Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

stream_title_14

Showing all content posted in for the last 365 days.

This stream auto-updates

  1. Past hour
  2. 06 Jan, 2026 | 06:55 PM (துரைநாயகம் சஞ்சீவன்) இலங்கைக்கு தங்களை மீள அனுப்புமாறு இந்திய முகாமில் வசிக்கும் மன்னாரைச் சேர்ந்த ராஜினி கோரிக்கை விடுக்கின்றார். இது தொடர்பில் நேற்று (5) மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துவிட்டு இந்திய ஊடகங்களிடம் தனது நிலை தொடர்பாக தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், தாங்கள் தங்கவைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் போதியளவு அடிப்படை மற்றும் உணவு வசதிகள் இல்லாததால் தங்களை சொந்த நாட்டுக்கு அனுப்புமாறு மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை மனு கொடுத்தும் இதுவரை தம்மை அனுப்பி வைக்காததால் மிகுந்த அவதிப்பட்டு வருவதாகவும் இந்த விடயத்தில் இலங்கை ஜனாதிபதி உதவவேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கின்றார். இலங்கையில் நிலவிய பொருளாதார நெருக்கடியின் காரணமாக 2023ஆம் ஆண்டு மே மாதம் மன்னாரில் இருந்து கடல்வழியாக இந்தியாவிற்கு சென்று இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வந்த மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த ஜிம்ஸ்ரிக் அவரது மனைவி கிறிஸ்ரபேல் ராஜினி குடும்பத்தினர் தம்மை மீள இலங்கைக்கு அனுப்புமாறு கோரிக்கை விடுத்து வருகின்றனர். தங்களுடன் தங்கியிருந்த 13 குடும்பங்களில் 9 குடும்பங்கள் சட்டவிரோதமான முறையில் பணம் செலுத்தி படகில் இலங்கைக்கு மீண்டும் சென்றுள்ளதாகவும் தம்மிடம் படகில் செல்வதற்கு போதியளவு பண வசதி இல்லாத காரணத்தினால் தங்களால் செல்ல முடியாமல் உள்ளதாகவும் ராஜினி தெரிவித்தார். அத்துடன் இந்தியாவில் தங்களால் தொடர்ந்து வசிக்க முடியாதுள்ளதாகவும் தங்களை சொந்த நாட்டுக்கு அனுப்புமாறும் இந்திய ஊடகங்களிடம் மேலும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த 2022 மார்ச் மாதம் 20ஆம் திகதியிலிருந்து 300க்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடி கடல் வழியாக தமிழகத்திற்குள் அகதிகளாக வரத் தொடங்கியதாகவும் தமிழகத்திற்கு அகதிகளாக வந்த இலங்கைத் தமிழர்களை தமிழக அரசு மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்க வைத்து அவர்களுக்கு உணவு மற்றும் அடிப்படை வசதிகளை செய்து கொடுத்து வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இலங்கைக்கு தங்களை மீள அனுப்புமாறு இந்திய முகாமில் வசிக்கும் மன்னார் பெண் கோரிக்கை | Virakesari.lk
  3. யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் மற்றும் நாயன்மார்கட்டு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது, சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட 860 போதை மாத்திரைகள் மற்றும் மோட்டார் சைக்கிளுடன் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படை மற்றும் யாழ். பொலிஸ் விசேட அதிரடிப்படையுடன் இணைந்து நேற்று திங்கட்கிழமை (5) மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின்போதே இந்த கைது இடம்பெற்றுள்ளது. இதன்போது கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் ஓட்டமாவடி, சங்கானை, நல்லூர் மற்றும் கொய்யாத்தோட்டம் பகுதிகளைச் சேர்ந்த 22 முதல் 29 வயதுக்குட்பட்டவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள், போதை மாத்திரைகள் மற்றும் மோட்டார் சைக்கிளுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். யாழில் சட்டவிரோத போதை மாத்திரைகளுடன் 4 சந்தேக நபர்கள் கைது! | Virakesari.lk
  4. இதில் அனைவரும் ஒன்று சேர்ந்து உதவ வேண்டும் என்பது எனது விருப்பம் ..சோ..முடிந்தவர்கள் யாயினி பாக்கிற வேலை பாருங்களன் என்று மனதுக்குள் தன்னும் திட்டாமல் பங்காளிகளாக மாறுவீர்கள் என்று நம்புறன்.மாதந்தம் கொண்டாங்களுக்கு மொய் எழுதிறதில் கொஞ்சம், உணவங்களுக்கு போறதில் கொஞ்சம் ,புத்தகங்களுக்கு போறதில் கொஞ்சம் ,இப்படி நிறைய செலவுகளிலிருந்து சிறிதளவு எங்கள் மக்களுக்காகவும் ஒதுக்குவோமே..✍🤭
  5. Today
  6. அன்னை அவர்கள் பஸ்டா, பிசா சாப்பிட்டார்.., நலமாக உள்ளார்.., விரைவில் வீடு வருவார்… #சின்ன சின்ன ஆசை😂
  7. "முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம் 2026" இது வரை இந்த வேலைத்திட்டத்திற்கு ஆதரவு தர உறுதியளித்திருக்கும் உறவுகள் குமாரசாமி அண்ணா கோஷான் கவி அருணாசலம் அண்ணா ஏராளன் வாத்தியார் உதவி செய்ய விரும்பும் உறவுகள் விரும்பினால் நீங்களும் இணைந்து கொள்ளுங்கள் . பெயர் தெரிவிக்க விரும்பாதவர்கள் ஏராளனுடனோ அல்லது கோஷானுடனோ?(கோஷான் விரும்பும் பட்சத்தில் ) தனி மடல் மூலம் உங்கள் விருப்பத்தை தெரிவியுங்கள்
