அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3265 topics in this forum
-
தாயகத்தில் குறிப்பாக யாழ் குடாநாடு, புத்தளம் போன்ற பகுதிகள் தமது நீர்த்தேவைக்கு முற்று முழுதாக நிலத்தடி நீரையே நம்பி இருக்கும் நிலை இருக்கிறது. நிலத்தடி நீர் தேக்கம் உருவாவது இயற்கையாக, பொதுவாக வருடாந்தம் பெய்யும் மழை மண் ஊடு வழிந்தோடி நிலத்தின் கீழ் சேமிக்கப்படும். நன்னீர் உவர் நீரிலும் அடர்த்தி குறைந்ததால் கீழே உள்ள உவர் நீரில் நன்னீர் மிதந்தபடி இருப்பதுடன், வருடம் வருடம் பெய்யும் மழை நீர் நிலத்தின் ஊடு கீழே சென்று உவர் நீர் மட்டம் மேலே எழாத வாறு தடுக்கிறது. ஆனால் மக்கள் தொகை அதிகரிப்பு, அதிகரித்த விவசாய பாவனை காரணமாக நிலத்தடி நீர் பயன்பாடு அதிகரிக்கிறது. இந்த அதிகரிப்பு இயற்கையாக வருடாந்தம் மண்ணினுள் சென்று நிலத்தடி நீரை புதுப்பிக்கும் அளவிலும் அதிகமாக இருப்பதால் …
-
- 2 replies
- 4.2k views
-
-
முயல்களையும், எலிகளையும் வேட்டையாடும் அருகி வரும் விலங்கினமான ஃபெர்ரெட்டை, அதேபோன்ற ஒரு விலங்கின் மரபணுவைப் பயன்படுத்தி குளோனிங் (படியெடுத்தல்) முறையின் மூலம் உருவாக்கி அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். 1988-ம் ஆண்டு முதல் உறைந்த நிலையில் பாதுகாக்கப்பட்டு வரும் ஃபெர்ரெட்டை ஒத்திருக்கும் விலங்கின் மரபணுக்களை கொண்டே புதிய ஃபெர்ரெட்டை குளோனிங் செய்திருக்கிறார்கள். புதிதாகப் பிறந்திருக்கும் ஃபெர்ரெட்டுக்கு எலிசபெத் ஆன் எனப் பெயரிடப்பட்டிருக்கிறது என அமெரிக்காவின் மீன் மற்றும் வனவிலங்கு சேவைத் துறை அறிவித்துள்ளது. அமெரிக்காவில் அருகிவரும் விலங்கினங்களை குளோனிங் செய்தது இதுவே முதல் முறை. ஒருகட்டத்தில் முற்றிலும் அழிந்துவிட்டதாக கருதப…
-
- 0 replies
- 921 views
-
-
மடகாஸ்கரில் வாழ்விட இழப்பு மற்றும் வேட்டையாடல் போன்ற காரணங்களால் லீமார்ஸ் விலங்கினம் தீவிரமாக அருகிவரும் இனமாகவுள்ளது. bbc tamil
-
- 1 reply
- 402 views
-
-
[size=6]அறிந்திடுவோம்/எழுதிடுவோம் அப்ஸ்[/size] [size=4][size=5]அப்ஸ் என்றால் என்ன?[/size] இது ஒரு மென்பொருள். இன்னொரு மென்பொருள் இல்லை இயங்குதளம் ஒன்றின் மேல் இயங்கும் மென்பொருள்.[/size] [size=4]ஆங்கில சொல்லான அப்ளிகேசன் என்பதன் சுருங்கிய வடிவமே அப்ஸ்.[/size] [size=4][size=5]ஏன் அப்ஸ்:[/size] முன்னர் ஒருகாலத்தில் மேசைக்கணணிகள் அதிகளில் இருந்ததுடன் அவை சம்பந்தப்பட்ட பல மென்பொருட்கள் பெரிய மென்பொருள் நிறுவனங்களால் உருவாக்கப்பட்டன. சடுதியான வளர்ச்சிகண்ட கைத்தொலைபேசிகள், குறிப்பாக புத்திசிகாமணி கைத்தொலைபேசிகள் (http://www.yarl.com/...howtopic=104291) பின்னர் வந்த சிலேட்டுகள் அவை இயங்கும் மென்பொருள்கள் சார்பாக பல வகையான அப்சுகளுக்கு வழி தறந்து விட்டுள்ளன. அதேவேள…
-
- 0 replies
- 662 views
-
-
