All Activity
- Past hour
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- "நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
ஆரம்பத்தில் விஜயின் கட்சிக்கு 10% இற்கும் குறைவான வாக்குகளே வரலாம் என நினைத்தேன், விஜையின் கட்சி கொள்கை எதுவும் இருப்பது போல எனக்கு தெரியவில்லை (கட்சிக்கென ஏதாவது கொள்கை உண்டா என தெரிந்தவர்கள் கூறவும்), அதனால் மக்கள் கண்டு கொள்ளமாட்டார்கள் என நினைத்தேன், ஒரு காணொளியில் விஜையின் பெயரை கூறியது அரங்கிலிருந்த மக்கள் ஆர்ப்பரிப்பதனை பார்க்கும் போது விஜையிற்கு வாக்குகள் கணிசமாக கிடைக்கும் போல உள்ளது. ஆனால் அந்த கூட்டம் ஒரு இளையவர்கள் அதிகமாக உள்ள கூட்டம் .- தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
திமுகவை தோற்கடிப்பதற்கு அதிமுக பலமடைய வேண்டும். விஜை வரும்பேதே கூட்டணிக்கு தயாரக இருப்பதாகச் சொன்னார். ஆனால் அளவுக்கு மீறி ஆசைப்பட்டதால் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க முடியவில்லை.தற்போதைய நிலையில் 25 தொகுதிகள் அவருக்குப் போதுமானது. எடுத்த எடுப்பிலேயே முதல்வர் பதவிக்கு ஆசைப்படலாமா? அவர் தனித்து நின்றால் திமுகவின் வெற்றி எளிதாக இருக்கும். சீமான் எப்போதும் தனித்தே நிற்பார். விஜையின் வருகையால் சீமானின் வக்கு வங்கிக்கு எந்தப்பாதிப்பும் இல்லை. சீமான் எதிராளிகளின் எதிர்பார்ப்புகளுக்கு மேலாக அவர் தன்னுடைய வாக்கு சத வீதத்தை உயர்த்துவார். விஜை தனித்து நின்றால் அவருக்கு இது கடைசித் தேர்தலில் சீமானின் தனித்து நின்று இப்போதிருக்கும் வாக்கு சதவீதத்தை தக்க வைத்தாலே எதரிர்காலத்தில் தவிர்க்க முடியாத அரசியல்சக்தியாகி விடுவார்.- ஈரானுக்கு எதிரான போர் - அமெரிக்காவுக்கு ஏற்பட்ட செலவு
பனையாலை விழுந்தவனை மாடேறி மிதித்தது போல இன்று வட்டி விகிதத்தினை 0.25% ஆக உயர்த்தியுள்ளார்கள், பொருளாதார சரிவு வரும் போல உள்ளது (எனது கருத்து - பொருள்களின் விலை அதிகரிக்கிறது மக்கள் செலவு செய்ய தயாராக இல்லை) , ஆனாலும் வட்டி விகிதத்தினை உயர்த்தியுள்ளார்கள்.- ஹோர்முஸ் நீரிணையை திறக்க ஒத்துழைக்குமாறு ட்ரம்ப் கோரிக்கை
பிபி ட்ரம்பை மாட்டிவிட்டுட்டார் என கூறுகிறார்கள், கடந்த கால அமெரிக்க அதிபர்களது மேசையிலும் ஈரானிற்கெதிரான தாக்குதல் கோப்பு காணப்படுமாம், ஆனால் அவர்கள் மாட்டுப்படவில்லை, ட்ரம்ப் மாட்டுப்பட்டுவிட்டார் என கூறுகிறார்கள்.- கருத்து படங்கள்
- ஈரானுக்கு எதிரான போர் - அமெரிக்காவுக்கு ஏற்பட்ட செலவு
இங்கு 91 பெற்றோல் விலை முன்னர் 1.48 - 2.09 எனும் விலைக்குள் காணப்படும் ஆண்டு சராசரி விலை $1.72, இங்கிலாந்து பவுண்ஸில் 0.91(தற்போதய நாணய மாற்று), இங்கிலாந்து சராசரி பெற்றோல் விலை (91) பவுண்ஸில் 1.31 என இணையத்தில் கூறுகிறது அது அவுஸின் நாணயத்தில் $2.47, தற்போது பெற்றோல் விலை தொடர்ந்து இங்கு அதிகரித்து செல்கிறது இன்று $2.27 ($3 டொலர் வரை உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது). ஒப்பீட்டளவில் இங்கிலாந்தில் பெற்றோல் விலை சாதாரணமாகவே அதிகமாக உள்ளது, அத்துடன் மூன்றாம் தரப்பு காப்புறுதி மிக அதிகமாக உள்ளது, வாகன வரி கிட்டத்தட்ட ஒரே அளவாக உள்ளது (5 வருடத்திற்கு குறைவான காரிற்கு குறைவாக இருக்கும்). பெற்றோல் மிகையாக உற்பத்தி செய்யும் நாடு என கூறியுள்ளீர்கள், ஏன் இங்கிலாந்தில் பெற்றோல் விலை அதிகமாக உள்ளது?- பயங்கரவாத சதி வழக்கில் ஆறு உக்ரேனியர்களும், அமெரிக்க பிரஜையும் இந்தியாவில் கைது!
பயங்கரவாத சதி வழக்கில் ஆறு உக்ரேனியர்களும், அமெரிக்க பிரஜையும் இந்தியாவில் கைது! இந்தியாவிற்கு எதிராகப் பயங்கரவாதச் செயல்களை மேற்கொள்ள சதித்திட்டம் தீட்டிய குற்றச்சாட்டில் ஆறு உக்ரேனிய நாட்டினரும் அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவரும் தேசிய புலனாய்வு முகமை (NIA) அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த வாரம் பல NIA குழுக்களால் ஒருங்கிணைந்த நடவடிக்கையில் மேற்கொள்ளப்பட்ட இந்த கைதுகள், சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் (UAPA) பிரிவு 18 இன் கீழ் மற்றும் பிற தொடர்புடைய பிரிவுகளின் கீழ் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்த வழக்கில் வெள்ளிக்கிழமை மாலை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. அமெரிக்காவைச் சேர்ந்த அந்த நபர் கொல்கத்தா விமான நிலையத்தில் குடிவரவுத் துறையினரால் தடுத்து வைக்கப்பட்டார். மேலும், ஆறு உக்ரேனியர்கள் லக்னோ மற்றும் டெல்லி விமான நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டனர். குற்றம் சாட்டப்பட்டவர் செல்லுபடியாகும் விசாக்களில் இந்தியாவிற்குள் நுழைந்ததாகவும், ஆனால் கட்டாய தடைசெய்யப்பட்ட பகுதி அனுமதி இல்லாமல் மிசோரமுக்குச் சென்றதாகவும் ஒரு வட்டாரம் தெரிவித்தது. அங்கு, இந்தியாவிற்கு விரோதமான இனக் குழுக்களை அவர்கள் சந்தித்ததாகக் கூறப்படுகிறது. மேலும், ஐரோப்பாவிலிருந்து வந்த பல ட்ரோன் சரக்குகளை அவர்கள் மிசோரம் மாநிலத்தில் கொண்டுவந்து சேர்த்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது என்றும் அந்த வட்டாரம் தெரிவித்தது. சந்தேக நபர்கள் டெல்லிக்கு அழைத்து வரப்பட்டு, சனிக்கிழமையன்று நீதிபதி முன் முன்னிலைப்படுத்தப்பட்டனர். அவர் அவர்களை மூன்று நாட்கள் நீதிமன்றக் காவலில் வைத்தார். சந்தேக நபர்களுக்கான தடுப்புக் காவல் திங்கட்கிழமையன்று மீண்டும் 11 நாட்கள் நீட்டிக்கப்பட்டு மார்ச் 27 வரை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டனர். அந்தக் குழு பயங்கரவாதத் தாக்குதல்களைத் திட்டமிட்டு வந்ததாகவும், அவர்களின் நடமாட்டம் எல்லை தாண்டிய அச்சுறுத்தல்கள் குறித்து கவலையை ஏற்படுத்தியதாகவும் NIA குற்றம் சாட்டியுள்ளது. https://athavannews.com/2026/1468779- சீனாவில் மனித வடிவ ரோபோவை கைது செய்த பொலிசார்
சீனாவில் மனித வடிவ ரோபோவை கைது செய்த பொலிசார். சீனாவின் மகாவ் நகரில் 70 வயதுடைய ஒரு பெண்மணியை பயமுறுத்தியதாக கூறப்படும் மனித வடிவ ரோபோவை பொலிஸார் கைது செய்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. தகவல்களின் படி, வீதியில் நடந்து கொண்டிருந்த பெண் தனது கைபேசியை பார்க்கும்போது, பின்னால் ரோபோ வந்ததை கவனித்தார். ரோபோ அருகில் நின்றிருப்பதைப் பார்த்ததும் பெண் அதிர்ச்சியடைந்தார். இந்த ரோபோ மகாவ் நகரில் உள்ள ஒரு கல்வி மையத்திற்கு சொந்தமானது. சம்பவத்திற்கு பிறகு ரோபோ அதன் 50 வயதான உரிமையாளரிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டது. பொலிஸார் பொதுமக்கள் இருப்பிடங்களில் ரோபோக்களை அதிக எச்சரிக்கையுடன் பயன்படுத்தும்படி அறிவுறுத்தியுள்ளனர். கல்வி மையத்தின் பிரதிநிதி டோவின் மேக், ரோபோ சம்பவத்திற்குப் பின்னர் அந்த பகுதியை விட்டு வெளியேறிக் கொண்டிருந்ததாகவும், இதனால் இந்த சந்திப்பு ஏற்பட்டதாகவும் தெரிவித்தார். சம்பவத்திற்கு நேரில் சாட்சி பெற்ற சிலர் இதனை உறுதிப்படுத்தியுள்ளனர். பின்னர் பெண் மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சை பெற்றார், எந்தவித புகாரும் அளிக்க மாட்டேன் என தெரிவித்தார். சமூக ஊடகங்களில் இந்த சம்பவம் பரவியதைக் கண்ட பிறகு, பொலிஸார் ரோபோவை கைது செய்ததை நகைச்சுவையாகவும் பகிர்ந்து வருகின்றனர். https://athavannews.com/2026/1468772- இலங்கை கடல் பகுதியில் அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு நிச்சயம் பதிலடி கொடுக்கப்படும் – ஈரான் உறுதி!
