செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7096 topics in this forum
-
மகிந்தவின் பின்னால் கோப்புகளை எடுத்துச் செல்லும் யுவதி யார்? [ திங்கட்கிழமை, 03 ஓகஸ்ட் 2015, 01:46.38 PM GMT ] முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பின்னால், யுவதி ஒருவர் செல்லும் புகைப்படங்கள் கடந்த சில தினங்களாக பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் வலம் வந்து கொண்டிருக்கின்றன. இந்த யுவதி யார் என தேடிப் பார்த்த போது அவர் அயேஷா மதுஷானி என்ற கலைஞர் எனவும் அவர் நடன குழுவொன்றை நடத்தி வருவதும் தெரியவந்துள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று குறிப்பிட்டுள்ளது. தற்போது இந்த யுவதி மிகவும் பிரபலமாகி விட்டதாகவும் மகிந்தவின் கோப்புகளை எடுத்துச் செல்லும் யுவதி என்றால் எல்லோருக்கும் தெரியும் எனவும் அந்த இணையத்தளம் கூறியுள்ளது. http://www.tamilwin.com/show-RUmtyITXSVms5F.html
-
- 0 replies
- 343 views
-
-
டிபென்டர் ரக வாகனத்தில் ஆயுதம் கடத்திய 6 பேர் சிக்கினர். August 03, 20151:54 pm மாளிகாவத்தை பகுதியில் டிபென்டர் ரக வாகனம் ஒன்றில் ஆயுதங்கள் கடத்திச் சென்ற ஆறு பேரை மாளிகாவத்தை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த வாகனத்திலிருந்து கூரிய ஆயுதங்கள் பல மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த வாகனத்தை பொலிஸார் சோதனையிட்ட போதே இவர்கள் 6 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மாளிகாவத்தை பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். http://www.jvpnews.com/srilanka/119163.html
-
- 0 replies
- 312 views
-
-
பிரபாகரன் பாடிகாட், உளவு துறை தலைவர்கள் அடங்கிய முக்கிய தளபதிகள் தேர்தலில் குதிப்பு! இலங்கையில் இடம்பெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் வடபகுதியை பிரதிநிதிபடுத்தி ஜனநாயக போராளிகள் என்ற அமைப்பின் சார்பில் முன்னாள் முக்கிய படைத்துறைகளை சேர்ந்த போராளிகள் தேர்தலில் களம் குதித்துள்ளனர் இவர்களின் தலைவர் பிரபாகரனின் பிரதான மெய்பாதுகாவளர் சிவந்தன் நவிந்திரா அலியாஸ் வேந்தன், ஆட்லொறிகளின் தலைமை தாக்குதல் கட்டளை தளபதியா விளங்கிய கலைக்குட்டி சுப்பரமணியன் கணணி பிரிவு பொறுப்பளார் அலியாஸ் சார்ல்ஸ் ,குமாரவேலு அகிலன் அலியாஸ் இயல்,பொட்டு அம்மான் அடுத்த நிலை உளவுத்துறை தளபதியாக விளங்கிய தங்கராச தேவதாசன் அலியாஸ் கங்கை அத்மன்,ஆகியோர் விடுதலை புலிகளின் முக்கிய தளபதிகளாக விளங்கியவர்கள். இதில் …
-
- 1 reply
- 442 views
-
-
9300 அடி உயரத்தில் இருந்து தவறவிட்ட ஐபோன் மீண்டும் கிடைத்து நன்றாக இயங்குவதால் உரிமையாளர் மகிழ்ச்சி நியூயார்க், ஆக.2-அமெரிக்காவில் உள்ள ஹவுஸ்டன் பகுதியில் இயற்கை எரிவாயு தயாரிக்கும் ’கியாஸ் கார்ப்பரேஷன் ஆப் அமெரிக்கா’ நிறுவனத்தின் அதிபராக உள்ள பென் வில்சன்(74) என்பவர் சமீபத்தில் தனது தொழிற்சாலையில் அலுவல்களை முடித்து விட்டு தனது தனி விமானத்தில் ஏறி டெக்சாஸ் நகரில் உள்ள வீட்டுக்கு புறப்பட்டார்.சில நூறு கிலோ மீட்டரை கடந்து விமானத்தை அவர் ஓட்டிவந்தபோது சரியாக மூடப்படாத இடதுப்புற கதவு திடீரென்று சுமார் 3 அங்குலம் அகலத்துக்கு திறந்து கொண்டது. உள்ளே புகுந்த காற்றின் அசுர வேகத்தில் பக்கத்து இருக்கையில் இருந்த நாளிதழ்கள் பறந்து கீழே விழுந்தன.கதவை சரியாக சாத்திய வில்சன்,…
