Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைத் தீவில் மீண்டும் ஒரு இனப்படுகொலை அரங்கு திறக்கப்படுகிறது? தமிழர்களே அவதானம்!

Featured Replies

ஜெனிவாவில் சிறிலங்கா அரசு நெருக்கடியை சந்தித்துள்ள நிலையில் பௌத்த பிக்குகள் படுகொலைசெய்யப்பட்ட விவகாரத்தை முன்னுதாரணமாக வைத்து தமிழர்கள் மீது 1983 ஜீலைப் படுகொலைபோன்று ஒரு இனப்படுகொலையை மேற்கொள்ள திட்டமிட்டு வருவதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக தெரியவருவதாவது

கொழும்பு, கோட்டே ரஜமகா விகாரைக்குள் வைத்து இரண்டு பௌத்த பிக்குகள், வாகனம் ஒன்றில் வந்த குழுவினரால் நேற்றிரவு படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

வண.பிற்றிகல ஜினசிறி தேரர், பொரலஸ்கமுவ குணரத்ன தேரர் ஆகியோரே படுகொலை செய்யப்பட்டவர்களாவர்.

நேற்றிரவு 9.45 மணிக்கும், 10 மணிக்கும் இடையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வெள்ளை நிறக் கார் ஒன்றில் வந்தவர்களே பிக்குகளைத் தாக்கிக் கொலை செய்ததாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

பிற்றிகல ஜினசிறி தேரர், விகாரையின் குளியலறைக்குள் வைத்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

குணரத்ன தேரர் படுகாயமடைந்த நிலையில் கொழும்பு தெற்கு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போது மரணமானார்.

உடனடியாக அந்தப் பகுதியில் குவிக்கப்பட்ட காவல்துறையினர், மோப்ப நாய்களின் உதவியுடன் நடத்திய தேடுதலின் போது, அருகில் இருந்த வீடு ஒன்றில் இருந்த 4 சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர்.

விகாரையின் பிரதமகுருவைத் தேடி வந்த குழுவினரே பிக்குகளை கொலை செய்ததாக கூறப்படுகிறது.

இந்தச் சம்பவத்தை அடுத்து, விகாரையின் பிரதமகுருவான வண. அதுல்வெவ அனுருத்த தேரர் அதிர்ச்சியினால் பாதிக்கப்பட்டு, மீள முடியாத நிலையில் உள்ளார்.

கொலை செய்யப்பட்ட பிக்குவின் சடலத்தை காவல்துறையினர் வெளியே கொண்டு செல்லும் போது, அங்கு பெரும் பதற்றம் உருவானது.

நேற்றுமாலை பல சந்தேகநபர்கள் விகாரைக்குள் நடமாடியதாக பொதுமக்கள் கூறியுள்ளனர்.

இந்தக் கொலைகளுக்கு காரணம் அரசியல் பின்னணியா அல்லது தனிப்பட்ட காரணமா என்று தெரியவரவில்லை.

ஜெனிவாவில் சிறிலங்கா அரசு நெருக்கடியை சந்தித்துள்ள நிலையில் இந்த விவகாரத்தை வைத்து நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த திட்டமிட்டிருக்கவும் வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

http://www.paristami...Tc4NjQ2OTY0.htm

Edited by காதல்

தேவையற்ற முடிச்சுக்களைப் போடக் கூடாது. பிக்குகள் கொல்லப்பட்டமை தனிப்பட்ட காரணமாகக் கூட இருக்கலாம்.

தனிப்பட்ட பகைமையே பிக்குகளின் கொலைக்கு காரணம்: பொலிஸார்

கோட்டே ரஜமஹா விகாரையில் பௌத்த பிக்குகள் இருவர் கொலை செய்யப்பட்டமைக்கு தனிப்பட்ட பகைமையே காரணம் என ஆரம்ப விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்விசாரணைகள் நிலை குறித்து பொலிஸார் விபரங்களை வெளியிடவில்லை.

80 வயதான பிக்கு ஒருவரே கொலையாளிகளின் இலக்காக இருந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அவரின் அறைக்குள் சத்தம் கேட்டு 60 வயதான பிக்கு ஒருவர் வந்தபோது அப்பிக்குவை கொலை செய்த நபர்கள், பின்னர் 80 வயதான பிக்குவை கொன்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இக்கொலைகள் தொடர்பாக நால்வர் கைது செய்யப்பட்டுள்ள போதிலும் பிரதான சந்தேக நபரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-09-21-10-46-55/38011-2012-03-21-08-41-14.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தேவையற்ற முடிச்சுக்களைப் போடக் கூடாது. பிக்குகள் கொல்லப்பட்டமை தனிப்பட்ட காரணமாகக் கூட இருக்கலாம்.

ஏன்? ஸ்ரீ லங்கா துறவிகள் அரசியலில் ஈடுபடலாம், ஐ. நா. அலுவலகத்தை அடித்து நொறுக்கலாம், இராணுவத்திற்கு ஆள் சேர்க்கலாம்,  வியாபார புரோக்கர் வேலை செய்யலாம்.  

ஆனால் நாங்கள் இந்த கொலைகார பாவிகளை குறைத்து பேசக்கூடாது. 

ஈசா, இது சரியா? 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.