  8. மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
  9. கதை - 194 / தை பிறந்தால் … / பகுதி 01 முல்லைத்தீவு கடற்கரையோரக் கடல் கவிதைக்கு மட்டும் சொந்தமானது அல்ல - அது குடும்பங்களுக்கு உணவளித்தது - உழைப்பாளிகளான மீனவரின் கைகளை கடினமாக வடிவமைத்தது - சொல்லப்படாத துயரத்தைச் சுமந்தது. கடல் எப்போதும் அலைகளால் மட்டும் பேசுவதில்லை. சில நேரங்களில் அது மௌனமாக நிற்கும் — அந்த மௌனம் தான் மீனவர்களை அதிகம் பயமுறுத்தும். கதிரவன் அந்தக் கடலுக்குப் பிறந்தான். ஒரு மீனவரின் மகனாக, அவன் கடினமாகப் படித்து, பட்டம் பெற்று, திரும்பி வந்தான் - அவன் தந்தையும், தாத்தாவும், அவர்களுக்கு முன் வாழ்ந்தவர்களும் எல்லோரும் கடலோடு வாழ்க்கையைப் பகிர்ந்தவர்கள். ஆனால் கதிரவன் மட்டும் பல்கலைக்கழகம் பார்த்தவன். “படிச்சா எல்லாம் மாறிடும்னு நினைச்சோம்,” என அவன் தாய் சொன்னபோது, அவன் கண்ணில் கடலின் உப்பு கரைந்தது. பட்டம் பெற்றும் இன்னும் வேலை இல்லாதவன் ஆனால் எந்த வகுப்பறையும் கற்றுக்கொடுக்காததற்கு முன்பே கடல் அவனுக்கு தாளத்தைக் கற்றுக் கொடுத்தது. அது அவனுக்கு இன்று ஒரு தனி இடத்தை கொடுத்து, அவனை ஆறுதல் படுத்திக்கொண்டு இருக்கிறது. அவனது தந்தை விடியற்காலையில் வலைகளை இழுத்தபோது, கதிரவன் அலைகள் போல எழுந்து விழும் நாட்டுப்புறப் பாடல்களைப் பாடினான். இரவில், அவன் பறை மேளம் வாசித்தான், அதன் ஒலி கடலோரத் தமிழ் வாழ்க்கையின் துடிப்பை எதிரொலித்தது. வட–கிழக்கில் மீனவர்களுக்கு கடல் இருக்கிறது— ஆனால் முழு உரிமை இல்லை. வலை போட இடம் உண்டு— ஆனால் பாதுகாப்பு இல்லை. அதிகாரம் எல்லைகளை வரையறுக்கிறது. ஆனால் பசிக்கு எல்லை இல்லை. அவன் பாடல்களில் வடக்கு கிழக்கு தமிழரின் வேதனைகள் பிரதிபலிக்கும். அரசின் கெடுபிடிகள் வெளிவரும். அது தை மாதம். தை என்பது வெறும் ஒரு மாதம் அல்ல. அது தொழிலாளிகளின், குறிப்பாக உழவர்களின் பெருமையை பறைசாற்றும் மாதம். அது கதிரவனுக்கு நன்றாகத் தெரியும் அதேவேளை, உள்நாட்டுப் பகுதியில், வயல்கள் நிறைந்த பசுமை பூமியில் மதுமிதா வாழ்ந்தாள். அவள் ஒரு பல்கலைக்கழக கலைப்பீட மாணவி, வரலாற்றுப் புத்தகங்களால் நீண்ட காலமாக மறக்கப்பட்ட மூதாதையர்களால் கட்டப்பட்ட நெல் வயல்கள் மற்றும் நீர்ப்பாசன கால்வாய்களுக்கு மத்தியில் வளர்ந்தாள். தமிழரின் இயல், இசை, நடனம் என்ற மூன்று கலைகளிலும் ஆர்வம் கொண்டவளாக, ஒரு பரதநாட்டிய மற்றும் ஒரு வீணை கலைஞருமான அவள், கலை என்பது விவசாயத்தின் மற்றொரு வடிவம் - நடப்பட்டு, வளர்க்கப்பட்டு, ஒழுக்கத்தின் மூலம் அறுவடை செய்யப்பட்ட ஒன்று என்று நம்பினாள். பரதநாட்டியத்தில் அவள் கால்கள் சங்க கால நினைவுகளை எழுப்பும். வீணையில் அவள் விரல்கள் அமைதியையே இசையாக்கும். “தைப் பொங்கல் — இது மதத்தின் சொத்து அல்ல,” என்று அவள் சொல்வாள். “இது மண்ணின் திருநாள்.” என அடித்துக் கூறுவாள். அவள் தந்தை விவசாயி. வயலில் வியர்வை சிந்தியவன். நீரின்றி பயிர் வளராததைப் போல, பண்பாடு மண்ணின்றி வாழாது என்று அவளுக்குக் கற்றுக் கொடுத்தவன் அவர்கள் இருவரும் ஒருபோதும் சந்தித்ததில்லை. ஆனால் இருவருக்கும் ஒரே கேள்வி இருந்தது: நிலம், கடல் மற்றும் கண்ணியம் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகும்போது ஒரு மக்கள் எப்படி உயிர்வாழ்வார்கள்? என்பதே அது! வடக்கு மற்றும் கிழக்கைச் சேர்ந்த இளம் தமிழர்கள் கிளிநொச்சியில் ஒரு பெரிய தைப் பொங்கல் கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்ய ஒன்றுகூடினர் - “இது விழா இல்லை,” ஆரம்ப ஏற்பாடு மட்டுமே. அதை வெறும் ஒரு விழாவாக மட்டுமல்லாமல், ஒற்றுமை, வரலாறு மற்றும் உயிர் பிழைத்தல் அல்லது நிலைத்து இருத்தலுக்கான [unity, history, and survival.] ஒரு தளமாகவும் பயன்படுத்த எண்ணினர். அது மதச்சார்பற்ற, கூட்டு ஒற்றுமைக்கான மற்றும் ஆழமான தமிழ் உணர்வாகவும் இருக்க வேண்டும் என்றும் முடிவெடுத்தனர். - தமிழ் இன்றைய அரசுகளை விட பழமையானது, குறைந்தது 2500 ஆண்டுகளுக்கு முன்பே பேசப்பட்டது, சங்கக் கவிதைகள் வடித்தது. ஏன், "ஏற்றுக உலையே! ஆக்குக சோறே! கள்ளும் குறைபடல் ஓம்புக; ஒள்ளிழைப் பாடுவல் விறலியர் கோதையும் புனைக " - என்று பொங்கள் பற்றி, புறநானூறு 172 இல், கி மு 500 ஆண்டிலேயே இலக்கிய நடையுடன் கூறிய தமிழ் இது. கடற்படை கட்டுப்பாடுகளால் இடம்பெயர்ந்த மீனவ சமூகங்களை பிரதிநிதித்துவப்படுத்த கதிரவன் அங்கு வந்திருந்தான். பண்டைய தமிழ் மரபுகளில் வேரூன்றிய ஒரு கலாச்சார நிலையை முன்மொழிய மதுமிதா சக பல்கலைக்கழக மாணவர்களுடன் அங்கு வந்தாள். ஒரு ஒத்திகைக்காக கதிரவன் பாடியபோது, அறை அமைதியாகி விட்டது. அவனது குரல் கடலின் உப்பை சுமந்து சென்றது, தங்கள் சொந்த கடல் நீரில் மீன்பிடிப்பதை அல்லது அணுகுவதை கட்டுப்படுத்தும் அல்லது மறுக்கும் அரச நிர்வாகத்தால் ஏற்பட்ட