அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3265 topics in this forum
-
கடந்த வாரம் உலகம் முழுவதும் நடந்த சுவாரஸ்யமான அறிவியல் செய்திகளின் தொகுப்பு. #WeekInScience அறிவியலிலும், தொழில்நுட்பத்திலும் நாளுக்கு நாள் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. மானுடத்தின் சிந்தனையையும், வாழ்வியலையும் மாற்றி அமைக்கக்கூடிய கண்டுபிடிப்புகளைத் தொகுத்து, இந்த வார #WeekInScience பகுதியில் தருகிறோம். பறவைகளின் பார்வையில் தொடங்கி, பூமியில் மோதிய வேற்றுகிரகம் வரையில் கடந்த வாரம் வெளிவந்த அறிவியல் செய்திகள் நம்மை வியக்கவைக்கின்றன. 1. பறவைகள் எவ்வாறு பார்க்கின்றன? தங்கள் சுற்றுப்புறத்தைப் பறவைகள் எவ்வாறு பார்க்கின்றன, எந்தெந்த நிறங்களை அவை உணர முடியும் போன்ற கேள்விகள் அறிவியல் உலகத்தின் முன் நீண்டகாலம…
-
- 0 replies
- 706 views
-
-
படத்தின் காப்புரிமை Getty Images சுமார் 150 கோடி ஒளி ஆண்டு தூரத்தில் உள்ள ஒரு நட்சத்திரக் கூட்டத்தில் இருந்து வந்த ரேடியோ சிக்னல் ஒன்றை கண்டுபிடித்துள்ளதாக வானியலாளர்கள் கூறியுள்ளனர். கனடா நாட்டு டெலஸ்கோப் உதவியுடன் இது கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மிகச்சரியாக அது என்னவிதமான ரேடியோ அலைகள் என்பதோ, மிகச்சரியாக எங்கிருந்து வந்தது என்பது பற்றியோ தெரியவில்லை. 13 ரேடியோ வேக அதிர்வுகளில் (Fast Radio Bursts) ஒரு அசாதாரணமான சமிக்ஞை 150 கோடி ஒளி ஆண்டு தூர…
-
- 5 replies
- 1.3k views
-
-
நிலவில் முளைத்தது... பருத்தி விதை. நிலவின் மறுபக்கத்திற்கு சீனா அனுப்பிய விண்கலத்திலிருந்த பருத்தி விதை முளைக்கத் தொடங்கியுள்ளமை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. நிலவின் பின் பகுதியை எவராலும் பார்க்க முடிவதில்லை. இதுவரை பல்வேறு ஆராய்ச்சிகளை உலக நாடுகள் செய்து வந்தாலும், நிலவின் பின்பகுதியை ஆய்வு செய்ய முதலில் சீனாவே ஆரம்பித்திருந்தது. இதற்காக கடந்த மாதம் 8 ஆம் திகதி Chang’e 4 என்ற விண்கலத்தை சீனா நிலவுக்கு அனுப்பியது. அந்த விண்கலம் இந்த மாதம் 3 ஆம் திகதி நிலவின் இருண்ட பகுதி என்று கூறப்படும் யாரும் பார்த்திராத பகுதியில் இறங்கியது. நிலவின் மறுபக்கத்தில் யாரும் இதுவரை கண்டிராத ஒளிப்படங்களை சீன விண்வெளி மையத்திற்கு அனுப்பியது. நிலவில் பூமியைப் போல் இல்லாமல் …
-
- 0 replies
- 843 views
-
-
