செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7085 topics in this forum
-
ஜெனீவா மனித உரிமைப் பேரவையில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது எதிர்பார்த்த ஒன்றே. ஆனால் இந்த வெற்றியை நிர்ணயிக்கும் வாக்குகள் எத்தனை? என்பது குறித்துத்தான் கேள்வியாக இருந்தது. இலங்கைத் தரப்பு ஆரம்பத்திலிருந்து ‘இந்தப் போரில் வெற்றியடைவோம்” என்று கூறி வந்தது. வாக்களிக்கத் தகுதி பெற்ற 47 நாடுகளில் 22 நாடுகளுக்கு மேல் இலங்கைக்கு ஆதரவாக வாக்களிக்கும் நிலையில் இருப்பதாக இலங்கைத் தரப்பு நம்பிக்கை வெளியிட்டிருந்தது. ஆனால் இந்தியாவின் நிலையில் மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து இந்த எதிர்பார்ப்பில் இலங்கைக்கு நம்பிக்கை குறைவடையத் தொடங்கியது. தற்பொழுது பெறுபேறுகள் வெளிவந்துவிட்டன. அமெரிக்கப் பிரேரணைக்கு ஆதரவாக 24 நாடுகளும் எதிராக 15 நாடுகளும் வ…
-
- 0 replies
- 247 views
-
-
அழகி பட்டத்தை வென்ற திருநங்கை மிஸ் நெதர்லாந்து பட்டத்தை இம்முறை நெதர்லாந்து அழகி ரிக்கி வலேரி கோல் வென்றுள்ளார். ரிக்கி ; ஒரு திருநங்கை மாடல் என்பதால் இந்த கிரீடம் தனித்துவமானது. 22 வயதான ரிக்கி வலேரி, நெதர்லாந்து அழகி பட்டத்தை வென்ற நாட்டின் முதல் திருநங்கை என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இந்த வெற்றியின் மூலம் இந்த ஆண்டுக்கான உலக அழகி போட்டிக்கு அவர் தகுதி பெற்றுள்ளதாகவும், உலக அழகி பட்டத்தை வென்றால், அந்த மகுடத்தை கைப்பற்றும் முதல் திருநங்கை என்ற பெருமையை பெறுவார் என்றும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த வெற்றியை பெருவதற்கு திருநங்கையாக பல சவால்களை சந்திக்க வேண்டியிருந்தது என அவர் தெரிவித்துள்ளார். https://at…
-
- 0 replies
- 247 views
-
-
மண்ணில் புதைந்த தொழிலாளிகள்: சமார்த்தியமாக மீட்ட சக தொழிலாளிகள் 5 மணி நேரங்களுக்கு முன்னர் காங்கோவில் மண்ணில் புதைந்த தொழிலாளிகளை சக தொழிலாளிகள் கைகளால் மண்ணிலை தோண்டி மீட்டனர் காங்கோ ஜனநாயக குடியரசு நாட்டில் உள்ள தங்க சுரங்கத்தில் கன மழையை தொடர்ந்து நிலச்சரிவு ஏற்பட்டது. சுரங்கத்தில் வேலை பார்த்துகொண்டிருந்த 9 தொழிலாளிகள் நிலச்சரிவால் மண்ணுக்குள் புதைந்தனர். அங்கிருந்த சக தொழிலாளிகள் உடனடியாக தங்களது கைகளால் மண்ணை தோண்டி தொழிலாளிகள் வெளியே வருவதற்கு வழியை ஏற்படுத்து தந்தனர். அதன்வழியாக 9 தொழிலாளிகளும் பத்திரமாக வெளியே வந்தனர். பாதுகாப்பு நடைமுறைகள், முறையான உபகரணங்களின் பற்றாக்குறை போன்றவை உள்ளூர் சுரங்கங்களில் ஏற்படும் இத்தகைய சிக்கல்களுக்…
-
- 0 replies
- 247 views
- 1 follower
-
-
துபாயில் உள்ள, இத்தாலியை சேர்ந்த உணவகம் ஒன்று ஏன் சரியான லாபத்தை கண்டடைய முடியவில்லை என்பதை முகநூலில் ஒருவர் நகைச்சுவையாக பதிவு செய்துள்ளார். http://tamil.webdunia.com/article/funny-humour-video/why-italian-restaurants-failed-in-dubai-116033100053_1.html http://tamil.webdunia.com/article/funny-humour-video/why-italian-restaurants-failed-in-dubai-116033100053_1.html
