Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

All Activity

This stream auto-updates

  1. Past hour
  2. பாகிஸ்தான் அரை இறுதிக்கு தெரிவானால் பாகிஸ்தான் விளையாடும் போட்டி கொழும்பில் நடைபெறும் , பாகிஸ்தான் அரை இறுதிக்கு தெரிவாகமால் இருந்தால் போட்டி கொல்கத்தா மைதானத்தில் போட்டி நடைபெறும். இந்தியா அரை இறுதிக்கு தெரிவானால் இந்தியா விளையாடும் போட்டி மும்பாய் மைதானத்தில் நடைபெறும் என ஐசிசி அறிவித்து இருக்கிறது. சூழல் பந்து விச்சுக்கு சாதகமான மும்பை மைதானத்தில் விளையாட இந்தியாவுக்கு சார்பாக ஐசிசி முடிவு எடுத்து இருக்கிறது. சென்ற மகளிர் உலக கிண்ண போட்டியும் இந்தியாவுக்கு சாதகமாக அரை இறுதி போட்டி மும்பையில் நடைபெற்றது. ஓமானுக்கு இன்னுமொரு போட்டி இருக்கிறது.
  3. ஆஹா எனக்கு புள்ளிகள் போச்சே! ஓமானை விட நமீபியா குறைந்த ஓட்டங்களுக்குள் சுருண்டுவிட்டதே!!
  4. உல‌க‌ கோப்பையில் குறைந்த‌ ர‌ன்ஸ் அடிச்ச‌ அணி எதுக்கான‌ கேள்விக்கு ந‌ம்பீயா அணி இட‌ம் பிடித்து விட்ட‌து ஹா ஹா..................................
  5. Pakistan vs Namibia, 35th Match, Group A at Colombo, T20 World Cup, Feb 18 2026 - Match Result RESULT 35th Match, Group A (D/N), Colombo (SSC), February 18, 2026, ICC Men's T20 World Cup PrevNext Pakistan 199/3 Namibia (17.3/20 ov, T:200) 97 Pakistan won by 102 runs
  6. பாக்கிஸ்தான் அணி பெரிய‌ வெற்றிய‌ நோக்கி.................
  7. Today
  8. இப்ப‌ தான் தூக்கத்தால‌ எழுந்தேன் பாக்கிஸ்தான் ரென்ச‌ன் இல்லாம‌ வெல்ல‌ போகுது ஹா ஹா...................
  9. சிங்களவன்…. விகாரை கட்டுறான், சோனகன்…. அரபு கல்லூரி கட்டுறான், தமிழன்… நண்டு மாதிரி, தங்களுக்குள் அடிபட்டுக் கொண்டு இருக்கிறான். எப்பதான் திருந்தப் போகுதுகளோ….
  10. இது வரவேற்கத்தக்க செயல். இதன் மூலம் விபத்துக்களை பெருமளவு குறைக்கலாம். கள்ள மண் ஏற்றிக் கொண்டு… அசுர வேகத்தில் செல்லும் பார ஊர்திகளால், விபத்து ஏற்பட்டு தினமும் பலர் சாகின்றார்கள். இதற்கும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  11. Live 35th Match, Group A (D/N), Colombo (SSC), February 18, 2026, ICC Men's T20 World Cup Pakistan (14/20 ov) 121/3 Namibia Pakistan chose to bat. Current RR: 8.64 • Last 5 ov (RR): 44/2 (8.80) Live Forecast: PAK 188 போற போக்கில நமீபியா நாமம் போடுமோ?!🤣
  12. வவுனியாவில் 120 இயலாமையுடன் கூடிய பெண்களுக்கு அவசர மனிதாபிமான உதவி 18 Feb, 2026 | 03:20 PM CFLI நிறுவனத்தின் நிதி அனுசரனையுடன் இயலாமையுடன் கூடிய பெண்களுக்கான அவசர மனிதாபிமான உதவித் திட்டத்தின் கீழ் CFLI நிறுவனத்தின் அமுலாக்கத்தில் வவுனியா மாவட்டத்தின் நான்கு பிரதேச செயலகங்களிலும் தெரிவு செய்யப்பட்ட இயலாமையுடன் கூடிய 120 பெண் குடும்பங்களுக்கு தலா 35000 ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள், வீட்டுப் பொருட்கள் மற்றும் சுகாதாரப் பொருட்கள் வழங்கப்பட்டன. இதன் முதல் நிகழ்வு கடந்த வருடம் 28.01.2025 இல் வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் கலாஞ்சலி டர்சன அருனசாந்த தலைமையில் இடம் பெற்றது. இந்நிகழ்வில் கனடா நாட்டின் இலங்கை மற்றும் மாலைதீவு நாடுகளுக்கான உயர் ஸ்தானிகர் இசபெல் மார்ட்டின் கலந்து கொண்டு பொருட்களை வழங்கி வைத்தார். 1. வவுனியா வடக்கு நெடுங்கேணி – 40 இயலாமையுடன் கூடிய பெண்கள் 2. வவுனியா நகர் - 30 இயலாமையுடன் கூடிய பெண்கள் 3. வெண்கலச் செட்டிகுளம் – 30 இயலாமையுடன் கூடிய பெண்கள் 4. வவுனியா தெற்கு – 20 இயலாமையுடன் கூடிய பெண்கள் இயலாமையுடன் கூடிய 120 பெண் குடும்பங்கள் பயன் பெற்றனர். https://www.virakesari.lk/article/238956