அனைவருக்கும் வணக்கம். இது ஒரு புதிய முயற்சி. சில காலங்களாக அறிவை வளர்க்கும் முறையில் எந்த ஒரு படைப்புகளும் யாழில் வந்ததாக எனக்கு தெரியவில்லை. அனைவரும் தேவை இல்லாத விடயங்களை முன் வைத்து கருத்துகளை பகிர்ந்து வருவதால், அது பலரை மறுமுகம் கொள்ள வைக்கின்றது. இது ஒரு வருத்தத்துக்கு உரிய விடயம். விடயங்களை அறிவியல் சம்பந்தமாக இனைத்து அதனூடாக நகைச்சுவையாக கருத்துகளை பரிமாறலாம். இதன் மூலம் அறிவையும் வளர்க்கலாம் பொழுதையும் போக்கலாம்..... தயவு செய்து அனைவரும் முன்வைக்கும் விடயங்கள் உண்மையானதா என நன்றாக தெரிந்து விட்டு பதியுங்கள். இங்கு, நமக்கு கல்வி கற்கும் இடத்தில் ஏற்பட்ட ஒரு அனுபவத்தில் இருந்தோ அல்லது வேலை செய்யும் இடத்தில் இருந்தோ, ஏற்ப்பட்ட அனுபவம் மற்றவர்களுக்கு அறிவார்த்தம…
-
- 14 replies
- 3.5k views
-
-
பிரித்தானியாவில் அறிமுகப்படுத்தப்படவுள்ள பறக்கும் கார்கள்! பிரித்தானியாவில் இன்னும் சில வருடங்களில் பறக்கும் கார்களை காணமுடியுமென நம்பிக்கை தெரிவிக்கப்படுகின்றது. இது Terrafugia Transition craft என அழைக்கப்படுகின்றது. இரண்டு இருக்கைகளை கொண்ட இச்சிறிய விமானமானது ஒரு பட்டனை அழுத்தியவுடன் உடனேயே காராக மாறக்கூடியது. இக் கார் அறிமுகப்படுத்தப்படும் தினமும் இதுவரை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இதன் விலை 242,000 அமெரிக்க டொலர்களாகும். எனினும் இதனை வாங்க 20 பேர் வரை விருப்பம் தெரிவித்துள்ளதுடன் முற்பணமும் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஒரு தடவை எரிபொருள் நிரப்புவதன் மூலம் இதனால் 800 கிலோமீற்றர்கள் வரை பறக்க முடியும். வானில் பறக்கும…
-
- 2 replies
- 745 views
-
-
அப்பிள் நிறுவனமானது தனது ஐபோன் வரிசையின் அடுத்த ஸ்மார்ட் போனை நேற்று அறிமுகப்படுத்தியது. இறுதியாக வெளியாகியிருந்த ஐபோன்5 வின் தொடர்ச்சியாக ஐபோன் 5எஸ் நேற்று உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்து வைக்கப்பட்டது. எனினும் ஐபோன் 5எஸ் அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும் மேற்படி நிகழ்வில் அனைவரது கவனத்தினையும் வேறொன்று ஈர்த்திருந்தது. ஆம், நீண்ட நாட்களாக வெளியாகும் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்பட்டு வந்த குறைந்த விலை ஐபோன் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது.முற்றிலும் பிளாஸ்டிக்கினால் தயாரிக்கப்பட்டுள்ள இது 3 ஆம் தர பாவனையாளர்களை இலக்குவைத்து வெளியாகியுள்ளது. ஐபோன் 5எஸ். அப்பிளின் கடைசி வெளியீடான ஐபோன்5 இன் அடுத்த வெளீயீடாக வெளியாகியுள்ளது.தங்க நிறம் மற்றும் சில்வர் மற்றும்…
-
- 10 replies
- 5.8k views
-
-
