Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

stream_title_14

Showing all content posted in for the last 365 days.

This stream auto-updates

  1. Past hour
  2. இணையவழி மோசடி கும்பல் மீது சுற்றிவளைப்பு: பல சீனர்கள் உள்ளிட்ட 134 வெளிநாட்டவர்கள் கைது Published By: Digital Desk 3 17 Mar, 2026 | 05:06 PM ஒழுங்கமைக்கப்பட்ட இணையவழி மோசடி வலையமைப்பை குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, அனுராதபுரம் மற்றும் மிஹிந்தலை பகுதிகளில் 134 வெளிநாட்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவல்களின் அடிப்படையில், இலங்கை இராணுவ புலனாய்வு பிரிவினரும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளும் இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். இந்த நடவடிக்கையின் போது, இரு பகுதிகளிலும் அமைந்திருந்த ஐந்து தங்குமிட விடுதிகளில் ஒருங்கிணைந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இவ்விடுதிகளில் தங்கியிருந்து இணையவழி மோசடி செயல்பாடுகளில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டோரில் 126 பேர் சீன நாட்டவர்கள் எனவும் 4 பேர் மியான்மர் நாட்டவர்கள் எனவும் 4 பேர் தாய்வான் நாட்டவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, மோசடி நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பல மடிக்கணினிகள், கையடக்கத்தொலைபேசிகள் மற்றும் தொழில்நுட்ப உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட பொருட்கள் மேலதிக விசாரணைகளுக்காக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. https://www.virakesari.lk/article/241211
  3. யாழ். மத்திய அணி வீரர் நிதர்சன் 9ஆம் இலக்கத்தில் இரட்டைச் சதம் குவித்து வரலாறு படைத்தார் Published By: Vishnu 17 Mar, 2026 | 08:37 PM (நெவில் அன்தனி) இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சங்கத்தினால் நடத்தப்பட்டுவரும் இரண்டாம் பிரிவு பி அடுக்கு கிரிக்கெட் போட்டி ஒன்றில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி வீரர் ஜேசுதாசன் நிதர்சன் இரட்டைச் சதம் குவித்து சாதனை படைத்தார். நீர்கொழும்பு புனித பேதுருவானவர் கல்லூரி அணிக்கு எதிராக யாழ். மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் தனது அணி மிகவும் இக்கட்டான நிலையில் இருந்தபோது 9ஆம் இலக்க வீரராக களம் புகுந்த நிதர்சன், எதிரணி பந்துவீச்சாளர்களை சிதறடித்து இரட்டைச் சதம் குவித்தார். இதன் மூலம் இரண்டாம் பிரிவுக்கான பி அடுக்கு பாடசாலை கிரிக்கெட் போட்டி ஒன்றில் 9ஆம் இலக்கத்தில் இரட்டைச் சதம் குவித்த முதலாவது வீரர் என்ற அரிய சாதனையை நிலைநாட்டினார். அத்துடன் இந்த சாதனையை நிலைநாட்டிய முதலாவது வட மாகாண வீரர் என்ற பெருமையையும் நிதர்சன் பெற்றுக்கொண்டார். இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ். மத்திய கல்லூரி முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 369 ஓட்டங்களைக் குவித்தது. போட்டியின் ஒரு கட்டத்தில் யாழ். மத்திய கல்லூரி அணி 8 விக்கெட்களை இழந்து 168 ஓட்டங்களைப் பெற்று திக்குமுக்காடிக்கொண்டிருந்தது. அந்த சந்தர்ப்பத்தில் 9ஆம் இலக்க வீரராக களம் நுழைந்த நிதர்சன், அசாத்திய திறமையுடன் துடுப்பெடுத்தாடி நீர்கொழும்பு புனித பேதுருவானவர் அணியின் பந்துவீச்சாளர்களை விளாசி அடித்து இரட்டைச் சதம் குவித்தார். ஜேசுதாசன் நிதர்சன் 119 பந்துகளை எதிர்கொண்டு 23 பவுண்டறிகள், 12 சிக்ஸ்களுடன் 200 ஓட்டங்களைக் குவித்து அசத்தினார். அத்துடன் 9ஆவது விக்கெட்டில் பத்மகுமாரன் நவிந்தனுடன் பெறுமதிமிக்க 196 ஓட்டங்களை நிதர்சன் பகிர்ந்தமை விசேட அம்சமாகும். நவிந்தன் 48 ஓட்டங்களைப் பெற்றார். ஜேசதாசன் நிதர்சன் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்தவராவார். மாங்குளம் மத்திய கல்லூரியில் கல்வி பயின்ற நிதர்சன், யாழ். இந்து கல்லூரியின் பழைய மாணவர்கள் சங்கத்தின் லண்டன் கிளையினரின் புலமைப் பரிசில் திட்டத்தின் கீழ் யாழ். மத்திய கல்லூரியில் இரண்டு வருடங்களுக்கு முன்னர் இணைந்து கல்வி பயின்று வருகின்றார். அப் போட்டியில் நீர்கொழும்பு புனித பேதுருவானவர் அணி முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 78 ஓட்டங்களையும் பலோ ஒன்னில் இரண்டாவது இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 126 ஓட்டங்களையும் பெற்றது. எண்ணிக்கை சுருக்கம் யாழ். மத்திய கல்லூரி 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 369 (ஜேசுதாசன் நிதர்சன் 200, பத்மகுமாரன் நவிந்தன் 48, கபிலன் அமலன் 27, யசிறு ஜனஞ்சய 87 - 5 விக்., அப்துல் ரஹுமான் 169 - 4 விக்.) நீர்கொழும்பு புனித பேதுருவானவர் 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 78 (சுபசன் டிலூக்க 33, முரளி திசோன் 17 - 3 விக்., அன்ரன்ரேஷான் அபிஷேக் 43 - 3 விக்., வெலன்டைன் ஹெரிஸ் 7 - 2 விக்.) புனித பேதுருவானவர் (பலோ ஒன்) 2ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 126 (ரேஷான் லீமா 53, அப்துல் ரஹுமான் 21, முரளி திசோன் 67 - 8 விக்., ஜெயசீலன் ஜெனோஷன் 17 - 2 விக்.) https://www.virakesari.lk/article/241232
