Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

stream_title_14

Showing all content posted in for the last 365 days.

This stream auto-updates

  1. Past hour
  2. பலங்கொட கஸ்ஸப தேரரின் கூற்று அப்பட்டமான பொய்! Feb 13, 2026 - 11:56 PM தன்னைப் பற்றி ஊடகங்களுக்குப் பொய்யான கூற்றுக்களைத் தெரிவிப்பதன் மூலம் பலங்கொட கஸ்ஸப தேரர் எதிர்பார்க்கும் உள்நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள முடியாது என்று பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் பிரதி அமைச்சர், சட்டத்தரணி சுனில் வட்டகல தெரிவித்துள்ளார். தாமோ அல்லது தனது பிரதிநிதி ஒருவரோ பலங்கொட கஸ்ஸப தேரருக்குப் தனிப்பட்ட முறையில் ஒருபோதும் தொலைபேசி அழைப்பை மேற்கொள்ளவில்லை என்று பிரதி அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார். திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பான வழக்கில் கடந்த ஜனவரி 14ஆம் திகதி விளக்கமறியலில் வைக்கப்பட்ட பலங்கொட கஸ்ஸப தேரர், 28 நாட்களுக்குப் பின்னர் நீதிமன்றத்தினால் கடந்த 11ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டார். நேற்று (12) விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய அவர் பல விடயங்களை வெளிப்படுத்தியதுடன், அரசாங்கத் தரப்பு பிரதிநிதிகள் தமக்கும் இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய தேரர்களுக்கும் அழைப்பு விடுத்து அழுத்தம் கொடுத்ததாகக் குறிப்பிட்டிருந்தார். கஸ்ஸப தேரரின் இந்தக் கூற்று தொடர்பில் கருத்துத் தெரிவித்த பொது மக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல, "முசாவாதா வேரமணி சிக்காபதம் சமாதியாமி (பொய் பேசுவதைத் தவிர்த்தல்) என்ற வாசகத்தை எமக்குக் கற்றுக்கொடுப்பவர்களே கௌரவ தேரர்கள்தான். இது ஒரு அப்பட்டமான பொய் என்பது கஸ்ஸப தேரருக்கு நன்றாகத் தெரியும்" எனக் குறிப்பிட்டார். https://adaderanatamil.lk/news/cmll7yaf3000g356n8nihy1bn
  3. 'இந்தியா - AI உச்சி மாநாடு 2026' - 20 நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு! 14 Feb, 2026 | 08:59 AM இந்தியாவின் புதுடெல்லியில் நடைபெறவுள்ள 'இந்தியா - AI உச்சி மாநாடு 2026' இல் (India–AI Impact Summit 2026) கலந்து கொள்ள 20 நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்த உச்சி மாநாடு புதுடெல்லியில் பெப்ரவரி 16 முதல் 20 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இந்த பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில், பின்வரும் நாடுகளின் தலைவர்கள் இந்த உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளனர்: பூட்டான் – பிரதமர் ஷெரிங் டோப்கே பொலிவியா – துணைத் தலைவர் எட்மண்ட் லாரா மொன்டானோ பிரேசில் – ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா குரோஷியா – பிரதமர் ஆண்ட்ரேஜ் பிளென்கோவிக் எஸ்டோனியா – ஜனாதிபதி அலார் கரிஸ் பின்லாந்து – பிரதமர் பெட்டேரி ஓர்போ பிரான்ஸ் – ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் கிரீஸ் – பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸ் கயானா – துணைத் தலைவர் டாக்டர் பாரத் ஜக்டியோ கஜகஸ்தான் – பிரதமர் ஓல்ஜாஸ் பெக்டெனோவ் லிச்சென்ஸ்டைன் – அதிபர் இளவரசர் அலோயிஸ், லிச்சென்ஸ்டைன் மொரிஷியஸ் – பிரதமர் டாக்டர் நவீன்சந்திர ராம்கூலம் செர்பியா – ஜனாதிபதி அலெக்சாண்டர் வுசிக் ஸ்லோவாக்கியா – ஜனாதிபதி பீட்டர் பெல்லெக்ரினி ஸ்பெயின் – ஜனாதிபதி பெட்ரோ சான்செஸ் பெரெஸ்-காஸ்டெஜோன் இலங்கை – ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க சீஷெல்ஸ் – துணைத் தலைவர் செபாஸ்டியன் பிள்ளே சுவிட்சர்லாந்து – ஜனாதிபதி கை பார்மெலின் நெதர்லாந்து – பிரதமர் டிக் ஸ்கூஃப் ஐக்கிய அரபு அமீரகம் – அபுதாபியின் கிரீட இளவரசர் ஷேக் காலித் பின் முகமது பின் சயீத் அல் இது தவிர, 45க்கும் மேற்பட்ட நாடுகளின் அமைச்சர்கள் இந்த உச்சிமாநாட்டில் பங்கேற்கவுள்ளனர். மேலும், ஐ.நா பொதுச்செயலாளர் மற்றும் பல சர்வதேச அமைப்புகளின் உயர் அதிகாரிகளும் இந்த இந்த உச்சிமாநாட்டில் பங்கேற்கவுள்ளனர். https://www.mea.gov.in/press-releases.htm?dtl/40773/World_Leaders_at_the_IndiaAI_Impact_Summit_2026 https://www.virakesari.lk/article/238617
  4. கோள்கள் எப்படி உருவாகின்றன? விஞ்ஞானிகளை ஆச்சரியப்படுத்திய ஆய்வு பட மூலாதாரம்,ESA படக்குறிப்பு,LHS 1903 நட்சத்திரத்தைச் சுற்றியுள்ள அசாதாரண கோள்களின் அமைப்பைப் பற்றிய சித்தரிப்புப் படம் (நட்சத்திரத்தில் இருந்து அவை இருக்கும் தொலைவுகளும் அவற்றின் அளவுகளும் புரிதலுக்காக மட்டுமே) கட்டுரை தகவல் டெய்ஸி ஸ்டீஃபன்ஸ் பிபிசி உலக சேவை 4 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள் கோள்கள் எவ்வாறு உருவாகின்றன என்பது நம் பிரபஞ்சத்தைப் பற்றிய மிக அடிப்படையான கேள்விகளில் ஒன்று. நமது சூரிய குடும்பத்திலும், பிரபஞ்சம் முழுவதும் இருக்கும் பிற பகுதிகளிலும் நாம் காணக்கூடிய விஷயங்களுடன் ஒத்துப்போகும் ஒரு கோட்பாடு விஞ்ஞானிகளிடம் இருக்கிறது. ஆனால் இப்போது, தொலைதூரத்தில் உள்ள ஒரு கோள்களின் அமைப்பு அந்தக் கோட்பாட்டிற்கு முரணாக இருப்பதாகத் தெரிகிறது என்று சமீபத்தில் சயின்ஸ் என்ற ஆய்விதழில் வெளியிடப்பட்ட ஓர் ஆய்வறிக்கை கூறுகிறது. புதிய நட்சத்திரங்களைச் சுற்றியுள்ள வாயு மற்றும் தூசி வட்டுகளில் இருந்து கோள்கள் உருவாகின்றன என்று தற்போதைய கோட்பாடு கூறுகிறது. "இந்தத் தூசுகளை ஒன்றிணைப்பதன் மூலம் கோள்கள் உருவெடுப்பதாக நாங்கள் நினைக்கிறோம்," என்று பிரிட்டனின் வார்விக் பல்கலைக்கழகத்தில் வானியல் உதவிப் பேராசிரியராக இருப்பவரும், இந்தப் புதிய ஆய்வின் முதன்மை ஆய்வாளருமான முனைவர் தாமஸ் வில்சன் கூறினார். "அவையனைத்தும் கூழாங்கற்களைப் போல ஒன்றாகச் சேகரிக்கப்படத் தொடங்குகின்றன. பின்னர் அவை ஒன்றோடொன்று மோதி கோள்கள் எனப்படும் ஒற்றைப் பெரிய வான்பொருளை உருவாக்குகின்றன." இது பூமியின் பாறை போன்ற அமைப்புகள், வியாழன் கோளைப் போன்ற ராட்சத வாயுக்களால் ஆன கோளின் அமைப்புகள் உருவாக வழிவகுக்கிறது. ஒரு கோள் அதன் நட்சத்திரத்தில் இருந்து எவ்வளவு தொலைவில் இருக்கிறது என்பதைப் பொறுத்து வெப்பநிலை மற்றும் கிடைக்கும் பொருட்கள் மாறுபடும். மேலும், இந்தத் தொலைவுதான், அந்தக் கோள், முக்கியமாக அதன் வெளிப்புறம் எதனால் ஆனது என்பதைத் தீர்மானிக்கிறது. "சூரிய குடும்பத்தின் தொலைதூரப் பகுதிகளில், குளிர் அதீதமாக இருக்கும். அந்தப் பகுதி பனிக்கட்டிக் கோடு என்று அழைக்கப்படுகிறது. அதைத் தாண்டி, அதிகமான குளிர் நிலவுவதால், வாயுக்கள், பனிக்கட்டிகள் தோன்றி, உறைந்திருக்க முடியும்," என்று வில்சன் விளக்கினார். பட மூலாதாரம்,Kevin M. Gill/NASA/JPL-Caltech/SwRI/MSSS படக்குறிப்பு,வியாழன் ஒரு ராட்சத வாயு கோளாக இருந்தாலும், அதன் மையப் பகுதி பாறைகளால் ஆனது. இந்தக் குளிரான பகுதிகளில், கோள்களால் அதிக வாயுவை சேகரித்து அடர்த்தியான வளிமண்டலங்களை உருவாக்க முடியும். நட்சத்திரத்தின் வலுவான வெப்பம், கதிர்வீச்சு ஆகியவற்றால் இந்த அடர்த்தியான வாயுவை எளிதில் அகற்ற முடியாது. வியாழன் போன்ற பெரிய வாயு கோள்கள், இந்தத் தொலைதூர, குளிரான பகுதிகளில் இப்படித்தான் உருவாகின்றன. இதற்கு மாறாக, நட்சத்திரத்திற்கு அருகில் வெப்பமாக, வாயுவைவிட அதிகமாக தூசி நிறைந்து காணப்படும். இதன் விளைவாக, நமது சூரிய மண்டலத்தில் புதன், வெள்ளி, பூமி, செவ்வாய் போன்ற பாறை அமைப்புகளைக் கொண்ட கோள்கள் உருவாகின்றன. ஒரு நட்சத்திரத்தில் இருந்து வெவ்வேறு தூரங்களில் நிலவும் வெப்பநிலையும் வான்பொருட்களும் மாறுவதால், ஒரு நட்சத்திர குடும்பத்தில் உள்ள அனைத்து கோள்களும் ஒரே நேரத்தில் உருவாவதாக விஞ்ஞானிகள் நம்புவதால், இதில் ஒரு சீரான வடிவம் இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். பொதுவாக, சிறிய பாறைக் கோள்கள் நட்சத்திரத்திற்கு அருகில் காணப்படுகின்றன. பெரிய வாயு கோள்கள் வெகு தொலைவில் காணப்படுகின்றன. ஆனால், புதிய ஆய்விலுள்ள கோள்களின் அமைப்பு இந்த வழக்கமான வடிவத்தைப் பின்பற்றுவதில்லை. பட மூலாதாரம்,NASA-JPL படக்குறிப்பு,புதிய நட்சத்திரங்களைச் சுற்றியுள்ள வாயு மற்றும் தூசி வட்டுகளில் இருந்து கோள்கள் உருவாவதாக விஞ்ஞானிகள் நம்புகின்றனர். அசாதாரணமான கோள் வரிசை எல்.