Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. மனித உருவ ரோபோவால் வரையப்பட்ட ஆங்கிலேயக் கணிதவியலாளர் ஆலன் டூரிங்கின் உருவப்படம் $1 மில்லியன் டாலருக்கு விற்பனையாகி உள்ளது. உலகின் முதல் அல்ட்ரா-ரியலிஸ்டிக் ரோபோவான “ஐ-டா” வரைந்த 2.2-மீட்டர் (7.5-அடி) உயரம் கொண்ட “AI கடவுள்” எனப் பெயர் கொண்ட உருவப்படம் 1 மில்லியன் டாலருக்கு விற்பனையாகி உள்ளது. ஐ-டா எனப் பெயரிடப்பட்டுள்ள மனித உருவம் கொண்ட இந்த ரோபோ, ஆங்கிலேயக் கணிதவியலாளர் ஆலன் டூரிங்கின் உருவப்படத்தை வரைந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த ஓவியத்தின் தனித்துவம் குறித்து ரோபோவே அனைவருக்கும் விளக்கி கூறியுள்ளது. Sotheby’s Digital Art Sale இல் இந்த ஓவியம் விற்கப்பட்டுள்ளது. ‘ஐ-டா’ என பெயரிடப்பட்டுள்ள இந்த அதிநவீன மனித உருவ ரோபோ ஐடன் மெல்லர் என்பவரால் வடிவமைக…

  2. ஆராய்ச்சி மையத்தில் இருந்து தப்பியோடிய 43 குரங்குகள். அமெரிக்காவின் தெற்கு கரோலினாவில் உள்ள ஆராய்ச்சி மையத்தில் இருந்து 43 குரங்குகள் தப்பி ஓடியுள்ளன. பாதுகாவலரால் தவறுதலாக மையத்தின் கதவு திறக்கப்பட்டதாகவும், இந்த குரங்குகள் தப்பிச் சென்றதாகவும் வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி குறித்த பகுதியில் குரங்கு கூட்டத்தை கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருவதாக குறிப்பிடப்படுகின்றது. இருப்பினும், குடியிருப்பாளர்கள் தங்கள் கதவுகள் மற்றும் ஜன்னல்களை பாதுகாப்பாக மூடி வைக்குமாறு மாநில அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும், கரோலினா மாகாணத்தில் உள்ள பாதுகாப்பு அதிகாரிகளும் தப்பியோடிய குரங்குகளைக் கண்டால், உடனடியாகத் தெரிவிக்…

  3. முதல்வருக்கு வாங்கிய சமோசா மாயம்.. சிஐடி விசாரணை.. கேலி செய்யும் எதிர்க்கட்சிகள்..! முதலமைச்சருக்கு வாங்கிய சமோசா காணாமல் போனதை அடுத்து, இது குறித்து விசாரணை செய்ய சிஐடிக்கு உத்தரவிட்டிருப்பதால் எதிர்க்கட்சிகள் ஏளனம் செய்து வருகின்றன. இமாச்சல பிரதேசத்தில் முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து கொண்டிருக்கும் நிலையில், சில மாதங்களுக்கு முன்னர் சிஐடி தலைமையகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட தகவல் மையத்தை அவர் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வருக்கு வழங்குவதற்காக சமோசாக்கள் மற்றும் கேக்குகள் வாங்கப்பட்டன. ஆனால் அவை திடீரென காணாமல் போனதாகவும், முதல்வரி…

    • 0 replies
    • 455 views
  4. சீனாவின் ஜிலின் மாகாணத்தைச் சேர்ந்த ஒரு மனிதன், ஐந்து பெண்களை ஒரே நேரத்தில் ஏமாற்றி பணத்தை மோசடி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் உள்ள ஜிலின் மாகாணத்தை சேர்ந்த சியாஜுன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் தன்னை பணக்காரன் என்று கூறி, 5 பெண்களை ஏமாற்றியுள்ளார். சியாஜுன் பணக்கார பின்புலத்தில் பிறந்திருக்கவில்லை. அவரது தந்தை கட்டுமானத் துறையில் பணிபுரிந்து வந்தார். மேலும் அவரது தாயார் குளியல் இல்லத்தில் உதவியாளராக இருந்து வருகிறார். ஏழ்மையின் காரணமாக படிப்பை விட்டுவிட நேர்ந்தாலும் தன்னை பணக்காரனாக காட்டிக் கொண்டு, ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்திக்கொண்டார். அவரிடம் பெரும் பணக்காரன் போல நடித்து, விலை உயர்ந்த பரிசுப் பொருட்களையும் கொடுத்து வந்தார். …

