Jump to content

ஆனையிறவு இராணுவ முகாம் இருந்த இடத்தில் "புலி" வீடுகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆனையிறவு இராணுவ முகாம் இருந்த இடத்தில் "புலி" வீடுகள்

விடுதலைப்புலி உறுப்பினர்களின் குடும்பங்களுக்காக ஆனையிறவு இராணுவ முகாம் இருந்த இடத்தில் விடுதலைப் புலிகள் வீடுகளை அமைத்து வருவதாக இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜெர்மன் ஜி.ரி.இசட் நிறுவனத்தின் ஆதரவுடனே இந்த வீடுகள் அமைக்கப்பட்டு வருவதாக பாதுகாப்புத் தரப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த போராளிகளின் குடும்பத்தினருக்காக இராணுவ முகாம் இருந்த இடத்தில் வீடுகளை அமைக்க ஜெர்மன் தொண்டர் நிறுவனம் உதவியது சட்டவிரோதமானது. அவர்கள் இதுபற்றி பாதுகாப்புப் படையினருக்கு அறிவிக்கவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Link to comment
Share on other sites

என்ன இது இப்படி சொல்லுறாங்க எங்கட இடத்தில எங்களை கேக்காமல் சிங்கள இராணுவம் காம்ப் போட்டாத்தானே சட்ட விரோதம் :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த செய்தி "புதினம்"(த்தில்) இருந்து சுடப்பட்டது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆனையிறவு இராணுவ முகாம் இருந்த இடத்தில் "புலி" வீடுகள்

விடுதலைப்புலி உறுப்பினர்களின் குடும்பங்களுக்காக ஆனையிறவு இராணுவ முகாம் இருந்த இடத்தில் விடுதலைப் புலிகள் வீடுகளை அமைத்து வருவதாக இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜெர்மன் ஜி.ரி.இசட் நிறுவனத்தின் ஆதரவுடனே இந்த வீடுகள் அமைக்கப்பட்டு வருவதாக பாதுகாப்புத் தரப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த போராளிகளின் குடும்பத்தினருக்காக இராணுவ முகாம் இருந்த இடத்தில் வீடுகளை அமைக்க ஜெர்மன் தொண்டர் நிறுவனம் உதவியது சட்டவிரோதமானது. அவர்கள் இதுபற்றி பாதுகாப்புப் படையினருக்கு அறிவிக்கவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நன்றி புதினம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆனையிறவு முகாம் இருந்த பகுதியில் போராளி குடும்பங்களுக்கு வீடமைப்பு

அரச படையினரிடமிருந்து விடுதலைப் புலிகள் அமைப்பினர் ஆனையிறவு இராணுவ முகாமைக் கைப்பற்றிய நீண்ட நாட்களுக்குப் பின்னர் தற்போது அந்த முகாம் பகுதிகளில் புலிகள் அமைப்பு குடியிருப்பு வீடுகளை அமைக்கத் தொடங்கியுள்ளதாகவும், இந்த குடியிருப்பு மனைகள் புலிகள் இயக்கப் போராளிகளின் குடும்பங்கள் குடியிருப்பதற்காகவே அமைக்கப்பட்டு வருகின்றன எனவும் இராணுவ அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