எச்.எஸ் 1903 என்பது நமது சூரிய குடும்பத்தில் இருந்து சுமார் 117 ஒளி ஆண்டுகள் தொலைவிலுள்ள ஒரு சிறிய சிவப்பு எம்-ட்வார்ஃப் நட்சத்திரம். இது நமது சூரியனைவிட குளிரானது, குறைவான பிரகாசம் கொண்டது. மேலும் அதை நான்கு கோள்கள் சுற்றி வருகின்றன. புதிய ஆய்வில், கிட்டத்தட்ட ஒவ்வொரு கண்டத்தையும் சேர்ந்த நிபுணர்களை உள்ளடக்கிய ஒரு சர்வதேச குழுவுடன் சேர்ந்து, வில்சன், அந்த நட்சத்திர குடும்பத்தை உன்னிப்பாகக் கவனித்து, அதைச் சுற்றி வரும் முதல் மூன்று கோள்கள் விஞ்ஞானிகள் எதிர்பார்த்த வடிவத்தைப் பின்பற்றி உருவாகியிருப்பதைக் கண்டறிந்தார். அவற்றில், நட்சத்திரத்திற்கு மிக அருகிலுள்ள கோள் பாறை அமைப்புடனும், அதைத் தொடர்ந்து வரும் இரண்டு கோள்கள் வாயு அமைப்புடனும் இருந்தன. ஆனால், ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்தின் சியாப்ஸ் செயற்கைக்கோளின் அவதானிப்புகளைப் பயன்படுத்தி, நான்காவது கோள் நட்சத்திரத்தில் இருந்து தொலைதூரத்தில் அமைந்திருந்த போதிலும் பாறை அமைப்பைக் கொண்டிருப்பதைக் கண்டறிந்தனர். "நாங்கள் அது வாயு நிறைந்த கோளாக இருக்குமென்று எதிர்பார்த்தோம். ஆனால் அது ஏன் பாறை அமைப்பைக் கொண்டிருக்கிறது? இதுதான் பெரிய கேள்வி" என்று வில்சன் கூறினார். இப்படிப்பட்ட கோள்களின் வரிசை அமைப்புக்கான சாத்தியமான விளக்கங்களை ஆய்வுக்குழு ஆராய்ந்து வருவதாக அவர் கூறினார். அந்தச் சாத்தியமான விளக்கங்களில், நட்சத்திரத்தின் கதிர்வீச்சு வாயுவை அகற்றியிருக்கலாம் அல்லது வெளிப்புறக் கோள் வேறொரு வான்பொருளால் தாக்கப்பட்டு, அதன் வளிமண்டத்தில் இருந்த வாயுவை நீக்கியிருக்கலாம் என்ற கருதுகோள்களும் அடக்கம். ஆனால், இரண்டாவது மற்றும் மூன்றாவது கோள்களில் அதைச் செய்யாமல் நட்சத்திரத்தால் நான்காவது கோளில் இருந்து மட்டும் வாயுக்களை அகற்ற முடியாது. மேலும் வளிமண்டலத்தில் உள்ள வாயுக்களை நீக்கும் அளவுக்குப் பெரிய வான்பொருள் தாக்கம் நடந்திருந்தால் அது கோளையே அழித்திருக்கும் என்று ஆய்வு மாதிரிகள் மூலம் தெரிந்துகொள்ள முடிந்தது. பட மூலாதாரம்,ESA/Silicon Worlds கோளின் உருவாக்கம் இந்தக் கருதுகோள்களை நிராகரித்த பிறகு, விஞ்ஞானிகள் இந்த "விசித்திரமான" அமைப்புக்கான காரணம், கோள்கள் ஒரே நேரத்தில் உருவாகாமல், ஒன்றன் பின் ஒன்றாக உருவானதாக இருக்கலாமா என்று பரிசீலித்தனர். "இந்த வெளிப்புற கோளை நாம் ஒரு குறைபாடுள்ள சூழலில் உருவாக்கினால், அதாவது வளங்கள் குறைவாக இருக்கும் நிலையில் உருவாக்கினால், இந்தக் கோளின் பண்புகளை எளிதாக உருவாக்க முடியும்" என்று வில்சன் கூறினார். வெளிப்புற கோள் உருவாகும் நேரத்தில் நட்சத்திர அமைப்பில் ஏற்கெனவே வாயுக்கள் தீர்ந்து போயிருக்கலாம் என்று அவர் பரிந்துரைத்தார். "எனவே கோள்கள் வேறுவிதமாக உருவாகக்கூடும் என்ற முடிவுக்கு நாங்கள் வந்தோம். நட்சத்திரத்திற்கு மிக அருகிலுள்ள கோள் முதலில் உருவாகலாம். அதன் பிறகு அடுத்த கோள் உருவாகிறது. பின்னர் இன்னொன்று உருவாகிறது. படிப்படியாக, கோள்கள் நட்சத்திரத்திற்கு அருகிலிருந்து தொலைவு வரை உருவாகின்றன." கோள்கள் நட்சத்திரத்திற்கு அருகில் இருந்து தொடங்கி, வெகு தொலைவு வரை, வளங்கள் குறைந்துகொண்டே வரக்கூடிய சூழலில், படிப்படியாக உருவாகின்றன என்ற கருத்து, 'உள்ளிருந்து வெளியே நடக்கும் கோள் உருவாக்கம்' என்று அழைக்கப்படுகிறது. இது 10 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கோட்பாடாக முன்மொழியப்பட்டது. ஆனால், இந்தக் கோட்பாடு உண்மையில் நடப்பதற்கான மிகவும் உறுதியான ஆதாரமாக இது விளங்குவதாக ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் கூறுகிறது. 'அனைத்து வடிவங்களும் அளவுகளும்' ஒரு நட்சத்திர குடும்பத்திலுள்ள அனைத்து கோள்களும் ஒரே நேரத்தில் உருவாகத் தொடங்குகின்றன என்ற அனுமானத்தை, குறிப்பாக, பிரபஞ்சத்தின் பிற பகுதிகளில் நாம் காணும் அமைப்புகளில், நாம் திருத்திக்கொள்ள வேண்டியிருக்கலாம் எனக் கருதுகிறார் வில்சன். மேலும், இதுபோன்ற திருத்தம் நமது சொந்த சூரிய குடும்பத்தைப் புரிந்துகொள்வதிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். "முதலில் புதன் உருவானதா, பின்னர் வெள்ளி, பின்னர் பூமி, அடுத்து செவ்வாய் என வரிசையாக உருவானதா? இது நமது சொந்த சூரிய குடும்பத்தின் காலம் குறித்த கேள்விகளை எழுப்புகிறது." சூரிய குடும்பத்தில் என்ன நடந்தாலும் அதுவே பொதுவான விதிமுறை என்று நாம் கருதக்கூடாது என்பதையும் இது எடுத்துக் காட்டுவதாக அவர் கூறினார். "சூப்பர்-எர்த்ஸ், துணை-நெப்டியூன்கள் என்று அழைக்கப்படும் ஒரு வகையான கோள்கள் உள்ளன. மேலும் சூரிய குடும்பத்தில் நம்மிடம் இல்லாத அயலக வகைகளும் விண்வெளியில் உள்ளன" என்று அவர் விளக்கினார். "இந்தப் புறக்கோள்கள் அனைத்தும் எல்லா வடிவங்களிலும் அளவுகளிலும் வரலாம் என்று நாம் சிந்திக்க வேண்டும்." "நாம் இன்னும் சிந்திக்காத, உயிர்கள் வாழ ஏதுவான அமைப்பைக் கொண்ட வான்பொருட்கள் இருக்கலாம். நாம் சூரிய குடும்பத்தின் மீதே அதீதமாக கவனம் செலுத்துகிறோம்." - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cwy8ddxxdkro
  5. அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வீடுகளில் 600 வீடுகள் வவுனியாவில் பூட்டப்பட்ட நிலையில் உள்ளது: பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க Published By: Vishnu 13 Feb, 2026 | 11:01 PM அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வீடுகளில் 600 வீடுகள் வவுனியாவில் பூட்டப்பட்ட நிலையில் உள்ளதாக வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழுத் தலைவரும் பிரதி அமைச்சருமான உபாலி சமரசிங்க தெரிவித்தார். வவுனியா பிரதேச செயலகத்தில் வெள்ளிக்கிழமை (13) இடம்பெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டிருந்தது. தேசிய வீடமைப்பு அதிகார சபையால் வவுனியா மாவட்டத்தில் 3349 வீடுகள் வழங்கப்பட்டிருந்தன. முல்லைத்தீவில் 3457 வீடுகளும், மன்னார் மாவட்டத்தில் 2554 வீடுகளும் வழங்கப்பட்டிருந்தன. வவுனியா மாவட்டத்தில் பல வீடுகள் இறுதி கட்டத்தில் உள்ளது. பூர்த்தி செய்யும் நிலையில் உள்ள வீடுகளுக்கான வேலைகளை முடித்து விட்டால் வவுனியாவில் 900 வீடுகள் பூர்த்தியாகும். அவை சின்ன வேலைகளில் தங்கியுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார். இதற்கு பதில் அளித்த போதே கூட்டுறவுத்துறை பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், வவுனியாவில் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வீடுகளில் 600 வீடுகள் மூடப்பட்ட நிலையில் உள்ளது. கடந்த அரசாங்கத்தின் போது சில குடும்பங்களுக்கு இரண்டு, மூன்று வீடுகள் வழங்கப்கப்பட்டு அதில் அவர் குடியிருக்காமல் பூட்டப்பட்டுள்ளது. அவ்வாறு 600 வீடுகள் உள்ளது. மடுகந்த, குடாகச்சகொடி, ஈரப்பெரியகுளம், கலாபோகஸ்வேவ போன்ற இடங்களில் அவ்வாறு வீடுகள் உள்ளன. சஜித் பிரேமதாசாவால் வீடுகள் வழங்கப்பட்டர்களில் வேறு வீடுகள் இல்லாதவர்களின் வீடுகளை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுப்போம். அரசியலுக்காக இவ்வாறு பல இடங்களில் வழங்கப்பட்டுளளது. மன்னாரில் 1500 வீடுகள் உள்ளது. அவ்வாறான வீடுகளை மீள எடுத்து வீடு இல்லாத மக்களுக்கு வழங்குவது குறித்து கவனம் செலுததியுள்ளோம். பாதிக்கப்பட்ட வீடு இல்லாத மக்களுக்கு வீடுகள் வழங்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/238611