  5. தலை முடி பிடிக்காததால் காதலியை கொலை செய்த காதலன். பென்சில்வேனியாவில் 49 வயதான பெஞ்சமின் என்பவர், தனது காதலியின் தலைமுடியை தனக்கு பிடிக்காத வகையில் வெட்டியதால் அவரை கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார். அதனை தடுக்க முயன்ற அண்ணனையும் கத்தியால் குத்தியுள்ளார். சம்பவம் நடந்த இடத்துக்கு விரைந்து சென்ற பொலிஸார், கையில் ரத்தம் படிந்த கத்தியுடன் இருந்த பெஞ்சமினை கைது செய்தனர். பின்னர் இறந்து கிடந்த காதலியையும் காயமடைந்த அண்ணனையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இது குறித்து அவர்களது மகள் குறித்த முறைப்பாட்டில், ஒருநாள் முன்னர் 50 வயதான கார்மென் மார்டினெஸ்-சில்வா முடி திருத்தம் செய்துள்ளார். அந்த புதிய ஹேர் ஸ்டைலுடன் அவர் வீடு திரும்பினார். வீட்டில் இருந்த அவரது கா…

  6. முன்னாள் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க தேர்தலில் தோற்ற பின்னர் பெருமளவு சமையல்காரர்கள் தனக்கு தேவை என வேண்டுகோள் விடுத்தவேளை அவர் உணவகம் ஒன்றை ஆரம்பிக்கப்போகின்றாரோ என நினைத்தேன் ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க தெரிவித்துள்ளார். தேர்தல் பிரச்சார கூட்டத்தில் அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டின் ஜனாதிபதி மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளிடம் சொகுசு வீடுகள், தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் சொகுசு வாகனங்கள் என்பன அதிகளவில் காணப்படுகின்றன. நாம் அரசியலை பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும். அதனை தான் தேசிய மக்கள் சக்தி செய்யவுள்ளது. அரசியல் என்பது நாட்டின் சட்டத்திட்டங்களுக்கு கீழ்படிய வேண்டும். அதற்கு ம…

  7. உலக சாதனை படைத்த பூசணிக்காய் படகு! (வீடியோ) அமெரிக்காவின் ஒரேகான் மாகாணத்தைச் சேர்ந்த கேரி கிறிஸ்டென்சன் என்பவர் இராட்சத பூசனிக்காய் படகில் பயணம் செய்து உலக சாதனை படைத்துள்ளார். 46 வயதான அவர் கடந்த 2011ஆம் ஆண்டு முதல் தனது தோட்டத்தில் இராட்சத பூசணிக்காய்களை வளர்த்து வருகிறார். அதன்படி இந்த ஆண்டு சுமார் 500 கிலோ எடை கொண்ட பூசணிக்காய் ஒன்றை வளர்த்த அவர் கின்னஸ் சாதனை படைக்கும் முயற்சியில் குறித்த பூசனியை படகாக மாற்றியுள்ளார். அதன் பின்னர் குறித்த படகினைப் பயன்படுத்தி கொலம்பியா ஆற்றில் சுமார் 73 கிலோ மீட்டர் தூரம் பயணித்துள்ளார். அதன்படி போன்வில்லே நகரில் இருந்து வான்கூவர் வரை 73 கிலோ மீற்றர் தூரத்துக்கு அவர் அந்த படகில் பயணித்துள்ளார். 26 மணி நேர…

