Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறிவியல் தொழில்நுட்பம்

அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.

அத்துடன் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. நின்ற செம்மல் – ஆங்கிலம் தெரிந்தால் பணக்காரர் ஆகிவிட முடியுமா ? http://storyofsemmal.blogspot.in/2013/07/blog-post_13.html ஆங்கிலம் தெரிந்தால் பணக்காரர் ஆகிவிடமுடியும் என்று நீங்கள் நம்புபவரா ? இந்த விழியத்தை கண்டு தெளியவும் டாக்டர்.மு.செம்மல் பாரிஸ் மாநகரில் தனது நண்பர் திரு.நடேசன் கைலாசம் ஐயா அவர்களுடன் உருவாக்கிய விழியம் இது. “அம்மா” என்ற அழகான தமிழ் சொல்லை விடுத்து “மம்மி” என்று செத்த பிணத்தை அழைக்கும் சொல்லை பயன்படுத்தி தனது பிள்ளைகள் தங்களை அழைக்க வேண்டுமென்று விரும்பும் பெற்றோர்கள் இந்த விழியத்தை கண்டு அறிவு பெறவேண்டும். தமிழர்கள் உலகம் முழுவதும் பரவு வெற்றிவாகை சூடி வாழ்வதற்கு காரணம் அவர்களின் அறிவுத்திறன் மட்டுமே, வெறுமனே ஆங்கிலம் பேசின…

  2. அறிவியல் தமிழ் மன்றம் தனது 232 ஆவது விழியத்தை இன்று வெளியிடுகிறது அகமொழிகள் என்றால் என்ன ? பகுதி - I http://tamillanguagearchives.blogspot.in/2013/08/tamil-language-archives-71.html விளக்கம் அளிக்கிறார், முனைவர். அண்ணா கண்ணன் , நிறுவனர் வல்லமை இணைய இதழ் இதுவரை அறிவியல் தமிழ் மன்ற விழியங்களை 30,701 தமிழர்கள் கண்டுள்ளார்கள் Country-wise viewership data generated as on 13th April,2013 India - 15233 USA - 1636 UAE - 1862 Saudia - 2210 UK - 1064 Canada - 951 Germany - 482 France - 973 Singapore - 967 Malaysia - 1053 Tamil Eelam - 1028 Total of 30,701 views in 95 Countries with 208 Subscribers இப்படிக்கு, , அன்புடனும் அ…

  3. தமிழால் இணைவோம் அணு உலைக்கு மாற்றாக மிதக்கும் சூரிய மின்சக்தி தீவுகளை உருவாக்குகிறது சுவிட்சர்லாந்து ! சுவிஸ் நாட்டில் உள்ள ஏரியில் மூன்று மிதக்கும் சூரிய ஒளித் தீவுகளை உருவாக்கி வருகிறது இரு தனியார் நிறுவனங்கள். இத்தீவுகள் செயற்கையாக உருவாகப்படுபவை. ஒவ்வொரு சூரிய தீவுகளிலும் 100 சூரிய தகடுகள் பொருத்தப்பட்டிருக்கும். ஒவ்வொரு மிதக்கும் தீவும் 25 மீட்டர் குறுக்களவு கொண்டது . இவைகள் சூரிய ஒளியை மின்னாற்றலாக மாற்றும் சோதனைக் கூடமாக செயல்படும் . இதில் உள்ள சூரியத் தகடுகளில் படும் ஒளி அருகில் உள்ள வெந்நீர் தொட்டிக்கு அனுப்பப்படும். அதிலிருந்து உருவாகும் நீராவியை குழாய்கள் வழியாக கரையில் இருக்கும் மின்னுற்பத்தி நிலையத்திற்கு அனுப்பப்படும். அங்குள்ள நீராவியால் இயங்கும் …