  4. 'இரான் ஆட்சியின் தலைவரை' கொன்றதாக கூறும் இஸ்ரேல் - என்ன நடக்கிறது? பட மூலாதாரம்,Reuters படக்குறிப்பு,அலி லரிஜானி 17 மார்ச் 2026, 10:28 GMT புதுப்பிக்கப்பட்டது 4 நிமிடங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள் இரானின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் தலைவர் அலி லரிஜானி இஸ்ரேல் நடத்திய ராணுவ தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேலின் பாதுகாப்புத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். லரிஜானி கொல்லப்பட்டாரா அல்லது காயமடைந்தாரா என்பதை இரான் உறுதிப்படுத்தவில்லை. ஆனால், இதுகுறித்த புதிய தகவல் விரைவில் வெளியிடப்படும் என்று அந்நாட்டு அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த நிலையில் இரானில் அரசுக்கு எதிரான போராட்டங்களைக் கட்டுப்படுத்திய நடவடிக்கைகளில் ஈடுபட்ட இரானின் துணை ராணுவப் படையான பசிஜ் பிரிவின் தளபதியை தனது விமானப்படை கொன்றதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. பசிஜ் பிரிவின் தளபதி திங்கட்கிழமை அன்று டெலகிராமில் வெளியிட்ட பதிவில், பசிஜ் பிரிவின் தளபதி கொலாம்ரெசா சொலெய்மானியை இலக்கு வைத்ததாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. கடந்த ஆறு ஆண்டுகளாக புரட்சிகர காவல்படையுடன் தொடர்புடைய ஆயுதக் குழுவை இவர் தலைமை தாங்கியதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இது தொடர்பாக இரானிய ஊடகங்களில் எந்தச் செய்தியும் வெளிவரவில்லை. மூத்த ராணுவ அதிகாரி லரிஜானியிடமிருந்து விரைவில் செய்தி ஒன்று வரும் என இரானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தஸ்னிம் மற்றும் மெஹ்ர் என்கிற இரண்டு இரானிய ஊடகங்கள் இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளன. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,அலி லரிஜானி "இரானில் உள்ள பயங்கரவாத மற்றும் ஒடுக்குமுறை அரசின் தலைமையை தொடர்ந்து இலக்கு வைக்குமாறு இஸ்ரேலிய ராணுவத்திற்கு பிரதமரும் நானும் அறிவுறுத்தியுள்ளோம்'' என்று இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்துள்ளார். லரிஜானி மற்றும் சொலெய்மானி கொல்லப்பட்டதாக பரவும் செய்திக்கு இரான் தற்போது வரை விளக்கம் எதுவும் அளிக்கவில்லை. இஸ்ரேல் மீது கூடுதல் ஏவுகணைகளை இரான் செலுத்தியுள்ளதாகக் கூறும் இஸ்ரேல் ராணுவம், அதன் பாதுகாப்பு அமைப்பு அவற்றை இடைமறித்து வருவதாகத் தெரிவித்துள்ளது. இதற்கிடையே "ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளை" நோக்கி இரானிலிருந்து ஏவுகணைகள் செலுத்தப்பட்டதாக இரானிய அரசு ஊடகம் தெரிவிக்கிறது. அமெரிக்கா - இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இரானின் அதிஉயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி, கடந்த மாத இறுதியில் கொல்லப்பட்டார். ஆயதுல்லா அலி காமனெயி கொல்லப்பட்ட பிறகு, இரான் ஆட்சியின் தலைவராக அலி லரிஜானி செயல்பட்டார் என இஸ்ரேல் ராணுவம் கூறுகிறது. இஸ்ரேலும் அண்டை நாடுகளுக்கும் எதிரான மோதலை அவர் வழிநடத்தினார் என்றும் இஸ்ரேல் கூறுகிறது. யார் இந்த அலி லரிஜானி? இரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செல்வாக்கு மிக்க செயலாளர்தான் அலி லரிஜானி 2025-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இவர் அதிபர் மசூத் பெசெஷ்கியனால் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளராகவும், அதி உயர் தலைவராக இருந்த ஆயதுல்லா அலி காமனெயியின் கவுன்சில் பிரதிநிதியாகவும் நியமிக்கப்பட்டார். மறைந்த அதி உயர் தலைவருக்கு ஆலோசகராகவும் இவர் இருந்தார் என இரானிய ஊடகங்களில் இவரைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளன. மே 2008 முதல் மே 2020 வரை 12 ஆண்டுகள் இரானிய நாடாளுமன்றத்தின் அவைத் தலைவராகவும் இருந்துள்ளார். அவைத் தலைவராக ஆவதற்கு முன்பு 2005 முதல் 2007 வரை இரானின் முதன்மை அணுசக்தி பேச்சுவார்த்தையாளராக அவர் இருந்துள்ளார். இவரின் சகோதரர் சாதெக் லரிஜானி இஸ்லாமியக் குடியரசில் மற்றுமொரு செல்வாக்கு மிக்க நபராக உள்ளார். லரிஜானியின் 'செய்தியை' வெளியிட்ட இரானிய ஊடகங்கள் இரானிய செய்தி ஊடகங்கள் மற்றும் அலி லரிஜானியின் டெலகிராம் மற்றும் எக்ஸ் கணக்குகளில், அவர் கைப்பட எழுதியதாக கூறப்படும் செய்தி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் எந்த தேதியும் குறிப்பிடப்படவில்லை என்றாலும் அந்நாட்டின் அரசு ஊடகங்கள் அவை இன்று வெளியானது எனத் தெரிவிக்கின்றன. அந்தச் செய்தி இரான் இஸ்லாமியக் குடியரசின் கடற்படை வீரர்களை புகழ்கிறது. முன்னதாக இரான் கடற்படையின் ஐஆர்ஐஎஸ் டேனா போர்க்கப்பலில் கொல்லப்பட்டவர்களின் இறுதிச் சடங்கு இன்று நடைபெற உள்ளது. "இரானியர்களுக்கு அரசை நீக்குவதற்கான வாய்ப்பு" - நெதன்யாகு இரானிய அரசை நீக்குவதற்கான வாய்ப்பை இரானிய மக்களுக்கு வழங்கும் நம்பிக்கையில், அதனை இஸ்ரேல் பலவீனப்படுத்தி வருவதாக அந்நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இரானிய அரசின் முக்கிய நபரான அலி லரிஜானி கொல்லப்பட்டதாகக் கூறி அவர் வெளியிட்ட காணொளியில் இந்தச் செய்தியை தெரிவித்திருந்தார். "அது ஒரே நேரத்தில் நடக்காது, அது எளிதாகவும் நடக்காது. ஆனால் நாம் நிலைத்திருந்தால், அவர்களின் விதியை அவர்கள் தங்களின் சொந்த கரங்களில் எடுப்பதற்கான வாய்ப்பை நாம் வழங்குவோம்," என தனது உரையில் அவர் கூறியிருந்தார். முன்னதாக, லரிஜானி மற்றும் சொலெய்மானி இல்லாமல் "இரானியர்கள் பாதுகாப்பாக இருப்பார்கள்" என இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் கிடியோன் சார் தெரிவித்திருந்தார். இந்தச் செய்திகளை இரான் தற்போது வரை உறுதி செய்யவில்லை. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cvgj2y41kq9o
  5. எல்லாவற்றையும் ஐரோப்பிய, வட அமெரிக்க தரத்திற்கே இலங்கையில் கொண்டு வரக் கூடிய இயலுமை இருக்குமாக இருந்தால், நாங்களெல்லாம் ஏன் இங்கே இருக்கிறோம்? வாகன ஓட்டிகள் திருந்த வேண்டும், அப்படித் திருந்தும் வரை சைக்கிளோடுவோர் உயிரைப் பணயம் வைத்துப் பயணிக்க வேண்டும்!
  6. அப்படியானால் திருந்த வேண்டியது வண்டி ஓட்டிகளா சைக்கிள் ஓட்டிகளா? ஐரோப்பிய நாடுகளில் ஓடாத வாகனங்களா இலங்கையில்,????
