Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

24 hours

Showing topics posted in for the last 1 day.

This stream auto-updates

  1. Past hour
  2. Tilly காகிதக்கூழ் சிற்பங்களை வடிவமைப்பதில் திறமையான யேர்மனியக் கலைஞர். யேர்மனியில் நடைபெறும் ரோசன்மொண்டாக் (Rosenmontag) கார்னிவலின் அணிவகுப்புகளில் இடம்பெறும் அவரது அரசியல் கேலிச்சிற்பங்கள் பரவலாகப் பேசப்படுபவை. அரசியல்வாதிகள், உலகத் தலைவர்கள் மற்றும் மதத் தலைவர்கள், குறிப்பாக தீவிர வலதுசாரிகளைக் கேலிச்சித்திர வடிவில் சித்தரிப்பதில் அவர் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். அவரது சிற்பங்கள் பெரும்பாலும் வெளிப்படையான அரசியல் செய்திகளை வெளிப்படுத்துகின்றன. 2024 ஆம் ஆண்டு, அவர் உருவாக்கிய ஒரு காகிதக்கூழ் சிற்பம் புடினுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. அதே ஆண்டில் நடைபெற்ற ரோசன்மொண்டாக் கார்னிவல் ஊர்வலத்தில் இடம்பெற்ற அந்தச் சிற்பத்தில், சீருடை அணிந்த புடினும், பேட்ரியார்க் கிரில்லும் ஓரினச்சேர்க்கை சார்ந்த அசிங்கமான காட்சியில் சித்தரிக்கப்பட்டிருந்தனர். இதனைத் தொடர்ந்து, ரஷ்யாவில் பதிவு செய்யப்பட்ட வழக்கில், மாஸ்கோ நீதிமன்றம் Tillyக்கு எட்டு ஆண்டுகள் மற்றும் ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. இந்த வழக்கில், அவர் மத உணர்வுகளைப் புண்படுத்தியதாகவும், ரஷ்ய ஆயுதப்படைகள் குறித்து தவறான தகவல்களைப் பரப்பியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. நீதிபதி கான்ஸ்டன்டின் ஓசிரோவ் இந்தத் தீர்ப்பை வழங்கியதுடன், 2,000 யூரோ குற்றப் பணமும் Tillyக்கு விதிக்கப்பட்டுள்ளது. மேலும், நான்கு ஆண்டுகள் கலைத்துறையில் பணியாற்றுவதற்கும் அவருக்குத் தடை விதிக்கப்பட்டிருக்கின்றது. Tilly தற்போது யேர்மனியிலேயே இருப்பதால், ரஷ்யாவிற்கு நாடுகடத்தப்படுவதற்கான ஆபத்து இல்லை. இருப்பினும், ரஷ்யாவுடன் நட்பு உறவு கொண்ட நாடுகளுக்கு அவர் பயணம் செய்யும் போது சிக்கல்கள் ஏற்படலாம். அத்தோடு மாஸ்கோ நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில், இன்டர்போல் மூலம் அவருக்கு எதிராக சர்வதேச கைது வாரண்ட் பிறப்பிக்கப்படவும் வாய்ப்பு இருக்கின்றது. யேர்மனியின் NRW மாநில முதலமைச்சர் ஹென்றிக் வூஸ்ட் இதுகுறித்து, “கலைஞர்கள் சுதந்திரமாக இருக்க வேண்டும். உலகம் முழுவதும் உள்ள சர்வாதிகார ஆட்சிகள் விமர்சனங்களை ஒடுக்க முயற்சிக்கின்றன. Tilly கடந்த 30 ஆண்டுகளாக தைரியமாக தனது கருத்துகளை வெளிப்படுத்தி வருகிறார். அவர் எந்த அதிகாரத்திற்கும் அஞ்சுவதில்லை. மாநில அரசின் முழுமையான ஆதரவு அவருக்கு உள்ளது” என்று தெரிவித்துள்ளார். காகிதக்கூழ் சிற்பத்தைப் பார்க்க விரும்பினால், tagesschau.deMoskau: Prozess gegen Karnevalswagenbauer Tilly wird fort..."Verunglimpfung der Staatsorgane" lautet der Vorwurf der russischen Justiz gegen den Düsseldorfer Karnevalswagenbauer Tilly. Heute hätte der Prozess gegen ihn in Abwesenheit fortgesetzt werden sollen
  3. பிந்திய பிறந்த நாள் வாழ்த்துகள் யாயினி.
  4. இந்த வீடியோ காட்டுகிறது. ரேடார் பூட்டு, திரியும் ஏவுகணையில் இருந்தா, அல்லது நிலத்த்தில் இருந்த்து ஏவப்படும் விமான எதிர்ப்பு காகுத்தலில் இருந்தா என்பது காட்டப்படவில்லை.
  5. வரகுண லுக்டபக தெளிவாக எலுதும் பிடிக்கும் போது படிக்க இலகுவாக கபீம் குபீம், கும்பிபாகம், முந்திரி பக்கோட இந்த அடிப்படையில் சொல்வது.:. இதை புரிந்து கொள்ளமுடியாத அரைகுறை என்பதை காடுவெட்டி, குரு உச்சத்ல இருந்தால், மாதா கோவிலுக்குள் டிரெயின் போன கதை தான்.
  6. சென்னை அணி போற போக்கை பார்த்தால் கடைசி இடத்துக்கு கொல்கொத்தாவிற்கே சவால் விடுவார்கள் போலிருக்கே!! அணித்தெரிவு படுமோசம்! பிளெமின்கையும் ஹசியையும் வீட்டுக்கு அனுப்பினால்தான் சரி! இரண்டு வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே இன்று விளையாடினார்கள்!!
