அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3265 topics in this forum
-
வாஷிங்டன்: இதுவரை நாம் பார்க்க முடியாத நிலவின் கருமையான மறுபக்கத்தை, அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான - நாசா வெளியிட்டுள்ளது. பூமியின் மேற்பரப்பில் உள்ள, 'ஓசோன்' படலம், வளிமண்டலத்தில் காணப்படும் துாசு, தாவர உயிரிகள், மேகக் கூட்டங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்வதற்காக, 'டி.எஸ்.சி.ஒ.வி.ஆர்' என்ற செயற்கைக் கோளை, நாசா, விண்ணிற்கு அனுப்பியுள்ளது. பூமியில் இருந்து, 10 லட்சம் மைல்களுக்கு அப்பால் உள்ள இந்த செயற்கை கோளில், 'எபிக்' என்ற கேமராவும், தொலைநோக்கியும் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கேமரா, பூமிக்கும், செயற்கைக் கோளுக்கும் நடுவே உள்ள நிலவின் மறுபுறத்தை, படம் எடுத்து அனுப்பியுள்ளது. அந்த படத்தில், பூமிக்கும், செயற்கைக் கோளுக்கும் நடுவே உள்ள, நிலவின் பின்பக்கம், சூரிய ஒளியில் ஒளிர்கி…
-
- 0 replies
- 535 views
-
-
யாழ் களத்தில் உள்ள கல்வி கற்றுக்கொண்டு இருக்கிற உறுப்பினர்களின் நன்மை கருதி இந்த திரியை ஆரம்பிக்கின்றேன். விளக்கம் அல்லது பதில் தேவைப்படும் கேள்விகளை இங்கே பதிந்தால், யாழ் கள உறவுகள் பதில் அளிப்பதின் மூலம் பலரும் பயனடைய முடியும். நீங்கள் பதில் எழுதும்போது கேள்வியை "Quote" பண்ணி எழுதினால் பதிலை அடையாளம் காண இலகுவாகக இருக்கும். அத்துடன் உங்களது பதிலுடன் மேலதிக வாசிப்புக்கான இணைப்புகளையும் வழங்கினால் மிகவும் நன்றாக இருக்கும் (ஆனால் கட்டாயம் இல்லை). குறிப்பு: தயவு செய்து தேவையற்ற விடயங்களை இந்த திரியில் பதிவு செய்வதை தவிற்கவும் முதலாவதாக ஒரு கேள்வியை போட்டு இந்த திரியை தொடங்கிவைக்கிறன். கேள்வி - What are the advantages and disadvantages of Henry Fayol’s principles of …
-
- 0 replies
- 1.1k views
-
-
இரண்டாவது பூமி (பெர்த் 2.0) என்று வானவியலாளர்கள் அழைக்கும் கிரகத்தை நோக்கிய தேடல் வெகு காலமாக நடக்கிறது. அதில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. நாஸாவின் கெப்ளர் கிரக-வேட்டை விண்கலத்தைச் சேர்ந்த வானவியலாளர்கள், இதுவரை கண்டறியப்பட்டிருப்பவற்றிலேயே பூமியுடன் அதிக ஒற்றுமை கொண்டிருக்கும் கிரகம் ஒன்றை தாங்கள் கண்டறிந்திருப்பதாகக் கடந்த வாரம் அறிவித்தார்கள். அதுக்கும் இதுக்கும் இடையே பூமியின் விட்டத்தை விட ஒன்றரை மடங்குக்குச் சற்று அதிகமான விட்டம் கொண்டது அந்தக் கிரகம். அதன் பெயர் கெப்ளர் 452பி. அந்தக் கிரகம் நமது சூரியனைப் போன்ற ஒரு விண்மீனைச் சுற்றுகிறது. சுற்றுப்பாதையை ஒரு தடவை நிறைவு செய்ய 385 நாட்கள் ஆகின்றன. இதனால் மிதமான வெப்பநிலையும், மேற்பரப்பொன்று இருக்குமென்றா…
-
- 0 replies
- 362 views
-
-
