Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. மூன்று பிள்ளைகளை அணைத்துக் கொண்டு கிணற்றுக்குள் குதித்த தாய் ! கிளிநொச்சி – வட்டக்கச்சி பிரதேசத்தில் தனது மூன்று பிள்ளைகளையும் அணைத்துக் கொண்டு கிணற்றுக்குள் தாய் ஒருவர் குதித்த நிலையில் அவர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். இதில் உயிரிழந்த ஒரு பிள்ளையின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், ஏனைய குழந்தைகளின் உடல்களை எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கணவருடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாகவே குறித்த சம்பவம் இடம்பெற்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இருப்பினும் இந்த சம்பவம் குறித்து தர்மபுரம் பொலிஸார் மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். https://www.meenagam.com/மூன்று-பிள்ளைகளை-அணைத்து/

  2. தனு ரொக் குழுவை இலக்கு வைத்து தொடரும் வாள் வெட்டு October 1, 2020 யாழ்ப்பாணம் – நீர்வேலி சந்திக்கு அண்மையில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல் இளைஞன் மீது சராமாரியாக வாள்வெட்டுத் தாக்குதலை நடத்தியதோடு, மகனைக் காப்பாற்ற முற்பட்ட தாயார் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இருவரும் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என கோப்பாய் காவல்துறையினா் தெரிவித்தனர். இந்த வன்முறைச் சம்பவம் நேற்று (புதன்கிழமை) இரவு 8 மணியளவில் இடம்பெற்றது. சம்பவத்தில் பு.சிவா (வயது -30) அவரது தாயார் ரேணுகா (வயது -50) ஆகிய இருவர் மீதே இவ்வாறு வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 3 மோட்டார் சைக்கிள்கள…

  3. வாழப்பாடி அருகே ஏற்பட்ட விபத்தில் உயிருக்கு போராடிய இளைஞர்களை பொதுமக்கள் செல்போனில் படம் எடுக்க ஆர்வம் காட்டியதால் 3 பேர் உயிர் இழந்தள்ளனர். சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள புழுதிக்குட்டை புதுக்காடை பகுதியை சேர்ந்த டிரைவர் ரமேஷ் (24) நேற்று முன்தினம் தனது நண்பர் வெங்கடேஷ் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் பேளூர் நோக்கி சென்றார். மோட்டார் சைக்கிள் ஏரிகோழிக்கரையில் சென்றபோது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் 2 மோட்டார் சைக்கிளில் சென்ற 4 வாலிபர்களும் தூக்கி வீசப்பட்டனர். இதில் ரமேஷ் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார். மற்ற மூவர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினர்.இதைபார…

  4. இயற்கைக்கு மாறாக குளோனிங் மூலம் குழந்தைகளை உருவாக்கமுடியுமா? Published on Jan 19, 2013 https://www.youtube.com/watch?feature=endscreen&v=76hoS3ehQwA&NR=1

    • 0 replies
    • 433 views
  5. மனைவிக்கு தெரியாமல் பணம் சேமித்தால் என்ன நடக்கும்? புத்தாண்டில் நடந்த ருசிகர சம்பவம்! மனைவிக்கு தெரியாமல் கணவர் லட்சக்கணக்கான பணத்தை பழைய பையில் போட்டு சேமித்து வந்துள்ளார். அந்த பையை மனைவி, குப்பை லாரியில் வீசியதால், கணவன் மயக்க நிலைக்கே சென்று விட்டார். கடைசியில் காவல்துறை மூலம் குப்பைகளை எரித்து மறுசுழற்சி செய்யும் மையத்திற்கு சென்று பணம் கண்டெடுக்கப்பட்டது. இந்த ருசிகர சம்பவம் ஜெர்மனி நாட்டில் அரங்கேறியுள்ளது. பவேரியா மாகாணத்தில் உள்ள நூரம்பர்க் என்ற நகரில் 55 வயதுடைய ஒருவர், தன்னுடைய மனைவியுடன் வசித்து வருகிறார். புத்தாண்டு தினத்தில் வீட்டிற்கு உயர்ந்த பொருள் ஒன்றை வாங்குவதற்காக அவர் லட்சக்கணக்கான பணத்தை சேமித்து வந்துள்ளார். மனைவிக்கு தெரிந்தால…