உலகிலேயே மிகப்பெரிய விமானம் இங்கிலாந்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இவ் விமானம் 300 அடி நீளம் கொண்டதாக அமைந்துள்ளது. ஏனைய நவீன சொகுசு விமானங்களாக கருதப்படும் ஏர்பஸ் 380, போயிங் 747-8 போன்றவற்றை விட, புதிதாக அறிமுகப்படுத்தப்படவுள்ள விமானம் 60 அடி அதிக நீளம் கொண்டதாகும். 50 தொன் சரக்கு மற்றும் 50 பயணிகளுடன் ஆகாயத்தில் மட்டுமின்றி நீரிலும் ஊர்ந்து செல்லும் ஆற்றலுடன் சுமார் 60 மில்லியன் பவுண்டுகள் விலையில் இந்த விமானம் அமெரிக்க விமானப்படைக்கு என பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்டது. சமீபத்தில் அமெரிக்க பொருளாதாரத்தில் ஏற்பட்ட மந்த நிலையையடுத்து அந்நாடு சில சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டது. அப்போது இந்த விமானத்திற்காக முன்னர் அளிக்கப்பட்டிருந்த முன்அனுமதி ரத்து செய்யப்பட்…
-
- 3 replies
- 537 views
-
-
பூமியில் இன்றைக்கு 6.8 பில்லியன் பேர்கள் சாப்பிட்டுக் கொண்டிருக் கிறார்கள். 2050 ஆம் ஆண்டில் 9.5 பில்லியன் பேர்களுக்கு சோறு போட வேண்டிவரும். அதற்கு பிரேசில் நாடு அளவுக்குப் புதிதாக வேளாண்மை நிலம் நமக்குத் தேவைப்படும். ஏற்கனவே குடிநீரில் 70 சதவிகிதமும் எரிபொருளில் 20 சதவிகிதமும் உணவு உற்பத்திக்காகவே செலவாகிறது. மேலும் ஒரு 3 பில்லியன் மனிதர்களுக்குத் தேவையான நிலத்திற்கும் நீருக்கும் எரிசக்திக்கும் என்ன செய்வது? எங்கே போவது? இதற்கு கலப்பையில்லாத கட்டட விவசாயம்தான் ஒரே பதில். நிலத்தை உழுது, பாசனம் செய்து, உர மிட்டதால் பூமி நொந்துபோய் மலட்டுத் தன்மை அடைந்துவிட்டன. வேண்டிய அளவுக்குக் காடுகளையும் வெட்டி நாசம் செய்து அவற்றை விவசாய நிலங் களாக்கி விட்டோம். அதன் காரணமாக புவியின் சூட…
-
- 2 replies
- 1.3k views
-
-
நெடுங்காலமாக மனித இனத்தில் இருந்து கொண்டிருக்கும் கேள்விகளுள் ஒன்று: அறிவாற்றல் இயற்கையாகவே அமைவதா அல்லது வளர்த்தெடுக்கக் கூடியதா? (Nature Vs Nurture). இந்தக் கேள்வியின் இன்னொரு பரிமாணம் தான், ”அறிவாற்றல் மரபுப் பண்பா, இல்லை, சமூகச் சூழ்நிலையால் அமைவதா?” உலகின் எல்லாப் பகுதிகளிலும் அறிவாற்றல் உட்பட பல்வேறு பண்புகளும் ஒரு குறிப்பிட்ட இனத்துக்கோ அல்லது இனக்குழுவுக்கோ மரபார்ந்தவை, தலைமுறைகளாக வருபவை என்ற கருத்து பொதுவாக இருந்தது, பின்னர் சமூக-பண்பாட்டு வளர்ச்சியின் நிலையில் அறிவாற்றல் என்பது ஒரு மரபுப் பண்போ, பாரம்பரியமானதோ அல்ல, அது ஒரு பொதுப் பண்பு; சூழ்நிலையும், வாழ்நிலையுமே அதனைத் தீர்மானிக்கிறது, தகுந்த சூழ்நிலை அமைந்தால் எல்லோராலும் அறிவாற்றலைப் வளர்த்துக் கொள்ள முடிய…
-
- 0 replies
- 1.2k views
-
-
அறிவாற்றல் மரபுப் பண்பா? பிரகாஷ் சங்கரன் நெடுங்காலமாக மனித இனத்தில் இருந்து கொண்டிருக்கும் கேள்விகளுள் ஒன்று: அறிவாற்றல் இயற்கையாகவே அமைவதா அல்லது வளர்த்தெடுக்கக் கூடியதா? (Nature Vs Nurture). இந்தக் கேள்வியின் இன்னொரு பரிமாணம் தான், ”அறிவாற்றல் மரபுப் பண்பா, இல்லை, சமூகச் சூழ்நிலையால் அமைவதா?” உலகின் எல்லாப் பகுதிகளிலும் அறிவாற்றல் உட்பட பல்வேறு பண்புகளும் ஒரு குறிப்பிட்ட இனத்துக்கோ அல்லது இனக்குழுவுக்கோ மரபார்ந்தவை, தலைமுறைகளாக வருபவை என்ற கருத்து பொதுவாக இருந்தது, பின்னர் சமூக-பண்பாட்டு வளர்ச்சியின் நிலையில் அறிவாற்றல் என்பது ஒரு மரபுப் பண்போ, பாரம்பரியமானதோ அல்ல, அது ஒரு பொதுப் பண்பு; சூழ்நிலையும், வாழ்நிலையுமே அதனைத் தீர்மானிக்கிறது, தகுந்த சூழ்நில…
