செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7085 topics in this forum
-
இந்தியா தமிழ் நாட்டிலிருந்து செவ்வாய் கிரகத்துக்கு ஒருவழி பயணமாக செல்லும் கோவை மாணவி, அதுபற்றி ருசிகர பேட்டி அளித்துள்ளார். செவ்வாய் கிரகத்தில் உயிர் வாழ ஏற்ற சூழல் நிலவுகிறதா? என்று இந்திய நாட்டு விஞ்ஞானிகள் உள்பட உலக விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வருகிறார்கள். இந்த நிலையில் செவ்வாய் கிரகத்தில் மனித வாழ்விடங்களை நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது. நெதர்லாந்தை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் தனியார் நிறுவனமான ‘மார்ஸ் ஒன்’ அமைப்பு இதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. செவ்வாய்கிரகத்துக்கு பயணம் செய்ய தகுதி வாய்ந்தவர்களை தேர்வு செய்யும் பணிகளை இந்த நிறுவனம் ஏற்கனவே தொடங்கி விட்டது. இதற்கான அறிவிப்பு வெளியான உடனே, உலகம் முழுவதிலும் இருந்து 2 லட்சத்து 2 ஆயிரத்து 586 பேர் செவ்வாய் பயண த…
-
- 11 replies
- 822 views
-
-
இங்கிலாந்தை சேர்ந்த ட்ரிஸ்டன் லோரைன் என்ற விமானி, பிரபல விமான சேவை நிறுவனமான ‘பிரிட்டிஷ் ஏர்வேஸ்’ நிறுவனத்தில் 19 ஆண்டுகள் விமானியாக பணியாற்றிய அனுபவசாலி. ஆனால், 2006-ல் அந்நிறுவனத்திலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டார். காரணம் 19 ஆண்டுக்கால பணியின் பலனாக அவருக்கு கிடைத்த வியாதி. நிறுவனத்திலிருந்து வெளியேற்றப்படுவதற்கு முன்னதான 7 ஆண்டுகளில் பிஏஈ 146 ரக ஜெட் விமானத்தை இயக்கினார். அந்த விமானத்தின் இன்ஜினை ஒவ்வொரு முறை இயக்கும் போதும் கரும் எண்ணெய் புகை வெளியாகும். ஆனால் அது இவ்வளவு பெரிய பாதிப்பை உண்டாக்கும் என்று அவர் அப்போது நினைக்கவிலை. அவருக்கு ஏற்பட்டது ‘ஏரோடாக்சிக் சிண்ட்ரோம்’ என்ற நோய். தொடக்கத்தில் இந்த நோயின் பாதிப்பால் கை விரல்கள் மற்றும் கால்களில் உணர்ச்ச…
-
- 1 reply
- 332 views
-
-
கனடா- குளிர்காலத்தின் ஆழ்ந்த உறைபனி நயாகரா நீர்வீழ்ச்சியை கண்கவர் பனி கற்பாறைகளாக மாற்றியுள்ளதோடு சுற்றுபுறங்களில் உள்ள மரங்களை சுற்றி படிககற்கள் தொங்குவது போன்று காட்சியளிக்கின்றன. இக்காட்சிகள் உல்லாச பயணிகளை கவர்கின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது. நயாகரா ஆறு உறைபனியினால் மூடப்பட்டுள்ளபோதும் வீழ்ச்சி முற்றாக உறைந்து விடவில்லை. ஆனால் வீழ்ச்சியின் விளிம்பு அருகில் உள்ள பிரமாண்டமான பனி கட்டமைப்பு சுற்றுலா பயணிகளை காந்தமாக ஈர்க்கின்றதென கூறப்பட்டுள்ளது. இந்த உறைபனி நிலைமை விரைவில கரைந்து விடும் என எதிர்பார்க்க முடியாதெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நயாகரா பகுதி வெப்பநிலை தான இதற்கு காரணம். - See more at: http://www.canadamirror.com/canada/38266.html#sthash.Ov1hJx…
-
- 0 replies
- 341 views
-
-
