செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7087 topics in this forum
-
உலகிலேயே 5 பேருக்கு மாத்திரம் இருந்த விசித்திர நோய் : சிறுமி ஒருவருக்கும் தொற்றியதால் அதிர்ச்சி உலகில் 5 பேருக்கு மாத்திரமே காணப்பட்ட விசித்திர தோல் நோய், பங்களாதேஷில் உள்ள சிறுமி ஒருவருக்கும் ஏற்பட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பங்களாதேஷின் வட பகுதியில் உள்ள ஒரு பின் தங்கிய கிராமத்தை சேர்ந்த 10 வயது சிறுமியான சஹானா, இ.வி என அழைக்கப்படும் எபிடெர்மோடிஸ்பிலேசியா வெரிசிபோர்மஸ் (epidermodysplasia verruciformis) எனும் அபூர்வ தோல் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். குறித்த நோய் காரணமாக சிறுமியின் முகம், காது, நாடி மற்றும் மூக்கு உள்ளிட்ட உறுப்புகளில், மரம் போன்று சிறிய அளவில் சதை வளர்ந்து வருகின்றது. …
-
- 0 replies
- 300 views
-
-
பெண்ணின் காதணி துவாரத்தில் நுழைந்த பாம்பு அமெரிக்காவில் பாம்புடன் விளையாடிக்கொண்டிருந்த பெண் ஒருவரின் காதணி துவாரத்திற்குள் நுழைந்த பாம்பு அதில் சிக்குண்டு வெளியில் வரமுடியாமல் தவித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஓரிகன் மாகாணத்தை சேர்ந்த அஷ்லே கிலவெ என்ற பெண்ணின் செல்லப்பிராணியாக வளர்த்து வந்து பல் பைதான் என்ற பாம்புடன் தினந்தோறும் விளையாடுவது வழக்கமாக கொண்டுள்ளவர். இந்நிலையில், குறித்த பாம்பு இவரின் தலையில் ஏறி விளையாடிக்கொண்டிருந்த போது தலையின் பக்கவாட்டு பகுதியாக கீழிறங்கி, காதில் காதணி அணியும் துவாரப்பகுதிக்குள் நுழைந்து பாதி உடம்பு உள்ளே சென்ற நிலையில், அந்த பாம்பு இடையில் சிக்கி கொண்டது. பாம்பினை தனது காதணி துவாரத்திலி…
-
- 2 replies
- 425 views
-
-
பெண்களின் மலசல கூடத்துக்கு தமிழ் மாத்திரம் தெரிந்த ஆண்கள் செல்லலாமா? 2017-01-30 10:41:38 பதுளை அரசினர் பொது மருத்துவமனை மலசலகூடத்துக்கு முன்பாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் அறிவிப்பு பலகையில் சிங்களம் மற்றும் ஆங்கிலம் மொழிகளில் “பெண்கள் மலசலகூடம்” என்று குறிக்கப்பட்ட போதிலும், தமிழ் மொழியில் “ஆண்கள் மலசலகூடம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ( செல்வராஜா பதுளை நிருபர்) - See more at: http://www.metronews.lk/article.php?category=news&news=22062#sthash.ymbJXEmV.dpuf
-
- 5 replies
- 571 views
-
-