  7. Today
  8. அவர்கள் சொல்வது தானியங்கி பறக்கும் (வெடிபொருளுடன்) drone, எகனைகள் போன்றவை. இவை விமான எதிர்ப்பு ஏவுகணை போல சூடு, மற்றும் அண்மை ஆகையால் ரேடார் பூட்டின் மூலம் விமானத்தை நெருங்க கூடியவை. ஆனால், இவை எல்லாம் விமானத்தின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாது. இதனால், 4-5 ஐ பாவித்து பொறியை ஏற்படுத்துவது, அதாவது வேகம் குறைந்ததை விமானம் சுட்டால், வேகம் கூடிய நாடிச்சென்று தாக்கும் ஏவுகணையை சமாளிக்க நேரம் போதாது. அல்லது வேகம் கூடிய ஏவுகணையை விமானம் சாமளிக்க முயன்றால், வேகம் குறைந்த த்தானியங்கி drone இல் மோதும் சாத்தியக்கூறுகள். அத்துடன் கீழே இருந்த்தும் விமான எதிர்ப்பு தாக்குதல். நீங்கள் இதை போன்றதை, இரான் ஏவும் ஏவுகணையை சுட்டு விழுத்த முயலும் இஸ்ரேல் செய்வது, youtube இல் இருக்கிறது. ஈரான் செய்ய முயல்வதாக ஆய்வாளர் சொல்லுவது அதன் எதிர்வளம். இதில் முக்கியமானது, இரான் மிக குறைந்த செலவில் இதை செய்ய முயல்வது
  9. சகோதரி @யாயினிக்கு..., பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன். 🙏
  10. புரிகிறது. நீங்கள் பெட்டியைத்தானே சொல்கிறீர்கள். கருத்துப்படம் 29.03.2024 இந்த வரிசையில் சீமான்தான் கடைசி. இனியொருவர் வருவதற்கு வாய்ப்பில்லை ….
  11. நீங்கள் எழுதியதை வைத்து யோசித்தபோது வானத்தில் விமானங்களை வேகமாகச் சென்று தாக்கக்கூடிய ஏதோ ஒன்று பலூன் போன்ற/வேறொரு விதமாக மிதக்க வைத்திருந்துவிட்டு இலக்கு அருகில் வந்தவுடன் தாக்கும் வகையில் வடிவமைத்துள்ளார்களோ?!
  12. மலிவு டிரோன்கள் மூலம் வளைகுடா நாடுகளுக்கு இரான் ஏற்படுத்தும் மறைமுக ஆபத்து என்ன? பட மூலாதாரம்,Morteza Nikoubazl/NurPhoto via Getty Images படக்குறிப்பு,இரான் நாட்டின் குறைந்த செலவிலான டிரோன்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. கட்டுரை தகவல் சுசேத் வீர் சிங் பாதுகாப்பு நிபுணர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள் 'ஆபரேஷன் எபிக் ஃபியூரி' தொடங்கிய பிறகு, மத்திய கிழக்கில் அழிவை ஏற்படுத்தவும், மிகவும் சிக்கலான வான் பாதுகாப்பு அமைப்புகளை ஊடுருவவும் இரான் நாட்டின் குறைந்த செலவிலான 'காமிகாஸி ஷாஹெத்' டிரோன்கள் மிகவும் பயனுள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளன. இந்த டிரோன்கள் நவீன போர் முறை மற்றும் அதன் பொருளாதார சமன்பாடுகளில் ஒரு புதிய பரிமாணத்தைச் சேர்த்துள்ளன. இரான் தனது பாலிஸ்டிக் ஏவுகணைகளுடன் சேர்த்து, இந்த ஷாஹெத் டிரோன்களைப் பயன்படுத்தி மத்திய கிழக்கு முழுவதும் உள்ள சென்சார்கள், ராடார்கள், ராணுவத் தளங்கள், எண்ணெய்-எரிவாயு உள்கட்டமைப்புகள், துறைமுகங்கள், விமான நிலையங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளை ஆக்ரோஷமாகத் தாக்கியுள்ளது. கடந்த ஒரு மாதமாக வளைகுடா பிராந்தியத்தில் நிலவும் குழப்பம், நவீன போர்க்களத்தில் டிரோன்கள் மற்றும் வான் சக்தியின் பங்கு எவ்வளவு முக்கியமானது என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. 2022-இல் ரஷ்யா-யுக்ரேன் போர் தொடங்கியதிலிருந்து இந்த ராணுவக் கோட்பாடு உலகெங்கும் பின்பற்றப்படுகிறது. ஷாஹெத் டிரோன்களால் ஏற்பட்ட பெரும் சேதம், மலிவான காமிகாஸி டிரோன்களைப் பெரிய அளவில் ராணுவ ஆயுதக் கிடங்குகளில் சேர்ப்பதன் உத்தி ரீதியான நன்மை எவ்வளவு பெரியது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இந்தியாவிற்கு இந்தப் பாடம் மிகவும் முக்கியமானது, ஏனெனில் இந்தியா தற்போதைய மோதல் பகுதியிலிருந்து சில ஆயிரம் மைல்கள் தொலைவில் இருந்தாலும், அதன் எல்லைகள் 'எதிரிகளால்' சூழப்பட்டுள்ளன. பட மூலாதாரம்,Lockheed Martin படக்குறிப்பு,தாட் (THAAD) அமைப்பு அல்லது PAC-3 மூலம் செய்யப்படும் ஒவ்வொரு இடைமறிப்பும் 1 மில்லியன் டாலர் முதல் 4மில்லியன் டாலர் வரை செலவாகிறது. சமமற்ற பொருளாதாரக் கணக்கீடு பிப்ரவரி 28 அன்று மோதல்கள் தொடங்கியதிலிருந்து, இரான் டிரோன் கூட்டங்களைப் பயன்படுத்தித் தாக்குதல்களை நடத்தி வருகிறது. குறிப்பாக ஷாஹெத்-136, ஷாஹெத்-107 மற்றும் ஷாஹெத்-238 டிரோன்கள் வளைகுடா பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய வான் பாதுகாப்பு அமைப்புகளுக்கு அழுத்தம் கொடுக்கப் பயன்படுத்தப்பட்டன. ஷாஹெத் 136 மற்றும் ஷாஹெத் 107 ஆகியவை பிஸ்டன் இன்ஜின் மூலம் இயங்கும், ஒருமுறை மட்டுமே தாக்கும் 'லாயிட்டரிங் மியூனிஷன்' (இலக்கு இருக்கும் பகுதியில் வட்டமிட்டுக் கொண்டே இருக்கும் ஆயுதங்கள்) ரகத்தைச் சேர்ந்தவை. அதேசமயம், ஷாஹெத் 238 என்பது ஜெட் இன்ஜின் மூலம் இயங்கும் லாயிட்டரிங் மியூனிஷன் ஆகும். இரான் நாட்டு டிரோன்களின் மிகப் பெரிய பலமே, அவை விலை குறைவானவை மற்றும் மிக எளிதாகத் தயாரிக்கக்கூடியவை என்பதுதான். போரில் பயன்படுத்தப்படும் இந்த ஷாஹெத் டிரோன்களின் விலை ஒரு டிரோனுக்குத் தோராயமாக 20,000 முதல் 50,000 டாலர் வரை மட்டுமே ஆகிறது. இதற்கு நேர்மாறாக, இவற்றைத் தடுப்பதற்காக நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய வான் பாதுகாப்பு அமைப்புகள் மிக மிக விலை உயர்ந்தவை. அமெரிக்காவின் 'தாட்' (THAAD) அல்லது 'பேட்ரியாட்' ஏவுகணை அமைப்பு (PAC-3) மூலம் ஒரு தாக்குதல் ஏவுகணையையோ அல்லது டிரோனையோ நடுவழியில் சுட்டு வீழ்த்த 1மில்லியன் முதல் 4 மில்லியன் டாலர் வரை செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தச் செலவு வேறுபாடு ஒருபுறமிருக்க, மற்றுமொரு சிக்கலும் உள்ளது. எதிரியின் தாக்குதலை தடுக்கும் ஏவுகணைகள் வேகமாகத் தீர்ந்துவிடுவதுடன், அவற்றை மீண்டும் தயாரித்து நிலைநிறுத்த நீண்ட காலம் எடுக்கும். விநியோகச் சங்கிலியில் உள்ள பலவீனங்களால், போரில் ஏவப்பட்ட 'டொமாஹாக்' ஏவுகணைகளை ஈடுகட்ட ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாகலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மோதலின் ஆரம்ப நாட்களில், இரான் நாட்டு டிரோன்கள் மற்றும் ஏவுகணைகளைத் தடுக்க அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் 800-க்கும் மேற்பட்ட தடுப்பு ஏவுகணைகளைச் செலவழித்தன. ஆனால், லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் 2025-ஆம் ஆண்டு முழுவதும் வெறும் 620 PAC-3 ஏவுகணைகளை மட்டுமே தயாரித்திருந்தது. உண்மையில், இரான் அனுப்பும் டிரோன் கூட்டங்களின் விலையை விட, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் அவற்றைத் தடுக்கப் பயன்படுத்தும் அமைப்புகளின் விலை பலமடங்கு அதிகம். விநியோகச் சங்கிலியில் உள்ள கட்டமைப்பு ரீதியான வரம்புகள் மற்றும் சேதமடைந்தவற்றை மீண்டும் ஈடு செய்வதில் உள்ள சிக்கல்கள் ஆகியவற்றால் இந்தச் செலவு சமநிலையின்மை இன்னும் தீவிரமடைந்துள்ளது. இது இந்த மோதலில் ஒரு பாதகமான பொருளாதாரச் சூழலை உருவாக்கியுள்ளது. இதன் மூலம், தன்னை எதிர்க்கும் நாடுகளின் ஒன்றுபட்ட கூட்டணிக்கு எதிராகத் தனது ஒப்பீட்டளவிலான ராணுவப் பலவீனத்தை ஈடுகட்ட இரான் நாட்டுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. பட மூலாதாரம்,Gailan Haji / Middle East Images / AFP via Getty Images போரின் மாறியுள்ள இந்த பொருளாதாரச் சமன்பாடுகள், இரான் தனக்குச் சாதகமான உத்திகளைக் கையாளுவதற்கு உதவியுள்ளன. இரான் நாட்டு டிரோன்கள், அவற்றைத் தடுத்து அழிக்கும் 'இன்டர்செப்டர்' ஏவுகணைகளை விட மிகக் குறைந்த விலையிலானவை. அதோடு அவற்றை உருவாக்குவதும், மீண்டும் போர்க்களத்தில் நிலைநிறுத்துவதும் மிக எளிது. இதன் காரணமாக, இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் வளைகுடா நாடுகள் அந்தத் தடுப்பு ஏவுகணைகளை ஏவும் முடிவை எடுப்பதிலும், அதனால் ஏற்படும் பொருளாதாரச் சுமையிலும் பாதிப்புகள் அதிகரித்துள்ளன. இந்தச் செலவு சார்ந்த பொருளாதார நெருக்கடி எவ்வளவு சக்தி வாய்ந்தது என்றால், சில வளைகுடா நாடுகள் தங்கள் வசம் உள்ள தடுப்பு ஏவுகணைகளின் இருப்பைப் பாதுகாப்பதற்காக மாற்று உத்திகளைக் கையாள வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளன. ஷாஹெத் டிரோன்களைச் சுட்டு வீழ்த்துவதற்காக வளைகுடா நாடுகள் 'எஃப் 16' போர் விமானங்களைச் செயல்பாட்டிற்குக் கொண்டு வந்துள்ளன. இருப்பினும், இந்த முறையும் கூட அதிகச் செலவு பிடிக்கக்கூடியதுதான். ஒரு F-16 விமானத்தை ஒரு மணிநேரம் விண்ணில் பறக்க விடுவதற்கான