  7. போரில் டிரம்புக்கு துணை நிற்க அமெரிக்க கூட்டாளிகள் ஏன் முன்வரவில்லை? பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் பால் ஆடம்ஸ் பிபிசி 2 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள் தமது இரு பதவிக்காலத்திலும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் நேட்டோ கூட்டாளிகளை விமர்சிப்பதற்கோ ஏன் தாக்குவதற்கோ கூட தயங்கியதில்லை. ஆனால், ஹோர்மூஸ் நீரிணையைப் பாதுகாப்பதில் தோல்வியடைவது "நேட்டோவின் எதிர்காலத்திற்கு மிகவும் மோசமானதாக இருக்கும்" என்ற அவரது சமீபத்திய கருத்து, அந்த கூட்டணியின் நோக்கம் குறித்து அவர் கொண்டுள்ள புரிதல் ஏற்கெனவே பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. "நேட்டோ ஒரு... தற்காப்புக் கூட்டணியாக உருவாக்கப்பட்டது," என்று பிரிட்டன் ராணுவத்தின் முன்னாள் தலைமை தளபதி ஜெனரல் சர் நிக் கார்ட்டர் திங்களன்று பிபிசியிடம் தெரிவித்தார். "ஒரு கூட்டாளி நாடு தனது விருப்பப்படி ஒரு போருக்குச் சென்றுவிட்டு, மற்ற அனைவரும் அதைப் பின்தொடர வேண்டும் என்று கட்டாயப்படுத்தும் வகையில் இந்தக் கூட்டணி வடிவமைக்கப்படவில்லை," என்று அவர் கூறினார். "நாம் சேர விரும்பிய நேட்டோ இதுதானா என்பதில் எனக்கு உறுதியாகத் தெரியவில்லை". இரண்டு மாதங்களுக்கு முன்புதான் நேட்டோ உறுப்பினரான ஒரு நாட்டின் இறையாண்மைக்கு உட்பட்ட கிரீன்லாந்து பகுதிக்கு உரிமை கோரிய ஓர் அதிபரிடமிருந்து வந்துள்ள இந்த சமீபத்திய கருத்துக்களில் ஒரு சிறிய முரண் இருக்கிறது. பட மூலாதாரம்,Getty Images டிரம்புக்கு நேரடி மறுப்பு சில பதில்கள் மிகவும் நேரடியாக இருந்ததற்கு இது ஒருவேளை காரணமாக இருக்கலாம். ஜெர்மனியில், அரசு செய்தித் தொடர்பாளர் ஒருவர், இரான் உடனான போருக்கும் "நேட்டோவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை" என்றார். அதே நேரத்தில் பாதுகாப்பு அமைச்சர் போரிஸ் பிஸ்டோரியஸ், ஐரோப்பாவின் கடற்படைகள் மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற கருத்தை ஏளனம் செய்வது போலத் தெரிந்தது. "வலிமைமிக்க அமெரிக்கக் கடற்படையால் செய்ய முடியாத எதை ஒரு சில ஐரோப்பியப் போர்க்கப்பல்களிடமிருந்து டிரம்ப் எதிர்பார்க்கிறார்?" என்று அவர் கேட்டார். "இது எங்களது போர் அல்ல. இதை நாங்கள் தொடங்கவில்லை". ஆனால், இவை எதுவும் வளைகுடா நெருக்கடிக்கு ஒரு தீர்வு காண வேண்டிய அவசரமான மற்றும் வளர்ந்து வரும் தேவையை மறைக்கக்கூடாது. இந்தியா மற்றும் சீனா போன்ற நட்பு நாடுகளுக்கு செல்லும் ஒரு சில கப்பல்களைத் தவிர, ஹோர்மூஸ் நீரிணையை இரான் திறம்பட தடுத்து நிறுத்தியுள்ளது. இது மேற்கத்திய நாடுகளின் அரசுகளை ஒரு தீர்வைத் தேட வைத்துள்ளது. இது டிரம்ப் போருக்குச் செல்ல எடுத்த முடிவால் தூண்டப்பட்ட நெருக்கடியாக இருக்கலாம், ஆனால் உலகப் பொருளாதாரத்தின் மீதான பாதிப்புகள் மோசமடைவதற்கு முன்பு இதை விரைவாகச் சரிசெய்ய வேண்டிய அவசியம் உள்ளது. ஆனால் இதற்கு விரைவான தீர்வு இல்லை என்பது ஏற்கனவே தெளிவாகிவிட்டது. திங்களன்று செய்தியாளர் கூட்டத்தில் பேசிய பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டார்மர், அமெரிக்கா, ஐரோப்பிய மற்றும் வளைகுடா கூட்டாளிகளுடன் ஒரு "நடைமுறைப்படுத்தக்கூடிய திட்டத்தை" உருவாக்குவதற்கான உரையாடல்கள் நடந்து வருகின்றன என்றும், ஆனால் நாம் இன்னும் "முடிவெடுக்கும் கட்டத்தை எட்டவில்லை" என்றும் கூறினார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பதவியேற்றதிலிருந்து, நேட்டோ கூட்டாளிகளுடனான அமெரிக்காவின் உறவுகள் அதிகம் விரிசலடைந்துள்ளன. தானியங்கி கண்ணி வெடி கண்டுபிடிக்கும் அமைப்புகள் ஏற்கனவே அந்தப் பகுதியில் இருப்பதாக பிரதமர் கியர் ஸ்டார்மர் குறிப்பிட்டார். கண்ணிவெடி எதிர்ப்பு நடவடிக்கைக் கப்பலான ஹெச்எம்எஸ் மிடில்டன் பெரிய அளவிலான பராமரிப்புக்காக பிரிட்டன் திரும்பிய நிலையில், பல தசாப்தங்களில் முதல் முறையாக அந்தப் பகுதியில் பிரிட்டிஷ் கண்ணிவெடி அகற்றும் கப்பல் எதுவும் இல்லை. அதற்கு பதிலாக, ராயல் நேவி (பிரிட்டன் கடற்படை) புதிதாக உருவாக்கப்பட்ட டிரோன்களை வழங்கத் திட்டமிட்டுள்ளது. இவை ஊழியர்களை ஆபத்தில் சிக்க வைக்காமல் கண்ணிவெடிகளை கண்டறிந்து செயலிழக்கச் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஒரு காலத்தில் கிட்டத்தட்ட அனைத்து கடற்படைகளின் முக்கியப் பணியாக இருந்த கண்ணிவெடிகளை அகற்றுவது, நீண்ட காலத்திற்கு முன்பே முன்னுரிமைப் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுவிட்டது. ராயல் நேவி முன்னாள் கமாண்டர் டாம் ஷார்ப், சமீபத்திய பிரிட்டிஷ் தொழில்நுட்பங்கள் இன்னும் போர்க்களத்தில் சோதிக்கப்படவில்லை என்றார். "அது வேலை செய்கிறதா இல்லையா என்பது அடுத்த சில வாரங்களில் நமக்குத் தெரிந்துவிடும்," என்று அவர் பிபிசியிடம் கூறினார். மேற்கத்திய நாடுகள் கடைசியாக ஒரு பெரிய கடல்வழி கண்ணிவெடிகள் அகற்றும் நடவடிக்கையை மேற்கொண்டது 1991-இல் என்று ஜெனரல் கார்ட்டர் கூறினார். முதல் வளைகுடா போரின்போது இராக் குவைத் கடற்கரை அருகே கண்ணிவெடிகளை வைத்திருந்தது. "அந்த கண்ணிவெடிகளை அகற்ற எங்களுக்கு ஐம்பத்தொரு நாட்கள் ஆனது," என்று அவர் பிபிசியிடம் கூறினார். "எந்தவொரு கடற்படையும் இதற்குத் தேவையான அளவில் முதலீடு செய்யவில்லை, குறிப்பாக அமெரிக்கர்கள் இதில் மிகவும் பின்தங்கியுள்ளனர்". அமெரிக்கக் கடற்படையின் சொந்த அவெஞ்சர்-கிளாஸ் சிறப்பு கண்ணிவெடி அகற்றும் கப்பல்கள் அனைத்தும் சேவையிலிருந்து விலக்கப்படுகின்றன. இவற்றுக்குப் பதிலாக, பல்வேறு ஆளில்லா அமைப்புகளைப் பயன்படுத்தும் இண்டிபெண்டன்ஸ்-கிளாஸ் கப்பல்களை பயன்படுத்தப்படுகின்றன பட மூலாதாரம்,Getty Images இரானுக்கு உள்ள வேறு வழிகள் ஆனால் இது கண்ணிவெடிகளை அகற்றுவது பற்றியது மட்டுமல்ல. இரான் புரட்சிகர காவல் படை ஆயுதம் ஏந்திய வேகப்படகுகள், கடற்படை "தற்கொலை" டிரோன்கள் மற்றும் கடற்கரை