அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3265 topics in this forum
-
குழந்தை கடவுளின் கிருபை என்று கூறித் திரிந்த காலம் மலையேறிவிட்டது. இப்போ குழந்தைகளை நாம் விரும்பும் வடிவில் சோதனைக் குழாய்களில் அல்லது தட்டுக்களில் உருவாக்கிவிட முடியும். இந்த முறைக்கு சுருக்கமாக IVF (விரிவாக.. In vitro fertilisation) என்று பெயரிட்டுள்ளனர். இந்த ஐ வி எவ்(F) முறையில் பெண்ணின் ஒரு தனி முட்டையை ஆணின் விந்துக் கலத்துடன் கருக்கட்ட வைத்து அதனை தாயின் கருப்பையுள் செலுத்திவிட முடியாது. மாறாக பல முளையங்கள் உருவாக்கப்பட்டு அதில் சூழலை வென்று குழந்தையாக வளரக் கூடியவற்றை தேர்வு செய்து கருப்பையுள் புதைத்து விடுகின்றனர். உருவாக்கப்படும் முளையங்களில் ஐந்தில் ஒன்றுக்கே இந்த வாய்ப்புக் கிட்டுகிறது. இதன் போது பல முளையங்கள் கருப்பையில் தரித்து Multiple pregnancy அதாவது …
-
- 0 replies
- 652 views
-
-
செவ்வாயில் அமெரிக்க நாசாவின் அடுத்த ரோவர் 2020 இல் தரையிறங்க உள்ளதாகவும் அது அங்கு வாழ்ந்த உயிரினங்களின் உயிரினச் சுவடுகளைக் கண்டறியும் நோக்கில் உபகரணங்களோடு வடிவமைப்பட்டு அனுப்பப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. ஆனாலும் அது இன்று அங்கு உயிரினங்கள் வாழ்கின்றனவா என்பது பற்றிய ஆய்வைச் செய்யாது என்றும் தெரிகிறது. மேலதிக செய்திகள் மற்றும் முதல் பதிவுக்கான இணைப்பு.. முதல் பதிவு ஜுலை 2003. மேலதிக செய்தி. http://kuruvikal.blogspot.co.uk/
-
- 0 replies
- 548 views
-
-
கடந்த பெப்ரவரி மாதம் பூமியை அச்சுறுத்திய இராட்சத எரிகல் ஒன்று பூமியை மிக அருகில் கடந்து சென்றது. இதன் அதிர்ச்சி அலைகளால் ரஷ்யாவில் 1000 பேர் படுகாயமடைந்தனர். மின்சார வழங்கல் நின்று போனது. பல கட்டிடங்களின் ஜன்னல்கள் உடைந்து சிதறியது. அதைப்பற்றி மேலும் ஆராய்ச்சி செய்தபோது அந்த இராட்சத எரிகல்லினால் ஏற்பட்ட அதிர்ச்சி அலைகள் இரண்டு முறை பூமியை சுற்றிவந்துதான் பிறகு மறைந்துள்ளது என்ற அதிர்ச்சி தரும் தகவலை விஞ்ஞானிகள் நேற்று வெளியிட்டுள்ளனர். அணுகுண்டு சோதனை செய்தால் அதன் விளைவுகளைத் துல்லியமாக கண்டறியும் சென்சார்கள் உள்ளது. அந்த சென்சார்களைக் கொண்டு இது கண்டறியப்பட்டது என்றும், இந்த வலைப்பின்னலில் பதிவான மிகவும் சக்திவாய்ந்த நிகழ்வு இது என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். …
-
- 2 replies
- 623 views
-
-