-
- 0 replies
- 246 views
-
-
ஐரோப்பாவில் உள்ள குட்டி நாடான மான்டெனெக்ரோ நகரம் சின்ன சின்ன கிராமங்களையும், அழகிய கடற்கரைகளையும் கொண்ட பகுதி ஆகும். மொத்தமே 6 இலட்சம் பேர் வசிக்கும் இந்த நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் ‘சோம்பேறி குடிமகன்’ போட்டி நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான போட்டி கடந்த மாதம் தொடங்கி 26 நாட்களை கடந்து நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் பங்கேற்போர் 24 மணி நேரமும் படுக்கையிலேயே படுத்தபடி இருக்க வேண்டும். அவர்கள் எழுந்து நடக்கவோ அல்லது உட்காரவோ அனுமதி கிடையாது. அதிக நேரம் படுத்தே இருப்பவர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார். இந்த போட்டியின் தொடக்கத்தில் 21 பேர் பங்கேற்ற நிலையில், தற்போது 7 பேர் மட்டுமே எஞ்சி உள்ளனர். ஏனையவர்கள் போட்டியில் இருந்து விலகி விட்டனர். விதிப்படி, போட்ட…
-
- 0 replies
- 246 views
- 1 follower
-
-
103 வயதில் பள்ளிப்படிப்பை முடித்து கனவை நனவாக்கிக் கொண்ட பாட்டி அமெரிக்காவில் ஒரு மூதாட்டி சிறுவயதில் பாதியிலேயே நின்று போன படிப்பை 103-வயதில் முடித்து பட்டம் வாங்கி மகிழ்ச்சி புன்னகை புரிகிறார். அமேரிக்காவின் வின்கான்சின் நகரின் அருகே உள்ள ஸ்பிரிங் க்ரீன் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் மேரி. தினமும் விஸ்கான்சினில் உள்ள பள்ளிக்குச் சென்று வர முடியாத காரணத்தால், எட்டாவது கிரேடுடன் மேரியின் படிப்பு தடைபட்டு போனது. ஆனாலும் அவரது 7 சகோதரி, மற்றும் சகோதரர்களைப் படிக்க வைத்து தன்னை அர்ப்பணித்துக்கொண்டார் மேரி. வயது ஆகிக் கொண்டே போனாலும், மேரியின் கல்வி மீதான ஆசை மட்டும் அவரிடமிருந்து அகலாமலேயே இருந்தது. அந்த வகையில் 103 வயதில் அந்த ஆசையை நிறைவேற்றியிருக்கிறார் ம…
-
- 0 replies
- 246 views
-
-
கைக்கூலிகளை களமிறக்கி முஸ்லிம் பிரதிநிதித்துவங்களை இல்லாமலாக்கும் சூழ்ச்சி – அஷாத் சாலி முஸ்லிம்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவங்களை குறைக்கும் நோக்குடன் செயற்படும் ராஜபக்ஷக்களின் அரசாங்கம், இம்முறை நடைபெறவுள்ள தேர்தலில் இப்பணியைக் கச்சிதமாக முடிப்பதற்கு சில கைக்கூலிகளைக் களமிறக்கியுள்ளதாக மேல்மாகாண முன்னாள் ஆளுநரும் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவருமான அசாத் சாலி தெரிவித்துள்ளார். பிரதமர் மஹிந்த தலைமையிலான 52 நாள் அரசாங்கத்தில் விஜயதாச ராஜபக்ஷ இதுபற்றி பகிரங்கமாகக் கூறியிருந்தார். ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முன்னாள் தலைவர் அஷ்ரஃபின் வேண்டுதலுக்காக ஐந்து வீதமாக மாற்றப்பட்ட விகிதாசார வெட்டுப்புள்ளியை, மீண்டும் 12 வீதத்துக்கு கொண்டு வந்து, முஸ்லிம்களின் அரசியல் பல…
-
- 0 replies
- 246 views
-
-