  8. கமலா ஹாரிஸுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ள அணில் விவகாரம்! அமெரிக்காவில் 4 நாட்களுக்கு முன்பு அணில் ஒன்று கருணை கொலை செய்யப்பட்ட விவகாரம் அந்நாட்டு ஜனாதிபதித் தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் அளவிற்கு மாறியுள்ளது. உலகளவில் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் இன்று நடைபெறுகிறது. இந்நிலையில் பெரும்பாலான மக்களின் சமூக வலைத்தளப்பக்கங்களில் பீனட் என்ற அணிலை கருணை கொலை செய்ய விவகாரம் பெரும் பேசுபொருள் ஆகியுள்ளது. நியூயோர்க் நகரை சேர்ந்த லோனோ என்பவர் பீனட் என்ற 7 வயதான அணிலை வளர்த்து வந்துள்ளார். அவர் குறித்த அணில் செய்யும் சேட்டைகள் மற்றும் குறும்பு தனங்களை வீடியோ எடுத்து தனது இன்ஸ்டாகிராமில் தொடர்ச்சியாக பதிவேற்றி வ…

  9. 130 ஆண்டு கால வரலாற்றில் ஜப்பானில்(japan) உள்ள பூஜி (Fuji )மலை சிகரத்தில் உள்ள பனி முழுவதுமாக உருகியுள்ளதால் ஜப்பான் மக்கள் அச்சத்தில் உறைந்து போயுள்ளனர். ஜப்பானின் கண்கவரும் இயற்கை அழகுகளில் ஒன்றாக இருப்பது ஃபூஜி மலை சிகரம். சுமார் 12,460 அடி உயரம் கொண்ட ஃபூஜி சிகரமானது ஜப்பானின் மிக உயரமான சிகரம் மட்டுமல்லாது, ஜப்பானின் கலாச்சார அடையாளங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது. இது உயரமான மலைச்சிகரம் மட்டுமல்ல உறக்கத்தில் இருக்கும் பெரிய எரிமலையும் ஆகும். எப்போதுமே பனி சூழ்ந்து காணப்படும் இந்த ஃபூஜி சிகரத்தின் உச்சியில் எப்போதுமே பனி சூழ்ந்து காணப்படும். ஆனால் அண்மைக்காலமாக ஜப்பானின் வழக்கத்தை விட அதிகமாக வெப்பநிலை உயர்ந்த நிலையில், இந்த ஆண்டு வரலாறு காணாத விதமா…

  10. வவுனியா, பூந்தோட்டம் பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் கட்டிலுக்கு அடியிலிருந்து முதலை ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று சனிக்கிழமை (02) இரவு இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் தெரியவருவதாவது, சம்பவத்தன்று, வீட்டிலிருந்தவர்கள் கட்டிலுக்கு அடியில் முதலை இருப்பதைக் கண்டு கூச்சலிட்டுள்ளனர். சத்தத்தைக் கேட்ட அயல் வீட்டார்கள், வீட்டினுள் சென்று பார்த்த போது கட்டிலுக்கு அடியில் முதலை இருப்பதைக் கண்டு உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளின் உதவியுடன் முதலையைப் பிடித்து வாகனத்தில் கொண்டு சென்று பாதுகாப்பான இடத்தில…

  11. ரஷ்ய (Russia) நீதிமன்றம் வரலாறு காணாத அபராத தொகையை கூகுள் (Google) நிறுவனத்திற்கு எதிராக விதித்து தீர்ப்பளித்துள்ளது. கூகுளின் தாய் நிறுவனமான Alphabet மூலம் 17 ரஷ்ய ஊடக நிறுவனங்களின் உள்ளடக்கங்கள் கட்டுப்படுத்தப்படுவதாக தெரிவித்து இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் நடவடிக்கைகளைக் கருத்திற்கொண்டு ரஷ்ய ஊடக நிறுவனங்களின் உள்ளடக்கங்களைக் கட்டுப்படுத்த கூகுள் நிறுவனம் நடவடிக்கை எடுத்திருந்தது. அமெரிக்க டொலர் இதற்கிணங்க அபராதத் தொகையாக 20 டெசிலியன் அமெரிக்க டொலர் ($20,000,000,000,000,000,000,000,000,000,000,000) விதிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த அபராதத் தொகையின் மதிப்பு 110 ட்ரில்லியன் டொலருக்கும் அதிகமாகும். அத்த…