  4. சுவாரசியமான சுற்றுச்சூழல் கட்டமைப்பு http://youtu.be/khaYeIpmePo

    • 0 replies
    • 620 views
  5. மோனாலிசா ஒரு விபச்சாரி ‘லியோனார்டோ டா வின்சி’யின் மோனாலிசா ஓவியம் உலகப் புகழ் பெற்றது என்பதை நாம் அறிவோம். ‘டா வின்சி’யின் பெயரை சுலபமாய் நினைவு கொள்ள இவ்வோவியம் பெரிதும் துணை புரிகிறது என்றும் சொல்லலாம். சிறு வயதில் பல இடங்களில் மோனாலிசா ஓவியத்தைக் கண்டிருக்கிறேன். ஒரு முறை தாத்தாவிடம் கேட்டேன். ஏன் பலர் இந்த படத்தை விரும்புகிறார்கள் என்று. அது புகழ் பெற்ற ஓவியம் என்றார். ஏன் புகழ் பெற்றது என்றேன். புகைப்படத்தில் இருக்கும் பெண்ணின் சிரிப்பிற்கு இன்று வரை அர்த்தம் சொல்ல முடியவில்லை. அவள் சிரிப்பு துக்கச் சிரிப்பா அல்லது மகிழ்ச்சியின் சாயலா என நிச்சய படுத்திச் சொல்வது சிரமம் என்றார். அதன் பின் மோனாலிசா ஓவியத்தை எங்கு கண்டாலும் கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தேன். அது ப…

    • 10 replies
    • 2.3k views
  6. குறுகத் தரி இளையா என் பள்ளி நண்பன் ஒருவன் திடீரென்று ஒருநாள் தன் நோட்டில் குறுணை குறுணையாக எழுத ஆரம்பித்தான். அடுத்து, தபால் அட்டையில் திருக்குறள் முழுவதையும் எழுத முயன்றான். பிறகு தாஜ்மஹாலை அரிசியில் கீறினான். சமீபத்தில் சிற்பி ஒருவர் தமிழ்த்தாயின் உருவத்தை வரைய இரண்டு அரிசிகள் எடுத்துக்கொண்டார். அமெரிக்க அதிபர் ஓபாமாவுக்கும் இரண்டு அரிசிகள். மிச்செல்லும், வெள்ளை மாளிகையும் சேர்த்து வேண்டும் என்றால் இன்னும் நான்கைந்து அரிசிகள் தேவைப்படும். குள்ளமான மனிதன், ஒல்லியான இடுப்பு, சின்னஞ்சிறிய நாய்க்குட்டி, மிகச்சிறிய மீன் , 2 வயது குழந்தையைப் போல சாலையில் ஓடும் நானோ கார் என மனிதன் அடையும் மைக்ரோ ஆச்சரியங்களுக்கு அளவே இல்லை. அரிசியில் சோற்றுக்குப் பதிலாக கலையை வடிப்பத…

  7. இயற்கையில் மனித ஆணுக்கு மட்டுமல்ல.. ஒவ்வொரு உயிரினத்திலும் ஆண்களின் கதை தனிக்கதையாகத் தான் உள்ளது. இவ்வாண்டு இலைதளிர் காலத்தில் (வசந்த காலத்தில் ) நிலவிய அசாதாரண குளிர் காலநிலையால்.. பிரிட்டனில் குளவிகளின் எண்ணிக்கை குறைந்து போயுள்ள கவலை ஒரு புறம் இருக்க.. இந்தக் குளவிகளின் வாழ்க்கை வட்டத்தில்.. இராணி குளவிகள் வேறு சமூக ஆண் குளவிகளுடன் இனக் கலப்புச் செய்த பின் குளிர் காலநிலை வந்ததும் ஆண் குளவிகள் செத்துமடிய இடமளிக்கின்ற நடத்தையியல் என்பது.. ஆச்சரியமடையவும் வைக்கிறது. ஆண்கள் குளிருக்கு இறந்து போக..பெண் இராணிக்கள் மட்டும்.. தாம்..கூடி கட்டி அதற்குள் ஒளித்துக் கொள்கின்றன.. அடுத்த தவணைக்கு குளவிகளை உருவாக்க..! இதில் ஆண்களின் இந்த இறப்பை.. தியாகம் என்பதா.. சாபம் எ…

  8. பூமியின், துருவங்களில் ஏற்படும் மாறுபாட்டால், ஒரு நாளுக்கான நேரம், ஆறு ஆண்டுகளுக்கு ஒரு முறை, அதிகரித்து வருவதாக, பிரிட்டன் ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர். பிரிட்டனின், லிவர்பூல் பல்கலைக்கழ கத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள், பூமியின் துருவங்களில் ஏற்படும் நிகழ்வுகள் மற்றும் அதனால் ஏற்படும் மாற்றங்கள் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு உள்ளனர். 1962 முதல், 2010 வரை ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில், பல புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி, ஆறு ஆண்டு களுக்கு ஒரு முறை, பூமியின் ஒரு நாளுக்கான நேரம் அதிகரித்து வருவ தாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: பூமி, அதன் சுற்றுப் பாதையில் சுற்றி வரும் போது, தன்னைத் தானே சுற்றுவது வ…