சிங்கங்களை ஏற்றுமதி செய்யப்போகிறதா விவசாய அமைச்சு? சிங்கங்களையும் ஏற்றுமதி செய்ய வேண்டும் என்று விவசாய அமைச்சகம் விரும்புகிறது என்று இன்றைய ஆங்கில செய்தித்தாள் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. 100,000 டோக் மக்காக் குரங்குகளை சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய சீன நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்திய விவசாய அமைச்சகம் இப்போது குரங்குகளையும் சிங்கங்களையும் கலந்துள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. பயிர்களை சேதப்படுத்தும் டோக் மக்காக் குரங்குகளை அகற்றும் திட்டத்தை விவசாய சங்கங்கள் ஆதரிக்கின்றன என்று அமைச்சகம் ஏப்ரல் 16 அன்று ஒரு ஊடக அறிக்கையை வெளியிட்டது. எவ்வாறாயினும், குறித்த ஊடக அறி…
-
- 0 replies
- 246 views
-
-
உலகில் அதிக வேறுபாடுகள் இல்லாத ஒரே மாதிரியான உருவம் உள்ள இரட்டையர்களில் முதல் இடம் பிடிப்பவர்கள் ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரை சேர்ந்த இரட்டை சகோதரிகள் லூசி மற்றும் அண்ணா சினிகியூ ஆகும். இவர்கள் ஏற்கனவே தங்கள் மார்பகத்தை பெரிதாக்குதல் பிளாஸ்டிக் சர்ஜரிக்காக ஒரு கோடிக்கும் அதிகமாக செலவழித்து பிரபலமானார்கள் ஸாஈஈஆஈள் இருவரும் ஒரே வாலிபரை காதலித்து திருமணம் செய்ய உள்ளனர். இவர்கள் தாங்கள் இருவரும் ஒரே நேரத்தில் கருத்தரித்து குழந்தை பெற்றுக்கொள்ள ஆசை இருப்பதாக தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளனர். காரணம், இருவரும் ஒரே மாதிரியாக இருக்கவேண்டும் என்பதற்காக. இந்நிலையில் கடந்த 15 ஆம் தேதி ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இவர்கள், இரட்டை சகோதரிகளுக்கு 99.9…
-
- 0 replies
- 246 views
-
-
தனது பிள்ளை விளையாடுவதற்காக, கடற்கரையில் ஊர்ந்து சென்ற சிறிய ஆமையைப் பிடித்துக் கொடுத்த தந்தைக்கு, 100 மணித்தியாலங்கள் சமுதாய சீர்திருத்த பணியில் ஈடுபடுமாறு, பருத்தித்துறை மாவட்ட நீதவான் பெ.சிவகுமார் நேற்று தீர்ப்பளித்தார். அத்துடன், ஆமையைக் கடலில் விடுமாறும் பருத்தித்துறை பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டார். கற்கோவளம் புனித நகரைச் சேர்ந்த மேற்படி நபர், கடற்கரையில் சென்ற ஆமையைப் பிடித்து தனது பிள்ளைக்கு விளையாடக் கொடுத்துள்ளார். இது தொடர்பில் தகவல் அறிந்த பருத்தித்துறை பொலிஸார், குறித்த குடும்பஸ்தரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபரை பருத்தித்துறை மாவட்ட நீதவான் பெ.சிவகுமார் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது, குறித்த குடும்பஸ்தர…
-
- 0 replies
- 246 views
-
-
இஸ்ரேலிய தாக்குதல்களால் பாலஸ்தீன சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் இறந்தமை குறித்து ஆழ்ந்த கவலையை கொண்டுள்ள பாலஸ்தீன கலைஞர் ராணா பிஷாரா, நத்தார் பண்டிகைக்காக குழந்தை இயேசுவின் சிலையைப் பயன்படுத்தி ஒரு புதிய கலைப்படைப்பை வெளியிட்டுள்ளார். ராணாவின் கலைப்படைப்பு குழந்தை இயேசுவை இன்குபேட்டரில் காட்டுகிறது. இன்குபேட்டரில் குழந்தை இயேசு வைக்கப்பட்டுள்ளதை காட்டும் இந்த கலைப்படைப்பை பெத்லஹேம் தேவாலயத்தின் முன் காணலாம். குழந்தை இயேசு பெத்லகேமில் பிறந்தார். பெத்லகேம் இன்று பெரும்பாலான பாலஸ்தீனியர்கள் வாழும் மேற்குக் கரைக்கு சொந்தமானது. அத்துடன், பாலஸ்தீனியர்கள் காசா பகுதியில் வசிக்கின்றனர். காசா பகுதியைக் கட்டுப்படுத்தும் ஹமாஸ் மற்றும் இஸ்ரேலியப் படைகளுக்கு இடையே போர் நடந்து …