  12. சீனாவின் பிறப்பு விகிதம் தொடர்ந்து குறைந்து வருவதால், தம்பதிகள் அதிக குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதை ஊக்குவிக்கும் நோக்கில் அரசாங்கம் பல்வேறு கொள்கைகளை அறிமுகப்படுத்த திட்டமிட்டு உள்ளது. அதன்படி, சீனாவின் ஸ்டேட் கவுன்சில் சமீபத்தில் புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டது. அதில், பிரசவத்திற்கான மானியங்கள் மற்றும் பல குழந்தைகளைக் கொண்ட குடும்பங்களுக்கு வரி குறைப்பு போன்ற நடவடிக்கைகளை கோடிட்டுக் காட்டி உள்ளது. இந்த வழிகாட்டுதல்கள் பிறப்பு விகிதத்தை அதிகரிப்பதற்கான ஆதரவான சூழலை உருவாக்க வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. State Council’s 13-point plan திட்டமானது, குழந்தை பராமரிப்பு சேவைகளை விரிவுபடுத்துதல், கல்வி, வீட்டுவசதி, வேலைவாய்ப்பு ஆதரவை மேம்படுத்துதல் ம…

  13. ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வேட்பாளர் சசிகலா ரவிராஜின் வீட்டின் மீது தாக்குதல்! ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வேட்பாளர் சசிகலா ரவிராஜின் வீட்டின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சசிகலா ரவிராஜின் வீட்டிற்கு அயல் வீட்டில் உள்ள பெண் ஒருவரினிலாயே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது என சசிகலா ரவிராஜ் குற்றம் சுமத்தியுள்ளார். மேலும் அந்த பெண்ணினால் தான் தொடர்ச்சியாக அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருவதாகவும் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யவுள்ளதாகவும் சசிகலா சுட்டிக்காட்டியுள்ளார். https://athavannews.com/2024/1405986

  14. பட மூலாதாரம்,NSW AMBULANCE படக்குறிப்பு, நியூ சௌத் வேல்ஸ் ஹண்டர் பள்ளத்தாக்குப் பகுதியில் நடந்து சென்ற போது, பாறை இடுக்கில் தவறி விழுந்தார். எழுதியவர், ஃப்ளோரா ட்ரூரி பதவி, பிபிசி நியூஸ் ஆஸ்திரேலியாவில் பெண் ஒருவர் நடைபயணம் சென்ற போது கீழே விழுந்த செல்போனை எடுக்க முயன்றபோது, இரு பாறைகளுக்கு நடுவே பல மணிநேரம் தலைகீழாக சிக்கிக்கொண்டார். மெட்டில்டா கேம்பெல் எனும் அப்பெண் இம்மாத தொடக்கத்தில் நியூ சௌத் வேல்ஸ் ஹண்டர் பள்ளத்தாக்குப் பகுதியில் நடந்து சென்ற போது, பாறை இடுக்கில் தவறி விழுந்தார். அவரை சுமார் ஏழு மணிநேரம் போராடி மீட்க வேண்டியிருந்தது. பாறைகளை நகர்த்துவது உட்பட “சவாலான” மீட்புப்பணிகளை அவசர சேவை பிரிவி…