புலிகள் இயக்க தலைமைத்துவம் இந்த வீடமைப்பு பணிகளை ஜெர்மனியைச் சேர்ந்த ஜீ.ரி.இசட் நிறுவனத்தின் உதவியுடனேயே மேற்கொண்டுள்ளதாக யாழ்ப்பாணம் பிராந்திய தரப்பு சிரேஷ்ட பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் கடந்த 7 ஆம் திகதி கூறியுள்ளார். மேலும், இவ்வாறு புலிகள் அமைப்பு அவசரமாக முன்னைய ஆனையிறவு இராணுவ முகாம் பகுதியில் மக்கள் குடியிருப்புகளை அமைத்து வருவதற்குக் காரணம் அரச பாதுகாப்புத் துறையினர் ஆனையிறவு பகுதிகளை மீண்டும் புலிகளிடமிருந்து கைப்பற்றுவதற்கான இராணுவ நடவடிக்கையை எடுக்கக்கூடும் என்ற சந்தேகமே எனவும், இதனாலேயே இறந்துபோன புலிகள் இயக்க பயங்கரவாதிகளின் குடும்பங்களுக்காக புலிகள் அமைப்பு வீடமைப்புத் திட்டத்தை அமைப்பதன் மூலம் அப்பகுதிகளைத் தம்வசம் பாதுகாத்துக் கொள்ள முயல்வதாகவும் குறித்த சிரேஷ்ட பாதுகாப்புத்துறை உத்தியோகத்தர் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்தப் பெரும்பரப்பளவிலான ஆனையிறவு இராணுவ முகாம்களை கடந்த 1996 ஆம் ஆண்டில் புலிகள் இயக்கம் கைப்பற்றியிருந்தது. இவ்வாறு அரசாங்கத்தின் இராணுவ முகாம்கள் இருந்த இடத்தில் இறந்த பயங்கரவாதிகளின் குடும்பங்களுக்காக வீடமைக்கும் கட்டாய பணிகளில் ஜெர்மனியைச் சேர்ந்த தனியார் நிறுவனம் அடிப்படையான உதவிகளை வழங்குவது சட்ட விரோதமானதாகும். மேலும், இவ்வாறு ஆனையிறவு பிரதேசத்தில் அரச பாதுகாப்புப் படையினரின் முகாம் அமைந்திருந்து பின்னர் புலிகள் இயக்கத்தினரால் அழிக்கப்பட்ட பிராந்தியத்தில் வீடமைப்பு பணிகளில் ஈடுபட்டிருப்பது பற்றி மேற்படி ஜேர்மனி நிறுவன பாதுகாப்புத் துறை அதிகாரிளுக்கு முன்னறிவிப்பைக் கூட தெரிவிக்கவில்லையென குறித்த சிரேஷ்ட பாதுகாப்புத்துறை உத்தியோகத்தர் குறிப்பிட்டுள்ளார்.

-திவயின : 08.03.2006-

நன்றி தினக்குரல்

Link to comment
Share on other sites

ஆனையிறவு எங்கடை இடம் எண்டதையும் இனவாத சிங்கள இராணுவம் அங்கிருந்து அடிபட்டு துவைபட்டு ஓடியதையும் பாதுகாப்பு அதிகாரி மறந்து விட்டாராக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நமது தாய் நிலத்தில் வீடு கட்டுவதற்கு மாற்றான் படை

அனுமதி கேட்பதா?

ஆனையிறவில் இவ்வளவு அடி வாங்கியும் புத்தி

தெளியவில்லை போலும் :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆனையிறவு மனித வாழ்வதற்க்கு ஏற்ற பகுதி அல்ல

ஆனால் உப்பளத்திற்கு மிகவும் பிரசித்த ஒரு இடம்

தமிழிழத்தின் மிகப்பெரிய தொழிற்பேட்டை.

ஏன் ராணுவத்தினர் கூட கடினப்பட்டுத்தான் அங்க இருந்திருப்பார்கள்

அது அவர்களுக்கே தெரியும்.

அங்கு குடிப்பதற்கு ஏற்ப நல்ல தண்ணிரும் கிடையாது.

Link to comment
Share on other sites

அந்த இடம் மக்கள் குடியிருப்பதற்கேற்ற இடம் இல்லை ஒரே உப்பு வெட்டை இதில் இருந்து தெரியிது அவங்களுக்கு தமிழிழ நில அமைப்பை பற்றி ஒன்றுதெரியாது இப்படித்தான் எனது சிங்கள நண்பர் ஒருவர் சொன்னார் கப்பலில் மல்ட்ரி பரல வைத்து அடித்தா போதுமாம் முல்லைத்தீவை பிடிச்சிரலாமாம் இது எப்படி! :roll:

Link to comment
Share on other sites

ஆனையிறவில் இவ்வளவு அடி வாங்கியும் புத்தி

தெளியவில்லை

Link to comment
Share on other sites

தமிழர் பகுதியில் சட்டவிரோதமாய் குடியமைத்து அதை சிங்களவனின் பகுதியாய் மாற்றின கூட்டம் அப்;ப வாலாட்டிட்டு இப்ப குரைக்கிறது மிகவும் நகைச்சுவையாய் இருக்குது.

