Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. முட்டையிடும் விசித்திர சிறுவன் : குழப்பத்தில் வைத்தியர்கள்!!! கோழி முட்டை இடுவது வழக்கமானது ஆனால் இந்தோனேஷியாவில் சிறுவன் ஒருவர் இரண்டு ஆண்டுகளாக முட்டை இட்டு வரும் வினோத சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேஷியாவில் கோவா பகுதியை சேர்ந்த 14 வயதான அக்மல் கடந்த இரண்டு ஆண்டுகளாக முட்டை இடுவதாக கூறி பெற்றோர் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். சிறுவனை பரிசோதித்த வைத்தியர்கள் மனிதனின் உடலில் முட்டை இருப்பதற்கான வாய்ப்புகள் இல்லை இருப்பினும் இந்த நிகழ்வு குறித்து தெளிவான புரிதல் இல்லாமல் என்ன சிகிச்சை அளிப்பது என்ற குழப்பத்தில் உள்ளனர். இது குறித்து சிறுவனது தந்தை, "அக்மல் 2 ஆண்டுகளாக முட்டை இடுகிறா…

  2. 39 திருமணம்:103 குழந்தைகள்:232 பேர குழந்தைகள் : 2,700 ஆண்டுகளுக்கு வாழ்வேன் என கூறும் விசித்திர நபர். கென்யாவில் வாழும் நபர் ஒருவர் 39 பெண்களை திருமணம் செய்து கொண்டு 103 குழந்தைகளுக்கு தந்தையாகியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. நண்டோலியா கிராமத்தை சேர்ந்த 68 வயதான நபர் தன்னை பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த தீர்க்கதரிசி ஜானின் அவதாரம் என கூறி கொண்டு இதுவரை 39 பெண்களை திருமணம் செய்து கொண்ட நிலையில் 103 பிள்ளைகளுக்கு தந்தையாகியுள்ளார். மேலும் குறித்த நபருக்கு 232 பேர குழந்தைகளும் உள்ளனர். குறித்த நபரின் மூன்று மனைவிகள் உயிரிழந்து விட்டனர். சிறுவயதிலிருந்து மாமிசம் சாப்பிடாத இவர் ஒருமுறை கூட மு…

    • 3 replies
    • 310 views
  3. ஆன்மீக ஆலோசனை வழங்கிய பெண்ணை 3ஆவது முறையாக திருமணம் முடித்தார் இம்ரான் கான் முன்னாள் கிரிக்கெட் வீரர் மற்றும் பாகிஸ்தான் "தெஹ்ரீக் ஈ இன்சாப்" கட்சி தலைவரான இம்ரான் கான் 3ஆவது முறையாக திருமணம் செய்து கொண்டார். அணியின் கப்டனாக இம்ரான் கான் இருந்த போது கடந்த 1992ஆம் ஆண்டு உலக கிண்ணத்தை பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தன் வசப்படுத்திக் கொண்டது. கிரிக்கெட்டில் இருந்து விலகிய பின் பாகிஸ்தான் "தெஹ்ரீக் ஈ இன்சாப்" என்ற தனி கட்சியை தொடங்கி வழிநடத்தி வருகிறார் கான். இங்கிலாந்து நாட்டு கோடீஸ்வரரின் மகளான ஜெமிமா கோல்ட்ஸ்மித் மற்றும் இம்ரான் கான் திருமணம் 1995ஆம் ஆண்டு நடைபெற்றது. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். 9 வருட திருமண வாழ்க்கைக…

  4. சமூக வலைதளங்களில் வைரலாகும் ராஜபக்ச மகனின் தமிழ் பாடல் இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் மகன் ரோகித ராஜபக்ச பாடி நடித்து வெளியிட்டுள்ள தமிழ் பாடல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச-சிராந்தி ராஜபக்ச தம்பதிக்கு மூன்று மகன்கள் உள்ளனர். முதல் மகன் நமல் ராஜகபக்ச நாடாளுமன்ற உறுப்பினர். இரண்டாவது மகன் யோசிதா ராஜபக்ச முன்னாள் கடற்படை அதிகாரி. இவர்கள் இருவர் மீதும் ஊழல், கொலை, பாலியல் பலாத்காரம் போன்ற குற்றச்சாட்டுக்கள் உள்ளன. மூன்றாவது மகனான ரோகித ராஜபக்ச இசை ஆல்பங்களை வெளியிடுவதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். ரோகித ராஜபக்ச பாடிய ‘மங…