  15. மன்னார் நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள நறுவிலிக்குளம் கிராமத்தில் உள்ள வீடு ஒன்றுக்கு சிறுவன் ஒருவருடன் சென்ற பெண் ஒருவர் ஜாதகம் பார்ப்பதாக கூறி வீட்டில் இருந்தவர்களை சுய நினைவை இழக்கச் செய்து சுமார் 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான தாலிக்கொடியை திருடிச் சென்றுள்ளனர். குறித்த சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை (25) இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில், நறுவிலிக்குளம் கிராமத்தில் உள்ள வீடு ஒன்றுக்கு சிறுவன் ஒருவருடன் சென்ற பெண் ஒருவர் கோவிலுக்கு நிதி சேகரிக்க வந்துள்ளதாக கூறியுள்ளார். இந்த நிலையில் அவர்கள் பணத்தை கொடுக்க குடிக்க நீர் கேட்டுள்ளனர். இதன் போது அவர்கள் குடிக்க நீர் கொடுத்து உள்…

  16. படக்குறிப்பு, கொலை செய்யப்பட்ட 32 வயதான ஜோத்ஸ்னா ஆகஸ்ட் 28-ஆம் தேதி காணாமல் போனார் கட்டுரை தகவல் எழுதியவர், பாக்யஶ்ரீ ராவத் பதவி, பிபிசி மராத்திக்காக 26 அக்டோபர் 2024 பாபநாசம் பட பாணியில் மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் கொலை செய்துவிட்டு அதனை மறைக்க ஒருவர் முயற்சி செய்துள்ளார். நாக்பூரில் காதலித்த பெண்ணை கொன்று புதைத்து, அந்த இடத்தை சிமெண்ட் வைத்து அந்த நபர் அடைத்துள்ளார் என்று காவல்துறை கூறியுள்ளது. குற்றம்சாட்டப்பட்டுள்ள நபர் இந்திய ராணுவத்தில் பணியாற்றியவர் ஆவார். நாக்பூரில் உள்ள பெல்டரோடி காவல்துறையினர் குற்றம்சுமத்தப்பட்ட நபரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. நடந்தது என்ன? கொலை செய்யப…

  17. யாழ் கந்தர்மடம் பகுதிக்கு அண்மையில் நேற்று பிற்பகல் பல்கலைக்கழக மாணவன் மீது தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. குறித்த மாணவன் தங்கியிருந்த வீட்டு அறையில் அவனது கட்டிலுக்கு கீழ் இருந்து 19 வயது பிரபல பாடசாலை மாணவி ஒருவர் நிர்வாண நிலையில் பிடிக்கப்பட்டார். குறித்த மாணவனின்அறைக்கு இவ்வாறு பல மாணவிகள் பல தடவைகள் வந்து சென்றுள்ளார்கள் எனவும் இது தொடர்பாக குறித்த வீட்டின் சொந்தக்காரியான வயோதிப மாதுவுக்கு அயலவர்கள் புகார் கொடுத்திருந்தார்கள். ஆனால் மூதாட்டி அது தொடர்பாக அக்கறை செலுத்தாது தொடர்ச்சியாக மாணவன் தங்குவதற்கு அனுமதித்துள்ளார். இவ்வாறான நிலையிலேயே நேற்று பிற்பகல் பல்கலைக்கழக மாணவன் மாஸ்க்ஸ் அணிந்தவாறு பெண் ஒருவரை தனது மோட்டார் சைக்கிளில் தனது றுாமுக்கு கொ…

  18. ஹட்டன் கல்வி வலய பாடசாலையொன்றின் அதிபர் தனது பாடசாலையில் தரம் 10இல் கல்வி கற்கும் மாணவி ஒருவரை தனிமையில் சந்திப்பதற்கு வருமாறு கடிதம் எழுதிய விடயம் அம்பலமானதால் அப்பாடசாலை அதிபருக்கு எதிராக பெற்றோர்களும் பிரதேச மக்களும் நேற்று வெள்ளிக்கிழமை (25) பாடசாலை முன்றலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அந்த மாணவியை பாலியல் ரீதியாக அதிபர் சீண்டலுக்கு உட்படுத்தியிருக்கலாம் என்றும் இதன்போது சந்தேகம் எழுப்பியுள்ளனர். அந்த மாணவியும் இதற்கு முன்னர் அதிபர் தன்னிடம் தகாத முறையில் நடந்துகொண்டமை தொடர்பில் அதே அதிபருக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதமும் தற்போது வெளிப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்துக்குச் சென்று அட்டன் வலயக…