செலவு சுமார் 25,000 டாலர் ஆகிறது. இது போரின் மாறியுள்ள பொருளாதாரச் சித்திரத்தை இன்னும் சிக்கலாக்கியுள்ளது. இதனால் புதிய ஆயுதங்களையும், தடுப்பு ஏவுகணைகளையும் வழங்குவதற்கு மேற்கத்திய நாடுகளின் தொழில் துறைத் திறனுக்கு அழுத்தம் அதிகரித்துள்ளது. போரின் இந்த மாறிய பொருளாதாரச் சமன்பாடு தொழில்நுட்ப ரீதியாக முன்னேறிய மற்றும் அதிக நிதி பலம் கொண்ட ராணுவங்களுக்குக் கூட, குறைந்த செலவிலான ஆயுத அமைப்புகளைக் கொண்ட ஒரு சாமர்த்தியமான மற்றும் திறமையான எதிரி சவால் விடுக்க முடியும் என்பதை அடிக்கோடிட்டு காட்டுகிறது. உளவுத் தகவல்கள், செயற்கைக்கோள் படங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவை போரின் தொழில்நுட்பக் கட்டமைப்பையே தலைகீழாக மாற்றிவிட்டன. தொழில்நுட்ப ரீதியாக முன்னேறிய விருப்பத்தேர்வுகள் ராணுவங்களின் திறனைச் சந்தேகத்திற்கு இடமின்றி பல மடங்கு அதிகரிக்கின்றன என்றாலும், எதிர்கால மோதல்களுக்கு இந்த ராணுவங்களுக்குக் குறைந்த செலவிலான தாக்குதல் மற்றும் பாதுகாப்பு விருப்பத்தேர்வுகளும் தேவைப்படும். குறைந்த மூலதனம் மற்றும் சாதாரண தொழில்நுட்பம் கொண்ட ராணுவங்களே வெற்றி பெறும் என்பது இதன் பொருளல்ல; ஆனால் இது போர்க்களத்தை நிச்சயமாக இன்னும் சிக்கலானதாக மாற்றுகிறது. இந்தச் சமத்துவமின்மையின் தாக்கம் மேற்கு ஆசியாவின் தற்போதைய மோதலோடு மட்டும் நின்றுவிடாது, வருங்காலத்திலும் நீண்டகாலப் பாதிப்புகளை ஏற்படுத்தும். பட மூலாதாரம்,Nasir Kachroo/NurPhoto via Getty Images படக்குறிப்பு,ஜனவரி 25 அன்று ஜம்மு-காஷ்மீரில் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை இந்திய ராணுவம் காட்சிப்படுத்தியது இந்தியாவுக்கான பாடம் மத்திய கிழக்கில் நடந்து வரும் போரிலிருந்து இந்தியா தள்ளி இருந்தாலும், அதன் பொருளாதார மற்றும் எரிசக்தி அதிர்வுகளிலிருந்து முற்றிலும் தப்பிவிட முடியாது. இந்தப் போர் இந்தியாவிற்குப் பல முக்கியமான அர்த்தங்களைக் கொண்டுள்ளது. கடந்த ஆண்டு கோடையில் இந்தியா - பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட வான்வழி மோதலில் தெளிவாகத் தெரிந்தது போல, டிரோன் கூட்டங்கள் இப்போது தெற்காசிய மோதல்களிலும் ஒரு முக்கியப் பங்கை வகிக்கின்றன. மியான்மரில் கூட அரசு படைக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே டிரோன் போர் நடப்பதைக் காண முடிகிறது. மேற்கு ஆசியாவின் தற்போதைய மோதலிலிருந்து வெளிப்பட்டு வரும் வேகமான தொழில்நுட்ப முன்னேற்றமும், சமச்சீரற்ற டிரோன் உத்திகளும் துணைக்கண்டத்தில் டிரோன் போரை இன்னும் சிக்கலாக்கும். இந்திய ராணுவத்தின் டிரோன் ஆயுதக் கிடங்கில் பல 'ஹை-டெக்' டிரோன்கள் உள்ளன. இதில் இஸ்ரேலின் உளவு டிரோன்களான 'ஐஏஐ சர்ச்சர்' மற்றும் 'ஹார்ப்பர்' ஆகியவை அடங்கும். இது தவிர இஸ்ரேலில் இருந்தே வந்த 'லாயிட்டரிங் மியூனிஷன்' ரகங்களான 'ஹாரோப்' மற்றும் 'ஹார்ப்பி' ஆகியவையும் உள்ளன; இவை 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையின் போது பயன்படுத்தப்பட்டன. 'ஹார்ப்பி'யின் ஒரு வகையான 'ஸ்கை ஸ்ட்ரைக்கர்', இந்தியாவில் கூட்டுத் தயாரிப்பின் கீழ் உருவாக்கப்பட்டு வருகிறது. அமெரிக்கத் தயாரிப்பான 'எம் கியூ-9 ரீப்பர்' டிரோன்களும் காலப்போக்கில் இந்தியக் கையிருப்பில் சேர்க்கப்படும். 'நாகஸ்த்ரா 1' போன்ற உள்நாட்டு காமிகாஸி டிரோன்களும் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையின் போது பயன்படுத்தப்பட்டன. இருப்பினும், இந்திய ராணுவ ஆயுத கையிருப்பில் உள்ள ஒரு பெரிய மற்றும் தெளிவான குறைபாடு என்னவென்றால், மலிவான மற்றும் எளிதாகத் தயாரிக்கக்கூடிய காமிகாஸி டிரோன்கள் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே கிடைக்கின்றன. இந்தியா காமிகாஸி டிரோன்களைத் தயாரிப்பதற்கும் வாங்குவதற்குமான திட்டங்களை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்க வேண்டியது அவசியம். 