ரகசியமாக 28 பேரை மணந்த கல்யாண மன்னன்: 25-வது மனைவியின் புகாரால் ஜெயிலில் அடைப்பு வங்காள தேசத்தில் ரகசியமாக 28 பேரை மணந்த கல்யாண மன்னன், 25-வது மனைவியின் புகாரால் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். டாக்கா: வங்காள தேசத்தின் பர்குணா மாவட்டத்தைச் சேர்ந்த பெண் கடந்த 2011-ம் ஆண்டு ஒரு நபரை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. பின்னர்தான் அவரது கணவருக்கு ஏற்கனவே பல திருமணங்கள் நடைபெற்றது தெரியவந்தது. தான் அதில் 25-வது மனைவி என்பதை புரிந்து கொண்ட அவர், கணவரின் மனைவிகளை கண்டுபிடிக்க ஆரம்பித்தார். அதில் 17 பேரின் விலாசங்களை கண்டுபிடித்தார். அத…
-
- 0 replies
- 661 views
-
-
“இனிமேல் இப்படி செய்யமாட்டேன்” : அரிசி திருடிய எலியை கட்டி வைத்து பதாகை மாட்டிய நபர்கள் 2017-01-26 15:08:27 சீனாவிலுள்ள கடையொன்றில் அரிசி திருடியதாக கூறப்படும் எலியொன்றுக்குத் தண்டனையாக, லொறியொன்றின் பின்னால் அதை கட்டித் தொங்கவிட்டதுடன், இனிமேல் இப்படி செய்யமாட்டேன் என்ற அர்த்தம் தொனிக்கும் பதாகையொன்றையும் எலி மீது சிலர் மாட்டியுள்ளனர். சீனாவின் தென் பிராந்திய நகரான ஹேயுவான் நகரில் அண்மையில் இச்சம்பவம் இடம்பெற்றது. மேற்படி எலி, கடையில் அரசி திருடுவதை சிலர் கண்டுபிடித்தவுடன், அதற்கு இவ்வாறு தண்டனை அளிப்பதற்கு தீர்மானித்தனராம். தவறை ஒப்புக்கொள்ளும் விதமான வாச…
-
- 2 replies
- 363 views
-
-
பத்து வயதில் 400 மொழிகளை கற்று உலக சாதனை படைத்த தமிழகத்தின் சாதனை மாணவன்!
-
- 3 replies
- 360 views
-
-
காற்சட்டைகளைக் கழுவும்போது பைக்குள் காணப்படும் சில்லறை காசுகளைச் சேர்த்து வைத்து பயணச் செலவுக்குப் பயன்படுத்தி கொண்டேன் - 17 வயதில் காணாமல் போய் 26 வருடங்களின் பின்னர் வீடு திரும்பிய பத்மா குமாரி கூறுகிறார் (கம்பளை நிருபர்) 26 ஆண்டுகளுக்கு முன்னர் பெண் ஒருவர் காணா மல் போய் அவருக்காக உறவினர்களால் ஆத்ம சாந்தி கிரியைகளும் செய்து முடிக்கப்பட்டிருந்தநிலையில் கடந்த புதன் கிழமை திடீரென அவர் தனது வீடடுக்கு வந்த சம்பவம் தொடர்பில் நாம் கடந்த வெள்ளிக் கிழமை செய்தி வெளியிட்டிருந்தோம். இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் பல தகவல்கள் தற்போது கிடைத்துள்ளன. திருமணமாகி 3 மாதங்களில் …
-
- 1 reply
- 261 views
-
-
23 வருடங்களின் பின் தந்தையைக் கண்ட இன்ப அதிர்ச்சியில் இளைஞர் பலி ஆயுள் தண்டனை முடிந்து சிறையில் இருந்து வெளிவந்த தன் தந்தையை இருபத்து மூன்று ஆண்டுகளின் பின் கண்ட இன்ப அதிர்ச்சியில் இளைஞர் ஒருவர் மரணமானார். கொலை ஒன்றுடன் தொடர்புடையது நிரூபிக்கப்பட்டதையடுத்து 1996ஆம் ஆண்டு மும்பையைச் சேர்ந்த ஹசன் என்பவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அப்போது அவருடைய மகன் சஜித்துக்கு ஒரு வயது. தண்டனைக் காலத்தில் ஒருபோதும் பிணையில் வெளிவரவோ, குடும்ப உறுப்பினர்களைச் சந்திக்கவோ ஹசன் முயற்சிக்கவில்லை. தொலைபேசி மூலமே குடும்பத்தினரின் சுகத்தை விசாரித்து வந்தார். இந்த நிலையில், நேற்று முன்தினம் 17ஆம் தேதி அவர் விடுதலையானார். அவரை வரவே…
