Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வு!.. மன்மோகன் கடிதம் ஒன்றை எழுதுவார்:புரிந்து கொண்டுள்ளோம் என்கிறார் சோனியா அம்மையார்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Sonia_Gandhi_Manmohan_150seithykal.jpg

இலங்கை தமிழர்களின் உண்மையான பிரச்சினைகள் குறித்து தாம் நன்கு உணர்ந்துள்ளதாக இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார். சோனியா காந்தி திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் முத்துவேல் கருணாநிதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் இதனை குறிப்பிட்டுள்ளார்.

சகல அரசியல் கட்சிகளும் இணைந்து இலங்கை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வொன்றை காண்பது அவசியம் எனவும் அந்த கடிதத்தில் சோனியாh காந்தி சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு வெகுவிரைவில் காணப்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் அவர் கோடிட்டு காட்டியுள்ளார்.

இலங்கை தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாக விரைவில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் கடிதம் ஒன்றை எழுதுவார் என்றும் இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

http://www.seithy.co...&language=tamil

கெஞ்சினால் மிஞ்சும், மிஞ்சினால் கெஞ்சும் இந்தியாவின் தபால் யாருக்காவது தேவையா?

உண்மையில் நடந்தவை

1.இந்திய-இலங்கை திருகுதாளத்தால் அமெரிக்கா அலுத்து போகிறது.

Ms. Donahoe said in an interview that the resolution was part of a “very genuine attempt to encourage the Sri Lankan government in the right direction,” and that it followed months of bilateral contacts.

2.இலங்கை எச்சரிக்கைகளை மதிக்கவில்லை. இந்தியாவுக்கு, எச்சரிக்கை ஒன்று......எச்சரிக்கை இ......

ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்தால் இந்தியா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதிக்கக் கூடும் என்று அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.ஈரானை தவிர்த்து சவூதி அரேபியா போன்ற நாடுகளிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்றும் அமெரிக்கா கூறியுள்ளது.இது தொடர்பாக ஜூன் மாதம் இறுதியில் முடிவெடுக்கப் போவதாக அமெரிக்கா எச்சரித்திருப்பதாகவும் அந்த செய்திகளில் தெரிவிக்கின்றன.

3.முடிவை எடுக்கவைக்கப்படுகிறது இந்தியா.

இலங்கை தமிழர் தொடர்பான விவகாரத்தில் நாங்கள் அக்கறை கொண்டுள்ளோம். இந்த உணர்வை நாங்கள் மதிக்கிறோம். சிறிலங்காவுக்கு எதிராக கொண்டு வரப்பட உள்ள தீர்மானத்தின் இறுதி வரைவு அறிக்கை இன்னும் எமக்குக் கிடைக்கவில்லை.

எனினும் அந்தத் தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்கும். தமிழர்களின் அதிகாரப்பகிர்வு ‌குறித்தும் இலங்கை அரசிடம் வலியுறுத்தப்படும். என அவர் அறிவித்தார்.

4. முடிவு எடுத்தபின் சிதம்பரம் பூசி மெழுகளுக்கு அமர்த்தப்படுகிறார்.

இனியும் இந்தப் பிரச்னையில் தெளிவான நிலை எடுக்காமல் காலம் தாழ்த்தினால், அது தமிழ்நாட்டில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று பிரதமரிடமும் காங்கிரஸ் தலைவர்களிடமும் மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் பேசி விளக்கியதாகத் தெரிகிறது.

5. கருணாநிதியின் அப்பா குதிருக்குள் இல்லை போன்ற கதைகள் (அறிவித்து ரத்து செய்த உண்னாவிரதம், ஆர்ப்பாட்டம்) சேர்ந்து நாடகமாடிய சிதம்பரம், கிருஸ்ணா, சிங் எல்லோரையும் காட்டிக்கொடுக்கிறது. ஏமாற்றுக்களை கண்டு ஜெயலலிதா கோபப்படுகிறார்.

இந்தியப் பிரதமரின் அறிவிப்பில் இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் பற்றி எதுவுமே குறிப்பிடப்படவில்லை, அவற்றுக்காக இலங்கை அரசை இந்தியா கண்டிக்கவும் இல்லை என ஜெயலலிதா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்

6. சிங் 13ம் திருத்தம் நடைமுறைக்கு வரும் என்று அறிவித்தபின்தான் ( quote-3 பார்க்க) கிருஸ்ணா செயலில் இறங்கி நிலைமையை சரிசெய்ய பார்க்கிறார்.