-
- 14 replies
- 3k views
-
-
தலையில் சீப்பை வைத்து தேய்த்தால் மின்னேற்றம் ஏற்பட்டு, சிறு சிறு பேப்பர் துண்டுகளையும் தூசுகளையும் கவர்ந்து இழுக்கும் அல்லவா? அதுபோலத் தான் காற்று தூசு மற்றும் நீராவி நிரம்பிய கருமேகங்களில் தூசு மூலக்கூறுகள் ஒன்றுடன் ஒன்று உராய்வதால் மின்சாரம் தோன்றும். அதை நிலைமின்னேற்றம் என்பார்கள். மழை தரும் கருமேகத்தில் உள்ள அமளி துமளியான நிலையில் மேலும் மேலும் கூடுதல் உராய்வு மூலகூறுகளிடையே ஏற்படுவதால் மின்னேற்றம் கூடுதல் ஆகும். கருமேகத்தில் திரளும் மின்சாரம் ஒரு அளவை தாண்டியதும் திடீரென படுவேகமாக, கண் இமைக்கும் நேரத்தில் நிலத்தை நோக்கிப் பாயும். ஈர்திங் எனப்படும் இந்த மின்னிறக்க நிகழ்வே மின்னல் என்று சொல்லப்படுகிறது. ஒரு மின்னலுக்குப் பிறகு கார் மேகங்களில் மின் சமநிலை ஏற்படுகிறத…
-
- 0 replies
- 540 views
-
-
அறிவியல் அதிசயம்: 320 கோடி ஆண்டுகளாக அழிவின்றி வாழும் ஓர் 'ஆன்மா'வின் ஆச்சர்ய கதை பேராசிரியர் சுதாகர் சிவசுப்பிரமணியம் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,SCIENCE PHOTO LIBRARY (மனிதகுல வளர்ச்சியின் பரிணாமங்களுக்கு முக்கிய காரணமான அறிவியல் - தொழில்நுட்பம் சார்ந்த புதிய தகவல்கள் மற்றும் கோணங்களை உலகெங்கும் உள்ள தமிழ் வல்லுநர்களின் பார்வையில், மாதந்தோறும் 1, 15 ஆகிய தேதிகளில் கட்டுரைகளாக வெளியிடுகிறது பிபிசி தமிழ். அத்தொடரின் பதினெட்டாவது கட்டுரை இது. இந்தக் கட்டுரையில் உள்ள கருத்துகள் அனைத்தும் கட்டுரையாளரின் சொந்தக் கருத்துகளே. இவை ப…
-
- 0 replies
- 351 views
- 1 follower
-
-
அறிவியல் அதிசயம்: 38 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மீனின் இதயம் கண்டுபிடிப்பு பல்லவ் கோஷ் அறிவியல் நிருபர் 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,PALEOZOO படக்குறிப்பு, கோகோ மீனின் மாதிரி வடிவம் 38 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து புதைபடிவமான மீனின் இதயத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மனிதர்கள் உட்பட, முதுகெலும்புள்ள விலங்குகள் அனைத்திலும் காணப்படும் இதயம் எப்படி பரிணாம வளர்ச்சியடைந்துள்ளது என்பதை கண்டறிவதற்கான முக்கிய சான்றாக இது இருக்கும் அவர்கள் கூறுகின்றனர். இது 'கோகோ' (Gogo) என்ற மீனுக்கு சொந்தமான இதயம். தற்போது, இந்த மீ…
-
- 0 replies
- 359 views
- 1 follower
-
-