  6. கியூபா தலைநகர் ஹவானா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்து 14 Feb, 2026 | 10:22 AM அமெரிக்கா - கியூபாவின் தலைநகர் ஹவானாவில் உள்ள முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வெள்ளிக்கிழமை (13) ஹவானா வளைகுடாவில் உள்ள 'நிக்கோ லோபஸ்' (Nico Lopez) சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து கரும்புகை வெளியேறுவதைக் கண்டு விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். சுத்திகரிப்பு நிலையத்தின் கிடங்கு ஒன்றில் ஏற்பட்ட இந்தத் தீ முற்றாக அணைக்கப்பட்டுள்ளதாகவும், விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் கியூபாவின் எரிசக்தி மற்றும் சுரங்க அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்பதோடு, தீ அருகிலுள்ள பகுதிகளுக்கு பரவவில்லை என்றும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கியூபா தனது எரிபொருள் தேவையில் மூன்றில் ஒரு பகுதியை மட்டுமே உள்நாட்டில் உற்பத்தி செய்கிறது. மீதமுள்ள தேவைக்கு இறக்குமதியையே நம்பியுள்ளது. குறிப்பாக வெனிசுலாவிலிருந்து வந்த எண்ணெய் இறக்குமதி, அந்நாட்டு அதிபர் நிக்கோலஸ் மதுரோ அமெரிக்கப் படைகளால் கடத்தப்பட்டதைத் தொடர்ந்து கடந்த மாதம் முதல் நிறுத்தப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/238624
  7. எங்கள் அங்கிகள் கழறும் வரை பொலிஸார் எம்மை தாக்கினார்கள்! கஸ்ஸப தேரர் பகிரங்க குற்றச்சாட்டு எங்கள் உடம்பில் இரத்தம் வழிந்தது, எங்கள் அங்கிகள் கழறும் வரை பொலிஸார் எம்மை தாக்கினார்கள் என பலாங்கொடை கஸ்ஸப தேரர் பகிரங்க குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார். அதற்குப் பிறகு சிறையில் உயர் அதிகாரி ஒருவர் 'உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள்' என்று தங்களை மிரட்டியதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனை கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில், வடக்கு - கிழக்கு மகா சங்கத்தினர் உட்பட சிங்கள பௌத்த சமூகம் பல துன்பங்களுடன் வாழ்கிறது. வரலாற்று ரீதியாக வடக்கு மக்களிடம் மிகவும் சுய கட்டுப்பாட்டுடனும் கவனத்துடனும் அவர்களின் நலன்களை கருத்தில் கொண்டு செயல்படுகிறோம். பொலிஸ் அதிகாரிகள் சுற்றிவளைப்பு அன்றைய தினம் புத்த சிலையை வைத்து பிரித் சொல்லி மக்கள் சென்ற பிறகு பொலிஸ் அதிகாரிகள் 200 பேர் வரையில் அவ்விடத்தை சுற்றிவளைத்தனர். இதன்போது ஏன் சுற்றிவளைக்கிறீர்கள் என கேட்டபோதும் பதில் கிடைக்கவில்லை. உள்ளே வருவதற்கான கதவுகள் இருக்கும் போதும் கம்பி வேலிகளை வெட்டி உள்ளே வந்து எங்களை அடித்தார்கள். புத்தர் சிலையை பறித்து கொண்டு சென்றார்கள். நாம் எவ்வளவு சொல்லியும் கேட்கவில்லை அடித்தார்கள். எமது உடம்பிலிருந்து இரத்தம் வழிந்தது. எது நடந்தாலும் நாங்கள் போராட்டத்தை கைவிட மாட்டோம் என குறிப்பிட்டுள்ளார். எங்கள் அங்கிகள் கழறும் வரை பொலிஸார் எம்மை தாக்கினார்கள்! கஸ்ஸப தேரர் பகிரங்க குற்றச்சாட்டு
  8. நெதர்லாந்தை 93 ஓட்டங்களால் இலகுவாக வென்றது ஐக்கிய அமெரிக்கா Published By: Vishnu 13 Feb, 2026 | 11:06 PM (நெவில் அன்தனி) ஐக்கிய அமெரிக்காவுக்கும் நெதர்லாந்துக்கும் இடையில் சென்னை சேப்பாக்கம் எம்.எஸ். சிதம்பரம் விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (13) நடைபெற்ற ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண ஏ குழு போட்டியில் 93 ஓட்டங்களால் ஐக்கிய அமெரிக்கா இலகுவாக வெற்றி பெற்றது. சய்ட்டேஜா மூக்கமல்லா, ஷுப்ஹான் ரஞ்சேன் ஆகியோரின் திறமையான துடுப்பாட்டங்களும் ஹார்மீத் சிங், ஷட்லி வன் ஷோக்வைக் ஆகியோரின் கட்டுப்பாடான பந்துவீச்சுகளும் அமெரிக்காவை இலகுவாக வெற்றி பெறச் செய்தன. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட அமெரிக்கா 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 196 ஓட்டங்களைப் பெற்றது. கனடாவுக்கு எதிராக 2024 ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் பெற்ற 197 ஓட்டங்கள் என்ற தனது அதிகூடிய மொத்த எண்ணிக்கையை சமப்படுத்த போட்டியில் ஒரு ஓட்டத்தால் அமெரிக்கா தவறியது. அணித் தலைவர் மோனாங்க் பட்டேல், சய்ட்டேஜா மூக்கமல்லா ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் பகிர்ந்த 55 ஓட்டங்களும் சய்ட்டேஜா மூக்கமல்லா, ஷுப்ஹாம் ரஞ்சேன் ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் பகிர்ந்த 54 ஓட்டங்களும் ஐக்கிய அமெரிக்காவின் மொத்த எண்ணிக்கைக்கு வலு சேர்ப்பதாக அமைந்தது. சய்ட்டேஜா மூக்கமல்லா 51 பந்துகளில் 5 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 79 ஓட்டங்களையும் ஷுப்ஹாம் ரஞ்சேன் ஆட்டம் இழக்காமல் 48 ஓட்டங்களையும் மொனாங்க் பட்டேல் 36 ஓட்டங்களையும் ஷயன் ஜஹாங்கிர் 20 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் பாஸ் டி லீட் 37 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார். 197 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து 15.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 103 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வி அடைந்தது. பாஸ் டி லீட் (23), அணித் தலைவர் ஸ்கொட் எட்வேர்ட்ஸ் (20), மெக்ஸ் ஓ'தௌட் (13), ரோலோவ் வன் டேர் மேர்வ் (10) ஆகிய நால்வரே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர். பந்துவீச்சில் ஹார்மீத் சிங் 21 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் ஷட்லி வன் ஷோக்வைக் 21 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் மொஹம்மத் மொஹ்சின் 19 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்ட நாயகன்: ஹார்மீத் சிங் https://www.virakesari.lk/article/238612
  9. Today
  10. ஜனாதிபதி அநுரவுக்கு கஸ்ஸப தேரர் விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை பயங்கர யுத்தத்தை வெற்றி கொண்ட இராணுவ வீரர்களின் பிராண வாயுவை சுவாசிக்கும் எங்களை யாராலும் அச்சுறுத்த முடியாது என பலாங்கொடை கஸ்ஸப தேரர் தெரிவித்துள்ளார். அகில இலங்கை பௌத்த சம்மேளனத்தில் இன்று (12.02) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றுகையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அதன்போது, தொடர்ந்துரையாற்றிய அவர், “ஜனாதிபதி என்பவர் இந்த நாட்டின் தற்காலிக பாதுகாவலர்.அவருக்கு தெரிய வேண்டும், இந்த சிங்கள பௌத்த இராச்சியத்தை எதிர்கால தலைமுறைக்கு பாதுகாத்து வழங்க வேண்டும் என. ஆனால் அரசியலமைப்பு சட்டத்தை மீறி பௌத்த பிக்குகள் தாக்கப்பட்டுள்ளனர். அநுர இந்திய ஒப்பந்தங்கள் சிங்கள பௌத்த விரோத துரோகிகளான இந்த ஆட்சியாளர்களால் நாம் 29 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தோம். ரில்வின் சில்வாவுக்கு இந்த கதை தெரியும்.தொலைபேசி அழைப்பொன்றை எடுத்து இதை இப்படி தீர்த்து கொள்வோம் என்றார்.ஆனால் நாங்கள் போராட்டத்தை காட்டிக் கொடுக்கவில்லை. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இந்தியாவுடன் ஏழு ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளார். இந்தியாவின் துறைமுக நகரமொன்றை அமைக்கவே ஜனாதிபதி அநுர முயற்சிக்கிறார். அமைச்சர் சுனில் வட்டகல, கடிதத் தலைப்பொன்றை எடுத்து கொண்டு ஜனாதிபதி செயலகத்துக்கு வருமாறு குறிப்பிட்டார்.ஏனென்றால் இந்த காணியை இந்தியாவுக்கு வழங்கி அதில் ஹோட்டல் ஒன்றை அமைக்கவே திட்டமிட்டுள்ளனர்” என குறிப்பிட்டுள்ளார். https://ibctamil.com/article/no-one-can-threaten-kassapa-thero-threatens-1770902994