ஏவுகணைகள் மூலம் கப்பல் போக்குவரத்தைத் தடுக்கும் திறன் கொண்டது. இரான் செய்தி நிறுவனமான 'ஃபார்ஸ்' வெளியிட்ட சமீபத்திய புகைப்படங்கள், நிலத்தடி சுரங்கங்களில் அதிக எண்ணிக்கையிலான படகுகள் மற்றும் டிரோன்கள் சேமித்து வைக்கப்பட்டிருப்பதைக் காட்டின. இது இரான் நீண்டகாலமாக இத்தகைய ஒரு தருணத்திற்காகத் தயாராகி வருவதைப் காட்டுகிறது. ஹோர்மூஸ் நீரிணை திறப்பது சிறிய வேலை என கூறும் டிரம்ப், அதை செய்வதற்கு இரான் கடற்கரைகளில் தாக்குதல் நடத்த வேண்டியிருக்கும் என கூறினார். "கடற்கரையில் இருக்கும் சில மோசமான நபர்களைத் தட்டி வைப்பவர்களை நான் தேடிக்கொண்டிருக்கிறேன்," என்று அவர் கூறினார். அமெரிக்கா ஏற்கனவே இரான் துறைமுகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடிகளை வைக்கும் படகுகளை இலக்கு வைத்துள்ளது. ஆனால் அமெரிக்காவின் கூட்டாளிகள் பலர் இதைப் பின்பற்றுவதற்கு குறிப்பாக இது தரைப்படையை ஈடுபடுத்துவதை உள்ளடக்கியதாக இருந்தால் தயாராக இருப்பார்களா என்பது கடினம். இவ்வளவு சாத்தியமான ஆபத்துகள் நிறைந்த சூழலில், நாடுகள் இதில் ஈடுபடத் தயங்குவதில் ஆச்சரியமில்லை. அதற்குப் பதிலாக பிரிட்டன் அரசு கூறுவது போல, ஹார்முஸ் ஜலசந்தியைத் திறப்பதற்கான உறுதியான வழியாக 'பதற்றத்தைக் குறைப்பதை' அவர்கள் விரும்புகின்றனர். ஆனால் அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய அதிகாரிகள் இன்னும் சில வாரங்களுக்கு இந்த நடவடிக்கை நீடிக்கக்கூடும் என்று கூறி வருவதால், அது உடனடியாக நடப்பதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன. திட்டம் இல்லை இதற்கிடையில், இந்த முக்கியமான நீர்வழிப்பாதை வழியாக வணிகக் கப்பல்களுக்குப் பாதுகாப்பு வழங்க கூட்டாளிகளைச் சம்மதிக்க வைக்க முடியுமா? "ஹோர்மூஸ் நீரிணையைப் பாதுகாப்பதில் ஜெர்மனி தனது ராணுவத்துடன் பங்கேற்காது," என்று பிஸ்டோரியஸ் திங்களன்று கூறினார். ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கைத் தலைவர் காஜா கல்லாஸ் கூறுகையில், மத்திய கிழக்கில் ஐரோப்பிய ஒன்றியத்தின் கடற்படை நடவடிக்கைகளை விரிவுபடுத்த "தெளிவான விருப்பம்" உள்ளது என்று கூறினார். ஆனால் செங்கடலில் தற்போதுள்ள கடற்படைப் பணியை விரிவுபடுத்த ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு அமைச்சர்கள் மறுத்துவிட்டனர். "இது ஐரோப்பாவின் போர் அல்ல," என்று அவர் மேலும் கூறினார். ஏமனில் இரான் ஆதரவு ஹூத்தி கிளர்ச்சியாளர்களால் கப்பல் போக்குவரத்துக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களைச் சமாளிக்க 2024-இல் 'ஆப்பரேஷன் அஸ்பைடெஸ்' தொடங்கப்பட்டது. ஆனால் இது வெறும் மூன்று போர்க்கப்பல்களை மட்டுமே கொண்ட மிகச்சிறிய முயற்சியாகும். பட மூலாதாரம்,Getty Images ஜெர்மனியின் வெளியுறவு அமைச்சர் ஜோஹான் வேடேபுல், புதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விவாதிப்பதற்கு முன், "இரான் மீதான தங்கள் ராணுவ இலக்குகளை எப்போது அடைவோம் என்று அவர்கள் நினைக்கிறார்கள்" என்பதை இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள விரும்புவதாகத் தெரிவித்தார். முக்கிய ஐரோப்பிய கூட்டாளிகளில், பிரான்ஸ் அதிபர் மக்ரோங் இதில் ஈடுபட அதிக ஆர்வம் காட்டி வருகிறார். கப்பல்களுக்குப் பாதுகாப்பு வழங்கவும், கடல்வழிப் போக்குவரத்தின் சுதந்திரத்தை உறுதிப்படுத்தவும் ஒரு கூட்டணியை அமைக்க முயற்சிப்பதாக அவர் ஒரு வாரத்திற்கு முன்பு கூறினார். ஆனால் மோதலின் "மிகவும் தீவிரமான கட்டம்" முடிந்த பின்னரே இது சாத்தியமாகும் என்று அவர் கூறினார். சில நாட்களுக்குப் பிறகு பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சர் கேத்தரின் வௌட்ரின், ஹோர்மூஸ் நீரிணைக்கு கப்பல்களை அனுப்பும் உடனடித் திட்டங்கள் எதுவும் இல்லை என்றார். ஒரு பாதுகாப்பு நடவடிக்கை எடுப்பது ஆப்ரேஷன் அஸ்பைடெஸை விட மிகவும் சிக்கலானதாக இருக்கும் என்று ஷார்ப் கூறினார். ஏனெனில் அச்சுறுத்தல்கள் வான்வழி, மேற்பரப்பு மற்றும் நீருக்கடியில் என மூன்று திசைகளிலிருந்தும் வருகின்றன. "ஹூத்திகளைப் போல வான்வழி அச்சுறுத்தல் மட்டுமே இங்கில்லை. இரான் விஷயத்தில் மூன்று அச்சுறுத்தல்களும் உள்ளன, அவை ஏவப்படுவதற்கு முன்பே நீங்கள் அவற்றைச் சுட வேண்டும். அது எப்போதும் சாத்தியமில்லை," என்று அவர் கூறினார். தற்போது, டிரம்ப்பின் சற்றே அதிர்ச்சியடைந்த கூட்டாளிகள் "இரானில் ஈடுபாடு" என்று பெயரிடப்பட்ட கதவுக்கு வெளியே தயக்கத்துடன் நின்று ஒருவரையொருவர் பார்த்துக் கொள்கிறார்கள். ஆனால் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஒரு தீர்வாகாது என்பதையும் அவர்கள் உணர்ந்துள்ளனர். இந்தத் தீர்வு "முடிந்தவரை பல கூட்டாளிகளை" உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்று பிரிட்டன் பிரதமர் கூறினார். ஆனால் ஆபத்தான பணியில் ஈடுபடுவதற்கு முன்பு பிரிட்டன் ராணுவ வீரர்களுக்கு முக்கியமான உறுதிமொழிகள் தேவைப்படுகின்றன. "குறைந்தபட்சம், ஒரு சட்டபூர்வமான அடிப்படையிலும், சரியான முறையில் சிந்தித்து வகுக்கப்பட்ட திட்டத்துடன்தான் செய்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ள அவர்களுக்கு உரிமை உள்ளது ". தற்போதைய நிலையில், அத்தகைய ஒரு திட்டம் நடைமுறையில் இல்லை. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/czx49znzgrdo
  8. அது அந்தக் காலம் கந்தப்பு. அப்ப நீங்கள் சைக்கிளோடிய வீதியில் எத்தனை கார்கள், பஸ்கள், ரிப்பர்களைக் கண்டீர்கள் என்று நினைவிருக்கிறதா? 2012 இலங்கை போன போது நானும் சைக்கிள் தான் ஓடினேன், வவுனியாவில். 2016 இலும் - கொஞ்சம் ஆபத்தாகத் தெரிந்தாலும் - சைக்கிள் ஓடினேன். இந்த ஆண்டு போகிறேன், ஆனால் "சைக்கிள் ஓட முயற்சிக்காதே" என்று தான் ஆலோசனைகள் வருகின்றன! அந்தளவுக்கு வீதிகள் வாகனங்களுக்காக செம்மை செய்யப் பட்டு, ஓரங்கள் (shoulders) குறுகி சைக்கிள் ஓடுவதை ஏதோ ஆபத்தான செயல் போல மாற்றி வைத்திருக்கின்றன. குறைந்த பட்சம் வவுனியாவில் இது தான் நிலை.