அறிவியல் அதிசயம்: உலகை மாற்றிய தோல்வியடைந்த 4 முக்கிய கண்டுபிடிப்புகள் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES உலகளவில் மில்லியன் கணக்கான உயிர்களைக் காப்பாற்றிய இதயமுடுக்கி (Pacemaker) ஒரு தோல்வியுற்ற கண்டுபிடிப்பின் விளைவு என்பது உங்களுக்குத் தெரியுமா? மின்விளக்கு, அச்சு இயந்திரம் போன்ற வெற்றிகரமான யோசனை உலகை மாற்றியது என்று கூறப்படுகிறது. ஆனால் சில நேரங்களில் தோல்வியடைந்த சிந்தனைகள் கூட உலகை மாற்றும். இது ஒருமுறை மட்டும் நடந்ததில்லை. இத்தகைய சிந்தனைகள் கண்டுபிடிக்கப்பட்ட காலத்தில் வெற்றிபெறவில்லை. ஆனால், பின்னர் உலகை மாற்றிய தருணங்கள் உண்டு. …
-
- 0 replies
- 633 views
- 1 follower
-
-
அறிவியல் அதிசயம்: சூரியன் கருந்துளையாக மாறி பூமியை விழுங்கி விடுமா? சதீஷ்குமார் சரவணன் அறிவியலாளர் 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES (மனிதகுல வளர்ச்சியின் பரிணாமங்களுக்கு முக்கிய காரணமான அறிவியல் - தொழில்நுட்பம் சார்ந்த புதிய தகவல்கள் மற்றும் கோணங்களை உலகெங்கும் உள்ள தமிழ் வல்லுநர்களின் பார்வையில், மாதந்தோறும் 1, 15 ஆகிய தேதிகளில் கட்டுரைகளாக வெளியிடுகிறது பிபிசி தமிழ். அத்தொடரின் எட்டாவது கட்டுரை இது. இந்தக் கட்டுரையில் உள்ள கருத்துகள் அனைத்தும் கட்டுரையாளரின் சொந்தக் கருத்துகளே. இவை பிபிசி தமிழின் கருத்துகள் அல்ல. - ஆசிரியர்) அமெரிக்காவிற்கும்,…
-
- 0 replies
- 635 views
- 1 follower
-
-
அறிவியல் அதிசயம்: பால்வெளி மண்டலத்தின் நடுவில் பிரமாண்ட கருந்துளை – வியப்பூட்டும் உண்மைகள் 14 மே 2022 பட மூலாதாரம்,EHT COLLABORATION படக்குறிப்பு, பால்வெளி மண்டலத்தின் நடுவில் படம்பிடிக்கப்பட்ட பிரமாண்ட கருந்துளை மேலே இருக்கும் படத்தில் இருப்பது நமது நட்சத்திரக் கூட்டமான பால்வெளி மண்டலத்தின் மையத்திலுள்ள பிரமாண்டமான கருந்துளை. பால்வெளி மண்டலத்தின் மையத்தில் அமைந்திருக்கும் மாநிறை கருந்துளையின் (மிகவும் பிரமாண்டமான) ஒளிப்படம் முதல்முறையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சாகிட்டாரியஸ் ஏ, என்றழைக்கப்படும் இந்த கருந்துளை, நம் சூரியனைவிட 40 லட்சம் மடங்கு பெரியது. அபரிமிதமான ஈர்ப்பு விச…
-
- 0 replies
- 266 views
- 1 follower
-
-
அறிவியல் அதிசயம்: பூமியின் அடுத்த சூப்பர் கண்டம் எப்போது, எங்கே, எப்படித் தோன்றும்? சுவாமிநாதன் நடராஜன் பிபிசி உலக சேவை 4 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, சூப்பர் கண்டம் உருவாகும்போது பசிபிக் பெருங்கடல் மறையும் பெருங்கடல்கள் மற்றும் பரந்த கண்டங்களால் வகைப்படுத்தப்பட்டுள்ள இந்த பூமியின் நிலவியல் தொடர்ந்து மாறிக்கொண்டே வருகிறது. ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்கள் வடிவமைத்துள்ள புதிய ஆய்வு மாதிரியின்படி, பசிபிக் பெருங்கடல் மறைந்து, கண்டங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து, வட துருவத்தில் 'அமேசியா' எனப்படும் புதிய சூப்பர் கண்டம் உருவாகும் என கணித்துள்ளனர். ஆனால், இந்…
-
- 0 replies
- 330 views
- 1 follower
-
-