  13. இரான் அருகே போர்க்கப்பல்கள் மற்றும் போர் விமானங்களை குவிக்கும் அமெரிக்கா - பிபிசி புலனாய்வு படக்குறிப்பு,உலகின் மிகப்பெரிய போர்க்கப்பலான யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஆர் ஃபோர்டையும் அமெரிக்கா மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்பியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன, இது அடுத்த மூன்று வாரங்களுக்குள் இப்பகுதிக்கு வரக்கூடும் என்றும் கூறப்படுகிறது. கட்டுரை தகவல் ரிச்சர்ட் இர்வின்-பிரவுன், அலெக்ஸ் முர்ரே 2 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள் இரானுக்கு அருகே அமெரிக்க விமானந்தாங்கி போர்க்கப்பலான யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் நிலை கொண்டிருப்பதை செயற்கைக்கோள் படங்களைப் பயன்படுத்தி பிபிசி வெரிஃபை உறுதிப்படுத்தியுள்ளது. இரானின் ராணுவத் திட்டம் மற்றும் போராட்டக்காரர்கள் மீதான அதன் ஒடுக்குமுறையைத் தொடர்ந்து அந்நாட்டின் மீது அமெரிக்கா தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது. ஒரு தாக்குதல் குழுவை வழிநடத்தும் யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் போர்க்கப்பல் எஃப்35 போர் விமானங்கள் உட்பட 90 விமானங்கள் மற்றும் 5,680 பணியாளர்களைக் கொண்டுள்ளது. இது ஜனவரி பிற்பகுதியில் வளைகுடா பிராந்தியத்தில் நிறுத்தப்பட்டதாகக் கூறப்பட்டது, ஆனால் இப்போது வரை செயற்கைக்கோள் படங்களில் காணப்படவில்லை. இது இரானில் இருந்து சுமார் 700 கிமீ தொலைவில் ஓமன் கடற்கரையில் உள்ளது. உலகின் மிகப்பெரிய போர்க்கப்பலான யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஆர் ஃபோர்டையும் அமெரிக்கா மத்திய கிழக்கு பிராந்தியத்திற்கு அனுப்பியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன, இது அடுத்த மூன்று வாரங்களுக்குள் இப்பகுதிக்கு வரக்கூடும் என்றும் கூறப்படுகிறது. கடந்த சில வாரங்களாக மத்திய கிழக்கில் அமெரிக்காவின் தற்போதைய ராணுவக் கட்டமைப்பைப் பற்றி நாம் அறிந்தவற்றோடு ஆபிரகாம் லிங்கன் போர்க்கப்பலின் வருகையும் இணைகிறது. அங்கு அமெரிக்க போர் கப்பல்கள் மற்றும் போர் விமானங்களின் இருப்பு அதிகரித்துள்ளதை பிபிசி வெரிஃபை பின்தொடர்ந்துள்ளது. பட மூலாதாரம்,Reuters படக்குறிப்பு,பிப்ரவரியில் அமெரிக்க ராணுவம் அரபிக் கடலில் யுஎஸ்எஸ் ஆப்ரஹாம் லிங்கன் விமானந்தாங்கி போர்க்கப்பலின் படத்தை வெளியிட்டது. மத்திய கிழக்கிற்கு அமெரிக்கா எத்தகைய ராணுவ உபகரணங்களை நகர்த்தியுள்ளது? ஐரோப்பிய சென்டினல்-2 செயற்கைக்கோள்களில் இருந்து பொதுவில் கிடைக்கும் படங்கள், ஓமன் கடற்கரையிலிருந்து சுமார் 150 மைல் (240 கிமீ) தொலைவில் அரபிக்கடலில் ஆபிரகாம் லிங்கன் கப்பல் இருப்பதைக் காட்டுகின்றன. ஜனவரி மாதம் இப்பகுதிக்குள் நுழைந்ததாகக் கூறப்பட்டதிலிருந்து இது தென்படவில்லை. ஆனால் செயற்கைக்கோள் கண்காணிப்பு குறைவாக உள்ள திறந்த கடற்பரப்பை இது கடந்து கொண்டிருந்தது. நிலத்தில் உள்ள ராணுவ தளவாடங்கள் மிகவும் தெளிவாகத் தெரிவதோடு, செயற்கைக்கோள்களில் அடிக்கடி படம்பிடிக்கப்படுகின்றன. அதாவது, மத்திய கிழக்கில் 12 அமெரிக்க கப்பல்களை இப்போது செயற்கைக்கோள் படங்கள் மூலம் நாங்கள் கண்காணித்துள்ளோம். அணுசக்தியால் இயங்கும் நிமிட்ஸ்-வகை விமானந்தாங்கி கப்பலான ஆபிரகாம் லிங்கன் ஒரு தாக்குதல் குழுவை வழிநடத்துகிறது. மேலும் நீண்ட தூர ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தும் திறன் கொண்ட கப்பல்கள் மற்றும் வளைகுடாவில் உள்ள