அமெரிக்காவில் கர்ப்பிணி பெண் ஒருவர் தன் வாயில் வாளை வைத்து செய்த சாகசம் அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. அமெரிக்காவின் டெக்சாஸ்(Texas) மாகாணத்தில் உள்ள டலாஸ்(Dallas) பகுதியை சேர்ந்த வெரோனிக்கா ஹெர்ணான்டெஸ்(Veronica Hernandez) என்ற பெண் தற்போது 9 மாத கர்ப்பணியாக உள்ளார். இவர் 14 அங்குலம் கொண்ட நீண்ட வாள் ஒன்றை தன் வாயினுள் வைத்து, அதை முழுவதுமாக விழுங்கி சாகசம் செய்துள்ளார். இந்த அபாயகரமான சாகசத்தை பார்த்த பார்வையாளர்கள் வாயடைத்து போனதுடன் அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் ஆழ்ந்துள்ளனர். இதுகுறித்து அவர் கூறுகையில், இவ்வாறு செய்வதை நான் ஒரு பொழுதுபோக்காக கொண்டுள்ளேன் என்றும், எனது இச்செயல் ஆபத்தாக இருந்தாலும் அது என் குழந்தையை எவ்விதத்திலும் பாதிக்காது எனவும் தெ…
-
- 0 replies
- 264 views
-
-
பொண்ணு பொறந்தாச்சு! மைலா லாவ்ரி நான்கு மாதங்களே ஆன இந்தப் பெண் குழந்தைக்காக 206 ஆண்டுகள் இங்கிலாந்தில் ஒரு குடும்பம் காத்திருந்தது. ஐந்து தலைமுறைகளாகப் பெண் குழந்தையே பிறக்காத குடும்பம் அது! மார்க் லாவ்ரி, மைலாவின் தந்தை. ஹன்னா இவரின் இரண்டாவது மனைவி. முதல் மனைவியின் மூலம் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். முதலில் மார்க்கைத் திருமணம் செய்யும்போது இவருடைய குடும்ப வரலாறைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லையாம். அடுத்தடுத்து ஆண் பிள்ளைகள் பிறக்கவும் அந்தப் பெண் அதை காரணமாகக் காட்டி விவாகரத்து வாங்கிச் சென்றுவிட்டாராம். மார்க் மனம் நொந்திருந்த நேரத்தில் அறிமுகமான ஹன்னாவிடம் தன் கவலைகளைப் பகிர்ந்துகொண்டிருக்கிறார். 'இருவரும் சேர்ந்து வாழ்வது என முடிவு செய்தபோதே என் குடும்பப் பின…
-
- 1 reply
- 449 views
-
-
கனடா செய்தி பொலிஸ் அதிகாரிக்கு தர்ம அடி கொடுத்து "எஸ்கேப்" ஆன இளம்பெண்கள் சுற்றிவளைப்பு (வீடியோ இணைப்பு) [ வியாழக்கிழமை, 19 பெப்ரவரி 2015, 01:07.32 பி.ப GMT ] கனடாவில் பொலிஸ் அதிகாரி ஒருவரை இரு இளம்பெண்கள் சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கனடாவின் ஒன்றாரியோ(Ontario) மாகாணத்தில் உள்ள பிரம்டன்(Brampton) நகரில் உள்ள பள்ளி ஒன்றின் தடை செய்யப்பட்ட இடத்தினுள், நேற்று முன் தினம் இளம்பெண்கள் இருவர் அத்துமீறி நுழைந்துள்ளனர். இத்தகவல் பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதையடுத்து, பொலிஸ் அதிகாரி ஒருவர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அப்பெண்களை கைது செய்ய முயன்றுள்ளார். ஆனால் இதை கவனித்த அவ்விரு பெ…
-
- 3 replies
- 461 views
-
-
வாலிபரை, கீழே தள்ளி.... இழுத்துச் சென்ற பேய்: சிசிடிவி கேமராவில் பதிவு. வாஷிங்டன்: அமெரிக்காவில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் ஒரு நிழல் உருவம் வாலிபர் ஒருவரை கீழே தள்ளி இழுத்துச் சென்றது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அமெரிக்காவில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் வாலிபர் ஒருவர் காரிடாரில் நடந்து சென்றுள்ளார். அப்போது நிழல் போன்ற உருவம் அந்த வாலிபரை கீழே தள்ளி அவரது வலது காலைப் பிடித்து சிறிது தூரம் இழுத்துச் சென்றுள்ளது. அப்போது அந்த வாலிபர் பயத்தில் அலறியுள்ளார். இதையடுத்து அந்த உருவம் அங்கிருந்து மறைந்துவிட்டது. உடனே அந்த வாலிபர் பீதியில் எழுந்து வந்த வழியே ஓடிவிட்டார். இந்த காட்சி ஹோட்டல் காரிடாரில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதை அந்த…
