Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. புலிகளின் ஊடகத் துறை - தமிழீழ விடுதலைப் புலிகள் என்கிற பெயரில் 'lttepress.com'என்கிற இணையதளம் திடீரென உதயமாகி இருக்கிறது. 'இனி புலிகளின் அதிகாரபூர்வ இணையதளம் இதுதான்' எனவும் அதில் சொல்லப்பட்டிருக்கிறது. இது குறித்து நம்பகமான புலி ஆதரவாளர்கள் சிலர், ''அது புலிகளின் இணைய தளமேதான். இது நாள் வரை தேசிய தலைவர் பிரபாகரன் குறித்து புலிகள் தரப்பு கருத்து சொல்லவே இல்லை. கே.பி-யை வளைத்த உளவு அமைப்புகள்தான் புலிகளின் கருத்தாக ஏதேதோ பரப்பிக் கொண்டிருந்தன. ஆனால், இனி புலிகளின் அனைத்து அறிவிப்புகளும் இந்த இணையதளத்தில்தான் இடம்பெறப் போகின்றன!'' என்று அடித்துச் சொல்கிறார்கள். ''இந்த புதிய இணைய தளத்தின் செய்தித் தொடர்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் ச.தமிழ்மாறனைப் பற்றி புலிகளின் தொடர்பில் இ…

  2. ஹெயிட்டியில் ஏற்பட்ட நில அதிர்வில் சிங்கள இராணுவத்தில் பலர் பலியாகியுள்ளனர் அவர்களுடன் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். மேலதிக செய்திகள் விரைவில்.... http://tamilskynews.org/index.php?option=com_content&view=article&id=365:-1000-&catid=34:2009-11-28-06-27-40&Itemid=100#JOSC_TOP

  3. செல்போனில் பேசினால் `மறதி' குணமாகும்' என புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது. `அல்ஷ் கெய்மெர்ஷ்' என்ற மறதி நோயினால் உலகில் பலர் அவதிப்பட்டு வருகின்றனர். மூளையில் உள்ள செல்கள் கொஞ்சம் கொஞ்சமாக செயல் இழப்பதால் இந்த நோய் உருவாகிறது. இந்த நோயை ஜெர்மனியை சேர்ந்த `ஆலியோஸ்' என்ற விஞ்ஞானி கடந்த 1906-ம் ஆண்டு கண்டு பிடித்தார். அன்று முதல் இந்த நோயை குணப்படுத்த விஞ்ஞானிகள் தீவிரமாக முயன்று வருகின்றனர். இந்த நிலையில், தற்போது தான் இந்த நோயை குணப்படுத்த புதிய யுக்தி ஒன்றை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். தொடர்ந்து செல்போன் பேசுவதன் மூலம் இந்த நோயை குணப்படுத்தலாம் என ஆய்வு மூலம் தெளிவு படுத்தியுள்ளனர். அமெரிக்காவின் தெற்கு புளோரிடாவில் உள்ள பல்கலைக்கழகத்தை சேர…

  4. எனக்கு உயரமான படிகளில் இருந்து இறங்கும் போதே இலேசாக வயிற்றினுள் எதோ நெளிவது போல் இருக்கும்...இந்தாள் எப்படி இப்படி குதிக்குதோ தெரியாது

  5. தினசரி ஒரு ஆப்பிள் சாப்பிடுங்கள், டாக்டரிடமிருந்து விலகியிருங்கள் என்பது பிரபலமான ஒரு மொழி. இப்போது இன்னொரு புதுமொழியை டாக்டர்கள் பரிந்துரைக்கிறார்கள். அது, தினசரி செக்ஸ் வைத்துக் கொண்டால் மனதுக்கு மட்டுமல்ல, உடலுக்கும் நல்லதாம். செக்ஸ், மனதை இதமாக்கும், பல நோய்களைக் குணமாக்கும் என்கிறார்கள் ஆய்வுப் பூர்வமாக. தினசரி செக்ஸ் வைத்துக் கொண்டால் ஏற்படும் பலாபலன்கள் குறித்த ஒரு பார்வை ... செக்ஸ் கிட்டத்தட்ட ஒரு உடற்பயிற்சி போலத்தான். உடல் உறுப்புகளின் தொடர் இயக்கத்திற்கு தினசரி செக்ஸ் வழி வகுக்கிறதாம். உடலுறவின்போது நமது உடலில் கணிசமான அளவுக்கு கலோரிகள் குறைகிறதாம். ஒரு வாரத்திற்கு மூன்று முறை (ஒவ்வொரு முறையும் கால் மணி நேரத்திற்கு - அதற்கு மேலும் வைத்துக்…