பஹ்ரைன் கடற்படை தளத்தில் தற்போது நிறுத்தப்பட்டுள்ள மூன்று சிறப்புப் போர்க்கப்பல்களும் இதில் அடங்கும். இப்பகுதியில் அமெரிக்க போர் விமானங்களின் வருகையையும் நாங்கள் பின்தொடர்ந்து வருகிறோம். ஜோர்டானில் உள்ள முவாஃபக் சால்டி ராணுவத் தளத்தில் நிறுத்தப்பட்டுள்ள எஃப்-15 மற்றும் இஏ-18 போர் விமானங்களின் அதிகரிப்பையும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிலிருந்து மத்திய கிழக்கை நோக்கி நகரும் அமெரிக்க சரக்கு விமானங்கள், எரிபொருள் நிரப்பும் மற்றும் தகவல் தொடர்பு விமானங்களின் அதிகரிப்பையும் நாங்கள் கண்காணித்து வருகிறோம். இரான் எவ்வாறு பதிலளித்துள்ளது? பிப்ரவரி 6-ஆம் தேதி அரபிக்கடலில் அமெரிக்க மத்திய கட்டளை மையம் யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் போர்க்கப்பலுடன் பிற போர்க் கப்பல்கள், போர் விமானங்கள், கண்காணிப்பு விமானங்கள் மற்றும் கடலோர காவல்படை கப்பல்கள் சூழ்ந்திருக்கும் படங்களை வெளியிட்டது. இது ராணுவ வலிமையை வெளிப்படுத்தும் நடவடிக்கையாக கருதப்படுகிறது. இதற்கு பதிலளிக்கும் வகையில் இரானும் தனது சொந்தப் படை பலத்தைக் காட்டியுள்ளது. திங்களன்று இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC), ஓமன் மற்றும் இரானுக்கு இடையே வளைகுடாவில் அமைந்துள்ள ஹோர்முஸ் நீரிணையில் ஒத்திகையைத் தொடங்கியது. இதில், ஒரு கப்பலில் இருந்து ஏவுகணைகள் ஏவப்படுவதற்கு முன்பாக ஐஆர்ஜிசி தலைமைத் தளபதி மேஜர் ஜெனரல் முகமது பாக்பூர் ஆய்வு செய்ததாக ஐஆர்ஜிசி-யுடன் தொடர்புடைய தஸ்நிம் செய்தி முகமை தெரிவித்துள்ளது. இந்த நீரிணை உலகின் மிக முக்கியமான கப்பல் போக்குவரத்துப் பாதைகளில் ஒன்றாகவும், முக்கியமான எண்ணெய் போக்குவரத்து மையமாகவும் கருதப்படுகிறது. இரானின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி முனையமான கார்க் தீவு உட்பட, உலகின் எண்ணெய் மற்றும் எரிவாயுவில் சுமார் ஐந்தில் ஒரு பங்கு இந்த நீரிணை வழியாகவே செல்கிறது. இரானின் சமீபத்திய ராணுவ நடவடிக்கைகளைக் காட்டும் அந்த அறிக்கையில், பாக்பூர் அந்தத் தீவின் மீது ஹெலிகாப்டரில் பறப்பதைக் காண முடிந்தது. பட மூலாதாரம்,Getty Images வெனிசுவேலா மற்றும் ஆபரேஷன் மிட்நைட் ஹேமருடன் தற்போதைய நடவடிக்கை எவ்வாறு ஒப்பிடப்படுகிறது? கடந்த ஜனவரியில் முன்னாள் வெனிவேசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை கைது செய்வதற்கு முன்னரோ அல்லது கடந்த ஜூன் மாதம் இரானின் அணுசக்தி நிலையங்கள் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்திய நடவடிக்கையின் போதோ இருந்ததை விட, மத்திய கிழக்குப் பகுதியில் அமெரிக்கா தற்போது மேற்கொண்டு வரும் ராணுவ முன்னெடுப்புகள், "அதிக தீவிரமும் நிலைத்தன்மையும்" கொண்டிருப்பதாக ராணுவப் புலனாய்வு நிபுணர் ஜஸ்டின் க்ரம்ப் பிபிசி வெரிஃபையிடம் தெரிவித்தார். கடந்த ஆண்டு வெனிசுவேலா மற்றும் இரானில் அமெரிக்கா தனது பலத்தை முற்றிலும் மாறுபட்ட சூழ்நிலைகளில் நிலைநிறுத்தியது. வெனிசுவேலா மீதான தாக்குதல்களுக்கு முன்னதாக அமெரிக்கா யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஆர் ஃபோர்டை கரீபியன் கடலுக்கு அனுப்பியது, அந்த நேரத்தில் அந்தப் பகுதியில் நாங்கள் கண்காணித்த எட்டு போர்க்கப்பல்களில் இதுவும் ஒன்று. இருப்பினும், அது குறைவான விமானங்களையே பயன்படுத்தியது, ஏனெனில் அது அமெரிக்க நிலப்பரப்பில் உள்ள சுற்றியுள்ள அமெரிக்க தளங்களில் இருந்தோ அல்லது பியூர்டோ ரிக்கோவில் உள்ள அதன் தளத்திலிருந்தோ எளிதாக போர் விமானங்களை அனுப்ப முடியும். அமெரிக்கா கரீபியன் பகுதிக்குள் நீர்நில தாக்குதல் கப்பல்களையும் நிலைநிறுத்தியது. இவை