  9. மிக நீண்ட காலமாகவே பேர்முடா அருகில் நூற்றுக் கணக்கான விமானங்களும் கப்பல்களும் காணாமல் போய்க் கொண்டிருந்தன.இவற்றுக்கு என்ன தான் நடக்கின்றது என்பதை அறிவதற்காக போனவர்களும் காணாமலேயே போய்விட்டார்கள்.கப்பலில் வேலை செய்த காலங்களில் இதைப் பற்றி அறிந்திருந்தேன்.ஆனால் விபரமாக அறியக் கூடிய பொறுமையில்லாத வயதால் செய்தியை மாத்திரம் உள்வாங்கி வைத்திருந்தேன். அண்மையில் இதைப் பற்றி தொலைக்காட்சியில் காட்டிய போது தான் எத்தனையோ பேருக்கு இப்படி ஒரு சமபவம் நடந்ததே தெரியாமல் இருக்கலாம் அல்லது தெரிந்தும் என்னைப் போல் விபரம் தெரியாமல் இருக்கலாம் என்ற எண்ணத்தில் உங்களின் பார்வைக்கு கொண்டுவருகிறேன்.இவை பற்றி மேலதிக விபரங்கள் தெரிந்தவர்கள் விபரமாக எழுதுங்கள். இவை சாதாரணமானவர்களுக்கு மட்டும…

  10. நாசாவை அதிர வைத்த இந்து நெறியின் பேருண்மை! " இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு, ராணுவ பயன்பாடு, உளவு என பல்வேறு காரங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. சில வருடங்களுக்கு முன்பு அமெரிக்க செயற்கைகோள் ஒன்று பூமியின் குறிப்பிட்ட பகுதியை கடக்கும் பொது மட்டும் 3 வினாடிகள் ஸ்தம்பித்துவிடுகிறது. 3 வினாடிகளுக்கு பிறகு வழக்கம்போல் வானில் பறக்க ஆரம்பித்து விடுகிறது. எந்தவித பழுதும் அதன் செயற்கைகோளில், அதன் கருவிகளில்ஏற்படுவதில்லை. இந்த சம்பவம் நாசாவிற்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியதயை அளித்தது. இது எப்படி சாத்தியம்??? - என்பதை ஆராய்ந்து, கிடைத்த முடிவு நாசாவை மட்டுமல்ல, உலகையே மிரள வைத்தது. ஆம்! எந்த ஒரு செயற்கைகோளு…

  11. குழந்தை கடவுளின் கிருபை என்று கூறித் திரிந்த காலம் மலையேறிவிட்டது. இப்போ குழந்தைகளை நாம் விரும்பும் வடிவில் சோதனைக் குழாய்களில் அல்லது தட்டுக்களில் உருவாக்கிவிட முடியும். இந்த முறைக்கு சுருக்கமாக IVF (விரிவாக.. In vitro fertilisation) என்று பெயரிட்டுள்ளனர். இந்த ஐ வி எவ்(F) முறையில் பெண்ணின் ஒரு தனி முட்டையை ஆணின் விந்துக் கலத்துடன் கருக்கட்ட வைத்து அதனை தாயின் கருப்பையுள் செலுத்திவிட முடியாது. மாறாக பல முளையங்கள் உருவாக்கப்பட்டு அதில் சூழலை வென்று குழந்தையாக வளரக் கூடியவற்றை தேர்வு செய்து கருப்பையுள் புதைத்து விடுகின்றனர். உருவாக்கப்படும் முளையங்களில் ஐந்தில் ஒன்றுக்கே இந்த வாய்ப்புக் கிட்டுகிறது. இதன் போது பல முளையங்கள் கருப்பையில் தரித்து Multiple pregnancy அதாவது …

  12. செவ்வாயில் அமெரிக்க நாசாவின் அடுத்த ரோவர் 2020 இல் தரையிறங்க உள்ளதாகவும் அது அங்கு வாழ்ந்த உயிரினங்களின் உயிரினச் சுவடுகளைக் கண்டறியும் நோக்கில் உபகரணங்களோடு வடிவமைப்பட்டு அனுப்பப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. ஆனாலும் அது இன்று அங்கு உயிரினங்கள் வாழ்கின்றனவா என்பது பற்றிய ஆய்வைச் செய்யாது என்றும் தெரிகிறது. மேலதிக செய்திகள் மற்றும் முதல் பதிவுக்கான இணைப்பு.. முதல் பதிவு ஜுலை 2003. மேலதிக செய்தி. http://kuruvikal.blogspot.co.uk/