-
- 0 replies
- 345 views
-
-
பக்கவாதம் பாதித்த நபரின் தன்னம்பிக்கைக்குக் கிடைத்த பரிசு சஷி என்பவர் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர். வயது 59. மரம் ஏறித் தேங்காய் பறிப்பதைத் தொழிலாகக் கொண்ட இவர், பதினெட்டு வருடங்களுக்கு முன் மரத்தில் இருந்து விழுந்ததால் இவரது உடலின் ஒரு புறம் செயலற்றுப் போனது. படுத்த படுக்கையான சஷி, தொடர் சிகிச்சைகளால் ஓரளவு குணமாகி நடமாடக் கூடிய நிலைக்குத் திரும்பினார். மரம் ஏறுவதைத் தவிர வேறெதுவும் தெரிந்திராத சஷி தனது வாழ்க்கையை நடத்திச் செல்ல வேண்டி தனக்கொரு முச்சக்கர வண்டியை வாங்கித் தந்து உதவுமாறு உள்ளூர் அமைப்புகளிடம் கேட்டார். ஆனால், அவரது வீட்டுக்கு அருகாமையில் முச்சக்கர வண்டி போவதற்கு ஏற்றவாறு பாதை எதுவும் இல்லை. மேடும் பள்ளம…
-
- 1 reply
- 413 views
-
-
500 சிறுமிகளிடம் பாலியல் சில்மிஷம் : 12 வருடங்களாக தேடப்பட்டு வந்த நபர் சிக்கினார் : இந்தியாவில் சம்பவம் (காணொளி இணைப்பு) இந்திய தலைநகரான டில்லியில் சுமார் 12 ஆண்டுகளாக 500 க்கும் மேற்பட்ட சிறுமிகளிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டு வந்த நபர் நீண்ட நாட்களாக மேற்கொண்டு வந்த தீவிர தேடுதல் நடவடிக்கைகளின் பின்னர் டில்லி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சுனில் ரஸ்தோகி(38), என்பவர் இதுவரை சுமார் 500 க்கும் மேற்பட்ட சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்த முற்பட்டதை ஒப்புக்கொண்டுள்ளார். கடந்த 2006ஆம் ஆண்டு இவர் செய்த குற்றத்திற்காக ருத்ராபூர், உத்தரகாண்ட் உள்ளிட்ட பகுதிகளில் 6 மாத சிறை தண்டனை …
-
- 0 replies
- 360 views
-
-
ஜேர்மனிய ரயிலில் நிர்வாண கோலத்தில் கத்தியுடன் காணப்பட்ட இளைஞன் ஜேர்மனிய ரயிலொன்றின் கழிவறைத் தொகுதியில் இளைஞன் ஒருவன் நிர்வாண கோலத்தில் கத்தியுடன் காணப்பட்டதால் பொலிஸார் அழைக்கப்பட்ட சம்பவம் அண்மையில் இடம்பெற்றுள்ளது. இந்த இளைஞன் நிர்வாணமாக கத்தியுடன் திரிவதை ரயில் அதிகாரி ஒருவர் கண்டதையடுத்து அவர் உடனடியாக பொலிஸாருக்கு அழைப்பு விடுத்தார். டுவெசெல்டோர்வ் ரயில் நிலையத்தில் மேற்படி ரயில் நின்றபோது, பொலிஸார் ரயிலுக்குள் புகுந்தனர். அப்போது மேற்படி இளைஞன் தனது அந்தரங்கப் பகுதியை “ஷேவ்” செய்துகொண்டிருந்தான் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்…
-
- 4 replies
- 473 views
-
-