-
- 1 reply
- 246 views
- 1 follower
-
-
மெரினாவில் ஜெர்மன் தம்பதியினரிடம் திருடப்பட்ட நாய் 100 நாட்களுக்குப் பின் மீட்பு ஜெர்மன் தம்பதியினருடன் லூக் நாய் கடந்த ஜூலை மாதம் மெரினாவில் ஜெர்மன் தம்பதியினரிடம் திருடப்பட்ட செல்லப்பிராணி லூக் என்ற லாப்ரடார் வகை நாய் நூறு நாள் தேடலுக்குப் பின் கிடைத்துள்ளது. இதை கண்டுபிடித்து தருபவர்களுக்கு ரூ.50 ஆயிரம் சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த ஜூலை 8-ம் தேதி ஜெர்மனியைச் சேர்ந்த ஸ்டீஃபன் கக்ராஹ் என்பவர் தனது மனைவி ஸ்டெஃபன் கஹேராவுடன் சுற்றுலாவுக்காக சென்னை வந்தார். தங்களுடன் தங்களது செல்ல வளர்ப்பு நாயானா லாப்ரடார் வகையை சேர்ந்த கறுப்பு நிற லூக்கையும் அழைத்து வந்தனர்…
-
- 0 replies
- 246 views
-
-
22 கோடி ரூபாவை நிறுவன ஊழியர்களுக்கு எழுதி வைத்துவிட்டு இறந்த தொழிலதிபர் இத்தாலியிலுள்ள நிறுவனமொன்றின் உரிமையாளர் ஒருவர், தனது சொத்தில் சுமார் 22 கோடி ரூபாவை தொழிற்சாலையின் ஊழியர்களுக்கு வழங்குவதாக உயில் எழுதி வைத்துவிட்டு இறந்துள்ளார். இதனால் அத்தொழிற்சாலையின் ஊழியர்களுக்கு 3 இலட்சம் ரூபா முதல் 15 இலட்சம் ரூபா வரை விசேட அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது. இத்தாலியின் எனோபிளாஸ்டிக் எனும் நிறுவனத்தின் ஊழியர்களுக்கே இந்த அன்பளிப்பு கிடைத்துள்ளது. போத்தல் தக்கைகள், லேபல்கள், ஸ்குரூ ஆணிகளுக்கான மூடிகள் போன்றவற்றை தயாரிக்கும் நிறுவனம் இது. பியரோ மாச்சி என்பவர் 1957 ஆம்…
-
- 0 replies
- 246 views
-
-
கடந்த மூன்று மாதங்களில்... மேற் கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகங்களில், 29 பேர் உயிரிழப்பு! நாட்டில் கடந்த மூன்று மாத காலப் பகுதியில் மாத்திரம் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகங்களில் 29 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த மே மாதம் 30ஆம் திகதி முதல் நேற்று வரையான காலப்பகுதியில் இந்த துப்பாக்கி பிரயோகங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். திட்டமிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களுக்கு இடையில் காணப்பட்ட மோதல்கள் காரணமாகவே இந்த துப்பாக்கி பிரயோகங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, அம்பலங்கொடை பகுதியில் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட துப்ப…
-
- 0 replies
- 246 views
-
-