-
- 2 replies
- 316 views
-
-
மிகப்பெரிய சுரங்க நகரம் கட்டியுள்ள எறும்புகள்: படித்தால் சுவாரசியம் (வீடியோ இணைப்பு)[ வெள்ளிக்கிழமை, 31 யூலை 2015, 12:19.47 பி.ப GMT ] பிரேசிலில் ஒரு நெடுஞ்சாலையோடு ஒட்டிய தள பகுதியில் அறிவியல் ஆய்வாளர்கள் தோண்டியபோது, அங்கு இலைகளை துண்டித்து எடுத்துச் செல்லும் எறும்பு இனம், ஒருங்கிணைந்த சமுதாயமாக வாழும் ஒரு பெரிய சாம்ராஜ்யமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.நல்ல சாலைவசதி உட்பட அந்த எறும்புகளின் வாழ்க்கைக்கு தேவையான சகல வசதிகளுடன் கூடிய மிகப்பெரிய நாகரீக நகரமே உள்ளே இருந்ததைக் கண்டு வியப்படைந்துள்ளனர். மேற்புற தரைதளத்தில் 10 இடங்களில் ஆங்காங்கே புற்றுகள் போன்ற துளைகள் இருந்தது. இது உள்ளே இருக்கும் மில்லியன் கணக்கான எறும்புகளுக்கு காற்றோட்ட வசதி (Air cindition) க்காக ஏற்படுத்திக்…
-
- 0 replies
- 362 views
-
-
வானில் கைகோர்த்து கொண்டு நின்ற 164 பேர்: பிரமிக்க வைக்கும் சாதனை (வீடியோ இணைப்பு)[ சனிக்கிழமை, 01 ஓகஸ்ட் 2015, 01:04.42 பி.ப GMT ] கனடாவின் ஒட்டோவாவில் 164 பேர் வானில் செங்குத்தாக ஸ்கை டைவிங் செய்து சாதனை படைத்துள்ளனர்.ஒட்டாவா புறநகர் பகுதியில் வான் வெளியில் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டது. பாராசூட் உதவியுடன் 164 பேரும் ஒருவரது கையை ஒருவர் கோர்த்து ஒரு ராட்சச மலர் வடிவில் சில நிமிடங்கள் நின்றனர். 240 கிலோ மீட்டர் வேகத்தில் 164 பேர் வானில் செங்குத்தாக ஸ்கை டைவிங் செய்து சாதனை புரிந்து உள்ளனர்.13 முறைக்கு மேல் முயற்சி செய்து இதற்கு முன் உள்ள சாதனையை முறியடித்து உள்ளனர். 2012 ஆம் ஆண்டு 138 பேரால் ஸ்கை டைவிங் சாதனை நிகழ்த்தப்பட்டது. இந்த காட்சியை பார்வையாளர்கள் தரையில் இருந்துக…
-
- 0 replies
- 205 views
-
-
கோடீஸ்வரரை மணப்பது எப்படி? இணையத்தை கலக்கும் கேள்வியும் பதிலும்! கோடீஸ்வரரை மணப்பது எப்படி? எனும் இளம்பெண் ஒருவரின் கேள்விக்கு நயமாக, ஆனால் நெத்தியடி ரகமாக ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி அளித்தாக சொல்லப்படும் பதில் இணையத்தில் உலா வரத்துவங்கி கவனத்தை ஈர்த்திருக்கிறது. இந்த கேள்விக்கு பதில் அளித்தவர் உண்மையில் முகேஷ் அம்பானி தானா என்று பார்ப்பதற்கு முன், அந்த இளம்பெண்ணின் கேள்வியை பார்த்து விடலாம். கோடீஸ்வரரை திருமணம் செய்து கொள்ள என்ன செய்ய வேண்டும்? எனும் தலைப்பிலான அந்த கேள்வியில், இங்கு சொல்ல இருப்பதை நேர்மையாக சொல்கிறேன். எனக்கு 25 வயது ஆகப்போகிறது. நான் அழகாக, ஸ்டைலாக இருக்கிறேன். ஆண்டுக்கு 100 கோடிக்கும் மேல் சம்பாதிக்கும் ஒருவரை நான் மணந்து கொள்ள விரும்புகிறேன்…