இலங்கை கடல் பகுதியில் அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு நிச்சயம் பதிலடி கொடுக்கப்படும் – ஈரான் உறுதி! இலங்கைக்கு அருகே இந்தியப் பெருங்கடலில் 100க்கும் மேற்பட்ட ஈரானிய மாலுமிகளைக் கொன்ற கொடூரமான கடற்படைத் தாக்குதலைத் தொடர்ந்து, ஈரானிய கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் ஷாராம் இரானி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்குக் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த தாக்குதலுக்கு தீர்க்கமான மற்றும் எதிர்பாராத பதிலடி கொடுக்கப்படும் என்றும் அவர் சூளுரைத்துள்ளார். ஈரானிய செய்திச் சேவையான Press TV தகவலின்படி, தனது வீரர்களின் மரணங்களுக்குப் பதிலடி கொடுக்காமல் விடமாட்டோம் என்று அந்த மூத்த அதிகாரி அறிவித்ததோடு, அந்த தாக்குதல் சற்றும் எதிர்பாராத இடத்திலிருந்து வழங்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார். இந்த அறிக்கை, ஈரானின் இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் அமீர் ஹதாமியின் முந்தைய கருத்துக்களைத் தொடர்ந்து வந்துள்ளது. அனர் முன்னதாக ஐரிஸ் தேனா போர்க்கப்பலின் மாலுமிகளின் மரணங்களுக்கு ஈரான் பதிலளிக்காமல் போகாது என்று எச்சரித்திருந்தார். அந்தக் கப்பல் ஒரு அமைதியான பணியை முடித்துவிட்டு, போரில் ஈடுபடாத நிலையிலும் ஈரானுக்குத் திரும்பிக்கொண்டிருந்தபோது தாக்கப்பட்டதாக ஹதாமி விளக்கினார். மாலுமிகளின் தியாகத்தை ஈரானின் கடற்படை வரலாற்றில் தைரியத்தின் நீடித்த சின்னமாக அவர் விவரித்தார். மார்ச் 4 அன்று, இலங்கையின் காலி கடற்கரையிலிருந்து சுமார் 40 கடல் மைல் தொலைவில், ஈரானிய கடற்படையின் ‘தேனா’ என்ற போர்க்கப்பல், அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவப்பட்ட MK-48 ரக நீர்மூழ்கி ஏவுகணையால் தாக்கப்பட்டது. இந்தியாவில் நடைபெற்ற பன்னாட்டு கடற்படைப் பயிற்சியில் பங்கேற்றுத் திரும்பிக்கொண்டிருந்தபோது, சர்வதேச கடல் பகுதியில் இந்தக் கப்பல் குறிவைக்கப்பட்டது. இந்தத் தாக்குதலில் 104 மாலுமிகள் கொல்லப்பட்டதாகவும், 87 உடல்கள் மீட்கப்பட்டதாகவும், 32 மாலுமிகள் மீட்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது. இந்திய கடற்படையின் அழைப்பின் பேரில் ஐரிஸ் தேனா கூட்டுப் பயிற்சியில் பங்கேற்றதால், இந்தத் தாக்குதல் குறிப்பாக சர்ச்சைக்குரியதாகியுள்ளது. அமெரிக்கப் போர்ச் செயலர் பீட் ஹெக்ஸெத் இந்தத் தாக்குதலை உறுதிப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் சர்வதேச அளவில் பரவலான சீற்றத்தையும் கண்டனத்தையும் தூண்டியுள்ளது. https://athavannews.com/2026/1468790- கியூபாவைக் கொண்டு எதை வேண்டுமானாலும் செய்யமுடியும் - ட்ரம்ப்
கியூபாவை கைப்பற்றுவேன்! அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் அதிரடி சபதம்! கியூபா தீவைக் கொண்டு எதை வேண்டுமானாலும் செய்ய முடியும் என்று கூறிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ‘அத்தீவை கைப்பற்றும் பெருமையை நான் பெறுவேன்’ என்றும் குறிப்பிட்டுள்ளார். ‘கியூபாவை விடுவித்தாலும் சரி, அல்லது கைப்பற்றினாலும் சரி, என்னால் அந்தத் தீவைக் கொண்டு எதை வேண்டுமானாலும் செய்ய முடியும் என்று நினைக்கிறேன். கியூபா ஒரு அழகான தீவு. சிறந்த வானிலை கொண்டது. அதை வசப்படுத்திய பெருமை எனக்கு கிடைக்கும். கியூபாவை நட்பார்ந்த முறையில் கைப்பற்றுவது பற்றி அந்நாட்டு அதிகாரிகளுடன் நிர்வாகம் பேசி வருகிறது’ என ட்ரம்ப் தெரிவித்தார். கரீபியன் தீவு நாடான கியூபாவுக்கும் அமெரிக்காவும் இடையே நீண்ட கால பகை காணப்படுகிறது. கியூபாவுக்கு சென்றுகொண்டிருந்த வெனிசுவெலா நாட்டு எண்ணெய் விநியோகத்தை அமெரிக்கா நிறுத்திவிட்டது. இதனால் கியூபாவில் டீசல் மூலம் இயங்கும் அனல் மின் நிலையங்கள் எரிபொருள் இல்லாமல் முடங்கின. அதையடுத்து, மின் தடை ஏற்பட்டு அந்நாடு முழுவதும் இருளில் மூழ்கியது. அமெரிக்க எண்ணெய் தடை விதித்தமையால், கியூபா பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு நீண்ட நேர மின்வெட்டு, உணவுப் பொருட்களின் பற்றாக்குறை ஏற்பட்டு மக்கள் அவதிப்படுகின்றனர். இந்நிலையில், அங்கு அரசுக்கு எதிராக போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. இந்த சந்தர்ப்பத்திலேயே கியூபாவைக் கைப்பற்றும் தனது விருப்பினை இந்த சந்தர்ப்பத்திலேயே கியூபாவைக் கைப்பற்றும் தனது விருப்பினை ட்ரம்ப் வெளிப்படுத்தியிருக்கிறார். https://athavannews.com/2026/1468797- உலக ஒழுங்கை மாற்ற முனைவதை வேடிக்கை பார்க்கலாமா? — சின்னத்தம்பி குருபரன் —
உலக ஒழுங்கை மாற்ற முனைவதை வேடிக்கை பார்க்கலாமா? March 16, 2026 — சின்னத்தம்பி குருபரன் — அடிக்கடி குணமும் கொண்ட கொள்கையும் மாறும் அமெரிக்க சனாதிபதி ரொனால்ட் ட்ரம்புக்குக் கடிவாளம் போட்டுத் தடுத்து நிறுத்தாது உலக வல்லரசுகள் இனிமேலும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தால் அதன் பலனை உலக மக்கள் அனைவரும் அனுபவித்து ஆகவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படலாம். தற்பொழுது நடைபெறும் அமெரிக்க, இஸ்ரேல், ஈரான் யுத்தம் உலக ஒழுங்கை மாற்றி, மத்திய கிழக்கை அச்சுறுத்தி, அதனை நம்பி இருக்கின்ற உலக நாடுகள் அனைத்தையும் பாதித்துக் கொண்டிருக்கின்றன. மத்திய கிழக்கை அண்டிய பிரதேசங்களில் தரை, கடல், ஆகாய வழிப் போக்குவரத்துப் பாதைகள் அனைத்தையும் பாதித்திருக்கின்றன. அதனால் மசகு எண்ணெய், எரிவாயு, மருந்து மற்றும் ஏனைய பொருட்களின் ஏற்றுமதி இறக்குமதிகள் பாதிக்கப்பட்டதனால் மசகு எண்ணெங், எரிவாயு போன்றவற்றின் விலைகள் கிடுகிடுவென ஏறிக் கொண்டிருக்கின்றன. ட்ரம்ப், பெஞ்சமின் நெத்தன்யாகு ஆகியோரின் அடாவடித் தனங்களால் விளைந்த பலனை உலக மக்கள் யாவரும் அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். ‘வரவு எட்டணா செலவு பத்தணா..’ என்பது போல் வாழ்க்கைச் செலவு அதிகரித்து மத்திய, கீழ்தட்டு மக்களைப் பெருவாரியாகப் பாதிக்க ஆரம்பித்துவிட்டன. ஒரு சுதந்திர நாட்டின் இறைமை தன்னாதிக்கம் ஒருமைப்பாடு, ஆள்புலம் என்பவற்றைப் பாதுகாப்பதற்காக உலக நாடுகள் இணைந்து பல சட்டங்களை இயற்றி இருப்பதோடு பல உடன்படிக்கைகளும் செய்யப்பட்டிருக்கின்றன. நாடுகளின் இறைமை (Sovereignty), ஆள்புலம் (Territory) மற்றும் பாதுகாப்புத் தொடர்பான சர்வதேச சட்டங்கள், ஒப்பந்தங்கள் மிக நீண்ட வரலாற்றைக் கொண்டவை. 1648 வெஸ்ட்பாலியா அமைதி ஒப்பந்தமே (Peace of Westphalia) நவீன சர்வதேச அரசியலின் தந்தை எனப்படுகிறது. ஒரு நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் மற்ற நாடுகள் தலையிடக்கூடாது என்ற “அரசு இறைமை” (State Sovereignty) என்ற கொள்கை முதன்முதலில் அங்கீகரிக்கப்பட்டது. 1783 பாரிஸ் உடன்படிக்கை அமெரிக்காவின் இறைமை, ஆள்புல எல்லைகளைப் பிரித்தானியா அங்கீகரித்த பிரதானஒப்பந்தமாகும். 1815 வியன்னா மாநாடு (Congress of Vienna) நெப்போலியனின் ஆக்கிரமிப்புப் போர்களுக்குப் பின்னர் ஐரோப்பிய நாடுகளின் எல்லைகளை மறுசீரமைக்கவும், நாடுகளுக்கு இடையிலான தூதரக உறவுகளை ஒழுங்குபடுத்தவும் இது வழிவகுத்தது. 1864 இல் முதலாவது ஜெனிவா உடன்படிக்கையின் மூலம் போர்க் காலங்களில் காயமடைந்த வீரர்களின் பாதுகாப்பு, மருத்துவப் பணியாளர்களின் மனிதாபிமான நடுநிலைத்தன்மை குறித்து முதன்முதலில் பேசப்பட்டுக் கைச்சாத்திடப்பட்டது. 1899 இல் கூடிய ஹேக் மாநாட்டின் (Hague Summit) சர்வதேச மோதல்களை அமைதியான முறையில் தீர்ப்பது, போர் விதிகளை (Laws of War) வரையறுப்பது இதன் நோக்கங்களாக அமைந்தன. வெர்சாய் ஒப்பந்தம் (1919, Treaty of Versailles) முதலாம் உலகப்போருக்குப் பின்னர் நாடுகளின் எல்லைகளை மாற்றியமைத்ததுடன், சர்வதேச சங்கத்தை (League of Nations) உருவாக்க வழிவகுத்தது. இரண்டாம் உலக மகா யுத்தத்தின் நிறைவில் 1945 இல் ஏற்படுத்தப்பட்ட ஐக்கிய நாடுகள் சாசனம் (UN Charter) நவீன உலகின் மிக முக்கியமான ஆவணமாக அமைந்தது. உறுப்புரை 2(4), ஒரு நாட்டின் ஆள்புல ஒருமைப்பாடு அல்லது அரசியல் சுதந்திரத்திற்கு எதிராக பிறிதொரு நாடு பலப் பிரயோகம் செய்வதைத் தடை செய்கிறது. உறுப்புரை 51, ஒரு நாடு தாக்கப்படும்போது தன்னைப் பாதுகாத்துக்கொள்ளும் (Self-defence) உரிமையை வழங்குகிறது. 1949 இன் வட அட்லாண்டிக் ஒப்பந்தத்தின்(NATO) மூலம் கூட்டுப் பாதுகாப்பு (Collective Defense) கொள்கையின் கீழ் இராணுவக் கூட்டணி உருவாக்கப்பட்டது. 1961 இல் மேற்கொள்ளப்பட்ட ‘வியன்னா தூதரக உறவுகள் உடன்படிக்கை’ ஒரு நாட்டின் ஆள்புலத்திற்குள் இருக்கும் பிற நாட்டுத் தூதரகங்களின் பாதுகாப்பு உரிமைகளை அந்நாட்டுக்கு உரியவை என்பது உறுதிப்படுத்தப்பட்டது. 