ஐன்ஸ்டினின் கடவுள் பற்றிய கடிதம் வணக்கம் நண்பர்களே, சென்றிடுவீர் எட்டுத் திக்கும் -கலைச் செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்! என்னும் மகாகவியாரின் சொற்களை உண்மையாக்க எங்கும் செல்லாமல் இணையத்தில் மட்டுமே எட்டுத் திக்கும் தேடினால் போதும் என்று சூழலில் வாழ்கிறோம். எனினும் இணையத்திலும் தமிழ் மொழிக்கு பிற நாட்டு நல்லறிஞர் சா(சூ)த்திரங்கள் தமிழாக்கம் செய்து அளிப்பது தமிழர்களின் கடமை.அப்போது மட்டுமே தமிழில் தேடும் தமிழர்களுக்கு பயன் தரும். அந்த வகையில் அறிவியலாளர் திரு ஐன்ஸ்டின் அய்யா அவர்களின் ஒரு கடிதம் 4 மில்லியன் டாலருக்கு ஏலம் போனது என்ற செய்தியைப் படித்தவுடம் அக்கடிதத்தில் என்ன உள்ளது ,அத்னை தமிழாக்கம் செய்து நம் சொந்தங்களுடன் பகிர்ந்தால் என்ன என தோன்றி…
-
- 0 replies
- 917 views
-
-
இயற்கை முறை கருத்தரிப்பிலும், செயற்கை முறை க்ருத்தரிப்பிலும், ஒரு ஆணின் விந்தும், ஒரு பெண்ணின் முட்டையும் சேர்ந்தே கருத்தரித்து குழந்தை உருவாகிறது. மனித கலங்களுக்கு உடலுக்கு சக்தியை வழஙகும் இழைமணி (mitochondria) தாயின் கருவில் இருந்து குழந்தைக்கு கிடைக்கிறது. இந்த இழைமணியில் இருக்கும் DNA யில் குறைபாடு இருந்தால் அதை கொண்டிருக்கும் குழந்தை களுக்கு muscular dystrophy (தமிழ்?), epilepsy (காக்காய் வலிப்பு) and heart problems (இதய நோய்கள்) என்பன வரும் சாத்தியம் அதிகமாகும். உலகில் 1/6500 குழந்தை இவ்வாறு பிறக்கிறது. இதை தவிர்க்க இழைமணி DNA யில் குறைபாடு இருக்கும் தாயின் கரு முட்டையில் இருந்து குறைபாடு உடைய இழைமணி யை நீக்கி விட்டு , குறைபாடு அற்ற பெண்ணின் முட்டையில் இருந்து…
-
- 3 replies
- 876 views
-
-
அண்டவெளியில் தேள் விண்மீன் தொகுப்பில் (constellation of Scorpius) ஒரு நட்சத்திரத்தை மூன்று கிரகங்கள் சுற்றி வந்து கொண்டிருக்கின்றன. இந்த மூன்று கிரகங்களிலும் நமது பூமியைப் போலவே உயிர்கள் வாழ்வதற்கேற்ற சூழல் நிலவலாம் என்று கருதப்படுகிறது. க்ளீஸே என்றொரு நட்சத்திரம்... நமது பூமியிலிருந்து 22 ஒளி வருட தூரத்தில் உள்ளது Gliese 667C என்ற நட்சத்திரம் (இதை இன்னொரு சூரியன் என்றும் சொல்லாம்). இந்த நட்சத்திரத்தை பல ஆண்டுகளாகவே விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இந் நிலையில் இந்த நட்சத்திரத்தை 6 கோள்கள் சுற்றி வருவது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. அதில் 3 கோள்கள் நட்சத்திரத்தில் இருந்து உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற சரியான தூரத்தில் சுற்றி வருவது தெரியவந்துள்ளது. அதாவது நமது பூமி…
-
- 1 reply
- 811 views
-
-