பட மூலாதாரம்,BIERBATH கட்டுரை தகவல் எழுதியவர், நார்மன் மில்லர் பதவி, பிபிசி 22 ஜூன் 2024 ஐஸ்லாந்து, ஸ்பெயின் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் சமீபகாலமாக 'பீர் ஸ்பாக்கள்' திறக்கப்பட்டுள்ளன. 'பீர் தேசம்' என்று கருதப்படும் செக் குடியரசின் முந்தைய வழக்கத்திலிருந்து உத்வேகம் பெற்று உருவாக்கப்பட்டது தான் இந்த 'பீர் ஸ்பாக்கள்'. 1,000 லிட்டர் தண்ணீர் நிரம்பிய மிகப்பெரிய மரத்தினாலான குளியல் தொட்டியில் (oak tub) இறங்க நான் தயாரானபோது, வரலாற்றின் தலைசிறந்த விஞ்ஞானிகளில் ஒருவரான 16-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த டேனிஷ் வானியலாளர் டைகோ ப்ராஹேவின் கறை படிந்த கண்ணாடி ஓவியம் என்னை உற்று நோக்கி கொண்டிருந்தது. …
-
- 0 replies
- 245 views
- 1 follower
-
-
சாப்பிட்ட வாழைப்பழத்தின் சிறு துண்டு நுரையீரலில் சிக்கியதால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நபர் யிரிழந்துள்ளதாக ஹோமாகம தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடற்படையின் ஓய்வுபெற்ற தொழில்நுட்ப உத்தியோகத்தரான லக்ஷ்மன் ஹெட்டி பத்திரன (64) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த நபர் பல வருடங்களாக நோயினால் அவதிப்பட்டு வந்த நிலையில் இவரை மனைவி கவனித்து வந்துள்ளார். இதற்கிடையே கடந்த 18ம் தேதி மதியம் சாப்பிட்ட பின் வாழைப்பழம் சாப்பிட்டு கொண்டிருந்த போது திடீரென ஒவ்வாமை ஏற்பட்டு மூச்சுத்திணறல் ஏற்பட்டதில் அவர் இறந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். அதன்படி, ஹோமாகம மரண விசாரணை அதிகாரி சிந்த…
-
- 0 replies
- 245 views
- 1 follower
-
-
தொலைந்துபோன 39 ஆண்டுகள் 1980ம் ஆண்டு. அவரது வயது24. அவர்,அவரது பெற்றோருடன் வசிக்கிறார். ஆனால் அவரது உண்மையான வயது 68. லூசியானோ டி அடாமோ திருமணமானவர், ஒரு மகன் இருக்கிறான். பெற்றோரை விட்டு விலகி நீண்ட காலங்களாகி விட்டன. இப்பொழுது அவரைப் பற்றி இத்தாலியின் ஊடகங்கள் தலைப்புச் செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன. லூசியானோ டி அடாமோ தனது வாழ்க்கையில் கடந்த 39 ஆண்டுகளை மறந்து விட்டார் என்பதே அந்தச் செய்தி. 2019ம் ஆண்டு, ரோம் நகரில் நடந்த ஒரு கார் விபத்தில் சிக்கி லூசியானோ டி அடாமோ, தனது நினைவுகளை இழந்து கோமா நிலைக்குப் போய்விட்டார். சில நாட்கள் கோமா நிலையில் இருந்த அவர் மீண்டும் விழித்தபோது அவருக்கு எல்லாமே அந்நியமாக இருந்தன. அவரால் தனது மனைவியைய…
-
- 0 replies
- 245 views
-
-
பாலியல் தாக்குதல்களுக்கு பெண்கள் பூசியிருந்த நறுமணத் தைலங்களே காரணம் ஜேர்மனிய கோலொன் பிராந்தியத்தில் கடந்த புது வருட தினத்தில் குழுவொன்றால் பெண்கள் பாலியல் ரீதியில் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு அந்தப் பெண்கள் நறுமணத்தைலங்களை பூசியிருந்தமையே காரணம் எனத் தெரிவித்து அந்தப் பிராந்திய இமாம் ஒருவர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். கடந்த புது வருட தினத்தில் கோலொன் நகரில் நூற்றுக்கணக்கான பெண்கள் பாலியல் தாக்குதல்களுக்கு உள்ளாகியிருந்தனர். அன்றைய தினம் மட்டும் அந்நகரில் 3 பாலியல் வல்லுறவு சம்பவங்கள் உட்பட 521 பெண்களுக்கு எதிரான பாலியல் தாக்குதல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதனையடுத்து…
