Jump to content

காடுகள் அழியக் காரணமாகும் பார்பிக்யூ உணவுகள்


Recommended Posts

காடுகள் அழியக் காரணமாகும் பார்பிக்யூ உணவுகள்

நாம் உண்ணும் உணவிற்கும் நைஜீரியாவில் வெட்டப்படும் மரங்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்கிறது அறிவியல். அதற்கான எண்ணற்ற ஆதரங்களையும் அடுக்குகிறது.

பார்பிக்யூ உணவும், பருவநிலை மாற்றமும்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

பார்பிக்யூ உணவும், நைஜீரிய காடும்

காடுகள் அதிவேகமாக அழிக்கப்படும் நாடுகளில் ஒன்றாக நைஜீரியா இருக்கிறது. பார்பிக்யூ உணவுகளால்தான் இந்த காடழிப்பு நிகழ்கிறது. குறிப்பாக பிரிட்டனில் நுகரப்படும் பார்பிக்யூ உணவுகளால் என்கிறார்கள் அறிவியலாளர்கள்.

பார்பிக்யூ உணவு சமைக்க அதிகளவிலான கரி தேவை. இந்த கரி தேவைக்காகதான் காடுகள் அழிக்கப்படுகின்றன. இதை தட்டையாக புரிந்து கொண்டால் சாதாரணமாக தெரியலாம். ஆனால், உண்மை நிலவரம் அசாதரணமானதாக இருக்கிறது.

கடந்த ஆண்டு பிரிட்டன் மட்டும் 90,000 டன் கரியை இறக்குமதி செய்து இருக்கிறது.

பார்பிக்யூ உணவும், பருவநிலை மாற்றமும்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

அதெல்லாம் சரி, இதை எப்படி நைஜீரியா மரங்களின் கரி என்று சொல்கிறீர்கள்? என்ற சந்தேகத்திற்கான விடையை சொல்கிறது பிபிசி மேற்கொண்ட ஆய்வு.

ஆய்வு சொல்லும் உண்மை

பிபிசி பல சூப்பர் மார்க்கெட்டுகளில் கரி பைகளை (Charcoal Bags) வாங்கியது. அதனை ஜெர்மனியில் உள்ள ஓர் ஆய்வகத்திற்கு அனுப்பியது.

மரங்கள் தொடர்பான ஆய்வகமான துணின் நிறுவனத்தில் ஆய்வாளர் வோல்கர் ஹாக் இந்த ஆய்வினை மேற்கொண்டார்.

அவர், "நாங்கள் ஆய்வு செய்த மரத்துண்டுகள் வெப்ப மண்டல மற்றும் துணை வெப்ப மண்டல காடுகளை சேர்ந்தவை" என்கிறார்.

பார்பிக்யூ உணவும், பருவநிலை மாற்றமும்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

அழிந்து வரும் பல உயிரினங்களுக்கு புகலிடமாக வெப்ப மண்டல காடுகள் திகழ்கின்றன. பருவநிலை மாற்றத்தை எதிர்க்கொள்ள வேண்டுமானால் இந்த வெப்ப மண்டல காடுகளை காக்க வேண்டும்.

சந்தையில் விற்பனையில் இருக்கும் கரி பைகளில், அவை எந்த பகுதியிலிருந்து வெட்டப்பட்ட மரங்கள் என்ற குறிப்புகள் எதுவும் இல்லை. ஆனால், பெரும்பாலான பைகள் எஃப்.எஸ்.சி லோகோவை தாங்கி நிற்கின்றன.

எஃப்.எஸ்.சி என்பது ஃபாரஸ்ட் ஸ்டிவெர்ட் கவுன்சில் என்பதை குறிக்கும். இந்த நிறுவனமானது உலகளவில் மரசாமான்களுக்கு சான்றிதழ் தரும் மிகப் பெரிய நிறுவனம்.

அந்த நிறுவனத்தின் தலைவர் கிம் சார்ஸ்டென்சென், "பிரிட்டன் சந்தைக்கு வெப்ப மண்டல காடுகளின் மரக்கரி வருகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், அந்த மர கரிகள் பைகளில் நிச்சயம் எங்கள் நிறுவனத்தின் இலச்சினை இருக்காது. ஆனால், அதே நேரம் நாங்கள் சான்றிதழ் அளித்தவற்றில் எந்த பிரச்சனையும் இல்லை என்றும் சொல்லிவிட முடியாது" என்கிறார்.

அஞ்சதக்க வகையில்

கடந்த ஆண்டு நைஜீரியாவும், பராகுவேவும் பத்தாயிரம் டன்கள் அளவிற்கு மரக்கரியை ஏற்றுமதி செய்துள்ளன.

நைஜீரியன் பாதுகாப்பு சங்கத்தை சேர்ந்த ஸ்டீஃபன், "அஞ்சதக்க வகையில் நைஜீரியா காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றன." என்கிறார்.

மேற்கு நைஜீரியாவில் இருக்கும் க்வாரா மாகாணம்தான் கரி உற்பத்திக்கான முக்கியமான மையம்.

ஐ,நா அமைப்பு உலகளவில் இந்த கரி தேவை வரும் தசாப்தங்களில் அதிக அளவில் அதிகரிக்கும் என்று கணிக்கிறது.

https://www.bbc.com/tamil/science-44915222

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.