ஓடும் ரயில் வண்டியில் ஒரு காட்சி. உட்கார்ந்த நிலையில் உறங்கும் வெள்ளைச் சட்டைக்காரார் தமக்கு அருகே அமர்ந்தபடி உறங்கும் பெரிய மீசைக்காரர் மீது தம்மையும் அறியாமல் மெல்லச் சாய்கிறார். மேலும் மேலும் சாய ஆரம்பிக்கிறார். ஒரு கட்டத்தில் எடையைத் தாங்க முடியாமல் மீசைக்காரர் உடலை உலுக்கியபடி விழித்துக் கொள்கிறார். வெள்ளைச் சட்டைக்காரகும் விழித்துக் கொண்டு சுதாரித்துக் கொள்கிறார். பூகம்பம் கிட்டத்தட்ட இப்படித் தான் ஏற்படுகிறது. ஒரு சில்லு அடுத்த சில்லை மேலும் மேலும் நெருக்குகிறது. அடுத்த சில்லு ஒரு கட்டம் வரை இதைத் தாங்கிக் கொண்டே இருக்கிறது. நெருக்குதல் ஒரு கட்டத்தை எட்டும் போது சில்லுக்கு அடியில் உள்ள பாறைப் பாளம் பெரிய உலுக்கலுடன் நகருகிறது. அதுவே பூகம்பம். இம…
-
- 0 replies
- 533 views
-
-
அமெரிக்கா சொன்ன நீல் ஆம்ஸ்ட்ராங் தான் முதலில் நிலவில் கால் வைத்தார் என்று சொன்ன பொய் கதை தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. உலக பயங்கரவாதி அமெரிக்காவின் பொய் புரட்டல்களை நம்ம சகோதரர்களும் படித்து பயன்பெற்று தெரிந்து கொள்ளட்டும் எப்படி எல்லாம் நம்ப வைத்து இருக்கிறார்கள் உலகிலேயே முதன் முதல் சந்திரனைப் பற்றி ஆராய்ச்சி செய்தவர்கள் சோவியத் யூனியன் தான். 1930 - ஆம் ஆண்டிலிருந்தே அவர்கள் இந்த ஆராய்ச்சியை தொடங்கி இருக்கிறார்கள். அதேப்போல், நிலாவிற்கு விண்களம் அனுப்பியவர்களும் இவர்களே. இருபதுக்கும் மேற்பட்ட ஆளில்லா விண்களங்களை நிலாவிற்கு அனுப்பியிருக்கிறார்கள். இப்படியாக நிலாவை நோக்கிய இந்த விண்களப் பயணமும், நிலாவைப் பற்றிய ஆராய்ச்சியும் வெற்றிகரமானதாக அமைந்தவுடன், 1957 - ஆம் ஆண…
-
- 1 reply
- 2.6k views
-
-
திமிங்கலம் போன்ற கடல்வாழ் பாலூட்டி விலங்குகள் நீருக்கடியியில் ஒரு மணி நேரம் வரை மூச்சை அடக்கிக்கொள்ள முடியும் அளவுக்கு அவை தமது உடலில் பிராணவாயுவை எவ்வாறு சேமிக்கின்றன என்று கண்டுபிடித்துவிட்டதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். சுற்றாடலுக்கு ஏற்ப பிராணிகளில் உடலில் மாற்றங்களை ஏற்படுத்தும் பரிணாம வளர்ச்சியின் சிறப்பான உதாரணமாக கடல்வாழ் பாலூட்டி விலங்குகள் சுவாசிக்காமல் ஒரு மணி நேரம் வரையில் நீருக்கடியில் இருப்பது கருதப்படுகிறது. இவ்வகையான பிராணிகளின் உடலில் உள்ள மயோகுளோபின் என்ற புரதத்தை விஞ்ஞானிகள் ஆராய்ந்தனர். இவ்விலங்குகளின் தசைகளில் காணப்படும் இந்த புரதம், பிராணவாயுவை சேமித்துவைக்கவல்லது. திமிங்கலங்கள், சீல்கள் போன்ற பிராணிகளில் உள்ள மயோகுளோபின்கள் 'ஒட்டாமல் விலகிற்கும…
-
- 0 replies
- 587 views
-
-