சாங் இ-4 விண்கலம் நிலவில் தரையிறக்கப்பட்டுள்ளது January 3, 2019 சாங் இ-4 ( chang’e E-4 ) விண்கலம் நிலவில் தரையிறக்கப்பட்டுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது. நிலவின் ஒரு பகுதி மட்டுமே எப்போதும் பூமியை நோக்கி உள்ள நிலையில் அதன் மற்றைய பகுதியின் பெரும்பாலானதினை பூமியிலிருந்து பார்க்க முடியாத நிலை காணப்படுவதனால் அந்தப் பகுதியை நிலவின் இருண்ட பகுதி என அழைக்கப்படுகின்றது. . அந்தப் பகுதியில் ஆய்வுகளை மேற்கொள்வதற்காக முதல் முறையாக ஆய்வுகளை மேற்கொள்வதற்காக சீனாவின் சாங் இ-4 விண்கலம் கடந்த 8 ஆம் திகதி விண்ணில் ஏவப்பட்டது. தொடர்ந்து நான்கு நாள்களாக பூமியை வட்டமிட்ட அந்த விண்கலம், கடந்த 12 ஆம் திகதி நிலவின் சுற்றுவட்டப் பாதைக்கு நுழைந்தது. இந்த நிலையில்…
-
- 5 replies
- 2k views
-
-
ரேடாருக்கு முன்பு போர் விமானங்களைக் கண்காணிக்க உதவிய ஓசை சுவர் .! ( இந்த சுவர் ஒரு விவசாய நிலப்பரப்பில் இருக்கிறது ) இன்னும் இந்த சுவர் எத்தனை உயிர்களை காவு வாங்க போகிறதோ தெரியவில்லை - இது 'மெட்ராஸ்' திரைப்படத்தில் வரும் ஒரு வசனம். ஆனால், பிரிட்டனில் ஒரு சுவர் வடிவமைப்பு பல உயிர்களை காப்பாற்றியுள்ளது. எதிரி விமானத்தின் ஒலிகளை கிரகிப்பதற்காக உட்புறம் குழிந்த வடிவிலான சுவரை பிரிட்டன் வடிவமைத்தது. அதாவது, விமான ஒலி அலைகளை இது உள்வாங்கும். இதனை கண்காணிப்பதன் மூலம், தரைப் படைகளை உஷார்படுத்தி பிரிட்டன் நகரங்களை காக்க முடியும் என்பது திட்டம். ஓசை கண்ணாடிகள் மஜ் வில்லியம் சன்சோமால் வடிவமைக்கப்பட்ட இந்த சுவர் வடிவம் ஓசை கண்ணாடிகள் என்று அழைக்கப்பட்டது…
-
- 1 reply
- 1k views
-
-
பனி மனிதன் வடிவில் காட்சி தரும் Ultima Thule கோள் – நாசா விஞ்ஞானிகள் அறிவிப்பு சூரியனிலிருந்து 6.4 பில்லியன் கிலோ மீட்டர் தொலைவிலுள்ள கோள் Ultima Thule. இந்த கோள் ஒரு பெரிய பனிமனிதன் போன்ற (snowman) வடிவில் உள்ளதாக நாசா விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். கோளின் துல்லியமான ஒளிப்படங்களை அமெரிக்க ஆய்வு அமைப்பின் New Horizons விண்கலம் வெளியிட்டுள்ளது. இரண்டு கோளங்கள் இணைந்து அந்த வடிவம் உருவானதாக நாசா விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர். இது மாபெரும் அறிவியல் கண்டுபிடிப்பு எனவும் அவர்கள் கூறியுள்ளனர். New Horizons விண்கலம் Ultima Thule கோளை கடந்த செவ்வாய்க்கிழமை கடந்து சென்ற போது குறித்த ஒளிப்படம் எடுக்கப்பட்டுள்ளது. Ultima Thule கோள் 2014ஆம் ஆண்டு முதல்முறையாகத் …
-
- 0 replies
- 499 views
-
-
காலம் குறித்து கார்லோ ரோவேலியுடன் ஒரு நேர்முகம்- மார்க் வார்னர், எமானுவல் மொஸ்காடோ: ரா. கிரிதரன் தமிழாக்கம் பதாகைJanuary 3, 2019 மொழிபெயர்ப்பாளர் குறிப்பு: காலமும் இலக்கியமும் எனக்குக் காலமே என்னவென்று தெரியவில்லை. செய்கையே காலம். அல்லது ஒரு செய்கைக்கும் அடுத்ததற்கும் உள்ள இடைவெளி. செய்கை இடைவெளி இரண்டும் கலந்ததே காலம். அல்லது ரெண்டுமே இல்லை. என்னைப் பொறுத்ததுதான் காலம். என் உணர்வுக்கு ஒன்றை விடுத்து அடுத்தது என்று ஏற்படும்போதுதான் காலம். அப்படியென்றால் என்னைப் பொறுத்தவரை ரெயில் நின்றுகொண்டிருக்க்கிறது. – அசோகமித்திரனின் ‘காலமும் ஐந்து குழந்தைகளும் காலம் என்பது இயற்பியலுக்கு எந்தளவு தேவையான கருத்தாக இருக்கிறதோ அதேயளவு நெருக்கமான கருத்தாக கலை இல…