அறிவியல் அதிசயம்: மனிதன் மரணத்தை வெல்வது சாத்தியமா? நீடித்த இளமையை நோக்கி முன்னேறும் மருத்துவம் நமசிவாயம் கணேஷ் பாண்டியன் துல்லிய மருத்துவ முறை ஆராய்ச்சியாளர், ஜப்பான் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES மனிதகுல வளர்ச்சியின் பரிணாமங்களுக்கு முக்கிய காரணமான அறிவியல் - தொழில்நுட்பம் சார்ந்த புதிய தகவல்கள் மற்றும் கோணங்களை உலகெங்கும் உள்ள தமிழ் வல்லுநர்களின் பார்வையில், மாதந்தோறும் 1, 15 ஆகிய தேதிகளில் கட்டுரைகளாக வெளியிடுகிறது பிபிசி தமிழ். அத்தொடரின் ஐந்தாவது கட்டுரை இது. (இந்தக் கட்டுரையில் உள்ள கருத்துகள் அனைத்தும் கட்டுரையாளரின் சொந்தக் கருத்துகளே. இவை பி…
-
- 0 replies
- 335 views
- 1 follower
-
-
அறிவியல் அதிசயம்: மரணம் நிகழும் கடைசி நொடியில் வாழ்க்கையின் பிளாஷ்பேக் தெரியும் - ஆய்வு 24 பிப்ரவரி 2022, 07:05 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES நாம் இறக்கும் போது வாழ்க்கை நம் கண்களுக்கு முன்பாக வந்துபோகும் என்று ஒரு அறிவியல் "விபத்தின்" மூலம் கிடைத்திருக்கும் புதிய தரவில் தெரியவந்திருக்கிறது. கால்-கை வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட 87 வயது நோயாளியின் மூளை அலைகளை விஞ்ஞானிகள் குழு அளவிட்டது. ஆனால் நரம்பியல் பதிவின் போது, அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. ஆனால் இறக்கும்போது மூளையில் இருந்து எதிர்பாராத அலைகள் பதிவாகின. இறப்பதற்கு முன்னும் பின்னும் 30…
-
- 0 replies
- 314 views
- 1 follower
-
-
அறிவியல் அதிசயம்: வசியம் செய்யும் உயிரிகளின் பிரமிக்க வைக்கும் வரலாறு பேராசிரியர் சுதாகர் சிவசுப்பிரமணியம் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,WESTEND61 / GETTY IMAGES (மனிதகுல வளர்ச்சியின் பரிணாமங்களுக்கு முக்கிய காரணமான அறிவியல் - தொழில்நுட்பம் சார்ந்த புதிய தகவல்கள் மற்றும் கோணங்களை உலகெங்கும் உள்ள தமிழ் வல்லுநர்களின் பார்வையில், மாதந்தோறும் 1, 15 ஆகிய தேதிகளில் கட்டுரைகளாக வெளியிடுகிறது பிபிசி தமிழ். அத்தொடரின் பதினாறாவது கட்டுரை இது. இந்தக் கட்டுரையில் உள்ள கருத்துகள் அனைத்தும் கட்டுரையாளரின் சொந்தக் கருத்துகளே. இவை பிபிசி தமிழின…
-
- 0 replies
- 405 views
- 1 follower
-
-
இரண்டாவது பூமி (பெர்த் 2.0) என்று வானவியலாளர்கள் அழைக்கும் கிரகத்தை நோக்கிய தேடல் வெகு காலமாக நடக்கிறது. அதில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. நாஸாவின் கெப்ளர் கிரக-வேட்டை விண்கலத்தைச் சேர்ந்த வானவியலாளர்கள், இதுவரை கண்டறியப்பட்டிருப்பவற்றிலேயே பூமியுடன் அதிக ஒற்றுமை கொண்டிருக்கும் கிரகம் ஒன்றை தாங்கள் கண்டறிந்திருப்பதாகக் கடந்த வாரம் அறிவித்தார்கள். அதுக்கும் இதுக்கும் இடையே பூமியின் விட்டத்தை விட ஒன்றரை மடங்குக்குச் சற்று அதிகமான விட்டம் கொண்டது அந்தக் கிரகம். அதன் பெயர் கெப்ளர் 452பி. அந்தக் கிரகம் நமது சூரியனைப் போன்ற ஒரு விண்மீனைச் சுற்றுகிறது. சுற்றுப்பாதையை ஒரு தடவை நிறைவு செய்ய 385 நாட்கள் ஆகின்றன. இதனால் மிதமான வெப்பநிலையும், மேற்பரப்பொன்று இருக்குமென்றா…