  5. 20 நாட்கள் மலம் கழிக்காத இவருக்கு என்னவானது தெரியுமா? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES போதை மாத்திரைகளை விழுங்கியதாக இங்கிலாந்தின் எசெக்ஸ் நகர போலீசாரால் சந்தேகிக்கப்பட்டு கைதுசெய்யப்பட்டுள்ள நபர் ஒருவர் இருபது நாட்களாகியும் மலம் கழிப்பதற்கு மறுப்புத் தெரிவித்து வருகிறார். மலம் கழிப்பதற்கு மறுப்புத் தெரிவித்து இவர் தொடங்கிய போராட்…

  6. சினிமா போல் அரங்கேறிய உண்மைச்சம்பவம் (வீடியோ இணைப்பு) கல் தோன்றி மண் தோன்றா தொண்மையான காதல் தான் மனிதத்தோடு மனிதனை இன்னும் வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. காவியக் காதல், கற்பனைக் காதல், ஒருதலைக் காதல், நல்லக் காதல் இப்படி எத்தனை வகைப் படுத்தினாலும் காதல் காதல் தான் இனம், மதம், மொழி, வயது, பால், அந்தஸ்த்து, குளம், சாதி, அழகு, நிறம் போன்ற எந்த வரையறை வகைப்பாட்டிற்கும் உட்படாமல் மனிதனை மனதால் இனைக்கும் வல்லமை காதலுக்கு மட்டுமே இருக்கிறது. இப்போதெல்லாம் கண்டதும் காதல் கொண்டதும் கோலம் இந்தக் காலத்தில் உண்மைக்காதல் இல்லை என்ற விமர்சனத்திற்கு உட்படுத்தப்படும் காதல் மீண்டும் ஒரு சம்பவத்தின் மூலம் காதல் எப்போதும் காதல் தான் என நிரூபி…

  7. முகநூலில் சில படங்கள் நடைபெற்ற உள்ளுராட்சி தேர்தலில் திருப்பங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் பேஸ்புக்கில் பல அர்த்தங்கள் கூறும் படங்கள் உலாவுகின்றன. அவற்றிலிருந்து சில...! http://www.jaffnamuslim.com

  8. நாகபட்டினம்: மயூரநாதர் கோயிலில்... அம்மனுக்கு, சுடிதார் அணிவித்த விவகாரத்தில் 2 குருக்கள் பணிநீக்கம். - Polimer News.-

  9. பெண்களின் உள்ளாடைகளை திருடிச்செல்லும் பிக்கு (காணொளி இணைப்பு) தாய்லாந்தை சேர்ந்த புத்த துறவி ஒருவர் பெண்களின் உள்ளாடைகளை திருடி செல்வது சி.சி.டீவி கமெராவில் பதிவாகி பரபரப்பையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தாய்லாந்த் Suphaburi பகுதியில் வசித்து வருபவரின் வீட்டில் பெண்களின் உள்ளாடைகள் தொடர்ந்து காணாமல் போயுள்ளது. இதனால் இதனை திருடுவது யார்? என்பதை கண்டுபிடிக்க துணிகளை காயப்போடும் இடத்தில் சி.சி.டீவி கமெரா பொறுத்தியுள்ளனர். பதிவான சி.சி.டீவி காட்சியில் புத்த துறவி ஒருவர் உள்ளாடைகளை திருடி செல்வதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். அந்த துறவியின…