-
- 32 replies
- 8.3k views
-
-
ஹைதராபாத் உயிரியல் பூங்காவில் இருந்த ஆமையின் மீது ஏறி நின்றவாறு உள்ள தனது புகைப்படங்களை ஃபே ஸ்புக்கில் பகிர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டார். ஹைதராபாத்தைச் சேர்ந்த இளைஞர் ஃபசல் ஷேக். இவர் கடந்த ஆண்டு மே மாதம் நேரு உயிரியல் பூங்காவுக்கு சென்றபோது, அங்குள்ள விலங்குகளைப் படம் எடுத்திருக்கிறார். அப்போது அங்கு காணப்பட்ட ஓர் ஆமை மீது ஏறி நின்று படம் எடுத்து வெளியிட்டால் ஃபேஸ்புக்கில் அதிக விருப்பங்கள்(லைக்ஸ்) கிடைக்கும் என்று அவர் நினைத்துள்ளார். அதனால் உடனே, விலங்குகளைப் பாதுகாக்க வைக்கப்பட்டிருந்த தடுப்புகள் மீது தாவி குதித்துள்ளார். பின்னர் அங்கிருந்த ஆமையின் அருகே சென்று, அதன் மீது ஏறி நின்று படம் எடுத்து, அதனை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்.…
-
- 6 replies
- 1k views
-
-
கிரேக்கத்தில் கொரினத்தில் அஸ்புரோ கம்பொஸ் நகரிலுள்ள தேவாலயத்தில் இருக்கும் இயேசு கிறிஸ்துவின் உருவச் சிலையில் இருந்து கண்ணீர் வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. கடுமையான பொருளாதார கொள்கைகளுக்கு எதிர்ப்பு கொண்ட கட்சி அதிகாரத்தை கைப்பற்றிய தினமான கடந்த ஜனவரி 25 ஆம் திகதியிலிருந்து யேசுவின் உருவச்சிலையில் இருந்து கண்ணீர் வருவதாக குறித்த தேவாலய மதகுருமார் தெரிவிக்கின்றனர். அந்த சிலையின் கண்களிலிருந்து தெளிவான எண்ணெய் தன்மையான மணமற்ற திரவம் சொரிந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/articles/2015/02/20/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0…
-
- 0 replies
- 386 views
-
-
ராபரேலி உத்தரபிரதேச மாநிலம் ராம்பூரில் ஒரு திருமணம் கோலாகலமாக நடநது கொண்டு இருந்தது. மணமகள் இந்திரா (வயது 23) மணமகன் ஜூகல் கிஷோர் (வயது 25). வர்மாலா என அழைக்கப்டும் மணமக்கள் இருவரும் மாலை மாற்றி கொள்ளும் சடங்கு நடந்து முடிந்தது. மந்திரம் முழங்க இந்திரா கூடி இருந்த கூட்டத்தினர் நடுவே கிஷாரின் மனைவி என உறுதி செய்யப்பட்டார். திடீர் என மணமகன் சுருண்டு விழுந்தார் அவ்ருக்கு வலிப்பு ஏற்பட்டது. அங்கிருந்த அனைவரும் பதற்றம் அடைந்தனர். உடனடியாக மணமகனின் உறவினர்கள் மணமகனை தூக்கி கொண்டு மருத்துவமனைக்கு சென்றனர். மணமகள் மட்டும் இப்போது தனியாக நின்றாள். கிஷோரின் இந்த நிலை குறித்து தனக்கு ஏன் சொல்லவில்லை என கூறி பெற்றோரிடம் சண்டை போட்டார். உடனடியாக தனக்கு வேறு மணமகனை பார்த்து இந…
-
- 3 replies
- 611 views
-
-