கோழி முந்தியா? முட்டை முந்தியா? அறிவியல் சொன்ன பதில் கோழி முந்தியா? முட்டைமுந்தியா? இது, நீண்ட நெடுங்காலமாய் எழுப்பப்படும் கேள்வி. முட்டை முந்தியென்றால், கோழியில்லாமல் முட்டை எப்படி வந்தது? என்று மேலோட்டமாக ஆராய்ந்தால் இப்பிரச்சினை தீராது சற்று ஆழ்ந்து சிந்தித்தால் இப்பிரச்சினைக்கு விடை காண இயலும். இப்பிரச்சினைக்கு இரு வகைகளில் விடையளிக்க முடியும். (1) தர்க்க ரீதியாக விளக்கம் (2) அறிவியல் ரீதியான விளக்கம். 1. தர்க்க ரீதியான விளக்கம்: முட்டையென்று சொன்னால் அதை உருவாக்க ஒரு ஆண் கோழியும் ஒரு பெண் கோழியும் வேண்டும். ஆக, முட்டை தோன்ற வேண்டுமானால் இரண்டு கோழிகள் முதலில் வேண்டும். அதாவது கோழிகள் கலந்த பின்னே முட்டை தோன்றும். எனவே, இரண்டு கோழிகளின் சேர்க்கையால் தோன…
-
- 0 replies
- 692 views
-
-
உலகின் முதல் அதிசயமா..? தனக்குத் தானே ஆபரேஷன் செய்த டாக்டர். பனிப் பிரதேசமான அண்டார்டிகா கண்டத்தில் உள்ள ரஷ்ய ஆய்வு கூடத்தில் 50 ஆண்டுகளுக்கு முன்னர் டாக்டராக பணியாற்றியவர், லியோனிட் ரோகோசோவ். 29-4-1961 அன்று காலை இவருக்கு திடீரென சோர்வு, வாந்தி, காய்ச்சல், என ஒன்றுபட்ட பல உடல் உபாதைகள் ஏற்பட்டன. சிறிது நேரத்திற்கு பிறகு கடுமையான வயிற்று வலியும் சேர்ந்துக்கொள்ள மனிதர் துடிதுடித்துப் போனார். தனக்கு தெரிந்த கை வைத்தியம் எல்லாம் செய்து பார்த்தும் வயிற்று வலி மட்டும் குறைந்தபாடில்லை. ரஷ்யாவின் தலைமை ஆய்வு நிலையத்திற்கு செல்ல வேண்டுமானால் அங்கிருந்து ஆயிரத்து 600 கிலோ மீட்டர் விமானத்தில் பயணம் செய்ய வேண்டும். ஆனால், கடுமையான பனிப்பொழிவுடன் கூடிய பருவநிலையோ.. விமான பய…
-
- 0 replies
- 1k views
-
-
நாடளாவிய ரீதியில் இணையத்தள வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கும் பொருட்டு, இலங்கை அரசாங்கத்துடன் இணைய ஜாம்பவான கூகுள், ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டுள்ளது. எதிர்வரும் 5 மாதங்களுக்குள் இந்த ஒப்பந்தம் செயற்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் இந்த ஒப்பந்தத்தின் பிரகாரம், அதி உயரத்தில் அமைக்கக்கூடிய 13 பலூன்களை கூகுள், இலங்கைக்கு வழங்கவுள்ளது. அதன்பின்னர், உலகிலகளாவிய ரீதியில் wifi இணைப்பைக் கொண்ட முதலாவது நாடாக இலங்கை மாறும் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, அவரது உத்தியோபூர்வ டுவிட்டர் வலைத்தளத்தில் குறிப்பிட்டிருந்தமை கவனிக்கதக்கது. http://www.jvpnews.com/srilanka/118392.html
-
- 0 replies
- 1.4k views
-
-
பத்து ஆண்டுகளில் ஐநூறு கோடி கிலோமீட்டர்கள் பயணித்த நாஸா விண்கலம் புளூட்டோ குட்டிக் கிரகத்தை கிட்டத்தில் வைத்து படம்பிடித்துள்ளது. அந்தப் படங்கள் விரைவில் பூமியை வந்தடையும். http://www.bbc.com/tamil/science/2015/07/150714_plutovideo
-
- 7 replies
- 2.1k views
-
-
