அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3258 topics in this forum
-
'டிஜிட்டல் போட்டோகிரபி' (Digital Photography) நவீனத்தின் உச்சம் தொட்டுக்கொண்டிருக்கிறது. நாளொரு தொழில்நுட்பம், பொழுதொரு புதிய கருவி என வேகமெடுத்துப் பறக்கும் இந்தத் தொழிலில் கலைக்கான நிதானமும், வெள்ளந்தியான அழகியலும் கொஞ்சம் குரல் ஒடுங்கித்தான் போகின்றன. இந்த நிலையில், நின்று நிதானித்து, டிஜிட்டல் கேமிராவில் எடுக்கும் புகைப்படங்களை, ஒரு மிகப்பழைய எளிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கருவிகள் ஏதுமில்லாமல், வெறும் கையால் அஞ்சலட்டை உள்ளிட்டவற்றில் பிரிண்ட் போடும் முறையை பரவலாக்கி வருகிறார் வினோத் பாலுச்சாமி என்ற புகைப்படக் கலைஞர். சைனோடைப் பிரிண்டிங் எனப்படும் இந்த முறை மிகப் பழைய முறை என்று கூறும் வினோத் இதற்கு எந்தக் கருவியும் தேவையில்லை. ஓரிரண்டு இரசாயனங்கள் இருந…
-
- 0 replies
- 743 views
-
-
பட மூலாதாரம்,ESA படக்குறிப்பு,வழக்கத்துக்கு மாறாகச் செயல்படும் ஒரு விசை, விண்மீன் திரள்களை ஒன்றிடம் இருந்து ஒன்றைத் தள்ளிவிடுகின்றது. கட்டுரை தகவல் எழுதியவர், பல்லவ் கோஷ் பதவி, அறிவியல் செய்தியாளர் 9 மணி நேரங்களுக்கு முன்னர் இருண்ட ஆற்றல் (Dark Energy). இது மிகவும் மர்மமான ஆற்றல். இதுதான் இந்தப் பிரபஞ்சம் விரிவடையக் காரணமாக இருக்கிறது. விஞ்ஞானிகள் இதை டார்க் எனர்ஜி என்று அழைக்கின்றனர். நாம் இவ்வளவு ஆண்டுகளாக நேரம், விண்வெளி ஆகியவற்றின் மீது கொண்டிருந்த புரிதலின் கோணத்தையே இந்த ஆற்றல் மாற்ற வாய்ப்பு இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். வானியலாளர்கள் வானியலில் தாங்கள் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தக் கூடிய கண்டுபிடிப்பை நெருங்கிக்கொண்டிருப்பதாக நினைக்கின்றனர். ஆனால், இ…
-
- 0 replies
- 453 views
- 1 follower
-
-
பூமியின் மிக ஆழமான கடலுக்குள் ஆராய்ச்சி செய்யச் சென்றது சீனாவின் பென்டூஸ் கப்பல்! பூமியின் மிக ஆழமான கடலடிப் படுகையை ஆராய்ச்சி செய்வதற்கு நீர்மூழ்கிக் கப்பலொன்றை சீனா அனுப்பியுள்ளது. இந்த ஆராய்ச்சி, பசிபிக் பெருங்கடலில், நீரின் மேல்மட்டத்தில் இருந்து பத்தாயிரம் மீற்றர் ஆழங்கொண்ட மரியானா ட்ரெஞ்ச் (Mariana Trench) என்னும் பகுதியில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த கடல் பகுதியில் உயிர்ச் சூழல் பற்றிய மாதிரிகளை எடுத்து ஆய்வு செய்ய சீனா திட்டமிட்டுள்ளது. இதற்காக, பென்டூஸ் (Fendouzhe Submersible) எனப்படும் நீர்மூழ்கிக் கப்பலை மூன்று ஆராய்ச்சியாளர்களுடன் அப்பகுதிக்கு சீனா அனுப்பியுள்ளது. இந்த நீர்மூழ்கிக் கப்பலில் கடலுக்கு அடியில் உள்ள மாதிர…
-
- 0 replies
- 375 views
-
-