பூமி, சூரியனை சுற்றவில்லை, சூரியன்தான் சுத்துது: சவூதி மத குரு. ரியாத்: பூமி சூரியனை சுற்றவில்லை, சூரியன் தான் பூமியை சுற்றி வருகிறது என்று சவுதி அரேபியாவைச் சேர்ந்த மத குரு தெரிவித்துள்ளார். சவுதி அரேபியாவைச் சேர்ந்த மத குரு ஷேக் அல் கைபாரி மக்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்கையில் எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகியுள்ளது. மாணவர் ஒருவர் ஷேக்கிடம் பூமி நிற்கிறதா அல்லது நகர்ந்து கொண்டிருக்கிறதா என்று கேட்டார். அதற்கு ஷேக் கூறுகையில், பூமி நிற்கத் தான் செய்கிறது. அது நகரவில்லை என்றார். தனது பதிலை நியாயப்படுத்த அவர் ஒரு உதாரணமும் அளித்தார். ஒரு டம்ப்ளரை கையில் எடுத்துக் கொண்ட அவர், நாம் எல்லாம் தற்போது எங்கு உள்ளோம்? நாம் ஷார்ஜா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ச…
-
- 13 replies
- 810 views
-
-
அவசர போலீஸ் என்பதற்கு அர்த்தம் தெறிக்க உழைத்திருக்கிறார்கள் நியூஸிலாந்து நாட்டில் உள்ள ஆக்லேண்ட் போலீஸார். ஆக்லேண்டில் வாயிட்மாட்டா துறைமுகத்தை ஒட்டிய சாலைப் பகுதி செம டேஞ்சரான ஏரியா. காரணம் - சாலையை ஒட்டிய சிறு இறக்கத்தில் ஆழ்கடல் ஆரம்பித்து விடுகிறது. எனவே, ‘கார், பைக்கில் வருபவர்கள் எப்போதுமே அலெர்ட்டாக இருக்க வேண்டும்’ என்கிற எச்சரிக்கைப் பலகையையும் தாண்டி கடலுக்குள் தனது பிஎம்டபிள்யூ காரைச் செலுத்தி விட்டார், 63 வயதான அந்தப் பெண்மணி. கார் தண்ணீருக்குள் மூழ்கிக் கொண்டிருந்ததைப் பார்த்த அக்கம் பக்கத்தினர், காவல்துறைக்குத் தகவல் சொல்ல, தடாலென காரியத்தில் இறங்கியிருக்கிறார்கள் பால்வாட்ஸ் மற்றும் சைமன் ருஸெல் என்னும் போலீஸ் அதிகாரிகள். ‘‘இது மிகவும் ஆழமான பகு…
-
- 6 replies
- 701 views
-
-
செவ்வாய் கிரத்திற்கு செல்வதற்கான ஒரு-வழி பயணத்திற்கு உலகம் பூராகவும் இருந்து தெரிவுசெய்யப்பட்ட 100-பேர்களடங்கிய குறுகிய பட்டியலில் கனடாவை சேர்ந்த ஆறு பேர்கள் தெரிவாகியுள்ளனர். நெதர்லாந்தை அடிப்படையாக கொண்ட Mars One என்ற அமைப்பு சிவப்பு கிரகத்தில் மனித குடியிருப்பை ஸ்தாபிக்க எண்ணியுள்ளது. இதற்கான தெரிவில் மூன்றாவது சுற்றில் 100-பேர்களை தெரிவு செய்துள்ளது. வேட்பாளர்களில் ஒன்ராறியோவை சேர்ந்த நால்வரும், பிரிட்டிஷ் கொலம்பியாவை சேர்ந்த இருவரும் அடங்குகின்றனர். யுகொனை சேர்ந்த ஒருவரும் தெரிவாகி மூன்றாவது சுற்றில் நீங்கி விட்டார். Mars One ஆரம்பத்தில் ஒரு-வழி பணிக்காக உலகம் முழவதிலும் இருந்து 200,000விண்ணப்பங்களை பெற்றுள்ளது. இவற்றில் 8,243 கனடிய விண்ணப்பங்களாகும். சாரணர் தலைவரும…
-
- 0 replies
- 382 views
-
-