-
- 0 replies
- 315 views
-
-
இலங்கைக்கு எதிரான யோசனையை பான் கீ மூன் நிராகரித்தார் [ ஞாயிற்றுக்கிழமை, 02 ஓகஸ்ட் 2015, 01:12.17 AM GMT ] இலங்கைக்கு எதிரான யோசனையை ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் நிராகரித்துள்ளார் என சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவையில் அங்கம் வகிக்கும் சில நாடுகளின் ஒத்துழைப்புடன் இலங்கைக்கு எதிராக சர்வதேச போர்க் குற்றவியல் விசாரணை நடாத்த மனித உரிமை கண்காணிப்பகம் முயற்சி மேற்கொண்டுள்ளது. மனித உரிமை கண்காணிப்பகத்தின் உயர் அதிகாரிகளில் ஒருவரான பில்பே பொலோசியன் மேற்கொண்ட முயற்சியை பான் கீ மூன் முறியடித்துள்ளார். சீனா மற்றும் ரஸ்யா ஆகிய நாடுகள் இலங்கைக்கு பக்கச்சார்பாக செயற்படுவதாக பொலோசியன் தெரிவித்துள்ளார். எனினும், பாதுக…
-
- 0 replies
- 263 views
-
-
துளசி இலைகள் புற்றுநோயை போக்கும் என்ற செய்தியை வெளியிட்ட தொலைக்காட்சிக்கு £ 25000 அபராதம் 1 ஆகஸ்ட் 2015பகிர்க துளசி இலைகள் மற்றும் கருப்பு மிளகு ஆகிய இவ்விரண்டும் புற்றுநோயை தவிர்க்கும் என்ற உறுதிப்படுத்தப்படாத தகவலை ‘யோகா பார் யூ’ என்ற நிகழ்ச்சியில் ஒளிபரப்பிய, ஆசிய தொலைக்காட்சி நிறுவனத்திற்கு ஐக்கிய ராஜ்ஜியத்தில் இருபத்தி ஐயாயிரம் பவுண்டுகள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. துளசி இலைகளும் கறுப்பு மிளகும் புற்றுநோயை குணமாக்கும் என அந்த நிகழ்ச்சியில் கூறப்பட்டது.இது ஆதாரமற்ற, நிரூபிக்கப்படாத ஒரு மருத்துவ ஆலோசனை என்று தெரிவித்துள்ள பிரிட்டனின் ஒளிப்பரப்பு துறை கண்காணிப்பு அமைப்பான ஆப்காம், நிகழ்ச்சியை பார்ப்பவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் விதமாக இந்த தகவல் அமைந்துள்ளது என்…
-
- 1 reply
- 387 views
-
-
குடிக்கும் கணவர்களுக்கு மனைவியர் அளிக்கும் கடும் "தண்டனை" 5 மணி நேரங்களுக்கு முன்னர்பகிர்க கென்யா தலைநகர் நைரோபியிலிருந்து இரண்டு மணி நேர தூரத்தில் இருக்கும் ஒரு கிராமத்தில் கள்ளச் சாரயம் பலரது வாழ்வை நாசமாக்கியிருக்கிறது. குடிக்கு அடிமையான தங்கள் கணவர்களின் ஆணுறுப்பை மனைவியர் துண்டித்துவிடும் சம்பவங்களும் நடந்திருக்கின்றன. குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்கள், இரவில் இந்த இரும்புக் கவசத்தை அணிந்துகொள்ளலாம் என்கிறார் இந்த கடைக்காரர்.இந்தப் பகுதியில் எளிதில் கிடைத்துவரும் கள்ளச்சாராயத்தின் காரணமாக, ஆண்கள் குடிக்கு அடிமையாவதால், பெண்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரும்பாலும் பெண்களே குடும்பத்தைப் பார்த்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. இங்கே கிடைக்கும் கள்ளச்சாராயத்தின…
-
- 1 reply
- 277 views
-
-