மனித இனத்தை போன்ற மற்றுமொரு இனம் பூமியில் வாழ்ந்தமைக்கான ஆதாரங்கள் கண்டுபிடிப்பு மனிதப்பரிணாம வளர்ச்சி குறித்த நம் தற்போதைய புரிதலில் பெரிய அதிர்ச்சி ஒன்று ஏற்பட்டுள்ளது. சுமார் 2 இலட்சம் ஆண்டுகளுக்கு முன் நவீன மனிதர்களின் மூதாதையர், வேறொரு ஆரம்பகால மனிதர்களோடு ஆபிரிக்காவில் வாழ்ந்ததற்கான புதைபடிம ஆதாரங்கள் கிடைத்துள்ளன. ஹோமோ நலெடி என்றழைக்கப்படும் இந்த மனித இனம், நவீன மனித இனம் பூமியில் தோன்றுவதற்கு முன்பே அழிந்துவிட்டதாக முன்பு கருதப்பட்டது. தற்போதைய கண்டுபிடிப்பு அந்த கருத்தை மாற்றியமைத்திருக்கிறது. நியோ என்று பெயரிடப்பட்டுள்ள மனித எலும்புக்கூட்டின் உதவியுடன் ஆய்வாளர்கள் இதை செய்துள்ளனர். …
-
- 0 replies
- 602 views
-
-
உலகின் அதிபயங்கரக்குழு(gang) http://video.google.com/videoplay?docid=-8050801435890714263 http://peety-passion.com
-
- 0 replies
- 944 views
-
-
பட மூலாதாரம்,NASA படக்குறிப்பு,நாசாவின் இன்சைட் லேண்டரின் நில அதிர்வு கருவி மூலம் திரவ நீரின் சாத்தியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கட்டுரை தகவல் எழுதியவர், விக்டோரியா கில் பதவி, அறிவியல் நிருபர், பிபிசி செய்தி ஒரு மணி நேரத்துக்கு முன்னர் செவ்வாய் கிரகத்தின் வெளிப்புற கிரஸ்ட்டில் இருக்கும் பாறைகளின் ஆழத்தில் திரவ வடிவில் நீர் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். நாசா 2018 ஆம் ஆண்டு செவ்வாய் கிரகத்துக்கு ``மார்ஸ் இன்சைட் லேண்டர்’’ என்னும் விண்கலத்தை அனுப்பியது. அதன் கண்டுபிடிப்புகள் அடிப்படையிலான தரவுகள் பகுப்பாய்வு செய்யப்பட்டது. அந்த புதிய பகுப்பாய்வில் நீரின் இருப்பு பற்றிய தகவல் கிடைத்துள்…
-
- 0 replies
- 367 views
- 1 follower
-
-
லண்டன்: தற்போது உலகம் சந்தித்து வரும் காலநிலை மாற்றம் மூலம் வரும் 2030ம் ஆண்டிற்கு உலகில் 10 கோடி பேர் பலியாகலாம் என்ற அதிர்ச்சி தகவல் ஆய்வில் தெரியவந்துள்ளது. பல்வேறு காரணங்களால் உலகின் காலநிலையில் பெரிய மாறுதல்கள் ஏற்பட்டு வருகிறது. வளிமண்டலத்தில் உள்ள கிரீன்ஹஸ் விளைவு பாதிக்கப்பட்டுள்ளதால், உலகின் வெப்பநிலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் துருவ பகுதியில் உள்ள பனிக்கட்டிகள் உருகுவது அதிகரித்து, கடல் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. இதனால் எதிர்காலத்தில் மக்கள் வாழ்வதற்கு ஏற்ற இடமாக பூமி இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில் டாரா என்று மனிதாபிமான அமைப்பு ஆய்வு ஒன்றை நடத்தியது. இதில் உலகில் உள்ள 184 நாடுகளில் கடந்த 2010ம் ஆண்டு முதல் 2030ம் ஆண்டு …
-
- 0 replies
- 1k views
-
-
ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை முறைகள் மூலம் இயற்கை வளத்தை பாதுகாத்து, உணவு உற்பத்தியைப் பெருக்க விவசாயிகள் முயற்சிக்க வேண்டும் என உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை துணை இயக்குநர் பெ.பாஸ்கர் கேட்டுக் கொண்டார். இதுகுறித்து அவர் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து நிர்வாகமானது மண்ணில் இருக்கும் இயற்கை ஊட்டங்களை பயிர் சாகுபடிக்கு பயன்படுத்திக் கொள்ள ஊக்குவிக்கிறது. பயிரின் ஊட்டச்சத்து தேவையையும், இயற்கை மற்றும் ரசாயன ஆதாரங்களின் மூலம் ஊட்டச்சத்துக்களையும் ஒருங்கிணைத்து பயிர்களுக்கு சமச்சீர் ஊட்டத்தை அளிக்கிறது. இயற்கையோடு ஒன்றிய, சுற்றுச்சூழலைப் பாதுகாக்கக் கூடிய உன்னத உர உபயோக வழிமுறை தான் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து நிர்வாகமாகும். மண் வளத்தைப் பே…
-
- 0 replies
- 684 views
-
-
தமிழ்நாட்டில் சாகுபடி செய்யப்படும் மூலிகைப் பயிர்களில் செங்காந்தள் மலர் மிக முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. இதன் விதைகளும், கிழங்கும் ஏராளமான மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளதால் பல வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தமிழ்நாட்டின் அரசு மலர் என்ற பெருமையைப் பெற்றுள்ள இந்த மூலிகைப் பயிர் திருப்பூர் மாவட்டத்தில் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. மேலும் கரூர், திண்டுக்கல், சேலம், பெரம்பலூர், திருச்சி, நாகப்பட்டினம் போன்ற மாவட்டங்களிலும் இந்த செங்காந்தள் சாகுபடி பரவலாகி வருகிறது. செங்காந்தள் சாகுபடி குறித்து திருப்பூர் மாவட்டம், மூலனூர் வட்டார வேளாண் பொறியாளர் தி. யுவராஜ் கூறியதாவது: கண்வலிக் கிழங்கு என்றும், கலப்பைக் கிழங்கு என்றும் அழைக்கப்படும் செங்காந்தள், பொதுவாக…
-
- 0 replies
- 1.3k views
-
-
அமெரிக்க கணினி வலையமைப்பில் ஊடுருவல்: சீனா மறுப்பு அமெரிக்க பெண்டகன் பாதுகாப்புத்துறைத் தலைமையகம் அமெரிக்காவின் பாதுகாப்பு அமைச்சின் தலைமையகமான பென்டகனில், உள்ள கணினி வலையமைப்புகளில் சீன இராணுவம் வெற்றிகரமாக ஊடுருவியுள்ளதாக வெளிவந்த ஊடகத் தகவல்களை சீனா மறுத்துள்ளது. கடந்த ஜூன் மாதம் வாஷிங்டன் நகரில் உள்ள பாதுகாப்பு அமைச்சின் தலைமையகமான பென்டகனில் உள்ள கணினி வலைப் பின்னல் மீது நடத்தப்பட்ட தாக்குதல் எங்கிருந்து வந்தது என்பதை தாம் துல்லியமாகச் சுட்டிக் காட்டிவிட்டதாக மூத்த அதிகாரி ஒருவர் தம்மிடம் தெரிவித்ததாக பைனான்சியல் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது. இந்தக் குற்றச்சாட்டு அடிப்படையற்ற ஒன்று எனவும் இது பனிப் போர் நடைபெற்ற காலத்தில் நிலவிய …
-
- 0 replies
- 1.5k views
-
-
ராணுவ பயன்பாட்டுக்கான ‘எமிசாட்’ உள்ளிட்ட 29 செயற்கைக்கோள்களுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி - சி45: உலகில் முதல்முறையாக 3 வெவ்வேறு சுற்றுவட்டப் பாதைகளில் நிலைநிறுத்தி இஸ்ரோ வரலாற்று சாதனை Published : 02 Apr 2019 05:53 IST Updated : 02 Apr 2019 05:53 IST சி.பிரதாப் ஸ்ரீ ஹரிகோட்டா இந்திய ராணுவ பயன்பாட்டுக்கான ‘எமிசாட்’ மற்றும் 28 வெளிநாட்டு செயற்கைக்கோள்கள் பிஎஸ்எல்வி - சி45 ராக்கெட் மூலம் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டன. உல கில் முதல்முறையாக 3 வெவ்வேறு சுற்றுவட்டப் பாதைகளில் செயற்கைக்கோள்களை நிலை நிறுத்தி இஸ்ரோ வரலாற்று சாதனை படைத்துள்ளது. நம்நாட்டுக்கு முக்கிய தேவை யான தொலைத்தொடர்பு…