http://youtu.be/cK_MNCvjSps சீனாவில் சிறுவர்கள் சிலர் ஒன்றாக இணைந்து கழிவுநீர் குழாயிற்குள் பட்டாசை கொளுத்தி போட்டதால் அந்தரத்தில் தூக்கி வீசப்பட்டனர். நண்பர்கள் சிலர் ஒன்று சேர்ந்து உற்சாகமாக பட்டாசு வெடித்து கொண்டாட திட்டமிட்டனர், ஆனால் அந்த கொண்டாட்டத்தை சற்று வித்தியாசமாக செய்யலாம் என்று நினைத்த இவர்கள், அங்கிருந்த கழிவுநீர் செல்லும் குழாயின் நுனியில் பட்டாசை வைத்து தீ வைத்துள்ளனர். பட்டாசில் தீ பற்றிய அடுத்த வினாடியே பெறும் சத்தத்துடன் பட்டாசு வெடித்து அங்கிருந்த சிறுவர்கள் அனைவரும் அந்தரத்தில் தூக்கி வீசப்பட்டனர். கழிவுநீர் செல்லும் குழாயிற்குள் எரிவாயு இணைப்பு இருந்ததை அந்த சிறுவர்கள் கவனிக்க தவறியதால், பெறும் வெடி விபத்து ஏற்பட்டது. சிறுவர்களில் ஒருவன் தூக்கி…
-
- 3 replies
- 406 views
-
-
உலகத்திலுள்ள பனிக்கட்டிகள் எல்லாம் உருகி விட்டால் நாம் வாழும் பூமி எப்படியிருக்கும்... Voici à quoi ressemblera la Terre lorsque toute la glace aura fondu Partager sur Facebook Partager sur Twitter PAR FLORIAN COLAS LE 14 FÉVRIER 2015 Le visage de la Terre après la fonte des glaces Même s’il est encore temps de s’adapter au réchauffement climatique, une partie des changements liés au réchauffement sera irréversible. Le niveau des mers a augmenté à un taux plus élevé année après année, et le Groupe d’experts intergouvernemental sur l’évolution du climat estime qu’il pourrait augmenter d’un mètre supplémentaire ou plus d’ici la fin de ce sièc…
-
- 4 replies
- 540 views
-
-
அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்தில் எண்ணெய் ஏற்றிக் கொண்டு சென்ற டேங்கர் ரயில் ஒன்று திடீரென தடம் புரண்டதில் எண்ணெய் டேங்கர்கள் ஒன்றுடன் ஒன்று மோதி தீப்பிடித்துள்ளன. விர்ஜினியா மாகாணத்தில் வடக்கு டக்கோடாவில் இருந்து யார்க் டவுனுக்கு டேங்கர் ரயில் ஒன்று எண்ணெய் ஏற்றிக் கொண்டு சென்று கொண்டிருந்தது. இந்நிலையில், அந்த ரயில் அதீனா மற்றும் பூமர் நகரங்களுக்கு இடையே கனவா ஆற்றின் கரையோரம் சென்றபோது திடீரென தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த திடீர் விபத்தில், எண்ணெய் ஏற்றிச் சென்ற 13 டேங்கர்கள் கவிழ்ந்ததோடு, ஒரு டேங்கர் ஆற்றுக்குள் விழுந்துள்ளது. தடம் புரண்டு கவிழ்ந்த எண்ணெய் டேங்கர்கள் ஒன்றுடன் ஒன்று மோதி தீப்பிடித்ததில், அவை வெடித்து சிதறி கரும் புகையுடன் எரிந்துள்ள…
-
- 0 replies
- 347 views
-
-
சென்னை: உலகக் கோப்பை கிரிக்கெட் ஜுரம் திமுக தலைவர் கருணாநிதியைும் விட்டு வைக்கவில்லை. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் காதலர் தினத்தன்று துவங்கியது. இந்நிலையில் இன்று காலையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போட்டி துவங்கியது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் டோணி பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 300 ரன்கள் எடுத்தது. துணை கேப்டன் கோஹ்லி 107 ரன்கள் எடுத்து உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இந்நிலையில் ட்விட்டர், ஃபேஸ்புக் என்று எங்கு பார்த்தாலும் இந்த போட்டி பற்றி தான் பேசிக் கொண்டிருக்கின்றனர். ட்விட்டரில் #BleedBl…
-
- 6 replies
- 713 views
-
-