பரபரப்பான நெடுஞ்சாலையில் நீங்கள் காரில் சென்று கொண்டிருக்கிறீர்கள். அப்போது, திடீரென உங்கள் காரின் ரேடியோ சத்தமாக அலற ஆரம்பிக்கிறது. சரி, ஏதோ தொழில்நுட்பக் கோளாறு என்று நினைத்து சத்தத்தை குறைக்கிறீர்கள். உடனே, காரின் வைபர் காரணமே இல்லாமல் வேலை செய்ய தொடங்குகிறது. அதையும் போராடி நிறுத்துகிறீர்கள். ஐயோ.... ஏன்? இப்படி எல்லாம் நடக்கிறது என்று நீங்கள் உச்சகட்ட பதட்டத்தில் இருக்கும்போது, என்ஜின் செயலிழந்து கார், நடுரோட்டில் நின்றால் எப்படியிருக்கும்?இதெல்லாம் சாத்தியமா? என்று வியக்க வேண்டாம். சைபர்-செக்யூரிட்டி ஜாம்பவான்களான சார்லி மில்லரும், கிறிஸ் வலாசெக்கும் இது சாத்தியம்தான் என்று சொல்வது மட்டுமில்லாமல் அதை செய்தும் காட்டுகிறார்கள். இதற்காக அவர்கள் தேர்ந்தெடுத்தது ஃபியட் ந…
-
- 7 replies
- 847 views
-
-
அண்டவெளியில் அறிவுள்ள ஜீவராசிகள் உள்ளனவா என்பதை கண்டறிவதற்காக அடுத்த பத்தாண்டுகளில் 100 மில்லியன் டாலர்களை செலவழிக்கவுள்ளதாக பெருங்கோடீஸ்வரர் ஒருவர் அறிவித்துள்ளார். வேற்று கிரகப்பகுதியில் அறிவுள்ள ஜீவன்கள் உள்ளதா என கண்டுபிடிக்க முயற்சி முழு பால்வெளிக்கு அப்பாலிலுள்ள இதர பால்வெளி மண்டலங்களிலும் அறிவுள்ள ஜீவராசிகளைத் தேடும் முயற்சித் திட்டம் ரஷ்யக் பெருங்கோடீஸ்வரரான யூரி மில்நெரால் முன்னெடுக்கப்படவுள்ளது. வானொலி மற்றும் ஒளியியல் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி இந்தக் கண்டுபிடிப்புக்கான முயற்சிகள் திட்டமிடப்பட்டுள்ளன. இதற்கான அறிமுக நிகழ்வு லண்டலிலுள்ள ராயல் சொசைட்டியில் நடைபெற்றது. அந்த நிகழ்வில் பங்குபெற்று உரையாற்றிய பேராசிரியர் ஸ்டீபன் ஹாக்கிங், அண்டவெளியிலுள்ள வேற்ற…
-
- 0 replies
- 1.4k views
-
-
விபத்தில் சிக்கியது கூகுளின் தானியங்கி கார்... முதல்முறையாக 3 பேருக்கு காயம்! நியூ யார்க்: ஆளில்லாமல் ஓடும் கூகுளின் தானியங்கி கார் அமெரிக்காவில் விபத்தில் சிக்கியதில் மூன்று பேர் காயமடைந்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. கார் ஆட்டோ மொபைல்தான் என்றாலும், அதனை இயக்க ஓட்டுநர் தேவை. ஆனால், கூகுள் நிறுவனம் தயாரித்துள்ள புதிய காரை இயக்க ஓட்டுநர் தேவையில்லை. மின் சக்தியில் இயங்கும் இந்தக் கார் கூகுள் மேப் வழிகாட்டுதலின் படி பயணம் செய்கிறது. செல்லும் வழியில் எதன் மீதும் மோதி விபத்து ஏற்படாமல் தடுக்க நவீன ரேடாரும், லேசர் சென்சாரும் இந்த காரில் உள்ளன. மணிக்கு சுமார் 40 கிலோமீட்டர் வேகத்தில் மட்டுமே செல்ல முடியும். சோதனை அடிப்படையில் 25 கார்கள் மட்டுமே தற்போது தயாரிக்கப்பட்டுள்ளன…
-
- 0 replies
- 421 views
-
-
பருவநிலை மாற்றம் இன்னும் எத்தனை ஆண்டுகள்? மனிதன் வாழ முடியாத நிலையை நோக்கி நகரும் பூமி! தளவாய் சுந்தரம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை தென்மேற்கு பருவ மழை காலம். ஆனால், ஜூலை மாதம் ஆகியும் சென்னையில் வெயில் தகிக்கிறது. கோடை காலம் நீண்டுள்ளதுடன் வெப்பத்தின் அளவும் அதிகரித்துள்ளது. ஆனால், தமிழகத்தின் தென் மாவட்டங்களிலோ வழக்கத்துக்கு முன்பே தென்மேற்கு பருவமழைத் தொடங்கிவிட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் எப்போதையும்விட இந்த வருடம் அதிக மழை. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகள் நிரம்பி வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 700 கி.மீ.க்குள் எவ்வளவு வித்தியாசம்? தமிழகம் மட்டுமல்ல உலகம் முழுக்க இதுதான் நிலை. பருவநிலை தாறுமாறாகச் சீர்குலைந்து க…