  11. பயங்கரவாத எதிர்ப்புச்சட்டங்களை சர்வதேச நியமங்களுக்கு அமைவாகத் திருத்தியமையுங்கள் - இலங்கையிடம் அழுத்தம் திருத்தமாக வலியுறுத்தியது ஐரோப்பிய ஒன்றியம் 13 Feb, 2026 | 07:12 PM (நா.தனுஜா) ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை வழங்கல் ஒப்பந்தத்தின்கீழ் ஏற்றுக்கொள்ளப்பட்ட வாக்குறுதிகளை உரிய காலப்பகுதிக்குள் நிறைவேற்றவேண்டியது அவசியம் என இலங்கையிடம் வலியுறுத்தியுள்ள ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள், குறிப்பாக பயங்கரவாத எதிர்ப்புச்சட்டங்களை சர்வதேச நியமங்களுக்கு அமைவாகத் திருத்தியமைக்கவேண்டியதன் முக்கியத்துவத்தை மீண்டும் அழுத்தம் திருத்தமாக சுட்டிக்காட்டியுள்ளனர். ஐரோப்பிய ஒன்றியம் - இலங்கை கூட்டு ஆணைக்குழுவின் 27 ஆவது கூட்டம் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் அருணி ரணராஜ மற்றும் ஐரோப்பிய ஒன்றிய வெளிவிவகார சேவைப்பிரிவின் ஆசிய, பசுபிக் பிராந்தியத்துக்கான பதில் முகாமைத்துவப்பணிப்பாளர் பாவோலா பம்பலோனி ஆகியோரின் இணைத்தலைமையில் வியாழக்கிழமை (12) கொழும்பில் அமைந்துள்ள வெளிவிவகார அமைச்சில் நடைபெற்றது. இக்கூட்டு ஆணைக்குழு சந்திப்பை அடுத்து, அதில் கலந்துரையாடப்பட்ட மற்றும் வலியுறுத்தப்பட்ட விடயங்கள் தொடர்பில் இலங்கையும் ஐரோப்பிய ஒன்றியமும் இணைந்து வெளியிட்டிருக்கும் கூட்டறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: நட்பு ரீதியாகவும், திறந்த மனப்பாங்கின் அடிப்படையிலும் நடைபெற்ற இக்கூட்டத்தின்போது இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையிலான இருதரப்பு உறவு குறித்து மீளாய்வு செய்யப்பட்டதுடன் ஆட்சியியல் நிர்வாகம், நல்லிணக்கம், மனித உரிமைகள், வர்த்தகம், அபிவிருத்தி ஒத்துழைப்பு, கல்வி, மீன்பிடி, கடல்சார் ஒத்துழைப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, காலநிலை மாற்றம், பாதுகாப்பு ஒத்துழைப்பு, பிராந்திய மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு என்பன உள்ளடங்கலாக இருதரப்பினரதும் அக்கறைக்குரிய பல்வேறு விடயங்கள் தொடர்பில் கருத்துக்கள் பரிமாறப்பட்டன. இக்கூட்டமானது இலங்கை மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார முன்னேற்றங்கள் குறித்து ஆலோசிப்பதற்கு இரு தரப்பினருக்கு ஒரு வாய்ப்பை வழங்கியதுடன், பரஸ்பர அக்கறைக்குரிய விடயங்களில் இருதரப்பினராலும் மேற்கொள்ளப்பட்ட கொள்கைசார் மறுசீரமைப்புக்கள், நடைமுறை முன்னேற்றங்கள் மற்றும் ஏனைய சட்ட ரீதியான முயற்சிகளின் தற்போதைய நிலைவரம் குறித்துப் பரிமாறுவதற்கும் வாய்ப்பளித்தது. அதேபோன்று கடந்த ஆண்டு மேமாதம் 5 ஆம் திகதி நடைபெற்ற ஆட்சியியல், மனித உரிமைகள் மற்றும் சட்டவாட்சி என்பன தொடர்பான ஐரோப்பிய ஒன்றிய ஆணைக்குழுவின் கூட்டம், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 13 ஆம் திகதி மெய்நிகர் முறைமையில் நடைபெற்ற வர்த்தக மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு குறித்த கூட்டம் மற்றும் கடந்த 11 ஆம் திகதி (புதன்கிழமை) நடைபெற்ற அபிவிருத்தி ஒத்துழைப்பு தொடர்பான கூட்டம் என்பன பற்றியும் இதன்போது ஆராயப்பட்டது. அதேவேளை பயங்கரவாதத்தடைச்சட்டத்தை நீக்குதல், நிகழ்நிலைக்காப்புச்சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளல், சிறுபான்மையினரின் உரிமைகள், பெண்கள், சிறுவர்கள் மற்றும் தொழிலாளர்களின் உரிமைகள், இலஞ்சம் மற்றும் ஊழலை எதிர்த்துப் போராடுவதற்கு முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள், கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரம், ஒன்றுகூடுவதற்கான சுதந்திரம் என்பன உள்ளடங்கலாக ஜனநாயகம், நிர்வாகம், சட்டத்தின் ஆட்சி மற்றும் மனித உரிமைகள் ஆகிய துறைகளில் இலங்கையின் அண்மையகால முன்னேற்றங்கள் தொடர்பிலும் இக்கூட்டு ஆணைக்குழு சந்திப்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டது. அதன் நீட்சியாக நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், காணாமல்போனோர் பற்றிய அலுவலகம், இழப்பீட்டுக்கான அலுவலகம், தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அலுவலகம் ஆகிய சுயாதீன கட்டமைப்புக்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் என்பன பற்றி ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளுக்கு இலங்கையின் பிரதிநிதிகளால் விரிவாக விளக்கமளிக்கப்பட்டது. அத்தோடு சட்டவிரோத மற்றும் ஒழுங்குபடுத்தப்படாத மீன்பிடி நடவடிக்கைகளைத் தடுப்பதிலும், அதனை முழுமையாக முடிவுக்குக் கொண்டுவருவதிலும், மீன்பிடித்துறை சார்ந்து ஏற்றுக்கொள்ளப்பட்ட வாக்குறுதிகளுக்கு மதிப்பளிப்பதிலும் தொடர் ஒத்துழைப்புடன் செயற்படவேண்டியதன் அவசியத்தை இருதரப்பினரும் ஏற்றுக்கொண்டனர். அதுமாத்திரமன்றி சுற்றுச்சூழல் மற்றும் காலநிலைசார் ஒத்துழைப்பு, புலம்பெயர்வு மற்றும் மீள் அனுமதி சார்ந்த கொள்கைகள் என்பன பற்றியும் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. அதனைத்தொடர்ந்து ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை வழங்கல் திட்டத்தின் புதிய விதிமுறைகள் குறித்து ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் இலங்கைப் பிரதிநிதிகளுக்குத் தெளிவுபடுத்தினர். இவ்வேளையில் நாட்டின் நிலையான வளர்ச்சியில் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையின் முக்கிய வகிபாகம் குறித்துப் பிரஸ்தாபித்து, அதனைப் பாராட்டிய இலங்கைப் பிரதிநிதிகள், தற்போது நடைமுறையில் உள்ள ஜி.எஸ்.பி பிளஸ் சலுகை வழங்கல் சுழற்சி முடிவடைந்ததும், மீண்டும் அதனைப் பெறுவதற்கு விண்ணப்பிப்பதற்கான தமது நோக்கத்தை வெளிப்படுத்தினர். அதனை செவிமடுத்த ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள், தற்போதைய ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை வழங்கல் ஒப்பந்தத்தின்கீழ் ஏற்றுக்கொள்ளப்பட்ட வாக்குறுதிகளை உரிய காலப்பகுதிக்குள் நிறைவேற்றவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினர். குறிப்பாக பயங்கரவாத எதிர்ப்புச்சட்டங்களை சர்வதேச நியமங்களுக்கு அமைவாகத் திருத்தியமைக்கவேண்டியதன் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிய அவ்வதிகாரிகள், பயங்கரவாத எதிர்ப்பு தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் பொருத்தமான அமை;புக்களுடன் இணைந்து செயலாற்றுமாறு ஊக்குவித்தது. அதற்குப் பதிலளித்த இலங்கையின் பிரதிநிதிகள் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை வழங்கல் திட்டத்தின்கீழ் 27 முக்கிய சமவாயங்களை நடைமுறைப்படுத்துவதற்கான இலங்கையின் தயார்நிலையை மீளுறுதிப்படுத்தினர். மேலும் பாதுகாப்புத்துறையில், குறிப்பாக இந்து - பசுபிக் பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து இங்கு இருதரப்பினரும் ஆராய்ந்தனர். நிறைவாக ஐரோப்பிய ஒன்றியம் - இலங்கை கூட்டு ஆணைக்குழுவின் அடுத்த கூட்டத்தை எதிர்வரும் 2027 ஆம் ஆண்டு ப்ரூஸேல்ஸில் நடாத்துவதற்கு இணக்கப்பாடு எட்டப்பட்டது. https://www.virakesari.lk/article/238601