Link to comment
Share on other sites

சிங்களவன் - ஏதோ புலம்பிட்டு போகட்டும்-

எங்களுக்கு- ஏன் அதில் -இவ்ளோ அக்கறை?

அது இருக்க - அந்த செய்தி உண்மைதானா? :roll:

சகல வசதிகளுடனும் இருந்த சிங்களவனே - செத்து செத்து பிழைச்ச - அந்த பிரதேசத்தில் - சாதாரண மக்கள் வாழ்வது - சாத்தியமோ தெரியல -! :roll:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆனையிறவில வீடுகட்டி குடும்பங்களை இருத்திற அளவுக்கு மண்டைக்குள்ள ஒண்டுமில்லாத ஆக்கள் எண்டு நினைச்சானோ என்னவோ?

ஆனால் இயக்கச்சி, பரந்தன், உட்ப ஏனைய பகுதிகளையும் அவங்கள் ஆனையிறவு எண்ட பேருக்குள்ளதான் அடக்கிறவங்கள். அந்த இடங்களில நடக்கிற வீடமைப்புத் திட்டங்கள் எதையேன் அறிஞ்சிருந்தாலும் இப்பிடிச் சொல்லுவாங்கள். செய்தி உண்மையெண்டா உது சனத்துக்குக் கட்டிற வீட்டைத்தான் புலிகளுக்கு எண்டு சொல்லுறாங்கள் போல.

நிற்க, திவயினவை மேற்கோள் காட்டிப்போட்டிருக்கிற செய்தியில ஆனையிறவு 96 இல பிடிபட்டது எண்டு வருகுது. திவயினவின்ர பிழையோ மற்றாக்களின்ர பிழையோ?

Link to comment
Share on other sites

ஆனையிறவில வீடுகட்டி குடும்பங்களை இருத்திற அளவுக்கு மண்டைக்குள்ள ஒண்டுமில்லாத ஆக்கள் எண்டு நினைச்சானோ என்னவோ?

ஆனால் இயக்கச்சி, பரந்தன், உட்ப ஏனைய பகுதிகளையும் அவங்கள் ஆனையிறவு எண்ட பேருக்குள்ளதான் அடக்கிறவங்கள். அந்த இடங்களில நடக்கிற வீடமைப்புத் திட்டங்கள் எதையேன் அறிஞ்சிருந்தாலும் இப்பிடிச் சொல்லுவாங்கள். செய்தி உண்மையெண்டா உது சனத்துக்குக் கட்டிற வீட்டைத்தான் புலிகளுக்கு எண்டு சொல்லுறாங்கள் போல.

நிற்க, திவயினவை மேற்கோள் காட்டிப்போட்டிருக்கிற செய்தியில ஆனையிறவு 96 இல பிடிபட்டது எண்டு வருகுது. திவயினவின்ர பிழையோ மற்றாக்களின்ர பிழையோ?

நல்லவன் :):(:(

அது ஒண்டும் இல்ல - சிங்களவன்ர மண்டை பிழை-!