    • 5 replies
    • 391 views
  10. திருமணத்தை தொகுத்து வழங்கிய பாகிஸ்தானிய ஊடகவியலாளர் மணமகன்!!! பாகிஸ்தானைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவர் தனது கல்யாண நிகழ்ச்சியை நேரலையாக தொகுத்து வழங்கிய வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பாகிஸ்தானைச் சேர்ந்த ஹனன் புஹாரி என்பவர் தனியார் தொலைக்காட்சியில் செய்தியாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த வாரம் திருமணம் நடந்தது. மிகப்பெரிய அளவில் நடைபெற்ற அவரது திருமணமானது தொலைக்காட்சியில் நேரலை செய்யப்பட்டது. இதில் வித்தியாசமான செய்தி என்னவென்றால் புஹாரி தனது திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விருந்தினர்களை பேச வைத்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அவர் தனது மனைவி மற்றும் உறவினர்களிடம் பேட்டி எடுத்தார். இந்த…

    • 2 replies
    • 271 views
  11. பசுக்களுக்கு ஆதார் அட்டை மத்திய அரசு முடிவு - புகைப்படம், ரேகை ஸ்கேனிங் எல்லாம் உண்டாம்...! டெல்லி: முதல்கட்டமாக 50 கோடி செலவில் 4 கோடி பசுக்களுக்கு ஆதார் போன்ற அடையாள அட்டை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நாட்டில் ஆதார் அடையாள அட்டை வழங்கப்பட்டு, அரசின் நலத்திட்டங்களுக்கு ஆதார் அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இவ்விவகாரம் தொடர்பான பல்வேறு வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்தியாவில் பெரும்பாலும் பாரதிய ஜனதா ஆட்சி செய்யும் மாநிலங்களில் பசு பாதுகாப்பு என்ற பெயரில் வன்முறைகளும், அதனால் உயிரிழப்புகளும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெருமளவு ஏற்பட்டது. பசு கடத்தல் காரர்கள், இறைச்சிக்காக கொண்டு செல்கின்றனர் என பசுவின் உரிமையாளர்கள் …

  12. வடகிழக்கு ஆப்பிரிக்க நாடான எரித்திரியாவில் ஆண்கள் இரண்டாவது திருமணம் செய்யாவிட்டால் சிறைதண்டனை விதிக்கும் புதிய சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. எரித்திரியா ஒரு வடகிழக்கு ஆப்பிரிக்க நாடாகும். இது செங்கடலை ஒட்டி அமைந்துள்ளது. அந்நாட்டில் அடிக்கடி போர் நடந்து வருகிறது. இப்போர்களில் ஆண்கள் பலர் மடிந்து வருகின்றனர். எனவே அந்நாட்டில் ஆண்களின் சதவிகிதத்தை விட பெண்களின் சதவிகிதம் குறைந்து கொண்டே வருகின்றது இதனை சரிக்கட்ட அந்நாட்டில் ஒரு புதிய சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது, அதன்படி அந்நாட்டை சேர்ந்த ஆண்கள் இரண்டாவது கண்டுப்பாக இரண்டு திருமணம் செய்ய வேண்டும். இரண்டு திருமணம் செய்ய ஆண்கள் மறுத்தாலோ, கணவர் இரண்டாவது திருமணம் செய்ய முதல் மனைவி மறுத்தாலோ அவர்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்…

  13. தேர்த்திருவிழாவில் வியப்பை ஏற்படுத்திய பௌத்த துறவி கொழும்பு - 12, ஆமர்வீதியில் உள்ள ஸ்ரீ மகாகாளியம்மன் ஆலயத்தில் இன்று தேர்த்திருவிழா இடம்பெற்றுள்ளது. இதன்போது பக்தர்கள் வடம் இழுக்க தேர் வீதிவலம் வந்துள்ளது. இந்த நிலையில் பௌத்த துறவியொருவரின் செயற்பாடு அங்கிருந்த இந்துக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அலங்கரிக்கப்பட்ட அம்மன் வீற்றிருந்த தேர் வடத்தினை இந்துக்கள் இழுத்த பொழுது குறித்த பௌத்த துறவியும் வடம் இழுத்துள்ளார். இதன்பொழுது தேர்த்திருவிழாவிற்கு பெருந்திரளான பக்தர்கள் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilwin.com/special/01/172595?ref…