-
- 0 replies
- 1.1k views
-
-
இறக்கைகள் கொண்டிருந்த மிகப்பெரிய டைனொசர் ஒன்றின் எஞ்சியுள்ள படிமங்களை சீன விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இறக்கைகளுடன் கூடிய டைனோசர் எப்படி இருந்திருக்கக்கூடும் என யூகித்து உருவாக்கப்பட்ட சித்திரம். கிட்டத்தட்ட இரண்டு மீட்டர் நீளத்துடன் ,மிக வேகமாக ஓடக்கூடிய திறனை கொண்டிருந்த இந்த வகை டைனொஸர்கள் விலங்குகளை உண்டு வாழ்ந்தவை. வடகிழக்குச் சீனாவில் எரிமலை ஒன்று திடீரென வெடித்ததன் காரணமாக, இந்த உயிரினம் அப்படியே புதையூண்டிருந்தது. வெலாசிரப்டர் இனத்திற்கு முன்னோடியாக இந்த டைனோசர் இருந்திருக்கலாம். இந்த டைனோசருக்கு ஜென்யுவான்லாங் என்று விஞ்ஞானிகள் பெயர் சூட்டியுள்ளனர். ஜின்ஜௌவிலிருந்த அருங்காட்சியகத்திற்கு இந்தப் படிமத்தை அளித்த நபரின் நினைவாக இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்…
-
- 0 replies
- 470 views
-
-
மதுரை: மதுரை அருகே உள்ள கீழடியில் 2200 ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு பழங்கால நகரத்தின் பகுதிகளை அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். இந்த நகரம் சிவகங்கை மாவட்டத்திற்கு உட்பட்டதாகும். மேலும் படங்களுக்கு க்ளிக் செய்க... இது குறித்து தொல்லியல் துணை அகழ்வாராய்ச்சியாளர் வீரராகவன் கூறுகையில், “தென்தமிழகத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் வைகை நதி, மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரில் வெள்ளிமலை அருகிலிருந்து உற்பத்தியாகி தேனி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களின் வழியே பாய்கிறது. தொல்லியல் வளமிக்க பகுதியாக விளங்கினாலும் கூட இதுகாறும் வைகை நதி பள்ளத்தாக்கு பகுதியில் அகழாய்வு ஏதும் மேற்கொள்ளப்படவில்லை. 2013-14ல் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வில் சுமார் 293 பல்வகை தொல்லியல…
-
- 0 replies
- 419 views
-
-
ஒரு ரூபாயில் செல்போன் சார்ஜ்: அறிவியல் கண்காட்சியில் அசத்திய அரசுப் பள்ளி மாணவர் விஜயராஜ்.! பொள்ளாச்சியை அடுத்துள்ள பொங்காளியூர் பள்ளி 9-ம் வகுப்பு மாணவர் விஜயராஜ், ஒரு ரூபாய் நாணயம் செலுத்தி செல்போன் சார்ஜ் செய்யும் நவீன இயந்திரத்தை வடிவமைத்திருந்தார். ‘ஏற்கெனவே தான் தயாரித்த நீர் உந்து இயந்திரம் வேறொரு அறிவியல் கண்காட்சியில் ரொக்கப் பரிசு பெற்றதாகவும், அந்த பரிசுப் பணத்தைக் கொண்டு, செல்போன் சார்ஜ் செய்யும் இயந்திரத்தை வடிவமைத்ததாகவும், விரைவில் பெரிய அளவில் இந்த இயந்திரத்தை வடிவமைக்க உள்ளதாகவும் கூறி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். மாணவனின் திறமையை மனதார வாழ்த்துங்கள்.