    • 14 replies
    • 14.7k views
  6. ஆபாசமாக பேசினால் அபராதம், ரஷ்யாவில் புதிய சட்டம்! மாஸ்கோ:பொது இடங்களில் மொபைல் போனிலோ, நேரிலோ யாரையாவது ஆபாசமாகவோ, அருவருப்பாகவோ திட்டினால் அபராதம் வசூலிக்க வகை செய்யும் சட்டம் ரஷ்யாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.கோபத்தால் சிலரை வாய்க்கு வந்த படி திட்டுவது, ஆபாசமாக பேசுவது போன்றவை காலம் காலமாக நடக்கிறது. உலகம் முழுவதும் இந்த பிரச்னை பொதுவாக காணப்படுகிறது. இந்த பிரச்னைக்கு முடிவு கட்ட ரஷ்ய அரசு புதிய சட்ட மசோதாவை அறிமுகப் படுத்தியுள்ளது.ரஷ்ய பார்லிமென்ட்டின் மேல் சபையில் இந்த சட்ட மசோதா கடந்த வாரம் அறிமுகப்படுத்தப் பட்டது. இதற்கு அனைத்து உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.பொது இடங்களில் ஆபாசமாக பேசினால் அபராதம் விதிக்கும் திட்டம் கடந்த 2005ம் ஆண்டு ரஷ்யாவில் உ…

    • 0 replies
    • 724 views
  7. செக்ஸ் சில்மிஷம் செய்ததால் ஆவேசம்: விமானத்துக்குள் வாலிபரை அடித்து துவைத்த பெண்கள்ஜெய்ப்பூர், டிச. 22- மும்பையில் இருந்து ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூருக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை இண்டிகோ விமானம் ஒன்று புறப்பட்டுச் சென்றது. விமானத்தின் சாதாரண வகுப்புப் பிரிவில் சில பெண்கள் வரிசையாக உட்கார்ந்திருந்தனர். அவர்கள் அருகில் வாலிபர் ஒருவர் அமர்ந்திருந்தார். விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது அந்த வாலிபர் ஒரு பெண்ணிடம் செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்டார். அந்த பெண் 2 தடவை கண்டித்த பிறகும் அந்த வாலிபர் சில்மிஷம் செய்வதை நிறுத்தவில்லை. இதையடுத்து அந்த பெண்கள் விமானப்பணி பெண்ணிடமும், அதிகாரியிடமும் புகார் செய்தனர். அவர்கள் இரு தரப்பினரும் அமைதியாக இருங்கள் என்று ச…

  8. சென்னை: நாகரீகமான முறையில் ஜாக்கெட் அணிய வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டிருப்பது குறித்து ஆசிரியைகள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். பள்ளிக்கூட ஆசிரியர்கள், ஆசிரியைகள் உடை அணிவது குறித்து அரசு ஏற்கனவே சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது ஆசிரியைகள் கண்டிப்பாக புடவையில்தான் வர வேண்டும். ஆசிரியர்கள் டீ சர்ட் போன்றவற்றை அணிந்து வரக் கூடாது. நாகரீகமான முறையில் உடையணிய வேண்டும் என இந்த கட்டுப்பாடு கூறுகிறது. இருப்பினும் சில பள்ளிக்கூட ஆசிரியைகள் குறிப்பாக தனியார் பள்ளி ஆசிரியைகள் விதம் விதமான டிசைன்களில் ஜாக்கெட் அணிந்து வருவதாக பெற்றோர்கள் தரப்பில் அரசுக்கு தொடர்ந்து புகார்கள் போய்க் கொண்டிருந்ததால், உடைக் கட்டுப்பாட்டை நினைவுபடுத்தி சமீபத்தில் பள்ளிக் கல்வித்துற…

  9. நீர்மூழ்கிக் கப்பல்கள் மனிதனின் கடற்பயண வரலாற்றில் இன்னொரு மைற்கல். பறவையைக் கண்டு விமானம் படைத்து, பறந்து, பாயும் மீன்களில் படகினைக் கண்டு தண்ணீரின் மேலாகப் பயணித்த மனிதனின் ஆசை அத்துடன் நின்றுவிடவில்லை. அவன் தண்ணீருக்கு அடியாலும் பயணிக்க ஆசைப்பட்டான். ஆசை என்பதைவிட தண்ணீரின் அடியாற் பயணிக்கவேண்டிய தேவை அவனுக்கு எழுந்தது. ஆம், போர் மனிதனுக்கு அந்தத் தேவையை உருவாக்கியது. போர்களின்போது எதிரிகளை நெருங்கிச்சென்று தாக்குவதற்கோ எதிரிகள் அறியாது பயணிப்பதற்கோ தேவையான வழிமுறைகள் பற்றிய தேடலின் விளைவே நீர்மூழ்கிக் கப்பல்கள். 1620 ஆம் ஆண்டில் டச்சுக் கண்டுபிடிப்பாளர் ஒருவர் நீரின் அடியால் பயணிக்கவல்ல கலம் ஒன்றினை உருவாக்கியிருந்தார். நீர்மூழ்கிக் கப்பல்களின் வரலாறு இக்கலத்த…