  13. கடந்த பெப்ரவரி மாதம் பூமியை அச்சுறுத்திய இராட்சத எரிகல் ஒன்று பூமியை மிக அருகில் கடந்து சென்றது. இதன் அதிர்ச்சி அலைகளால் ரஷ்யாவில் 1000 பேர் படுகாயமடைந்தனர். மின்சார வழங்கல் நின்று போனது. பல கட்டிடங்களின் ஜன்னல்கள் உடைந்து சிதறியது. அதைப்பற்றி மேலும் ஆராய்ச்சி செய்தபோது அந்த இராட்சத எரிகல்லினால் ஏற்பட்ட அதிர்ச்சி அலைகள் இரண்டு முறை பூமியை சுற்றிவந்துதான் பிறகு மறைந்துள்ளது என்ற அதிர்ச்சி தரும் தகவலை விஞ்ஞானிகள் நேற்று வெளியிட்டுள்ளனர். அணுகுண்டு சோதனை செய்தால் அதன் விளைவுகளைத் துல்லியமாக கண்டறியும் சென்சார்கள் உள்ளது. அந்த சென்சார்களைக் கொண்டு இது கண்டறியப்பட்டது என்றும், இந்த வலைப்பின்னலில் பதிவான மிகவும் சக்திவாய்ந்த நிகழ்வு இது என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். …

  14. ஐன்ஸ்டினின் கடவுள் பற்றிய கடிதம் வணக்கம் நண்பர்களே, சென்றிடுவீர் எட்டுத் திக்கும் -கலைச் செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்! என்னும் மகாகவியாரின் சொற்களை உண்மையாக்க எங்கும் செல்லாமல் இணையத்தில் மட்டுமே எட்டுத் திக்கும் தேடினால் போதும் என்று சூழலில் வாழ்கிறோம். எனினும் இணையத்திலும் தமிழ் மொழிக்கு பிற நாட்டு நல்லறிஞர் சா(சூ)த்திரங்கள் தமிழாக்கம் செய்து அளிப்பது தமிழர்களின் கடமை.அப்போது மட்டுமே தமிழில் தேடும் தமிழர்களுக்கு பயன் தரும். அந்த வகையில் அறிவியலாளர் திரு ஐன்ஸ்டின் அய்யா அவர்களின் ஒரு கடிதம் 4 மில்லியன் டாலருக்கு ஏலம் போனது என்ற செய்தியைப் படித்தவுடம் அக்கடிதத்தில் என்ன உள்ளது ,அத்னை தமிழாக்கம் செய்து நம் சொந்தங்களுடன் பகிர்ந்தால் என்ன என தோன்றி…

    • 0 replies
    • 920 views
  15. இயற்கை முறை கருத்தரிப்பிலும், செயற்கை முறை க்ருத்தரிப்பிலும், ஒரு ஆணின் விந்தும், ஒரு பெண்ணின் முட்டையும் சேர்ந்தே கருத்தரித்து குழந்தை உருவாகிறது. மனித கலங்களுக்கு உடலுக்கு சக்தியை வழஙகும் இழைமணி (mitochondria) தாயின் கருவில் இருந்து குழந்தைக்கு கிடைக்கிறது. இந்த இழைமணியில் இருக்கும் DNA யில் குறைபாடு இருந்தால் அதை கொண்டிருக்கும் குழந்தை களுக்கு muscular dystrophy (தமிழ்?), epilepsy (காக்காய் வலிப்பு) and heart problems (இதய நோய்கள்) என்பன வரும் சாத்தியம் அதிகமாகும். உலகில் 1/6500 குழந்தை இவ்வாறு பிறக்கிறது. இதை தவிர்க்க இழைமணி DNA யில் குறைபாடு இருக்கும் தாயின் கரு முட்டையில் இருந்து குறைபாடு உடைய இழைமணி யை நீக்கி விட்டு , குறைபாடு அற்ற பெண்ணின் முட்டையில் இருந்து…