அடி வாங்கின காலத்தையே மறந்திட்டான் ! 8)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பாரிய கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட எதிர்பார்க்கிறோம்; சமன் ரத்னப்பிரிய! 27 SEP, 2024 | 05:07 PM (எம்.ஆர்.எம்.வசீம்) வரலாற்றிலேயே  மிகப்பெரிய கூட்டணி அமைத்து பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட எதிர்பார்க்கிறோம். ஐக்கிய மக்கள் சக்தியுடனான கலந்துரையாடலும் சாதகமான நிலைக்கு வந்துள்ளது என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார். எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு ஐக்கிய தேசிய கட்சி எடுத்துவரும் நடவடிக்கை தொடர்பில் குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.   இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,  பாராளுமன்ற தேர்தலுக்கு தற்போது அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் எதிர்க்கட்சியில் இருக்கும் அனைத்து கட்சிகளையும் இணைத்துக்கொண்டு தேர்தலுக்கு முகம்கொடுப்பதற்கே எதிர்பார்க்கிறோம்.   நாட்டு மக்களின் எதிர்பார்ப்பும் அவ்வாறு இருப்பதாகவே எமக்கு தோன்றுகிறது. அவ்வாறான பரந்துபட்ட கூட்டணியை அமைக்குமாறே அனைவரும் வற்புறுத்தி வருகின்றனர்.   அதனால் இந்த கூட்டணியை அமைப்பதற்காக தற்போது ஐக்கிய மக்கள் சக்தியுடனான கலந்துரையாடலை ஆரம்பித்திருக்கிறோம்.    அதேபோன்று மொட்டு கட்சியின் பெரும்பான்மை பிரிவினர், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களுடனும் கலந்துரையாடல் இடம்பெற்று வருகிறது.    ஓரிரு தினங்களில் இந்த கலந்துரையாடல்களை முடிவுக்கு கொண்டுவர முடியுமாகும். அதனால் வரலாற்றில் பெரிய கூட்டணி அமைத்து இந்த பாராளுமன்ற தேர்தலில் பாேட்டியிட முடியுமாகும் என எதிர்பார்க்கிறோம். பல்வேறு தரப்பினர்கள் கட்சிகளுடன் கலந்துரையாடிய விடயங்களை ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுடனும் நாங்கள் கலந்துரையாடினோம்.    ரணில் விக்ரமசிங்கவின் ஆலாேசனையின் பிரகாரம் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இரண்டு தினங்களுக்கு முன்னர் கலந்துரையாடினோம். நேற்றும் கலந்துரையாடினோம்.    அந்த கலந்துரையாடல் சாதகமாக அமைந்துள்ளது. ஆரம்பத்தில் ஐக்கிய மக்கள் சக்தி இந்த பேச்சுவார்த்தைக்கு பின்வாங்கியபோதும் தற்போது அவர்கள் கலந்துரையாடல்களுக்கு இணக்கம் தெரிவித்து, ஆராேக்கியமான பல கருத்துக்களை தெரிவித்திருக்கிறார்கள்.    அதனால் தொடர்ந்தும் அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடி எப்படியாவது பாராளுமன்ற தேர்தலில் கூட்டணியாக போட்டியிடவே நாங்கள் எதிர்பார்க்கிறோம்.   கூட்டணி அமைத்து போட்டியிடுவதன் மூலமே எமக்கு தேர்தலில் எதிர்பார்ப்பொன்றை ஏற்படுத்திக்கொள்ள முடியும். எமது ஆதரவாளர்களின் எதிர்பார்ப்பும் அதுவாகும் என்றார். https://www.virakesari.lk/article/194920
    • நிலாமதியவர்களே, படித்துப் பாராட்டியமைக்கு நன்றி. கிறுக்க முயற்சிக்கிறேன்.  நாம்தானே ஓடிவந்துவிட்டோம். எங்கோ ஒதுங்கி ஓடிய காலங்களைத் திரும்பிப்பார்க்கும் போது வெறுமையாய் தெரிகிறது.    நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி சுவியவர்களே, படித்துப் பாராட்டியமைக்கு நன்றி. நீங்களே ஒரு சிறந்த படைப்புகளைப் தருபவர். உங்கள் வரிகள் உற்சாகம் தருவனவாக உள்ளன.  நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி ஈழப்பிரியனவர்களே, படித்துப் பாராட்டியமைக்கு நன்றி. உண்மைதான். ஆனால், சிங்களத்தின் சிந்தனையல்லவா எம்மை ஆக்கிரமித்துள்ளது.  நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.