ஆபாச வலைத்தளத்தில் அதிகம் தேடப்பட்டவர்கள் பட்டியலில் கிம் கதர்ஷியனுடன் ட்ரம்ப் மனைவி ஆபாச வலைத்தளம் ஒன்றில் கடந்த ஆண்டு மிக அதிகம் தேடப்பட்டவர்கள் பட்டியலில் மொடல் அழகி கிம் கதர்ஷி யன் முதலிடத்தையும் அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள ட்ரம்பின் மனைவி மெலானியா 8 ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர். மிக பிரபலமான ஆபாச வலைத்தளம் ஒன்று தங்களது வாடிக்கையாளர்களால் அதிகம் தேடப்படும் பிரபலங்கள் குறித்த பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது. குறித்த பிரபலங்களின் ஆபாச புகைப்படங்கள் அல் லது காட்சிகள் எதுவும் இணையத்தில் பதிவேற்றப்பட் டுள்ளனவா என்ற தேடலின் ஒருபகுதியாக குறித்த வலைத்தளம் இந்த பிரபலங்களின் பெயர்களை பட்டிய லிட்டுள்ளது. இதில் அமெரிக…
-
- 3 replies
- 476 views
- 1 follower
-
-
வங்கதேச மர மனிதனுக்கு 16 அறுவை சிகிச்சைகள்: ஓராண்டின் பின் குணமானார் (Photos) மர மனிதன் என அறியப்பட்ட வங்கதேசத்தைச் சேர்ந்த அபுல் பாஜாந்தர், கடந்த ஒரு வருட கால சிகிச்சையின் பின்னர் குணமாகியுள்ளார். வங்கதேசத்தின் தென்கிழக்கு கடலோர மாவட்டமான கால்னா பகுதியைச் சேர்ந்த முச்சக்கரவண்டி சாரதி அபுல் பாஜாந்தர் (24), எபிடர்மாடிஸ்பிளாசியா வெருசிபார்மிஸ் எனும் அரியவகை மரபு நோயால் பீடிக்கப்பட்டிருந்தார். இந்த நோயினால் அவரது கை மற்றும் கால்களில் மருக்கள் வளர்ந்து, கடினமான தோல் வேர்கள் போல் வளர்ந்ததன் காரணமாக அவரை மக்கள் மர மனிதன் என அழைத்தனர். இந்த நோய் தாக்கியதன் பின்னர், பெற்றோரின் மறுப்பையும் மீறி ஹலிமா என்பவரை திருமண…
-
- 0 replies
- 423 views
-
-
10 ரூபாய் லஞ்சம்; 22 வருட அவஸ்தை; 5 காவலர்கள் விடுதலை இருபத்து இரண்டு வருடங்களுக்கு முன், பத்து ரூபாய் லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் சந்தேக நபர்களாகக் கருதப்பட்ட ஐந்து பொலிஸாரை குஜராத் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. கடந்த 1994ஆம் ஆண்டு ஜூன் மாதம், அகமதாபாத்தில் வீதி ஒழுங்குகளை மீறுபவர்களிடம் இருந்து லஞ்சம் வாங்குவதாக போக்குவரத்து பொலிஸார் ஐந்து பேர் மீது முறைப்பாடு அளிக்கப்பட்டது. பொலிஸ் நிலையப் பதிவேட்டில் பதிவு செய்யாமல் இந்தப் புகாரின் மீது ஆய்வு நடத்திய பொலிஸ் அத்தியட்சர், குறித்த ஐந்து பொலிஸாரையும் சந்தேகத்தின் பேரில் கைது செய்தார். வழக்கு நடைபெற்று இவர்கள் குற்றவாளிகள் என்று நிரூபணமானதையடுத்து அவர்கள் ஐவ…
-
- 0 replies
- 287 views
-
-
உரிமையாளர் மரணசடங்கில் கண்கலங்கிய குதிரை உரிமையாளர் மரணசடங்கில் கண்கலங்கிய குதிரையின் பாசத்தினை கண்டு மரணசடங்கில் கலந்துக்கொண்டவர்களும் கண்ணீர் விட்ட சம்பவம் பிரேஸிலில் இடம்பெற்றுள்ளது. செரினோ என்ற குதிரையும் அவரின் உரிமையாளரான 34 வயதுடைய வாக்னர் டே லிமா பிகுயிரோடோ என்ற நபரும் மிகவும் நெருங்கிய நண்பர்களாக பழகி வந்துள்ளனர். கடந்த 1 ஆம் திகதி மோட்டார் சைக்கிள் விபத்தில் பிகுயிரோடோ உயிரிழந்துள்ளார். இவரின் இறுதி கிரிகையில் கலந்துக் கொண் ட அவரின் குதிரை பிகுயிரோடோவின் பிரிவினை தாங்காது கண்ணீர் விட்டு அழுதுள்ளது. இச்சம்பவத்தினை நேரில் கண்டவர்கள் குதிரையின் பாசத்தினை கண்டு வியப்பில்…