ஓசோன் குறைபாடு ஓசோன் குறைபாடு இரண்டு வேறுபட்ட ஆனால் தொடர்புடைய குறிப்புரைகளைக் கொண்டது:ஓசோனின் மொத்த அளவு, புவியின் அடுக்கு மண்டலத்தில் 4% ஒவ்வொரு பத்தாண்டு கால அளவில் குறைகிறது.இந்த குறைபாடு மெதுவானதாகவும் தெளிவானதாகவும் இருக்கிறது. 1970 களின் பிற்பகுதியில் புவியின் துருவ பகுதிகளின் மீதுள்ள அடுக்கு மண்டலத்தில் ஓசோன் அளவும் பெருமளவில் மற்றும் ஒவ்வொரு பருவ காலத்திற்கு ஏற்பவும் குறையத்தொடங்கியது.இந்த நிலைஓசோன் துளை என்று அழைக்கப்படுகிறது. அடுக்கு மண்டல ஓசோன் குறைபாடுடன், அடிவளி மண்டல ஓசோன் குறைபாடு நிகழ்வுகளும், துருவ பகுதிகளின் மேற்பரப்பில், வசந்த காலத்தின் போது நடைபெறுகின்றன. துருவ பகுதிகளில் ஓசோன் துளைகள் ஏற்படுவதுக்கும் புவியின் மத்திய பகுதியில் ஏற்படுவதுக்கும் வி…
-
- 0 replies
- 645 views
-
-
மரபுகுணம் தாய் தந்தையரிடம் இருந்து குழந்தைக்குப் போகிறது என்பதை ஓரளவுக்கு புரிந்துகொண்டாலும், அது எப்படி, அது எந்த மூலக்குறுமூலம் செல்கிறது (டி என் எ அல்லது ப்ரோட்டீன்) என்பது சரியாக விளங்காத காலம், அது. அந்த கால கட்டத்தில் ஃப்ரெட்ரிக் கிரிஃபித் னு ஒரு ஆராய்ச்சியாளர்.நிம்மோனியா என்கிற வியாதியை உருவாக்கும் பாக்டீரியா பத்தி ஆராய்ச்சி செய்துகொண்டு இருந்தாராம். அப்போ அவரிடம் ரெண்டு விதமான நிம்மோனியா உருவாக்கும் பாக்டிரியா இருந்ததாம். அது ரெண்டும் எப்படி வேறுபடுதுனு பார்ப்போம்.. நிம்மோனியா-பாக்டீரியல் ஸ்ட்ரைன் ஒண்ணு: இந்த பாக்டீரியல் ஸ்ட்ரைனை மைக்ராஸ்கோப் மூலம் பார்த்தால், இது கொஞ்சம் கரடு முரடாத் தெரியுமாம். He called this as ROUGH STRAIN. கரடுமுரடா இருந்தாலும், இந…
-
- 1 reply
- 906 views
-
-
நீங்கள் இதுவரை புளூடூத் (Bluetooth) தொழிநுட்பம் மூலம் இயங்கும் செயற்கைக் கரப்பான் பூச்சிகளைப் பயன்படுத்தி அவற்றின் மூளை செயற்பாடு, தழுவல் ஆகியவற்றைக் கற்கும் முறை குறித்துக் கேள்விப் பட்டுள்ளீர்களா? நிச்சயம் இருக்காது. ஏனெனில் அத் தொழிநுட்பம் இன்னமும் முழுமையாகத் தயாராகவில்லை. எனினும் Backyard Brains எனும் நரம்பியல் கல்வி மற்றும் ஆராய்ச்சித் திணைக்களம் முதன் முறையாக வர்த்தக ரீதியில் கிடைக்கப் பெறும் முதல் செயற்கை பூச்சி உணர் கருவியினை Kickstarter நிறுவனம் மூலம் அறிமுகப் படுத்தி உலகம் முழுதும் இணைய வாயிலாகப் பெரும் வரவேற்பினைப் பெற்றுள்ளது. பல்கலைக் கழகத்தில் ஆரம்பப் பாடத்திட்டத்தில் நரம்பியல் குறித்த கல்வியினைக் கற்பதற்கு உதவியாக பூச்சிகளுக்கு (கரப்பான் பூச்சி உட்பட…
-
- 1 reply
- 542 views
-
-
கேமராக்களின் வளர்ச்சி எவ்வளவு எட்டியிருந்தாலும், ஒவ்வொரு டெக்னாலஜிக்கும் தனி தனி கேமராதான் பயன்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு கேமராவும் ஒவ்வொரு ஃபார்மட் என்பதால் கடைசியில் அனைத்தையும் ஒருங்கிணைக்கும் போது ரிசல்ட் வேறுபடும். இதை எல்லாம் கருத்தில் கொண்டு என் ஹெச் கே என்னும் ஜப்பான் நிறுவனம் 8 கேமராவை ஒரு கன்ட்ரோலில் இயங்க வைக்கும் ரோபாட்டிக் கேமராவை கண்டுபிடித்திருக்கிறது. இதன் மூலம் ஒரு தடவை ஷாட் செய்யும் போது அனைத்து ஆங்கில்களும் ஒவ்வொரு கேமரா மூலம் தனி தனியாய் கிடைக்கும் – 3டி கிடைக்கும் அது போக் ஸ்லோமோஷனும் 360 டிகிரியில் ஸ்பெஷல் எஃபக்ட்ஸ் இல்லாமல் கிடைக்க பெறலாம். இது ஷாட் செய்வது மட்டுமில்லாமல் பேன் லெஃப்ட் / பேன் ரைட் / டில்ட் அப் / டில்ட் டவுன் கூட செய்யலாம். இரண்ட…