'நாகஸ்த்ரா' போன்ற உள்நாட்டுத் தீர்வுகளும், சமீபத்திய திட்டங்களான 'கால்' மற்றும் 'சேஷ்நாக்' போன்ற டிரோன்களும் இருந்தாலும், சிறிய அளவிலும் துண்டு துண்டாகவும் செய்யப்படும் கொள்முதல்கள் இவற்றை பெரிய அளவில் பயன்படுத்த ஏற்றதாக மாற்றாது. ராணுவம் குறைந்த விலை காமிகாஸி டிரோன்களை பத்தாயிரக்கணக்கில் இல்லாவிட்டாலும், ஆயிரக்கணக்கிலாவது ஆர்டர் செய்ய வேண்டியது அவசியமாகும். குறைந்த எண்ணிக்கையில் ஆர்டர் கொடுத்துவிட்டு அவை கிடைப்பதற்கு நீண்ட காலம் காத்திருக்கும் தற்போதைய முறை, நீண்ட காலத்திற்குப் பலன் தராது; குறிப்பாகத் தயாரிப்பாளர்களுக்கு நிதி ரீதியாக இது உதவாது. பட மூலாதாரம்,Imad Basiri/Anadolu via Getty Images படக்குறிப்பு,இரான் நாட்டின் டிரோன்களின் மிகப்பெரிய பலமே அவை மிக மலிவானவை மற்றும் எளிதில் தயாரிக்கப்படக் கூடியவை என்பதுதான். போர்களில் குறைந்த விலை 'லாயிட்டரிங் மியூனிஷன்' பயன்பாடு இனி வரும் காலங்களில் இன்னும் அதிகரிக்கவே செய்யும்; இதற்கு இரானின் உத்திகள் மேலும் வேகத்தைக் கொடுத்துள்ளன. அமெரிக்கா கூட தற்போதைய மோதலில் இரானின் சமச்சீரற்ற உத்திகளை எதிர்கொள்ள 'குறைந்த விலை ஆளில்லா போர் தாக்குதல் அமைப்பை' (LUCAS) களமிறக்கியுள்ளது. அமெரிக்காவின் பிரம்மாண்டமான ராணுவத் தளவாட உற்பத்தி கட்டமைப்பைக் கவனிக்கும்போது, இந்தியாவின் மீது இதன் முக்கியத்துவம் இன்னும் அதிகமாகிறது. மேற்கு ஆசியாவிலிருந்து கிடைக்கும் மற்றொரு முக்கியமான பாடம் என்னவென்றால், மலிவான மற்றும் செலவு குறைந்த 'கவுன்டர் டிரோன்' அமைப்புகளைப் பெரிய அளவில் உருவாக்கவும், தயாரிக்கவும், வாங்கவும் வேண்டிய தேவை உள்ளது – யுக்ரேன் - ரஷ்யா போரின் போது இத்தகைய அமைப்புகள் உருவாக்கப்பட்டது போலவே இதுவும் அமைய வேண்டும். வளைகுடா நாடுகளிடம் இத்தகைய அமைப்புகள் இல்லாததன் எதிர்மறையான தாக்கம் தற்போதைய போரில் காணப்படுகிறது. இந்த குறைந்த விலை அல்லது மலிவான அமைப்புகள், தற்போதைய வான் பாதுகாப்பு அமைப்புகளுக்கு மேலாக ஒரு கூடுதல் பாதுகாப்பாகச் செயல்படும். இதன் மூலம் விலை உயர்ந்த வான் பாதுகாப்பு அமைப்புகளைச் சிறப்பாகப் பயன்படுத்த உறுதி செய்ய முடியும் மற்றும் எதிரியின் குறைந்த விலை காமிகாஸி டிரோன்களை எதிர்கொள்ள அவற்றைப் பயன்படுத்துவதைக் குறைக்க முடியும். இந்த நடவடிக்கைகளைச் செயல்படுத்த இந்தியாவில் நிறுவன ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் மன உறுதி தேவைப்படும். ராணுவம் எவ்வளவு விரைவாகவும் திறமையாகவும் பெரிய அளவிலான கொள்முதல் செயல்முறையைச் செய்கிறது என்பதில் இது தங்கியுள்ளது. ஆனால் உண்மையான சிக்கலே இங்குதான் உள்ளது - ஏனென்றால் முழுச் சமன்பாடும் கொள்முதல் செயல்முறையைத் தான் நம்பியுள்ளது, மேலும் இந்தச் செயல்முறை ஒவ்வொரு நிலையிலும் சிக்கல்களை கொண்டது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c0j64ln44qpo
  13. “விஜய்யும், சீமானும் ஓட்டுகளை பிரிப்பது திமுக கூட்டணிக்கே சாதகம்” - மு.வீரபாண்டியன் Updated on: 03 Apr 2026, 7:41 pm 1 min read கோவில்பட்டி: “விஜய்யும், சீமானும் ஓட்டுகளை பிரிப்பதால் திமுக கூட்டணியின் வெற்றி மிகவும் எளிதாகும்” என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்தார். கோவில்பட்டி தொகுதி திமுக வேட்பாளர் கருணாநிதிக்கு ஆதரவு திரட்டும் வகையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் பேசியது: “ஒரு கட்சி வெற்றி பெறலாம், தோற்கலாம். ஆனால் ஜனநாயகம் தோற்றுவிடக் கூடாது. பாஜகவும், ஆர்எஸ்எஸ் அமைபும் பேரபாயம். இந்த தேர்தலில் பாஜக இல்லாமல் அதிமுக தனித்து நின்றிருந்தால் கடுமையான போட்டி இருந்திருக்கும், ஆனால், பாஜகவை அதிமுக அழைத்து வருவதால் திமுக தலைமையிலான கூட்டணிக்கு வெற்றி என்பது மிக இலகுவாகிவிட்டது. அமைதியாக இருக்கும் தமிழகத்தை பாஜக கெடுக்க முயற்சிக்கிறது. இது தமிழக மக்களுக்கு தெரியும். விஜய்யும், சீமானும் ஓட்டுகளை பிரிப்பார்கள். எனவே, இன்னும் பிரம்மாண்டமான வெற்றியை திமுக கூட்டணி அடையும்” என்று அவர் கூறினார். “விஜய்யும், சீமானும் ஓட்டுகளை பிரிப்பது திமுக கூட்டணிக்கே சாதகம்” - மு.வீரபாண்டியன்
  14. முந்தைய இருப்பு 139,755.48+383.87=140,139.35 ரூபா சேமிப்பு வட்டியுடன் தற்போதைய வங்கி மீதி. 140,139.35-38.39=140,100.96 ரூபா தற்போதைய வங்கி மீதி. பிடித்து வைத்தல் வரி 38.39 ரூபா.