  6. யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டிற்கு சென்ற ரௌடிக்குழுவொன்று பொதுமக்களால் மடக்கிப்பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை இந்த சம்பவம் நடந்தது. தென்மராட்சி மட்டுவில் வடக்கு பகுதியில் வாள்வெட்டிற்கு சென்ற குழுவே மடக்கிப் பிடிக்கப்பட்டது. இரண்டு ரௌடிகள் பிடிக்கப்பட்டனர். ஏனையவர்கள் தப்பியோடி விட்டனர். எட்டுப் பேர் கொண்ட ரௌடிக்குழு வாள்களுடன் தாக்குதல் நடத்த சென்றனர். இதையடுத்து ஒன்றுகூடிய மக்கள் ரௌடிகளை வளைத்து பிடிக்க முயன்றனர். இரண்டு ரெடிளகள் சிக்கினர். ஏனைய ரௌடிகள் தப்பியோடி விட்டனர். மடக்கிப் பிடிக்கப்படும் போது இரண்டு ரௌடிகளும் வாள்களுடனேயே சிக்கினர். புத்தூரை சேர்ந்த மகாதேவன் கோகுலன் (30), ஆவரங்கால் மேற்கு புத்தூர் பகுதியை சேர்ந்த…

  7. தனியாக வசிக்கும் வயதான பெண்ணொருவரின் வீடொன்றின் கூரையினுள் அடுத்தடுத்து இரு மாடுகள் வீழ்ந்து அதிர்ச்சியடையச் செய்த சம்பவமொன்று இங்கிலாந்தின் லமோர்னா எனுமிடத்தில் இடம்பெற்றுள்ளது. 77 வயதான ஸு மார்ஷெல் எனும் பெண்ணின் வீட்டிலேயே இவ்வாறு மாடுகள் வீழ்ந்துள்ளது. இதனால் வீட்டுக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது. ஆனால் இதன்போது அதிர்ஷ்டவசமாக எவருக்கும் உயிராபத்துக்களோ காயங்களோஏற்படவில்லை. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, குறித்த பெண்மணி சமலறையில் வேலை செய்து கொண்டிருக்கையில் அவரது நெசவு செய்யும் தறிக்கு அண்மையில் இரு மாடுகள் ஒரு நிமிட இடைவெளியில் வீழ்ந்துள்ளன. இது குறித்து மார்ஷெல் கூறுகையில், 'பாரிய சத்தம் கேட்டது. மரம் வீழ்ந்ததாக நினைத்தேன். ஆனால் இரு மாடுகள் வீழ்ந்தன…

  8. முச்சக்கர வண்டி மோதியதில் அடிபட்டு உயிருக்கு போராடிய தனது கன்றுக் குட்டியைப் பார்த்து பதறிய தாய்ப் பசு, கன்றை நாக்கினால் தடவி பாசப் போராட்டம் நடத்தியக் காட்சி கண்டோரின் கண்களில் நீரை வரவழைத்தது. தமிழகத்தின் திருச்சி மன்னார்புரத்தில் இருந்து கே.கே.நகருக்கு ஒரு முச்சக்கர வண்டி சென்று கொண்டிருந்தது. காஜாமலை காலனி அருகே அந்த முச்சக்கர வண்டி சென்றபோது, ஓடிவந்த கன்றுக் குட்டி அதன் மீது மோதி சாலையில் கவிழ்ந்தது. இதில், முச்சக்கர சாரதிக்கு லேசான காயம் ஏற்பட்டது. முச்சக்கர வண்டி மோதிய வேகத்தில் தூக்கி வீசப்பட்ட கன்றுக் குட்டி, படுகாயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தது. இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் ஓடி வந்…