-
- 0 replies
- 251 views
- 1 follower
-
-
கற்காலத்தில் வாழ்ந்த மக் களைப் பற்றிக் குறிப்பிடும்போது, குகை மனிதர்கள் என்று கூறுவது சரியான முறையல்ல. ரோமானி யர்களுக்கு முன்பு இருந்த எதைப் பற்றியும் எங்களுக்குச் சற்றும் கவலையில்லை என்ற முறையில் பள்ளியில் வரலாறு 19ஆம் நூற்றாண்டில் கற்பிக்கப்பட்டதன் ஒரு பகுதியாகும் குகைமனிதர் என்று குறிப்பிடுவது. அச்சொற்றொடர் தற்போது நவீன வரலாற்றாசிரியர்களாலும், தொல்பொருள் ஆய்வாளர்களாலும்பயன்படுத்தப்படுவதில்லை. கற்கால மனிதர்கள் வேட்டையாடி உயிர் வாழும் நாடோடிக் கூட்டத்தினர்; அவர்கள் எப்போதாவது குகைகளைப் பயன்படுத்தினர். அவர்கள் வாழ்ந்த இடங்கள் என்று 277 இடங்கள் அய்ரோப்பாவில் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளன. அவைகளில் சில: ஸ்பெயின் நாட்டில் உள்ள அல்டாமிரா, ஃபிரான்ஸ் நாட்டில் உள்ள லாஸ்காக்ஸ…
-
- 0 replies
- 1.7k views
-
-
4500 ஆண்டு பழமையான "நடுகற்களை" கண்டுபிடித்திருப்பதாக பிரிட்டன் தொல்லியலாளர்கள் அறிவிப்பு நியோலிதிக் காலத்தைச் சேர்ந்த கல் தூண்களால் ஆன மிகப்பெரிய "ஈமச்சடங்கிடம்" ஒன்றை பிரிட்டனின் தொல்லியலாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். இது சுமார் 4500 ஆண்டுகள் பழமையானது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். பிரிட்டனில் உலகப் புகழ்பெற்ற ஸ்டோன்ஹெஞ்ச் என்று அழைக்கப்படும் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடம் ஒன்று இருக்கிறது. வட்டவடிவில் கல்தூண்கள் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் இந்த இடத்திலிருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் தொலையில் நிலத்துக்குள் மூன்றடி ஆழத்தில் புதையுண்டு இருந்த இந்த "ஈமச்சடங்கிடத்தை" தாங்கள் கண்டுபிடித்திருப்பதாக தொல்லியலாளர்கள் அறிவித்துள்ளனர். இதில் இருக்கும் தூண்கள் 15 அடி…
-
- 0 replies
- 1.1k views
-
-
2024 YR4 என்று பெயரிடப்பட்ட ஒரு பெரிய Asteroid பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விண்கல் பூமியைத் தாக்கக்கூடும் என்று Scientists ஆரம்பத்தில் கவலைப்பட்டனர். பின்னர் அவ்வாறு நடக்க வாய்ப்பு குறைவாக இருப்பதாக அறிவித்தனர். இந்த Asteroid பூமியைத் தாக்குவதற்கான வாய்ப்பு 3.1 சதவீதம் உள்ளது என ஆரம்பத்தில் மதிப்பிட்ட விஞ்ஞானிகள், பின்னர் 2032ஆம் ஆண்டில் பூமியைத் தாக்குவதற்கான வாய்ப்பு 0.28 சதவீதம் மட்டுமே உள்ளது என்று கூறினர். ஆனால் இது Moon-ஐ தாக்க ஒரு சதவீதம் வாய்ப்பு இருப்பதாக NASA மதிப்பிட்டுள்ளது. #NASA #Earth #Space இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