1982 கடல் பாதுகாப்புச் சட்டத்திற்கான ஐநா உடன்படிக்கை (UNCLOS) ஒரு நாட்டின் கடல் எல்லை (Territorial Sea), பிரத்தியேகப் பொருளாதார வலயம் (EEZ) ஆகியவற்றின் இறைமையை வரையறுத்தது. இந்த நூற்றாண்டில் (2001) ‘பொறுப்புடன் பாதுகாத்தல்’(Responsibility to Protect – R2P) என்ற கொள்கைப் பிரகடனத்தின்படி இறைமை என்பது வெறும் அதிகாரம் மட்டுமல்ல, அது குடிமக்களைப் பாதுகாக்கும் பொறுப்புக்கூறல் என்ற கருத்தாக்கம் உருவானது. 2014 புடாபெஸ்ட் குறிப்பாணை தொடர்பான விவாதங்கள் நாடுகளின் ஆள்புல ஒருமைப்பாட்டை உறுதிப்படுத்தும் பாதுகாப்பு உத்தரவாதங்கள் பற்றிய சர்வதேச சட்ட விவாதங்கள் தீவிரமடைந்தன. சட்ட ஏற்பாடுகளாக (Uti Possidetis Juris) ஒரு நாடு சுதந்திரம் அடையும் போது, அதன் முந்தைய நிர்வாக எல்லைகளே அந்த நாட்டின் ஆள்புல எல்லைகளாகக் கருதப்படும் என்பதும், Non-Intervention என்ற ஏற்பாடுகளின்படி ஒரு நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் மற்ற நாடுகள் தலையிடக் கூடாது என்ற சட்டம் உருவாக்கப்பட்டது. இவற்றைவிட பிராந்திய ரீதியிலான அரசியல், பொருளாதார, பாதுகாப்புக் கூட்டு உடன்படிக்கைகள் எத்தனையோ செய்யப்பட்டு நடைமுறையில் இருக்கின்றன. இப்போது மக்களின் கேள்வி என்னவென்றால் “இத்தனையும் இருந்தும் என்ன பயன்” என்பதுதான். ஐக்கிய நாடுகள் சபை எதற்கு?, பிராந்திய, சர்வதேச ஒப்பந்தங்கள், சட்ட ஏற்பாடுகள் எதற்கு? எனப் பலரும் கேட்கின்றனர. அமெரிக்கா என்ற சட்டம்பிக்குப் பயந்த நிலையா?, அப்படியாயின் ஏன்? எதற்குப் பாதுகாப்பு ஒப்பந்தங்கள். இராணுவப் புரட்சி ஏற்பட்டு இராணுவம் நாட்டைக் கைப்பற்றுகிறது. தீவிரவாதிகள் நாட்டைக் கைப்பற்றுகின்றனர். இறைமை கொண்ட ஒரு நாட்டின் மீது இன்னொரு நாடு படை எடுக்கிறது. அமெரிக்கப் படை வெனிசுவெலா நாட்டின் ஆள்புல எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து அந்நாட்டின் சனாதிபதி நிக்கலஸ் மதுரோவையும் அவரின் மனைவியையும் கைது செய்து நியூயோர்க் சிறையில் வைத்திருக்கின்றனர். அமெரிக்க சனாதிபதி ரொனால்ட் ட்ரம்ப் தாம் நினைத்த மாத்திரத்தில் பொருளாதாரத் தடைகளையும் வரி விதிப்புக்களையும் மேற்கொள்கின்றார். யுத்தப் பிரகடனம் செய்கின்றார். படையை நகர்த்துகின்றர். பிற நாடுகளின் ஆள்புல எல்லைக்குள் புகுந்து மக்களையும் உடமைகளையும் அழித்து அரசியல்வாதிகளையும் கொலை செய்கின்றார். அவரின் அடாவடித்தனம் நீண்டு கொண்டே செல்கின்றன. தனது நாட்டின் சட்ட திட்டங்களையா, சர்வதேச சட்டங்களையோ, ஐக்கிய நாடுகள் சபை, பாதுகாப்புச் சபை, அமெரிக்கக் காங்கிரசினதோ, செனற் சபையினதோ, நேட்டோ அமைப்பினதோ எந்தவொரு அனுமதியும் பெறப்படாமல் அத்தனை சட்டங்கள் ஒப்பந்தங்களையும் மீறி ஈரானின் மீது யுத்தப் பிரகடனம் செய்து ஈரானின் 6000 இலக்குகள்மீது இஸ்ரேலுடன் இணைந்து குண்டு வீசித் தாக்கியதாக மார்தட்டி அறிக்கை விடுகின்றார். அங்கு வீசப்பட்ட குண்டுகளில் பெரும்பாலானவை அப்பாவி மக்களின் தலைகளிலும் உடமைகளிலும்தான் விழுந்திருக்கின்றன. வீசப்பட்ட குண்டுகள் குறித்த இலக்கை மாத்திரம் தாக்குவதற்கு அவற்றுக்குக் கண்கள்தான் உண்டா?. அப்படியாயின் ஈரானிய ஆன்மீகத் தலைவரைக் கொல்வதற்கு 40 அதிசக்திவாய்ந்த குண்டுவீச்சு விமாங்கள் எதற்கு? குறிபார்த்து வீசப்பட்ட குண்டு ஆன்மீகத் தலைவரைக் கொல்வதற்கு ஒரு ஓரிரு விமானங்கள்போதுமே. சர்வதேசச்சட்டங்கள் கடதாசியில் இருக்கத்தக்கதாக இறைமை கொண்ட ஒரு நாட்டின் ஆள்புல எல்லைக்குள் புகுந்து ஆன்மீகத் தலைவர் தாக்கப்பட்டதை உலகம் வேடிக்கை பார்ர்த்துக் கொண்டிருக்கின்றதா? இஸ்ரேல் காசாவில் வீசிய குண்டுகளும் ஏவுகணைகளும் பல வைத்தியசாலைகளையும் பாடசாலைகளையும் பதம் பார்த்தன. அண்மையில் அமெரிக்க விமானப் படை வீசிய குண்டு ஈரானிலுள்ள பாடசாலையில் விழுந்ததனால் 300 க்கு மேற்பட்ட சிறுவர்கள் கொல்லப்பட்டனர். இவ்வாறுதான் இலங்கை உள்நாட்டு யுத்த காலத்தில் ஆலயங்கள், வைத்தியசாலைகள், பாடசாலைகள், சிறுவர் இல்லங்கள், ஆதரவற்றோர் இல்லங்கள்மீதும் குண்டுமாரி பொழிந்ததனால் மக்கள் வகை தொகையின்றிக் கொல்லப்பட்டனர். சர்வதேச சட்டத்தின்படி ஆலயங்கள், வைத்தியசாலைகள், பாடசாலைகள், ஆதரவற்றோர் இல்லங்கள, மாற்றுத் திறனாளிகளின் இருப்பிடங்கள் மீது குண்டு வீசித் தாக்குவது சர்வதேச யுத்த மீறலாகும். என்பதிருக்க அமெரிக்கா, இஸ்ரேல், ரஷ்சியா போன்ற நாடுகள் இவற்றின்மீது குண்டு வீசிக் கொண்டிருக்கின்றன. இதனைத் தட்டிக் கேட்பதற்கு சர்வதேச சமூகம் முன்வரவில்லை என்பதே மக்களின் அங்கலாய்ப்பு. ரஷ்சியா 1984 க்கு முன்னர் தமது ஆள்புல எல்லைக்குள் இருந்து சுதந்திரம் பெற்றுச் சென்ற உக்ரெயின் மீது சில காரணங்களை முன்வைத்துத் தாக்குகிறது. இதுவும் போர்க் குற்றமே. ஆனால், அமெரிக்காவும் இஸ்ரேலும் அவ்வாறல்ல. அமெரிக்கா உகண்டா, ஈராக், லிபியா, வெனிசுவெலா போன்ற நாடுகளின் அரசுத் தலைவர்களை வெளியேற்றியும், சிறைப்படுத்தித் தூக்குத் தண்டனை விதித்தும் ஈரான் பிரதமர், ஆன்மீகத் தலைவரைத் தாக்கிக் கொலை செய்தும் அட்டகாசம் காட்டிக் கொண்டிருக்கிறது. அதேபோல், தனக்கு விசுவாசமாக இல்லாத பல நாடுகளின் ஆட்சியைக் கவிழத்தும் இருக்கின்றன. வியட்னாம், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து ‘விழுந்தும் மீசையில் மண் ஒட்டாதது போல் தோல்வியை ஒப்புக் கொள்ளாமல் நாடுகளிலிருந்து விலகிச் சென்றனர். அமெரிக்கா உலக பொலிஸ்காரன்போல் ஏனைய நாடுகளின் அரசியல், பொருளாதாரம், வர்த்தகம், பாதுகாப்பு ஆகியன தனக்குச் சாதகமாக இல்லாதபோது தட்டிக் கேட்பதும், பொருளாதாரத் தடைகளை விதிப்பதும் குறித்த நாடுளை அச்சுறுத்தி அடிபணியச் செய்வதும், போர்ப் பிரகடனம் செய்து குண்டுவீசித் தாக்குவதும் வாடிக்கையாகிவிட்டன. இதனைத் தட்டிக் கேட்பதற்கு நாதியில்லாமல் ஐக்கிய நாடுகள் சபை, ஏனைய அமைப்புக்கள், நாடுகள் மௌனம் சாதிப்பது ரொனால்ட் ட்ரம்பை மேலும் உருவேற்றிக் கொண்டிருக்கின்றன. மத்திய கிழக்கில் நடைபெறும் யுத்தம் அப்பிராந்தியத்தை மட்டுமன்றி நேரடியாகவும் மறைமுகமாகவும் சகல நாடுகளையும் பாதித்துக் கொண்டிருக்கின்றன. பொருளாதார ரீதியாகப் பல நாடுகள் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றன. சர்வதேச சட்டத்தினால் தடைசெய்யப்பட்ட கொத்துக் குண்டுகள், வெள்ளைக் கந்தகக் குண்டுகள், இரசாயனம், அமிலம் கலந்த குண்டுகள் வீசப்படுகின்றன. பெரும்பாலான யுத்த மீறல்கள், சட்ட மீறல்களை அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் சர்வசாதாரணமாக மேற்கொண்டு வருகின்றன. அமெரிக்கா தங்களைத் தாக்குகிறது அதனால் நாங்கள் மத்திய கிழக்கிலுள்ள அமெரிக்காவின் படைத் தளங்களைத் தாக்குகிறோம் என ஈரான் நியாயம் கற்பிக்கிறது. அத்தோடு உலகுக்கு 20 வீதமான மசகு எண்ணெய்களைக் கப்பல்கள் செல்லும் ஈரானின் கட்டுப்பாட்டிலுள்ள ஹோர்மூஷ் நீரிணை மூடப்பட்டதனால் மசகு எண்ணெய்த் தாங்கிக் கப்பல்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருக்கின்றன. அதனால் உலக சந்தையில் ஒரு பீப்பாய் மசகு எண்ணெயின் விலை 100 அமெரிக்க டொலரைத் தாண்டிவிட்டது. யுத்தம் நீடித்தால் 150 டொலரையும் தாண்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பல நாடுகள் எரிபொருளின் விலையைக் கண்டபடி ஏற்றிஇருக்கின்றன. அதனால், ஏற்றி, இறக்கல் செலவு அதிகரித்துச்சகல நாட்டு மக்களினதும் வாழ்க்கைச் செலவை அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. அமெரிக்கா (5,117), இரசியா (5,459), சீனா (600), பிரித்தானியா (225), பிரான்ஸ் (290), இந்தியா (180), பாகிஸ்தான் (170), இஸ்ரயேல் (90), வடகொரியா (50), ஈரான்(35) ஆகிய நாடுகள் அணுவாயுதப் பரவல் தடை (NPT) ஒப்பந்தத்தையும் மீறி அணுவாயுதங்களை வைத்திருக்கின்றன. இதில் ரஷ்சியாவும், அமெரிக்காவும் 85 வீதமான அணுவாயுதங்களை வைத்திருக்கின்றன. அமெரிக்கா நேட்டோ நாடுகள் பலவற்றிலும், அமெரிக்கத் தளங்கள் உள்ள மத்திய கிழக்கு நாடுகளிலும் அணுவாயுதங்களை வைத்திருக்கின்றன. இது உலக நாடுகளுக்குப் பாரிய அச்சுறுத்தலாக இருக்கின்றது. இந்தியாவின் விசாகப் பட்டிணத்தில் போர்ப் பயிற்சி முடிந்து நாடு திரும்பிய ஈரானியப் போர்க் கப்பல் இந்து சமுத்திரப் பிராந்திய கடல் எல்லைக்குள், காலித் துறைமுகத்தில் இருந்து 40 கடல் மைல்களுக்கு அப்பால் வைத்து அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலால் தாக்கப்பட்ட சம்பவம் அப்பிராந்திளத்தின் கடல் பாதுகாப்பினைக் கேள்விக் குறியாக்கி இருக்கின்றன. இச்சம்பவத்தால் இலங்கை பயந்து, நடுங்கி, ஒடுங்கி இருக்க, ரஷ்சியாவின் எண்ணெய்க் கப்பல்கள் இந்தியாவுக்குச் சுதந்திரமாக வந்து செல்வதற்கு அமெரிக்காவின் ஒத்துழைப்புத் தேவை என்பதனால் இந்திய மோடி அரசு ‘தனக்குப் பல் போனாலும் பரவாயில்லை. எண்ணெய்த் தாங்கிக் கப்பல்கள் தனது நாட்டுக்கு வரவேண்டும்’ என்பதற்காக மௌனித்து நிற்கிறது. மத்திய கிழக்கின் எண்ணெய் வளத்தைச் சுரண்டுவதற்கும் ஈரானின் கட்டுப்பாட்டிலுள்ள ஹோர்மூஸ் நீரிணையைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்பதற்காகவும், அதற்குத் தடையாக