-
- 0 replies
- 343 views
-
-
அமெரிக்காவில் உயரிய விருது பெற்ற, மலேசியத் தமிழர்! மலேசியாவின் ஈப்போவினைச் சேர்ந்த தமிழரான வைத்தியர் பெர்னார்ட் அருளானந்தம் அமெரிக்காவில் உயரிய விருதினைப் பெற்றுள்ளார். தொற்று நோய்களுக்கான புதிய தடுப்பு மருந்துகளைக் கண்டு பிடிக்கும் பணியில் சிறந்த பங்காற்றியமைக்காகவே அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இதன்போது அவர் அமெரிக்காவில் புதிய கண்டு பிடிப்பாளர்களுக்கான தேசிய அகாடமி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். மலேசியாவின் ஈப்போவினைச் சேர்ந்த தமிழரான வைத்தியர் அருளானந்தம், கடந்த 25 ஆண்டுகளாக அமெரிக்காவில் வசித்து வருகிறார். தற்போது அவர் செண் அந்தோனியாவிலுள்ள டெக்சாஸ் பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சி, பொருளாதார மேம்பாடு அறிவாக்கத் துறையின் துணைத் தலை…
-
- 0 replies
- 607 views
-
-
நடக்க கூட முடியலையே.. 197 நாட்கள் ஸ்பேஸில் இருந்த வீரர்.. பூமிக்கு வந்ததும் நிகழ்ந்ததை பாருங்க! விண்வெளி வீரர் ஒருவர் 197 நாட்கள் விண்வெளியில் இருந்துவிட்டு பூமிக்கு திரும்பிய போது அவர் எப்படி நடந்தார் என்பதை வீடியோவாக வெளியிட்டு இருக்கிறார். அமெரிக்கா, ஜப்பான், ரஷ்யா உள்ளிட்ட 10க்கும் அதிகமான நாடுகள் மூலம் விண்வெளியில் சர்வதேச விண்வெளி மையம் அமைக்கப்பட்டுள்ளது. விண்வெளியில் இருக்கும் இந்த ஸ்பேஸ் ஸ்டேஷனில் விண்வெளி வீரர்கள் சென்று ஆராய்ச்சி செய்வது வழக்கம். பல நாட்டு விண்வெளி வீரர்கள் அங்கு செல்வதும் சில நாட்கள் ஆராய்ச்சி செய்துவிட்டு பின் மீண்டும் திரும்பி வருவதும் வழக்கமாக நடந்து வருகிறது.இந்த நிலையில் நாசாவை சேர்ந்த விண்வெளி வீரர் ஏஜே (ட்ரூ). பியூஸ்டல்…
-
- 0 replies
- 522 views
-
-
இலத்திரனியல் கழிவுகள் & முகமைத்துவம் மின்னணுக் குப்பை மின்னணுக் குப்பை எனப்படுவது பயன்படுத்தப்படாமல் எறியப்படும் மின்சார மற்றும் மின்னணுக் கருவிகள் மற்றும் அவற்றின் உதிரிப்பாகங்களைக் குறிக்கும். இத்தகைய கருவிகள் பொதுவாக பழையதாகி கோளாறாகி விடுவதன் காரணமாகவோ அல்லது அவற்றை விட திறன்மிக்க கருவிகளைப் பயனர்கள் வாங்குவதாலோ இவை எறியப்படுகின்றன. இவ்வாறு எறியப்படும் கருவிகள் பல நச்சுத்தன்மை கொண்ட பாகங்களைக் கொண்டுள்ளன. இவை சுற்றுச்சூழக்கு ஊறு விளைவிக்கின்றன. பாதரசம், காரீயம், போன்ற உலோகங்களை இவை கொண்டுள்ளன. இவ்வாறு எறியப்படும் கருவிகள்: துவையல் எந்திரம் போன்ற பெரிய கருவிகள் மின்னல…
-
- 0 replies
- 7.7k views
-
-