மதுரோ பிடிபட்டபோது பார்த்தது போல ஹெலிகாப்டர் நடவடிக்கைகளுக்கான ஏவுதளங்களாகப் பயன்படுத்தப்படலாம். ஆனால் வெனிசுவேலாவின் ராணுவம் பொதுவாகத் தன்னைத் தற்காத்துக் கொள்ளவோ அல்லது அமெரிக்காவிற்கு எதிராகப் பதிலடி கொடுக்கவோ குறைந்த திறன் கொண்டதாகவே பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு இரானின் அணுசக்தி நிலையங்களைக் குறிவைத்து 'ஆபரேஷன் மிட்நைட் ஹேமர்' மூலம் அமெரிக்கா இரானைத் தாக்கியபோது, வெனிசுவேலாவை விட மிகவும் சக்திவாய்ந்த ராணுவத்தைக் கொண்ட ஒரு நாட்டை அது தாக்கியது. இரானின் ராணுவம் மத்திய கிழக்கு முழுவதும் உள்ள அமெரிக்க தளங்களைத் தாக்கும் திறன் கொண்டது. 'மிட்நைட் ஹேமர்' நடவடிக்கையின் போது, அமெரிக்கா அந்தப் பிராந்தியத்தில் இரண்டு விமானந்தாங்கி போர்க்கப்பல் தாக்குதல் குழுக்களையும், மத்திய தரைக்கடல் மற்றும் செங்கடல்களில் போர்க் கப்பல்களையும், வளைகுடாவில் மூன்று போர் கப்பல்களையும் கொண்டிருந்தது. இது அமெரிக்காவிலிருந்து ஐரோப்பாவிற்கு விமானப் படைகளையும் எரிபொருள் நிரப்பும் விமானங்களையும் நகர்த்தியது, ஆனால் ஃபோர்டோ, இஸ்பஹான் மற்றும் நடான்ஸ் அணுசக்தி தளங்களைத் தாக்கப் பயன்படுத்தப்பட்ட பி2 குண்டுவீச்சு விமானங்கள் உண்மையில் மிசௌரியில் உள்ள அமெரிக்கத் தளங்களிலிருந்தே புறப்பட்டன. அமெரிக்கப் போர்க்கப்பல்கள் மற்றும் விமானங்களின் அதிகரிப்பு, அத்துடன் அந்தப் பிராந்தியத்தில் உள்ள எட்டு விமானப்படை தளங்கள் ஆகியவை, இரானின் எந்தவொரு பதிலடியையும் "பயனற்றதாக" மாற்றும் நோக்கத்துடன், ஒரு நாளைக்கு சுமார் 800 வான்வழித் தாக்குதல்களை "மிகவும் தீவிரமான மற்றும் நீடித்த விகிதத்தில்" நடத்த அனுமதிக்கும் என்று ஆபத்து மற்றும் நுண்ணறிவு நிறுவனமான சிபிலைனின் தலைமை நிர்வாகி க்ரம்ப் கூறினார். "நாம் காண்பது வெறும் தாக்குதல் தயாரிப்பு மட்டுமல்ல, மாறாக அளவை கூட்டவோ குறைக்கவோ கூடிய ஒரு விரிவான தடுப்பு நடவடிக்கையாகும்," என்று அவர் கூறினார். "இதன் பொருள், கடந்த ஆண்டு வெனிசுவேலா அல்லது மிட்நைட் ஹேமர் ஆகியவற்றுக்காக செய்யப்பட்ட முன்தயாரிப்புகளை விட இது அதிக தீவிரமும் நிலைத்தன்மையும் கொண்டது. இது ஒரு மோதலைத் தக்கவைத்து, அந்தப் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்கச் சொத்துகள் மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான அனைத்து சாத்தியமான பதிலடிகளையும் எதிர்கொள்ளவும் வடிவமைக்கப்பட்டுள்ளது" என்றும் அவர் விவரித்தார். கூடுதல் அறிக்கை : பார்பரா மெட்ஸ்லர், கோன்சே ஹபிபியாசாத், தாமஸ் கோப்லேண்ட், யி மா - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c2lrjl1gnrgo
  14. இங்கே பலருக்கு இருக்கும் பிரச்சனைதான் இது…. ரஸ்யாவை பற்றிய உண்மையை எழுதினால்…உடனே அதற்கு எதிரணியில் உள்ள நாட்டின் பிழையை சுட்டி காட்டுவது. நான் இங்கே பிரித்தானியா திறம், பிரான்ஸ் திறம், அவர்களுக்கு நிலவெறி இல்லை, சுரண்டல் செய்வதில்லை என எங்கே எழுதினேன்? ஜேர்மனி கூட உலக மகா சுரண்டல் நாடுதான். ஆனால் தற்போது ஐரோப்பாவில் ஏனைய நாடுகளின் நிலம் மீது கடைகண், அரைக்கண், முழு கண்ணெல்லாம் வைப்பது ரஸ்யா மட்டுமே. இந்த திரியில் நாம் வரலாற்றை ஆராயவில்லை. நடப்பு உலக அரசியலை கதைக்கிறோம். அறவே இல்லை. இதில் ஈழதமிழரும் அடக்கம். இதைத்தான் உக்ரேன் மொழி/இனவழி தேசிய இனத்தின் ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்டத்தின் போது, உக்ரேன் பக்கம் சாய நானும், இன்னும் பல தமிழ் தேசிய ஆதரவாளரும் காரணமாக கொண்டோம். ரஸ்யாவை ஆதரித்த எவருக்கும் இந்த நிலைப்பாட்டை எடுக்கும் தார்மீக உரிமை இனி இல்லை எனபது என் தாழ்மையான கருத்து.