  15. அமெரிக்க அதிபர் ட்ரம்பினதும், ஈரான் இராணுவ அதிகாரி இப்ராஹிம்மினதும் ஒரே நிலைப்பாடு பெரும் அழிவையன்றி வேறு எதையுமே கொண்டு வரப் போவதில்லை. ஈரானும் இந்தச் சண்டையில் தோற்று சரண்டையப் போவதில்லை, அமெரிக்கா அல்லது இஸ்ரேலோ தோற்கப் போவதும் இல்லை. இங்கு எவரும் வெல்லப் போவதும் இல்லை. ஈரான் மக்களே மிக அதிகமாகப் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். அடுத்ததாக வளைகுடா நாடுகள். பின்னர் சுயமாக எண்ணெய் வளமில்லாத உலக நாடுகள் அதிகமாக பாதிக்கப்படுகின்றன.
  16. "சர்க்கஸில் சேர்க்க முயன்றார்கள்" - தடைகளைத் தாண்டி வெற்றி பெற்ற ஒரு மருத்துவரின் கதை... இவர் குஜராத்தைச் சேர்ந்த கணேஷ் பாரியா. இவர் 25 வயதான மருத்துவர், 3 அடி உயரம் கொண்டவர். தனது உயரத்தால் ஏற்பட்ட பல தடைகளைத் தாண்டி, MBBS படித்துள்ளார். இந்தத் தொகுப்பு அவரது தன்னம்பிக்கைப் பயணத்தை விவரிக்கிறது. #கணேஷ்பாரியா #மருத்துவர் - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
  17. பாலையடிவட்டை இராணுவ முகாம் விடுவிப்பு ; நேரடியாக சென்று பார்வையிட்டார் சாணக்கியன்.எம்.பி Published By: Digital Desk 3 03 Apr, 2026 | 03:53 PM மட்டக்களப்பு மாவட்டம் போரதீவூபற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பாலையடிவட்டை கிராமத்தில் அமைந்துள்ள பொதுச் சந்தைக் கட்டடத் தொகுதியில் சுமார் 25 வருடங்களுக்குமேலாக இலங்கை இராணுவம் கையகப்படுத்தி முகாமிட்டிருந்துவந்தது. இந்த பொதுச்சந்தைக் கட்டடத் தொகுதியில் முகாமிட்டிருந்த இராணுவத்தினர் தற்போது அவ்விடத்திலிருந்து வெளியேறி அக்காணியை விடுவித்துள்ளனர். அவ்விடத்தை வியாழக்கிழமை மாலை (02) மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் மற்றும் பிரதேச சபைகளின் தவிசாளர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், அப்பகுதி கிராம மக்கள் என பலரும் நேரடியாகச் சென்று பார்வையிட்டிருந்தனர். இந்நிலையில், இவ்விடயம் தொடர்ச்சியாக பாராளுமன்ற அமர்வுகளிலும், பாதுகாப்பு அமைச்சின் விசேட கூட்டங்களிலும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் பெரும் முயற்சியை மேற்கொண்டு வந்திருந்தார். இந்த காணி இராணுவத்தினரிடமிருந்து விடுவிக்கப்பட்டதற்கு, பாதுகாப்பு அமைச்சுக்கும், ஜனாதிபதிக்கும் நன்றிகளை தெரிவிக்கின்றோம், தாமும் தமது பிரதேச சபையினை பொறுப்பேற்று இரண்டாவது சபை அமர்வின் பிரேரணைகளை ஜனாதிபதிக்கும் பாதுகாப்பு அமைச்சுக்கும் அனுப்பியிரந்தோம் என இதன்போது போரதீவுபற்று பிரதேச சபை தவிசாளர் விமலநாதன் மதிமேனன் தெரிவித்தார். இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்,போரதீவுபற்று பிரதேசசபை தவிசாளர் விமலநாதன் மதிமேனன், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ், மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள், அப்பகுதி கிராம மக்கள் எனப்பலரும் பிரன்னமாகியிருந்தமை இன்போது பிரசன்னமாகியிருந்தனர். https://www.virakesari.lk/article/242651
  18. 'இரானில் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்க போர் விமானம்' - இதுவரை தெரிந்தது என்ன? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,F-15 போர் விமானம் (சித்தரிப்புப்படம்) 3 ஏப்ரல் 2026, 15:17 GMT புதுப்பிக்கப்பட்டது 21 நிமிடங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள் (இந்த செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது) இரான் வான்வெளியில் அமெரிக்க போர் விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தென் இரானில் வீழ்ந்ததாகக் கூறப்படும் அமெரிக்க F-15 போர் விமானத்தில் இருந்த ஒருவர் மீட்கப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் பிபிசியின் அமெரிக்க கூட்டு நிறுவனமான சிபிஎஸிடம் உறுதிப்படுத்தியுள்ளனர். அந்த