  10. பொதுவாக தம்பதியரிடையே முத்தம் கொடுத்தல், கட்டிப்பிடித்தல் போன்ற செயல்களால் அவர்களிடையே மன அழுத்தம் குறைவதாக சுவிட்சர்லாந்தில் வெளியான ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. கையோடு, கைசேர்த்து கட்டிப்பிடிப்பதால், ஆண்பெண் இருபாலரிடமும் மன அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடிய ஹார்மோன் சுரப்பது குறைவதாக அந்த ஆய்வு கூறுகிறது. சுவிட்சர்லாந்தின் ஜூரிச்சில் உள்ள சைக்கோஸொமேடிக் மருத்துவ இதழில் இந்த ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. நெருக்கமான உறவு கொள்தல், குறிப்பாக திருமணம் செய்து கொள்வதால் ஏற்படும் பாலியல் உறவால் ஆரோக்கியமான உடல்நலம் ஏற்படுவதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது. ஜெர்மனியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட தம்பதியரை ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட ஆராய்ச்சியாளர்கள் சுமார் ஒரு வார காலம் அவர…

  11. கடந்த 160 ஆண்டுகளில் இல்லாத விதமாக 2010ஆம் ஆண்டு மிகுந்த வெப்பம் நிறைந்ததாக இருக்கும் என இங்கிலாந்து வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதுதொடர்பாக இங்கிலாந்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில், “இயற்கைப் பருவநிலை மாற்றம் காரணமாக புவியின் வெப்பம் அதிகரிக்கும் என்ற போதிலும், 2010ஆம் ஆண்டில் மனித குலத்தால் ஏற்பட்ட பருவநிலை மாற்றம் காரணமாகவே வெப்பம் அதிகரிக்கும். இந்த வெப்பத்தின் அளவு கடந்த 1998இல் காணப்பட்டதை விட அதிகமாக இருக்கும். கடந்த 1961 முதல் 1990 வரையிலான காலகட்டத்தில் உலகம் அனுபவித்த சராசரி வெப்பத்தின் அளவை விட, 2010ஆம் ஆண்டில் உலகளவில் 0.6 டிகிரி வெப்பம் அதிகமாக (அதாவது 14.58 டிகிரி) காணப்படும். 2010ஆம் ஆண்டு மட்டுமின்றி வரும் 2019 வரையிலான கா…

  12. தங்கள் மனைவி மற்றும் கணவர்களை மாற்றிக் கொண்டு, உறவு வைத்த 12 தம்பதிகள், ஈரானில் கைது செய்யப்பட்டுள்ளனர். ஈரானில் இஸ்லாமிய ஷரியத் சட்டம் கடை பிடிக்கப்படுகிறது. இதனால் அங்கு கள்ளத் தொடர்பு, விபசாரம், ஆபாச வெப்சைட் நடத்துபவர்கள் போன்றோரை கல்லால் அடித்தே கொன்று விடுவர். இப்படி மிகுந்த கண்காணிப்பு உள்ள அந்த நாட்டில், 12 தம்பதிகள் தங்களுக்குள் ஜோடிகளை மாற்றி உறவு கொண்டிருந்ததைக் கண்டறிந்த அந்நாட்டு போலீஸ் அவர்களைக் கைதுசெய்துள்ளது. போலீஸ் அளித்த அறிக்கையில்,"இவர்கள் தங்களுக்குள் "ஈரான் மல்ட்டிபிளிகேஷன்' என்ற வெப்சைட்டை, கள்ளத் தொடர்புக்காக நடத்தி அதன் மூலம் தங்கள் ஜோடிகளை மாற்றி, ஒரே இடத்தில் அனைவரும் பலமுறை உறவு கொண்டிருக்கின்றனர். இவர்கள் அனைவரும் பல்கலைக்கழகங்களில் பட்ட…