  19. தலைக்கு ஐயாயிரம் ரூபா இலஞ்சம் கொடுத்த தமிழரசு வேட்பாளர்...! Vhg அக்டோபர் 21, 2024 மட்டக்களப்பில் ஓட்டோ சாரதிகளுக்கு தலா ஐயாயிரம் வீதம் இலஞ்சம் கொடுத்து, தமிழரசுக் கட்சியின் சர்ச்சைக்குரிய வேட்பாளர் ஒருவர் வாக்கு கோருவதாக அறியமுடிகிறது. நேற்று முன்தினம் (18-10-2024) இரவு 635 முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு தலா ஐயாயிரம் ரூபா இலஞ்சமாக கொடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அந்தவகையில் 31 இலட்சத்து 75 ஆயிரம் ரூபா இவ்வாறு இலஞ்சமாக கொடுக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் சில தொகுதிகளுக்கு இலஞ்சம் கொடுத்த நிலையில், நேற்றைய தினம் மட்டக்களப்பு தொகுதி மற்றும் கல்குடா தொகுதி என்பவற்றில் உள்ள முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு இவ்வாறு இலஞ்சம் வழங்கவுள்ளதாக அற…

      • Like
    • 4 replies
    • 685 views
  20. இந்திய தொழிலதிபர் ரத்தன் டாடா தனது 86 ஆவது வயதில் கடந்த 9 ஆம் திகதி காலமானார். இவர் டாடா குழும நிறுவனங்களின் தாய் நிறுவனமான டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஆவார். இவருக்கு தனிப்பட்ட முறையில் கோடிக்கணக்கில் சொத்து உள்ளது. ரத்தன் டாடா எப்போதும் வளர்ப்பு நாய்களுடன் இருப்பார். வளர்ப்பு நாய்கள்தான் அவருக்கு உயிராகும். அவர் தனது வீட்டில் ஜேர்மன் வகையைச் சேர்ந்த டிட்டோ என்ற ஒரு நாயை ஆசையாக வளர்த்து வந்தார். அவர் இறப்பதற்கு முன்பு தனது வளர்ப்பு நாய்க்கு சொத்து எழுதி வைத்துவிட்டு சென்று இருக்கிறார். மேற்கத்திய நாடுகளில் நாய்களுக்கு சொத்துகளை எழுதி வைப்பது ஒன்றும் புதிதல்ல. ஆனால் இந்தியாவில் மிகவும் அபூர்வமாகத்தான் அது போன்று சொத்து எழுதி வைப்பது வ…

  21. AI உடன் காதலில் விழுந்த சிறுவன் அதனுடன் வாழ உயிர்மாய்ப்பு ! Shana ஏஐ உரையாடல் தொழில்நுட்பமான சாட் ஜிபிடியுடன் காதலில் விழுந்த 14 வயது சிறுவன் அதனுடன் வாழ தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது இன்றைய நவீன காலகட்டத்தில் பல நவீன தொழிநுட்ப கண்டுபிடிப்புக்களால் ஆதாயம் உள்ளபோதும், மனித உறவுகளை தூரத்தில் கொண்டு செல்வதுடன், இளையோரின் பல விபரீத முடிவுகளுக்கும் காரணமாகி விடுகின்றது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இணையத்தளங்களுக்கு அடிமையாகி உள்ளனர். சிலவேளைகளில் இந்த மோகத்தால் அவர்கள் விபரீத முடிவுகளுக்கும் சென்று விடுகின்றனர். அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவன் பிரபல வரலாற்று புதின தொலைக…