  14. விசில் அடித்தால் 350 யூரோ அபாரதம்!!! பிரான்ஸ் நாட்டில் கடந்த சில மாதங்களாக பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றமையால் பிரான்ஸ் அரசு புதிய சட்டம் ஒன்றை இயற்ற முடிவு செய்துள்ளது. குறிப்பாக இளம்பெண்களிடம் விரும்பத்தகாத வகையில் காதலை கூறுவதாக முறைப்பாடுகள் குவிந்து கொண்டிருப்பதால் இதற்கு முடிவு கட்டவே பிரான்ஸ் அரசு புதிய சட்டம் ஒன்றை இயற்ற முடிவு செய்துள்ளது. இதன்படி பெண்களை பார்த்து விசில் அடித்தாலோ, அவர்களிடம் தொலைப்பேசி இலக்கங்களை கேட்டாலோ, அல்லது விரும்பத்தகாத வகையில் நடந்து கொண்டாலோ 350 யூரோ அபாரதம் விதிக்க சட்டம் இயற்ற பிரான்ஸ் அரசு முடிவு செய்துள்ளது. இந்த புதிய சட்டத்திற்கு பிரான்ஸ் ந…

  15. இறந்து இரண்டு மாதங்களுக்கு பின்னர் சிரித்துக்கொண்டே எழுந்த துறவி தாய்லாந்தில் இறந்த மதகுரு ஒருவரின் உடலை தோண்டி எடுத்தபோது, அவரின் உடல் அழுகாத நிலையில் மேலும், சிரித்துக்கொண்டே இருந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது. பிறப்பில் கம்போடியாவை சேர்ந்த Luang Phor Pian என்பவர் தாய்லாந்தில் உள்ள கோவிலில் புத்தகுருவாக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு வயது 92. இவர் இரண்டு மாதங்களுக்கு முன்னர் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் பாங்காங் வைத்தியசாலையில் உயிரிழந்தார். தற்போது அவர் இறந்து இரண்டு மாதங்கள் ஆன நிலையில், அவரது உடல் தோண்டி எடுக்கப்பட்டு அவருக்கு வழிபாடுகள் நடத்தப்பட்டு ஆடைகள் அணிவிக்கப்பட்டு மீண்டும் சவப்பெட்டிக்குள் வைத்து ப…

  16. திருடிய மகனுக்கு தாய் கொடுத்த அதிர்ச்சி தண்டனை!!! சீனா - ஷயோடாங் என்ற பகுதியில் ஒரு வீட்டில் வைத்திருந்த பணத்தை திருடிய மகனுக்கு அவனின் தாய் கொடுத்த தண்டனை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டிலிருந்த 20,000 ரூபாய் பணத்தை சிறுவன் திருடி செலவழித்துள்ளான். இதுபற்றி அவனின் தாய் விசாரித்ததற்கு சிறுவன் சரியான பதிலை கூறாமலிருக்க ஆத்திரமடைந்த அவனின் தாய் தனது மோட்டார் சைக்கிளின் பின்புறம் அந்த சிறுவனை கயிற்றால் கட்டி தரதரவென சாலையில் இழுத்து சென்றுள்ளார். இதைக் கண்ட பொதுமக்களில் ஒருவர் தனது கைத்தொலைப்பேசியில் வீடியோ எடுத்து சமூகவலைத்தளங்களில் பரப்பியதோடு பொலிஸாருக்கும் தெரியப்படுத்தியுள்ளார். …

  17. புலிகள்தான் ஈழபோராட்டத்தை உலகம் பயங்கரவாதமாக பார்க்க வைத்தவர்கள் என்று கூறுபவர்களில் முதன்மையானவர் டக்ளஸ் தேவானந்தா, அவரும் அவர் சார்ந்திருந்த இயக்கமுமே ஈழபோராளிகளை பயங்கரவாதிகளாக உலகின்முன் நிறுத்துவதை ஆரம்பித்து வைத்தார்கள் என்பதன் சாட்சிகளில் ஒன்று இது... ரொனால்ட் றீகன் பேசுகிறார்!