சேவல் பிறப்பைத் தடுக்க புதிய வழிமுறை! அடைகாத்தலுக்குப் பிறகு சேவல் பிறப்பதைத் தவிர்க்கும் வகையில் உருவாக்கப்பட்ட முட்டைகள், உலகில் முதன்முறையாக ஜெர்மனி நாட்டின் தலைநகரமான பெர்லினில் விற்பனைக்கு வந்துள்ளது. "செலெஃக்ட்" செயல்முறை மூலம் பறவையின் பாலினத்தை முன்பே தீர்மானிக்க முடியும் என்றும், சேவல்கள் பிறப்பதைத் தவிர்க்க முடியும் என்றும் கண்டுபிடித்துள்ளனர் ஜெர்மனியிலுள்ள விஞ்ஞானிகள். ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 4 முதல் 6 மில்லியன் சேவல்கள் கொல்லப்படுகின்றன. சேவல்களினால் எந்தவிதப் பொருளாதார லாபமும் இல்லை என்ற காரணத்தால், இவ்வாறு நிகழ்கிறது. அதனால், சேவல் பிறப்பதைத் தவிர்க்க ஜெர்மனி விஞ்ஞானிகள் புதிய செயல்முறை ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனர். செலெஃக்ட் என்ற முறைய…
-
- 3 replies
- 849 views
-
-
செவ்வாய் கிரகத்தில் பனிப்பள்ளம் : சிலிர்ப்பூட்டும் புகைப்படங்கள் வெளியீடு ESA செவ்வாய் கிரகத்தின் கோரோலோவ் பள்ளத்தில் முழுவதுமாக பனி நிறைந்திருக்கும் புகைப்படமொன்று தற்போது வெளிவந்துள்ளது. ஐரோப்பிய விண்வெளி மையத்தின் மார்ஸ் எக்ஸ்பிரஸ் மிஷன் இப்புகைப்படங்களை எடுத்துள்ளது. அழகான இப்புகைப்படத்தை பார்க்கும்போது எந்தவொரு காதலன் காதலிக்கும் தனது இணையோடு விடுமுறை காலத்தை கழிப்பதற்கான கனவு இடமாக தோன்றக்கூடும். ஐரோப்பிய விண்வெளி மையத்தின் மார்ஸ் எக்ஸ்பிரஸ் மிஷன் கடந்த 2003-ம் ஆண்டு ஜூன் 2-ம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. ஆறு மாதங்கள் கழித்து செவ்வாய் கிரகத்தை அடைந்த இந்த விண்வெளி ஆராய்ச்சித் திட்டத்தின் 15-வது ஆண்டுவிழாவை சிறப்பிக்கும் விதமாக இப்புகைப்படங்கள் வெளியிடப்…
-
- 0 replies
- 373 views
-
-
சாய்ராம் ஜெயராமன் பிபிசி தமிழ் படத்தின் காப்புரிமை Getty Images உங்களது கைபேசி செய்யும் மாயாஜாலத்திற்கு அளவே கிடையாது. இன்றைய காலத்தில் கைபேசியை அழைப்புகளை மேற்கொள்வதற்கும், குறுஞ்செய்திகளை அனு…
-
- 2 replies
- 580 views
-
-
பம்ஜா பிலானி பிபிசி படத்தின் காப்புரிமை Getty Images …
-
- 0 replies
- 789 views
-
-
இரு பரிமாண பொருட்கள் மூலம் திரவ தர்க்க அமைப்பு | Liquid logic using 2D materials Date: ஓகஸ்ட் 12, 2018 இதுநாள் வரை நாம் தர்க்க செயல்பாடுகளுக்காக பெரும்பாலும் குறைகடத்தி சாதனங்களையே நம்பி இருக்கிறோம்…. இந்த நிலையை மாற்றும்படியான ஒரு கண்டுபிடிப்புதான் நாம் இன்று காணப்போவது… என்ன…! Diode, Transistor, IC போன்ற குறைகடத்தி சாதனங்களுக்கு மாற்றா…?! ஆம். எனில், இதில் வேறென்ன பொருள் பயன்படுத்தப்படுகிறது…? என்றால், அதற்கான விடை… இரு பரிமாண கிராபீன் மெல்லிய தளம் (2D Graphene sheet)மற்றும் ஒரு உப்புக் கரைசல்… அவ்வளவுதான். வடிவமைப்பு : structure of graphene …
-
- 0 replies
