Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அழுத்தங்களின் பின்னணியே மன்மோகனின் முடிவிற்கு காரணம் - ஆறுதலடைந்த ரஜீவ விஜேசிங்க:

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Rajeeva-Wijesinghe_seithy150SD.jpg

இலங்கை தொடர்பான ஐநா மனித உரிமை கவுன்சிலின் தீர்மானத்தை ஆதரிக்கத் தயார் என்று இந்திய பிரதமர் மன்மோகன் சிங் இந்திய பாராளுமன்றத்தில் அறிவித்திருப்பதன் பின்னணியில் இருந்த அழுத்தங்களை இலங்கையால் புரிந்துகொள்ள முடியும் என ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

மன்மோகன் சிங்கின் அறிவிப்பை இலங்கை அரசு எப்படி பார்க்கிறது என்பது குறித்து பீபீசி செய்தி சேவைக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், இலங்கை அரசின் சார்பில் தம்மால் பேச முடியாது என்று ரஜீவ விஜேசிங்க தெளிவுபடுத்தினார்.

அதேசமயம், எந்த அழுத்தங்களின் அடிப்படையில் மன்மோகன் சிங்கின் அறிக்கை வந்துள்ளது என்பதை தம்மால் புரிந்து கொள்ள முடிவதாகவும் அவர் கூறினார். "இந்த பிரச்சினையின் பின்னணியில் இருக்கும் அனைத்து விஷயங்களையும், ஐநா மன்றத்தில் உறுப்பினர்கள் விவாதிக்கும் போது விளங்கிக் கொள்வார்கள் என நான் நம்புகிறேன்", என அவர் கூறியுள்ளார்.

இலங்கை அரசைப் போலவே, இலங்கையிலுள்ள அனைத்து குடிமக்களின் நலன்களிளும் இந்தியாவுக்கும் அக்கறை உள்ளதாக தாம் கருதுவதாகவும், அதை மனதில் வைத்துப்பார்க்கையில், ஐநா மன்றத்தின் இந்த குறிப்பிட்டத் தீர்மானம் இலங்கை குடிமக்களின் ஆக்கபூர்வமான முன்னேற்றத்துக்கு வழி வகுக்கப்போவதில்லை என்று தாம் கருதுவதாகவும் ரஜீவ விஜேசிங்க தெரிவித்தார்.

மேலும், இலங்கை குடிமக்களுக்கு முன்னேற்றங்கள் ஏற்படக்கூடாது என்று நினைக்கும் சக்திகளே இந்தத் தீர்மானத்தை ஆதரிப்பதாக குற்றம் சாட்டிய ரஜீவ, அத்தகைய சக்திகளை வெற்றிபெற விடக் கூடாது என்று கூறியுள்ளார்.

அந்த அடிப்படையில் பார்க்கும்போது இலங்கையில் ஆக்கபூர்வமான முன்னேற்றங்கள் ஏற்படக் கூடாது என்கிற நிலைப்பாடு உள்ளவர்களுடன் இந்தியா ஒத்துப் போகாது என்றே தாம் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

"இப்படியான தீர்மானங்களின் மூலம் ஐநா சபையின் செயல்பாட்டில் மாற்றங்கள் வந்துவிடும் என்றும் நாங்கள் கவலைப்படுகிறோம். எனவே இப்படியான தீர்மானங்கள் தொடர்பிலான கொள்கைகள் குறித்தும் எமக்கு கவலைகள் உள்ளன. இதேமாதிரியான கருத்துக்களையே இந்தியாவும் அண்மையில் வெளிப்படையாக விடுத்திருந்த அறிக்கைகளில் கூறியிருந்ததையும் நாம் கவனத்தில் வைக்க வேண்டும்", என்றார் ரஜீவ விஜேசிங்க.

அதேசமயம், இலங்கைக்கு எதிரான ஒரு தீர்மானத்தை தாம் ஆதரிக்க மாட்டோம் என்கிற ரீதியில் கருத்துக்களை வெளியிட்டுவந்த இந்திய அரசு, தற்போது அந்த நிலைப்பாட்டிலிருந்து மாறுபட்டிருப்பதை எப்படி பார்க்கிறீர்கள் என்கிற கேள்விக்கு பதிலளித்த அவர், இலங்கைக்கு எதிரான ஒரு தீர்மானத்தை இந்தியா ஆதரிக்காது என்றே தாங்கள் கருதியதாக தெரிவித்தார்.

"இலங்கை மக்கள் அனைவரின் நலன்களும் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று இந்தியா கூறுவதை நாங்களும் விரும்புகிறோம். இந்தத் தீர்மானத்தில் மூலம் அது நடைபெறும் என்று இந்தியாவில் சிலர் ஆழமாக நம்புகிறார்கள். எனவே இந்த தீர்மானத்தை ஆதரிப்பதன் மூலம் அது நடைபெறுமானால் ஆதை நாங்கள் வரவேற்கிறோம் என்றுதான் இந்தியா கூறுகிறது. எனினும் இந்தியா முன்னர் வெளியிட்டிருந்த அறிக்கைகளுடன் சேர்த்தே மன்மோகன் சிங்கின் நிலைப்பாட்டை நாம் பார்க்க வேண்டும்", என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த பின்னணியில், இலங்கை என்ன செய்ய வேண்டும் என்று இந்தியா எதிர்பார்க்கிறதோ, அதை இந்தத் தீர்மானத்தை ஆதரிக்காமல் இருந்தால் சிறப்பாக செய்ய முடியும் என்றே தாம் கருதுவதாகவும், எனவே, ஐநா மன்றத்தில் இந்த தீர்மானம் மீதான விவாதங்கள் எப்படி போகப் போகின்றன என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

http://www.seithy.co...&language=tamil

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது மன்மோகன் சிங்கின் ஆழ் மனதில் இருந்து வந்த முடிவல்ல. பலவிதமான அழுத்தங்களின் மத்தியில் அறிவிக்கப்பட்ட முடிவே ஒழிய, அவர்கள் ஆழமனமுடிவுகள் முந்திய இடத்தில் தான் இருக்கின்றது. எனவே இந்தியா பற்றிய முடிவுகளுக்கு நாங்கள் கவலைப்படத்தேவையில்லை. என்றதைச்சொல்கினறார் உண்மையும் அது தான். உண்மையான முடிவு அவர்கள் மனத்தில் முன்னர் எழுந்திருக்கவேண்டும். இது அழுத்தங்களினால் அறிவிக்கப்பட்டது. எனவே அவர்களுடைய உண்மையான எண்ணக்கரு அதுவல்ல. ஆதரவு நிலையில் சென்று பின்னர் தங்கள் பாதைக்கு வருவார்கள்.

உதாணமாக, இது வந்து புலிகளை இவர்கள் சென்ற பாதையில் சென்று கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரமுடியாததால் இவர்கள் சமாதான நிலைக்குச் சென்று அதனூடாக நகர்ந்து பின்னர் சமாதானக்கட்டுக்குள் புலிகள் இருந்தபோதும் வலிந்தபோருக்கு இழுத்து தங்களுடைய முந்திய நிலைப்பாட்டில் புலிகளை ஒடுக்கினார்களே. அதுபோலத்தான் இதுவும் நம்பிவிடாதீர்கள். இது மிகப்பெரும் ஆபத்து.

எந்த அறிவிப்பகளையும் நாங்கள் ஆழமாகச்சிந்திக்காமல் எடுத்துவிடக்கூடாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அழுத்துற மாதிரி அழுத்தினால் தான் சில எருமைகள் தலையாட்டும். 

Edited by KuLavi

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.