தலைமுறைகளின் வலி அங்கு தெரிந்தது. மேலும், “இது ஒரு பண்டிகை அல்ல,” “இது எங்கள் வரலாற்றின் பிரகடனம்.” என்று ஒத்திகையின் போது கதிரவன் சொன்னான். அதேபோல, மதுமிதா பதிலுக்கு வீணை வாசித்தபோது, இசைக்குரல்கள் தெளிவான தை நீரைப் போல - அமைதியாக மற்றும் பிரார்த்தனையுடன் ஒலித்தன. அன்று அவர்கள் அதிகம் பேசவில்லை. அவர்கள் பேச வேண்டிய அவசியமும் ஏற்படவில்லை. ஆனால் அங்கு கண்ட அறிமுகம் அதற்கான வழியைக் காட்டி விட்டது தைவரல் காற்றோடு பொங்கலும் பொங்க தைத்த ஆடையோடு சிறுவரும் மகிழ தையல் கடிமனம் நன்று நிறைவேற தை பிறந்தால் வழி பிறக்குமே! தமிழர் திருநாள் உழவர் பெருநாள் தனித்துவம் கொண்ட எங்கள் அடையாளம் தங்கக் கதிரவனை விழுந்து கும்பிட்டு தலைவி தலைவன் கொண்டாடும் கொண்டாட்டம்! நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி: 02 தொடரும் துளி/DROP: 1976 [கதை - 194 / தை பிறந்தால் … / பகுதி 01 https://www.facebook.com/groups/978753388866632/posts/33157598130555407/?
  10. இலங்கையில் ராமர், ஹனுமான் படங்களுடன் வைக்கப்பட்ட பேனர் ஏன் சர்ச்சை ஆனது? பட மூலாதாரம்,SMU படக்குறிப்பு,இலங்கையில் வைக்கப்பட்ட பேனரில் உள்ள புகைப்படம் கட்டுரை தகவல் ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இலங்கையின் மன்னார் தீவையும், இந்தியாவின் ராமேஸ்வரத்தையும் இணைக்கும் வகையில் அமைந்துள்ள மணல் திட்டுக்களை ராமாயணத்துடன் தொடர்பு படுத்துவது குறித்து இலங்கையில் சர்ச்சை எழுந்துள்ளது. இலங்கையின் மன்னார் தீவுக்கும் இந்தியாவின் ராமேஸ்வரம் தீவுக்கும் இடையில் உள்ள கடல் பகுதியில் தொடர்ச்சியாக மணல் திட்டுகள் உள்ளன. இதனை இந்துக்கள் ராமர் பாலம் என அழைக்கின்றனர். வேறு சிலர் ஆதாமின் பாலம் எனவும் குறிப்பிடுகின்றனர். இந்த நிலையில், இலங்கையின் சுற்றுலாத் துறை அமைச்சின் கீழ் இயங்கும் சுற்றுலா அதிகார சபையினால் மன்னார் தீவின் நுழைவாயில் பகுதியில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்புப் பலகையொன்றில் இந்து கடவுள்களின் உருவப் படங்கள் காட்சிப் படுத்தப்பட்டதை அடுத்தே இந்த சர்ச்சை எழுந்துள்ளது. இந்த அறிவிப்புப் பலகையில் ராமர், ஹனுமான் ஆகியோரின் உருவப் படங்கள் இடம்பெற்றுள்ளன. சுற்றுலா அதிகார சபையின் வட மாகாண அலுவலகத்தினால் இந்த அறிவிப்புப் பலகை சமீபத்தில் காட்சிப்படுத்தப்பட்டது. ராமர் பாலமாக இந்துக்களால் கருதப்படும் இந்தப் பகுதி வரலாற்று முக்கியத்துவமும் சூழல் முக்கியத்துவமும் கொண்ட இடமாகக் கருதப்படுகிறது. ராவணன் சீதையை இலங்கைக்குக் கடத்தி வந்ததன் பின்னர், இலங்கைக்கு வந்த சீதையை மீட்பதற்காக ராமர் தலைமையிலான படையினர் செல்வதற்காக அனுமன் ஒரு பாலத்தை அமைத்ததாக ராமாயணம் கூறுகிறது. இந்த மணல் திட்டுக்களே அந்தப் பாலம் என இந்துக்கள் கருதுகின்றனர். ஆனால், இதனை ஆதாமின் பாலம் என்றே சில தரப்பினர் தொடர்ந்து குறிப்பிட்டு வருகின்றனர். ஆனால், இந்த அறிவிப்புப் பலகை, இந்து மதத்தை அடிப்படையாகக் கொண்டு வைக்கப்பட்டுள்ளது என்றும் இதனை அந்த இடத்திலிருந்து அகற்ற வேண்டும் என்றும் மன்னாரைச் சேர்ந்த கிறிஸ்தவ மத குருமார்கள் கோரியுள்ளனர். பட மூலாதாரம்,SMU இந்து சமயக் கடவுள்களின் படங்களைத் தாங்கியுள்ள இந்த பெயர்ப் பலகை மன்னாரின் மத நல்லிணக்கத்தைப் பாதிக்கிறது என மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தின் மன்னார் மறைக் கோட்ட முதல்வர் பி.கிறிஸ்துநாயகம் தெரிவித்துள்ளார். மன்னார் நகர சபைக்கு பி. கிறிஸ்துநாயகம் எழுதியுள்ள கடிதத்தில் இதனை குறிப்பிட்டுள்ளார். இது மதங்களுக்கு இடையிலான ஒற்றுமையைச் சீர்குலைத்து குழப்பத்தையும் தோற்றுவிப்பதாக உள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தப் பெயர்ப் பலகை தொடர்பாக பொதுமக்கள் தமது அதிருப்தியையும் எதிர்ப்பையும் தினமும் தமக்குத் தெரிவித்து வருவதாகவும் அவர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே மன்னாரிலுள்ள அனைத்து மத மக்களின் நன்மையையும் கருதி, இந்த பெயர் பலகையை இந்த இடத்திலிருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பி. கிறிஸ்துநாயகம் கேட்டுக்கொண்டிருக்கிறார். பட மூலாதாரம்,MARAVANPULLAVU SACHCHITHANANTHAN படக்குறிப்பு,சச்சிதானந்தன் 'அகற்ற கூடாது' ஆனால், மன்னார் நகர நுழைவாயிலில் காட்சிப் படுத்தப்பட்டுள்ள இந்த அறிவிப்புப் பலகையை அகற்றக்கூடாது என இலங்கை சிவசேனை அமைப்பின் தலைவர் க. சச்சிதானந்தன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிபிசியிடம் பேசிய அவர், "ராமருக்கும் மன்னாருக்கும் தொடர்பு இருக்கிறது. அவர்கள் வந்திறங்கியது மன்னார் தீவில்தான். திரும்பி போனதும் மன்னார் தீவிலிருந்துதான். இது தொடர்பான இலக்கிய பதிவுகள் இருக்கின்றன. இலக்கிய பதிவுகளின்படி, ராமர் மன்னார் தீவில் வந்திறங்கினார். பின்னர் சீதையையும் கூட்டிக்கொண்டு ராமேஸ்வரம் போனார். தமிழர்களை சமய அடிப்படையில் பிளவுபடுத்துகிற வேலையை இப்போது மன்னார் கத்தோலிக்கர்கள் செய்துக்கொண்டிருக்கின்றார்கள்" என்று தெரிவித்தார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,மணல் திட்டுகளின் புகைப்படம் கடிதம் எழுதியவர் என்ன சொல்கிறார்? க.