  15. ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு MARKS AND SPENCER PLC இனால் நிதி நன்கொடை 18 Feb, 2026 | 12:25 PM டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசாங்கத்தின் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு MARKS AND SPENCER PLC இனால் 4,684,139.50 ரூபா நன்கொடை வழங்கப்பட்டது. இதற்கான காசோலையை MARKS AND SPENCER PLC இன் பொது முகாமையாளர் ரிபாட் அர்மான் (Rifat Arman) மற்றும் பிராந்திய முகாமையாளர் ஷப்ரி அஹர் Shabry Aher ஆகியோர் செவ்வாய்க்கிழமை (17) பிற்பகல் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் கையளித்தனர். MARKS AND SPENCER PLC இனைப் பிரதிநிதித்துவப்படுத்தி சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/238941
  16. வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பு; மட்டக்களப்பில் அதிக்கூடிய மழை வீழ்ச்சி பதிவு Published By: Digital Desk 3 18 Feb, 2026 | 12:15 PM மட்டக்களப்பில் நேற்று செவ்வாய்க்கிழமை (17) அதிகபட்சமாக 128.9 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதேவேளை, நுவரெலியாவில் மிகக் குறைந்த வெப்பநிலை 13.4°C ஆக பதிவாகியுள்ளது. நாட்டின் தென்கிழக்கே, தெற்கு வங்காள விரிகுடாவின் மத்திய பகுதிகளில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தொடர்ந்து நீடிப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அதன்படி, வளிமண்டலவியல் திணைக்களத்தால் வெளியிடப்படும் எதிர்கால முன்னறிவிப்புகள் மற்றும் ஆலோசனைகள் குறித்து பொதுமக்கள் கவனமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில், காலி முதல் அம்பாந்தோட்டை வரையிலான கரையோரப் பகுதிகளிலும், மட்டக்களப்பு வழியாக திருகோணமலை வரையிலான கரையோரப் பகுதிகளிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். நாட்டை சூழவுள்ள பிற கடல் பகுதிகளில், மாலை அல்லது இரவு நேரங்களில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். களுத்துறை முதல் புத்தளம் மற்றும் மன்னார் வரையிலான கரையோரப் பகுதிகளிலும், மாத்தறை முதல் அம்பாந்தோட்டை மற்றும் பொத்துவில் வரையிலான கரையோரப் பகுதிகளிலும் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக்கூடும். இந்தக் கரையோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள கடல் பகுதிகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும், அதேவேளை நாட்டை சூழவுள்ள பிற கடல் பகுதிகள் ஓரளவு கொந்தளிப்பாக இருக்கும். இடியுடன் கூடிய மழை பெய்யும் போது, தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும், மேலும் கடல் நிலைமைகள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/238940
  17. வடமாகாணத்தில் விதிமீறும் பேருந்து சாரதிகள் குறித்து முறைப்பாடு செய்யலாம் ; போக்குவரத்து அதிகார சபை 18 Feb, 2026 | 12:37 PM வடமாகாணத்தில் பயணிகள் போக்குவரத்துச் சேவை விதிமுறைகளை மீறி, வாகனம் செலுத்தும் சாரதிகள் தொடர்பில் 071 909 0900 என்ற இலக்கத்துக்கு ஆதாரங்களுடன் முறைப்பாடு செய்யலாம் என வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் எஸ்.விமலேஸ்வரன் தெரிவித்தார். இது தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில், இலங்கை போக்குவரத்துச் சபையின் வவுனியாச் சாலையைச் சேர்ந்த சாரதி ஒருவர், பேருந்தைச் செலுத்திக் கொண்டிருக்கும்போது கைப்பேசியைப் பயன்படுத்தியமை தொடர்பில் எமக்கு ஆதாரத்துடன் முறைப்பாடு கிடைக்கப்பெற்றது. பயணிகளின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கும் இச்செயற்பாடு தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை போக்குவரத்துச் சபையின் வடபிராந்திய முகாமையாளருக்குப் பணிப்புரை விடுக்கப்பட்டது. அதற்கமைய, சம்பந்தப்பட்ட சாரதிக்கு 3 நாட்கள் கட்டாய 'மீட்டல் பயிற்சி' வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக எனக்கு அறிக்கையிடப்பட்டுள்ளது. தனியார் பேருந்தாகவோ அல்லது அரச பேருந்தாகவோ இருப்பினும், பயணிகள் போக்குவரத்துச் சேவை விதிமுறைகளை மீறிச் செயற்படும் சாரதிகள் தொடர்பில் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். சாரதிகள் வாகனம் செலுத்தும்போது கைப்பேசி பேசுதல், அதிவேகமாகச் செலுத்துதல் அல்லது கவனயீனமாகச் செயற்படுதல் போன்ற விதிமீறல்களில் ஈடுபட்டால், அதனை ஒளிப்படம் அல்லது காணொலியாக எடுத்து 071 909 0900 என்ற இலக்கத்துக்கு வட்ஸ்அப் ஊடாக ஆதாரங்களுடன் அனுப்பி வைக்க முடியும். அவ்வாறு கிடைக்கப்பெறும் முறைப்பாடுகள் மீது எவ்வித பாரபட்சமுமின்றித் துரித நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/238938