- 677 views
-
-
செவ்வாயில் வீசும் காற்றின் ஓசையை பதிவு செய்த பிரிட்டன் சாதனம் Getty Images செவ்வாய் கிரகத்தில் வீசும் காற்றின் ஓசையைக் கேட்டது நாசாவின் ஆய்வுக் கலத்தில் ஓர் அங்கமாக உள்ள பிரிட்டன் சாதனம். செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்கு நாசா அனுப்பிய 'இன்சைட் லேண்டர்' ஆய்வுக் கலத்தில் இணைத்து அனுப்பப்பட்ட பிரிட்டிஷ் பூகம்ப ஆய்வுக் கருவியான சீஸ்மோமீட்டர், ஆய்வு வாகனத்தின் சோலார் பேனல்களை கடந்து சென்ற செவ்வாய் கோளின் காற்றின் ஓசையைப் பதிவு செய்துள்ளது. ஆய்வுக் கலத்தின் பக்கவாட்டுகளில் அமைந்துள்ள சோலார் பேனல்கள் சிறப்பான ஒலி வாங்கிகள் என்கிறார் பேராசிரியர் டாம் பைக். இவர் லண்டன் இம்பீரியல் கல்லூரியில் இருந்து இந்த பூகம்ப ஆய்வுக் கருவி சோதனையை வழிநடத்துகிறார். "இன்சைட் ஆய்வ…
-
- 1 reply
- 1.1k views
-
-
விண்வௌியின் எல்லையை தொட்டுத் திரும்பிய விமானம்! அமெரிக்காவின் வெர்ஜின் கேலக்டிக் நிறுவனத்துக்கு சொந்தமான விண்வெளிக்கு செல்லக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்ட சிறப்பு விமானம் விண்வெளிக்கு மிகவும் அருகில் சென்று திரும்பியுள்ளது. ஸ்பேஸ்-ஷிப்-டூ என்று அழைக்கப்படும் அந்த விமானம் பூமியிலிருந்து 82.7 கிலோமீட்டர் உயரத்துக்கு பறந்தது. இது அந்த விமானத்தின் நான்காவது பரிசோதனை பயணமாகும். மனிதர்களை விண்வெளிக்கு சுற்றுலா அழைத்துச் செல்லும் போட்டியில் எலோன் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் ஜெஃப் பெஸோஸின் ப்ளூ ஓரிஜின் நிறுவனங்களுடன் சர் ரிச்சர்டு பிரான்சனின் வெர்ஜின் கேலக்டிக் நிறுவனமும் ஈடுபட்டுள்ளது. நேற்றைய தினம் (வியாழக்கிழமை) தனது சோதனை ஓட்டத்தை மேற்கொண்ட குறித்த விமானம…
-
- 0 replies
- 493 views
-
-
வெளியில் போங்க.. வானத்தைப் பாருங்க.. விண்கல் பொழிவை ரசிங்க! நல்ல பொறுமை, ஆர்வம், கொஞ்சம் லைட்டா விண்வெளி ஞானம்.. இவ்வளவு போதும்.. நீங்க இப்ப விண்கல் பொழிவை ரசிக்க ரெடி பாஸ். இன்று இரவு முதல் 14ம் தேதி அதிகாலை வரை விண்கல் பொழிவைப் பார்த்து ரசிக்கலாம். ஜெமினிட் விண்கல் பொழிவுதான் இன்று இரவு நமது தலைக்கு மேல் அரங்கேறுகிறது.வானம் எனக்கொரு போதி மரம்.. நாளும் எனக்கது சேதி தரும் என வைரமுத்து சும்மா பாடி வைக்கவில்லை. வானத்தில் அத்தனை அத்தனை மேட்டர் இருக்கு. இன்று நடக்கும் இந்த விண்கல் பொழிவும் கூட நாம் தவற விடக் கூடாத ஒரு கண்கவர் காட்சிதான். இந்த ஆண்டின் முதல் மற்றும் கடைசி விண்கல் பொழிவு இது. குளிராக இருந்தாலும் அதைப் பொருட்படுத்தாமல் இதைப் பார்த்து ரசிங்க. இதைப…
-
- 0 replies
- 949 views
-
-