நபர் அமெரிக்க படையினரால் மீட்கப்பட்டார் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்தநிலையில் தேடுதல் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. விமானத்தில் எத்தனை பேர் இருந்தனர் என்பது தற்போது தெரியவில்லை. இந்த சம்பவம் பற்றி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிடம் விளக்கமளித்ததாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. சமூக ஊடகங்களில் வெளியான சில படங்களை சிபிஎஸ் சரிபார்த்துள்ளது. அவற்றில், எரிபொருள் நிரப்பும் விமானமும் இரண்டு ஹெலிகாப்டர்களும் குஸெஸ்தான் மாகாணத்தின் மேல் தாழ்வாக பறப்பது காணப்படுகிறது. இது தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கை போன்று உள்ளது. இந்நிலையில், இந்த விமானத்தை இரான் படைகள் சுட்டு வீழ்த்தியதாக அந்த நாட்டின் அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அதிகம் படிக்கப்பட்டது மலிவு டிரோன்கள் மூலம் வளைகுடா நாடுகளுக்கு இரான் ஏற்படுத்தும் மறைமுக ஆபத்து என்ன? 'வளைகுடா வாழ முடியாத இடமாக மாறும் அபாயம்' - குவைத் தாக்குதல் எச்சரிக்கும் ஆபத்து ஹோர்மூஸ் நீரிணையை 'திறக்க' போர் கப்பல்கள் ஏன் அனுப்பப்படவில்லை? வளைகுடா நாடுகள் பிளவுகளை மறந்து இரானுக்கு எதிராக ஒன்றிணையுமா? End of அதிகம் படிக்கப்பட்டது படக்குறிப்பு,மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள விமானங்கள் இதுவரை தெரிந்தது என்ன? இத்தகவல் முதலில், இரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படையுடன் தொடர்புடைய தாஸ்னிம் செய்தி நிறுவனம் மூலம் வெளியிடப்பட்டது. அதில், அமெரிக்கா தனது விமானி ஒருவரை தேடி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் ராய்ட்டட்ஸ், நியூ யார்க் டைம்ஸ் போன்ற சர்வதேச ஊடகங்களும், அமெரிக்க அதிகாரியை மேற்கோள் காட்டி இதே தகவலை வெளியிட்டுள்ளன.ஆனால், அந்த அதிகாரி கூடுதல் விவரங்களை வழங்கவில்லை என்று ராய்ட்டட்ஸ் தெரிவித்துள்ளது. 'விமானியை உயிருடன் பிடிப்பதே முன்னுரிமை' - இரான் இரானின் தெற்கு கோகிலுயே மற்றும் போயர்-அஹ்மத் மாகாணத்தின் ஆளுநர், "வீழ்த்தப்பட்ட எந்தவொரு அமெரிக்கக் குழுவினரையும் உயிருடன் பிடிப்பதே தங்களது முன்னுரிமை" என்று கூறுகிறார். "எதிரிப் படைகளைப் பிடிப்பதில் அல்லது கொல்வதில் வெற்றி பெறுபவர்கள், ஆளுநர் அலுவலகத்தால் சிறப்பாகப் பாராட்டப்படுவார்கள்," என்று அவர் கூறியதாக ஐஎஸ்என்ஏ செய்தி முகமையின் செய்தி தெரிவிக்கிறது. இதற்கிடையில், அமெரிக்க 'ஊடுருவல்காரரைக்' கண்டுபிடிப்பவர்களுக்கு அந்த மாகாணத்தின் வர்த்தகர்களால் 10 பில்லியன் டோமன்கள் வெகுமதி நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக இரானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cql70n267reo
  19. விழுந்த விமானம் F-15 என்று இப்பொழுது சொல்லுகின்றார்கள். இரண்டு விமானிகளில் ஒரு விமானியை மீட்டு விட்டதாகவும் இங்கு அமெரிக்காவில் செய்திகளில் போய்க் கொண்டிருக்கின்றது. இரண்டாவது விமானியை தேடிக் கொண்டிருக்கின்றார்கள் என்றும் அதே செய்தியில் இருந்தது. அமெரிக்க மக்களை, முக்கியமாக அதிபர் ட்ரம்பின் முன்யோசனை இல்லாத, ஆபத்தான, தேவையற்ற நடவடிக்கைகளையும், கொள்கைகளையும் நிபந்தனை இன்றி ஆதரித்து வரும் அமெரிக்க மஹா குழுமத்தைச் சேர்ந்தவர்களை, இந்த நிகழ்வு சிறிதாவது அசைத்துப் பார்க்கும் என்று நம்புகின்றேன்.
  20. ஜேர்மனில பொலீஸ் வேலையும் ஆபத்து தான் போல.
  21. இரான் தொழிநுடட்பம் / தந்திரோபாயத்தை சோதனை செய்வது போன்றே தோற்றம் இருக்கிறது. இரான் செய்வது என்று சில ஆய்வாளர் சொல்லுவது, வானில் சில தானியங்கி ஏவுகணை / வெடிபொட்களால் (இவை வானில் உலாவித்ததிரியும்) உருவாக்கப்படும் கொலைச் சங்கிலியும் (kill chain), அதனால் உருவாகும் பொறியும். (து 25% அளவில் வேலை செய்தாலே போதும்.)