-
- 2 replies
- 433 views
-
-
சபரிமலைக்கு 600 கிலோ மீற்றர் கால்நடையாகச் சென்ற நாய் சபரிமலை யாத்திரிகர் ஒருவருடன் சுமார் 600 கிலோ மீற்றர்கள் நடந்தே சென்ற ‘மாலு’ என்ற நாய், மக்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. நவீன் (37) என்பவர் கேரளாவைச் சேர்ந்தவர். இவர், உடுப்பியில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் 8ஆம் திகதி கால்நடையாகவே சபரிமலைக்குப் புறப்பட்டார். சுமார் 80 கிலோ மீற்றர் கடந்திருந்தபோது, வீதியின் எதிர்ப்புறமாக நாய் ஒன்று நவீனைப் பின் தொடர்ந்தது. சற்று நேரத்தில் வீதியைக் கடந்து நவீனின் பின்னால் வரத் தொடங்கியது. அதை விரட்ட நவீன் எவ்வளவோ முயற்சித்தபோதும், எந்த விதத் தொந்தரவும் தராத அந்த நாய் அவரையே பின்தொடர்ந்து சென்றது. ஓரிரு நாட்களில் நவீனும் நாயும் நண்பர்களாகி…
-
- 8 replies
- 871 views
-
-
யால தேசிய வனத்துக்குப் பயணித்த ஜேர்மன் தம்பதியினரின் 2 லட்சம் ரூபா பணம் கொண்ட பையை விழுங்கியது யானை: காட்சிகள் பதிவான வீடீயோவை சமர்ப்பித்து தம்பதி முறைப்பாடு (ரெ.கிறிஷ்ணகாந்) யால தேசிய பூங்காவில் வைத்து வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பயணித்த ஜீப் ஒன்றை வழிமறித்த யானை ஜீப்பின் கண்ணாடி ஊடாக தும்பிக்கையை நுழைத்து பெறுமதியான பொருட்களும் பணமும் கொண்ட பயணப் பையை எடுத்து விழுங்கியுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. யால - கதிர்காமம் வீதியின் ஊடாக சஃபாரி ஜீப் ஒன்றில் யால தேசிய பூங்காவைப் பார்வையிடுவதற்கு நேற்றுமுன்தினம் ஜேர்மனிய தம்பதி ச…
-
- 3 replies
- 280 views
-
-
105 வயது முதியவர் ஒருவர் சுமார் 23 கிலோ மீற்றர் தொலைவுக்கு சைக்கிளைச் செலுத்தி புதிய சாதனை படைத்துள்ளார். ரொபர்ட் மார்ச்சண்ட் என்பவர் பிரான்ஸைச் சேர்ந்தவர். இவருக்கு வயது 105. வயது முதிர்ந்தாலும் உடல் வலு குறையாத இந்த முன்னாள் தீயணைப்புப் படை வீரர், தனது ஆரோக்கியத்தை வித்தியாசமான முறையில் நிரூபித்தார். பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள ஒரு உள்ளக விளையாட்டரங்கில் நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் மத்தியில் சைக்கிளைச் ஆரம்பித்த இவர், ஒரு மணி நேரத்திற்குள் 22.528 கிலோ மீற்றரைக் கடந்து புதிய சாதனை படைத்தார். இந்த வயது எல்லையில் உள்ள ஒருவர் இந்தச் சாதனையைப் படைத்திருப்பது இதுவே முதல்முறை! சாதனை படைப்பது ஒன்றும் இவருக்குப் புதிதல்ல. தனது நூறாவ…
-
- 1 reply
- 228 views
-
-