அமெரிக்காவில் பணி நிமித்தமாக சென்றபோது விபத்தில் சிக்கி உயிரிழந்த இந்திய வம்சாவழியைச் சேர்ந்த பெண்ணுக்கு கவுரவம் செலுத்தும் வகையில் அந்நாட்டு தேசியக் கொடி அரை கம்பத்தில் பறந்த சம்பவம் இங்குள்ள இந்தியர்கள் அனைவருக்கும் கண்ணியம் சேர்க்கும் விதமாக அமைந்திருந்தது. இங்குள்ள நியூ ஜெர்சி மாநிலத்தைச் சேர்ந்த ஹினா பட்டேல் என்பவர், மருத்துவம் சார்ந்த படிப்பை முடித்துவிட்டு, அவசரகால சிகிச்சை பிரிவில் பணியாற்றி வந்தார். கடந்த 25-ம் தேதி வந்த அவசர அழைப்பையடுத்து, ஒரு ஆம்புலன்சில் ஏறி சிகிச்சை அளிக்க சென்றபோது எதிரே வந்த கார் மோதிய விபத்தில் சிக்கிய ஹினா பட்டேல் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மறைவுக்கும், கடமை உணர்வுக்கும் கவுரவம் சேர்க்கும் வகையில் நியூ ஜெர்சி மாநிலத்தில் உள்ள அரசு அ…
-
- 0 replies
- 366 views
-
-
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கு இல்லினாயிஸ் மாநிலத்தின் சிகாகோ நகரில் ஒரு வீடு உள்ளது. இந்த வீட்டின் அருகே சந்தேகப்படும் வகையில் சுற்றித்திரிந்த மர்ம வாலிபரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரித்தபோது, நான் ஒபாமாவின் மகன். இன்றிரவு 11 மணிக்கு என்னை சந்திப்பதற்காக எனது தந்தை ஒபாமா இங்கு வரப் போகிறார் என்று பதில் அளித்தார். அவரது முதுகில் இருந்த பையை பார்த்து சந்தேகப்பட்ட போலீசார், உடனடியாக வெடிகுண்டுகளை கண்டுபிடித்து செயலிழக்க வைக்கும் சிறப்பு படையை வரவழைத்தனர். அந்த பையை பரிசோதித்தில் அபாயகரமான, ஆபத்து விளைவிக்கக்கூடிய எதுவும் அதில் இல்லை என தெரியவந்தது. இதையடுத்து, மார்க்கெஸ் ஹாஸல்(20) என்ற அந்த வாலிபரை போலீசார் கைது செய்து, சிகாகோ கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். போலி வெடி…
-
- 0 replies
- 234 views
-
-
சென்னை தொழிலதிபருக்கு ஆப்படித்த சிங்கள நடிகை! July 31, 201510:28 am தமிழ்நாடு சென்னை காமாராஜர் நகரை சேரந்த தொழிலதிபர் கோபிராஜ் என்பவர் சிங்கள நடிகை அக்க்ஷா சுதாரியிடம் 24 கோடி ரூபாவை இழந்துள்ளார். கோபிராஜ் இரகசிய பொலிசாருக்கு வழங்கிய முறைப்பாட்டையடுத்து பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்தனர் . கட்டன் நஷனல் வங்கியின் வெள்ளவத்தை கிளையில் 98000 பெறுமதியான டொலர்கள் (13034000 ரூபா)அக்க்ஷா சுதாரியியால் வைப்பில் இடப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்ட்டுள்ளது. இரகசியப் பொலிசாரினால் விசாரனணகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுவருகிறது. http://www.jvpnews.com/srilanka/118837.html
-
- 0 replies
- 276 views
-
-
அப்துல் கலாம் இறப்பில் இந்திய “ரோ” ஆ….ஆ…?? இலங்கை புலனாய்வா…? வெளிவரும் புது வெடிப்பு..! July 31, 201510:29 pm முன் நாள் இந்திய ஜாதிபதியும் , அணு ஆராட்சியாளருமான அப்துல் கலாம் கடந்த மாதம் இலங்கை சென்று வந்த விடயம் அனைவரும் அறிந்ததே. இலங்கையின் ஆட்சி அமெரிக்கா சார்பானதும் கூட இன் நிலையில் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அப்துல் கலாம் அவர்கள் உடனே உயிரிழந்தது பெரும் சந்தேகங்களை தோற்றுவித்துள்ளதாக , ரஷ்யாவை தளமாகக் கொண்டு இயங்கும் புலனாய்வு ஊடகம் ஒன்று இன்று செய்தி வெளியிட்டுள்ளது. பொதுவாக மாரடைப்பு வருவதற்கு காரணம் , இதயத்திற்குச் செல்லும் குழாய்களில் கொலஸ்ரோல் படிந்து அவரை திடீரென அடைபடுவதே. இந்தியாவின் முன் நாள் ஜனாதிபதி என்ற வகையில் , அவருக்கு அன் நாட்டில் பெரும் …