  9. தமிழ் தேசிய முகமூடி அணிந்த றௌடிகளின் சேட்டைகளுக்கெல்லாம் "தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவப் போட்டி" என்ற ஒரே காரணத்தோடு வருவது நிலாந்தனுக்கே ஒரு கலர் கண்ணாடியினூடாகத் தான் எதையும் பார்க்க முடிகிறது எனக் காட்டுகிறது. அம்பிகா சற்குணநாதனை இதே போன்ற தூசணங்களால் திட்டி ஒதுங்க வைத்த போது, சுமந்திரனை அவுசில் வைத்துத் தூசணங்களால் திட்டிய போது, சும்மா ரசித்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்து விட்டு இப்ப வந்து வேசம் போடும் நிலாந்தன் போன்றோர் தான் ஈழத்தமிழர்களின் "சிந்தனைத் தலைவர்கள் - thought leaders" 😎 என்றால், நமக்கு விடிவேயில்லை என்று தான் அர்த்தம்!
  10. இந்துக்களின் அங்குரார்ப்பண ஒருநாள் போட்டியில் யாழ். இந்துவின் வெற்றிக்கு வித்திட்ட பவணன் Published By: Vishnu 17 Mar, 2026 | 08:35 PM (நெவில் அன்தனி) யாழ். இந்து கல்லூரிக்கும் இந்து கல்லூரி கொழும்புவுக்கும் இடையில் பி. சரவணமுத்து ஓவல் சர்வதேச விளையாட்டரங்கில் திங்கட்கிழமை (16) நடைபெற்ற அங்குரார்ப்பண இந்துக்களின் சமர் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் யாழ். இந்து கல்லூரி 87 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. இப் போட்டியில் ஜெகதீசன் பவணன் குவித்த அரைச் தசம் யாழ். இந்துவின் வெற்றிக்கு வித்திட்ட அதேவேளை, விக்கெட் காப்பாளருக்கு பிடிகொடுத்து ஆட்டம் இழந்த அவர் மத்தியஸ்தரின் தீர்ப்புக்கு காத்திராமல் களம் விட்டகன்றதன் மூலம் அனைவருக்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கினார். போட்டியின் 44ஆவது ஓவரில் இந்து கொழும்பு அணித் தலைவர் ராமநாதன் தேஷ்கர் வீசிய பந்து பவணனின் துடுப்பை உராய்ந்தவாறு விக்கெட்காப்பாளர் சுரேஷ் குமார் மிதுஷிகனின் கையுறைகளுக்குள் தஞ்சம் புகுந்தது. பிடியை எடுத்த சூட்டோடு மிதுஷிகன் கேள்வி எழுப்பினார். மத்தியஸ்தர் சந்தேகத்தைத் தீர்த்துக்கொண்டு தீர்ப்பு வழங்கும் முன்னரே ஒய்வறையை நோக்கி பவணன் நடக்கத் தொடங்கிவிட்டார்.Travel Guides & Travelogues இதன் மூலம் சிறந்த வீரருக்கே உரிய நற்பண்பை அவர் வெளிப்படுத்தியதுடன் அனைவரின் பாராட்டையும் சம்பாதித்துக் கொண்டார். இத்தகைய நற்பண்புகளை பாடசாலை கிரிக்கெட்டில் காண்பது மிகவும் அபூர்வமாகும்.Education இதேவேளை, இந்தப் போட்டியில் இந்து கொழும்பு கல்லூரி வீரர் தவக்குமார் சந்தோஷ், தனது இரண்டாவது பந்தை எதிர்கொள்வதற்கு வேண்டுமென்றே நேரத்தை விரயம் செய்ததால் 'டைம்ட் அவுட்' முறையில் ஆட்டம் இழந்தார். அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட யாழ். இந்து கல்லூரி 49.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 220 ஓட்டங்களைக் குவித்தது. ஆரம்ப வீரர் ஜெகதீசன் பவணன் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 105 பந்துகளை எதிர்கொண்டு 6 பவுண்டறிகளுடன் 81 ஓட்டங்களைப் பெற்று 7ஆவதாக ஆட்டம் இழந்தார். இதனிடையே பவணன் தனது சக வீரர்கள் மூவருடன் அரைச் சத இணைப்பாட்டங்களில் பங்களிப்பு செய்து அணியைப் பலப்படுத்தினார். 2ஆவது விக்கெட்டில் ரவிந்திரன் ஆதித்தியனுடன் 55 ஓட்டங்களையும் 5ஆவது விக்கெட்டில் சிவலோஜன் சிவகஜீசனுடன் 56 ஓட்டங்களையும் 6ஆவது விக்கெட்டில் தினேஷ்ராமன் பிரீத்திகனுடன் 52 ஓட்டங்களையும் பவணன் பகிர்ந்தார். சிவலோஜன் சிவகஜீசன் 24 ஓட்டங்களையும் ரவிந்திரன் ஆதித்தியன் 23 ஓட்டங்களையும் தினேஷ்ராமன் பிரீத்திகன் 20 ஓட்டங்களையும் சுதர்சன் அபிவர்ணன் ஆட்டம் இழக்காமல் 18 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் அணித் தலைவர் ராமநாதன் தேஷ்கர் 37 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் விஷ்வநாதன் யுவராஜ் 43 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் திவாகரன் யாதவ் 26 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்து கல்லூரி கொழும்பு 37 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 133 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.Travel Guides & Travelogues வேலாந்துரை அபினேஷ், சுரேஷ் குமார் மிதுஷிகன் ஆகிய இருவரும் 7ஆவது விக்கெட்டில் 55 ஓட்டங்களைப் பகிர்ந்திராவிட்டால் இந்து கொழும்பு இதனைவிட மோசமான தோல்வியைத் தழுவியிருக்கும். வேலாந்துரை அபினேஷ் 41 ஓட்டங்களையும் சுரேஷ் சர்விஷ் 17 ஓட்டங்களையும் சுரேஷ் குமார் மிதுஷிகன் 16 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் கனகராஜ் நித்தீஸ் 16 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் சிவலோகேசன் சிவகஜீசன் 29 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன்: ஜெகதீசன் பவணன். https://www.virakesari.lk/article/241231
  11. எரிபொருள் பற்றாக்குறையை சமாளிக்க இந்த 6 நாடுகள் எடுத்துள்ள வெவ்வேறு நடவடிக்கைகள் என்ன? 17 மார்ச் 2026, 10:29 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள் மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதால் உலக நாடுகள், குறிப்பாக ஆசிய நாடுகள் கடுமையாக எரிபொருள் மற்றும் எரிவாயு தட்டுப்பாட்டைச் சந்தித்து வருகின்றன. இந்தச் சூழலை சமாளிக்க சிறப்பு விடுமுறை தொடங்கி மின்வெட்டு வரை பல்வேறு சிக்கன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இலங்கையில், எரிபொருளை சேமிக்கும் முயற்சிகளில் ஒன்றாக புதன்கிழமையை விடுமுறை நாளாக அரசு அறிவித்துள்ளது. தாய்லாந்தில் ஏ.சி. பயன்பாட்டை குறைக்க மக்கள் கோட் - சூட்க்கு பதிலாக குறுகிய கை டி - ஷர்ட் அணியுமாறு அரசு கேட்டுக்கொண்டுள்ளது. மியான்மரில் தனியார் வாகனங்கள் அவற்றின் பதிவு எண் அடிப்படையில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் மட்டுமே இயக்க அனுமதிக்கப்படுகின்றன. வங்கதேசத்தில், பல்கலைக்கழகங்களில் ரமலான் விடுமுறை முன்னதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மின்சாரத்தை சேமிக்கும் நோக்கில் திட்டமிட்ட மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. பிலிப்பின்ஸில், சில அரசு அலுவலகங்களில் ஊழியர்கள் வாரத்தில் குறைந்தது ஒரு நாள் வீட்டிலிருந்து வேலை செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. வியட்நாமில், எரிபொருளை சேமிக்க மக்கள் அதிக நேரம் வீட்டிலேயே இருக்குமாறு அரசு வலியுறுத்துகிறது. பொதுப் போக்குவரத்தை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c8759vj7en3o