13வது அரசியலமைப்புத் திருத்தத்துக்கு அப்பாற்பட்ட அரசியல்தீர்வு ஒன்றை எவ்வாறு சிறிலங்கா அரசாங்கம் நடைமுறைப்படுத்தவுள்ளது என்பது தொடர்பாக விளக்கமளிக்குமர்று சிறிலங்கா அரசாங்கத்தை இந்தியா கேட்டுக் கொண்டுள்ளதாக கொழும்பு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.இதுதொடர்பாக இந்திய வெளிவிகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சுக்கு இரகசிய கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

7.இந்தியாவிடம் மாட்டாமல் அமெரிக்காவை அணுக பார்க்கிறார் பீரிஸ்.

ஜெனிவாவில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் இறுக்கமான கட்டத்தை அடைந்துள்ள நிலையில், அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரனை அவசரமாகச் சந்திப்பதற்கு சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

8, அமெரிக்க மீது விமலும், இந்தியா மீது சம்பிக்கவும் ஏவப்படுகிறார்கள்.

இந்தியா என்றுமே இலங்கைக்கு எதிராகவே செயற்படும். தமது நலனுக்கே முன்னுரிமை வழங்கும். எனவே மேற்கண்ட சித்தாந்தத்தையே இன்று கடைப்பிடித்து வருகிறது.

ஜெனீவாவில், அமெரிக்கா வெற்றி பெறும் என்றால் இந்தியா அமெரிக்காவிற்கு எதிராக வாக்களிக்கும். தோல்வி அடையுமென்றால் ஆதரவாக வாக்களிக்கும். இதுவே இந்தியாவின் சித்தாந்தம் என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர தெரிவித்தார்.இது இந்தியாவின் கடைசிக் காலமாகும்.இந்தியாவின் தலைவிதி எதிர்வரும் 23 ஆம் திகதியோடு மாறிவிடும். இந்த ஆரம்பத்தோடு அந்நாடு துண்டு துண்டாக பிரியும்.ஜெனீவாவில் அமெரிக்காவால் கொண்டுவரப்பட்ட பிரேரணை தோல்வி கண்டாலும் இலங்கையை பிரிக்கும் தந்திரோபாயத்தை அமெரிக்கா கைவிடாது. வெற்றி பெற்றாலும் இந்தத் தந்திரோபாயம் தொடரும்.

9.எல்லோர்மீதும் சேறுபூசுவதில் தனித்திறமை பெற்ற ரஜீவ அடக்கி வாசிக்கிறார்.

இலங்கை மக்கள் அனைவரின் நலன்களும் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று இந்தியா கூறுவதை நாங்களும் விரும்புகிறோம். இந்தத் தீர்மானத்தில் மூலம் அது நடைபெறும் என்று இந்தியாவில் சிலர் ஆழமாக நம்புகிறார்கள். எனவே இந்த தீர்மானத்தை ஆதரிப்பதன் மூலம் அது நடைபெறுமானால் ஆதை நாங்கள் வரவேற்கிறோம் என்றுதான் இந்தியா கூறுகிறது. எனினும் இந்தியா முன்னர் வெளியிட்டிருந்த அறிக்கைகளுடன் சேர்த்தே மன்மோகன் சிங்கின் நிலைப்பாட்டை நாம் பார்க்க வேண்டும்.

10. அமெரிக்கா எறிந்த பூமறாங் அலுவல்ககளை முடித்துவிட்டு தன்னிடம் திரும்பி வந்துவிட்டது என்கிறார் செல்வி டொனகு.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் இடம்பெற்ற யுத்தத்தின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் சம்பவங்கள் தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்துமாறு வலியுறுத்த தமக்கு பிரதான உதவியாளர் ஒருவர் கிடைத்துள்ளதாக ஐக்கிய அமெரிக்கா தெரிவித்துள்ளது.

11.ஒருவர் மற்றவரை நண்பர் என்றார். மற்றவர் முதலாமாள் தன் நண்பரல்ல. உண்மையில் உறவு என்றார். எத்தனுக்கு-எத்தன் இருவரும் பேச்சில் மட்டும் உறவு. நடத்தையில் நிஜபகையாளிகள்.

ஆனால், சிறிலங்காவின் கோரிக்கையை ஏற்க முடியாது என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசிடம் நேரடியாகவே கூறிவிட்டதாக புதுடெல்லித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Edited by மல்லையூரான்

இந்தியப் பயங்கரவாதி சோனியாவின் உப்புச்சப்பற்ற கடிதத்தை கொலைஞர் கருனாதிதி ஏற்றுக்கொண்டு மீண்டுமொரு நாடகத்தை அரங்கேற்றியுள்ளார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.