-
- 2 replies
- 525 views
-
-
பதிவு செய்த நாள் 28 ஜன 2015 00:00 காரைக்குடி:குறைந்த செலவில் உப்பு தண்ணீரை நன்னீராக மாற்றும் நீர்மேலாண்மை குறித்த வடிவமைப்பை காரைக்குடி உமையாள் ராமனாதன் மகளிர் கல்லுாரி மாணவிகள் உருவாக்கியுள்ளனர். இந்த வடிவமைப்பு மாநில அளவில் முதலிடத்தை பெற்றுள்ளது. தற்போது அனைவருக்கும் பாகுபாடின்றி கிடைப்பது சூரிய ஒளி மட்டுமே. சூரிய ஒளி ஆற்றலை கொண்டு, நீரை ஆவியாதல் முறையில் நன்னீராக மாற்ற முடியும் என்பதை கண்டு பிடித்துள்ளனர், காரைக்குடி உமையாள் ராமனாதன் கல்லுாரி எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் பிரிவு மாணவி கள் கீர்த்திகா, கார்த்திகா, தேவிமுத்து. அவர்கள் கூறியதாவது:எங்களுடைய கண்டுபிடிப்புக்கு 'டிசாலினேஷன் ஆப் சாலிட் வாட்டர் டூ டிரிங்கிங் வாட்டர்' என பெயர். அதாவது உப்பு நீரை நன்…
-
- 0 replies
- 510 views
-
-
1250 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் குழாய் ரெயில் போக்குவரத்து சோதனை திட்டம் அமெரிக்காவில் ஆரம்பமாகி உள்ளது. புல்லட் ரெயில், மெட்ரோ ரெயில், மோனோ ரெயில் என்று சுரங்கப் பாதையிலும், ஆகாயத்திலுமாக உலக மக்கள் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். அதிகபட்சமாக ஜப்பானிலும், சீனாவிலும் சுமார் 500 கிலோமீட்டர் வேகத்தில் ஓடும் ரெயில்கள் இருக்கின்றன. எதிர்காலத்தில் ராட்சத குழாய்களுக்குள் இப்போதுள்ளதைவிட பல மடங்கு வேகத்தில் ரெயில்கள் பயணிக்கும். ஏற்கனவே பல்வேறு அதிவேக பயணத் தொழில்நுட்பங்கள் ஆராய்ச்சி நிலையில் உள்ளன. தற்போது ‘ஹைபர்லூப்’ எனும் நவீன போக்குவரத்து நுட்பம் சாத்தியம் என்று சோதனை முயற்சிகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன. இது உருக்கு குழாய்களுக்குள், கூண்டுகளைக் கொண்டு ‘லிப்ட்’ போல வ…
-
- 0 replies
- 1k views
-
-
மே 22, 1822-ம் ஆண்டு. ஜெர்மனி. குளிர்காலம் சென்று வசந்தம் பிறந்தது. மெக்லென்பேர்க் பிரதேசத்தில் இருக்கும் போத்மேர் எஸ்டேட் முதலாளி எப்போதும்போல பறவைகளைச் சுடும் விளையாட்டில் அன்றைய ஜமீன்தார்கள் போல ஈடுபட்டுவந்தார். அவரது தலைக்கு மேலே வசந்த காலத்தில் பறந்தது செங்கால் நாரை (White Stork). எடுத்தார் தனது துப்பாக்கியை, சரியாகக் குறிவைத்தார். டுமீல்... கீழே விழுந்தது நாரை. இரண்டாம் வேட்டை நாரையின் அருகே விரைந்தனர் அவரும் அவரது கூட்டாளிகளும். குண்டடி பட்டு இறக்கும் தறுவாயில் கிடந்த நாரையைப் பார்த்ததும் வியப்பில் ஆழ்ந்தார்கள், திகைப்பில் ஒரு கணம் விறைத்துப்போனார்கள். ஏற்கெனவே அந்த நாரை வேட்டையாடப்பட்டிருந்தது. அதன் கழுத்தில் 80 சென்டிமீட்டர் நீளமுள்ள இரும்பு முனையுடன் ஈட்டி பா…
-
- 0 replies
- 771 views
-
-