-
- 0 replies
- 244 views
- 1 follower
-
-
‘இசிஎம்ஓ’ கருவியைக் கொண்டு மார்ஷுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சற்று நேரம் கழித்து அந்தப் பெண்ணின் உடல் வெப்பநிலை 30 டிகிரி செல்சியசுக்கு உயர்ந்தது. அதனால் அவரது இதய இயக்கத்தை மீண்டும் தூண்டவைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டனர். படம்: VALL D'HEBRON/TWITTER 6 Dec 2019 21:12 மிகக் கடுங்குளிரில் சிக்கித் தவித்த பிரிட்டிஷ் பெண்ணின் இதயத் துடிப்பு நின்று ஆறு மணி நேரத்துக்குப் பிறகு அவரது இதயத்தை ஸ்பெயின் மருத்துவர்கள் மீண்டும் இயங்க வைத்துள்ளனர். நேற்று (டிசம்பர் 5) நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில் அந்தப் பெண் பிழைத்தது அதிசயம் என்று பலரும் கூறி வருகின்றனர். ஆட்ரே மார்ஷ் எனும் அந்தப் பெண் கடந்த மாதம் மூன்றாம் தேதி சுமார் 1 மணியளவில் அவரது கணவருடன் பைரெனீஸ் …
-
- 0 replies
- 489 views
-
-
விஞ்ஞானிகள் முதன் முறையாக கனிமப்பொருள் ஒன்றினைக் கண்டுபிடித்துள்ளனர். இதனை விஞ்ஞானிகள் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளனர். இக்கனிமப்பொருளை இயற்கையில் இதற்கு முன்னர் கண்டிருக்கவில்லை என தெரிவித்துள்ளனர். அவுஸ்திரேலியாவின் விக்டோரியாவில் உள்ள பின்தங்கிய கிராமத்திலுள்ள வீதியோரத்திலிருந்து இக்கனிமப்பொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 1951 ஆம் ஆண்டு கண்டெடுக்கப்பட்ட இப்பொருளானது இதுவரை காலமும் விக்டோரியாவிலுள்ள மியூசியத்தில் வைக்கப்பட்டிருந்த நிலையில் தொடர்ந்தும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையிலேயே தற்போது இதுவரை கண்டறியப்படாத புதிய வகை கனிமத்தினை அப்பொருள் கொண்டிருக்கின்றமை உத்தியோகபூர்வமாக உறுதிசெய்யப்பட்டுள்ளது. இது விண்ணில் இருந்து வீழ்ந்த விண்கல்லாக இருக்கலாம் …
-
- 0 replies
- 363 views
-
-
img: en.wikimedia.org 1969 ம் ஆண்டு யூலைத் திங்கள் 16ம் நாள் Saturn V உந்துவாகனம் மூலம் அப்பலோ 11 விண்கலம் மிசன் கொமாண்டர் நீல் ஆம்ஸ்ரோங் (Neil Alden Armstrong) தலைமையில், கொமாண்ட் மொடியுள் பைலட் மைக்கல் கொலின்ஸ் (Michael Collins) மற்றும் நிலவுக்கான மொடியுள் பைலட் எட்வின் அல்ரின் (Edwin Eugene 'Buzz' Aldrin) ஆகியோரைக் காவிக் கொண்டு நிலவை நோக்கிப் புறப்பட்டது. கிட்டத்தட்ட 4 நாட்கள் பயணத்தின் பின் 1969 ம் ஆண்டு யூலைத் திங்கள் 20ம் நாள் .. இன்றிலிருந்து சரியாக 40 ஆண்டுகளுக்கு முன்னால்.. அப்பலோ 11 நிலாவில் தரையிறங்கி நீல் ஆம்ஸ்ரோங் மற்றும் அல்ரின் ஆகியோர் நிலாவில் காலடி எடுத்து வைக்க வழி செய்தது. இதற்கான ஆதார காணொளியை (Video) நாசா அதே தினத்தில் உலகுக்கு வெளியிட்டது.…
-
- 0 replies
- 998 views
-
-