  12. மட்டக்களப்பில் டெங்கு பரவல் அதிகரிப்பு : அலட்சியம் காட்டுவோருக்கு கடும் சட்ட நடவடிக்கை ; வைத்தியர் வி.முரளிஸ்வரன் 17 Mar, 2026 | 12:05 PM மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நுளம்பு நோய் தாக்கம் அதிகரித்து வருகிறது. எனவே பொதுமக்கள் உங்கள் வீடுகளையும் சூழலையும் சுத்தமாக வைத்திருக்கவும் அதேவேளை டெங்கு நுளம்பு உருவாக்கூடியவாறு துப்பரவு இன்றி உள்ள வெற்று காணிகளின் உரிமையாளர்கள் சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தலை பின்பற்றி சமூக அக்கறையுடன் செயல்பட வேண்டும். அதை மீறி அலட்சியம் செய்வோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் வி.முரளிஸ்வரன் தெரிவித்தார். மட்டு சுகாதார பிராந்திய சேவைகள் பணிமனையில் திங்கட்கிழமை (16) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மை காலமாக டெங்கு நுளம்பு நோய் தாக்கம் அதிகரித்துள்ளதுடன் செங்கலடி, மட்டக்களப்பு, வவுணதீவு பிரதேசங்களில் டெங்கு நுளம்பு நோய் தாக்கத்தால் அதிகமானோர் சிகிச்சை பெற்றுள்ளனர். எனவே டெங்கு நோய் தாக்கத்தில் இருந்து சுற்றாடலை பாதுகாப்பதற்கான நடவடிக்கையை எடுக்கும் அதே நேரத்தில் உங்கள் அயலில் காணப்படுகின்ற டெங்கு நுளம்பு காணக்கூடிய வெற்று காணிகளை அடையாளம் கண்டு சுகாதார அதிகாரிகளுக்கு அறிவிக்கவும். ஏற்கனவே டெங்கு நுளம்புகள் உருவாகக்கூடிய வெற்று காணிகள் இருக்கும் இடங்களை சுகாதார வைத்திய அதிகாரிகள் பொது சுகாதார பரிசோதகர்கள் இணைந்து மாநகர சபை உதவியுடன் அந்த காணிகளின் உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதில் சில காணிகள் மாநகர சபையினால் சுவீகரிக்க பட்டுள்ளது. வெற்று காணிகளை வைத்திருக்கும் சிலர் அதனை துப்பரவு செய்யாது டெங்கு நுளம்பு உருவாக கூடிய நிலையில் வைத்திருக்கும் சமூக உணர்வு இல்லாத காரணத்தால் துப்பரவாக வைத்திருக்கும் அப்பாவி பொதுமக்கள் இந்த டெங்கினால் பாதிக்கப்படுகின்றன அதேவேளை சுகாதார அதிகாரிகள் பொது சுகாதார உத்தியோகத்தர்களின் அறிவுறுத்தல் வழங்கியும் சிலர் அடாவடியாக தமது காணிகளை துப்பரவு செய்யாமலும் சிலர் வெளிநாடுகளில் இருந்து கொண்டு எந்தவித அக்கறையும் இல்லாது அலட்சியமான போக்கில் இருக்கின்றனர். எனவே வெற்று காணி வைத்திருப்பவர்கள் சமூக அக்கறையுடன் செயற்படவும். டெங்கு பரவக்கூடிய வெற்றிக் காணிகளை காணி சுகாதார வைத்திய அதிகாரிகளின் அறிவுறுத்தலை பின்பற்றி செயற்படாமல் விட்டால் அவர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இந்து ஆலையங்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள், பள்ளிவாசல்கள் எங்களது டெங்கு ஒழிப்பு தொடர்பான அறிவுறுத்தல்களை ஆலயங்களில் உள்ள ஒலி பெருக்கி ஊடாக காலை, மதியம், இரவு ஆகிய நேரங்களில் அறிவித்து ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம். அதேவேளை பெரும்பாலான ஆலையங்கள் இந்த டெங்கு நோய் தொடர்பான அறிவுறுத்தல்கள் செய்வதில்லை, ஆகவே எங்கள் சமய நிறுவனங்கள் சமயத்தை மட்டும் வளர்ப்பதை குறிக்கோளாக கொண்டிராது சமூக நலனோடு செயல்பட வேண்டும். அண்மையில் செங்கலடி பிரதேசத்தில் டெங்கு நோய் தாக்கம் அதிகரித்து காணப்படும் நிலையில் ஒரு பிரபல ஆலையத்தை தொடர்பு கொண்டு ஆலைய சூழலை துப்பரவாக வைத்திருக்குமாறும் எங்களது டெங்கு நோய் தொடர்பான விழிப்புணர்வு அறிவுறுத்தலை வழங்குமாறு கேட்டபோது அவர்களது ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. அதே நேரத்தில் அந்த ஆலய மதகுரு உட்பட ஆலய சூழல் டெங்கு நோய் பரவும் சூற்றாடல் காணப்பட்டு அவர்களுக்கு எதிராக நாங்கள் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை வந்தது. எனவே எல்லா ஆலையங்கள், பள்ளிவாசல்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள் சமூக உணர்வோடு இந்த டெங்கு நுளம்பு அழிப்பதற்கு உங்கள் ஆளணிகள் மற்றும் ஆலையங்களில் இருக்கும் அந்த ஒலிபெருக்கி வசதிகளையும் ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம். அண்மை காலமாக தற்கொலை அதிகரித்து காணப்படும் சூழ்நிலையில் பாடசாலை ஆசிரியர்களுக்கு உளவியல் ஆற்றுப்படுத்தல் பயிற்சி நெறிகள் அளித்து வருகிறோம். இருந்தபோதும் சில பாடசாலைகளின் அதிபர்கள் இது சம்பந்தமான எந்தவிதமான அக்கறையும் இல்லாத உளவள ஆற்றுப்படுத்தல் பயிற்சி பெற்ற ஆசிரியர்களுக்கு அந்த பாட வேளைகளை வழங்காது தொடர்ந்து மாணவர்களை ஒரு அழுத்தமான சூழ்நிலைக்குள் கொண்டு செல்வதாக முறைப்பாடுகள் கிடைக்கிறது. எனவே கல்வி அமைச்சினால் நியமிக்கப்பட்ட அந்த உளவள ஆசிரியர்களுக்கு நாங்கள் பயிற்சி வழங்கியுள்ளோம். எனவே மாணவர்களின் உளநலத்தை பேணுவதற்காக வாரத்தில் ஒரு நாளாவது ஒரு பாட வேளையை வழங்கி மாணவர்களுக்கு கற்பிக்க இடம் வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றோம். அதேவேளை தற்கொலையை தடுப்பதற்கான நுண் கடன் வழங்கும் வங்கிகளை அனுகியுள்ளோம், வங்கிகள் சமூக அக்கறையுடன் செயல்பட்டு பொதுமக்களுக்கு நிதி நிலைமைகள் தொடர்பாக சரியான விதத்தில் வழிகாட்ட வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/241177
  13. Today
  14. கெதியாகச் செய்யுங்கோ, கட்டாயம் சமூக வலைத்தளத்தில் எரிப்பதை வீடியோவும் போடுங்கோ! ட்ரம்ப் ரீமின் கவனத்திற்குக் கொண்டு வந்தால் "இலங்கையில் கிறிஸ்தவர்களுக்கு அச்சுறுத்தல்" என்று விசேட விசாவும் கொடுத்து, உங்களைத் தட்டி வைக்கும் படி அனுரவுக்கு அழுத்தமும் கொடுப்பார்கள்😇!