இருக்கின்ற ஈரானின் ஆட்சி அதிகாரத்தைஅகற்றித் தனக்கு ஏற்ற தலையாட்டிப் பொம்மைகளை ஆட்சியில் அமர்த்த வேண்டும் என்பதற்காக ஈரானுக்கு எதிரான யுத்தத்தை அமெரிக்கா நடத்துகிறது. இது தன்னுடைய சுயநலனுக்காக என்பதைத் தவிர வேறு எந்தக் காரணமும் இருக்க முடியாது. இதற்கு அமெரிக்கா எடுத்து வைத்திருக்கும் துருப்புச் சீட்டுத்தான் ஈரான் மேற்கொள்ளும் யுரேனியம் செறிவாக்கல் முயற்சிகளும், அணுவாயுதங்களும் உலகுக்கு அச்சுறுத்தலாக அமைகின்றன என்பதுதான். ரஷ்சியாவும் அமெரிக்காவும் திருப்பதி லட்டுக்கள் போல் அணுவாயுதங்களைத் தயாரித்து வைத்திருக்கின்றனவே, அது அச்சுறுத்தல் இல்லையா?. லிபியா, ஈராக் போன்ற நாடுகளில் அமெரிக்காவால் நிறுவப்பட்ட பொம்மை ஆட்சிகள் வெற்றி அளித்தனவா?. ஈராக்கின் 30 வீதத்தக்கு மேற்பட்ட நிலப்பரப்புப் பூரணமாக ஈரானின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. இங்கு நாம் புரிந்து கொள்ள வேண்டியது எண்ணெய் வள உற்பத்தியில் மூன்றாவது நான்காவது இடத்தில் இருக்கும் ஈரான், வெனிசுவெலா ஆகிய நாடுகளைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தால் உலக ணெணெய் வளத்தைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தமைக்குச் சமமாகிவிடும் என அமெரிக்கா நினைப்பது. இதற்காகவே ட்ரம்ப் நடத்தும் யுத்தம். இந்த யுத்தத்தால் உலகின் பெரும்பாலான நாடுகள் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் போது, ஹோர்மூஸ் நீரிணையைப் பாதுகாப்பதற்காக நாடுகளின் ஒத்துழைப்பைக் கோரி, யுத்தக் கப்பல்களைப் பாதுகாப்புக்கு அனுப்பமாறும் கேட்டிருக்கின்றமை. பெஞ்சமின் நெத்தன்னியாகுவின் யுத்த நோக்கம் வேறானது. மத்திய கிழக்கின் பலம்வாய்ந்த ஏக சக்தியாக இருப்பதற்கு ஈரான் அச்சுறுத்தலாக இருப்பதும், ஹமாஸ், ஹிஸபுல்லாஹ், ஹவுதி தீவிரவாத அமைப்புக்களுக்கு ஈரான் படைக்கல உதவியும் நிதி உதவியும் வழங்கிப் பாதுகாத்து வருவதனால் ஈரானைப் பூண்டோடு அழித்து விடுவது என இஸ்ரேல் கங்கணம் கட்டிக் கொண்டு யுத்த்ததில் இருப்பது தோல்வியில் முடியப் போகின்றது. அமெரிக்கா, ரஷ்சியா, சீனா, இந்தியா, இஸ்ரேல், ஈரான் (அயதொல்லா அலி கமெய்னி) ஆகிய நாடுகளின் தலைவர்கள் எல்லோரும் 70 வயதுக்கு மேற்பட்டவர்கள். தம்மை அதியுச்ச சக்தியாக (Supreme Power) வைத்துக் கொண்டிருக்க நினைப்பவர்கள். அதிலும் ட்ரம்ப் அடாவடித் தனங்கள் நிறைந்த அரசியல் கோமாளி போன்றவர். ட்ரம்ப், புட்டின், நெத்தன்னியாகு மூவரும் குற்றவாளிகள். புட்டின் 2036 வரையும் ஆட்சியில் இருப்பதற்கு ஏற்றவாறு அரசியல் யாப்பில் திருத்தங்களை மேற்கொண்டு சுகமாக ஆட்சியில் இருக்கப் போகின்றார். டரம்பும் நெத்தன்னியாகுவுக்கும் சந்தர்ப்பமே கிடையாது. இவர்கள் இருவரையும் தெரிவு செய்தமைக்கான பலனை இருநாட்டு மக்களும் ஆனுபவிக்கின்றனர். அனுபவிக்கப் போகின்றனர். இவர்களின் பிடிவாதமும் அடாவடித் தனங்களும் அவர்களின நாட்டோடு மாத்திரம்தானே இருக்க வேண்டும். ஏன் ஏனைய நாடுகள் பாதிப்படைய வேண்டும். ஈரான் மத்திய கிழக்கில் ஏனைய நாடுகளில் உள்ள அமெரிக்கப் படைத் தளங்களைத் தாக்கி தரை, ஆகாய, கடல்வழிப்போக்குவரத்தைத் தடை செய்திருக்கிறது. இது இஸ்ரேலைப் பாதுகாக்கவும், எண்ணெய் வளங்களைச் சுரண்டவும் அமெரிக்கா செய்த சதி. அமெரிக்காவின் சதி வேலை மத்திய கிழக்கில் உள்ள பல நாடுகளுக்கும் இறைமை, ஆள்புலத்துக்கு அச்சுறுத்தலாக அமைந்திருக்கின்றன. இதிலும் ஒரு வினைப்பயன் இருக்கிறது. அமெரிக்கா, ரஷ்சியா, இஸ்ரேல் செய்யும் அடாவடித் தனங்களைத் தட்டிக் கேட்காமல் இருப்பது நற்செயல் அல்லவே. அதனால்தான் மத்திய கிழக்கில் நடைபெறும் யுத்தத்தின் விளைவுகளை உலக நாடுகள் முழுவதும் அனுபவித்துக் கொண்டிருக்கின்றன. ட்ரம்ப் நெத்தன்யாகு ஆகிய இருவருக்கும் கடிவாளம் போடவில்லையாயின் லிபியா, ஈராக், வெனுசுவெலாவில் நடந்தது போலும் காஸா, ஈரான், லெபனான் போன்ற நாடுகளில் நடப்பது போல் தமது நாடுகளிலும் அவ்வாறு நடக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது. கனடா, மெக்சிக்கோ, கியூபா, வெனிசுவெலா போன்ற நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருப்பது போல, கிறீன்லாந்தைக் கைப்பற்றப் போவதாக எச்சரிக்கை விட்டுக் கொண்டிருக்கின்றார். இன்று ஒரு பேச்சு, இன்று இரவு இன்னொரு அறிக்கை, நாளை ஒரு காரசாரமான எச்சரிக்கை என்றவாறு அரசியல் கோமாளி அடாவடித் தனத்தை தினமும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். இலாப, நட்டங்களைக் கணக்குப் பார்த்துத் திட்டம் போடும் வியாபாரி ஒருவர் இப்படித்தான் இருப்பார். ட்ரம்பும் ஒரு வியாபாரி என்பதும் குறிப்பிடத்தக்கதுது. ஒரு நாட்டின் ஆள்புல அதிகார எல்லைக்குள் (வெனிசுவெலா) அத்துமீறி நுழைந்து அந்நாட்டின் சனாதிபதியையும் அவர் மனைவியையும் சிறைப்பிடித்தமை, ஈரானின் ஆதியுச்ச ஆன்மீகத் தலைவர், பிரதமர் (திட்டமிட்ட விமான விபத்து) கொலை செய்தமை, நாடுகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கின்றமை, நாடுகளின் இறக்குமதிப் பொருட்கள்மீது கண்டபடி வரி விதிக்கின்றமை, பொருளாதாரத் தடைகள் விதிக்கின்றமை, ஈரான், பலஸ்தீனம் (காஸா), லெபனான், யெமன், கட்டார், துபாய், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட் ஆகிய நாடுகள்மீது விமானம், ஏவுகணை, ட்ரோன் தாக்குதல்களை நடத்துகின்றமை, இந்து சமுத்திர தெற்காசியப் பிராந்திய ஆள்புல எல்லைக்குள் நுழைந்து ஈரானியக் கடற்படைப் போர்க் கப்பலைத் தாக்கியமை, போர்க் கப்பல்களைக் கொண்டுபொய் நிறுத்தி நாடுகளை அச்சுறுத்தியமை, சர்வதேச சட்டங்கள் உடன்படிக்கைகளை மீறியமை இன்னோரன்ன செயற்பாடுகள் உலக ஒழுங்கை மாற்றி, சர்வதேச அமைதியைக் கேள்விக் குறியாக்கிவிடும் என்பதை உலக நாடுகள் மறந்விடக்கூடாது. இன்று அவருக்கு நாளை நமக்கும் ஏற்படலாம் என்பதையும் கவனத்தில் கொண்டு செயற்பட வேண்டும். இதனைத் தடுத்துச் சட்ட நடவடிக்கை எடுக்க முடியாத ஐக்கிய நாடுகள் சபை, பாதுகாப்புச் சபை, சர்வதேச நீதிமன்றம், மனித உரிமை அமைப்புக்கள், பிராந்திய நாடுகளின் கூட்டமைப்புக்கள், உடன்படிக்கைகள், சட்டங்கள், பாதுகாப்பு உடன்படிக்கைகள் ஆகியன இருந்தென்ன பயன் எனப்பலரும் கேட்கும் நிலை உருவாகிவிட்டது. உண்மையும் அதுதான். சிறிய நாடுகள், கிளர்ச்சிக் குழுக்களைக்கூட இவற்றையெல்லாம் மதிக்காது செயற்படும் சூழல் எப்பவோ உருவாகிவிட்டன. இவற்றையெல்லாம் மீறுவதற்கு வழிகாட்டி விட்டவை வீட்டொ அதிகாரம் கொண்ட நாடுகள் என்பதும் மறுப்பதற்கில்லை. இனிமேலும் தாமதிக்காது அமெரிக்கா, இஸ்ரேல், ஈரான், ரஷ்சியா, உக்கிரேன் ஆகிய நாடுகளைச் சமாதான வழிக்குத் திருப்பி உடன்படிக்கைக்குள் கொண்டுவராது விட்டால் விளைவு பாரதூரமாக அமைந்துவிடும் என்ன்பதையும் மறந்துவிடலாகாது. அமெரிக்கா, ரஷ்சியா, இஸ்ரேல், சீனா, வடகொரியா போன்ற நாடுகளுக்குக் கடிவாளம் போடத் தாமதிப்பதும் மூன்றாம் உலகமகா யுத்தத்துக்குக் காரணமாகிவிடும். இதற்கு ஏனைய வல்லரசு நாடுகளும், பிராந்திய நாடுகளும் ஒன்றிணைய வேண்டும். தமக்குள் பலமான அணியொன்றைக் கட்டியெழுப்ப வேண்டும். https://arangamnews.com/?p=12737- Today
- ஈழ ஆதரவு அரசியல் என்றால் என்ன? — கருணாகரன் —
ஈழ ஆதரவு அரசியல் என்றால் என்ன? March 11, 2026 — கருணாகரன் — தமிழ்நாட்டு அரசியலில் ஈழத்தமிழர் விவகாரம் அவ்வப்போது பேசப்படுவதுண்டு. (“நாங்கள் அப்படியல்ல. தொடர்ச்சியாகவே ஈழத் தமிழர்களுடைய விடுதலையைப் பற்றிப் பேசி வருகிறோம்” என்று பழ நெடுமாறன், வை.கோ, கொளத்தூர் மணி போன்ற சிலர் சொல்லக்கூடும். இதைக்குறித்துப் பின்னர் பார்க்கலாம்). தேர்தல் காலமென்றால், இன்னும் சற்று உரத்த தொனியில் இந்தப் பேச்சுக்குரல் கேட்கும். இப்போதும் அப்படித்தான், தமிழ்நாட்டு அரசியல் மேடைகளிலும் அரங்குகளிலும் ஈழத்தமிழர் அரசியலும் விடுதலைப் புலிகள் இயக்கமும் அதனுடைய தலைவர் பிரபாகரனின் பெயரும் பேசப்படுகின்றன. இதில் சீமான் சற்றுச் சத்தமாக முழங்குகிறார். இப்படிப் பேசப்படுவதால் ஈழத்தமிழர்களுக்கு என்ன பயன் கிடைத்தது; கிடைக்கிறது; எதிர்காலத்தில் எத்தகைய நன்மைகள் கிட்டும் என்பதைப் பற்றியெல்லாம் எவருக்கும் கவலை இல்லை. அதைப்பற்றிப் பரிசீலனை செய்வது கூட இல்லை. மூன்று வகை இதில் நாம் மூன்று வகையினரைப் பார்க்கலாம். ஒரு தரப்பு மெய்யாகவே ஈழ விடுதலை கிடைக்க வேண்டும், ஒடுக்கப்பட்ட மக்கள் உரிமை பெற வேண்டும் என்று நியாயமாகவே விரும்புகிறது. ஆனால், இந்தத் தரப்புக்கு இலங்கை இனப்பிரச்சினையின் சிக்கலான தன்மையைப் பற்றிச் சரியான புரிதல் இல்லை. ஈழவிடுதலைப் போராட்டம் தோற்கடிக்கப்பட்ட பின் நிலைமை இன்னும் சிக்கலடைந்துள்ளது என்பதையும் இந்தத் தரப்பு சரியாக அறிந்து கொள்ளவில்லை. அதைப் புரிந்து கொண்டால்தான் ஈழவிடுதலைக்கான அல்லது ஈழத்தமிழரின் உரிமைக்கான சாத்தியப்பாடுகளைப் பற்றிச் சிந்திக்க முடியும். குறிப்பாக இலங்கையில் உள்ள