வேலன்டைன்ஸ் டே ... உங்களுக்கு ஒன்று தெரியுமா? "வேலன்டைன்ஸ் டே" Valentines Day உலகில் பெப்ரவரி மாதம் வரும் காதலர் தினமானது ஒரு பண்டிகை போன்று கொண்டாடப்படுகிறது. அந்நாளில் காதலர்கள் தங்களது அன்பு, பரிசுகள், இனிப்புகள் மற்றும் இது போன்று இன்னும் பலவற்றை பகிர்ந்து கொள்வார்கள். இப்படி காதலர் தினம் சிறப்பதற்கு பின்னணியில் ஒரு புராண வரலாறே உண்டு.. தேவர்களின் படைத் தலைவரான முருகன் மலைவாழ் பெண் வள்ளியின் கரத்தைப் பிடிக்க ஆடிய கூத்துக்கள் பற்றி படித்திருப்பீர்கள்தானே..? வள்ளியை மணந்ததின் மூலம், தான் ஜாதிகளுக்கு அப்பாற்பட்டவன் என்பதை சர்வ வல்லமை பெற்ற கடவுளான முருகன் உலகத்திற்கு காட்டினான். நம்பிராஜன் என்ற வேடனால் வளர்க்கப்பட்ட வள்ளி, முருகன் மீது சற்…
-
- 8 replies
- 1.6k views
-
-
பாக். வீரரின் பிய்ந்த ஷூவை ஒட்டும் இந்திய வீரர்:... ஃபெவிகுவிக்கின் உலகக் கோப்பை ஸ்பெஷல் விளம்பரம்! டெல்லி: வாகா எல்லையில் பாகிஸ்தான் வீரரின் பிய்ந்த ஷூவை இந்திய வீரர் ஃபெவிகுவிக் போட்டு ஒட்டுவது போன்ற டிவி விளம்பரம் பிரபலமாகியுள்ளது. இந்தியா பாகிஸ்தான் இடையேயான உலகக் கோப்பை போட்டி ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் நகரில் இன்று நடந்து வருகிறது. இந்தியா வெற்றி பெற ரசிகர்கள் விரும்புகிறார்கள். இந்நிலையில் இந்தப் போட்டியை மனதில் வைத்து ஃபெவிகுவிக் பிசின் விளம்பரம் ஒன்றை களம் இறக்கி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. வாகா எல்லையில் மாலை நேரம் நடக்கும் கொடியிறக்க நிகழ்ச்சியில் இந்திய வீரரும், பாகிஸ்தான் வீரரும் நடந்து வந்து ஒருவர் முகம் அருகே மற்றொருவர் கால் வரும் அளவுக்கு …
-
- 0 replies
- 612 views
-
-
கவனம் ஒரு செக்கன் போதும்.... வாழ்வே போய்விடும்......
-
- 2 replies
- 453 views
-
-
திருப்பூர்: காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூரில் கழுதைக்கும், நாய்களுக்கும் திருமணம் செய்து வைத்த இந்து முன்னணியைச் சேர்ந்த 65 பேரை போலீசார் கைது செய்தனர். ஆண்டுதோறும் காதலர் தினத்துக்கு ஒரு சில அமைப்புகள் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதற்காக பல்வேறு நூதன போராட்டங்களிலும் அந்த அமைப்பினர் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூர் மாநகர் மாவட்ட இந்து முன்னணி சார்பில் சீர்திருத்த திருமணம் என்ற பெயரில் கழுதைக்கும், நாய்களுக்கும் திருமணம் செய்து வைக்கும் போராட்டம் திருப்பூர் பழைய பஸ் நிலையம் முன் நேற்று நடந்தது. அங்கு கழுதை, இரண்டு நாய்களின் கழுத்தில் மாலைகள் அணிவித்து மணமக்கள் போல் அ…
-
- 3 replies
- 776 views
-
-