வயிற்றில் சிக்கிய கத்தரிக்கோல் 18 ஆண்டுகளுக்கு பிறகு வெளியேற்றம் வியட்நாம் நாட்டில் வயிற்றில் சிக்கி கொண்ட கத்தரிக்கோல் 18 ஆண்டுகளுக்கு பிறகு அறுவை சிகிச்சை மூலம் வெளியே எடுக்கப்பட்டுள்ளது. ஹனோய்: வியட்நாம் நாட்டில் 54 வயது மிக்க முதியவர் ஒருவர் கடந்த மாதம் சாலை விபத்தில் சிக்கி மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது அவருக்கு மருத்துவர்கள் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் எடுத்தனர். அந்த ஸ்கேனில் அவரது வயிற்றின் இடது புறத்தில் கூர்மையான ஆயுதம் இருப்பது கண்டறியப்பட்டது. மீண்டும் சோதனை செய்ததில் கத்திரிக்கோல் இருப்பது மருத்துவர்களுக்கு தெரியவந்தது. அந்த கத்திரிக்கோல் 15 …
-
- 0 replies
- 292 views
-
-
20 வருடங்களாக மனைவியுடன் பேசுவதை தவிர்த்த நபர் 18 வயது மகனின் முயற்சியால் மீண்டும் உரையாடுகிறார் 2017-01-02 13:39:42 ஜப்பானைச் சேர்ந்த நபர் ஒருவர், 20 வருடங்கள் தனது மனைவியுடன் பேசுவதை தவிர்த்து வந்தநிலையில், அண்மையில் மீண்டும் பேச ஆரம்பித்துள்ளார். ஒட்டோவ் கேட்டேயமா எனும் இந் நபர் தனது மனைவியுடன் தொடர்ந்து வசித்து வந்தார். ஆனால், 20 வருட காலமாக இருவருக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் எதுவும் நடக்கவில்லை. யுமி கூறிய ஏதோ ஒரு விடயம் தன்னை வெகுவாக பாதித்ததால் அவருடன் பேசுவதை கேட்டேயமா நிறுத்தினாராம். அவரின் மனைவி கேட்டேயமாவுடன பேசுவதற்கு முற்பட்டபோ…
-
- 8 replies
- 574 views
-
-
குப்பையில் வீசப்பட்ட அதிர்ஷ்டச் சீட்டுக்கு ஒன்றே கால் கோடி ரூபா பரிசு குப்பையில் வீசப்பட்ட லொத்தர் சீட்டு ஒன்றுக்கு இலங்கை மதிப்பில் ஏறக்குறைய ஒன்றே கால் கோடி ரூபா பரிசு விழுந்த சம்பவம் லண்டனில் இடம்பெற்றுள்ளது. ஜோவேன் ஜொனிசன் (37) என்ற பெண் லொத்தர் சீட்டு வாங்கும் பழக்கம் உடையவர். சிறு சிறு பரிசுகளும் அவருக்குக் கிடைத்திருக்கின்றன. கடந்த 28ஆம் திகதி அவர் வாங்கிய ஒரு சீட்டுக்கு பரிசு எதுவும் கிடைக்காததால் அதைக் குப்பையில் வீசிவிட்டார். ஆனால், மூன்று நாட்களின் பின் கடந்த 31ஆம் திகதி, புதிய சீட்டொன்றை வாங்கச் சென்றவருக்கு ஆச்சரியம் + அதிர்ச்சி காத்திருந்தது. ஆறுதல் பரிசுக்குரிய டிக்கெட்டுகள் குறைவாக இருந்தமையால் ஒட்டு மொத்த ஆறுத…
-
- 1 reply
- 208 views
-
-
சேலை அணியும் கணவனிடமிருந்து விவாகரத்து கோரிய மனைவி 2016-12-30 13:37:47 தனது கணவன் இரவு வேளைகளில் சேலை அணிவதால் அவரிடமிருந்து மனைவி விவாகரத்து கோரிய வினோத சம்பவம் பெங்களூரில் நிகழ்ந்துள்ளது. பெங்களூர் இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் அனிதா (29). பெங்களூரின் பன்னர்கட்டா பகுதியில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனமொன்றில் அனிதா பணி புரிந்து வருகிறார். இவருக்கும் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரியும் ராஜேஷ் என்பவருக்கும் கடந்த வருடம் திருமணம் நடைபெற்றது. திருமணமாகி ஒரு வருடம் கடந்த நிலையில் தனது கணவனிடமிருந்து விவாகரத்து கோரி பெங்களூர் பொலிஸ் நிலையத்தில் அனிதா புகா…