முஸ்லிம் மக்களின் தனித்துவம், அவர்களுக்குரிய இடம், இந்தப் பிரச்சினையில் அவர்களுடைய வகிபாகம் போன்றவற்றையும் தெரிந்து கொள்ள வேண்டும். குறிப்பாக ஈழவிடுதலையை அல்லது இலங்கையின் சிறுபான்மைத் தேசிய இனங்களின் உரிமைப் பிரச்சினையைப் பற்றிப் புதிய வாசிப்புச் செய்ய வேண்டும். அதற்கான உழைப்பும் உணர்திறனும் அவசியமாகத் தேவைப்படுகிறது. ஆனாலும் இந்தத் தரப்பினரிடத்தில் நியாயமான உணர்வு உண்டு. அடுத்த தரப்பு, ஈழப்போராட்டத்தைத் தன்னுடைய அரசியற் தேவைக்காக எடுத்தாள்கிறது. இது வெற்றுப் பிரகடனங்களிலும் தீவிர உணர்ச்சி நிலையிலும் இந்த விசயத்தை எடுத்தாள்கிறது. நம்முடைய தொப்புள் கொடி உறவுகளான தமிழர்களைச் சிங்களர்கள் தாக்குகிறார்கள்; கொல்கிறார்கள். சிங்கள அரசு தமிழ் மக்களைப் படுகொலை செய்கிறது என்ற அடிப்படையில் நோக்கிக் கொதிப்படைகிறது. இந்தத் தரப்பில் ஊடகங்களும் இலக்கிய அமைப்புகள், வெளியீட்டாளர்கள், எழுத்தாளர்கள் போன்றனவும் அடங்கும். இதொரு அயல் நாட்டின் அரசியற் பிரச்சினை. ஆகவே அதற்குரிய வரன்முறைகளும் எல்லைகளும் இருக்கும். இதைப் புரிந்து கொள்ளாமல் கொதிப்பதாலும் பொங்குவதாலும் எந்தப் பயனுமில்லை. இந்தத் தரப்பு பிரச்சினையை மேலும் சிக்கலடைய வைக்கிறது. இவர்களுடைய குரல் உயர உயர, ஈழத்தில் நெருக்கடி அதிகரிக்கிறது. மூன்றாவது தரப்பு, ஈழப்போராட்டத்தை விடுதலைப்புலிகளோடு மட்டுப்படுத்திப் பார்ப்பது. மறுபக்கத்தில் இனவாதச் சிங்கள அரசைக் கடுமையாக எதிர்ப்பது. அதை அழித்தொழிக்க வேண்டும் என்று பிரகடனம் செய்வது. இப்பொழுது சீமான் இதில் முன்னணி வகிக்கிறார். இது சாத்தியமே இல்லாத கனவுலகப் பிரகடனங்களைச் செய்து காலத்தையும் சக்தியையும் வீணடிக்கிறது. மட்டுமல்ல, ஈழ அரசியலைப் புரிந்து கொள்ளாமல் அதைத் தலைகீழாக்க முயற்சிக்கிறது. இந்தத் தரப்பினால் ஒரு சல்லிப் பணத்துக்குப் பிரயோசனமில்லை. இதையெல்லாம் பார்த்தால், தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்களும் அரசியற் கட்சிகளும் அரசியல் அறிவே இல்லாதவர்களா? என்று கேட்கத் தோன்றும். அப்படிச் சிறுபிள்ளைத்தனமாகப் பேசுகிறார்கள். சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொள்கிறார்கள். உண்மையைத் துணிந்து சொல்வதென்றால், ஈழத்தமிழர்களுடைய அரசியலை உரத்த தொனியில் பேசுவதால் ஈழத்தமிழர்களின் அரசியல் மேலும் சிக்கலடைந்து கொண்டேயிருக்கிறது. ஈழத்தமிழர்களின் அரசியல் மட்டுமல்ல, இலங்கையிலுள்ள முஸ்லிம் மக்களுடைய அரசியலும் நெருக்கடிக்குள்ளாகிறது. மட்டுமல்ல, இந்தியாவிலிருந்து 1800 களில் இலங்கைக்குப் பெயர்க்கப்பட்டு இலங்கையின் மலையகப் பகுதிகளில் உள்ள மக்களின் (இந்திய வம்சாவழியினரின்) அரசியலும் நெருக்கடிக்குள்ளாகிறது. அதாவது இலங்கையில் சிறுபான்மையினராக இருக்கும் மொத்தத் தமிழ்பேசும் மக்களின் அரசியல் பாதிக்கப்படுகிறது. காரணம், தமிழ்நாட்டில் ஈழத் தமிழர் விவகாரத்தை – விடுதலையை – உரிமைகளைப் பற்றிப் பேசுவதையும் தமிழ் நாட்டில் எடுக்கப்படும் தீர்மானங்களையும் சிங்கள மக்கள் வேறுவிதமாகவே – எதிராகவே – பார்க்கிறார்கள். அவர்களுடைய பார்வையில் அல்லது புரிதலில் ‘இலங்கையின் சிறுபான்மையின மக்களுக்கு (தமிழ் பேசும் தரப்பினருக்கு) இந்தியா பேராதரவை வழங்குகிறது. சிங்களவர்களுக்கு இந்தியா எப்போதும் எதிராகவே உள்ளது’ என்றே பொருள் கொள்ளப்படுகிறது. இப்படிச் சிந்திப்பதால், மேலும் தமிழ்பேசும் மக்களை சிங்கள அரசாங்கம் ஒடுக்குகிறது. இது அச்சத்தினால் உருவாகும் உளவியலின் விளைவாகும். தமிழ்நாட்டை இந்தியா என்றே பெரும்பான்மையான சிங்களவர்களும் புரிந்து கொள்கிறார்கள். ஆகவே ‘தமிழ் பேசும் மக்களுக்குத் தமிழ்நாடு ஆதரவாக இருக்கிறது என்பதை இந்தியா ஆதரவாக இருக்கிறது என்றே பார்க்கிறார்கள். ஆக,தமக்குத்தான் எவருடைய ஆதரவும் இல்லை. இந்த உலகத்தில் தாம் (சிங்களவர்) ஒரு சிறிய இனம். இலங்கையில் பெரும்பான்மையினராக இருந்தாலும் உலகத்தில் தனித்து விடப்பட்ட, சின்னஞ்சிறிய இனம். இரண்டு பில்லியன் மக்கள் மட்டுமுள்ள இனம். அதுவும் இலங்கைத்தீவில் மட்டுமே உள்ள இனம். இந்த நிலையில் அயலில் உள்ள தமிழ்நாடும் இந்தியாவும் தமிழர்களோடு சேர்ந்து தம்மை நெருக்கடிக்குள்ளாக்கப் பார்க்கிறது’ என்றே சிங்களத் தரப்பினால் கருதப்படுகிறது. இதற்கு வலுவானதொரு வரலாற்றுக் காரணமும் சிங்களத் தரப்பிடமுண்டு. வரலாற்றுக் காலம் தொட்டு, இலங்கையின் மீது தென்னிந்தியப் படையெடுப்புகளும் ஆக்கிரமிப்பும் நிகழ்ந்திருக்கிறது. சோழர்காலம் இதில் மேலும் உச்சமடைந்திருந்தது. ‘பொன்னியின் செல்வன்’ உங்கள் நினைவுக்கு வரலாம். இலங்கையின் மிகப் புகழ் மிக்க ஆட்சி மையங்களாக இருந்த அநுராதபுர ராஜ்ஜியத்தையும் பொலநறுவை ராஜ்ஜியத்தையும் சோழப்படையெடுப்புகளே வீழ்ச்சியடையச் செய்தன. இப்படித் தென்னிந்தியாவிலிருந்து மேற்கொள்ளப்பட்ட படையெடுப்புகளும் ஆக்கிரமிப்புகளும் சிங்களச் சமூகத்தின் ஆழுள்ளத்தில் நீங்காத வெறுப்பாகவும் வரலாற்றுக் காயமாகவும் வளர்ந்துள்ளது. தமது ஆட்சியையும் தாம் உருவாக்கிய நீர்ப்பாசனம் உள்ளிட்ட சிறப்பான கட்டமைப்புகளையும் தென்னிந்தியர்கள் (தமிழர்கள்) படையெடுத்து வந்து ஆக்கிரமித்தனர் என்ற வரலாற்றுக் கோபம் சிங்கள மக்களிடத்தில் உண்டு. இலங்கையின் நீர்ப்பாசன வரலாறு கிமு 5ஆம் நூற்றாண்டு முதல் (பாண்டுகாபய மன்னன் காலம்) தொடங்கும் மிக நீண்ட மற்றும் மேம்பட்ட பொறியியல் பாரம்பரியத்தைக் கொண்டது. உலர் வலய விவசாயத்திற்காக குளங்கள் (ஏரிகள் – Wewa) மற்றும் கால்வாய் அமைப்புகளை உருவாக்கி, ” குளங்களின் சங்கிலித் தொடர்” (Tank Cascade System) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, மன்னர்கள் நாட்டைத் தன்னிறைவு அடையச் செய்தனர். பொலன்னறுவை காலத்தில் பராக்கிரம சமுத்திரம் போன்ற பிரம்மாண்டமான ஏரிகள் கட்டப்பட்டன. பிசோகொட்டுவ (Biso Kotuwa – Valve Pit) எனப்படும் கசிவுத் தடுப்பு மற்றும் நீர் கட்டுப்பாட்டு கோபுரம் கி.பி. 03 ஆம் நூற்றாண்டிலேயே கண்டுபிடிக்கப்பட்ட ஒரு புரட்சிகரமான தொழில்நுட்பமாகும். இதை உருவாக்கிய பிரதான மன்னர்கள், வசபன் (பெரிய குளங்கள்), தாதுசேனன் (கலாவேவ), முதலாம் பராக்கிரமபாகு (பராக்கிரம சமுத்திரம்) ஆகியோர் நீர்ப்பாசனத் துறையில் முக்கிய பங்காற்றினர். இலங்கையின் இந்த நீர்ப்பாசன கலாச்சாரம், சுமார் 2,000 ஆண்டுகளுக்கும் மேலாக நிலையான விவசாயத்திற்கும், உணவுப் பாதுகாப்பிற்கும் அடிப்படையாக இருந்து வருகிறது. இப்படி உருவாக்கப்பட்ட நீர்ப்பாசனப் பொறிமுறையை அடிப்படையாகக் கொண்ட விவசாயப்பொருளாதாரத்தையும் கடலில் முத்துக் குளிப்பதையும் இரத்தினக்கல் மற்றும் ஏலம், கராம்பு, கறுவா, மிளகு போன்ற வாசனைப் பொருட்களையும் கொண்ட பெரு வணிகத்தையும் சோழர் தமதாக்கிக் கொண்டனர். இந்த ஆக்கிரமிப்புத் தன்மை இன்றைய இந்த யுகத்திலும் ஏதோ ஒரு விதத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அதில் ஒன்றுதான் ஈழத் தமிழரின் அரசியலை – உரிமைப் பிரச்சினையைச் சாட்டாகவும் சாதகமாகவும் வைத்துக் கொண்டு இந்தியாவும் தமிழ்நாடும் விளையாடுகின்றன என்றே சிங்களர் கருதுகிறார்கள். இதை நாம் மேலும் புரிந்து கொள்ள சிங்களவர்களின் வரலாற்று(?) நூலாகக் கருதப்படும் மஹாவம்சத்தைப் படித்தறியலாம். மஹாவம்சத்தில் இந்திய எதிர்ப்புவாதமும் தமிழ்கள் மீதான வெறுப்பும் தாராளமாகவே பதியப்பட்டுள்ளன. இந்தப் பதிவுக்கு வயது 2000 க்கு மேல். மட்டுமல்ல, இன்றைய நாளும் கூட அதனோடு பதிவு செய்யப்படுகிறது. அதாவது, மஹாவம்சம் எழுதப்பட்ட காலத்திலிருந்து தொடர்ச்சியாக அதனுடைய வரலாறு பதியப்பட்டு வருகிறது. ஒவ்வொரு முக்கிய சம்பவமும் வரலாறாகப் பதிவு பெறுகிறது. ஆகவே இந்தப் பின்னணியில், இந்தியா தொடர்பாகவும் தமிழ் பேசும் மக்கள் பற்றியும் எதிர்மறை எண்ணத்தோடு ஆட்சி அதிகாரத்தைக் கொண்டுள்ள சிங்களத் தரப்பு, எப்படி எச்சரிக்கையாகவும் தீவிர நிலையிலும் பழிதீர்க்கும் முனைப்போடும் இயங்கும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். ஆனால், சிங்களத் தரப்பு கருதுவதைப்போல உண்மையான நிலவரம் இல்லை. முக்கியமாக, இந்திய மத்திய அரசு தமிழ் மக்களுக்குச் சாதகமாக இல்லை. அப்படி இருந்திருக்குமாக இருந்தால், இலங்கையில் இந்தளவு பெரிய இனப் படுகொலைகளும் ஒடுக்குமுறையும் நடந்திருக்க வாய்ப்பில்லை. எழுபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக எந்த விதமான அரசியல் தீர்வையும் வழங்காமல் இலங்கை இழுத்தடிக்கவும் முடியாது. இலங்கையும் இந்தியாவும் இணைந்து செய்து கொண்ட இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் உள்ள மாகாணசபை ஆட்சியை உரிய முறையில் நடைமுறைப்படுத்தியிருக்கும். குறைந்த பட்சம் அதற்கு ஒழுங்காகத் தேர்தலையாவது நடத்தும். அப்படி எதுவும் நடக்கவில்லை என்றால், அது எதனைக் குறிக்கிறது அதனுடைய அரசியல் சேதி என்ன? மறுபக்கத்தில் தமிழ்நாட்டு அரசும் மக்களும் முழுமையான ஆதரவை