சச்சிதானந்தனின் கருத்து குறித்தும் கடிதம் எழுதப்பட்டமைக்கான காரணம் குறித்தும் பி.கிறிஸ்துநாயகத்திடம் பிபிசி கேட்டபோது, "மன்னார் நகரத்திற்குள் வருகின்ற நுழைவாயிலில் இருக்கின்ற படியினால், அது சில வேளைகளில் மற்ற மதத்தவர்களை புண்படுத்தலாம். அதனால், அந்த இடத்திலிருந்து எடுங்கள் என்று மாத்திரமே சொல்லப்பட்டிருக்கின்றது. அதை வேறு இடத்தில் வைக்கலாம். அதில் எந்தவொரு பிரச்னையும் இல்லை. தலைமன்னாரில் வைக்கலாம் அல்லது வேறு எங்கேயும் வைக்கலாம். நுழைவாயில் என்ற படியால் மாத்திரமே இந்த கடிதம் எழுதப்பட்டது. அதைவிடுத்து, ஏனைய மதங்களை புண்படுத்தும் வகையிலான நோக்கம் என்னிடம் இருக்கவில்லை." என்று தெரிவித்தார். பட மூலாதாரம்,RUWAN RANASINGHE படக்குறிப்பு,சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க அரசாங்கம் என்ன சொல்கின்றது? மன்னார் நகர் நுழைவாயிலில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள படம் தொடர்பில் எழுந்துள்ள பிரச்னை குறித்து பிபிசி தமிழ், சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்கவை தொடர்புக் கொண்டு வினவியது. மதங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை பாதுகாக்கும் வகையில் இந்த பிரச்னை தொடர்பில் தாம் தலையீடு செய்து பிரச்னையை தீர்க்க உடனடி நடவடிக்கை எடுப்பதாக அவர் தெரிவித்தார். "சமூகத்தில் இவ்வாறு சர்ச்சைகளை எழுப்பும் சம்பவங்கள் நிகழும் பட்சத்தில், அந்த குழுக்களுடன் கலந்துரையாடல்களை நடத்த தயாராகவுள்ளோம். சமயத் தலைவர்கள், சமூகத்திலுள்ள முக்கியஸ்தர்கள் உள்ளிட்டோருடன் கலந்துரையாடல்களை நடத்தி சிறந்ததொரு தீர்வை எடுக்க வேண்டும். உரிய குழுக்களுடன் கலந்துரையாடல்களை நடத்தி, அனைத்து மதங்களையும் பாதுகாக்கும் விதத்தில் இந்த பிரச்னையை தீர்த்து வைக்க நாங்கள் தலையீடு செய்வோம்" என பிரதி அமைச்சர் குறிப்பிட்டார். இவ்வாறான பிரச்னைகள் தொடர்ச்சியாக வரும் சந்தர்ப்பத்தில் சுற்றலாத்துறைக்கு பாதிப்புக்கள் ஏற்படும் வாய்ப்புள்ளதா என கேட்டபோது, ''அப்படியான பிரச்னைகளுக்கு வாய்ப்பில்லை'' என்றார் ருவன் ரணசிங்க. "நாங்கள் மிகுந்த தெளிவான சிந்தனையுடன் சுற்றுலாத் துறையை மேம்படுத்தி வருகின்றோம். இந்திய சுற்றுலா பயணிகளுக்கு இதனூடாக எந்தவித பிரச்னையும் ஏற்படாது. யாழ்ப்பாணம், மன்னார், நுவரெலியாவின் சீதை அம்மன் கோவில், ராவணனின் இடங்கள் ஆகிய இடங்களுக்கு இந்திய சுற்றுலாப் பயணிகள் பயணம் செய்கின்றார்கள். அதில் எந்தவித பிரச்னையும் இல்லை'' என ருவன் ரணசிங்க தெரிவிக்கின்றார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ckgx3l0zg47o
  11. வடமராட்சி கிழக்கு கடற் பகுதியில் இறந்த நிலையில் கரை ஒதுங்கும் ஆமைகள் 06 Jan, 2026 | 02:30 PM வடமராட்சி கிழக்கு கடற்பகுதியில் சில நாட்களாக ஆமைகள் இறந்த நிலையில் கரை ஒதுங்கி வருகின்றன. அந்தவகையில் செவ்வாய்க்கிழமை (06) ஆமையின் இறந்த உடல்கள் கரையொதுங்கிய உள்ளன. கடலின் சீற்றம் காரணமாக கடல் கொந்தளிப்பாக காணப்படுவதால் காயமடைந்த ஆமைகள் உயிரிழந்து கரை ஒதுங்குவதாக அப்பகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றனர். ஆமைகளை பிடிப்பதும், இறைச்சிக்காக பயன்படுத்துவதும் சட்டவிரோதம் என்பதால் கரையொதுங்கிய ஆமைகள் துர்நாற்றம் வீசக்கூடிய நிலையிலும் உருக்குலைந்து காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/235346
  12. நுண்நிதி கடன் பிரச்சினைகளுக்கு பாராளுமன்றத்தில் புதிய சட்டமூலம் சமர்பிப்பு - லக்ஷ்மன் நிபுணராச்சி 06 Jan, 2026 | 12:37 PM நுண்நிதி கடன்கள் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக புதிய சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் நிபுணராச்சி தெரிவித்தார். நுண்நிதி கடன்கள் பெற்ற சுமார் 200 பெண்கள் தற்போது தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதற்கிடையில், கொழும்பு பங்குச் சந்தையின் பெயர் மற்றும் சின்னத்தை தவறாகப் பயன்படுத்தி வைப்பாளர்களிடம் மில்லியன் கணக்கான ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. போலியான மொபைல் பயன்பாடு மூலம் இந்த மோசடி செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு பங்குச் சந்தையின் மூத்த துணைத் தலைவர் நிரோஷன் விஜேசுந்தர தெரிவித்தார். இது தொடர்பாக குற்றப் புலனாய்வு பிரிவிடம் ஏற்கனவே விசாரணைகளைத் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, மேலும் இந்த மோசடி கடந்த ஆண்டு நவம்பர் முதல் நடந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் போது வைப்பாளர்கள் மிகவும் கவனமாக இருக்குமாறு கேட்டுக்கொள்வதாக நிரோஷன் விஜேசுந்தர தெரிவித்தார். https://www.virakesari.lk/article/235336