-
- 0 replies
- 245 views
-
-
'மனதை தூய்மைப்படுத்திக் கொள்ளுங்கள்...!'- டிரம்ப்புக்கு கிரீன் டீ அனுப்பிய கொல்கத்தா நிறுவனம்! நியூயார்க்: உடலையும், மனதையும் தூய்மைப்படுத்துவதற்காக டொனால்ட் டிரம்ப்புக்கு, கொல்கத்தா தேயிலை தயாரிப்பு நிறுவனம் ஒன்று கிரீன் டீ அனுப்பியுள்ளது. அமெரிக்க அதிபர் ஒபாமாவின் பதவிக்காலம் இந்த ஆண்டுடன் முடிவடைகிறது. இதையடுத்து, புதிய அதிபரை தேர்ந்தெடுக்க வரும் நவம்பர் மாதம் 8-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில், ஜனநாயகக் கட்சி சார்பில் பிரபல ரியல் எஸ்டேட் தொழில் அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுவது உறுதியாகி விட்டது. டொனால்ட் டிரம்ப் தேர்தல் பிரசாரத்தின்போது, மக்களிடம் வெறுப்பை தூண்டும் விதமாக பேசி வருவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.…
-
- 0 replies
- 245 views
-
-
ஒவ்வொரு நாளும் புதுவாழ்க்கை வாழும் விசித்திர பெண் இங்கிலாந்தை சேர்ந்த கிறிஸ்டினா கார்ப்(Christina Corp) என்ற பெண்மணிக்கு, தனது வாழ்வில் முதல் நாள் நடந்த சம்பவங்களை அடுத்த நாளில் நினைவுகூற முடியாது. ஏனெனில், இவருக்கு 17 வயது இருக்கும்போது ஏற்பட்ட கார் விபத்தில் இவரது மூளை சேதமடைந்தது, அதன் பின்னர் சுயநினைவிழந்து இருந்தார். அதன் பின்னர் குணமடைந்த அவரால், வாழ்வில் முதல் நாள் நடந்த சம்பவங்களை அடுத்த நாள் நினைவுகூற இயலாது. ஒவ்வொரு நாளும் புதுநாட்களாகவே அவருக்கு இருந்துள்ளது. மகளின் வாழ்க்கையை நினைத்து கவலையில் இருந்த கிறிஸ்டினாவின் பெற்றோருக்கு, இன்பமூட்டும் சம்பவமாக, ஜோ சிவேனி(Joe Sweeney - Age 29) என்பவர் கடந்த 3 வருடங்களுக்கு முன்னர் கிறிஸ்டினாவை சந்தித்துள்ளார். நாளடை…
-
- 0 replies
- 244 views
-
-
சென்னையில் அரசு மருத்துவமனையில், மருத்துவரை கத்தியால் குத்திய இளைஞர்கள் இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை கிண்டியில் கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு புற்றுநோய் பிரிவில் பாலாஜி என்பவர் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், இளைஞர்கள் மருத்துவமனைக்குள் புகுந்து பாலாஜியை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடினர். தங்கள் தாய்க்கு சரியாக சிகிச்சை அளிக்கவில்லை எனக் கூறி, மருத்துவரை கத்தியால் குத்தியுள்ளனர். கத்திக்குத்தில் காயமடைந்த பாலாஜி மீட்கப்பட்டு, அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கத்தியால் குத்திய இளைஞர்கள்…
-
- 2 replies
- 244 views
- 1 follower
-
-
பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணிடம் நீதிபதி கேட்க கேள்வியினால் பரபரப்பு கனடா நாட்டில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட இளம்பெண் ஒருவரிடம் கீழ்த்தரமான கேள்விகளை எழுப்பிய நீதிபதி ஒருவரின் பதவி பறிபோக வாய்ப்புள்ளது. கனடாவில் உள்ள அல்பேர்ட்டா மாகாணத்தில் ரோபின் கேம்ப் என்பவர் நீதிபதியாக பணியாற்றி வருகின்றார். இந்நிலையில், கடந்த 2014ஆம் ஆண்டில் 19 வயது இளம்பெண் ஒருவரை ஸ்கொட் வால்டர் என்பவர் பலவந்தப்படுத்தி பாலியல் துஷ்பிரியோகம் செய்யப்பட்டுள்ளார். இந்த பாலியல் துஷ்பிரியோகம் தொடர்பான வழக்கிற்கு நீதிபதியான ரோபின் கேம்ப் முன்னிலையில் வந்துள்ளது. நீதிபதி விசாரணையின்போது பாலியல் துஷ்பிரியோகம் செய்யப்பட்ட இளம்பெண்ணிடம் ‘நபர் உங்களை ப…
-
- 0 replies
- 244 views
-
-
ரெ.ஜாய்சன் 28 May, 2024 10:04 PM தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் மீனாட்சிபுரம் கிராமத்தில் வாழ்ந்து வந்த ஒரே ஒரு மனிதரான முதியவர் கந்தசாமி உயிரிழந்தார். தூத்துக்குடி மாவட்டம் செக்காரக்குடி ஊராட்சியில் உள்ளது மீனாட்சிபுரம் கிராமம். இந்த கிராமம் நெல்லை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 13 கிலோ மீட்டர் தொலைவில் மேல செக்காரக்குடிக்கு அடுத்து அமைந்துள்ளது. 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மீனாட்சிபுரத்தில் வாழ்ந்த மக்களின் எண்ணிக்கை 1,269. படிப்படியாக இந்த ஊரின் மக்கள் தொகை குறைந்தது. இந்த ஊரில் இருந்த மக்கள் அனைவரும் பிழைப்புக்காக ஊரை காலி செய்து விட்டு வெளியூருக்கு சென்று விட்டனர். இவ்வூரில் நிலவிய தண்ணீர் தட்டுப்பாட…
-
- 0 replies
- 244 views
-
-
கொரோனா அச்சம் ; மகனுடன் வீட்டுக்குள் முடங்கிய பெண் ; 3 ஆண்டுகளின் பின் மீட்பு Published By: T. SARANYA 24 FEB, 2023 | 02:42 PM கொரோனா அச்சத்தால் கணவனை பிரிந்து மூன்று ஆண்டுகள் மகனுடன் வீட்டினுள் தனிமையில் இருந்த பெண் புதன்கிழமை (22) பொலிஸாரினால் மீட்கப்பட்ட சம்பவம் இந்தியாவில் இடம்பெற்றுள்ளது. உலக நாடுகள் அனைத்தையும் கடந்த 2020 ஆம் ஆண்டு பரவிய கொரோனா தொற்று கடுமையாக பாதித்திருந்தது. இலட்சக்கணக்கான மக்கள் இதன் மூலம் கடும் அவதிப்பட்ட சூழலில், அடுத்தடுத்து இரண்டாம் கட்ட அலைகளும் உருவாகி ஓரிரு ஆண்டுகள் உலக நாடுகளே ஸ்தம்பித்து போனது. பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு விடயங்களும் உலக நாடுகளை பெரும்பாடு படுத்தியிர…
-
- 2 replies
- 244 views
- 1 follower
-
-
உலகிலேயே பரப்பளவில் 5 ஆவது இடத்தில் உள்ள பெரிய நாடு, பிரேசில் (Brazil). இதன் தலைநகரம் பிரெசிலியா (Brasilia). 2007 ஜனவரி மாத காலகட்டத்தில் பிரேசில் நாட்டின் சா பாலோ (Sao Paulo) நகரின் பின்ஹெரோ (Pinheiros) பகுதியின் சுற்றுப்புறத்தில், மெட்ரோ அமைப்பை விரிவுபடுத்துவதற்காக தொழிலாளர்கள் சுரங்கப்பாதை தோண்டிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென பூமி உள்வாங்கி அங்கு மிக பெரும் பள்ளம் ஏற்பட்டது. இதனை சற்றும் எதிர்பாராத அப்பகுதி வழியாக நடந்து சென்ற பாதசாரிகளும், வாகன ஓட்டிகளும் இந்த பெரும் பள்ளத்தில் விழுந்தனர். 23,680 சதுர அடி அளவில் ஏற்பட்ட இந்த பள்ளம், ஒரு மினி பஸ், 7 வீடுகள் மற்றும் பொதுமக்களில் சுமார் 200 பேர் என உள்ளே இழுத்து கொண்டது. பல லொரிகள் ஒன்றின் …
-
- 0 replies
- 244 views
- 1 follower
-