  15. இலங்கைக்கு வந்தடைந்தது மற்றுமொரு எரிபொருள் கப்பல்! Mar 17, 2026 - 04:53 PM மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள எரிசக்தி நெருக்கடிக்கு மத்தியில், இலங்கையினால் ஓடர் செய்யப்பட்ட மற்றுமொரு எரிபொருள் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. ஹொங்கொங் நாட்டுக்குச் சொந்தமான 'சீஃபிரண்டியர்' எனும் எரிபொருள் கப்பலே இவ்வாறு நாட்டை வந்தடைந்துள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இக்கப்பல் மூலம் கொண்டு வரப்பட்ட எரிபொருளை இறக்கும் பணிகள் இன்று காலை முத்துராஜவெல (கெரவலப்பிட்டிய) எரிபொருள் களஞ்சியகத்தில் ஆரம்பிக்கப்பட்டதாகவும், அதன் மற்றுமொரு தொகுதி இன்று பிற்பகல் கொழும்பு துறைமுகத்தின் டொல்பின் இறங்குதுறை ஊடாக கொலன்னாவை களஞ்சியகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அமைச்சு மேலும் கூறியுள்ளது. இந்தக் கப்பலில் 17,000 மெட்ரிக் தொன் 90 ஒக்டேன் பெற்றோல், 18,000 மெட்ரிக் தொன் டீசல் மற்றும் 2,800 மெட்ரிக் தொன் சூப்பர் டீசல் ஆகிய எரிபொருட்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. https://adaderanatamil.lk/news/cmmuiwcmr000w356px10448qj
  16. இஸ்ரேல் தாக்குதலில் ஈரானின் முக்கிய பாதுகாப்புத் தலைவர் உயிரிழப்பு Mar 17, 2026 - 03:33 PM ஈரானின் முக்கிய பாதுகாப்புத் தலைவரான அலி லாரிஜானி (Ali Larijani) கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. அவர் ஈரானின் பாதுகாப்புத் தீர்மானங்களை எடுக்கும் மிக முக்கியமான நபராக இருந்தமையால், இந்த மரணம் தற்போதைய போர்ச் சூழலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கருதப்படுகிறது. அவர் 2025 ஓகஸ்ட் மாதத்தில் ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு சபையின் (SNSC) செயலாளராக நியமிக்கப்பட்டார். இதற்கிடையில், அவர் ஈரான் ஜனாதிபதியினதும் மற்றும் மறைந்த உயர்மட்டத் தலைவர் அயதுல்லா அலி கொமெய்னியினதும் பிரதிநிதியாகவும் பணியாற்றியுள்ளார். இவர் 2008 முதல் 2020 வரை 12 வருடங்களாக ஈரான் நாடாளுமன்றத்தின் சபாநாயகராகப் பணியாற்றிய ஒரு செல்வாக்குமிக்க அரசியல்வாதி ஆவார். அலி லாரிஜானி ஆரம்பத்தில் தீவிரக் கொள்கை உடையவராகத் தோன்றினாலும், பிற்காலத்தில் அவர் ஒரு "மிதவாத" தலைவராகக் கருதப்பட்டார். அத்துடன், 2005 மற்றும் 2007 காலப்பகுதியில் அவர் ஈரானின் பிரதான அணுசக்தி பேச்சுவார்த்தையாளராக சர்வதேச மட்டத்தில் செயற்பட்டுள்ளார். https://adaderanatamil.lk/news/cmmug174n000r356p03so4clm
  17. அரச அலுவலகங்களை நடாத்துதல் தொடர்பான புதிய சுற்றுநிருபம் வெளியீடு Mar 17, 2026 - 02:16 PM நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையின் கீழ் எரிபொருள் இருப்புகளை சேமிப்பதற்காக, அரச அலுவலகங்களை நடாத்திச் செல்வது குறித்து பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் புதிய சுற்றுநிருபம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த சுற்றுநிருபம் அமைச்சின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் மற்றும் அரச கூட்டுத்தாபனங்கள் யாப்பு சபைகளின் தலைவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி, அரச ஊழியர்களுக்கு ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை வழங்கப்பட்டுள்ள விடுமுறை காரணமாக, அன்றைய தினத்திற்குரிய பணிகளை வாரத்தின் செவ்வாய்க்கிழமைக்கு மாற்றிக்கொள்ள வேண்டும். எவ்வாறாயினும், ஏதேனும் ஒரு அதிகாரியை புதன்கிழமை சேவையில் ஈடுபடுத்த வேண்டுமென நிறுவனத் தலைவர் தீர்மானித்தால், அந்த அதிகாரிகளை சேவைக்கு அழைப்பதற்குத் தடையில்லை. ஆனால் அதற்காக விடுமுறை தின சம்பளம், மேலதிக நேர கொடுப்பனவு அல்லது பதில் விடுமுறை வழங்கப்படக் கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதேவேளை, புதன்கிழமைகளில் மூடப்படும் அலுவலகங்களின் அதிகாரிகள், அந்த வாரத்தின் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை அல்லது பொது விடுமுறை தினங்களில் மேலதிக நேர கொடுப்பனவு, விடுமுறை தின சம்பளம் அல்லது பதில் விடுமுறை அடிப்படையில் சேவையில் ஈடுபடுத்தப்படக் கூடாது. இருப்பினும், சேவையின் அவசரத் தேவை கருதி சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை அல்லது பொது விடுமுறை தினங்களில் அதிகாரிகளை சேவைக்கு அழைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட அமைச்சின் செயலாளர் / மாகாண பிரதம செயலாளர் / திணைக்களத் தலைவர் அல்லது அரச கூட்டுத்தாபனத் தலைவர்களின் அனுமதியுடன் அந்த அதிகாரிகளை சேவைக்கு அழைப்பதற்குத் தடையில்லை என குறித்த சுற்றுநிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறு சேவைக்கு அழைக்கப்படும் அதிகாரிகளுக்கு மேலதிக நேர கொடுப்பனவு, விடுமுறை தின சம்பளம் அல்லது பதில் விடுமுறை வழங்குவதற்குத் தடையில்லை என்றும் அந்த சுற்றுநிருபத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://adaderanatamil.lk/news/cmmudawyw000o356p5x2lrj67
  18. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜர் Published By: Digital Desk 3 17 Mar, 2026 | 12:31 PM முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று செவ்வாய்க்கிழமை (17) இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார். இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு நடத்தி வரும் தொடர் விசாரணை ஒன்றுக்கு வாக்குமூலம் பதிவு செய்ய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/241175
  19. ட்ரம்பின் சீனப் பயணம் ஒரு மாதம் தாமதம் Mar 17, 2026 - 06:57 AM ஈரான் போர் காரணமாக, மார்ச் மாத இறுதியில் சீனாவுக்கு மேற்கொள்ளவிருந்த முக்கியத்துவமிக்க பயணத்தை சுமார் ஒரு மாத காலத்திற்கு ஒத்திவைக்க திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். "நாங்கள் அதனை ஒரு மாதம் அல்லது அதற்கு மேலாக ஒத்திவைக்குமாறு கோரியுள்ளோம்," என்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் கூறிய அவர், போரை மேற்பார்வையிடுவதற்கு தான் அங்கிருப்பது முக்கியம் என்றும் குறிப்பிட்டார். கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் நேருக்கு நேர் சந்தித்துப் பேசியதையடுத்து, ட்ரம்ப் மற்றும் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் இடையிலான சந்திப்பு மார்ச் 31 முதல் ஏப்ரல் 2 வரை நடைபெறவிருந்தது. இரு நாடுகளுக்கும் இடையிலான முதலீடுகள், தீர்வைகள் மற்றும் பொருளாதாரத் தடைகள் குறித்த பேச்சுவார்த்தைகளுக்காக அமெரிக்கா மற்றும் சீனாவின் பிரதிநிதிகள் கடந்த சில நாட்களாக பாரிஸில் சந்தித்துப் பேசி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://adaderanatamil.lk/news/cmmtxkf8n0003356pbt39iwow