-
- 0 replies
- 362 views
-
-
மே 22, 1822-ம் ஆண்டு. ஜெர்மனி. குளிர்காலம் சென்று வசந்தம் பிறந்தது. மெக்லென்பேர்க் பிரதேசத்தில் இருக்கும் போத்மேர் எஸ்டேட் முதலாளி எப்போதும்போல பறவைகளைச் சுடும் விளையாட்டில் அன்றைய ஜமீன்தார்கள் போல ஈடுபட்டுவந்தார். அவரது தலைக்கு மேலே வசந்த காலத்தில் பறந்தது செங்கால் நாரை (White Stork). எடுத்தார் தனது துப்பாக்கியை, சரியாகக் குறிவைத்தார். டுமீல்... கீழே விழுந்தது நாரை. இரண்டாம் வேட்டை நாரையின் அருகே விரைந்தனர் அவரும் அவரது கூட்டாளிகளும். குண்டடி பட்டு இறக்கும் தறுவாயில் கிடந்த நாரையைப் பார்த்ததும் வியப்பில் ஆழ்ந்தார்கள், திகைப்பில் ஒரு கணம் விறைத்துப்போனார்கள். ஏற்கெனவே அந்த நாரை வேட்டையாடப்பட்டிருந்தது. அதன் கழுத்தில் 80 சென்டிமீட்டர் நீளமுள்ள இரும்பு முனையுடன் ஈட்டி பா…
-
- 0 replies
- 771 views
-
-
நவீன மனிதர்கள் ஆப்பிரிக் காவில்தான் தோன்றினர். சுமார் 60 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இடம் பெயர்ந்து ஐரோப்பா, ஆசியா, இந்தியா என உலகம் முழுவதும் படர்ந்து பரவிக் குடியேறினர் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். ஏன் ஆப்பிரிக்காவிலிருந்து நமது மூதாதைகள் இடம் பெயர்ந்தனர்? நெருப்பின் முதல் பயன் சுமார் இரண்டு லட்சம் வருடங்களுக்கு முன்பு நவீன மனிதர்கள் பிறந்தனர் என்று ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன. மனிதச் சாயல் கொண்ட விலங்குகளிலிருந்து ராமாபிதிகஸ் (Ramapithecus), அஸ்திரலோ பிதிகஸ் (Australopithecus), ஹோமோ எரக்டஸ் (Homo erectus) நியண்டர்தால் (Neandertals) எனும் பல படிநிலைகள் முதல் இன்றைய நவீன மனிதர்கள் வரை பல பரிணாம வளர்ச்சிப்படிகள் இதுவரை நடந்துள்ளன. ஆயினும் இன்றைய மனித இனம் முழ…
-
- 0 replies
- 429 views
-
-
டி.என்.ஏ எனும் சுருள வைத்த ஏணி கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஜஸ்டின் வெர்பில் (Justin Werfel), மற்றும் யானீர் பார்-யாம் (Yaneer Bar-Yam) ஹார்வர்டு பல்கலைக்கழகத்தைச் சார்ந்த டொனல்ட் இங்பெர் (Donald E. Ingber) ஆகியோர் Programed death is favored by natural selection in spatial systems எனும் தங்களது கட்டுரையில் கணினி உதவியுடன் சிமுலேஷன் முறைப்படி பரிணாமத்தில் உயிரியின் உயிரியல் ஆயுள் தேர்வு எப்படி நடைபெறுகிறது என ஆராய்ந்துள்ளனர். எதிர்காலச் சந்ததியினருக்காக இயற்கை வளங்களை விட்டுவைக்கும் படியான பரிணாமத்தின் மரபணு ஏற்பாட்டின் வடிவமே முதுமை என்று அவர்களின் ஆய்வு தடாலடியாகக் கூறுகிறது. பரிணாம வளர்ச்சி ஏற்படுத்தியதே உயிரியல் ஆயுள் வரம்பு என்றும் முதுமை என்பது உடலின்…
-
- 0 replies
- 795 views
-