-
- 0 replies
- 702 views
-
-
செம்சுங் நிறுவனத்தின் கெலக்ஸி எஸ்4 ஸ்மார்ட் போனானது உலகில் வேகமாக விற்பனையாகிய ஸ்மார்ட் போன் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. அந்நிறுவனத்தின் அறிக்கையின் படி வெளியாகி 1 மாத காலப்பகுதியில் 10 மில்லியன் கெலக்ஸி எஸ் ஸ்மார்ட் போன்கள் விற்பனையாகியுள்ளன. செம்சுங் கெலக்ஸி எஸ்4 வின் முன்னைய வெளியீடான எஸ் 3 இதே எண்ணிக்கையை எட்டுவதற்கு 50 நாட்கள் தேவைப்பட்டதாக செம்சுங் தெரிவிக்கின்றது. மேலும் கடந்த வருடம் மே மாதம் வெளியாகிய எஸ் 3 வரை 60 மில்லியனுக்கும் அதிகம் விற்பனையாகியுள்ளதாக செம்சுங் தெரிவிக்கின்றது. http://www.virakesari.lk/article/technology.php?vid=194
-
- 3 replies
- 820 views
-
-
இப்புதிருக்கு தீர்வு கண்டால் 5 கோடி ரூபாய்(1 மில்லியன் டாலர்) பரிசு!!! https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcQyJRGTC9uMrGvol2dM4oQo8DOIMxDKA8ZORLXK4EsFFBeAi4nE6SKJDGQ வணக்கம் நண்பர்களே, அறிவியலில் நிரூபணம் ஐயந்திரிபர அளிக்க இயலும் ஒரே துறை கணிதம் ஆகும்.ஒரு கருதுகோள் அல்லது கூற்று எந்த சூழலில் உண்மையாக இருக்கும் என்பதை அறிவியலில் பரிசோதனை மூலம் உறுதி செய்தாலும்,பரிசோதை கருதுகோளின் அனைத்து அம்சங்களையும் ,பரிசோதனையில் 100% கொண்டு வர முடிந்தது என சொல்ல முடியாது. ஆனால் கணிதத்தில் பல கருதுகோள்கள் பிற கணித [நிரூபிக்கப் பட்ட]தேற்றங்கள்,விதிகள் மூலம் நிரூபணம் அளிக்க இயலும். கணிதம் என்பது ஒரு பெருங்கடல்,அல்லது எல்லையற்ற பிரபஞ்சம் போல் எனலாம். கணிதத…
-
- 0 replies
- 1.2k views
-
-
ஒரு பிள்ளை எந்த அளவுக்கு படிக்கிறது என்பதில் அதனது மரபணுக்கள் மிகவும் குறைவான தாக்கத்தையே ஏற்படுத்துவதாக புதிய ஆய்வு ஒன்று கூறுகின்றது. 5000 குழந்தைகளை மாதிரியாகக் கொண்டு அவர்களது கல்வித் திறமைக்கும் அவர்களது சமூகப் பின்னணிக்கும் இடையில் உள்ள ஒற்றுமையை விஞ்ஞானிகள் ஆராய்ந்தனர். அதன் பின்னர் அவர்களது மரபணுக்கள் எந்த அளவுக்கு அவர்களது கல்வித்திறனில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்றும் அவர்கள் ஆராய்ந்தார்கள். லண்டன் பல்கலைக்கழகத்தின் ஆய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வின் போது, தொழில் ரீதியாக உயர்ந்த அந்தஸ்தில் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் பிந்தங்கிய சமூகங்களைச் சேர்ந்த குழந்தைகளை விட சிறப்பாக படிக்கிறார்களா என்று ஆராயப்பட்டது. 7,9 மற்றும் 11வது வகு…