  13. வெனிசுவேலா நாட்டின் இடைக்கால ஜனாதிபதியாக பதவி ஏற்றார் டெல்சி ரோட்ரிக்ஸ் Published By: Digital Desk 3 06 Jan, 2026 | 01:23 PM வெனிசுவேலா நாட்டின் இடைக்கால ஜனாதிபதியாக டெல்சி ரோட்ரிக்ஸ் பதவியேற்றார். அமெரிக்க இராணுவத்தால் நாடு கடத்தப்பட்ட வெனிசுவேலாவின் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், வெனிசுவேலாவை நிலையான, நம்பிக்கையான ஆட்சியின் கையில் ஒப்படைக்கும் வரையில் அமெரிக்கா நிர்வாகம் செய்யும் எனவும், வெனிசுவேலா மசகு எண்ணெய் வளங்களை பாதுகாக்க இராணுவம் களத்தில் நிறுத்தப்படும் எனவும் தெரிவித்தார். மேலும் அமெரிக்க இராணுவ படைகள் ஜனவரி 3ஆம் திகதியன்று நடத்திய அதிரடி தாக்குதலில் வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டார். அவர் வெனிசுவேலா நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டு அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் பூமியின் நரகம் என்று அழைக்கப்படும் ஆர்.புரோக்லின் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார். நிக்கோலஸ் மதுரோவுக்கு எதிரான வழக்கை மார்ச் 17 ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ள நீதிமன்றம், அன்றைய தினம் மதுரோ ஆஜராகவும் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனிடையே வெனிசுவேலாவின் அடுத்த தலைவர் யார் என்ற கேள்வி எழுந்தநிலையில், அந்நாட்டின் துணை ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸை இடைகால அதிபராக நியமித்து அந்நாட்டு உயர் நீதிமன்றம் அறிவித்தது. இந்நிலையில், டெல்சி ரோட்ரிக்ஸ், வெனிசுவேலாவின் இடைக்கால அதிபராக அந்நாட்டின் நாடாளுமன்றக் கட்டிடத்தில் பதவியேற்றார். ரோட்ரிக்ஸுக்கு அவரது சகோதரரும், தேசிய சட்டமன்றத் தலைவருமான ஜோர்ஜ் ரோட்ரிக்ஸ் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். உறுதி மொழி ஏற்பதற்கு முன், எங்கள் தாயகத்திற்கு எதிரான சட்டவிரோத இராணுவ ஆக்கிரமிப்பால் வெனிசுவேலா மக்கள் மீது ஏற்படுத்தப்பட்ட துன்பங்களுக்கு நான் வருத்தத்துடன் வருகிறேன் என்று அவர் தனது வலது கையை உயர்த்தி கூறினார். டெல்சி ரோட்ரிக்ஸ் 2018 ஜூன் முதல் வெனிசுலாவின் துணை ஜனாதிபதியாக பணியாற்றி உள்ளார். அவர் நிதி மற்றும் எண்ணெய் வள அமைச்சராகவும் உள்ளார். துணை ஜனாதிபதிபொறுப்புகளை தாண்டி 2 முக்கிய துறையின் அமைச்சராக இருக்கும் காரணத்தால் வெனிசுவேலா அரசில் மிக சக்திவாய்ந்த நபராக உள்ளார். 1969 மே 18 அன்று வெனிசுவேலா காரக்காஸில் பிறந்த டெல்சி ரோட்ரிக்ஸ், ஜோர்ஜ் அன்டோனியோ ரோட்ரிக்ஸ் என்ற இடதுசாரி கெரில்லா பிரிவு தலைவரின் மகள் ஆவார். 1970களில் லீகா சோசலிஸ்டா கட்சியை நிறுவியவர் அவரது தந்தை. https://www.virakesari.lk/article/235343
  14. ஐ.எம்.எப். வரையறைகளுக்குள் அத்தியாவசிய தேவைகளுக்கு முன்னுரிமை – ஜனாதிபதி Published By: Vishnu 06 Jan, 2026 | 05:05 AM சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட நீடிக்கப்பட்ட கடன் வசதியின் வரையறைகளின்படி, தேசிய உற்பத்தியில் 13 சதவீதம் மாத்திரமே செலவிட முடியும். அதில் குறைந்தபட்சம் 4% மூலதனச் செலவாக ஒதுக்கப்பட வேண்டும். அதன்படி, 'நாட்டின் அத்தியாவசியத் தேவைகளுக்கு முன்னுரிமை அளித்தல்' என்ற அடிப்படையில் அமைச்சுகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள நிதி வரையறைகளுக்குள், தேசிய முன்னுரிமைகளை அடையாளம் கண்டு,மக்களின் நலனுக்காக அதிகபட்ச செயல்திறனுடன் அந்த நிதி ஒதுக்கீடுகளைப் பயன்படுத்துவது, அனைத்து அமைச்சுகளின் செயலாளர்கள் மற்றும் அரச அதிகாரிகளின் பொறுப்பாகும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். மூலதனச் செலவாக எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டாலும், உகந்த முறையில் அவற்றை செலவழித்து தேவையான நிதி மற்றும் பௌதீக முன்னேற்றத்தை அடைய கடந்தகால அரச பொறிமுறை தவறியதால், இந்நாட்டு மக்கள் பல அபிவிருத்தி வாய்ப்புகளை இழந்துள்ளனர் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். அமைச்சுகளின் செயலாளர்களுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் திங்கட்கிழமை (05) முற்பகல் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இதனைத் தெரிவித்தார். இங்கு உரையாற்றிய ஜனாதிபதி, சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட நீடிக்கப்பட்ட கடன் வசதியின் வரையறைகளின்படி, தேசிய உற்பத்தியில் 13மூ மாத்திரமே செலவிட முடியும்.அதில் குறைந்தபட்சம் 4மூ மூலதனச் செலவாக ஒதுக்கப்பட வேண்டும்.