  12. கனிம வள ஆய்வு குறித்து இந்திய உயர்ஸ்தானிகரகத்தின் ஊடாக வெளிவிவகார அமைச்சுக்கு புதிய ஒப்பந்த முன்மொழிவு ; அதன் உள்ளடக்கங்கள் ஆபத்தானவை என்கிறார் தயாசிறி 13 Feb, 2026 | 07:11 PM (எம்.மனோசித்ரா) இந்திய உயர்ஸ்தானிகராலயம் மூலமாக வெளிவிவகார அமைச்சுக்கு நிலத்தடி, கனிம வளங்கள் தொடர்பான ஆய்வுகள், அகழ்வாராய்ச்சிகள் மற்றும் முதலீடுகளை இந்தியாவுடன் இணைந்து மேற்கொள்வதற்கான புதிய ஒப்பந்தமொன்று முன்மொழியப்பட்டுள்ளது. இந்த ஆய்வுகள் மூலம் கண்டறியப்படும் எந்தவொரு தகவலையும் இந்தியாவின் எழுத்துப்பூர்வ அனுமதி இன்றி வெளியிட முடியாது என்பது குறித்த ஒப்பந்தத்தில் உள்ள ஒரு ஆபத்தான விடயமாகும் என பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். குருணாகலில் வெள்ளிக்கிழமை (13) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், அரசாங்கம் இந்தியாவுடன் இரகசியமான பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கனிம வள ஆய்வு ஒப்பந்தங்களைச் செய்து வருகிறது. குறிப்பாக கனிம வள ஆய்வு தொடர்பான ஒப்பந்தத்தில், இரு நாடுகளின் அனுமதியின்றி தகவல்களை வெளியிட முடியாது என்ற நிபந்தனை வெளிப்படைத்தன்மையற்றது. ஜே.வி.பி ஒரு அரசியல் கட்சியாக தீவிரமான இந்திய எதிர்ப்பு கொள்கையை முன்னெடுத்தது. அதன் விளைவாக 1988-89 காலப்பகுதியில் நாட்டில் பெரும் கலவரங்கள் ஏற்பட்டன. இதனால் இந்திய அமைதி காக்கும் படையினர் பலர் உயிரிழந்தனர். அப்போது இந்திய எதிர்ப்பு அரசியலால் நாட்டின் மின்சார விநியோகக் கட்டமைப்பு மற்றும் பேருந்துகள் தீக்கிரையாக்கப்பட்டன. இந்தியாவை கடுமையாக எதிர்த்தவர்கள் இன்று ஆட்சிக்கு வந்தவுடன், நாட்டுக்குத் தெரியாமல் இந்தியாவுடன் பல்வேறு ஒப்பந்தங்களைச் செய்து வருகின்றனர். பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறைகளில் ஏற்கனவே ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன. அவை குறித்த விவரங்கள் பாராளுமன்றத்திற்கோ அல்லது நாட்டு மக்களுக்கோ இதுவரையிலும் வெளிப்படுத்தப்படவில்லை. இந்திய உயர்ஸ்தானிகராலயம் மூலமாக வெளிவிவகார அமைச்சுக்கு புதிய ஒப்பந்தமொன்று முன்மொழியப்பட்டுள்ளது. இது இலங்கையின் நிலத்தடி மற்றும் கனிம வளங்கள் தொடர்பான ஆய்வுகள், அகழ்வாராய்ச்சிகள் மற்றும் முதலீடுகளை இந்தியாவுடன் இணைந்து மேற்கொள்வதற்கான ஒப்பந்தமாகும். குறித்த ஒப்பந்தத்தில் உள்ள ஒரு ஆபத்தான அம்சம் என்னவென்றால், இந்த ஆய்வுகள் மூலம் கண்டறியப்படும் எந்தவொரு தகவலையும் இந்தியாவின் எழுத்துப்பூர்வ அனுமதி இன்றி வெளியிட முடியாது என்பதாகும். இது நாட்டின் இறையாண்மை மற்றும் வெளிப்படைத்தன்மைக்கு எதிரானது. இலங்கையின் கடற்பரப்பில் உள்ள கோபால்ட் (Cobalt) படிவுகள், இரும்புத் தாது, பாஸ்பேட் மற்றும் மட்டக்களப்பு பகுதியில் உள்ள கனிம வளங்கள் ஆகியவற்றை இந்தியாவுடன் இணைந்து அகழ்வதற்கு இந்த ஒப்பந்தம் வழிவகை செய்கிறது. ஜே.வி.பி யின் முக்கிய தலைவர்கள் இந்தியாவுக்குச் சென்று வந்ததன் பின்னரே இவ்வாறான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. முன்னர் இந்திய எதிர்ப்பு அரசியலை முன்னெடுத்தவர்கள், இன்று இந்திய அரசாங்கம் எதைச் சொன்னாலும் செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்றார். https://www.virakesari.lk/article/238600
  13. வங்கதேசம் திரும்பிய 50 நாட்களில் ஆட்சி - தாரிக் ரஹ்மான் 17 ஆண்டு லண்டனில் தஞ்சமடைந்தது ஏன்? பட மூலாதாரம்,@BNPBdMediaCell படக்குறிப்பு,இந்த முறை, தேர்தலில் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக்கை பி.என்.பி. எதிர்கொள்ளவில்லை, இதனால் அக்கட்சி நேரடியாகப் பயனடைந்தது. கட்டுரை தகவல் ரக்கீப் ஹசனத் பிபிசி வங்க மொழி சேவை 13 பிப்ரவரி 2026 புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள் வங்கதேச பொதுத் தேர்தலில் வங்கதேச தேசியவாத கட்சி (பிஎன்பி) பெரும்பான்மை பெற்றுள்ளது. முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள 297 இடங்களில் பிஎன்பி கூட்டணி 209 இடங்களை கைப்பற்றியுள்ளது. வங்கதேச தேசியவாதக் கட்சியை (பி.என்.பி), தாரிக் ரஹ்மான் முதல்முறையாக நாடாளுமன்றத் தேர்தலுக்கு வழிநடத்திச் சென்றார். அவர் முதல்முறையாகத் தேர்தலிலும் போட்டியிட்டுள்ளார். தாரிக்கின் தலைமையின் கீழ், பி.என்.பி ஒரு வரலாற்று வெற்றியை பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம், தாரிக் ரஹ்மான் வங்கதேசத்தின் புதிய பிரதமராகக் கூடும். ஷேக் ஹசீனாவின் கட்சியான அவாமி லீக் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கப்படாத நிலையில், பி.என்.பி வெற்றியை நோக்கி நகர்கிறது. தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு தனது தாயார் காலிதா ஜியாவின் மறைவுக்குப் பிறகு, தாரிக் கட்சியின் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார். கட்சியின் திட்டங்களையும், ஒட்டுமொத்த தேர்தல் பிரசாரத்தையும் அவரே மேற்பார்வையிட்டார். தாரிக்கின் ஆதரவாளர்கள் அவரை வங்கதேசத்தின் சாத்தியமான பிரதமராக முன்னிறுத்துகின்றனர். பி.என்.பி தாரிக்கை கட்சியின் ஒரே தலைவராகச் சித்தரிக்கிறது. இருப்பினும், அரசியல் எதிரிகள் ரஹ்மானின் கடந்தகால ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் கல்வித் தகுதிகள் குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் ரஹ்மானும் அவரது கட்சியான பி.என்.பி-யும் அனைத்து ஊழல் குற்றச்சாட்டுகளையும் நிராகரித்துள்ளனர். மேலும் இதை முந்தைய அவாமி லீக் அரசாங்கத்தின் பிரசாரம் என்று அழைத்துள்ளனர். Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading அதிகம் படிக்கப்பட்டது வங்கதேசத்தில் பிஎன்பி வெற்றி பாகிஸ்தானுக்கு நல்ல செய்தியா? இந்திய நிபுணர்கள் அலசல் ஆஸ்திரேலியா மீது ஆதிக்கம் செலுத்தி வென்ற ஜிம்பாப்வே - உயரமான பந்து வீச்சாளர் சாதித்தது என்ன? எகிப்து கல்லறைகளில் தமிழை எழுதி வைத்த 'சிகை கொற்றன்' யார்? "இந்தியாவால் புரிந்து கொள்ள முடியாது" - உஸ்மான் தாரிக்கின் பந்து வீச்சு பாகிஸ்தானின் பலமாக மாறுமா? End of அதிகம் படிக்கப்பட்டது ரஹ்மான் சுமார் 17 ஆண்டுகளாக லண்டனில் அரசியல் புகலிடம் பெற்றிருந்தார். பி.என்.பி முன்னாள் அதிபர் ஜியாவுர் ரஹ்மானால் உருவாக்கப்பட்டது மற்றும் முன்னாள் பிரதமர் காலிதா ஜியாவால் வெற்றிகரமாக வழிநடத்தப்பட்டது. பொறுப்பேற்ற குறுகிய காலத்திலேயே அவர் கட்சியை ஆட்சிக்கு வழிநடத்தினார். இப்போது, முழுப் பொறுப்பும் தாரிக் ரஹ்மானின் தோள்களில் உள்ளது. அவாமி லீக் ஆட்சியின் போது கட்சியை ஒற்றுமையாக வைத்திருப்பதில் தாரிக் ரஹ்மான் வெற்றி பெற்றுள்ளார். அவாமி லீக் மீதான தடைக்குப் பிறகு, பி.என்.பி-யின் நண்பராக இருந்த ஜமாத்-இ-இஸ்லாமி அதன் மிகப்பெரிய போட்டியாளராக உருவெடுத்துள்ளது. ரஹ்மானின் தலைமை பட மூலாதாரம்,Parvez Ahmad/Drik/Getty Images படக்குறிப்பு,தாரிக் ரஹ்மான் கட்சிக்காக பல பேரணிகளை நடத்தினார். ராணுவ ஆதரவு பெற்ற இடைக்கால அரசாங்கத்தின் பதவிக்காலத்தில், 2007-ஆம் ஆண்டு ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக தாரிக் ரஹ்மான் வங்கதேசத்தில் கைது செய்யப்பட்டார். கிட்டத்தட்ட பதினெட்டு மாதங்கள் சிறையில் இருந்த அவர், 2008 செப்டம்பரில் விடுவிக்கப்பட்டு தனது குடும்பத்துடன் லண்டனுக்குச் சென்றார். அங்கு சுமார் 17 ஆண்டுகள் தங்கியிருந்த தாரிக், கடந்த ஆண்டு டாக்கா திரும்பினார். காலிதா ஜியாவின் உடல்நிலை மோசமடைந்ததால், டிசம்பர் 26 அன்று தாரிக் ரஹ்மான் டாக்கா திரும்பினார். அந்த வருகை, 18 மாதங்கள் சிறைவாசத்திற்கு பிறகும், 17 ஆண்டுகள் லண்டனில் கழித்த பிறகும், வங்கதேச அரசியலுக்கு அவர் திரும்புவதைக் குறித்தது. சில நாட்களுக்குப் பிறகு, டிசம்பர் 30 அன்று காலிதா ஜியா காலமானார். பத்து நாட்களுக்குப் பிறகு, இந்த ஆண்டு ஜனவரி 9-ஆம் தேதி, பி.