    • 0 replies
    • 498 views
  18. சூடு பிடிக்கும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் ‘நடனம்’! பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் ‘ஆட்டத்தை’ அடுத்து, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் ‘ஆட்டம்’ சமூக வலைதளங்களில் சூடுபிடித்துள்ளது. காணொளியில், சந்திரிகா பண்டாநாயக்க குமாரதுங்க, ஆங்கிலப் பாடல் ஒன்றை வாய்விட்டுப் பாடியபடியே, சக விருந்தினர்களுடன் ஆடும் காட்சி பதிவாகியுள்ளது. அந்தக் காட்சி இதோ, உங்களுக்காக: http://www.virakesari.lk/article/29722

  19. வீதித்தடுப்பில் மோதி வானில் பறந்து மாடிக் கட்டிடத்தில் பாய்ந்து சொருகி நின்ற கார்! அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று வீதித் தடுப்பில் மோதி வானில் பறந்து அருகிலிருந்த கட்டிடத்தின் மாடியில் பாய்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கலிபோர்னியாவின் தென் பகுதியில் உள்ள சாண்ட்டா அனா பகுதியின் வீதியில் அதிகாலை வேளையில் வேகமாகப் பயணித்துக்கொண்டிருந்த வௌ்ளை நிற சொகுசுக் கார், கட்டுப்பாட்டை இழந்து வீதியின் தடுப்பு சுவர் மீது பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் சுமார் 20 அடி உயரத்திற்கு வானில் பறந்து எகிறிய கார், அருகில் இருந்த ஒரு கட்டிடத்தின் மாடி ஜன்னலுக்குள் பாய்ந்…

    • 12 replies
    • 705 views
  20. மனை­வியை அச்­சு­றுத்த சவப்­பெட்­டிக்கு முற்­ப­ணம் செலுத்­திய கண­வன்!! மனை­வியை அச்­சு­றுத்த சவப்­பெட்­டிக்கு முற்­ப­ணம் செலுத்­திய கண­வன்!! மனை­வியை அச்­சு­றுத்­தும் நோக்­கில் சவப்­பெட்­டியை வீட்­டுக்கு அனுப்பி வைக்­கு­மாறு நபர் ஒரு­வர் கோரி­யுள்­ளார். குளி­யாப்­பிட்டி நக­ரில் இந்த விநோ­தச் சம்­ப­வம் பதி­வா­கி­யுள்­ளது. நடுத்­தர வய­து­டைய ஆண் ஒரு­வர் மலர்ச்­சா­லைக்கு சென்று சவப்­பெட்­டி­க­ளின் விலை­களை விசா­ரித்­துள்­ளார். ஏனைய அலங்­கா­ரங்­கள், பெரிய பித்­தளை விளக்கு என்­பன தேவையா என்று மலர்ச்­சா­லை…

  21. இந்த ரணகளத்திலும் இது தேவையா.. அடங்காத விஜய் மல்லையா..! #KingfisherCalendar2018 l கடன் பிரச்சனை, நிறுவனத்தில் முதலீடு செய்த பணத்தை வெளிநாட்டுக்குப் பிரிமாற்றம், நிறுவன பணத்தை முறையற்ற வகையில் பயன்படுத்தியது, சிபிஐ வழக்கு, தான் துவங்கி நிறுவனத்தில் இருந்தே வெளியேற்றம், நாடு கடத்த முயற்சி, தினசரி நீதிமன்றம் செல்ல வேண்டிய கட்டாயம் இப்படிப் பல பிரச்சனைகளுக்கு மத்தியில் ஒரு மனுஷன் எப்படி இருப்பான். சாதாரண மனிதனாக இருந்தால் பைத்தியம் பிடிக்கும் அளவிற்குச் செல்வார்கள், ஆனால் விஜய் மல்லாயா வேற லெவல் என்ற சொல்ல வேண்டும். இன்றும் தனக்கென இருக்கும் ஸ்டைலில் சொகுசு வாழ்க்கையே வாழ்ந்து வருகிறார் விஜய் மல்லையா. இந்த ரணகளத்திலும் கிளுகிளுப்பு தேவையா என்று கேட்கு…