ஈழப்போராட்டத்துக்குத் தருவதாகச் சொன்னாலும் அதனால் எந்த பயனும் கிடைத்ததில்லை. கிடைக்கப்போவதுமில்லை. இந்திய மத்திய அரசு ஈழத்தமிழர்களுக்கு உவப்பானதொரு தீர்மானத்தை எடுக்காத வரையில் தமிழ்நாட்டினால் எதையும் செய்யவே முடியாது. இலங்கையின் இனப்பிரச்சினையைப் பற்றி இந்திய மத்திய அரசு பேசத் தொடங்கி 50 ஆண்டுகள் கடந்து விட்டன. இலங்கை இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கென்ற பேரில் ஆயுதப்போராட்டத்துக்கு மறைமுகமான முறையில் மத்திய– மாநில அரசுகள் தாராளமான – ஏராளமான உதவிகளைச் செய்தன என்பது உண்மையே. மட்டுமல்ல, இந்திய அரசின் மத்தியஸ்தத்துடன் பல சுற்றுப் பேச்சுகள் ஈழத்தமிழ்ப் பிரதிநிதிகளுக்கும் இலங்கை அரசுப் பிரதிநிதிகளுக்குமிடையில் நடந்ததும் உண்மை. உச்சக்கட்டமாக 1987 இல் இலங்கை – இந்திய உடன்படிக்கையே செய்யப்பட்டது. ஆனாலும் விளைவுகள் எதுவும் நல்லனவாக அமையவில்லை. முக்கியமாக ஈழப்போரின்போதும் சரி, ஈழப்போரின் இறுதிக்காலத்திலும் சரி தமிழ்நாட்டின் கொந்தளிப்பு அரசியல் நல்விளைவுகள் எதையும் உருவாக்கவில்லை. காரணம், அதனுடைய அதிகார எல்லை மட்டுப்படுத்தப்பட்டது. இது எதைக் காட்டுகிறது? இந்திய மத்திய அரசை மீறித் தமிழ்நாடு எதையும் செய்ய முடியாது என்பதைத்தானே! அந்த நாட்களில் நெருக்கடிக்குள்ளாகிய ஈழத் தமிழர்களுக்காக மனிதாபிமான அடிப்படையில் தமிழ்நாட்டில் பல்வேறு தரப்பினராலும் சேகரிக்கப்பட்ட உணவுப் பொருட்களையும் மருந்துப் பொருட்களையும் கூட இலங்கையில் தமிழ் மக்களுடைய பகுதிக்கு அனுப்ப முடியவில்லை. அதற்கான ஏற்பாட்டையும் அனுமதியையும் இந்திய மத்திய அரசே செய்திருக்க வேண்டும். அது நடக்கவில்லை. ஆக, தார்மீக உணர்வு அடிப்படையில் மட்டும்தான் ஆதரவுக் குரலைக் கொடுக்க முடியும். கியூபாவுக்கு ஆதரவாக, குர்திஸ்க்கு ஆதரவாக, பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக குரல் கொடுப்பதைப்போல. அல்லது இந்திய மத்திய அரசின் ஆதரவுடன் நிவாரணப் பொருட்களை மட்டு அனுப்பி வைக்க முடியும். அவ்வளவுதான். அதற்கு அப்பால் செல்ல வேண்டுமானால் அது இந்திய மத்திய அரசுடன் தொடர்புபட்டதாக இருக்க வேண்டும். இந்திய மத்திய அரசின் முடிவுகள் – தீர்மானங்கள்- இந்திய வெளியுறவுக் கொள்கை, பிராந்திய நிலவரம், இந்தியப் பாதுகாப்பு, இந்திய நலன் போன்றவற்றை உள்ளடக்கியது. இந்த அடிப்படையை மனதிற்கொண்டே மத்திய அரசின் தீர்மானங்கள் அமையும். இதுதான் நடந்து கொண்டுமிருக்கிறது. இதை மீறி மத்திய அரசு தீர்மானங்களை எடுக்கப்போவதில்லை. பா.ஜ.க மட்டுமல்ல எந்தத் தரப்பு ஆட்சியில் இருந்தாலும் இதுதான் நடக்கும். இதுதான் நிலவரம். இதெல்லாம் தமிழகத்தின் அரசியல் தலைவர்களுக்கும் அறிவுபூர்வமாக அரசியல் பகுப்பாய்வைச் செய்வோருக்கும் அரசியல் விமர்சகர்களுக்கும் தெரியாது என்றில்லை. பலரும் இதைத் தெரிந்து கொண்டே விளையாடுகிறார்கள். சிலர் மட்டுமே உண்மையைச் சொல்கிறார்கள். அவர்கள் சொல்கின்ற உண்மைக்கு மதிப்பில்லை. பொய்யை, கற்பனையை நம்புகின்ற மக்களே அதிகமாக உள்ளனர். தமிழ் நாட்டிலும் இதுதான் நிலவரம். ஈழத்திலும் அப்படித்தான் உள்ளது. ஆனால், இந்த விளையாட்டுகளுக்கு ஈழத்தமிழர்களே விலையைக் கொடுக்கிறார்கள். அவர்கள் சொல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் திணறுகிறார்கள். ஆகவே இது ஒரு அபாய விளையாட்டு. அரசியல் தவறு. அநீதியான செயல். கண்டனத்துக்குரிய விடயம். ஆனால், ஒரு காலம் ஈழப்போராட்டத்துக்கும் ஈழப்போராளிகளுக்கும் தமிழ்நாடு முழு மனதோடு உதவியது; ஆதரவு நல்கியது. 1970 களின் பிற்பகுதியிலிருந்து1980 கள் வரையில். அந்தக் காலத்தில் மாநில அரசு, அதனுடைய காவல்துறை தொடக்கம், தமிழகத்தின் அரசியற் கட்சிகள், அரசியல் தலைவர்கள், மாணவர்கள், மக்கள், வணிகர்கள், வண்டி ஓட்டுநர்கள், தெருவோர உணவுக் கடைக்காரர்கள், கிராமங்களில் விவசாயிகள், பண்ணைகள் வைத்திருப்போர், மீனவர்கள், எழுத்தாளர்கள், சினிமாத்துறையினர் எனச் சகலரும் ஈழப்போராட்டத்தையும் ஈழப்போராளிகளையும் ஆதரித்தனர். இந்த ஆதரவைச் சரியான முறையில் பேணி, போராட்டத்துக்கு ஏற்றவாறு வளர்த்தெடுப்பதற்குப் பதிலாக அதைப் பழாக்கிச் சிதைத்ததில் பெருந்தவறை ஈழப்போராளிகளும் போராட்ட இயக்கங்களும் நிறைவேற்றியது துயரம். பாண்டிபஜார் துப்பாக்கிச் சூடு, சூளைமேடு கொலை என்று தொடங்கிய ஆயுத நடவடிக்கை, முன்னாள் இந்தியப் பிரதமர் ரஜீவ் காந்தியின் படுகொலை வரையில் நீண்டது. இந்தத் தவறுக்கு தமிழ்நாடு பெரிய விலையைத் தானும் கொடுக்க வேண்டியிருந்தது. இன்று இந்தக் கசப்பான வரலாற்று உண்மைகளை ஏற்றுக் கொண்டு புதிய தடத்தில் காலடி வைக்க வேண்டும். அது யதார்த்தம் என்ன என்பதைப் புரிந்து கொள்வதில் இருந்து ஆரம்பிக்கப்படுவது அவசியமாகும். சில ஈழ அரசியல் பார்வையாளர்கள் கருதுவதைப்போல, தமிழகத்தின் மூலமாக இந்திய மத்திய அரசைப் பயன்படுத்தி, இலங்கையின் இனப்பிரச்சினையைத் தீர்க்கலாம் என்பது மிகக் கடினமானது. ஆனால், அவர்கள் ‘சென்னை ஒரு திறவு கோலாக இந்தப் பிரச்சினையில் இருக்கும்’ என்று ஆழமாக நம்புகிறார்கள். அவர்களுடைய பார்வை எப்படியென்றால், ஈழத்தமிழர்களுக்குச் சாதமாக – ஆதரவாக சென்னையில் (தமிழ அரசு) எடுக்கின்ற தீர்மானங்களும் கொடுக்கின்ற அழுத்தங்களும் இந்திய மத்திய அரசை இலங்கையை நோக்கித் திரும்ப வைக்கும். இலங்கையின் மீது அழுத்தத்தைக் கொடுக்க வைக்கும் என்பதாக. இதைப் படிக்கும்போது சிரிப்பு வருகிறது அல்லவா! சென்னையில் இருக்கும் ஆளுநர் ரவியோடு தினமும் தமிழ்நாடு மோதவேண்டியுள்ளது. தமிழ்நாட்டின் அதிகாரத்தையே பிடுங்க அல்லது அதில் தலையீடு செய்வதற்கு மத்தி முயற்சிக்கிறது. இதற்கு எதிராக தமிழ்நாடு போராட வேண்டியுள்ளது. இந்த நிலையில் எப்படி அது மத்தியை ஈழத்தமிழருக்கு ஆதரவாகச் சாய்க்க முடியும்? குறைந்த பட்சம் இந்திய – இலங்கை மீனவர்கள் பிரச்சினை என்ற வகையில் ஈழத்தமிழ் மீனவர்களும் தமிழக மீனவர்களும் தினமும் மோதிக்கொள்கிறார்கள். தமிழக மீனவர்களின் படகுகளைக் கடலில் வைத்துப் பறிமுதல் செய்கிறது இலங்கைக் கடற்படை. தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு இலங்கைச் சிறைகளில் அடைக்கப்படுகிறார்கள். இதைக் கூட இந்திய – இலங்கை அரசுகள் பேசி ஒரு தீர்வுக்கு வரவில்லை. தமிழக அரசு இதில் ஒரு சரியான தீர்வை எட்டமுடியாமலிருக்கிறது. இந்தப் பிரச்சினையை ஈழத் தமிழ் அரசியல்வாதிகளும் கட்சிகளும் தமிழகத்தோடும் இந்தியாவோடும் பேசி ஒழுங்குக் கொண்டு வர முடியாமலிருக்கின்றன. இந்த நிலையில் 75 ஆண்டுக்கு மேலான இனப்பிரச்சினைக்குத் தீர்வைக் காண்பதற்கு சென்னையைத் திறவு கோலாக்குவதென்றால்! இங்கே நாம் இன்னொன்றையும் சொல்ல வேண்டும். ஈழத்தில் உள்ள அரசியல்வாதிகளும் அரசியற் கட்சிகளும் தமிழகத்தையும் இந்தியாவையும் அளவுக்கு அதிகமாக நம்புகின்றன; எதிர்பார்க்கின்றன. அல்லது அப்படி நடிக்கின்றன. இலங்கையின் மீது இந்தியா அரசியல் அழுத்த்ததை(இலங்கை இந்திய உடன்படிக்கையின் அடிப்படையிலேனும்) கொடுக்க வேண்டும் எதிர்பார்ப்பது தவறில்லை. ஆனால், அதற்கப்பால் சில அரசியல்வாதிகளும் சில அரசியற் கட்சிகளும் தமிழ் நாட்டின் அரசியல் தலைவர்கள் சிலரோடு நெருக்கம் கொள்வதாக காட்டிக் கொள்வதும் தமிழகத்தின் ஆதரவு தமக்கு உண்டென்று கூறுவதும் தேர்தல் அரசியல் ஆதாயங்களுக்கானது மட்டுமே. தமிழக மக்களினதும் தமிழ்நாட்டு அரசினதும் ஆதரவைப் பெறுவது நல்லது. ஆனால் அது தார்மீக அடிப்படையிலானது மட்டுமே. தமிழகம் தொழில்துறைகளில் முதலீட்டை ஈழத்தில் – தமிழ்ப்பகுதிகளில் – செய்வதாக இருந்தாலும் இலங்கை அரசு, இந்திய மத்திய அரசு ஆகியவற்றின் ஆதரவும் உடன்பாடும் வேண்டும். இந்த நிலையில் எப்படி ஈழ விடுதலை அரசியலில் தமிழ்நாடு முழுமுனைப்போடு செயற்பட முடியும்? தமிழ்நாடு சட்டமன்றில் ஒரு தீர்மானம் ஈழத்தமிழருக்கு ஆதரவாக எடுக்கப்பட்டால், அதனைக் கண்டு சீற்றமடைகின்றது சிங்களத் தரப்பு. சிங்களத் தரப்பின் அந்தச் சீற்றம் ஒடுக்குமுறையாக ஈழத்தமிழர்களின் மீது பிரயோகிக்கப்படுகிறது. அந்த ஒடுக்குமுறையைக் கட்டுப்படுத்தும் வலுவோ, சட்ட ஆற்றலோ தமிழ் நாட்டுக்கு இல்லை. உதாரணமாக ஈழ யுத்தத்திற்குப் பிறகு (2009) தமிழ்ப்பகுதிகளில் (வடக்குக் கிழக்கு மாகாணங்களில்) பௌத்தமயமாக்கல் தீவிரமடைந்துள்ளது?தமிழ்நாட்டினால் அல்லது இந்திய மத்திய அரசினால் என்ன செய்ய முடிந்திருக்கிறது? அல்லது என்ன செய்ய முடியும்? விடுதலைப் புலிகள் இல்லாத கடந்த 16 ஆண்டுகாலத்தில் ஏன் இனப்பிரச்சினைக்கான தீர்வைக் காண முடியவில்லை? அதற்கான அழுத்தத்தை ஏன் கொடுக்க முடியாதிருக்கிறது? எந்த அரசியல் நாடகத்துக்கும் ஒரு எல்லை உண்டு. பாதிக்கப்பட்ட மக்களை மேலும் பாதிப்படையச் செய்வது அரசியல் அல்ல. அதற்கு விடுதலை அரசியல் என்று பெயரைச் சூட்டுவது கேவலத்திலும் கேவலம். https://arangamnews.com/?p=12725- இந்துக்களுக்கு பைபிள் வழங்க முயற்சித்தால் கொளுத்துவோம் - சிவ சேனை எச்சரிக்கை..