-
- 3 replies
- 484 views
-
-
ரஷ்ய சர்வதேச விமான நிலைய கட்டடத்துக்குள் வேகமாக புகுந்த கார் : காதலியை வரவேற்பதற்குச் செல்வதாக மதுபோதையிலிருந்த சாரதி கூறினார் 2016-12-26 12:05:19 சர்வதேச விமான நிலையமொன் றின் கதவுகளை உடைத்துக்கொண்டு கார் ஒன்று வேகமாக விமான நிலையத்துக்குள் நுழைந்த சம்பவம் ரஷ்யாவில் இடம்பெற்றுள்ளது. கஸாந் நகரிலுள்ள கஸான் சர்வதேச விமான நிலையத்தின் கண்ணாடி கதவுகளை தகர்த்துக்கொண்டு இக்கார் உள்ளே நுழைந்தமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விமான நிலைய கட்டடத்துக்குள் நுழைந்தவுடன் கார் நிறுத்தப்படவில்லை. அந்நபர் தொடர்ந்தும் காரை செலுத்திக் கொண்டிருந்தார். …
-
- 0 replies
- 248 views
-
-
கஞ்சா செடியால் அலங்கரிக்கப்பட்ட நத்தார் மரம் ; சந்தேக நபர்களை மடக்கி பிடித்த பொலிஸார் கென்னாபீஸ் எனப்படும் கஞ்சாவகை செடியை கொண்டு தமது நத்தார் மரத்தை அலங்கரித்திருந்த குற்றத்திற்காக இருவர் கைதான சம்பவம் இங்கிலாந்தில் பதிவாகியுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, இங்கிலாந்தின் ஜெல்டன்ஹாம் நகரப்பகுதியிலுள்ள வீடொன்றை பொலிஸார் சோதனைக்குட்படுத்தியுள்ளனர். இந்நிலையில் வீட்டில் நத்தார் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு வண்ணக் காகிதங்களை கொண்டு அலங்கரிக்கப்பட்டிருந்த மரத்தை உன்னிப்பாக அவதானித்த பொலிஸார் அது அடர்த்தியாக வளர்ந்த கென்னாபீஸ் எனப்படும் கஞ்சா வகை போதை செடி என்பதை கண்டு பிடித்துள்ளனர். குறித்த சம்பவம் தொட…
-
- 0 replies
- 207 views
-
-
விலங்குகளை வீட்டிற்கு அனுப்பிவிட்டு அவற்றின் கூட்டிற்குள் மனிதர்களின் கொண்டாட்டம்.! கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களை மேற்கொண்ட விலங்குகள் காப்பக ஊழியர்கள். தாம் பராமரித்த நாய்கள் யாவும் தத்தெடுக்கப்பட்ட நிலையில், தாங்களே கூடுகளுக்குள் சென்று கிறிஸ்மஸ் பண்டிகையை கொண்டாடியுள்ளனர். அமெரிக்காவின் கொலராடோ பகுதியில் உள்ள பைக் பீக்ஸ் மானுட அமைப்பானது விலங்குகளை வருமானம் தரும் நோக்கத்திற்காக பராமரித்து வராத ஒரு அமைப்பாக செயற்பட்டுள்ளது. குறித்த அமைப்பில் பராமரிப்பிற்குட்பட்டு வந்த அனைத்து நாய்களும் கிறிஸ்மஸ் விடுமுறையை களிக்க வீடுகளுக்கு சென்ற நிலையில் காப்பக ஊழியர்கள் விலங்குகளை அடைத்து வைக்கும் கூடுகளுக்குள் சென்று தமது பண்டிகை கொண்டாட்டத்தை வெளிப்பட…
-
- 0 replies
- 277 views
-