  16. அண்டவெளியில் தேள் விண்மீன் தொகுப்பில் (constellation of Scorpius) ஒரு நட்சத்திரத்தை மூன்று கிரகங்கள் சுற்றி வந்து கொண்டிருக்கின்றன. இந்த மூன்று கிரகங்களிலும் நமது பூமியைப் போலவே உயிர்கள் வாழ்வதற்கேற்ற சூழல் நிலவலாம் என்று கருதப்படுகிறது. க்ளீஸே என்றொரு நட்சத்திரம்... நமது பூமியிலிருந்து 22 ஒளி வருட தூரத்தில் உள்ளது Gliese 667C என்ற நட்சத்திரம் (இதை இன்னொரு சூரியன் என்றும் சொல்லாம்). இந்த நட்சத்திரத்தை பல ஆண்டுகளாகவே விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இந் நிலையில் இந்த நட்சத்திரத்தை 6 கோள்கள் சுற்றி வருவது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. அதில் 3 கோள்கள் நட்சத்திரத்தில் இருந்து உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற சரியான தூரத்தில் சுற்றி வருவது தெரியவந்துள்ளது. அதாவது நமது பூமி…

  17. ஓடும் ரயில் வண்டியில் ஒரு காட்சி. உட்கார்ந்த நிலையில் உறங்கும் வெள்ளைச் சட்டைக்காரார் தமக்கு அருகே அமர்ந்தபடி உறங்கும் பெரிய மீசைக்காரர் மீது தம்மையும் அறியாமல் மெல்லச் சாய்கிறார். மேலும் மேலும் சாய ஆரம்பிக்கிறார். ஒரு கட்டத்தில் எடையைத் தாங்க முடியாமல் மீசைக்காரர் உடலை உலுக்கியபடி விழித்துக் கொள்கிறார். வெள்ளைச் சட்டைக்காரகும் விழித்துக் கொண்டு சுதாரித்துக் கொள்கிறார். பூகம்பம் கிட்டத்தட்ட இப்படித் தான் ஏற்படுகிறது. ஒரு சில்லு அடுத்த சில்லை மேலும் மேலும் நெருக்குகிறது. அடுத்த சில்லு ஒரு கட்டம் வரை இதைத் தாங்கிக் கொண்டே இருக்கிறது. நெருக்குதல் ஒரு கட்டத்தை எட்டும் போது சில்லுக்கு அடியில் உள்ள பாறைப் பாளம் பெரிய உலுக்கலுடன் நகருகிறது. அதுவே பூகம்பம். இம…

  18. அமெரிக்கா சொன்ன நீல் ஆம்ஸ்ட்ராங் தான் முதலில் நிலவில் கால் வைத்தார் என்று சொன்ன பொய் கதை தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. உலக பயங்கரவாதி அமெரிக்காவின் பொய் புரட்டல்களை நம்ம சகோதரர்களும் படித்து பயன்பெற்று தெரிந்து கொள்ளட்டும் எப்படி எல்லாம் நம்ப வைத்து இருக்கிறார்கள் உலகிலேயே முதன் முதல் சந்திரனைப் பற்றி ஆராய்ச்சி செய்தவர்கள் சோவியத் யூனியன் தான். 1930 - ஆம் ஆண்டிலிருந்தே அவர்கள் இந்த ஆராய்ச்சியை தொடங்கி இருக்கிறார்கள். அதேப்போல், நிலாவிற்கு விண்களம் அனுப்பியவர்களும் இவர்களே. இருபதுக்கும் மேற்பட்ட ஆளில்லா விண்களங்களை நிலாவிற்கு அனுப்பியிருக்கிறார்கள். இப்படியாக நிலாவை நோக்கிய இந்த விண்களப் பயணமும், நிலாவைப் பற்றிய ஆராய்ச்சியும் வெற்றிகரமானதாக அமைந்தவுடன், 1957 - ஆம் ஆண…