-
- 3 replies
- 537 views
-
-
மெசேஜிங் மற்றும் அழைப்பு வசதியை வழங்கும் வைபர் அப்ளிகேசனை சவுதி அரேபியா தடைசெய்துள்ளதாக அந்நிறுவனத்தின் தலைவர் டல்மொன் மார்கோ தெரிவித்துள்ளார். எனினும் இத்தடைக்கான காரணம் தொடர்பில் தாம் தெளிவுபடுத்தப்படவில்லையென மார்கோ தெரிவித்துள்ளார். வைபர் உட்பட மெசேஜிங் சேவையை வழங்கும் சில நிறுவனங்கள் தமது தகவல்களை கண்காணிப்பதற்கு அனுமதிக்கவேண்டுமெனவும், அவ்வாறு செய்ய தவறும் பட்சத்தில் அவற்றின் மீது தடை விதிக்கப்படுமென சவுதி அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் எச்சரித்திருந்தது. எனினும் வைபர் இதற்கு இணங்கவில்லையென டல்மொன் மார்கோ குறிப்பிடுகின்றார் . இதன் காரணமாகவே சவுதியில் வைபர் தடை செய்யப்பட்டிருக்கலாம் என அவர் சந்தேகம் தெரிவித்துள்ளார். இதேபோன்ற காரணத்தை முன்வைத்தே சவுதி அரசாங்கம்…
-
- 0 replies
- 711 views
-
-
இணையமே இன்றைய கல்வெட்டு உலகத்தமிழர்களுக்கு வணக்கம், மணவை முஸ்தபா அறிவியல் தமிழ் அறக்கட்டளையின் ஒரு அங்கமான அறிவியல் தமிழ் மன்றம் புதிய விழியம் வெளியிடுவதின் அறிவிப்பு இது. http://www.tamillanguagearchives.blogspot.in/2013/06/archive-mmstf-30-er-1150-minutes.html விழியத்தின் எண்: Archive MMSTF 30 பதிவான அறிஞரின் பெயர் : Er.மா.சதாசிவம் B.E.,M.B.A பதிவின் தலைப்பு: எனது பயணங்களில் தமிழ் அனுபவம் பதிவு உருவான காலம்: 11.50 Minutes; 06062013 Review 1:06062013 Total Points awarded by Dr.Semmal = 4 ஒரு தொழில் அதிபராக தான் மேற்கொண்ட தனது பயணங்களின் பொழுது தமிழர்களின் மரபுகளின் சுவடுகளை கண்டு எவ்வாறு ஈர்க்கப்பட்டார் என்ற செய்தியை பதிவு செய்கிறா…
-
- 0 replies
- 482 views
-
-
விஞ்ஞானிகளை அதிரவைத்த 1000 தசாப்தங்கள் உறையாக் குருதி! ஆர்டிக் சமுத்திரத்தின் புதிய சைபீரிய தீவுப் பகுதியில் பனியில் நன்கு பதப்படுத்தப்பட்ட நிலையில் காணப்பட்ட இராட்சத மெமத் உயிரினத்தின் உடலினை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இவ்வுடல் கண்டுபிடிக்கப்பட்ட பகுதி வடக்கு கரையோர சைபீரியாவின் லியநொவோசிபேர்ஸ்க் ஆர்கிபிலாகோ எனவும் அவ்வேளையில் அப்பகுதியில் வெப்பநிலை -7 முதல் -10 பாகை செல்சியஸ் ஆக இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. தற்போது 10,000 வருடங்கள் பழைமையானதாகக் கருதப்படும் குறித்த விலங்கின் உடலிலிருந்து குருதி மாதிரியை வெற்றிகரமாக ஆராய்ச்சிக்கென பெற்றுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இத்தனை வருடங்கள் குருதி உறையா நிலையில் இருந்தமை அனைவரையும் அதிரவைத்துள்ளது. க…