பதின்மூன்று கோடி இருபத்திரண்டு லட்ச ரூபா பெறுமதியான ஒன் மில்லியன் டாலர் நோட்டு அறுபது லட்ச ரூபாவுக்கு கொழும்பிலும். காத்தான்குடியிலும். கொழும்பில் பெட்டா. கதிரேசன் வீதி, செட்டியார் தெரு, தாஜ் சமுத்திரா ஹோட்டலுக்கு முன் கோள் பேஸ் திடல், மெரைன் ரைவ். பம்பலப்பிட்டி மெஜஸ்ரிக் சிட்டி என கிட்டத்தட்ட ஒரு 500 பேர். ஒவ்வொருவருடனும் ஒரு மூன்று நான்கு பேர் அனைவரும் காத்தான் குடி. திருகோணமலை. வவுனியா. கண்டி. அக்குறணை. காலி என படித்தவர்கள். ரொம்பவும் படித்தவர்கள். வியாபாரம் செய்து உடனடியாக பணம் உழைக்க வேண்டும் என்ற அவாவில் துடிக்கும் துடிப்பான இளைஞர்கள். மற்றும் பாமரர்கள் என ஒரு பட்டாளம். யார் இவர்கள் ??? இவர்கள் ஒரு மில்லியன் டொலரை வைத்துக்கொண்டு விற்பதற்காக கொழும்பு வந்தவர்கள். இ…
-
- 0 replies
- 602 views
-
-
Get Flash to see this player. மாரடைப்பு வந்தவருக்கு உதவாமல் வேடிக்கை பார்த்த மருத்துவமனை ஊழியர் 8 மணி நேரங்களுக்கு முன்னர் குறிப்பு: இந்த காணொளியில் ஒலி வர்ணனை இல்லை. பிரிட்டனின் பர்மிங்ஹாமிலுள்ள ஒரு மருத்துவமனைக்கு வெளியே மாரடைப்பு வந்து விழுந்துகிடந்த ஒருவருக்கு உதவத் தவறிய மருத்துவமனை ஊழியர் ஒருவருக்கு ஒத்திவைக்கப்பட்ட எட்டு மாத கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவசர உதவிப் பிரிவுக்கு வெளியே ஒருவர் மாரடைப்பு வந்து கிடக்கும்போது, அதை பார்த்தும் அந்த ஊழியர் கால்சட்டைப் பைக்குள் கைவிட்டபடி நிற்கும் வீடியோ பதிவு வெளியிடப்பட்டுள்ளது. மாரடைப்பு வந்த அந்த 47 வயது நபர் பின்னர் இறந்துபோனார். http://www.bbc.co.uk/tamil/global/2015/02/150212_paramedic
-
- 5 replies
- 557 views
-
-
உறங்கிக் கொண்டிருந்த பெண்ணொருவரின் தலைமயிர்கள் ரோபோ முறையிலான வாக்குவம் கிளீனரினால் உள்ளிழுக்கப்பட்ட சம்பவம் தென் கொரியாவில் இடம்பெற்றுள்ளது. செங்வோங் நகரைச் சேர்ந்த 52 வயதான இப்பெண் தனது வீட்டை சுத்திகரிப்பதற்காக ரோபோ வாக்குவம் கிளீனர் ஒன்றை வாங்கினார். அண்மையில் இப்பெண் தனது வீட்டின் தரையில் உறங்கிக்கொண்டிருந்தபோது அவரின் தலைமயிர் தரையில் விரிந்துகிடந்தது. அத்தலைமயிர்களை தூசிகள் என தவறாக கருதிய ரோபோ, அவற்றை தனக்குள் உள்ளிழுக்கத் தொடங்கியது. தனது தலைமயிர் இழுக்கப்படுவதை உணர்ந்து இப்பெண் திடுக்கிட்டு எழுந்தார். எனினும் தலைமயிரை ரோபோவிடமிருந்து விடுவித்துக்கொள்ள முடியாத நிலையில், தீயணைப்புப் படையினருக்கு அவர் தகவல் கொடுத்தார். பின்னர் தீயணைப்…
-
- 10 replies
- 637 views
-
-
காதல் திருமணம் புரிந்தவர்களுக்கான பாராட்டு விழா சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கம் சார்பில் சென்னையில் நடைபெற உள்ளது. இது குறித்து சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ''இன்றைக்கு ஏற்பட்டுள்ள சமூக பொருளாதார வளர்ச்சியின் காரணமாக கல்வி நிறுவனங்கள், பணியிடங்களில் ஆண்கள், பெண்கள் ஒன்றாகப் பழகும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக ஜாதி, மதம், இனம் என்ற பாகுபாடு, தடைகளைக் கடந்து காதல் திருமணங்கள் நடைபெறுகின்றன. ஆனால் பழமைவாதிகளும், பிற்போக்கு சக்திகளும், ஜாதிய, மதவாத சக்திகளும் இத்தகைய திருமணங்களுக்கு எதிராகச் செயல்படுகின்றனர். இதனால் கெளரவக் கொலைகளும், பல்வேறு இழிவுபடு…
-
- 0 replies
- 239 views
-