அதிசயத்தை ஆராயும் அறிவியல்: காந்தமுள்ளால் வழிநடத்தப்படும் ஆமை த.வி.வெங்கடேஸ்வரன் Published : 11 Dec 2018 11:11 IST Updated : 11 Dec 2018 11:14 IST “நான் போகிறேன் தாய்மடியைத் தேடி” என்று ஆயிரம் கிலோமீட்டருக்கு அப்பால் இருக்கும் சென்னைக் கடற்கரைக்கு ஒவ்வொரு டிசம்பர் மாதமும் முட்டையிடத் திரும்புகின்றன ஆலிவ் ரிட்லி எனப்படும் பங்குனி ஆமைகள். பொதுவாகவே, பங்குனி மாதத்தில் தமிழகக் கடற்கரையை இவை அடைந்து முட்டையிட்டுக் குஞ்சு பொரிப்பதால் இவற்றைப் பங்குனி ஆமைகள் என்கின்றனர். …
-
- 0 replies
- 685 views
-
-
இதுவரை பூமியில் இருந்து காண முடியாத நிலவின் மறுபக்கத்திற்கு எந்த நாடும் செயற்கைக்கோள்களை அனுப்பியதில்லை. முதல்முயற்சியாக பூமியை நோக்கி காணப்படாத நிலவின் மற்றொரு பகுதியாக கருதப்படும் வோன் கர்மான் என்னும் பகுதியில் சாங் இ-4 என்னும் இந்த செயற்கைக்கோளை அனுப்ப சீனா திட்டமிட்டுள்ளது. இந்த முயற்சியின் மூலம் நிலவிலுள்ள பாறைகள், மண் ஆகியவற்றை பூமிக்கு கொண்டு வந்து மேலதிக ஆராய்ச்சிகளை செய்வதற்கு சீனா திட்டமிட்டுள்ளது. 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தின் தொடக்க பகுதி வரை இந்த செயற்கைக்கோள் நிலவில் தரையிறங்காது. ஆனால், குறிப்பிட்ட காலம் முடிவு செய்யப்பட்ட பிறகு செயற்கைக்கோள் நிலவின் வேறொரு மூலையிலுள்ள கரடுமுரடான பகுதியில் தரையிறங்கும் என்றும் அறிவிக்கப்பட்டு…
-
- 0 replies
- 529 views
-
-
விண்கலத்தில் ஓட்டை.. ஆகாயத்தில் 6 மணி நேரம் மிதந்தபடி பஞ்சர் போடும் நாசா வீரர்கள்.. திக் நிமிடம்! சோயுஸ் விண்கலத்தில் ஏற்பட்ட துளையை அடைப்பதற்காக நாசா மற்றும் ரஷ்யா விஞ்ஞானிகள் நாளை விண்வெளியில் 6 மணி நேரம் நடக்க இருக்கிறார்கள். நாசாவின் சோயுஸ் விண்கலம் ஒன்று தற்போது சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்துடன் ஆகாயத்தில் இணைக்கப்பட்டு இருக்கிறது. இதில் ஏற்பட்டு இருக்கும் சிறிய துளை காரணமாக இதை கடந்த 4 மாதங்களாக பயன்படுத்தாமல் வைத்து இருக்கிறார்கள். சோயுஸ் எம்எஸ்-09 என்று இந்த விண்கலத்தை சரி செய்ய ரஷ்ய விஞ்ஞானிகள் களமிறங்கி உள்ளனர். இந்த விண்கலனின் துளை இருப்பது கடந்த ஆகஸ்ட் மாதம் கண்டுபிடிக்கப்பட்டது. சிறிய பென்சில் அளவில் இதில் துளை உள்ளது. சர்வதேச விண்வெள…
-
- 0 replies
- 416 views
-
-
செவ்வாய் கிரகத்தில் கேட்ட மர்ம ஒலி : விஞ்ஞானிகள் அதிர்ச்சி ! செவ்வாய் கிரகத்தில் கேட்ட மர்ம ஒலி விஞ்ஞானிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, செவ்வாய் கிரக ஆராய்ச்சியில் அதிக ஆர்வம் செலுத்தி வருகிறது. அதன் ஓர் அங்கமாக, ‘இன்சைட்’ என்ற விண்கலத்தை செவ்வாய் கிரகம் நோக்கி அனுப்பியுள்ளது. அந்த விண்கலம் மே 5-ந்தேதி விண்ணில் ஏவப்பட்டது. சுமார் 485 மில்லியன் கி.மீ. தூரத்தைக் கடந்து செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப்பாதைக்குள் பயணித்து உள்ளது. இந்த விண்கலம் நவம்பர் 26ஆம் தேதி செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது. செவ்வாய் கிரகத்தில் உண்டாகும் அதிர்வுகள், வெப்பப் பரிமாற்றங்கள் மற்றும் நிலப்பரப்பின் அமைப்பு போன்…