-
- 0 replies
- 366 views
-
-
கல்யாண மண்டபமாக மாறிய டெல்லி ஃபார்முலா- 1 கார் பந்தய களம்! இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்க ஷேர் செய்ய ட்வீட் செய்ய ஷேர் செய்ய கருத்துக்கள் (0) மெயில் டெல்லி, அருகே நொய்டாவில் உள்ள புத் இன்டர்நேஷனல் சர்க்யூட் இப்போது கல்யாண சத்திரமாக மாறியிருக்கிறது. ரூ.2,000 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட இந்தியாவின் முதல் ஃபார்முலா- 1 கார் பந்தய களமான இதில், தற்போது கல்யாண வைபவங்கள் நடத்தும் இடமாக மாறியிருக்கிறது. ரேஸ் கார், பைக்குகளின் மிரட்டலான சப்தத்திற்கு பதிலாக இப்போது புத் சர்க்யூட்டில் டும்டும்டும் சப்தம் கேட்டும் இடமாக மாறியிருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியிருக்கிறது. ஏமாற்றம் அதிக அளவிலான வரிவிதிப்பு என்ற குற்றச்சாட்டை முன் வைத்த…
-
- 0 replies
- 2.5k views
-
-
காணாமல் போயுள்ள தனது மகனான தம்பிராசா திருவளவன்(வயது 19) பற்றி தகவல்கள் ஏதும் இன்றுவரை இல்லாதிருப்பதாக கூட்டமைப்பு முக்கியஸ்தரான தம்பிராசா தெரிவித்துள்ளார். கடந்த 23ம் திகதி தனது மகன் யாழ்.நகரப்பகுதியினில் வைத்து காணாமல் போயிருப்பதாகவும் அவர் கடத்தப்பட்டு இருக்கலாமென தான் சந்தேகிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். தனது மகன் பாடசாலை மாணவன் எனவும் சம்பவ தினம் தனது கட்சி அலுவலகத்தினில் தங்கவைத்து விட்டு கூட்டமைப்பு வேட்பாளர் சிறீகாந்தாவுடனான சந்திப்பிற்கென சென்றிருந்ததாகவும் பின்னர் திரும்பி வந்திருந்த நிலையினில் மகனை காணவில்லையெனவும் தெரிவித்துள்ளார். தனது மகன் காணாமல் போயுள்ளமை தொடர்பினில் ஜனாதிபதி முதல் வடக்கு முதலமைச்சர் வரை அறிவித்துள்ள போதும் இன்றுவரை தகவலற்றிருப்பத…
-
- 0 replies
- 1.4k views
-
-
-
- 0 replies
- 408 views
-
-
27 லட்சம் லைக்ஸ் வாங்கிய புகைப்படம்! அமெரிக்காவைச் சேர்ந்த கென்டால் ஜென்னர் என்ற மாடல் அழகியின் புகைப்படம்தான் கடந்த வாரங்களில் அதிக லைக் வாங்கிய புகைப்படமாக இருந்து வருகிறது. இன்ஸ்டாகிராம் என்ற சமூக வலைதளத்தில் இவர் பதிவிட்ட புகைப்படம் லைக்ஸை அள்ளு அள்ளு என்று அள்ளுகிறது. கடந்த, 5 வாரங்களுக்கு முன்பு ஜென்னர் பதிவேற்றிய புகைப்படம், 27 லட்சம் லைக்ஸ் வாங்கி வரலாற்று சாதனையை படைத்துள்ளது. ஜென்னரின் இதயத்தில் ஒவ்வொரு முறை லப்-டப் கேட்கும் போதும் அந்த புகைப்படத்தை ஒருவர் ’லைக்’ செய்துள்ளார்கள். இதற்கு முன்பு, 24 லட்சம் லைக் வாங்கியிருந்த தன் அக்கா கிம்மின் சாதனையை முறியடித்துள்ளார் ஜென்னர். இந்த புகைப்படத்தில் இருக்கும் ஜென்னரின் முகப் பொலிவா? மோன நிலையா? கூந்தலின் வட…
-
- 0 replies
- 495 views
-
-