-
- 0 replies
- 549 views
-
-
போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு தீர்வு கிடைக்கும் வகையில் அமெரிக்க விஞ்ஞானிகள் புதிய பறக்கும் காரை கண்டுபிடித்துள்ளனர். போக்குவரத்து நெரிசலில் எங்காவது கார் சிக்கிக் கொண்டால் அங்கிருந்து செங்குத்தாக மேலெழுந்து பறக்கும் விதமாக இந்தக் கார் வடிவமைத்துள்ளது. ‘டி.எப் – எக்ஸ்’ என்ற இந்த பறக்கும் காரில் நான்கு பேர் பயணம் செய்யலாம். அமெரிக்காவின் பொறியியல் வல்லுநர் குழு வடிவமைத்துள்ள இந்த காரை ஓட்டுவதற்கு விமானிகளைப் போல் உரிமம் பெறவேண்டும் என்ற அவசியமில்லையாம். இந்தக் கார் மேலெழுந்து பறக்கும்போது, 805 கிலோமீற்றர் வேகத்தில் பறக்கக்கூடியதாக இருக்கும். கார் மேலெழுந்தவுடன், அதில் மடங்கியிருக்கும் இறக்கைகள் விரிந்து கார் பறக்க உறுதுணையாக இருக்கும். இதை ஓட்…
-
- 11 replies
- 927 views
-
-
விரைவில் வருகிறது சோலார் பெயின்ட் : சுண்ணாம்பு போல சுவரில் அடிக்கலாம் வீட்டுக்கு வீடு மின்உற்பத்தி நடக்கும் நியூயார்க்-: சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் சோலார் பேனல்களை திரவ வடிவில் உருவாக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை. தரையிலும் சுவரிலும் சோலார் பேனல் பெயின்டை அடித்தால் வீட்டுக்கு வீடு, தரைக்கு தரை, சுவருக்கு சுவர் மின்உற்பத்தி நடக்கும் என்கின்றனர் விஞ்ஞானிகள். உலகம் முழுவதும் சோலார் மின் உற்பத்தி திட்டங்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அனல், நீர்மின் திட்டங்களில் மின்உற்பத்தி குறையும் பகுதிகளில் சோலார் மின் உற்பத்தியில் அரசுகள் கவனம் செலுத்தி வருகின்றன. மக்களும் அரசுகளும் இதில் சற்று தயக்கம் காட்டுவதற்கு காரணம்.. சோலார் பேனல்கள் அமைப்பதற்கு…
-
- 9 replies
- 2.3k views
-
-
சர்வதேச விண்வெளி நிலையம் [international Space Station- ISS] சர்வதேச விண்வெளி நிலையம் ISS: எடையற்ற நிலையில் உயிரினங்கள் எவ்வாறு படிவளர்ச்சியுறுகின்றன [Evolve], நிலவுக்கும், செவ்வாய் போன்ற தூர கிரகங்களுக்கும் மனிதர்களை அனுப்பும் போது நீண்ட காலம் எடையற்ற நிலையில் அவர்கள் இருக்க வேண்டியிருப்பதால், அது என்னவித மாற்றங்களை மனிதனுக்கு ஏற்படுத்துகிறது உள்ளிட்ட பல ஆராய்ச்சிகளை மேற்கொள்ள அமரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய யூனியன், ஜப்பான், கனடா உள்ளிட்ட ஒரு டஜனுக்கும் மேற்ப்பட்ட நாடுகளின் பன்னாட்டு கூட்டு முயற்சியால் 1998 ஆம் ஆண்டு பூமியிலிருந்து 400 கி.மீ. உயரத்தில் நிறுவப் பட்டதே ISS ஆகும். இதன் எடை 450 டன், பரிமாணம் [size]: 108 மீட்டர் நீளம், 73 மீட்டர் அகலம் [கால்பந்து…