-
- 0 replies
- 341 views
-
-
செவ்வாயை மனிதர் வாழ தகுந்த இடமாக்குவதற்கு நுண்ணுயிரிகள் துணை புரியும் மாத்யு டேவிஸ் மூன்று பில்லியன் வருடங்களுக்கு முன்னால், நாம் வாழும் பூமியும் மனிதர்கள் வாழ உகந்ததாக இல்லை. இது கொதித்தெழும் எரிமலைகள் உமிழ்ந்த கார்பன் டை ஆக்ஸைடாலும், நீராவியாலும், சூழ்ந்திருந்தது. ஒரு செல் உயிரிகள் கந்தகத்தை வைத்துவாழ்க்கையை ஓட்டிகொண்டிருந்தன. பெரும்பாலான காற்றுமண்டலம், கார்பன் டை ஆக்ஸைடாலும், மீத்தேனாலும் சூழ்ந்து (நம் போன்ற விலங்குகளுக்கு) விஷமாக இருந்தது இரண்டரை பில்லியன் வருடங்களுக்கு முன்னால், ஏதோ ஒன்று நிகழ்ந்தது. மாபெரும் ஆக்ஸிஜனேற்றம் என்று சொல்லப்படும் நிகழ்வு நடந்தது. ஏராளமான ஆக்ஸிஜன் வந்ததும், யூகரியோட்கள் என்னும் உயிரிகள் ஆக்ஸிஜன் உண்டு கார்பன் டை ஆக்ஸைடை உமிழ…
-
- 0 replies
- 734 views
-
-
உளுந்து வடையைப் போன்றதுதான் பூமியின் வடிவம் நம்புங்க மக்களே.! பூமியின் வடிவம் குறித்துப் பல மாறுபட்ட கருத்துக்கள் நிலவினாலும் பூமி கோளம் அல்லது உருண்டை வடிவானது எனப் பொதுவாக ஏற்றுக் கொள்கிறோம். உலகம் உருண்டை வடிவமானது என்று கூறினாலும் அதனை ஒப்பிட்டு விளக்குவதற்குச் சரியான வடிவம் கிடைக்கவில்லை உளுந்து வடையா ? பூமி தட்டையானது அல்லது வட்டத் தட்டு போன்றது என்னும் கொள்கை கொண்டோர் உண்டு.தற்போது ஒருவர் உலகம் டோனட் (doughnut) வடிவமுடையதா? எனச் சந்தேகத்தைக் கிளப்பியுள்ளார். தட்டைவடிவ பூமிக் கோட்பாட்டுச் சங்கத்தைச் (Flat Earth Society) சேர்ந்த உறுப்பினரான வராக் (Varuag) என்பவர் பூமி டோனட் வடிவமுடையதாக இருக்கலாம் எனக் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். தட்டை…
-
- 0 replies
- 1.2k views
-
-
26 ஆண்டுகளுக்கு பின் 'விழித்துள்ள' பிளாக் ஹோல்..! மாபெரும் அண்டவெளி புதிர்களில் ஒன்று தான் பிளாக் ஹோல் எனப்படும் கருங்குழிகள். உள் சென்ற ஒளி கூட வெளியேற முடியாத ஒற்றை வழிப்பாதையான பிளாக் ஹோல்களின் வலுவான ஈர்ப்புச் சக்தியானது கற்பனைக்கு அடங்காததாகும். கண்களுக்கு புலப்படாத பிளாக் ஹோல்களின் இருப்பை தாக்கங்கள் மூலமாகவே உணர்ந்து கொள்ள முடியும் அதனால் தான் இவைகளை கருங்குகுழி என்று அழைகின்றனர். அந்த அளவு ஆபத்தான பிளாக் ஹோல்களில் ஒன்று 26 ஆண்டுகள் கழித்து சமீபத்தில் விழித்து கொண்டுள்ளதை விண்வெளி வீரர்கள் கண்டறிந்துள்ளனர். பிளாஸ்மா வெடிப்பு : சுமார் 26 ஆண்டுகளுக்கு பின் இயங்க ஆரம்பித்துள்ள பிளாக் ஹோல் ஒன்று விண்வெளியில் மாபெரும் பிளாஸ்மா வெடிப்பு ஒன்ற…
-
- 0 replies
- 1.2k views
-