  9. குடிப்பழக்கத்திற்கு அடிமையான கோகோ என்ற பிரிட்டிஷ் நாய்க்கு கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்துள்ளனர். 2 வயது நிரம்பிய கோகோ ஒரு லாப்ரடோர் கலவை. கோகோ தூங்குவதற்கு முன் மது அருந்தும் பழக்கம் கொண்டிருந்தது, அதன் உரிமையாளர் இறந்த பிறகு, கால்நடை மருத்துவர்கள் கோகோ மற்றும் மற்றொரு நாய் மதுவுக்கு அடிமையாக இருப்பதைக் கண்டறிந்தனர். குடிப்பழக்கத்திற்கு அடிமையான இரண்டு நாய்களுக்கு கால்நடை மருத்துவர்கள் சிகிச்சையைத் தொடங்கியுள்ளனர், எனினும் ஒரு நாய் இறந்தது. கால்நடை மருத்துவர்கள் கோகோவை தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து ஒரு மாதத்திற்கும் மேலாக சிகிச்சை அளித்து வருகின்றனர். கோகோ ஆபத்தில் இருந்து மீண்டுள்ளதாகவும், சாதாரண நாயைப் போலவே நடந்து கொள்வதாகவும் கால்நடை மருத்துவ…

  10. புகைப்பிடிப்பவர்களுக்கு வவுனியாவில் பிறந்தநாள் கொண்டாடிய இளைஞர்கள் புகைப்பிடிப்பவர்களுக்கு வவுனியா மாவட்ட சுயாதீன தமிழ் இளைஞர் அமைப்பால் முட்டாள்கள் தினத்தில் பிறந்தநாள் வாழ்த்து சொல்லும் விழிப்புணர்வு பேரணி ஓன்று நடத்தப்பட்டது. சிந்தாமணி பிள்ளையார் ஆலய முன்றலில் ஆரம்பமாகிய பேரணி வவுனியா பழைய பஸ்நிலையம்,கடைவீதி, இலுப்பையடியூடாக,புதிய பஸ்நிலையத்தை சென்றைடைந்து பின்னர் குடியிருப்பு பிள்ளையார் ஆலயத்தில் நிறைவடைந்தது. இதன் போது இருசக்கர உழவு இயந்திரத்தில் பிறந்தநாள் கேக் வைக்கப்பட்டு அதனை தொடர்ந்து இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் பேரணியாக பின் தொடர்ந்து வந்தார்கள். இதன் போது மக்களுக்கு புகைதல் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கி வைக்க…

    • 1 reply
    • 432 views
  11. வன்னியில் இறுதி யுத்தத்தில் காவுகொள்ளப்பட்ட ஆண்களின் துணையில்லாத வீடுகளுள் அத்துமீறிப் நுழையும் இராணுவத்தினரின் தொல்லை அதிகரித்திருப்பதாக பிரதேச மக்கள் அச்சங்கொண்டுள்ளனர். நேற்றிரவும் அப்பகுதியில் இத்தகைய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பாண்டியன்குளம்- நெட்டாங்கண்டல் பிரதேசங்களிலிருந்து சுமார் ஆறு கிலோமீற்றர் தூரம் காட்டுப்பகுதிக்கு அப்பாலுள்ள சறாட்டிகுளம் கிராமத்தில் சுமார் 70 குடும்பங்கள் மீள்குடியேறி வாழ்ந்து வருகின்றன. அடிப்படை வசதிகள் மற்றும் வெளித்தொடர்புகள் அதிகமில்லாத இந்தக் கிராமத்தில் அண்மைக்காலமாக படையினரின் அடாவடித்தனங்கள் அதிகமாக இடம்பெற்று வருவதாக விசம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கிராமத்திலுள்ள கணவனை இழந்த இளம் பெண்னொர…

  12. 33 ஆண்டுகளாக 10ம் வகுப்பில் பெயில் - கொரோனாவால் 51 வயதில் பாசான அதிசயம் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பள்ளி, கல்லூரி தேர்வுகள் அனைத்தும் நடைபெறவில்லை. அனைத்து மாநிலங்களும் 10-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு ஆல் பாஸ் என அறிவித்தன. அதே நேரத்தில், 33 ஆண்டுகளாக ஆங்கிலத்தில் பெயிலாகி வந்த தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த 51 வயது நபர் இந்த கொரோனாவால் ஆல் பாஸ் ஆகி மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளார். தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர் நூருதீன் (51). இவர் கடந்த 1987-ம் ஆண்டு 10-ம் வகுப்பு பொது தேர்வை எழுத தொடங்கினார். அப்போது எழுதிய தேர்வில் ஆங்கிலத்தில் தேர்ச்சி பெறவில்லை. அன்றிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் விடாமுயற்சியாக விண்ணப்பித்து தேர்வு எழுதி வந்தார். பாச…