என்.பி-யின் தேசிய நிலைக்குழு தாரிக்கை முறைப்படி கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுத்தது. இருப்பினும், 2018-இல் ஊழல் வழக்கில் காலிதா ஜியா குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டதிலிருந்து, லண்டனில் வசித்து வந்த தாரிக் தற்காலிகத் தலைவராகப் பணியாற்றி வந்தார். அதற்கு முன்னதாக, 2002-இல் காலிதா ஜியா அவரை கட்சியின் மூத்த இணைச் செயலாளராக நியமித்திருந்தார். ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு, 2009-இல் பி.என்.பி-யின் ஐந்தாவது தேசிய மாநாட்டில் அவர் மூத்த துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார். பட மூலாதாரம்,NurPhoto via Getty Images படக்குறிப்பு,காலிதா ஜியாவின் மரணத்திற்குப் பிறகு, தாரிக் ரஹ்மான் கட்சித் தலைவர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். தாரிக் ரஹ்மானின் ஆளுமை வங்கதேசத்தின் முதல் ராணுவ ஆட்சியாளரும் முன்னாள் அதிபருமான ஜியாவுர் ரஹ்மான் மற்றும் முன்னாள் பிரதமர் காலிதா ஜியா ஆகியோரின் மூத்த மகனாக, நவம்பர் 20, 1965 அன்று தாரிக் பிறந்தார். பி.என்.பி இணையதளத்தில் அவரது பிறந்த தேதி இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், அதே தேதியைக் குறிப்பிட்டாலும், அவரது தேர்தல் வாக்குமூலத்தில் அவர் பிறந்த ஆண்டு 1968 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. டக்காவில் உள்ள பி.ஏ.எஃப் ஷாஹீன் கல்லூரியில் ஆரம்பக் கல்வியை முடித்த பிறகு, தாரிக் டாக்கா பல்கலைக்கழகத்தில் சர்வதேச உறவுகள் துறையில் சேர்ந்ததாக பி.என்.பி இணையதளம் தெரிவிக்கிறது. எனினும், அவர் அங்கு படிப்பை முடித்தாரா என்பது தெரியவில்லை. மறுபுறம், தேர்தல் ஆணையத்திடம் அளித்த வாக்குமூலத்தில், தாரிக் தனது கல்வித் தகுதியை மேல்நிலைக் கல்வி (12-ஆம் வகுப்பு) என்று குறிப்பிட்டுள்ளார். பி.என்.பி வழங்கிய தகவல்களின்படி, விடுதலைப் போரின் போது ஜியாவுர் ரஹ்மானின் குடும்பம் மற்றும் பல ராணுவ அதிகாரிகளின் குடும்பங்கள் சிறையில் அடைக்கப்பட்டன. அவரது இரு மகன்களான தாரிக் ரஹ்மான் மற்றும் அராபத் ரஹ்மான் (மறைந்த) ஆகியோரும் சிறையில் அடைக்கப்பட்டனர். பட மூலாதாரம்,Parvez Ahmad/Drik/Getty Images படக்குறிப்பு,தினாஜ்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தாரிக் ரஹ்மான் கட்சி வலைத்தளத்தில் உள்ள தகவல்களின்படி, ராணுவ ஆட்சியாளர் உசேன் முகமது எர்ஷாத்திற்கு எதிரான போராட்டத்தில் தாரிக் பங்கேற்றார். மேலும், 1988-ஆம் ஆண்டு பகுடா மாவட்ட பி.என்.பி-யின் காவதாலி துணை மாவட்டப் பிரிவில் உறுப்பினராக முறைப்படி கட்சியில் சேர்ந்தார். இருப்பினும், பல கட்சித் தலைவர்களும் அதிபரின் ஆலோசனைக் குழுவின் சில உறுப்பினர்களும், தாரிக்கின் அரசியல் பயணம் 1991 நாடாளுமன்றத் தேர்தலில்தான் தொடங்கியது என்று தெரிவித்துள்ளனர். அப்போது காலிதா ஐந்து தொகுதிகளில் போட்டியிட்டார். அவற்றை மேற்பார்வையிடும் பொறுப்பு தாரிக்கிடம் இருந்தது. ஆனால், 2001 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகுதான் கட்சி அரசியலில் அவரது பிடி வலுவடையத் தொடங்கியது. அந்தத் தேர்தலில் பி.என்.பி தலைமையிலான நான்கு கட்சிக் கூட்டணி மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. அதே பி.என்.பி அரசாங்கத்தின் பதவிக்காலத்தில், ஹவா பவன் விவகாரத்தில் தாரிக் ரஹ்மான் மற்றும் அவரது நெருங்கிய உதவியாளர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இது பின்னர் நாடு தழுவிய விவாதப் பொருளாக மாறியது. அரசியல் ஆய்வாளர் பேராசிரியர் மஹ்பூப் உல்லா இதுகுறித்து பிபிசி பங்களாவிடம் கூறுகையில், "2001 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, ஹவா பவன் ஒரு தேர்தல் அலுவலகமாகவும், தேர்தல் உத்திகளை வகுப்பதற்கான இடமாகவும் பயன்படுத்தப்பட்டது. இதில் தாரிக் ரஹ்மான் முக்கியப் பங்கு வகித்தார்" என்றார். பி.என்.பி தலைமையிலான அரசு அந்தத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த போதிலும், பி.என்.பி தொடர்ந்து ஹவா பவனின் கட்டுப்பாட்டைத் தக்க வைத்துக் கொண்டது சர்ச்சைக்கு வழிவகுத்ததாக அவர் குறிப்பிட்டார். 2001 தேர்தலுக்குப் பிறகு கட்சியில் தாரிக் ரஹ்மானின் ஈடுபாடு தொடர்ந்து அதிகரித்தது. ஜூன் 22, 2002 அன்று, அவர் மூத்த இணைப் பொதுச் செயலாளர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டார். அரசியல் ஆய்வாளரும் ஆராய்ச்சியாளருமான மொஹியுதின் அகமது பிபிசி பங்களாவிடம் கூறுகையில், "இது கட்சி அரசியலில் அவரது பெரிய பாய்ச்சலாகும். ஜியா குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவருக்கு அந்தப் பதவி வழங்கப்பட்டது. பின்னர், அவரைச் சுற்றி ஒரு இணைத் தலைமை உருவானது" என்றார். ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் சர்ச்சைகள் பட மூலாதாரம்,Anadolu via Getty Images படக்குறிப்பு,தாரிக் ரஹ்மான் 17 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஆண்டு டிசம்பர் 25 அன்று டாக்கா திரும்பினார். இந்த முறை, பி.என்.பி தனது முன்னாள் கூட்டாளியான ஜமாத்-இ-இஸ்லாமியைத் தேர்தலில் எதிர்கொண்டது. ரஹ்மானை "விடுதலைப் போர் மற்றும் தாராளவாத ஜனநாயகத்தின்" ஒரே ஆதரவாளராக மக்கள் மத்தியில் அடையாளப்படுத்த கட்சியின் கொள்கை வகுப்பாளர்கள் விரும்பினர். முன்னதாக, பி.என்.பி தலைமையிலான கூட்டணி அரசாங்கத்தின் (2001-06) பதவிக்காலத்தில், பனானியில் உள்ள கட்சித் தலைவரின் அலுவலகமான 'ஹவா பவன்' சர்ச்சைகளில் சிக்கியது. 2001-இல் பி.என்.பி ஆட்சிக்கு வந்த பிறகு, பிரதமர் காலிதா ஜியா அதிகாரத்தில் இருந்தபோதிலும், ரஹ்மானின் தலைமையிலான ஹவா பவன் ஒரு இணை அதிகார மையமாக மாறியதாக விவாதிக்கப்பட்டது. ரஹ்மான் மீதும் அவருக்கு நெருக்கமானவர்கள் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் எழத் தொடங்கின, இருப்பினும் அவரும் அவரது கட்சியும் இந்தக் குற்றச்சாட்டுகளை கடுமையாக மறுத்து அரசியல் எதிரிகளின் பிரசாரம் என்று கூறி வந்தனர். பி.என்.பி அரசாங்கத்தின் அதே பதவிக்காலத்தில், 2004-ஆம் ஆண்டு டாக்காவில் எதிர்க்கட்சித் தலைவர் ஷேக் ஹசீனாவின் பேரணி மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு தாரிக் ரஹ்மான் மற்றும் ஹவா பவன் தான் காரணம் என்று அவாமி லீக் குற்றம் சாட்டியது. பின்னர், அவாமி லீக் ஆட்சியின் போது, தாரிக் ரஹ்மான் இந்த வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு, அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அவாமி லீக் அரசாங்கத்தின் வீழ்ச்சி, தாரிக் மீதான இத்தகைய குற்றச்சாட்டுகளிலிருந்து நிம்மதியை அளித்துள்ளது. பி.என்.பி ஏற்கனவே இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது. தாரிக் ரஹ்மானின் தேர்தல் வாக்குமூலத்தில் மொத்தம் 77 வழக்குகள் பட்டியலிடப்பட்டுள்ளன. இடைக்கால அரசாங்கத்தின் பதவிக்காலத்தில் அவர் மீதான அனைத்து வழக்குகளிலிருந்தும் அவர் விடுவிக்கப்பட்டார் அல்லது குற்றமற்றவராக அறிவிக்கப்பட்டார். பி.என்.பி தலைமையிலான கூட்டணி அரசாங்கத்தின் இறுதிக் கட்டத்தில் நிலவிய பரவலான அரசியல் வன்முறை மற்றும் மோதல்களுக்குப் பிறகு, ஜனவரி 2007-இல் ராணுவ ஆதரவு பெற்ற இடைக்கால அரசாங்கம் வங்கதேசத்தில் ஆட்சியைப் பிடித்தது. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,2007 இல் கைது செய்யப்பட்ட பிறகு தாரிக் ரஹ்மான் அப்போது ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக தாரிக் ரஹ்மான் 18 மாதங்கள் சிறையில் கழித்தார். அவர் கைது செய்யப்பட்ட பிறகு, குண்டு துளைக்காத ஜாக்கெட் மற்றும் ஹெல்மெட் அணிந்த நிலையில் டாக்கா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் அவர் விசாரணைக்காக காவலில் வைக்கப்பட்டார். இருப்பினும், அதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பு வரை, பிரதமரின் மகனாக, கட்சி மற்றும் நிர்வாகத்தில் அவருக்கு அளவற்ற மரியாதையும் செல்வாக்கும் இருந்தது. தான் கைது செய்யப்பட்ட பிறகு கடுமையான சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டதாக ரஹ்மான் குற்றம் சாட்டுகிறார். "எனது ஆராய்ச்சியின் போது, பல்வேறு தரப்பினருடனான உரையாடல்களின் மூலம் தாரிக் ரஹ்மான் உண்மையில் சித்திரவதை செய்யப்பட்டதை அறிந்தேன். அவரது தாயார் காலிதா ஜியாவை நாட்டை விட்டு வெளியேற கட்டாயப்படுத்துவதே இதன் நோக்கமாக இருந்தது"என்று ஆய்வாளர் மொஹியுதீன் அகமது கூறுகிறார். தாரிக் ரஹ்மான் செப்டம்பர் 11, 2008 அன்று நாட்டை விட்டு வெளியேறி, தனது குடும்பத்துடன் லண்டன் சென்றார். காலிதா ஜியா அந்த நேரத்தில் நாட்டை விட்டு வெளியேறவில்லை. இருப்பினும், ராணுவத் தலைமையுடனான ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக ரஹ்மான் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. எதிர்காலத்தில் அரசியலில் ஈடுபட மாட்டேன் என்று உறுதியளித்து, நாட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்பு ரஹ்மான் ஒரு உறுதிமொழிப் பத்திரம் வழங்கியதாக ஊடகச் செய்திகள் அப்போது வெளிவந்தன. மொஹியுதீன் அகமது கூறுகையில், "தாரிக் இனி அரசியல் செய்ய மாட்டார். அவர் லண்டனில் படிப்பார் என்று காலிதா ஜியாவே அப்போது கூறியிருந்தார்," என்றார். மறைந்த பி.என்.பி தலைவர் மௌதுத் அகமது தனது 'கரகரே கெமோன் சிலாம் (சிறையில் நான் எப்படி இருந்தேன்) 2007-2008' என்ற புத்தகத்தில், "தாரிக் இனி அரசியலில் ஈடுபட மாட்டார் என்று காலிதா ஜியா ராணுவ ஜெனரல்களுடன் ஒப்பந்தம் செய்திருக்க வாய்ப்புள்ளது... ஒருவேளை ரஹ்மானும் அத்தகைய உறுதிமொழிப் பத்திரத்தில் கையெழுத்திட்டிருக்கலாம்," என்று எழுதியுள்ளார். தாரிக் ரஹ்மான் மருத்துவ சிகிச்சைக்காக லண்டனில் இருப்பதாக பி.என்.பி நீண்ட காலமாக கூறி வந்தது. இருப்பினும், ஏப்ரல் 24, 2018 அன்று, கட்சியின் பொதுச் செயலாளர் மிர்சா ஃபக்ருல் இஸ்லாம் ஆலம்கீர், ரஹ்மான் 2012-இல் பிரிட்டனில் அரசியல் புகலிடம் கோரி விண்ணப்பித்ததையும், ஓராண்டுக்குள் அவரது விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டதையும் முதன்முதலில் ஒப்புக்கொண்டார். மீண்டும் வங்கதேசத்திற்குத் திரும்பினார் பட மூலாதாரம்,Munir Uz Zaman / AFP via Getty Images படக்குறிப்பு,தாரிக் தனது தேர்தல் பிரசாரத்தை சில்ஹெட்டில் இருந்து தொடங்கினார். அவாமி லீக் தலைவர் ஷேக் ஹசீனாவைத் தொடர்ந்து, 2007 ஆம் ஆண்டு வங்கதேசத்தில் இராணுவ ஆதரவுடன் ஒரு தற்காலிக அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிறகு, பி.என்.பி தலைவர் கலீதா ஜியாவும் கைது செய்யப்பட்டார். காலிதாவுடன் அவரது மகன் அராபத் ரஹ்மானும் (தற்போது இறந்துவிட்டார்) கைது செய்யப்பட்டார். இருப்பினும், அராபத் பின்னர் ஒரு நிர்வாக உத்தரவின் மூலம் சிகிச்சைக்காக தாய்லாந்திற்கு மாற்றப்பட்டார். அங்கிருந்து அவர் மலேசியாவிற்குச் சென்றார், அங்கு 2015 ஜனவரியில் மாரடைப்பால் காலமானார். அரசியல் ஆய்வாளர் மொஹியுதீன் அகமது கூறுகையில், "பாதகமான சூழ்நிலையிலும் தாரிக் ரஹ்மான் கட்சியை ஒற்றுமையாக வைத்திருக்க முடிந்தது. இவை அனைத்தையும் மீறி, கட்சித் தலைவராக அவர் நாட்டிற்குத் திரும்புவது எனது பார்வையில் 'சிதைவுகளில் இருந்து எழுவதற்கு' ஒப்பானது," என்றார். அவர் பிபிசி வங்க சேவையிடம் கூறுகையில், "தாரிக் அரசியலின் இருண்ட பக்கங்களை மட்டும் பார்க்கவில்லை, நாட்டில் நிலவும் மோதல் மற்றும் பழிவாங்கும் அரசியலிலும் அவர் அனுபவத்தைப் பெற்றுள்ளார்" என்றார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c627z82yx03o
  14. பயங்கரவாதத்தடைச்சட்டத்தினால் வெகுவாகப் பாதிக்கப்பட்டவர்களே பதிலீடாகப் புதிய சட்டத்தை முன்மொழிந்திருப்பது கவலையளிக்கிறது - அந்தனி ஜேசுதாஸன் Published By: Vishnu 13 Feb, 2026 | 09:59 PM (நா.தனுஜா) 1980 களின் பிற்பகுதியில் தென்னிலங்கையில் போராடியவர்களுக்கு எதிராகப் பயங்கரவாதத்தடைச்சட்டம் பிரயோகிக்கப்பட்ட நிலையில், அதன்விளைவாக தற்போது ஆட்சிபீடத்தில் இருப்பவர்களே வெகுவாகப் பாதிக்கப்பட்டனர். அவ்வாறிருக்கையில் தற்போது அவர்களே அச்சட்டத்துக்குப் பதிலீடாக அதனை விடவும் மோசமான 'பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்' எனும் புதிய சட்டத்துக்கான வரைவை முன்மொழிந்திருப்பது எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ளப்படமுடியாததாகும் என பெருந்தோட்டத்துறை மக்கள் குரல் அமைப்பின் நிறைவேற்றுப்பணிப்பாளர் அந்தனி ஜேசுதாசன் விசனம் வெளியிட்டுள்ளார். தற்போது நடைமுறையில் உள்ள 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத்தடைச்சட்டத்துக்குப் பதிலாக 'பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்' எனும் புதிய சட்டத்தைக் கொண்டுவருவதற்கு அவசியமான நடவடிக்கைகள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதனை இலக்காகக்கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள சட்ட வரைவு நீதியமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளப்பக்கத்தில் வெளியிடப்பட்டிருப்பதுடன், அதுபற்றிய கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை இம்மாதம் 28 ஆம் திகதிக்கு முன்னர் தமக்கு அனுப்பிவைக்குமாறு நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார அறிவித்துள்ளார். இவ்வாறானதொரு பின்னணியில் அரசாங்கம் பயங்கரவாதத்தடைச்சட்டத்தை முற்றாக நீக்கவேண்டும் எனவும், புதிதாக முன்மொழியப்பட்டிருக்கும் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவை வாபஸ் பெறவேண்டும் எனவும் வலியுறுத்தி மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் மற்றும் சிவில் சமூகப்பிரதிநிதிகள் இணைந்து நாடளாவிய ரீதியில் பல்வேறு கலந்துரையாடல்கள், விழிப்புணர்வூட்டல் கூட்டங்கள், எதிர்ப்புப்போராட்டங்களை நடாத்திவருகின்றனர். அந்த எதிர்ப்பு நடவடிக்கைகளின் ஓரங்கமாக சில சிவில் சமூக அமைப்புக்கள் இணைந்து கொழும்பில் அமைந்துள்ள நீதியமைச்சுக்கு முன்பாக கடந்த ஜனவரி மாதம் 30 ஆம் திகதி தொடர் கவனயீர்ப்புப்போராட்ட பிரசாரமொன்றை ஆரம்பித்திருந்தன. அப்போராட்டம் தொடர்ந்து மூன்றாவது வாரமாக பெருந்தோட்டத்துறை மக்கள் குரல் அமைப்பு உள்ளிட்ட மலையக சிவில் சமூகங்களின் ஏற்பாட்டில் நேற்று வெள்ளிக்கிழமை (13) பி.