  13. தினமும் மது குடிப்பவர்களுக்கு இதய நோய்கள் பாதிப்பு மிக குறைவு என ஸ்பெயின் நாட்டின் ஆய்வு தெரிவிக்கிறது. 29 வயது முதல் 69 வயது வரை உள்ள 41 ஆயிரம் ஆண் மற்றும் பெண்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. 10 ஆண்டுகள் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் 609 பேருக்கு மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்கள் ஏற்பட்டது. இவர்களில் 481 பேர் ஆண்கள், 128 பேர் பெண்கள். மது குடிக்காதவர்களை விட அதிக அளவில் மது குடித்த ஆண்களுக்கு இதய நோய் பெருமளவில் ஏற்பட வில்லை. 285 மில்லி பீரில் 4.9 சதவீதம் ஆல்கஹால் உள்ளது. அதே நேரத்தில் 180 மில்லி ஒயினில் 12 சதவீதம் ஆல்கஹால் உள்ளது. இவற்றை குடிக்கும் பெண்கள் இதய நோய்களால் பாதிப்படைவதில்லை. பீர் மற்றும் ஒயின் தயாரிப்பில் ஸ்பெயின் நாடு உலகிலேயே 3-வது இடத்தில் உள்ளது. இந்…

    • 17 replies
    • 2.8k views
  14. மீசை இல்லாமல், மொழு, மொழுவென இருக்கும் ஆண்களுக்குத்தான் முத்தம் கொடுக்க இந்திய நகர்ப்புற பெண்கள் அதிகம் விரும்புகிறார்களாம். ஒரு ஆய்வு இதைச் சொல்கிறது. விருமாண்டி, சீவலப்பேரி பாண்டி என கடா முடா மீசையுடன் வலம் வர விரும்பும் ஆண்கள்தான் தமிழகத்தில் அதிகம். மீசையை ஒட்ட வழித்து விட்டு ஷாருக் கான், சல்மான் கான் போல இருக்கும் ஆண்கள் இங்கு குறைச்சல்தான். மீசையுடன் இருக்கும் ஆண்களைத்தான் பெண்கள் பெரும்பாலும் விரும்புவார்கள் என்ற ஒரு வசனமும் ரொம்ப காலமாக இருக்கிறது. இது தமிழ்நாட்டுக் கணக்கு. ஆனால் ஏசி நீல்சன் என்ற அமைப்பு இந்தியா, இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து, வியட்நாம், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் ஒரு சர்வேயை நடத்தியுள்ளது. அதில் இந்த நாடுகளைச் சேர்ந்த ஆண்கள் ம…

  15. 'சாண் பிசகினால் சட்னி' என் பதே ஒற்றன் வாழ்க்கை. மன்னர் காலத்தில் சாளரம் வழி ஒட்டுக்கேட்ட இவர்கள், ஹைடெக் காலத்தில் டெக் னாலஜியில் பின்னுகிறார்கள். ரிச்சர்ட் சோர்ஜ்: சோவியத் யூனியனின் அல்டிமேட் உளவாளி இவர். இரண்டாம் உலகப் போர் காலத்தின் தலைவன்தான் கிங். இவருடைய சொந்தக்காரர் ஒருவர் கார்ல் மார்க்ஸின் நெருங்கிய நண்பர். அதனால் மார்க்ஸ் பற்றி ஐயாவுக்கு நிறையத் தெரியும். பத்திரிகையாளர் போர்வையில் இவர் நடத்திய தில்லாலங்கடிகள் ரஷ்யாவுக்குப் பக்கபலம். ஜெர்மனியிலும், ஜப்பானிலும் ஒற்றனாகப் பட்டையைக் கிளப்பினார். ஆனால், ஜப்பானுக்கு இவர் மீது சந்தேகம் வந்து பொறிவைத்தது. மர்ம ரேடியோ அலைவரிசைகளைக் கண்காணித்து 1941-ல் கைது செய்யப்பட்டார்.ஆனால், அவர்களால் எதையும் நிரூபிக்க முடிய வில்லை. ர…