  13. வவுனியா பூந்தோட்டம் பகுதியில் வாழை மரம் ஒன்றில் பொத்தி வர முன்பே குலை வெளியே வந்துள்ளது. வழமையாக வழையிலிருந்து பொத்தி வெளியே வந்துதான் குலை வருவது வழக்கம். ஆனால் இங்கு இரண்டும் சரிசமனாக வெளியே தெரிகின்றது. இந்த அதிய வாழையை பலர் ஆர்வத்துடன் பார்வையிட்டு வருகின்றனர். https://newuthayan.com/story/16/வவுனியாவில்-அதிசயம்-வாழை.html

  14. திருவேற்காட்டில் இருந்து பெரம்பூர் செல்லும் 29இ பேருந்து இன்று காலை பெரம்பூர் ஜமால்யா என்ற பகுதியில் சென்றுகொண்டிருந்தது. அப்போது பேருந்தில் இருந்த மாணவர்களுக்குள் கோஷ்டி தகராறு ஏற்பட்டது. அப்போது மாணவர்களில் ஒரு கோஷ்டியில் திடீரென பேருந்தில் இருந்து கீழே இறங்கி கற்களை வீசினர். திடீரென கற்களை வீசியதால் பேருந்தில் இருந்த பெண்கள், பள்ளி குழந்தைகள் உட்பட அனைவரும் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பதட்டம் ஏற்பட்டது. பேருந்தில் பயணம் செய்த பெண்கள் சிலர் கூறியதாவது, இருவேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களுக்குள் ஏற்கனவே தகறாறு இருந்ததாகவும், இன்று பேருந்து படிக்கட்டில் நின்று தகரத்தை தட்டிக்கொண்டு பாட்டு பாடிவதில் தகராறு ஏற்பட்டதாகவும் …

  15. நாய்க் கறித் திருவிழாவுக்கு சீன அரசு தடை விதிக்க வேண்டும்: - அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம்! [Saturday 2016-05-28 09:00] சீனாவில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் நாய்க் கறித் திருவிழாவுக்குத் தடை விதிக்கும்படி அந்த நாட்டு அரசை வலியுறுத்தி அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.சீனாவின் குவாங்ஸி மாகாணம், யூலின் நகரில் கடந்த 2009-ஆம் ஆண்டு முதல் வருடாந்திர நாய்க் கறித் திருவிழா கொண்டாடப்படுகிறது.தொடர்ந்து 10 நாள்களுக்குக் கொண்டாடப்படும் இந்தத் திருவிழாவில், நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் கூண்டுகளில் அடைத்துக் கொண்டு வரப்படும் நாய்கள் குரூரமான முறையில் கொல்லப்பட்டு, அவற்றின் மாமிசமும், அந்த மாமிசத்தில் தயாரிக்கப்பட்ட உணவ…

  16. சந்திரனுக்கு தமது தலை முடியை அனுப்பி அதை அங்கு புதைப்பதற்கான வாய்ப்பை லூனர் மிஸன் வன் என்ற பல மில்லியன் ஸ்ரேலிங் பவுண் பெறுமதியான திட்டத்தின் கீழ் வழங்கவுள்ளதாக பிரித்தானிய பொறியாளர் ஒருவர் அறிவிப்புச்செய்துள்ளார். இதன் பிரகாரம் சிறிய குறுவட்டுக்களை உள்ளடக்கிய உறையொன்றை 100 அமெரிக்க டாலருக்கும் குறைந்த விலைக்கு கொள்வனவு செய்து அவற்றில் தமது புகைப்படங்கள் வீடியோ படங்கள் மற்றும் முடிகளை உள்ளடக்கி சந்திரனுக்கு அனுப்ப முடியும். சந்திரனின் தென் துருவத்தில் 100 மீட்டர் ஆழமான துளையை துளைத்து அவற்றிலிருந்து ஆய்வுக்காக மாதிரிகள் பெறப்படவுள்ள நிலையில் அந்த துளையில் பூமியிலிருந்து எடுத்துச் செல்லப்படும் ஞாபகார்த்த பொருட்கள் புதைக்கப்படவுள்ளன. பொறியியலாளரும் நகர நிதி …