அதன்படி, 'நாட்டின் அத்தியாவசியத் தேவைகளுக்கு முன்னுரிமை அளித்தல்' என்ற அடிப்படையில் அமைச்சுகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நாட்டின் பிரதான முதலீட்டாளர் அரசாங்கம் என்ற வகையில், மூலதனச் செலவினங்களுக்காக இந்த ஆண்டு வரவு செலவுத்திட்டத்தில் 1400 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு மேலதிகமாக, டித்வா சூறாவளியால் ஏற்பட்ட சேதங்களை சீர்செய்வதற்காக கூடுதலாக 500 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. ஒதுக்கப்பட்ட நிதியை முறையாக நிர்வகிப்பதன் மூலம் எதிர்பார்க்கும் பௌதீக முன்னேற்றத்தை அடைவதே அமைச்சுகளின் செயலாளர்களுக்கு உள்ள முதன்மைப் பொறுப்பு.முன்மொழியப்பட்ட திட்டங்களைச் செயல்படுத்தத் தவறினால் மக்களுக்குக் கிடைக்க வேண்டிய நன்மைகள் அதன் ஊடாக இழக்கப்படும் என்று குறிப்பிட்டார். 2026 ஆம் ஆண்டில் அமைச்சு மட்டத்தில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ள வேலைத்திட்டங்கள் மற்றும் ஒதுக்கப்பட்டுள்ள நிதிகளை பயன்படுத்தல் குறித்தும் இதன்போது தனித்தனியாக விடயங்கள் முன்வைக்கப்பட்டன.ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க,மற்றும் அனைத்து அமைச்சுகளின் செயலாளர்கள் உட்பட நிதி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/235325
  15. நாவாந்துறை சென். மேரிஸ், கொம்பனித் தெரு ஜாவா லேன் கழகங்களுக்கு இலகுவான வெற்றிகள் Published By: Vishnu 05 Jan, 2026 | 11:51 PM (நெவில் அன்தனி) கொழும்பு குதிரைப் பந்தயத் திடலில் இன்று திங்கட்கிழமை (05) நடைபெற்ற இரண்டு சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டப் போட்டிகளில் யாழ். நாவந்துறை சென். மேரிஸ் கழகமும் கொம்பனித் தெரு ஜாவா லேன் கழகமும் இலகுவான வெற்றிகளை ஈட்டிக்கொண்டன. மொரகஸ்முல்லை கழகத்திற்கு எதிரான பி குழு போட்டியில் 4 - 0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றியீட்டிய சென். மேரிஸ் கழகம் 7 புள்ளிகளுடன் நிகர கோல் வித்தியாச அடிப்படையில் அணிகள் நிலையில் முதலாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. இன்றைய போட்டியில் ஏகப்பட்ட இலகுவான கோல் போடும் வாய்ப்புகளைத் தவறவிட்ட சென். மேரிஸ் கழகம் கடினமான சற்று சூழ்நிலைகளில் கோல்களைப் போட்டது. முழுப் போட்டியிலும் திறமையாக விளையாடிய சென். மேரிஸ் கழகம் இந்த வெற்றியுடன் சுப்பர் 8 சுற்றுக்கான தனது வாய்ப்பை சற்று அதிகரித்துக்கொண்டுள்ளது. எவ்வாறாயினும் மொரகஸ்முல்லை கழகத்தின் பின்கள வீரர் 41ஆவது நிமிடத்தில் போட்டுக் கொடுத்து சொந்த கோலே சென். மெரிஸ் கழகத்திற்கு திருப்புமுனையாக அமைந்தது. அதுவரை சென் மேரிஸ் கழகம் குறைந்தது 4 கோல் போடும் வாய்ப்புகளைத் தவறவிட்டிருந்தது. இடைவேளைக்குப் பின்னர் முழுத் திறமையுடன் விளையாடிய சென் மேரிஸ் கழகம், வெளிநாட்டு வீரர்களின் ஆற்றல்களின் உதவியுடன் மேலும் 3 கோல்களைப் போட்டது. இரண்டாவது ஆட்ட நேரத்தின் மத்திய பகுதியில் 11 நிமிட இடைவெளியில் ஆபரிக்கர்கள் 3 கோல்களைப் போட்டு சென் மேரிஸ் கழகத்துக்கு இலகுவான வெற்றியை ஈட்டிக்கொடுத்தனர் ஜோன் லொவனி 62ஆவது மற்றும் 65ஆவது நிமிடங்களில் இரண்டு கோல்களைப் போட்டதுடன் டஞ்சுமா கம்பாரி 75ஆவது நிமிடத்தில் ஒரு கோலைப் போட்டார். ஜாவா லேன் வெற்றி தனது முதல் இரண்டு போட்டிகளில் வெற்றிபெறத் தவறிய ஜாவா லேன் கழகம் ஏ குழுவுக்கான இன்றைய போட்டியில் இ.போ.ச.வை 5 - 0 என்ற கோல்கள் கணக்கில் மிக இலகுவாக வெற்றிகொண்டது. போட்டி ஆரம்பித்து 5 நிமிடங்கள் ஆன நிலையில் ஜாவா லேன் அணித் தலைவர் ஹர்ஷன சுமுது முதலாவது கோலைப் போட்டு தனது அணியைத் முன்னிலையில் இட்டார். 15 நிமிடங்கள் கழித்து முன்னாள் சென். லூசியா மறறும் 19 வயதுக்குட்பட்ட இலங்கை வீரர் டெரிக் பெர்னான்டோ அருமையான கோல் ஒன்றைப் போட்டு ஜாவா லேனை 2 - 0 என முன்னிலையில் இட்டார். போட்டியின் 31ஆவது நிமிடத்தில் ஜாவா லேன் கழகத்தின் 3ஆவது கோலை ஒலுவாசெயுன் ஒலாவேல் போட்டார். இடைவேளைக்குப் பின்னர் 57ஆவது நிமிடத்தில் தனது இரண்டாவது கோலை ஒலுவாசெயுன் ஒலாவேல் போட்டதுடன் உபாதையீடு நேரத்தில் ஜாவா லேனின் 5ஆவது கோலை ஹர்ஷன சுமுது போட்டார். ஜாவா லேனுக்கு இலகு வெற்றி https://www.virakesari.lk/article/235312
  16. குமாரசாமி, உங்களது ஆதங்கம் நியாயமானதே. எனக்கும் இவ்வாறான அனுபவங்கள் இருக்கின்றன. எங்கள் இருவருக்கும் இருக்கும் இந்தப் பிரச்சினை பலருக்கும் இருக்கும். தனியாளாக உதவி செய்ய முன்வரும் போது இந்தச் சிக்கல் கண்டிப்பாக எவரும் எதிர்நோக்க வேண்டி வரும். இதில் யாரையும் குறை சொல்ல முடியாது. அங்கே அவர்களின் தேவைகள், எதிர்பார்ப்புகள் அதிகம். முன்னோடி, ஒரு உதவி நிறுவனமாக செயற்பட ஆரம்பிக்கும் போது, அதற்கான தனி வங்கிக் கணக்கு இருக்கும். எனக்கு நம்பிக்கை இருக்கிறது. முன்னோடியின் செயற்பாடுகள் பற்றி அதன் செயற்பாட்டாளர்கள் விரைவில் அறிவிப்பார்கள். காத்திருப்போம்.