இந்துக்களுக்கு பைபிள் வழங்க முயற்சித்தால் கொளுத்துவோம் - சிவ சேனை எச்சரிக்கை.. திங்கள், 16 மார்ச் 2026 02:43 PM வடமாகாண மேலதிக மாகாண கல்வி பணிப்பாளர் பிரட்லியின் செயற்பாடுகளை வடமாகாண ஆளுநர் வேடிக்கை பார்ப்பாராயின் பாடசாலைகளில் இந்து மாணவர்களுக்கு வழங்கும் பைபிள்களை வாங்கி கொளுத்துவோம் என இலங்கை சிவசேனை அமைப்பின் சிவத்தொண்டர்கள் சிறீந்திரன் மற்றும் மாதவன் ஆகியோர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். யாழில் இன்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தனர். மேலும் தெரிவிக்கையில், வட மாகாண மேலதிக கல்வி பணிப்பாளரின் செயற்பாடு மதங்களுக்கு இடையில் முறுகல்களை ஏற்படுத்துவதாக அமைகிறது. பைபிள் என்கின்ற கிறிஸ்தவ நூலினை வட மாகாண பாடசாலைகளுக்கு வழங்குவதற்கு அனுமதித்தமை இந்து மாணவர்களையும் பைபிள் நூலை பெறுவதற்கு திணிப்பதாக அமைகிறது. குறித்த நூலினை வழங்குவதற்காக அனுமதி கோரிய கிறிஸ்தவ அமைப்பு தொடர்பில் விசாரித்தபோது அவ்வாறான அமைப்பு ஒன்று இலங்கையில் பதிவு செய்ததாக அறியப்படவில்லை. அவ்வாறான அமைப்பு வடமாகாணத்தில் சுமார் ஒன்றரை இலட்சம் பைபிள்களை வழங்கப்போவதாக எமக்கு தகவல்கள் கிடைத்துள்ளது. வடமாகாண ஆளுநரின் அனுமதி இல்லாமல் மேலதிகமாக மாகாண கல்வி பணிப்பாளர் வழங்குவதற்கு சிபாரிசு செய்தமை ஏதோ ஒரு பின்புலத்தை அடிப்படையாக கொண்டதாக பார்க்கிறோம். குறித்த விடயம் தொடர்பில் வட மாகாண ஆளுநருக்கும் எழுத்தம் மூலம் தெரியப்படுத்தியுள்ள நிலையில் பொலிஸ் நிலையங்களிலும் முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளோம். ஆகவே குறித்த விடயம் தொடர்பில் வடமாகாண ஆளுநர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் இல்லாவிட்டால் இந்து மாணவர்களுக்கு பைபிளை வழங்க வழங்க முற்பட்டால் அதனை வாங்கி பாடசாலைகளுக்கு முன்பாக கொளுத்துவோம் என மேலும் தெரிவித்தனர் https://jaffnazone.com/news/55614- லெபனான் மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் குண்டுவீசி தாக்குதல்
லெபனானில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 900ஐ நெருங்குகிறது Published By: Vishnu 17 Mar, 2026 | 06:06 AM லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் குறைந்தது 886 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 2,141 பேர் காயமடைந்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. லெபனான் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, இஸ்ரேலிய வான் மற்றும் தரைவழி தாக்குதல்களால் இறப்பு எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. தொடர்ந்து வரும் வன்முறை நாட்டின் சுகாதாரத் துறையையும் கடுமையாக பாதித்துள்ளது, மேலும் தாக்குதல்களில் காயமடைந்தவர்களுக்கு நிவாரணம் வழங்கச் சென்ற மருத்துவ ஊழியர்கள் கூட இந்த தாக்குதல்களில் கொல்லப்பட்டதாகவோ அல்லது காயமடைந்ததாகவோ வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மார்ச் 2 முதல் குறைந்தது 38 சுகாதார ஊழியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 69 பேர் காயமடைந்துள்ளனர். இந்தத் தொடர் தாக்குதல்கள் காரணமாக ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பு தேடி வருகின்றனர். https://www.virakesari.lk/article/241153- மட்டக்களப்பு குருக்கள்மடம் மனிதப்புதைகுழி: நீதிபதி உள்ளிட்ட குழுவினர் விசேட கள விஜயம்!
மட்டக்களப்பு குருக்கள்மடம் மனிதப்புதைகுழி: நீதிபதி உள்ளிட்ட குழுவினர் விசேட கள விஜயம்! Vhg மார்ச் 17, 2026 குருக்கள்மடம் பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ள சந்தேகத்திற்கிடமான மனிதப்புதைகுழி இடத்தினை களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்ற நீதிபதி மற்றும் சட்டத்தரணிகள் உள்ளிட்ட குழுவினர் இன்று (17.03.2026) ஆம் திகதி நேரடி கள விஜயம் மேற்கொண்டு பார்வையிட்டனர். கடந்த 1990 ஆம் ஆண்டு புனித ஹஜ் யாத்திரையை முடித்துவிட்டு, கல்முனை வழியாக காத்தான்குடி நோக்கிப் பயணித்த முஸ்லிம்கள் ஆயுததாரிகளால் இடைமறிக்கப்பட்டு, குருக்கள்மடத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டு அப்பகுதியில் புதைக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் நீண்டகாலமாக வழக்கு நடைபெற்று வருகின்றது. இந்த வழக்கின் ஒரு கட்டமாக, இன்று களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்ற நீதிபதி ரி.பிரதீபன், பாதிக்கப்பட்ட தரப்பு சார்பில் ஆஜரான சட்டத்தரணி முபாறக் முஅஸ்ஸம், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் விசேட குழுவினர் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வுகளை மேற்கொண்டனர். தற்போது இந்த இடம் பலத்த பாதுகாப்பு வலயமாக அடையாளப்படுத்தப்பட்டு பொலிஸ் பாதுகாப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த விஜயத்தின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த சட்டத்தரணி முபாறக் முஅஸ்ஸம், குருக்கள்மடம் மனிதப்புதைகுழியின் முதலாம் கட்ட அகழ்வுப் பணிகள் எதிர்வரும் மார்ச் மாதம் 30 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாகத் தெரிவித்தார். நீதிமன்றின் உத்தரவிற்கமைய இந்த அகழ்வாய்வு பணிகள் நடைபெறவுள்ள நிலையில், இன்றைய இந்த விசேட கள விஜயம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது. https://www.battinatham.com/2026/03/blog-post_499.html- அவுஸ்திரேலியாவுக்கும் எரிபொருள் நெருக்கடி?
அவுஸ்திரேலியாவுக்கும் எரிபொருள் நெருக்கடி? Published By: Vishnu 17 Mar, 2026 | 10:07 AM சீனா தனது எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களிலிருந்து எரிபொருள் ஏற்றுமதியைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதால், அவுஸ்திரேலியாவின் திரவ எரிபொருள் பற்றாக்குறை மற்றும் விலை உயர்வுக்கான ஆபத்து தீவிரமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அந்த சூழ்நிலையில், ஆஸ்திரேலியாவிற்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ள குறைந்தது இரண்டு சரக்குகளாவது சந்தேகத்தில் இருப்பதாக அவுஸ்திரேலியன் ஃபைனான்சியல் ரிவியூ செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது. உலகின் மிக முக்கியமான கப்பல் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியில் இரண்டு டேங்கர் கப்பல்கள் வெடித்துள்ளன, மேலும் மோதல் தொடரும் வரை கப்பல்கள் இந்த வழியைப் பயன்படுத்தாமல் இருக்க அதிக வாய்ப்புள்ளது. அதாவது சீனா போன்ற ஆசிய சுத்திகரிப்பு மையங்களால் பெறப்படும் எண்ணெயின் அளவு கணிசமாகக் குறைந்துள்ளது. இந்த விநியோக பற்றாக்குறை காரணமாக, அந்த சுத்திகரிப்பு நாடுகள் தங்கள் சொந்த பெட்ரோல், டீசல் மற்றும் ஜெட் எரிபொருளுக்கான மூலோபாய தேவைகளை மறு மதிப்பீடு செய்ய வேண்டியிருக்கும் என்று வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் கூறுகின்றன. ஒட்டுமொத்தமாக, ஆசிய நாடுகள் தங்கள் எண்ணெய் தேவைகளில் 90% வரை மத்திய கிழக்கு பிராந்தியத்திலிருந்து பெறுகின்றன. திரவ எரிபொருட்களின் நிகர இறக்குமதியாளராக, ஆஸ்திரேலியா ஆசிய சுத்திகரிப்பு நிலையங்களிலிருந்து ஏற்றுமதியை பெரிதும் நம்பியுள்ளது. இது ஜெட் எரிபொருளுக்கு குறிப்பாக உண்மை, மேலும் ஜெட் எரிபொருள் விநியோகத்தில் ஏற்படும் இடையூறுகளால் ஆஸ்திரேலியாவின் பாதிப்பு குறித்து விமான நிபுணர்கள் நீண்ட காலமாக எச்சரித்துள்ளனர். உதாரணமாக, சிட்னி விமான நிலைய தலைமை நிர்வாக அதிகாரி ஸ்காட் சார்ல்டன், சிட்னி ஜெட் எரிபொருள் இறக்குமதியை முழுமையாகச் சார்ந்துள்ளது என்றும் சுத்திகரிப்பு திறன் இல்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். https://www.virakesari.lk/article/241151- கியூபாவைக் கொண்டு எதை வேண்டுமானாலும் செய்யமுடியும் - ட்ரம்ப்
கியூபாவைக் கொண்டு எதை வேண்டுமானாலும் செய்யமுடியும் - ட்ரம்ப் 17 Mar, 2026 | 11:34 AM கியூபா தீவைக் கொண்டு எதை வேண்டுமானாலும் செய்ய முடியும் என்று கூறிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், “அத்தீவை கைப்பற்றும் பெருமையை நான் பெறுவேன்” என்றும் குறிப்பிட்டுள்ளார். “கியூபாவை விடுவித்தாலும் சரி, அல்லது கைப்பற்றினாலும் சரி, என்னால் அந்தத் தீவைக் கொண்டு எதை வேண்டுமானாலும் செய்ய முடியும் என்று நினைக்கிறேன். கியூபா ஒரு அழகான தீவு. சிறந்த வானிலை கொண்டது. அதை வசப்படுத்திய பெருமை எனக்கு கிடைக்கும். கியூபாவை நட்பார்ந்த முறையில் கைப்பற்றுவது பற்றி அந்நாட்டு அதிகாரிகளுடன் நிர்வாகம் பேசி வருகிறது” என ட்ரம்ப் தெரிவித்தார். கரீபியன் தீவு நாடான கியூபாவுக்கும் அமெரிக்காவும் இடையே நீண்ட கால பகை காணப்படுகிறது. கியூபாவுக்கு சென்றுகொண்டிருந்த வெனிசுவெலா நாட்டு எண்ணெய் விநியோகத்தை அமெரிக்கா நிறுத்திவிட்டது. இதனால் கியூபாவில் டீசல் மூலம் இயங்கும் அனல் மின் நிலையங்கள் எரிபொருள் இல்லாமல் முடங்கின. அதையடுத்து, மின் தடை ஏற்பட்டு அந்நாடு முழுவதும் இருளில் மூழ்கியது. அமெரிக்க எண்ணெய் தடை விதித்தமையால், கியூபா பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு நீண்ட நேர மின்வெட்டு, உணவுப் பொருட்களின் பற்றாக்குறை ஏற்பட்டு மக்கள் அவதிப்படுகின்றனர். இந்நிலையில், அங்கு அரசுக்கு எதிராக போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. இந்த சந்தர்ப்பத்திலேயே கியூபாவைக் கைப்பற்றும் தனது விருப்பினை ட்ரம்ப் வெளிப்படுத்தியிருக்கிறார் https://www.virakesari.lk/article/241174- கர்வாரில் நீர்மூழ்கிக் கப்பல் RAM சோதனை மையம் திறப்பு – முன்னணி நாடுகளின் வரிசையில் இந்தியா