  17. தொலைபேசி நிறுவனத்தை 24,000 முறை அழைப்பு மேற்கொண்டு முறையிட்ட முதியவர் கைது! ஜப்பானில் இயங்கும் தொலைபேசி சேவை நிறுவனம் ஒன்றை 24,000 முறை அழைத்து முறைப்பாடுகளை மேற்கொண்ட 71 வயதான முதியவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அகிடோஷி ஒகாடாமோ என்ற முதியவர் எட்டே நாட்களில் கே.டி.டி.ஐ என்னும் தொலைத் தொடர்பு நிறுவனத்தின் இலவச சேவை எண்ணை பல்லாயிரம் முறைக்கு மேலாக தொடர்பு கொண்டுள்ளார். இரண்டரை வருடங்களாக தொடர்ந்து அந்த முதியவர் தங்களை அழைத்ததாக அந்த நிறுவனம் உள்ளூர் ஊடகம் ஒன்றிடம் தகவல் வௌியிட்டுள்ளது. ஒகாடாமோ, தான் குறித்த நிறுவனத்திடம் தவறாக செயற்படவில்லை என்றும், தான் பாதிக்கப்பட்டவர் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் கே.டி.டி.ஐ என்ற …

  18. கண­வர் 2 ஆவது திரு­மணம் செய்­தி­ருப்­பதை பேஸ்புக் மூலம் அறிந்த மனைவி பிரிட்­டனைச் சேர்ந்த பெண்­ணொ­ருவர் தனது கணவர் இர­க­சி­ய­மாக மற்­றொரு பெண்ணை திரு­மணம் செய்­தி­ருப்­பதை பேஸ்புக் மூலம் அறிந்து அதிர்ச்­சி­ய­டைந்­துள்ளார். 52 வய­தான அன்ட்ரூ மெக்­லியொட் பெய்கி என்­பவர் ஏற்­கெ­னவே திரு­மணமா­கி­யி­ருந்த நபர். இவரின் மனைவி சுசான் (51). அண்­மையில் 48 வய­தான ஹெலன் எனும் மற்­றொரு பெண்ணை அண்ட்ரூ அண்­மையில் திரு­மணம் செய்து­கொண்டார். இவ்­வி­டயம் அன்ட்­ரூவின் முதல் மனைவி சுசா­னுக்குத் தெரி­யாது. ஆனால், அன்ட்ரூ தனது புது மனை­வி­யுடன் தான் காணப்­படும் புகைப்­ப­டங்­களை தனது பேஸ்புக் பக்­கத…

  19. ஒரு தோல்விக்கு, ஒரு பின்னடைவுக்கு என்ன என்ன காரணங்கள் எல்லாம் அடுக்க முடியுமோ அத்தனை காரணங்களும் சொல்லப்பட்டு முடிந்துவிட்டது. இதற்கு முன்னர் ஆயிரம் ஆண்டுகால உலக வரலாற்றில் சாம்ராஜ்ஜியங்களும், உரிமைப் போராட்டங்களும் தோற்றதற்கான அனைத்து காரணங்களையும் எமது தோல்விக்கும் கொண்டுவந்து காரணங்களாக காட்டியாயிற்று. தோற்றுவிட்டோமே என்ற ஆதங்கங்கத்துடன் கதைக்கும் காரணங்கள் என்ற நிலைமாறி இப்போதெல்லாம் இந்த தோல்விக்கு வித்தியாசமாக மற்றவர்கள் இதுவரை சொல்லாத ஏதும் காரணத்தை சொல்வதன் மூலம் தமது புத்திசீவித்தனத்தை முகவரிப்படுத்தும் தன்மையாகவே மாறிக்கொண்டிருக்கிறது. இப்படியும் சிந்திப்பார்களா என்று மலைக்கும் அளவுக்கு சிலரது காரணங்கள் அமைந்திருக்கும். இதற்கென்றே பிரத்தியேகமாக ‘ரூம்’ …