-
- 4 replies
- 13.4k views
-
-
ரேடியோ கார்பன் டேட்டிங் அருண் ஏலியபுராணத்தின் முடிவில் செவ்வாய் கிரகம் செல்வதாக இருந்தேன். செவ்வாயினுள் செல்வதற்கு முன் ஒரு ரேடியோ கார்பன் டேட்டிங் போய்வருவோம். இந்த இடைப்பயணத்தை விரும்பாதவர்கள், அடுத்த கட்டுரைக்கு காத்திருங்கள். உங்கள் ஏலியன்ஸ், செவ்வாய் பற்றிய அறிதல் புரிதலுக்கு எந்த பங்கமும் வராது. கார்பன் டேட்டிங். கார்பனால் செய்யப்பட்ட இருவர், அமேரிக்காவில் ரேடியோ வழியே நிச்சயித்து, காரில் வந்து சந்தித்து, ஒரு பீரியாடிக் டேபிளில் எதிரெதிரே உட்கார்ந்து பன் சாப்பிட்டுக்கொண்டே வம்படிக்க ஒதுக்கும் நேரம்தான் இந்த டேட்டிங். பீரியாடிக் டேபிள் என்றால் மூலக்கூறு அட்டவணை. மேற்படி வேடிக்கை விளக்கத்திற்கு ஏற்றவாறு, படத்திலுள்ளபடியும் இருக்கலாம். டேபிள் அமேரிக்காவில்,…
-
- 1 reply
- 4.3k views
-
-
அசத்தப் போகும், NFC ! பழைய கால “சூப்பர் ஸ்டார்” படங்களில் ஒரு காட்சி வரும். ஹீரோ ஸ்டைலாக கையைத் தூக்கி கதவை நோக்கி நீட்டுவார். கதவு திறந்து கொள்ளும். ஞாபகம் இருக்கிறதா ? கைத்தட்டல்களால் திரையே கிழிந்த காலம் அது ! இப்போது அப்படி ஒரு காட்சி வந்தால் நாம் கொட்டாவி தான் விடுவோம். காரணம், நமது அலுவலகங்களிலேயே தானே திறக்கும் கதவுகள் தான் இருக்கின்றன ! சென்சார்கள் கதவைத் திறந்து விடும் செக்யூரிடி வேலையை செவ்வனே செய்து விடுகின்றன ! அதே போல தான் அமானுஷ்ய படங்களில் சட்டென டிவி ஓடுவதும். டேப் ரிக்கார்டர் பாடுவதும் என வெலவெலக்க வைக்கும் டெக்னிக் அதரப் பழசு. யாரும் தொடாமலேயே டிவி ஓடுமா என திகிலடையும் மனசு இப்போ இல்லை. கையடக்க ஒரு குட்டி ரிமோட் கண்ட்ரோல் எல்லா வேலையையும் செய்க…
-
- 3 replies
- 1.6k views
-
-
பூமியின் மையத்தில் வெப்பம் எவ்வளவு? நீங்களும் நானும் திறந்த வெளியில் ஏதோ ஓரிடத்தில் நிற்கிறோம்.அங்கிருந்து வடக்கு நோக்கிப் போய்க் கொண்டே இருந்தால் பனிக்கட்டியால் மூடப்பட்ட வட துருவத்துக்குப் போய்ச் சேருவோம். தெற்கு நோக்கிப் போய்க் கொண்டே இருந்தால் உறைந்த பனிக்கட்டிப் பிரதேசமான தென் துருவத்துக்குப் போய்ச் சேருவோம். மாறாக நாம் நிற்கிற இடத்திலிருந்து பெருச்சாளி பள்ளம் தோண்டுவதைப் போல பள்ளம் தோண்டியபடி பூமியின் மையத்தை நோக்கி நேர் கீழாகப் போவதாக ஒரு பேச்சுக்கு வைத்துக் கொள்வோம். சில கிலோ மீட்டர் ஆழத்துக்கு சென்றாலே வெப்பம் தகிக்கும். அந்த வெப்பத்தில் நாம் வெந்து போய் விடுவோம். உலகில் மிக ஆழமான தங்கச் சுரங்கங்களில் பாறையை வெறும் கையால் தொட்டால் கை புண்ணாக…
-
- 0 replies
- 668 views
-