  19. திமிங்கலம் போன்ற கடல்வாழ் பாலூட்டி விலங்குகள் நீருக்கடியியில் ஒரு மணி நேரம் வரை மூச்சை அடக்கிக்கொள்ள முடியும் அளவுக்கு அவை தமது உடலில் பிராணவாயுவை எவ்வாறு சேமிக்கின்றன என்று கண்டுபிடித்துவிட்டதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். சுற்றாடலுக்கு ஏற்ப பிராணிகளில் உடலில் மாற்றங்களை ஏற்படுத்தும் பரிணாம வளர்ச்சியின் சிறப்பான உதாரணமாக கடல்வாழ் பாலூட்டி விலங்குகள் சுவாசிக்காமல் ஒரு மணி நேரம் வரையில் நீருக்கடியில் இருப்பது கருதப்படுகிறது. இவ்வகையான பிராணிகளின் உடலில் உள்ள மயோகுளோபின் என்ற புரதத்தை விஞ்ஞானிகள் ஆராய்ந்தனர். இவ்விலங்குகளின் தசைகளில் காணப்படும் இந்த புரதம், பிராணவாயுவை சேமித்துவைக்கவல்லது. திமிங்கலங்கள், சீல்கள் போன்ற பிராணிகளில் உள்ள மயோகுளோபின்கள் 'ஒட்டாமல் விலகிற்கும…

  20. ஓசோன் குறைபாடு ஓசோன் குறைபாடு இரண்டு வேறுபட்ட ஆனால் தொடர்புடைய குறிப்புரைகளைக் கொண்டது:ஓசோனின் மொத்த அளவு, புவியின் அடுக்கு மண்டலத்தில் 4% ஒவ்வொரு பத்தாண்டு கால அளவில் குறைகிறது.இந்த குறைபாடு மெதுவானதாகவும் தெளிவானதாகவும் இருக்கிறது. 1970 களின் பிற்பகுதியில் புவியின் துருவ பகுதிகளின் மீதுள்ள அடுக்கு மண்டலத்தில் ஓசோன் அளவும் பெருமளவில் மற்றும் ஒவ்வொரு பருவ காலத்திற்கு ஏற்பவும் குறையத்தொடங்கியது.இந்த நிலைஓசோன் துளை என்று அழைக்கப்படுகிறது. அடுக்கு மண்டல ஓசோன் குறைபாடுடன், அடிவளி மண்டல ஓசோன் குறைபாடு நிகழ்வுகளும், துருவ பகுதிகளின் மேற்பரப்பில், வசந்த காலத்தின் போது நடைபெறுகின்றன. துருவ பகுதிகளில் ஓசோன் துளைகள் ஏற்படுவதுக்கும் புவியின் மத்திய பகுதியில் ஏற்படுவதுக்கும் வி…

    • 0 replies
    • 650 views
  21. மரபுகுணம் தாய் தந்தையரிடம் இருந்து குழந்தைக்குப் போகிறது என்பதை ஓரளவுக்கு புரிந்துகொண்டாலும், அது எப்படி, அது எந்த மூலக்குறுமூலம் செல்கிறது (டி என் எ அல்லது ப்ரோட்டீன்) என்பது சரியாக விளங்காத காலம், அது. அந்த கால கட்டத்தில் ஃப்ரெட்ரிக் கிரிஃபித் னு ஒரு ஆராய்ச்சியாளர்.நிம்மோனியா என்கிற வியாதியை உருவாக்கும் பாக்டீரியா பத்தி ஆராய்ச்சி செய்துகொண்டு இருந்தாராம். அப்போ அவரிடம் ரெண்டு விதமான நிம்மோனியா உருவாக்கும் பாக்டிரியா இருந்ததாம். அது ரெண்டும் எப்படி வேறுபடுதுனு பார்ப்போம்.. நிம்மோனியா-பாக்டீரியல் ஸ்ட்ரைன் ஒண்ணு: இந்த பாக்டீரியல் ஸ்ட்ரைனை மைக்ராஸ்கோப் மூலம் பார்த்தால், இது கொஞ்சம் கரடு முரடாத் தெரியுமாம். He called this as ROUGH STRAIN. கரடுமுரடா இருந்தாலும், இந…

  22. நீங்கள் இதுவரை புளூடூத் (Bluetooth) தொழிநுட்பம் மூலம் இயங்கும் செயற்கைக் கரப்பான் பூச்சிகளைப் பயன்படுத்தி அவற்றின் மூளை செயற்பாடு, தழுவல் ஆகியவற்றைக் கற்கும் முறை குறித்துக் கேள்விப் பட்டுள்ளீர்களா? நிச்சயம் இருக்காது. ஏனெனில் அத் தொழிநுட்பம் இன்னமும் முழுமையாகத் தயாராகவில்லை. எனினும் Backyard Brains எனும் நரம்பியல் கல்வி மற்றும் ஆராய்ச்சித் திணைக்களம் முதன் முறையாக வர்த்தக ரீதியில் கிடைக்கப் பெறும் முதல் செயற்கை பூச்சி உணர் கருவியினை Kickstarter நிறுவனம் மூலம் அறிமுகப் படுத்தி உலகம் முழுதும் இணைய வாயிலாகப் பெரும் வரவேற்பினைப் பெற்றுள்ளது. பல்கலைக் கழகத்தில் ஆரம்பப் பாடத்திட்டத்தில் நரம்பியல் குறித்த கல்வியினைக் கற்பதற்கு உதவியாக பூச்சிகளுக்கு (கரப்பான் பூச்சி உட்பட…