  22. மத்திய கிழக்கில் இருந்த ஆகப் பெரிய பாலத்தை அமெரிக்க குண்டு வீசி தகர்த்த காணொளியை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூட நேற்று பகிர்ந்திருந்தார். ஈரானிய அப்பாவி மக்களுக்கு ஏன் இப்படி ஒரு கொடுமை நடந்து கொண்டிருக்கின்றது என்ற ஏக்கத்துடனும், அதே நேரத்தில் எதுவும் செய்ய முடியாத வருத்தத்துடனுமே இரவு போனது. விடியும் போது அமெரிக்காவின் ஒரு விமானம் வீழ்ந்து விட்டது என்று செய்தியில் இருந்தது. இப்பொழுதாவது அமெரிக்கா இந்த தேவையற்ற தாக்குதல்களை நிற்பாட்டிக் கொள்ளலாம். இனி இழப்பதற்கு எதுவுமே இல்லை, எது வந்தாலும் வரட்டும் என்று ஒரு ஓர்மத்துடன் நிற்கும் மக்கள் முன் இந்த வல்லரசுகள் ஒன்றுமேயில்லை. அந்த மக்களை இந்த வல்லரசுகள் கற்காலத்துக்கு அனுப்பலாம், ஆனால் அப்பொழுது கூட அவர்கள் அங்கிருக்கும் கற்களின் துணயுடன் போரடியே அழிவார்கள். அந்த மக்களும், எதிர்த்து நிற்கும் அவர்களின் அரச நிர்வாகமும், அது எத்தகைய மக்கள் விரோத கொள்கைகளைக் கொண்டிருந்தாலும், இங்கு வல்லவன் வகுத்தது மட்டுமே பாதை இல்லை என்னும் ஒரு நம்பிக்கையை இந்த உலகுக்கு கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். ஏற்கனவே உக்ரேன் மக்களும், உக்ரேன் அரசும் கூட இதை உலகுக்கு உணர்த்திக் கொண்டிருக்கின்றார்கள்.
  23. அமெரிக்காவின் இரண்டாவது F-35 போர் விமானத்தை சுட்டு வீழ்த்திவிட்டோம்: ஈரான் அமெரிக்காவின் F-35 போர் விமானம் | கோப்புப் படம் மோகன் கணபதி Updated on: 03 Apr 2026, 3:05 pm 1 min read தெஹ்ரான்: அமெரிக்காவின் மிகவும் மதிப்புமிக்க போர் விமானங்களில் ஒன்றான F-35 விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக தெரிவித்துள்ள ஈரான், அந்த விமானத்தில் இருந்த பைலட் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்றும் கூறியுள்ளது. இது தொடர்பாக ஈரானின் மெஹர் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், மத்திய ஈரானில் பறந்த அமெரிக்காவின் ஐந்தாம் தலைமுறை F-35 ரக போர் விமானம், ஈரான் விமானப் படையின் புதிய வான் பாதுகாப்பு அமைப்பு மூலம் தாக்கப்பட்டு வீழ்த்தப்பட்டது. இந்த தாக்குதலுக்குப் பிறகு விமானம் பலத்த சத்தத்துடன் கீழே விழுந்தது. அப்போது ஏற்பட்ட பெரு வெடிப்பைக் கருத்தில் கொண்டால், விமானி உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை மும்பையில் உள்ள ஈரான் தூதரகமும் உறுதிப்படுத்தி இருக்கிறது. அது குறித்த எக்ஸ் பதிவில், ‘எதிரியின் மற்றொரு F-35 விமானம் நமது உள்நாட்டு பாதுகாப்பு அமைப்புகளால் தாக்கப்பட்டு வீழ்த்தப்பட்டது. ஈரான் ஒரு வலிமையான சக்தி’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, கடந்த மார்ச் 19-ம் தேதி அமெரிக்காவின் F-35 விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியது. இத்தகைய போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய உலகின் முதல் நாடு தாங்கள்தான் என அப்போது ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், அமெரிக்காவின் இரண்டாவது F-35 போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. இதனிடையே, குவைத்தில் உள்ள மினா அல் அஹ்மதி எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை ஈரானின் ஆளில்லா விமானங்கள் தாக்கின. இதனை உறுதி செய்த குவைத் அரசுக்குச் சொந்தமான குவைத் பெட்ரோலியம் கார்பரேஷன், இந்த தாக்குதலால் அங்கு பலத்த தீ விபத்து ஏற்பட்டதாகவும், தீயைக் கட்டுக்குள் கொண்டுவர தீயணைப்புக் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும், இந்த விபத்தால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது. இந்த சுத்திகரிப்பு நிலையம் ஏற்கனவே பலமுறை தாக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் தாக்கப்பட்டுள்ளது. இதனிடையே, மேற்காசிய மோதலுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என்று ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குத்தரேஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக ஊடக பதிவில், ‘‘எனது செய்தி தெளிவானது. மனிதர்களுக்கு அளவற்ற துன்பத்தை விளைவித்து, பொருளாதார பேரழிவுக்கான விளைவுகளைத் தூண்டும் இந்த போரை அமெரிக்காவும் இஸ்ரேலும் நிறுத்த வேண்டும். போரை நிறுத்த இதுவே சரியான தருணம். அதேபோல், ஈரான் தனது அண்டை நாடுகளை தாக்குவதை நிறுத்த வேண்டும். தலைவர்கள் அழிவை விடுத்து, உரையாடலைத் தேர்ந்தெடுக்கும்போது மோதல்கள் முடிவுக்கு வரும். அதை தேர்வு செய்வதற்கான தருணம் இன்னமும் இருக்கிறது. அதை இப்போதே செய்ய வேண்டும்’’ என தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் இரண்டாவது F-35 போர் விமானத்தை சுட்டு வீழ்த்திவிட்டோம்: ஈரான்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.