தூக்கம் வருவதற்கு எது முக்கிய காரணம்? 06/09/2013 by KALAKUMARAN in அறிவியல், மனிதன் with 0 COMMENTS தூக்கம் பற்றிய ஆராய்சிகள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அமெரிக்காவில் இதற்கென்றே ஒரு துறை நிண்ட்ஸ் (NINDS – National Institure of Neurological Disorders and Stroke) செயல்படுகிறது. முக்கியமாக வயசுக்கு வரும் ஆணாகட்டும் பெண்ணாகட்டும் அந்த வயதுகளில் நிம்மதியான தூக்கம் அவசியம் என்கிறார் பெண் டாக்டர் சிரேலி. img98371 ஒரு விசயம், விலங்குகள் தூங்கும் நிலையிலேயே எப்படி உசார் நிலையில் இருக்கிறது என்பது விஞ்ஞானிகளின் கவனத்தை ஈர்க்கிறது. மூளை நுண் நரம்பு செயல்பாடு ஒழுங்காக நடக்க தூக்கம் மனிதனுக்கு மிக முக்கியமானது. குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் ஹார்மோன் வளர்ச்சிக்கும் ஆழ்ந்த தூக்கத்தி…
-
- 0 replies
- 661 views
-
-
வணக்கம், கீழுள்ள காணொளி எங்கட வீடுகளில இருக்கிற வெப்பநிலையை கட்டுப்படுத்துகிற நிலைநிறுத்தி மற்றும் அதனுடன் சம்மந்தப்பட்ட இதர கருவிகளின் எதிர்காலம் பற்றி சொல்லுது. எதிர்காலத்தில வீட்டில இருக்கிற Heaterஇனை, மற்றும் இதர சாதனங்களை நாங்கள் எங்கட கணணி மூலமே இருந்த இடத்தில இருந்து கட்டுப்படுத்தக்கூடியதாக இருக்கும்.
-
- 0 replies
- 750 views
-
-
‘என் கம்பெனியில் மொத்தம் பதினாறு மார்க்கெட்டிங் எக்ஸ்ஸிக்யூடிவ்ஸ் இருக்காங்க’ என்றார் மாட்டுத் தீவனம் விற்கும் ஒரு தொழிலதிபர். எனக்கு தூக்கிவாரிப் போட்டது. தீவனம் விற்க பதினாறு மார்க்கெட்டிங் ஆட்களா? மாடுகளை விட ஆட்கள் அதிகம் எதற்கு என்று அவரிடம் விசாரித்தபோதுதான் தெரிந்தது, அவர் மார்க்கெட்டிங் என்று குறிப்பிட்ட நபர்கள் செய்வது சேல்ஸ் வேலையை. அதை அவரிடம் கூறியபோது அவர் `மார்க்கெட்டிங், சேல்ஸ் எல்லா கழுதையும் ஒண்ணுதானே’ என்றார். நான் மார்க்கெட்டிங் கன்சல்டண்ட் என்பதால் என்னைக் குத்திக் காட்டுகிறாரோ என்று சந்தேகம் வந்தது. அதை அவரிடம் கேட்டு அவர் கன்ஃபர்ம் பண்ணித் தொலைத்தால் அசிங்கமாகப் போய்விடுமே என்று விட்டுவிட்டேன். ஆனால் அவர் பதிலில் இருந்த அறியாமையை நான் பல தொழிலதிபர்…
-
- 0 replies
- 593 views
-
-
மரத்திலிருந்து உருவாகும் பேட்டரிகள் - மின்சார வாகனங்களில் பயன்படுத்த முடியுமா? கட்டுரை தகவல் எழுதியவர்,கிறிஸ் பரனியுக் பதவி,பிபிசி ஃபியூச்சர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES மின்சார வாகனங்களுக்கான தேவை அதிகரித்து வருவதால், விஞ்ஞானிகள் நிலையான பேட்டரிகளை தயாரிப்பதற்கான பொருட்களைத் தேடுகின்றனர். மரங்களில் காணப்படும் லிக்னின் என்ற பொருள், ஒரு வலுவான போட்டியாளராக உருவெடுத்து இருக்கிறது சுமார் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு, பின்லாந்தின் ஒரு பெரிய காகித உற்பத்தியாளர் உலகம் மாறி வருவதை உணர்ந்தார். டிஜிட்டல் ஊடகங்களின் எழுச்சியால் அச்சுத்தொழில் …
-
- 0 replies
- 175 views
- 1 follower
-
-