  18. சிரியாவிலுள்ள ஐ.எஸ் முகாமிலிருந்து நாடு திரும்ப முயற்சிக்கும் பிரஜைக்கு அவுஸ்திரேலியா தடை Published By: Digital Desk 3 18 Feb, 2026 | 02:38 PM ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையதாகக் கருதப்படும் அவுஸ்திரேலியப் பிரஜை ஒருவர், சிரியாவிலிருந்து மீண்டும் அவுஸ்திரேலியாவிற்குள் நுழைவதற்கு அந்நாட்டு அரசாங்கம் இரண்டு ஆண்டுகளுக்குத் தடை விதித்துள்ளது. சிரியாவின் வடக்கு பகுதியில் உள்ள அல்-ரோஜ் தடுப்பு முகாமிலிருந்து 34 அவுஸ்திரேலியப் பிரஜைகள் (11 குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் மற்றும் சிறுவர்கள்) இந்த வாரம் நாடு திரும்ப இருந்தனர். அவர்கள் டமஸ்கஸ் வழியாக அவுஸ்திரேலியா செல்லத் திட்டமிட்டிருந்த நிலையில், தொழிநுட்ப மற்றும் நடைமுறைச் சிக்கல்களைக் காரணம் காட்டி சிரிய அதிகாரிகள் அவர்களை மீண்டும் முகாமிற்கே திருப்பி அனுப்பினர். இந்தச் சம்பவம் தொடர்பாக அவுஸ்திரேலியப் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் இன்று புதன்கிழமை (18) ஊடகவியலாளர்களிடம் பேசுகையில் மிகவும் காட்டமாகப் பதிலளித்தார்: "தவறு செய்தவர்கள் அதற்கான விளைவுகளைச் சந்தித்தே ஆகவேண்டும். நமது வாழ்க்கை முறையையும் ஜனநாயகத்தையும் அழிக்க முற்பட்ட ஒரு கொடூரமான சித்தாந்தத்துடன் இணைய வேண்டும் என்று அவர்களாகவே விரும்பி வெளிநாடு சென்றனர். அவர்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வர அரசாங்கம் எந்தவித உதவியும் செய்யாது." பாதுகாப்பு முகமைகளின் ஆலோசனையின் பேரில், அதிக ஆபத்தானவராகக் கருதப்படும் ஒருவருக்கு மட்டும் 02 ஆண்டுகள் வரை அவுஸ்திரேலியாவிற்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏனைய 33 பேருக்கு அத்தகைய சட்டரீதியான தகுதிகள் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 34 பேரில் 23 சிறுவர்கள் உள்ளனர். அவர்களின் பெற்றோரின் முடிவுகளால் குழந்தைகள் பாதிக்கப்படுவது துரதிர்ஷ்டவசமானது எனப் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். நாடு திரும்புபவர்கள் செல்லுபடியாகும் அவுஸ்திரேலிய கடவுச்சீட்டுகளை (Passports) வைத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சர்வதேச சட்டங்களின்படி பிரஜைகளைத் தடுப்பது கடினம் என்றாலும், அரசாங்கம் அவர்களுக்கு எவ்வித நிதி அல்லது பயண உதவிகளையும் வழங்கப்போவதில்லை என்பதில் உறுதியாக உள்ளது. சிரியாவின் முகாம்களில் இன்னும் 2,000-க்கும் மேற்பட்ட வெளிநாட்டுப் பிரஜைகள் (முக்கியமாக பெண்கள் மற்றும் சிறுவர்கள்) தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரான்ஸ், நெதர்லாந்து மற்றும் பிரித்தானியா போன்ற நாடுகளும் தங்களது பிரஜைகளைத் திரும்பப் பெற இதே போன்ற தயக்கத்தையே காட்டி வருகின்றன. https://www.virakesari.lk/article/238953
  19. Mathivanan Devadoss ·rpdoSsetnoc6mgi2c68 0h6it101c1u1ammiha58uh711f88c05ighc1l40h · பஜ்ஜி சாப்பிடலாமா? +============+ ”வானம் பொதுவாக மேகமூட்டத்துனேயே காணப்படும். பெரும்பாலான இடங்களில் தூறல் இருக்கும். ஆங்காங்கே இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும். அணைகள் திறக்கப்பட்டு வெள்ள அபாயம் இருப்பதால், தாழ்வான பகுதியில் இருப்பவர்கள் மேட்டுப் பாங்கான பகுதிகளுக்குச் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்!” இப்படி சிலபல எச்சரிக்கைகளை என் நாக்குக்கும், வாய்க்கும் அளித்திருந்தாலும், ஈரப்பதமான நாக்குடனேயே எழுத வேண்டியிருக்கிறது பஜ்ஜி மகாத்மியத்தை! சாதாரணமாக வடை, போண்டா சாப்பிடுகிறோமே அது போலல்ல பஜ்ஜி. இந்த பஜ்ஜி இருக்கிறதே அது ஒரு பன்முகப் பலகாரம். சாதாரணமாக வடையை எந்தப் பகுதியையும் அசால்ட்டாக வாயாளலாம். ஒரே சுவைதான் வரும். கிட்டத்தட்ட வடை, போண்டா, முறுக்கு, அதிரசம், லட்டு... இப்படி எல்லாவற்றுக்கும் இப்படியே. பஜ்ஜியில் மட்டும் என்ன வித்தியாசம்? அதற்கு, என் ஆல்டைம் விருப்பமான வாழைக்காய் பஜ்ஜியைப் பற்றிப் பார்ப்போம். பஜ்ஜி ஒரு மூன்றடுக்குப் பலகாரம். - மிளகாய்த்தூளின் கலரில், உப்பலாக வீங்கியிருக்கும் மாவுப் போர்வைப்பகுதி. - அதனுள்ளே ராஜகுமாரிபோல் நீண்டு படுத்திருக்கும் வாழைக்காய்த் துண்டு. - வாழைக்காய் வெந்து கட்டவிழ்ந்துவிடாமல் இருபுறமும் மதில்போல் சூழ்ந்திருக்கும் வாழைக்காயின் தோல். இந்த மூன்றடுக்குப் போதை வஸ்துதான் வாழைக்காய் பஜ்ஜி. அப்பளம் மாதிரி ஒரேயடியாய் ஓடு மாதிரி இருக்கக்கூடாது பஜ்ஜி. அதே சமயம், சினிமாவிலிருந்து விலகித் தொழிலதிபரை மணந்து கொண்ட