இன்னும் 15 ஆண்டுகளில் ‘சிறிய உறைபனி காலம் ’ - விஞ்ஞானிகள் கணிப்பு! 15 ஆண்டுகளில், அதாவது 2030-ம் ஆண்டுவாக்கில் உலகம் முழுவதும், குறிப்பாக வட துருவ நாடுகளில் பனியின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று சூரியனை ஆராய்ச்சி செய்யும் விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். ‘Little Ice Age’ என அழைக்கப்படும் இந்த சூழலில் உலகின் பல ஏரிகளும், ஆறுகளும் ஐஸ்கட்டியாக உறைந்துவிடும் என சொல்கிறார்கள். சூரியனின் சுழற்சி, இயக்கம் போன்றவற்றை ஆராய்ந்து இந்த முடிவுக்கு வந்திருக்கிறார்கள் விஞ்ஞானிகள். 'Mini ice age' coming in next fifteen years, new model of the Sun's cycle shows There will be another Little Ice Age in 2030, according to solar scientists – the last one was 300 years ago …
-
- 2 replies
- 519 views
-
-
-
- 2 replies
- 1.1k views
-
-
சிலர் மட்டும் என்றும் இளமையாக இருப்பது ஏன்? ஒரே ஆண்டில் பிறந்திருந்தாலும் ஒவ்வொருவரின் உடலும் ஒவ்வொரு வேகத்தில் முதுமையடைகிறதுஒரே ஆண்டில் பிறந்தாலும், வயதாவதன் வேகம் நபருக்கு நபர் மாறுபடும் என்று Proceedings of the National Academy of Sciences, என்கிற மருத்துவ ஆய்வு சஞ்சிகையில் வெளியான ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக, ஒவ்வொருவரின் எடை, சிறுநீரக செயற்பாடு, ஈறுகளின் ஆரோக்கியம் ஆகியவை கண்காணிக்கப்பட்டு முடிவுகள் எட்டப்பட்டன. 38 வயதேயான சிலர், உயிரியல் ரீதியாக கிட்டத்தட்ட 60 வயதினரைப் போல முதுமையடைந்திருந்தனர். வயது முதிர்வதன் வேகம் எப்படி அதிகரிக்கிறது என்பதைக் கண்டறிவதுதான் தமது அடுத்த கட்ட நடவடிக்கை என இந்த ஆய்வுக் குழுவினர் தெரிவித்துள்ளனர். நியூஸிலாந…
-
- 3 replies
- 1.8k views
-
-
சென்ற வாரம் நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாளில் ஒரு கட்டுரை வந்திருந்தது. வேலை செய்யும் இடங்களில் நிலவும் பகை, எரிச்சல், கடுமை, மரியாதையின்மை, மன அழுத்தம் என்று பலவித எதிர்மறை மனோபாவங்கள் பற்றியும் அவை நம் உடல் நிலையை எப்படி பாதிக்கின்றன என்பது பற்றியும் அந்தக் கட்டுரை விரிவாக எழுதப்பட்டிருந்தது. கட்டுரை எழுதியவரின் அப்பா ஒரு ஆஸ்பத்திரியில் மூக்கிலும் வாயிலும் டியூப்கள் பொருத்தப்பட்டு படுக்கையில் இருந்ததைப் பார்த்து மனம் நொந்து அவர் எழுதுகிறார். “எப்படி கம்பீரமாக, சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்த என் அப்பா இந்த நிலைக்கு தள்ளப்பட்டார்? நிச்சயமாக அலுவலகத்தில் அவருக்கு ஏற்பட்ட மன அழுத்தம்தான் காரணம் என்று எனக்குப் புரிகிறது. இப்போதெல்லாம் வேலை செய்யும் இடங்களில் நிலவும் போட்ட…
-
- 0 replies
- 731 views
-
-
எந்த வயது விந்தணுக்கள் குழந்தை பெற ஏற்றவை? 18 வயதில் விந்தணுக்கள் ஆரோக்கியமானவையாக இருப்பதால் அவற்றைச் சேமிக்க பரிந்துரைஆண்களின் இளம்பருவ விந்தணுக்களில் மரபுவழி நோய்க்கூறுகள் பெருமளவு இருக்காது என்பதால் ஆண்களின் இளவயது விந்தணுக்களை சேமித்து உறைநிலையில் பாதுகாத்து, அதைப் பயன்படுத்தி பிற்காலத்தில் ஆரோக்கியமான பிள்ளைகள் பெறலாம் என்கிற யோசனை ஒன்று பிரிட்டனில் முன்வைக்கப்பட்டிருக்கிறது. பிரிட்டனில் இருக்கும் 18 வயது ஆண்கள் அனைவரின் விந்தணுக்களும் உறைநிலையில் பாதுகாக்கப்பட்டு, அந்த விந்தணுக்கணைப்பயன்படுத்தி அவர்கள் பிற்காலத்தில் குழந்தைகளை பெற்றுக்கொள்ளலாம் என்று டண்டீயில் அபெர்டி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மருத்துவர் கெவின் ஸ்மித் பரிந்துரை செய்திருக்கிறார். வயதான ஆண்களின்…