கர்வாரில் நீர்மூழ்கிக் கப்பல் RAM சோதனை மையம் திறப்பு – முன்னணி நாடுகளின் வரிசையில் இந்தியா Published By: Digital Desk 3 16 Mar, 2026 | 05:08 PM இந்திய கடற்படையின் பராமரிப்பு திறனை மேம்படுத்தும் வகையில், கர்நாடக மாநிலத்தின் கர்வார் பகுதியில் புதிய நீர்மூழ்கிக் கப்பல்களுக்கான Pneumatic RAM Test Facility (RAM சோதனை மையம்) இந்தியா திறந்து வைத்துள்ளது. இந்த புதிய சோதனை மையத்தின் மூலம், இத்தகைய தொழில்நுட்ப வசதி கொண்ட முன்னணி சில நாடுகளின் வரிசையில் இந்தியாவும் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த RAM சோதனை மையம் முக்கியமாக இந்திய கடற்படையின் கல்வரி வகை (Kalvari-class) நீர்மூழ்கிக் கப்பல்களின் பராமரிப்பு மற்றும் தொழில்நுட்ப ஆய்வுகளை மேம்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நீர்மூழ்கிக் கப்பல்களில் பயன்படுத்தப்படும் முக்கிய உபகரணங்களின் செயல்திறனை சோதித்து பராமரிப்பதற்கான வசதி நாட்டுக்குள்ளேயே கிடைக்கிறது. கர்வாரில் அமைக்கப்பட்டுள்ள இந்த நவீன சோதனை மையம், இந்தியாவின் கடற்படை தொழில்நுட்ப திறனையும் பாதுகாப்பு துறையின் சுயநிறைவு முயற்சிகளையும் மேலும் வலுப்படுத்தும் என பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும், இந்த திட்டம் “ஆத்மநிர்பர் பாரத்” (Atmanirbhar Bharat) மற்றும் “மேக் இன் இந்தியா” (Make in India) போன்ற உள்நாட்டு உற்பத்தி மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியை ஊக்குவிக்கும் தேசிய முயற்சிகளின் ஒரு பகுதியாகவும் கருதப்படுகிறது. இந்த வசதி செயல்பாட்டுக்கு வந்ததன் மூலம் இந்திய கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பல்களின் பராமரிப்பு திறன் அதிகரிப்பதுடன், நாட்டின் கடற்படை பாதுகாப்பு திறனும் மேலும் வலுவடையும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/241131- இஸ்ரேல் - கட்டார் - துபாய் - அபுதாபி மீது ஈரான் தாக்குதல்
பாக்தாத்தில் உள்ள அமெரிக்கத் தூதரகம் மீது பயங்கர தாக்குதல் Mar 17, 2026 - 07:23 AM பாக்தாத்தில் அமைந்துள்ள அமெரிக்கத் தூதரகத்தை இலக்கு வைத்து தொடர்ச்சியான ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. தாக்குதல்கள் ஆரம்பமானதில் இருந்து நடத்தப்பட்ட மிக மோசமான தாக்குதல் இதுவென ஈராக் பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதல் நடைபெறுவதற்கு சுமார் ஆறு மணித்தியாலங்களுக்கு முன்னர், ஈராக்கில் உள்ள அமெரிக்கப் பிரஜைகளுக்கான பாதுகாப்பு எச்சரிக்கையை தூதரகம் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://adaderanatamil.lk/news/cmmtyjfwq0005356prg6x7er7- மத்திய கிழக்கு நெருக்கடி : இலங்கையின் மீன் ஏற்றுமதி முடக்கம் - உள்நாட்டில் வீழ்ச்சியடைந்த மீன் விலை
மத்திய கிழக்கு நெருக்கடி : இலங்கையின் மீன் ஏற்றுமதி முடக்கம் - உள்நாட்டில் வீழ்ச்சியடைந்த மீன் விலை 17 March 2026 மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக சர்வதேச விமானப் போக்குவரத்துப் பாதைகளில் ஏற்பட்டுள்ள தடைகள், இலங்கையின் மீன் ஏற்றுமதியைப் பாரியளவில் பாதித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, ஏற்றுமதி செய்யப்பட வேண்டிய மீன்கள் உள்நாட்டுச் சந்தைக்கு விநியோகிக்கப்படுவதால், மீன் விலைகள் வீழ்ச்சியடைந்துள்ளதாக மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோலித கமல் ஜினதாச தெரிவித்துள்ளார். இந்த நிலைமை காரணமாக, நடுத்தர வர்க்கக் குடும்பங்கள் நீண்ட காலத்திற்குப் பிறகு தலபத் மற்றும் கெலவல்ல போன்ற பிரபலமான மீன் வகைகளை மீண்டும் கொள்வனவு செய்யும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. கெலவல்ல தற்போது ஒரு கிலோகிராம் சுமார் 1,000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக பல நாள் மீன்பிடி படகு உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. பல நாள் மற்றும் ஒரு நாள் மீன்பிடிப் படகுகளுக்குத் தேவையான எரிபொருளைத் தடையின்றி வழங்குவதற்குத் தற்போதைய நிலையில் அமைச்சு தயாராக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு நெருக்கடியால் விமானப் போக்குவரத்துப் பாதைகள் பாதிக்கப்பட்டுள்ளமை ஏற்றுமதித் துறையில் பாரிய தாக்கத்தைச் செலுத்தியுள்ளது. ஏற்றுமதி தடைப்பட்டதால் அதிகளவான மீன்கள் உள்நாட்டுச் சந்தைக்கு வருவதே இந்த விலை வீழ்ச்சிக்குக் காரணமாகும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இறால் தொழில்துறை குறித்துக் கருத்துத் தெரிவித்த ஜினதாச, இதுவரை எரிபொருள் தட்டுப்பாட்டால் அத்துறையில் பெரிய பாதிப்புகள் ஏற்படவில்லை எனத் தெரிவித்தார். எனினும், மின்சாரம் தொடர்பான பிரச்சினைகள் ஏதேனும் ஏற்பட்டால், இறால் உற்பத்தித் துறை சவால்களைச் சந்திக்க நேரிடும் என அவர் எச்சரித்துள்ளார். https://hirunews.lk/tm/453648/middle-east-crisis-sri-lankas-fish-exports-freeze-domestic-fish-prices-fall- சிறுமியை பாலியல் வல்லுறவு செய்த குற்றவாளிக்கு 15 வருட கடூழிய சிறை தண்டனை வழங்கி வவுனியா மேல் நீதிமன்றம் தீர்ப்பு!
சிறுமியை பாலியல் வல்லுறவு செய்த குற்றவாளிக்கு 15 வருட கடூழிய சிறை தண்டனை வழங்கி வவுனியா மேல் நீதிமன்றம் தீர்ப்பு! Published By: Vishnu 17 Mar, 2026 | 05:43 AM வவுனியா, ஒமந்தை பகுதியைச் சேர்ந்த 15 வயதுக்குட்பட்ட சிறுமியை பாலியல் வல்லுறவு புரிந்த தாயின் சகோதரரான குற்றவாளிக்கு 15 ஆண்டுகள் கடூழிய சிறை தண்டனை வழங்கி வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி அ.அ.ஆனந்தராஜா தீர்ப்பளித்துள்ளார். கடந்த 2013 ஆம் ஆண்டு வவுனியா, ஓமந்தை, பகுதியைச் சேர்ந்த 15 வயதுக்கு உட்பட்ட சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்ததாக அதே இடத்தைச் சேர்ந்த சிறுமியின் தாயின் சசோகதரான 47 வயது சந்தேக நபரை பொலிசார் கைது செய்து பி அறிக்கை மூலம் வவுனியா நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தி வழக்கு தொடரப்பட்டது. தொடர்ந்து 2013 பாலியல் வன்புணர்வு புரிந்ததாக சந்தேக நபருக்கு எதிராக சட்டமா அதிபர் திணைகடகளத்தால் குற்றப் பகிர்வுப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு வவுனியா மேல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. குறித்த வழக்கு அரச சட்டவாதி ஸ்ரீ.சிவஸ்கந்தஸ்ரீ அவர்களால் நெறிப்படுத்தப்பட்ட நிலையில், குறித்த வழக்கின் சந்தேக நபரான வவுனியா ஓமந்தை பகுதியில் வசித்து வந்த 47வயது நபர் தொடர்பான இரு குற்றச்சாட்டுக்களை அவர் ஏற்றுக்கொண்டார். குறித்த வழக்கு கடந்த வெள்ளிக்கிழமை தீர்ப்புக்காக திகதிடப்பட்டிருந்த நிலையில் எதிரியின் குற்ற ஒப்புதலை அடிப்படையாகக் கொண்டு குறித்த தீர்ப்பினை வவுனியா மேல் நீதிமன்றம் வழங்கியது. இதன்போது, வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி அ.அ.ஆனந்தராஜா திறந்த நீதிமன்றில் தீர்ப்பினை வாசித்துக் காட்டினார். குறித்த குற்றவாளிக்கு முதலாவது குற்றச்சாட்டுக்கு 15 வருட கடூழிய சிறைத் தண்டனை வழங்கியதுடன், 25 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் செலுத்துமாறும், தவறின் 6 மாதகால சாதாரண சிறைத் தண்டனையும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மூன்று இலட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் எனவும் தவறின், 2 வருட சிறை தண்டனையும் வழங்கி தீர்ப்பு அளிக்கப்பட்டது. அத்துடன், இரண்டாவது குற்றத்திற்காக 15 வருட சிறைத் தண்டனையும் 25 ஆயிரம் ரூபாய் தண்டப்பணமும் செலுத்த வேண்டும் எனவும் தீர்ப்பளித்தார். குறித்த இரு சிறைத்தண்டனைகளையும் ஏக காலத்தில் அனுபவிக்க நீதிமன்றினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. https://www.virakesari.lk/article/241150- இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிலிருந்து வௌியேறிய கோட்டாபய
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிலிருந்து வௌியேறிய கோட்டாபய Mar 17, 2026 - 11:40 AM Update 12.00 இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அங்கிருந்து வௌியேறியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையானார். https://adaderanatamil.lk/news/cmmu7qro9000h356psmwttfl1- இரு நிறுவனங்களால் 300-க்கும் மேற்பட்ட கேபிள் டிவி உரிமையாளர்கள் பாதிப்பு
இரு நிறுவனங்களால் 300-க்கும் மேற்பட்ட கேபிள் டிவி உரிமையாளர்கள் பாதிப்பு பூ.லின்ரன் இலங்கையில் இரு பிரதான நிறுவனங்களின் சுயநலப் போக்கினால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கேபிள் தொலைக்காட்சி சேவை உரிமையாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். தமக்கான நீதியை அரசாங்கம் தாமதமின்றி வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். யாழ் ஊடக அமையத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அகில இலங்கை கேபிள் டிவி ஓப்பரேட்டர்கள் சங்கப் பிரதிநிதிகள் இவ்விடயத்தைத் தெரிவித்தனர். இது குறித்து அவர்கள் மேலும் தெரிவிக்கையில், "சுமார் இரு தசாப்தங்களுக்கும் மேலாக இலங்கையின் பல பாகங்களிலும் நாம் கேபிள் தொலைக்காட்சி சேவையை முன்னெடுத்து வருகின்றோம். குறிப்பாக யாழ்ப்பாணத்தில் 110 பேரும், மலையகத்தில் 54 பேரும் உள்ளடங்கலாக நாடளாவிய ரீதியில் 300-க்கும் மேற்பட்டோர் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும், இலங்கையில் இரு குறிப்பிட்ட நிறுவனங்களைத் தவிர ஏனையோருக்கு இதற்கான முறையான உரிமங்கள் (Licenses) வழங்கப்படுவதில்லை. இதனால் எமது தொழில் நடவடிக்கைகள் முற்றாகப் பறிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது," என்றனர். தேசிய தொலைத்தொடர்பு ஆணைக்குழுவிடம் (TRC) உரிமம் கோரி விண்ணப்பித்தும் இதுவரை தகுந்த தீர்வு கிடைக்கவில்லை என அவர்கள் சுட்டிக்காட்டினர். "உரிமக் கட்டணமாக சுமார் 70 இலட்சத்து 80 ஆயிரம் ரூபா பணத்தைப் பெற்றுக்கொண்ட தொலைத்தொடர்பு ஆணைக்குழு, அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தது. ஆனால், குறித்த இரு பெரு நிறுவனங்களின் அழுத்தம் காரணமாக அந்த நடைமுறை இடைநிறுத்தப்பட்டுள்ளது. பல கோடி ரூபாய்களை முதலீடு செய்துள்ள நாம், தற்போது தொழிலும் இன்றி முதலீட்டையும் இழந்து நிற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்," என அவர்கள் ஆதங்கம் வெளியிட்டனர். குறித்த இரு நிறுவனங்களின் பிடியில் சிக்குண்டுள்ள கேபிள் தொலைக்காட்சிச் சேவையை மீட்டு, சிறிய அளவிலான உரிமையாளர்களின் நலன்களைப் பாதுகாக்க உரிய தரப்பினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். https://www.tamilmirror.lk/செய்திகள்/இரு-நிறுவனங்களால்-300-க்கும்-மேற்பட்ட-கேபிள்-டிவி-உரிமையாளர்கள்-பாதிப்பு/175-374039- புதிய அரசியல் கட்சியின் பெயரை வெளியிட்டார் வி.கே.சசிகலா!
எம் ஜீ ஆர் அம்மா தீபாவுக்கு என்ன நடந்தது ...? 2019 இற்கு பிறகு ஆளையே காணோம் - "நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
Important Information
By using this site, you agree to our Terms of Use.