      • Like
    • 1 reply
    • 1.1k views
  22. மாதுரு ஓயா தேசிய பூங்காவில் மயில் ஒன்றை வேட்டையாடி கொன்று சமைத்து உணவாக உட்கொண்ட காட்சி சமூக ஊடகங்களில் ஒன்றான யூடியூப் தளத்தில் பகிரப்பட்ட காணொளி தொடர்பில் வெளிநாட்டு பிரஜை மற்றும் நான்கு வேடுவச் சமூகத்தினர் மீது வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இந்த காணொளி ‘கோ வித் அலி’ (Go With Ali) என்ற யூடியூப் சேனலில் பகிரப்பட்டுள்ளது. அதில் தேசிய பூங்காவிற்குள் ஒரு குழுவினர் மயில் ஒன்றை வேட்டையாடி விறகு அடுப்பில் சமைத்து உட்கொள்ளும் காட்சி காணொளியாக படம்பிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வெளிநாட்டு பிரஜை மற்றும் நான்கு வேடுவச் சமூகத்தினர் அடங்கிய குழுவினர் தேசிய பூங்காவிற்குள் சட்டவிரோதமாக உட்பிரவேசித்தமை தொடர்பில் முதல்…

  23. தொலைந்துபோன 39 ஆண்டுகள் 1980ம் ஆண்டு. அவரது வயது24. அவர்,அவரது பெற்றோருடன் வசிக்கிறார். ஆனால் அவரது உண்மையான வயது 68. லூசியானோ டி அடாமோ திருமணமானவர், ஒரு மகன் இருக்கிறான். பெற்றோரை விட்டு விலகி நீண்ட காலங்களாகி விட்டன. இப்பொழுது அவரைப் பற்றி இத்தாலியின் ஊடகங்கள் தலைப்புச் செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன. லூசியானோ டி அடாமோ தனது வாழ்க்கையில் கடந்த 39 ஆண்டுகளை மறந்து விட்டார் என்பதே அந்தச் செய்தி. 2019ம் ஆண்டு, ரோம் நகரில் நடந்த ஒரு கார் விபத்தில் சிக்கி லூசியானோ டி அடாமோ, தனது நினைவுகளை இழந்து கோமா நிலைக்குப் போய்விட்டார். சில நாட்கள் கோமா நிலையில் இருந்த அவர் மீண்டும் விழித்தபோது அவருக்கு எல்லாமே அந்நியமாக இருந்தன. அவரால் தனது மனைவியைய…

  24. கையடக்கத்தொலைபேசிகளிற்கு வரும் அழைப்புகளிற்கு பதிலளித்தால் உங்கள் தொலைபேசிகள் வெடிக்கும் என வெளியாகியுள்ள வீடியோ செய்திகளை பொதுமக்கள் நம்பவேண்டாம் என இலங்கையின் கணிணி அவசர தயார் நிலை குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்தவிடயம் குறித்து தங்களுடன் பலர் தொடர்புகொண்டுள்ளனர் என கணிணி அவசர தயார் நிலை குழுவின் சிரேஸ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் தகவல் பாதுகாப்பு பொறியியலாளர்சாருக தமுனுபொல தெரிவித்துள்ளார். தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, 13 அல்லது 4 என்ற இலக்கங்களிலிருந்து அழைப்பு வந்தால் அவற்றிற்கு பதில் அளிக்கவேண்டாம். அதற்கு பதில் அளித்தால் உங்கள் கையடக்க தொலைபேசி உடனடியாக வெடித்துச்சிதறும், இது ஏற்கனவே இடம்பெற்றுள்ளது சிங…

  25. 22 Oct, 2024 | 09:32 PM கிழக்கு மாகாணத்தின் நிந்தவூர் கடற்கரையில் இராட்சத சுறா மீன் ஒன்று திங்கட்கிழமை (22) காலை உயிருடன் கரை ஒதுங்கியுள்ளது. கடலுக்குச் சென்ற மீனவர்கள் இதனை அவதானித்துள்ளனர். இந்நிலையில், கடற் கரையில் ஒதுங்கி தத்தளித்த இராட்சத சுறா மீனை அப்பகுதி மீனவர்கள் ஒன்றிணைந்து மீண்டும் கடலுக்குள் அனுப்பி வைத்துள்ளனர். நிந்தவூர் கடற்கரையில் கரை ஒதுங்கிய இராட்சத சுறா! | Virakesari.lk

    • 1 reply
    • 484 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.