  17. வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்திற்கான நிலம், பாதையை விடுவிக்குமாறு ஆளுனருக்கு கடிதம்! வவுனியா நெடுங்கேணி வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்திற்கான நிலம் மற்றும் பாதையை விடுவித்து தருமாறு வடக்கு மாகாண ஆளுனர் நா.வேதநாயனுக்கு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார். வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வரலாற்று தொண்மைமிக்க வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தின் வழிபாட்டு செயற்பாடுகளுக்காக ஆலயம் அமைந்துள்ள பகுதியின் ஒரு ஏக்கர் காணியினை ஆலயத்திற்கு விடுவித்து தருமாறு ஆலய அறங்காவலர் சபையினர் தன்னிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக ப.சத்தியலிங்கம் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் ஆலயத்திற்கு செல்லும் பாதையினை வவுனியா வடக்கு பிரதேசசபைக்கு விடுவித்து தரும் பட்சத்தில் குறித்த பாதையினை தம்மால் புனரமைக்க முடியுமென வவுனியா வடக்கு பிரதேசசபையினரும் தெரிவித்துள்ளனர். எனவேஇவ்விடயத்தில் நேரடியாக தலையீடு செய்து, வரலாற்று தொண்மைமிக்க ஆலயத்திற்கான காணி மற்றும் பாதையினை மிகவிரைவாக விடுவித்துத் தருமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் ஆளுநரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். https://akkinikkunchu.com/?p=355085
  18. 10 மில்லியன் ரூபா மோசடி - மட்டக்களப்பை சேர்ந்த இளைஞனும் யுவதியும் கைது By Batticaloa சமூக ஊடகங்களில் ‘டயலொக் மெகா வாசனா’ என்ற போலி அதிஸ்டலாப சீட்டு மூலம் பொதுமக்களை ஏமாற்றி 10 மில்லியன் ரூபா மோசடி செய்த குற்றச்சாட்டில் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றப் புலனாய்வுத் துறையின் (CID) வடக்குப் பிரிவின் அதிகாரிகளால் ஆணொருவரும் பெண்ணொருவரும் நேற்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். 29 வயதுடைய சந்தேக நபர்கள் இருவரும் மட்டக்களப்பைச் சேர்ந்தவர்கள் பொலிஸார் தெரிவித்துன்னளர். சம்பவம் குறித்து குற்றப் புலனாய்வுத் துறையின் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் https://www.battinews.com/2026/01/10_6.html
  19. மாகாணசபைத் தேர்தல் தொடர்பான நகர்வுகள் : நாடாளுமன்ற சபை அமர்வு இன்று ஆரம்பம் 06 January 2026 2026 ஆம் ஆண்டுக்கான முதலாவது நாடாளுமன்ற அமர்வு இன்று(06) நடைபெறவுள்ளது. அதன்படி, இந்த வாரத்திற்கான நாடாளுமன்ற அமர்வு இன்று முதல் எதிர்வரும் 09 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முற்பகல் 9.30 மணிக்கு நாடாளுமன்ற சபை அமர்வு ஆரம்பிக்கப்படவுள்ளது. அதனையடுத்து, முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை கடற்றொழில் சார்ந்த விடயங்களும், கடற்றொழிலாளர் ஓய்வூதிய சமூகப் பாதுகாப்பு குறித்த விடயங்களும் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன. அத்துடன், மாகாண சபைத் தேர்தல் எந்த முறைமையின் கீழ் நடத்தப்பட வேண்டும் என்பதை ஆராய்வதற்கான குழுவை நியமிப்பதற்கான பிரேரணையும் சபையில் சமர்பிக்கப்படவுள்ளது. அந்தக் குழு மாகாண சபை தேர்தல் தொடர்பான முன்மொழிவுகளையும், விதப்புரைகளையும் சமர்ப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. https://hirunews.lk/tm/439271/progress-regarding-the-provincial-council-elections-parliamentary-session-begins-today
  20. சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி : தீவிர கண்காணிப்பில் இருப்பதாக தகவல் 06 January 2026 காங்கிரஸின் மூத்த தலைவரும், அக்கட்சியின் முன்னாள் தலைவருமான சோனியா காந்தி, திடீர் உடல் நலக்குறைவு காரணமாக டெல்லியில் உள்ள கங்கா ராம் மருத்துவமனையில் இன்று (06) அனுமதிக்கப்பட்டார். இன்று காலை சோனியா காந்தி வழக்கமான மருத்துவப் பரிசோதனைகளுக்காகவே கங்கா ராம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். எனினும், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவரது தற்போதைய உடல்நிலையைக் கருத்தில் கொண்டு மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுமாறு அறிவுறுத்தினர். இதனைத் தொடர்ந்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தற்போது தீவிர மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். மேலும், "அவருக்குத் தேவையான மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், தற்சமயம் அவர் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருக்கிறார்" எனவும் சோனியா காந்தியின் உடல்நிலை குறித்து மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அத்துடன், "அவரது உடல்நிலையில் பெரிய அளவிலான பாதிப்புகள் ஏதுமில்லை. சிகிச்சைக்குப் பின் அவர் விரைவில் நலமுடன் மருத்துவமனையிலிருந்து வெளியேறுவார்" எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. https://hirunews.lk/tm/439321/sonia-gandhi-admitted-to-hospital-reportedly-under-intensive-care