முன்னாள் நடிகை மாதிரி ரொம்ப உப்பலாக மாவுக் குவியலாகவும் இருக்கக் கூடாது. வாயில் வைக்கும்போது கொஞ்சம் மொறுக், கொஞ்சம் மெதுக்! அதுவே இலக்கண சுத்தமான பஜ்ஜி! மாவு கரைப்பதில் இருக்கிறது இதன் சூட்சுமம். தோசை மாவுப் பதம். சரியான கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய்த்தூள், பெருங்காயத்தின் சேர்மானம் வெற்றிக்கூட்டணியின் பின்னணியாகும். பஜ்ஜி செய்வதைப் பார்ப்பதே ஆனந்தம். வாழைக்காயின் பச்சைத் தோலை நீக்காமல், ரொம்ப மெல்லியதாகவோ அல்லது தடிமனாகவோ இல்லாமல் நீளவாக்கில் துண்டுகள் போடவேண்டும். ரொம்பவும் நீர் சேர்த்த மாவில் தோய்த்தால், பஜ்ஜி ரொம்பவும் மொறுமொறுப்பாகி சிப்ஸ் மாதிரி இருக்கும். மாவு ரொம்பக் கெட்டியாக இருந்தால், பஜ்ஜியின் அடர்த்தி நமக்கு போண்டாவை நினைவுபடுத்தும். தோசை மாவுப் பதமே சரியானது. மெல்லிய முறுகலுடன், லேசான மாவுப் படரலுடன் சுவையாக இருக்கும். எண்ணெயில் போட்டு ஒருபுறம் வேக நேரம் கொடுத்து, புரட்டிப் போட்டு, அந்த இன்சுவை மினி சொர்க்கத்தை வாகாக எடுத்துத் தட்டில் போட்டு, முதல் கடியிலேயே மாவுப்பாகம், வாழைக்காய், அதன் தோலின் ஒரு பகுதி எல்லாவற்றையும் வாய்க்குள் கபளீகரித்து, பஜ்ஜியின் சுவையை சட்னி சாம்பார் இல்லாமல் வெறுமனே தின்று விழுங்கும்போது, இன்னொரு பிறவி எடுக்கலாமோ என்று தோன்றும் பஜ்ஜி தின்ன! பலபல காய்களில் பஜ்ஜி தின்றாலும், வாழைக்காய் பஜ்ஜிக்கே என் ஓட்டு. சிலர் பஜ்ஜியை அக்கக்காகப் பிரித்துச் சாப்பிடுவார்கள். யாராவது புதிதாகச் சட்டை வாங்கி கை பாகம், உடம்பு பாகம் என்று கிழித்து அணிவார்களா என்ன? அதுபோல் பஜ்ஜியின் சுவை அதன் முழுப் பகுதியையும் உள்வாங்கி லயிப்பதிலேயே இருக்கிறது. வாழைக்காய் பிடிக்கும் என்றால், மற்ற காய்களில் செய்த பஜ்ஜிகளின் மேல் எனக்குத் தனிப்பட்ட விரோதமெல்லாம் கிடையாது. வாய் பொசுங்கப் பொசுங்க ஆனியன் பஜ்ஜியும், பின் விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல் மிகவும் காரமான மிளகாய் பஜ்ஜியும் என் ஹிட் லிஸ்ட்டில் எப்போதும் உண்டு! சாத்வீகமான மி.ப க்கு குடை மிளகாயை நாடலாம். இரண்டு பூச்சு கொடுத்தால் நன்றாக இருக்கும். காரம் மட்டுப்படும். வாழைக்காயின் தோலை மாவோடு கடித்தல் சுகமோ சுகம்! வாழைக்காயின் தோலைச் சரடுபோல் சிலர் உருவி எடுப்பார்கள் முதலிலேயே. அவர்களுக்கு பஜ்ஜி தோஷம் பிடிக்கும். 😊" வெங்காய பஜ்ஜியை மாவுடன் வளையம் வளையமாகக் கடித்தல் நம்மைக் குழந்தையாகவே ஆக்கி வேடிக்கை பார்க்கும். எதில் எல்லாம் மாவும் காரமும் ஒட்டுமோ அதில் எல்லாம் இப்போது பஜ்ஜி செய்கிறார்கள். ப்ரெட் பஜ்ஜி, கத்தரிக்காய் பஜ்ஜி, தக்காளி(!) பஜ்ஜி, காலி ஃப்ளவர் பஜ்ஜி… இப்படி லிஸ்ட் நீளுகிறது. விட்டால் பஜ்ஜி வாங்கி அதிலேயே பஜ்ஜி செய்வார்கள் போல. மழை பெய்த ஓர் இரவில், செம பசியில், சென்னை மெரீனா பீச்சில் மூடிக்கொண்டிருந்த பஜ்ஜிக் கடை அம்மாவை அணுகி பஜ்ஜி கேட்டோம் நானும் நண்பரும். அந்தம்மா காய்கறிலாம் தீர்ந்துவிட்டதாகச் சொன்னார். நான் “பரவால்லம்மா… பசி பின்னுது. ஏதாச்சும் பேப்பர் இருந்தாக்கூட முக்கி பஜ்ஜி போட்டுக் கொடுங்க” என்றதை அந்தம்மா உள்வாங்கி முறைப்பதற்குள் ரத்னா கஃபே நோக்கி நடந்தோம் இட்லி சாம்பாருக்கு! எனக்கு ஒரு டவுட்! காய்களை மாவில் புரட்டி எண்ணெயில் பொரித்தால் பஜ்ஜி என்கிறோம். ஆனால், அவித்த முட்டையை அப்படி செய்தால் அதன் பெயர் முட்டை போண்டாவாம்! ஏன் இந்த பாரபட்சம்னு யோசிக்காமல்…. வாங்க பஜ்ஜி சாப்பிடலாம்! 😋"
  20. மட்டக்களப்பு நகரில் 128.9 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி Feb 18, 2026 - 01:55 PM மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பெய்துவரும் கடும் மழை காரணமாக பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் மழை தொடர்ந்து பெய்வதற்கதன அறிகுறிகள் காணப்படுதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையின் தென்கிழக்கே நிலவிய சுழற்சியானது தாழ்வுப்பகுதியாகி அதே இடத்தில் நீடிப்பதன் காரணமாக தொடர்ச்சியாக மழையினை எதிர்பார்க்கமுடியும் என வானிலை அவதான நிலையம் எதிர்வுகூறியுள்ளது. இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக பெய்துவரும் அடைமழை காரணமாக பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மட்டக்களப்பு நகரத்தில் தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளதை காணமுடிகின்றது. அத்துடன் தொடர்ந்து மழை பெய்துவருவதன் காரணமாக மட்டக்களப்பின் சில வீதிகளும் வெள்ளத்தில் மூழ்கும் நிலைமை காணப்படுகின்றது. இதேநேரம், தொடர்ந்து