரக்கூடிய நாடுகளை சிநேகித பூர்வமாகவோ அல்லது மிரட்டியோ தனது ஆளுமைக்கு கீழ் கொண்டுவரவற்கான பிரயத்தனங்களில் ஒன்றாகவே ஜ.நாவின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சிறிலங்காவிற்கு எதிராக நடைபெறும் நாடகத்தினை நோக்கமுடியும்.

அமெரிக்காவின் இந்நடவடிக்கை தமிழ் மக்களின் விடுதலையுணர்வினையும் ஜனநாயக ரீதியிலான விடுதலைநோக்கிய போராட்டங்களினையும் மழுங்கடிக்கும் நோக்குடனும், தமிழர்கள்

சுயமாகச் சிந்தித்துச் செயற்படும் வேகத்தினை குறைப்பதற்கானதுமான ஒரு முயற்சியாகக்கூட இது அமையலாம்.

இதற்கு முண்டுகொடுத்தபடி சில தமிழ் அமைப்புக்களும் அரசியல்வாதிகளும் நடந்துகொள்வது தமிழ் மக்கள் மத்தியில் மிகவும் மனவருத்தத்தினை ஏற்படுத்துகின்றது. பொறுப்பிலுள்ளவர்கள் தமது பொறுப்பையுணர்ந்து நடந்துகொள்ளவேண்டுமென்பதே எமது வேண்டுகோளாகும்.

டென்மார்க் தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம்

  • கருத்துக்கள உறவுகள்

உலகத்தில் அமெரிக்காவும் மேற்கைரோப்பிய நாடுகளும் தமது செல்வாக்கினை இழந்துகொண்டு வருவதாலும், உலகின் மக்கள்தொகை கூடிய நாடுகளான சீனா, இந்தியாவுடன், ரஸ்யா போன்ற நாடுகள் கைகோர்த்து அமெரிக்காவிற்கெதிராக நடந்து கொள்வதாலும் தனது செல்வாக்கிற்குள் கொண்டுவரக்கூடிய நாடுகளை சிநேகித பூர்வமாகவோ அல்லது மிரட்டியோ தனது ஆளுமைக்கு கீழ் கொண்டுவரவற்கான பிரயத்தனங்களில் ஒன்றாகவே ஜ.நாவின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சிறிலங்காவிற்கு எதிராக நடைபெறும் நாடகத்தினை நோக்கமுடியும்.

அமெரிக்காவின் இந்நடவடிக்கை தமிழ் மக்களின் விடுதலையுணர்வினையும் ஜனநாயக ரீதியிலான விடுதலைநோக்கிய போராட்டங்களினையும் மழுங்கடிக்கும் நோக்குடனும், தமிழர்கள்

சுயமாகச் சிந்தித்துச் செயற்படும் வேகத்தினை குறைப்பதற்கானதுமான ஒரு முயற்சியாகக்கூட இது அமையலாம்.

இதற்கு முண்டுகொடுத்தபடி சில தமிழ் அமைப்புக்களும் அரசியல்வாதிகளும் நடந்துகொள்வது தமிழ் மக்கள் மத்தியில் மிகவும் மனவருத்தத்தினை ஏற்படுத்துகின்றது. பொறுப்பிலுள்ளவர்கள் தமது பொறுப்பையுணர்ந்து நடந்துகொள்ளவேண்டுமென்பதே எமது வேண்டுகோளாகும்.

டென்மார்க் தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம்

நவீன உலகில் எல்லாரும் எல்லாரையும் பயன் படுத்தத் தான் முயற்சிப்பார்கள். ஒரு நிலமும், சனத்தொகையும் இல்லாத தமிழர்கள் இப்படிப் பட்ட பயன் படுத்தல்களூடாகத் தான் தங்கள் பயணத்தின் ஆரம்பப் புள்ளியையாவது அடைய வேண்டும். இவ்வளவு கொடுமை செய்த சதிகார இந்தியாவையே இன்னும் நம்பிக் கொண்டிருக்கிற த.தே.கூ வை விட அமெரிக்காவை நம்பலாம் என்பது என் கருத்து. இதுக்குப் போய் எதிலயோ ஏதோ புடுங்குகிறது மாதிரி "எச்சரிக்கை" செய்து கொண்டிருக்கும் நாற்காலி ஆய்வாளர்கள் இன்னொரு படி மேலே போய் என்ன செய்யலாம் என்று சொன்னால் அது பயனுள்ளதாக இருக்கும் என நான் நினைக்கிறேன்.

Edited by Justin

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.