ப 2.00 - 4.00 மணி வரை நீதியமைச்சுக்கு முன்பாக நடைபெற்றது. இப்போராட்டத்தில் கலந்துகொண்டிருந்த செயற்பாட்டாளர்கள் 'பயங்கரவாதத்தடைச்சட்டத்தை நீக்கு', 'பயங்கரவாத, அடக்குமுறைச் சட்டங்கள் வேண்டாம்', 'பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக அமையக்கூடிய பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம் வேண்டாம்', 'பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டத்தின் ஊடாக மக்களை ஒடுக்குவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சியைத் தோற்கடிப்போம்', 'மக்கள் முன்னுள்ள அரச பயங்கரவாத சட்டமூலத்தை மீளப்பெறு', 'மக்கள் ஆட்சியா? பயங்கரவாத ஆட்சியா?', 'மக்கள் குரலுக்கு செவி கொடு', 'தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்று' எனும் வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்தனர். அத்தோடு 'அடக்குமுறைகளுக்கு எதிராக அணிதிரள்வோம்', 'பயங்கரவாதத்தடைச்சட்டத்தைக் கிழித்தெறிவோம்', 'பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவுக்குத் தடைவிதிப்போம்', 'நீதிக்காகத் துணையிருப்போம்', 'உரிமைகளை வென்றெடுப்போம்', 'விடிவுக்காக செயற்படுவோம்', 'நமக்காகக் குரல்கொடுப்போம்' என்றவாறு பயங்கரவாதத்தடைச்சட்டம் மற்றும் அதற்குப் பதிலீடாகப் புதிதாக முன்மொழியப்பட்டிருக்கும் சட்ட வரைவுக்கு எதிராகக் கோஷங்களையும் எழுப்பினர். அதன்படி இத்தொடர் போராட்டத்தின் நோக்கம் குறித்தும், இதுபற்றி பொதுமக்கள் அவதானம் செலுத்தவேண்டியதன் அவசியம் குறித்தும் தெளிவுபடுத்திய பெருந்தோட்டத்துறை மக்கள் குரல் அமைப்பின் நிறைவேற்றுப்பணிப்பாளர் அந்தனி ஜேசுதாசன், '1979 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டு, சிறுபான்மை மக்களை வெகுவாகப் பாதித்த பயங்கரவாதத்தடைச்சட்டம் இன்னமும் நடைமுறையில் இருக்கிறது. அவ்வேளையில் இச்சட்டம் தம்மைப் பாதிக்காது என பெரும்பான்மையின மக்கள் நினைத்துக்கொண்டிருந்தார்கள். ஆனால் காலப்போக்கில், குறிப்பாக 'அரகலய' போராட்டம் இடம்பெற்ற காலப்பகுதியில் இச்சட்டம் அவர்களுக்கு எதிராகவே பிரயோகிக்கப்பட்டது. அதுமாத்திரமன்றி 1980 களின் பிற்பகுதியில் தென்னிலங்கையில் போராடியவர்களுக்கு எதிராகவும் இச்சட்டம் பிரயோகிக்கப்பட்டது. அதன்விளைவாக வெகுவாகப் பாதிக்கப்பட்டவர்களே இப்போது ஆட்சிபீடத்தில் அமர்ந்திருக்கிறார்கள். அதற்கமைய தேர்தலுக்கு முன்னர் பயங்கரவாதத்தடைச்சட்டத்தை முற்றாக நீக்குவதாக வாக்குறுதியளித்து ஆட்சிபீடமேறியவர்கள், இப்போது பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவை முன்மொழிந்திருப்பது எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ளமுடியாத ஒரு விடயமாகும்' எனச் சுட்டிக்காட்டினார். மேலும் ஏற்கனவே பல தசாப்தகாலமாக கல்வி, சுகாதாரம், இருப்பிடம் என அடிப்படை உரிமைகளை வென்றெடுப்பதற்காகத் தொடர்ந்து போராடிவரும் மலையக சமூகம், இவ்வாறான சட்டங்களினால் இன்னமும் பாதிக்கப்படும் எனக் குறிப்பிட்ட அவர், ஆகவே பயங்கரவாதத்தடைச்சட்டத்தை முற்றாக இல்லாதொழிப்பதுடன், புதிதாக முன்மொழியப்பட்டிருக்கும் சட்ட வரைவு வாபஸ் பெறவேண்டும் என வலியுறுத்தி இப்போராட்டத்தை முன்னெடுப்பதாகத் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/238609
  15. முந்தி ஒருகாலத்திலை (~2012) WTCCஇல் இருந்து புலிகளின் பணத்தை கொள்ளை அடித்த 25 பேரின் பெயர் பட்டியல் வெளியாகியிருந்தது... அது யாருக்கேனும் நினைவிருக்கிறதா? பின்னாளில் நடு ரோட்டில் செத்த அதன் தலைவர் சுரேஸ் என்பவரின் பெயர் தான் முதலாவதாக இருந்தது. இவருக்கு போருக்குப் பின்னர் 5 வீடுகள் இருந்ததாகவும் கேள்வி.
  16. சிம்பாப்வேயின் வெற்றி ஒரு குருட்டு அதிஷ்டம் என்று சொல்ல முடியாது. துடுப்பாட்டம் ஆகட்டும், பந்துவீச்சு ஆகட்டும், களத்தடுப்பு ஆகட்டும், மிகவும் சிறப்பாகச் செயல்பட்டார்கள். மிகச் சரியான தயாரிப்புடன் வந்திருந்தார்கள். துடுப்பாடும் போது, வெகப்பந்துவீச்சாளர்களை மிகவும் இலகுவாக சமாளித்தார்கள். ஒரே ஒரு முறையான சுழற் பந்துவீச்சாளரான சாம்பாவை, நிதானமாக கையாண்டார்கள். அவர்களின் முறையான பந்துவீச்சும் துல்லியமான களத்தடுப்பும் வெற்றிக்கு வழி சமைத்தது. பிளெசிங்க் முசரபாணி தனது உயரத்தை மிகச் சிறப்பாக பாவித்தார். அவர்களின் பந்துவீச்சில் ஒவ்வொரு துடுப்பாட்டக்காரருக்கும், சரியான களத்தடுப்பை அமைத்தார்கள். இங்கிலீஷுக்கு போட்ட பந்து சரியாக தாசிங்க முசாக்கியாவின் கையில் வந்து பிடியாக விழுந்தது. அவர் நின்ற இடத்தில்தான் இங்கிலீஷ் நிறைய தடவை பிடி குடுத்து ஆட்டமிழந்திருக்கிறார். அத்தோட களத்துடுப்பு. அபாரம். ஒவ்வொருவரும் நெருப்பாக நின்றார்கள். உண்மையிலேயே, ஒரு சிறப்பான வெற்றி.
  17. தமிழ் போதைப்பொருள் கும்பல்கள் இலங்கைக்குள் மரணத்தையும் அழிவையும் கொண்டு வருவதை தடுத்த வீர பணி செய்த பொலிஸ் அதிகாரிகள் என்று அவர் பொலிசாரை பாராட்டவில்லை தானே 🙄
  18. நாட்டின் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி , நாட்டின் ஒரு மூலையில் சிவில் நிலைமையில் பொலிஸாரின் துப்பாக்கிச்சகூட்டில் சிறுவன் ஒருவள் இறந்த நிலவரத்துக்கு , உடனேயும் நேரடியாக தலையிடுவது ஒரு பிழையான முன்மாதிரி அதிகார நிறைவேற்று விடயம் . திருகோணமலை புத்தரை நினைவு கொள்ளலாம் இப்பதான் வேறு பகுதியில் வக்கீலையும் மனைவியையும் பத்துத்தரம் சுட்டு போட்டுத்தல்லியிருக்கு அனுரா இன்னமும் என் நேரடியாக அதில் இன்னமும் தலையிடவில்லை என்று என் ஒருவரும் இன்னமும் கேட்கவில்லை ?
  19. நாம் தமிழர் ஆட்சி அதிகாரம், அண்ணன் சீமான் முதல்வர் 🇦🇺💪🔥 🇨🇦 💪🔥 🇪🇺💪🔥 🇺🇸 💪🔥🇱🇰 💪🔥
  20. சரியாச் சொன்னியல். எதுக்கும் பாத்து சூதானமா இருந்துக்குங்க. 😁
  21. சில காலங்களுக்கு முன், ஒரு கருத்தாளர் கருத்துக்கு எதிர்க்கருத்து வைத்த என்னை, புலிகளின் காசை அடித்தது நான் என்றுகூறி எனது கருத்தை மடை மாற்றியிருந்தார் அவர். மடைமாற்றி, கஞ்சா கோஷ்ட்டி, பெட்டிக்கடை, அனுரா காவடி இப்படி பலபெயர். தமது கருத்துக்கு எதிர்க்கருத்து வைப்போரை தடுக்கும் செயல், தம்மை புனிதராக்குவது.
  22. சிறிதரன் இப்போ பதவிகள் பறிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்படுள்ளார், அவருடன் யாராவது சந்திப்புக்கு போயிருந்தால் கூடபோனவர்களின் பதவியும் பறிக்கப்படும், சிறி நேசனுக்கு என்ன நடந்தது என்பது சிலர் அறியாதது ஆச்சரியமே. ஆனால் சுமந்திரன் யாரையும் கூப்பிடுவதில்லை. அதற்கு வேறு காரணம் கூறுவார். சிறிதரன் என்ன கதைக்கிறார் என்பதை அறிய பிரதேச சபையினர் சாட்சியாக உள்ளனர், அவர் அதைவிட இரகசியமாக என்ன கதைக்கப்போகிறார்?
  23. அரசியல் ஊழல் பெருச்சாளிகளை அழிக்காமல், தண்டனை வழங்காமல் அரசியலில் அனுராவால் ஓரடி கூட நகர முடியாது. அனுராவின் எந்த ஒரு நடவடிக்கைக்கும் எதிர்நடவடிக்கை தயாராகி, மக்களை குழப்பும் வேலை முடுக்கி விடப்பட்டுள்ளது, வேண்டுமானால் இன்னொரு குண்டுத்தாக்குதல் நடத்தப் பாதாளக் குழுவினரை பயன்படுத்தக்கூடும், எதுவும் செய்வார்கள் தம்மை பாதுகாக்க. இல்லையேல் மக்களே இவர்களை அடித்துக்கொன்று விடுவார்கள்.
  24. ஜேர்மனியில் அடுத்து வரும் தேர்தல்களில்Afd கட்சி அமோக வெற்றி பெறும். அப்போது அதற்கான காரணத்தை போர் விரும்பும் கட்சிகள் உணரும்.
  25. இப்படி கேள்வி கேட்பவர்களை இலங்கை அரசின் நிகழ்ச்சி நிரலின் படி இயங்குபவர்கள் என சொல்லிவிட்டால் அடுத்தாக துரோகி என முத்திரை குத்துவது இலகுவாகி விடுமல்லவா..! அப்படி குத்தியபின் எவரும் கேள்வி கேட்க மாட்டார்கள் என முழக்கம் திரு நினைக்கிறார். இவர் தன் கூட்டாளிகள் என சொல்பவர்களில் ஸ்பைஸ்லாண்ட் கிருபாவும் உள்ளார். புலிகளின் காசினை ஆட்டையை போட்டவர்களில் கிருபாவும் ஒருவர். அதே போல் பாபு கேட்டரிங் முதலாளியும் இவரது நற்பெயர் லிஸ்டில் உள்ளார். தமிழ் தேசிய வியாபாரிகளை உயர்த்தி பேசி, கேள்வி கேட்பவர்களை துரோகி என முத்திரை குத்தி வயிறு வளர்க்கும் இவரை போன்றவர்கள் தான் தமிழ் மக்களிம் முதல் எதிரிகள். இறுதி வரைக்கும் அவர் சொல்லவில்லை. பாம்பு தானறிந்த இன்னொரு பாம்பின் கால்களை ஒரு போதும் வெளியே சொல்லுவதில்லை.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.