பெய்துவரும் கடும் மழை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் அறுவடை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அறுவடைகளை முன்னெடுத்த விவசாயிகள் நெல்லை பாதுகாப்பதில் பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றனர். இதேநேரம் பெய்துவரும் மழை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான குளங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பிரதான குளமான உன்னிச்சைகுளத்தின் 3 வான் கதவுகள், 2 அடிகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று காலை 8.30 மணி வரையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மட்டக்களப்பு நகரில் 128.9 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், மைலம்பாவெளியில் 104.5 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், உன்னிச்சைப் பகுதியில் 111 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், நவகிரிப் பகுதியில் 52 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், உறுகாமமம் பகுதியில் 63.9 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், தும்பங்கேணிப் பகுதியில் 70 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், பாசிக்குடா பகுதியில் 80 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், வாகனேரி பகுதியில் 39.8 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், பதிவாகியுள்ளதாக மாவட்ட வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. -மட்டக்களப்பு நிருபர் கிருஷ்ணகுமார்- https://adaderanatamil.lk/news/cmlrrnzbe00062a6eh6hrrlej
  21. கதையைப் படிக்காத ஓவியரும் காசுக்காக வரைந்திருக்கலாம் கதாசிரியர் கூட கூகுளில் சுட்டுப் போட்டிருக்கலாம் எப்படியோ அவுஸ் போல் ஹவுசுக்கு போகாமல் சிம்பாவே 8 க்குள் போவது போல் ஏதோ எமக்கொரு கதையும் படமும் கிடைத்திருக்கு அது போதும்........! 😂
  22. உதவி செய்யாவிட்டாலும் சமூக அமைப்புகள் இவரைச் சட்டவிரோத வட்டிக் கும்பலிடமிருந்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  23. பகிடி வதை செய்வதே தவறு. அதை பல்கலைக்கழத்தில் சிறிய அளவில் செய்தாலும் கடந்து போய் விடலாம். ஆனால் பல்கலைக் கழகத்திற்கு வெளியே… புதிய மாணவர்களை தமது தங்கும் விடுதிக்கு அழைத்து… பாலியல் சீண்டல் செய்வது சுத்த அயோக்கியத்தனம். இவர்களுக்கு அதி உச்ச தண்டனை கொடுக்கப்பட வேண்டும்.
  24. பாட்டியின் கறுப்பு ரவிக்கை… எப்படி மஞ்சள் ஜாக்கெட்டாக மாறியது. 😂
  25. பெரியவா திருவடிகள் சரணம் vous invite à rejoindre ce groupe. Suryamoorthy Swaminathan ·odpsnteoSr7g39g u53lhc5m0ff871fuualfh5gt0m34442u7855l665t4lc · 🌸""தமிழிலே தான்பேசணும்.தமிழ் தாய்மொழி .தாய்தான் முதல் கடவுள். தமிழ்ப் பேச்சை மறக்கக் கூடாது."🌸" சொன்னவர்- ஸ்ரீமடம் பாலு தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா தட்டச்சு;வரகூரான் நாராயணன் நடு வயதுத்தம்பதிகள்.நான்கு குழந்தைகள் எல்லாம் நவீன ஆடை-அலங்காரம், நவீனத் தோற்றம்.பெண் குழந்தைகளுக்கு கழுத்து வரை மட்டுமே கூந்தல். எல்லையோரச் செடிகளை,இடுப்பளவு உய்ரத்துக்கு மேல் வளராதபடி கத்தரிக்கோலால் வெட்டி விட்ட மாதிரி , நுனி நாக்கில் ஆங்கிலம் விளையாடியது. கான்வென்ட் படிப்பு. பெரியவா,அந்தக் குழந்தைகளைத் தன் அருகில் வரச் சொன்னார்கள்.-வந்தன "பேரென்ன? எங்கே படிக்கிறே" என்று விசாரணையாய் உரையாடல். குழந்தைகள் ரொம்ப சகஜமாகி விட்டன: உற்சாகமாக,தயக்கமில்லாமல் பதில் சொல்லிக் கொண்டிருந்தன. அருகிலிருந்த பழத் தட்டைக் காட்டி, "யாருக்கு என்ன பழம் வேணுமோ, எடுத்துக்கலாம்" என்று சொன்னார்கள். குழந்தைகளுக்கு ரொம்ப சந்தோஷம். Thanks - என்று சொல்லிவிட்டுப் பழங்களை எடுத்துக் கொண்டன. பெரியவா சொன்னார்கள் : "ஒரு request நான் சொன்னா, கேட்பேளா?" ஒரே குரலில்,"Oh Yes! certainly we will do" என்று குழந்தைகள் கூறின. "வெளி இடத்திலே,பள்ளிக்கூடத்திலே அல்லது வேறு மனுஷ்யாளிடத்திலே பேசறபோது இங்கிலீஷ்லே பேசு, உங்க வீட்டிலே, அப்பா - அம்மா, சுவாமிகளா இருக்கிற நான்; அப்புறம்,பகவான் இவாளிடம் தயவு பண்ணி,தமிழிலே தான் பேசணும்.தமிழ் தாய்மொழி,தாய்தான் முதல் கடவுள். தமிழ்ப் பேச்சை மறக்கக் கூடாது." குழந்தைகள், "இனிமே, அப்பா -அம்மா-குரு தெய்வத்துக்கிட்டே தமிழிலேயே பேசறோம் Promise என்றன. பெரியவா முகத்தில் கோடி சூர்யப் பிரகாசம் பண்டிதர்களுடன் அத்வைத விசாரம் பண்ணும்போது பளீரிடும் ஒளியைக் காட்டிலும் நூறு மடங்குப் பிரகாசம். Jaya Jaya Shankara Hare Hare Shankara.....! 🙏

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.