ஆகஸ்ட் 18 இற்குப் பின்னர் புதிதாக அமைய இருக்கும் அரசாங்கத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இணைத்துக் கொள்ளப்படாது என ஐக்கிய தேசியக் கடசியின் முக்கியஸ்தரும் போக்குவரத்து அமைச்சருமான றஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். சீங்களத் தொலைக்காட்சியான அத தெரனவின் அரசியல் நிகழ்ச்சியான 360 இல் தோன்றிக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இந்தத் தகவலை தெரிவித்தார். சாதாரண நாட்களில் வேறொன்றையும் தேர்தல் காலங்களில் வேறொன்றையும் பேசும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது சரியான கொள்கையை திடமாக அறிவிக்காத வரையில் இவ்வாறான கூட்டிற்கு இடமில்லை எனவும் அவர் குறிப்பிட்டார். அத தெரன
-
- 4 replies
- 831 views
-
-
கணவர் அருகில் இருந்துகொண்டே காதலனுக்கு ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பிய மனைவி: சாமர்த்தியமாக மாட்டிவிட்ட சகோதரிகள் (வீடியோ இணைப்பு)[ சனிக்கிழமை, 25 யூலை 2015, 12:09.27 மு.ப GMT ] அமெரிக்காவில் கணவரின் அருகில் இருந்துகொண்டே காதலனுக்கு குறுஞ்செய்தி அனுப்பிய மனைவியை சகோதரிகள் இருவர் சாமர்த்தியமாக கணவரிடம் மாட்டிவிட்டனர்.அமெரிக்காவின் ஜோர்ஜியா மாகாணத்தில் உள்ள அட்லாண்டாவில் சகோதரிகளான டிலானா மற்றும் பெரெயின் ஹின்சன் பேஸ்பால் விளையாட்டை பார்த்துகொண்டிருந்தனர். இந்நிலையில் அவர்கள் முன்னால் கணவருடன் உட்கார்ந்திருந்த பெண் ஒருவன் யாருக்கோ குறுஞ்செய்தி அனுப்பிக்கொண்டிருந்தார். அவர் தனது காதலனின் பெயரை பெண்ணின் பெயர் போன்று பதிவு செய்து அவருடன் ஆபாசமாக உரையாடிக்கொண்டிருந்ததை சகோதரிகள்…
-
- 1 reply
- 462 views
-
-
ராஜஸ்தானில் ஒரு சிறுமிக்கு தனது முன்ஜென்மம் பற்றி நினைவு வந்துள்ளது அதிசயத்தை ஏற்படுத்தியுள்ளது. பூனம் என்ற அந்த சிறுமிக்கு தற்போது 14 வயதாகிறது. முற்பிறவியில் தான் யாருடைய மகளாக பிறந்தேன் என்றும் யாருடன் தனக்கு திருமணம் நடந்தது என்றும் தற்போது நினைவு கூர்கிறார் அந்த சிறுமி. அதுமட்டுமல்லாது தன்னுடைய மரணம் எப்போது எப்படி நிகழ்ந்தது என்று கூறி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார். முன்ஜென்மத்தில் தன்னுடன் வாழ்ந்தவர்களை தேடிச் சென்று சந்தித்து பேசினார் பூனம். இதைக்கேட்டு சிறுமியின் பெற்றோர்களும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மறுபிறவி பற்றிய கதைகள் பற்றி திரைப்படங்கள் எடுக்கப்பட்டாலும், மறுபிறவி என்பது உண்மைதான் என்று பல ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் நடைபெற்ற ஆய்வில் நிரூபிக்க…
-
- 2 replies
- 939 views
-
-
அமெரிக்க அதிபர் பாரக் ஹுசைன் ஒபாமாவின் தந்தையின் பெயர் பாரக் ஒபாமா. கென்ய நாட்டைச் சேர்ந்த இவர், ஹவாய் பல்கலைக்கழகத்தில் படிப்பதற்காக சிறு வயதில் கென்யாவிலிருந்து வெளியேறி அமெரிக்காவில் குடியேறினார். அங்கு கன்சாசைச் சேர்ந்த ஸ்டான்லி ஆன் துன்ஹம் என்ற வெள்ளைக்கார பெண்ணை திருமணம் செய்தார். இவர்களுக்குப் பிறந்தவரே அதிபர் ஒபாமா. ஒபாமாவுக்கு 2 வயதாக இருக்கும்போது ஹவாயிலிருந்து படிப்பை தொடர்வதற்காக ஹார்வர்டு பல்கலைக்கழகத்துக்கு சென்றார் அவரது தந்தை. பின்னர் கென்யாவுக்கு திரும்பிவிட்டார். பின்னர் 1982-ல் நிகழ்ந்த கார் விபத்தில் ஒபாமாவின் தந்தை பாரக் இறந்தார்.. இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஒபாமா அதிபராக பதவியேற்ற பிறகு முதன்முறையாக நேற்று, தனது தந்தையின் சொந்த நாடான கென்யாவுக்கு…