காடுகள் அழியக் காரணமாகும் பார்பிக்யூ உணவுகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க நாம் உண்ணும் உணவிற்கும் நைஜீரியாவில் வெட்டப்படும் மரங்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்கிறது அறிவியல். அதற்கான எண்ணற்ற ஆதரங்களையும் அடுக்குகிறது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES பார்பிக்யூ உணவும், நைஜீரிய காடும் காடு…
-
- 0 replies
- 444 views
-
-
பெயர்ன் (ஸ்விட்சர்லாந்து ஸ்விட்சர்லாந்து தயாரித்த சூரிய சக்தியில் இயங்கும் விமானம் இரவு நேரத்திலும் பறந்து சாதனை படைத்துள்ளது. பகல் நேரத்தில் மட்டுமல்லாமல் இரவு நேரத்திலும் சூரிய ஒளி சக்தி மூலம் இயங்கும் வகையில் ஸ்விட்சர்லாந்து நாட்டில் விமானம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த விமானத்தை அவ்வப்போது பறக்கவிட்டு சோதனை செய்து பார்த்து வந்தனர். இந்த நிலையில் தொடர்ந்து 24 மணி நேரம் சூரிய ஒளி சக்தியில் விமானத்தை இயக்க முடிவு செய்யப்பட்டு சோதனை புதன்கிழமை துவங்கப்பட்டது. கேப்டன் ஆந்த்ரே போர்ஷ்பெர்க் விமானத்தை இயக்கினார். சுமார் 26 மணி நேரத்துக்கும் மேலாக இந்த விமானம் சூரிய ஒளி சக்தியால் பறந்தது. இந்த நிலையில் வியாழக்கிழமை காலை அவர் விமானத்தை பத்திரமாக தரை இறக்கினார். இதுக…
-
- 0 replies
- 940 views
-
-
ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள், ரொபோக்களை அடுத்தகட்டத்துக்கு எடுத்து செல்லும் நோக்கில் சிரிக்கும் இயந்திரத்தை உருவாக்கி, உயிருள்ள தோலால் மூடியுள்ளனர். குறித்த இயந்திரத்தில் மனிதனைப் போன்ற ஸ்மைலி முகம், பெரிய அசையாத பச்சை நிற கண்கள் மற்றும் ப்ளாஸ்டிக் போன்ற இளஞ்சிவப்பு படலத்தில் மூடப்பட்டிருப்பது போல் அமைந்துள்ளது. உயிருள்ள தோல் திசுக்களை இயந்திர ரொபோ மேற்பரப்பில் பிணைக்க ஒரு புதியை வழியைக் கண்டுபிடித்துள்ளதாக கூறுகின்றனர். இந்த ஆராய்ச்சியில் ரொபோக்களின் உணர்திறன் பற்றிய திறனை அறிய உதவுகிறது. https://thinakkural.lk/article/305014
-
- 0 replies
- 349 views
- 1 follower
-
-
பறவையைப்போன்ற ரோபோக்களை உருவாக்குவதில் முதல்கட்ட வெற்றி! ---------------------------------------------------------------------------------------------------------------------------------- வானில் பறப்பது கடினமான செயலா? பறவைகள் மட்டும் எப்படி எளிதாக பறக்கின்றன? பறவையின் சின்னஞ்சிறு உடல், பறப்பதற்கேற்ப சிறப்பாக பரிணமித்துள்ளது. ஆனால் அதை முழுமையாய் மீளுருவாக்க மனித தொழில்நுட்பவியலாளர்களால் இதுவரை இயலவில்லை. அதை மாற்றும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள் ஆய்வாளர்கள். உலகில் முதல் முயற்சியாக கலிபோர்னியாவின் ஸ்டாண்போர்ட் பல்கலைக்கழகத்தில் ஒரு முழு கட்டிடத்தையே ஒதுக்கி பறப்பதற்கான சூழலை உருவாக்கியிருக்கிறார்கள். அதன்மூலம் பறவைகளி…
-
- 0 replies
- 455 views
-