  20. 'பாஸ்ட் அன்ட் பியூரிஸ்' திரைப்படப் புகழ் ஹொலிவூட் நடிகர் போல் வோகர் வாகன விபத்துக்குள்ளாகி திடீர் மரணமடைந்தமையால் அவரின் காதலியான ஜெஸ்மின் இதயம் நொருங்கிப்போனவராக காணப்படுகிறார் என ஜெஸ்மினின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் சனிக்கிழமை மாலை (இலங்கை நேரப்படி ஞாயிறு அதிகாலை) ஆடம்பர போர்ஸ்ச் காரில் பயணம் செய்த நடிகர் போல் வோகரும் காரை செலுத்திய அவரின் நண்பர் ரோஜர் ரொடாஸும் சம்பவ இடத்திலேயே உடல்கருகி பலியாகியமை குறிப்பிடத்தக்கது. போல் வோகருக்கு 40 வயது. ஆனால் அவரின் காதலி ஜெஸ்;மின் பில்சார்ட் கொஸ்னலுக்கு 23 வயதுத்தான் ஆகிறது. இவர்கள் இருவரும் 2006 ஆம் ஆண்டு முதல் காதலித்து வந்தனர். இவர்கள் முதலில் சந்தித்தபோது, 16 வயது சிறுமியாக…

  21. நமது நாட்டில் வசதிக்காகவும், சொகுசான வாழ்க்கைக்காகவும் திருடுகிறார்கள். பெரும்பாலும் தங்க நகைகள், பணம் போன்றவைதான் அவர்களின் இலக்கு. ஆனால் தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் பெண்களின் கூந்தலை திருடுகிறார்கள். வெனிசுலாவில் நீளமான கூந்தல் கொண்ட பெண்களுக்கு மதிப்பும், மரியாதையும் உண்டு. மேலும் நீளமான கூந்தல் கொண்டவர்கள்தான் அழகானவர்கள் என்று அங்குள்ள ஆண்கள் கருதுகிறார்கள். இதனால் கூந்தலை நீளமாக வளர்ப்பது அங்குள்ள பெண்களுக்கு பிடித்தமான விஷயம். அதுபோல நீளமாக வளர்க்க முடியாத பெண்கள் சவுரிமுடியை பணம் கொடுத்து வாங்கி பயன்படுத்துகிறார்கள். இதற்காக செயற்கையாக உருவாக்கப்பட்ட கூந்தல் அங்குள்ள கடைகளில் ரூ.2,500 முதல் ரூ.10 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது. அதுவே இயற்கையான கூந்தல் என்…

  22. பிரபல சஞ்சிகையின் அட்டைப்படத்தில் செரீனா 'நிர்வாண போஸ்' கர்ப்பமாக உள்ள பிரபல டென்னிஸ் வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ், வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாகவுள்ள `வேனிட்டி ஃபேர்` சஞ்சிகையின் அட்டைப்படத்தில் நிர்வாணமாக தோன்றியுள்ளார். I செரீனா வில்லியம்ஸ் கடந்த ஜனவரியில் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் கிராண்ட் ஸ்லாம் தொடருக்கு சற்று முன்னதாக, பிரபல அமெரிக்க சமூக வலைதளமான ரெட்டிட் நிறுவனத்தின் இணை நிறுவனர் அலெக்ஸிஸ் ஒஹானியனுடனான தனது முதல் குழந்தையை தான் கருத்தரிப்பதை செரீனா கண்டறிந்தார். டென்னிஸ் பயிற்சி பெறும் போது டென்னிஸ் மைதானத்தின் அருகே தலைசுற்றல் ஏற்பட்டதற்கு முன்புவரை, தான் கர்ப்பமாக இரு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.