-
- 0 replies
- 232 views
-
-
உணவுக்காக தீவில் தனியாக போராடும் குரங்குகள்: காரணம் யார்? (வீடியோ இணைப்பு)[ சனிக்கிழமை, 25 யூலை 2015, 12:16.10 மு.ப GMT ] லைபீரியா நாட்டின் தீவு ஒன்றில் ஆராய்ச்சிக்காக கொண்டு செல்லப்பட்ட குரங்குகள் உணவு இல்லாமல் தவித்துவருகின்றன.அமெரிக்காவின் நியூயோர்க் இரத்த ஆராய்ச்சி நிலையம் கடந்த 1974ஆம் ஆண்டு ஆராய்ச்சி நிலையம் அமைப்பது தொடர்பாக லைபீரியா நாட்டுடன் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டது. அதன்படி அந்நாட்டின் அடர்ந்த காடுகளில் குரங்குகளை வைத்து ஆராய்ச்சி மேற்கொண்டது. இந்நிலையில் கடந்த 2005 ஆம் ஆண்டு இதை கைவிட்டது. மேலும் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து இந்த மனித குரங்குகளை பராமரிப்பதற்கான பணத்தையும் அந்நிறுவனம் நிறுத்திவிட்டது. இதனால் சுமார் 66 குரங்குகள் உணவுகள் இன்றி தவித்துவருக…
-
- 0 replies
- 284 views
-
-
ஜப்பானிய டோக்கியோ நகரில் இலகு ரக விமானமொன்று குடியிருப்புப் பிரதேசமொன்றின் மீது விழுந்து விபத்துக்குள்ளானதில் குறைந்தது மூவர் பலியானதுடன் 3 வீடுகளும் இரு கார்களும் தீக்கிரையாகியுள்ளன. டோக்கியோ நகரிலுள்ள சொபு விமானநிலையத்திலிருந்து புறப்பட்ட மேற்படி விமானம் புறப்பட்டு சிறிது நேரத்தில் விபத்துக்குள்ளாகியுள்ளது. பலியானவர்களில் விமானத்தில் பயணித்த இருவரும் தரையிலிருந்த பெண்ணொருவரும் உள்ளடங்குகின்றனர். இந்த சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ளதாக பிராந்திய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்….. - See more at: http://www.canadamirror.com/canada/46724.html#sthash.Zylvf6Gp.dpuf
-
- 0 replies
- 239 views
-
-
கனடா- நீர்மூழ்காளர் அணி ஒன்று நூற்றாண்டு பழமைவாய்ந்த கப்பல் ஒன்று பிரசித்தமான நிலையில் காணப்பட்டதை புகைப்படங்கள் மற்றும் வீடியோ பிரதிகளில் பதிவு செய்துள்ளனர். நூற்றாண்டு காலம் பழமைவாய்ந்த ஒரு கப்பல் நீண்ட காலம் தண்ணீருக்கடியில் கிடந்தும் அதன் நிலை மாறாத தன்மையுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.பிறின்ஸ் எட்வேட் ஐலன்ட் மற்றும் நோவ ஸ்கோசியாவை சேர்ந்த ஆறு பேர்கள் கொண்டு நீர்மூழ்காளர்கள் குழு ஒன்று இதனை கண்டுபிடித்துள்ளனர். கண்ட போது தாங்கள் பிரமிப்படைந்ததாக குழுவின் தலைவர் றொபேட் மக்கேய் தெரிவித்தார்.நோவ ஸ்கோசியா பிக்ரோ துறைமுக கடற்கரையில் இந்த 84-மீற்றர் இரட்டை பாய்மர கப்பல் கண்டுபிடிக்கப்பட்டது.துறைமுகத்திலிருந்து 200மீற்றருக்கும் குறைந்த தூரத்தில் மூழ்கிய நிலையில் கண்டுபிடிக்கப…
-
- 0 replies
- 328 views
-