  23. கேமராக்களின் வளர்ச்சி எவ்வளவு எட்டியிருந்தாலும், ஒவ்வொரு டெக்னாலஜிக்கும் தனி தனி கேமராதான் பயன்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு கேமராவும் ஒவ்வொரு ஃபார்மட் என்பதால் கடைசியில் அனைத்தையும் ஒருங்கிணைக்கும் போது ரிசல்ட் வேறுபடும். இதை எல்லாம் கருத்தில் கொண்டு என் ஹெச் கே என்னும் ஜப்பான் நிறுவனம் 8 கேமராவை ஒரு கன்ட்ரோலில் இயங்க வைக்கும் ரோபாட்டிக் கேமராவை கண்டுபிடித்திருக்கிறது. இதன் மூலம் ஒரு தடவை ஷாட் செய்யும் போது அனைத்து ஆங்கில்களும் ஒவ்வொரு கேமரா மூலம் தனி தனியாய் கிடைக்கும் – 3டி கிடைக்கும் அது போக் ஸ்லோமோஷனும் 360 டிகிரியில் ஸ்பெஷல் எஃபக்ட்ஸ் இல்லாமல் கிடைக்க பெறலாம். இது ஷாட் செய்வது மட்டுமில்லாமல் பேன் லெஃப்ட் / பேன் ரைட் / டில்ட் அப் / டில்ட் டவுன் கூட செய்யலாம். இரண்ட…

    • 0 replies
    • 702 views
  24. செம்சுங் நிறுவனத்தின் கெலக்ஸி எஸ்4 ஸ்மார்ட் போனானது உலகில் வேகமாக விற்பனையாகிய ஸ்மார்ட் போன் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. அந்நிறுவனத்தின் அறிக்கையின் படி வெளியாகி 1 மாத காலப்பகுதியில் 10 மில்லியன் கெலக்ஸி எஸ் ஸ்மார்ட் போன்கள் விற்பனையாகியுள்ளன. செம்சுங் கெலக்ஸி எஸ்4 வின் முன்னைய வெளியீடான எஸ் 3 இதே எண்ணிக்கையை எட்டுவதற்கு 50 நாட்கள் தேவைப்பட்டதாக செம்சுங் தெரிவிக்கின்றது. மேலும் கடந்த வருடம் மே மாதம் வெளியாகிய எஸ் 3 வரை 60 மில்லியனுக்கும் அதிகம் விற்பனையாகியுள்ளதாக செம்சுங் தெரிவிக்கின்றது. http://www.virakesari.lk/article/technology.php?vid=194

    • 3 replies
    • 821 views
  25. இப்புதிருக்கு தீர்வு கண்டால் 5 கோடி ரூபாய்(1 மில்லியன் டாலர்) பரிசு!!! https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcQyJRGTC9uMrGvol2dM4oQo8DOIMxDKA8ZORLXK4EsFFBeAi4nE6SKJDGQ வணக்கம் நண்பர்களே, அறிவியலில் நிரூபணம் ஐயந்திரிபர அளிக்க இயலும் ஒரே துறை கணிதம் ஆகும்.ஒரு கருதுகோள் அல்லது கூற்று எந்த சூழலில் உண்மையாக இருக்கும் என்பதை அறிவியலில் பரிசோதனை மூலம் உறுதி செய்தாலும்,பரிசோதை கருதுகோளின் அனைத்து அம்சங்களையும் ,பரிசோதனையில் 100% கொண்டு வர முடிந்தது என சொல்ல முடியாது. ஆனால் கணிதத்தில் பல கருதுகோள்கள் பிற கணித [நிரூபிக்கப் பட்ட]தேற்றங்கள்,விதிகள் மூலம் நிரூபணம் அளிக்க இயலும். கணிதம் என்பது ஒரு பெருங்கடல்,அல்லது எல்லையற்ற பிரபஞ்சம் போல் எனலாம். கணிதத…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.