  21. “500 பொலிஸ் அதிகாரிகள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை” இலங்கை பொலிஸ் துறையில் ஊழல் மற்றும் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களைத் தடுப்பதற்காக எடுத்துவரும் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக, நூற்றுக்கணக்கான அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸ்மா அதிபர் ஜெனரல் பிரியந்த வீரசூரிய தெரிவித்தார். அதன்படி, போதைப்பொருள் தொடர்பான குற்றங்களில் ஈடுபட்டதற்காக சுமார் 500 பொலிஸ் அதிகாரிகள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், தவறு உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த அதிகாரிகளில் பலர் சேவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். பஹலகம பொலிஸ் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சி அதிகாரிகளுக்கான பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட பொலிஸ்மா அதிபர் ஜெனரல் பிரியந்த வீரசூரியஇந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார். மேலும் அவர் கூறியுள்ளதாவது, நேர்மையை நிலைநிறுத்தவும், தங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதைத் தவிர்க்கவும் அவர் அதிகாரிகளை வலியுறுத்தினார், பொலிஸ் துறைக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள் ஏனைய பொது ஊழியர்களுக்கு வழங்கப்படுவதை விட மிக அதிகம், அத்துடன், அவை பொது நலனுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். இந்த அதிகாரங்களை நீங்கள் தவறாகப் பயன்படுத்தினால் பாரிய விளைவுகளை எதிர்கொள்ள நேரிடுவதுடன், படைக்குள் ஒழுக்கம் மற்றும் பொறுப்புக்கூறலின் முக்கியத்துவத்தை பெறவேண்டும் மேலும், பொலிஸ் துறையில் தற்போது 31,000 அதிகாரிகள் பற்றாக்குறை இருப்பதாகவும், இந்த எண்ணிக்கை மூன்று ஆண்டுகளுக்குள் 40,000 ஆக உயரும் என்றும் கூறினார். இதை நிவர்த்தி செய்ய, இந்த ஆண்டு 10,000 புதிய அதிகாரிகளை ஆட்சேர்ப்பு செய்வது ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். https://www.tamilmirror.lk/செய்திகள்/500-பொலிஸ்-அதிகாரிகள்-மீது-ஒழுக்காற்று-நடவடிக்கை/175-370632
  22. கதிர்காம ஆலயத் தங்கத்தை விற்கத் தீர்மானித்தது ஏன்? Jan 6, 2026 - 10:21 AM கதிர்காம ஆலயத்தின் பொறுப்பிலுள்ள தங்கக் கையிருப்பில் ஒரு பகுதியை விற்பனை செய்யத் தீர்மானித்தமைக்கான காரணம் குறித்து கதிர்காம ஆலயத்தின் பஸ்நாயக்க நிலமே திலின மதுசங்க தெளிவுபடுத்தினார். மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் கண்காணிப்பு விஜயமொன்றில் கலந்துகொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார். "சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளத்தினால் கதிர்காம ஆலயத்திலுள்ள தங்கக் கையிருப்பில் ஒரு பகுதி நீரில் சிக்கியது. அவ்வாறு தங்கம் நீரில் சிக்கும் போது, ஏதேனும் ஒரு காரணத்தினால் அந்த தங்கம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டால் அதற்கு யார் பொறுப்பு கூறுவது? அதனால்தான் நான் இந்த முடிவை எடுத்தேன். இவ்வேளையில் அரசாங்கமும் பெரும் சிரமத்திற்கு உள்ளாகக்கூடும் என்பதால், அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் ஏனைய திட்டங்களுக்கு உதவவே நாம் எதிர்பார்த்தோம். மாறாக இது அரசாங்கத்துடனான ஒரு டீலோ அல்லது ஜனாதிபதியுடனான டீலோ அல்ல. அப்படி இல்லை. ஜனாதிபதி குறைந்தபட்சம் என்னிடம் இதிலிருந்து உதவி செய்யுமாறு கோரிக்கை கூட விடுக்கவில்லை. தங்கத்தை சரியான முறையில் விற்பனை செய்வேன், அதற்கான 100 வீத பொறுப்பை நான் ஏற்கிறேன். இந்தத் தங்கத்தை குறைந்த விலைக்கு விற்க இடமளிக்க மாட்டேன். 100 வீதம் சரியான விலைக்கே விற்கப்படும். அது குறித்து சமூக ஊடகங்கள் ஊடாக நான் அறிவிப்பேன். விற்பனை விலை, விற்பனை செய்வதாயின், பௌத்த விவகார ஆணையாளரின் அனுமதியுடன் விற்பனை செய்வதாயின், அதனை 100 வீதம் வெளிப்படைத்தன்மையுடன் செய்ய நான் எதிர்பார்க்கிறேன். எந்த வகையிலும் மோசடி செய்ய நான் எதிர்பார்க்கவில்லை. நான் ஆலயத்தின் சொத்துக்களை அபகரிக்க முயற்சிப்பதாக யாராவது கூறினால், கடந்த நான்கு வருடங்களிலும் எனக்கு கிடைக்கும் பாதுகாவலர் கொடுப்பனவையோ, எந்தவொரு ஊதியத்தையோ நான் விஷ்ணு ஆலயத்திலிருந்து இதுவரை பெறவில்லை. நான் கதிர்காம ஆலயத்திலிருந்தும் பெறமாட்டேன்," என அவர் மேலும் தெரிவித்தார். https://adaderanatamil.lk/news/cmk243gm703kno29n8ihcpciv

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.