  22. அமெரிக்கா: கழிவறையை அசிங்கம் செய்த பயணியால் பாதியில் தரை இறங்கிய விமானம் அமெரிக்காவின் சிகாகோ நகரில் இருந்து 245 பயணிகளுடன் ஹாங்காங் நோக்கிப் பறந்துகொண்டிருந்த விமானம் ஒன்று, அதில் பயணித்த நபர் ஒருவர் அவ்விமானத்தின் இரு கழிவறைகளையும் தனது கழிவுகளால் அசிங்கம் செய்ததால் பாதி வழியிலேயே தரை இறக்கப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். படத்தின் காப்புரிமைREUTERS யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான அந்த விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் மலத்தின் துர்நாற்றம் வீசியதாகக் கூறியதால் அலாஸ்காவில் உள்ள ஆன்கரேஜ் விமான நிலையத்தில், வியாழன்று அது தரை இறக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தப் பயணியால் வேறு பிரச்சனை எது…

  23. நெருக்கடியான அரசியல் சூழலிலும் கவலை மறந்து நடனமாடிய ரணில் நல்லாட்சி அரசாங்கத்தில் ஏற்பட்டுள்ள பல்வேறு அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியிலும் கவலையை மறந்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கொழும்பில் நடைபெற்ற விருந்துபசாரமொன்றில் நடனமாடியதாக ஐ.பி.சி தமிழ் செய்தியாளர் தெரிவித்தார். இலங்கை மத்திய வங்கியின் பிணை,முறி ஊழல் விவகாரம் தொடர்பான அறிக்கை வெளியாகி இரண்டு நாட்களிற்குள் இடம்பெற்ற திருமண வைபவம் ஒன்றில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு நடனமாடியிருக்கின்றார். பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் ஒன்றை நாடாளுமன்றத்தில் சமர்பிக்க வேண்டுமென கூட்டு எதிரணியினர் கூறிவருகின்றனர். அத்துடன் பிரதமர் பதவியிலிருந்து ரணில் …

    • 3 replies
    • 300 views
  24. வேகமாக சென்ற காரை துரத்திய போலீசார் பிரசவம் பார்த்தனர். அமெரிக்காவின் தென் கரோலினா மாநிலத்தில் பிரசவ வலி எடுத்த மனைவியினை, அவரது பல கோளாறுகள் காரணமாக உடனடியாக ஆஸ்பத்திரிக்கு பதட்டத்துடன் எடுத்துச் சென்ற கணவர், மிக வேகமாக சென்ற காரணத்தினால் பொலிஸாரினால் நிறுத்துமாறு உத்தரவிடப்பட்டு இருந்தார். தனது மனைவியின் பிரசவ வலி அலறலினால் பதடடம் அடைந்த கணவரோ நிறுத்தாமல் தொடர்ந்து செல்ல... கிடடதடட இருபது போலீஸ் கார்கள் திருத்தி, ஒரு சந்தியில் வைத்து பொக்ஸ் அடித்து அமத்தி இருக்கிறார்கள். கணவர் கை விலங்கிடப்படடு ஓரமாக உட்க்கார வைக்கப் பட நிலையில்.... போலீசார் பெண்ணை அணுகிய நிலையில்.... அது வழக்கமான பாசாங்கு இல்லை.... உண்மையிலேயே பிரசவ வலி என அறிந்து இருக்கின்றனர். தா…

    • 2 replies
    • 549 views
  25. இலங்கையின் எல்லா இடங்களிலும் புதிய அறிவிப்பு ! பங்குனி 31 வரை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளதாம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.