-
- 2 replies
- 755 views
-
-
உலக அளவில் நிலத்தடிநீர் வேகமாக வற்றிவருகிறது. வெவ்வேறு நாடுகளில் பரந்து விரிந்துள்ள பகுதிகளில் மிகப் பெரியவை என்று 37 நிலத்தடிநீர் இருப்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. மிகப் பெரிய கடல் என்று கற்பனை செய்யக்கூடிய அளவுக்கு நீர்வளம் பெற்றிருந்த இவற்றில் சரிபாதிக்கும் மேல் வேகமாக உறிஞ்சப்பட்டதால், மிக மோசமான அளவில் குறைந்துவிட்டன. மழை நீர் சேகரிப்பு போன்ற திட்டங்களை இனி 100% கடைப்பிடித்தால்கூட இந்த நிலத்தடிநீர்த்தேக்கங்கள் இனி நிரம்புவது சந்தேகம்தான் என்கிறார்கள் ஆய்வாளர்கள். அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, கிரேஸ் என்ற செயற்கைக்கோள் கட்டமைப்பைப் பயன்படுத்தி, புவியைப் புகைப்படங்கள் எடுத்ததுடன் பல்வேறு நீர்ப்பயன்பாட்டுத் தரவுகளையும் பெற்று ஆராய்ந்து இந்தத் தகவல்களை வெளியி…
-
- 0 replies
- 537 views
-
-
சென்னை: இந்தியாவில் சில நாட்களாக மேற்கு வானில், சூரியன் மறைந்ததும் இரண்டு நட்சத்திரங்கள் அருகருகே மின்னிக் கொண்டிருப்பதை காணலாம்.. உண்மையில் அவை நட்சத்திரங்கள் அல்ல. நம் சூரிய குடும்பத்தில் உள்ள வியாழன் மற்றும் வெள்ளி கிரகங்கள் தான் அவை. இவை பத்து அல்லது 15 வருடங்களுக்கு ஒரு முறை நேர் கோட்டில் வரும்போது அருகருகே இருப்பது போல் தோன்றுகின்றன. பார்ப்பதற்கு அருகருகே இருப்பது போல் தோன்றினாலும், இவை இரண்டுக்கும் இடையே உள்ள தூரம் மிக அதிகம். சூரியனில் இருந்து வியாழன்( Jupiter) 80 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. வெள்ளி ( Venus) கிரகம் 11 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. தற்போது, பூமி, வெள்ளி, வியாழன் (Jupiter and Venus ) இவை மூன்றும் கிட்டதட்ட நேர்கோட்டில் அமைவதால், வியாழனும…
-
- 0 replies
- 432 views
-
-
ஒரே ஒரு உயிரினத்தால்தான், புவியில் வாழும் மற்றெல்லா உயிரினங்களும் அழிவை எதிர்நோக்கியிருக்கின்றன: மனித இனம்! 6.5 கோடி ஆண்டுகளுக்குப் பிறகு மனிதர்களால் ஆறாவது பெரும் பேரழிவு விரைவில் நடக்க இருப்பதாக அறிவியலாளர்கள் எச்சரிக்கிறார்கள். புவியில் உயிர் வாழ்க்கைக்குப் பெரும் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. புவியின் உயிரியல் பொக்கிஷங்கள் எவ்வளவு சீக்கிரம் துடைத்தெறியப்படும், ஆறாவது உயிர்ப் பேரழிவு (Sixth mass extinction) எப்போது ஏற்படும் என்பதையெல்லாம் மெக்ஸிகோவின் ‘தேசிய தன்னாட்சிப் பல்கலைக்கழக’த்தைச் சேர்ந்த ஜெரார்தோ கபாயோஸும் அவரது சகாக்களும் சமீபத்தில் வெளியிட்டிருக்கும் ஆய்வுக்கட்டுரையில் கணக்கிட்டிருக்கிறார்கள். உலகில் கோடிக்கணக்கான உயிரினங்கள் இருக்கின்றன. எளிதில் பார்க்க முடி…
-
- 0 replies
- 401 views
-