  20. ஈரானில் வான்வழித் தாக்குதல்: உயர்மட்ட இராணுவ, பாதுகாப்பு தலைவர்கள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவிப்பு 17 Mar, 2026 | 05:40 PM இஸ்ரேல் மேற்கொண்டதாக கூறப்படும் வான்வழித் தாக்குதலில், ஈரான் நாட்டின் துணை இராணுவப் படைத் தளபதி குலாம்ரெசா சுலைமானி மற்றும் அவரது துணைத் தலைவர் சையத் கரிஷி ஆகியோர் உயிரிழந்ததாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. மேலும், ஈரானின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளரான அலி லாரிஜானியும் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்துள்ளார். அலி லாரிஜானி, உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனிக்குப் பின்னர் நாட்டின் முக்கிய பாதுகாப்புத் தலைவர்களில் ஒருவராகக் கருதப்பட்டவர் என கூறப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளாக பாசிஜ் படைப்பிரிவின் தளபதியாகப் பணியாற்றி வந்த குலாம்ரெசா சுலைமானி, அயதுல்லா கமேனிக்கு மிகவும் நெருக்கமானவராகக் கருதப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தாக்குதலில் பாசிஜ் படையின் பல உயர்மட்ட அதிகாரிகளும் உயிரிழந்திருக்கலாம் என ஆரம்ப தகவல்கள் வெளியாகியுள்ளன. தெஹ்ரானில் உள்ள ஒரு ரகசிய தங்குமிடத்தை இலக்கு வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் இந்த தகவலை அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ள போதிலும், இதுவரை ஈரான் தரப்பில் இருந்து எந்தவித உறுதிப்படுத்தலும் வெளியாகவில்லை. இதற்கிடையில், அலி லாரிஜானி சமூக வலைதளத்தில் கையெழுத்துப் பிரதியை வெளியிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது அவர் உயிருடன் இருப்பதற்கான ஆதாரமா அல்லது முன்கூட்டியே திட்டமிடப்பட்ட பதிவா என்ற குழப்பம் நிலவுகிறது. சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் வெளியாகும் நிலையில், சர்வதேச அளவில் இந்த தாக்குதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. https://www.virakesari.lk/article/241220
  21. ஆம். உண்மை. இராணுவன. உடையுடன். துப்பாக்கியுடன். கண்ணடித்தால். ஒரு. ஈரான். மங்கை. அழகே. அழகு. தான். வெளியில். அடக்குமுறை. என்று. சொன்னாலும. அவர்கள். சகல துறைகளிலும். பணியாற்றுகிறார்கள்.
  22. பொருளாதார தடை என்ற பெயரில் மற்றைய நாடுகளை கட்டிச் சுவராக்கி கடைசியில் இயலாமல் சரணடைய வைக்கிறார்கள். இவர்களது தூளத்திற்கு ஏற்ப ஐக்கிய நாடுகள் சபையும் ஆடத் தொடங்கிவிடும்.
  23. ஈரான் நாட்டு பெண்கள் மிகமிக அழகானவர்கள்.
  24. அமெரிக்காவை பிச்சை எல்லாம் எடுக்க வைக்க ரொம்ப கஸ்டபட வேண்டி இருக்கும்😂. ஈரான் ஹோர்மூஸ் நீரிணையின் அமைவிடம் அமெரிக்கா படைகளை நிலத்தில் இறக்க தயங்குகிறது ஆதரவு நாடுகள் இல்லை என்பதை வைத்து அழகாக திட்டமிட்டு விளையாடுகிறது. ஆனால் இதற்கும் ஒரு எல்லை உண்டு. அமெரிக்காவின் வான் பரப்பு முழுவதும் ஈரான் வசம். காஸாவை போல் ஈரானின் சில பகுதிகளை ஆக்க அமெரிக்காவால் முடியும். அமெரிக்கா பிச்சை எடுக்கும் நிலை வர முதல் ஈரானுக்கு இப்படி செய்வார்கள் என எதிர் பார்க்கலாம்.
  25. இவ்வளவு உறுதியாக இருக்கும் நீங்கள் ஏன் சீமான் 15% க்கு மேல் எடுப்பார் என பந்தயம் கட்ட தயங்குகிறீர்கள்? விஜை அதிமுக வோடு போகாமல் விட பெரிய காரணம் பாஜக உள்ளே வந்தது. தமிழ்நாட்டில் சீட் இழுபறியில் கூட்டணி சேராமல் விடுவது அரிதிலும் அரிது (ஒரு முறை வைகோ செய்தார்). விஜை கொள்கை குன்று என்பதெல்லாம் இல்லை - தாமரையை தொட்டால் குலநாசம் என அவருக்கு தெரிகிறது என நினைக்கிறேன். நிதீஸ்குமாரை டம்மி பீசாக்கி ராஜசபாவுக்கு அனுப்பி உள்ளனர். தேர்தலுக்கு பின் எடப்பாடியை பாஜக வச்சு செய்யும் போது விஜை எடுத்த முடிவின் காரணம் புலப்படும். நான் ஆதரிப்பது நோட்டாவையே😂
  26. நயன்தாரா குறித்த அருவருக்கத்தக்க பேச்சு.. அந்தர் பல்டியடித்த சி.வி சண்முகம் 17 Mar 2026, 4:12 PM நயன்தாரா குறித்த அருவருக்கத்தக்க பேச்சுக்கு முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் வருத்தம் தெரிவித்துள்ளார். நயன்தாராவின் பெயர் தவறுதலாக உச்சரிக்கப்பட்டதாகவும், எந்தவிதமான நோக்கத்துடனும் கூறப்படவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார். தமிழகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளுக்கு எதிராக திமுக அரசை கண்டித்து தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் ஒரு பகுதியாக விழுப்புரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்பேசுகையில், “அப்துல் கலாம் கனவு காணுங்கள் என கூறினார். ஆனால் முதல்வர் ஒரு படி மேலே சென்று உங்கள் கனவை சொல்லுங்கள் நிறைவேற்றுகிறோம் என கூறுகிறார். “நயன்தாரா” வேண்டும் என்றால் முதல்வர் நிறைவேற்றுவாரா. “நயன்தாராவை” திருமணம் செய்து வைக்க சொல்லி கேட்பார்கள் முதல்வர் நிறைவேற்றுவாரா.? என்று கேள்வி எழுப்பினார். ஆட்சி போன பிறகு கனவை சொல்லுங்கள் நிறைவேற்றுகிறேன் என கூறுகிறார். 5 ஆண்டுகள் என்ன செய்தார் முதல்வர் என தரம் தாழ்ந்த வகையில் பேசினார். அவரது கருத்துக்கு பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் சிவி சண்முகம் தற்போது விளக்கம் அளித்துள்ளார். அதில் “ஸ்டாலினின் கனவு கூறுங்கள்” என்ற ஏமாற்று வேலை குறித்து உரையாற்றிக் கொண்டிருந்தபோது, அந்த வார்த்தை முற்றிலும் தவறுதலாகவே பயன்படுத்தப்பட்டு விட்டது. எந்தவிதமான நோக்கத்துடனும் கூறப்படவில்லை என்றும் ஆழ்ந்த வருத்தம் தெரிவிப்பதாகவும் கூறி உள்ளார். https://minnambalam.com/admk-cv-shanmugam-apology-nayanthara-issue/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.