  16. நக்கீரனில் வெளிவந்த பேட்டி பெரிதாக்கி படிக்க

  17. பெண்களுக்கு செக்ஸ் மூடைக் கொடுக்க உதவும் மாத்திரை கண்டுபிடிப்பு புதன்கிழமை, நவம்பர் 18, 2009, 13:46 [iST] நியூயார்க்: பெண்களின் செக்ஸ் உணர்வுகளைத் தூண்டி அவர்களுக்கு செக்ஸ மூடை அதிகரிக்க உதவும் மாத்திரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மாத்திரை எதேச்சையாகத்தான் கண்டுபிடிக்கப்பட்டதாம். மன அழுத்தத்தை கட்டுப்படுத்தும் மாத்திரையை அமெரிக்க விஞ்ஞானிகள் உருவாக்கியபோது, அந்த வேலையை செய்யாமல், பெண்களுக்கு செக்ஸ் உணர்வுகளைத் தூண்டி விட்டதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். இதையடுத்து இந்த மாத்திரைக்கு பெண்களின் வயாகரா என்று பெயர் வந்து விட்டது. அமெரிக்காவைச் சேர்ந்த வடக்கு கரோலினா பல்கலைக்கழக பேராசிரியர் ஜான் தோர்ப் இதுகுறித்து கூறுகையில், ஃபிலிபன்செரின் (Flibanserin) என்…

    • 6 replies
    • 31.2k views
  18. ரோபாட்களுக்கு கைகொடுக்கும் எறும்புகள் : பேராசிரியர் தகவல் பெங்களூரு : "மூளையில், உருவங்களை பதிய வைத்துக் கொள்ளும் எறும்புகளின் திறன், தானே இயங்கும் வகையிலான ரோபாட்கள் செய்ய உதவிகரமாக இருக்கும்' என, சூரிச் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் ஒருவர் தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம், பெங்களூரில், நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சூரிச் பல்கலைக்கழகத்தின் மூளைகள் பற்றி ஆராய்ச்சி பிரிவை சேர்ந்த பேராசிரியர் ருடிகர் வென்னர் கூறியதாவது: எறும்புகளுக்கு சிறப்பான பார்வை திறன் உள்ளது. இதனால், அவை வானத்தை மிக தெளிவாக பார்க்க முடிகிறது. வானம் தான், அந்த எறும்புகளுக்கு திசைகாட்டும் கருவியாக பயன்படுகிறது. எறும்புகள் இரை தேடி தன் இருப்பிடத்தை விட்டு வெளியில் வருகின்…

  19. கோலாலம்பூர்:வியர்வை நாற்றத்தின் காரணமாக மலேசியாவில் இளம் தம்பதிகளுக்கிடையேயான விவாகரத்து அதிகரித்துள்ளது.மலேசியாவில் சமீபகாலமாக விவாகரத்து அதிகரித்துள்ளது. பத்து திருமணம் நடந்தால் அவற்றில் மூன்று திருமணங்கள் விவாகரத்தில் முடிகின்றன. குறிப்பாக, 25 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள் விவாகரத்துக்கு விண்ணப்பிக்கின்றனர். இதனால், வருத்தமடைந்துள்ள மலேசிய அரசு, பெருகி வரும் விவாகரத்தை குறைக்க வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.முஸ்லிம் மத சட்டதிட்டங்களை பின்பற்றும் மலேசியாவில் கணவன்-மனைவி உறவு குறித்து அரசே வெளிப்படையாக பேச ஆரம்பித்து விட்டது. வியர்வை நாற்றம், கவர்ச்சியான உடை அணியாதது ஆகியவை தான் இளம் தம்பதியர்களுக்கிடையே வெறுப்பை ஏற்படுத்துகிறது, என்பதை கண்டறிந்த மல…

  20. லண்டன்:பிரிட்டனை சேர்ந்த தம்பதியர் தங்களின் 98 வயதில் விவாகரத்து செய்து, உலகிலேயே மிக அதிக வயதில் விவாகரத்து செய்தவர்கள் என, உலக சாதனை படைத்துள்ளனர்.இதுகுறித்து, அந்நாட்டு பத்திரிகை ஒன்று வெளியிட்ட செய்தி:பிரிட்டனை சேர்ந்தவர்கள் பெர்டி மற்றும் ஜெஸ்சி உட். இவர்கள் இருவரும் தங்கள் 98 வயதில் விவாகரத்து செய்துள்ளனர். அத்துடன் அவர்களின் 36 ஆண்டுகால திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது. விவாகரத்து பெற்ற சில மாதங்களிலேயே, தன் 99வது பிறந்த நாளுக்கு முன்னரே, பெர்டி காலமானார். ஜெஸ்சி தற்போது, பராமரிப்பு இல்லம் ஒன்றில் வசித்து வருகிறார்.இவர்கள் இருவரும், கடந்த 1972ம் ஆண்டு, லண்டனில் உள்ள எல்ஸ்ட்ரீ கிராமத்தில் திருமணம் செய்து கொண்டனர். நான்காண்டுகளுக்கு பின், அவர்கள் பால்மவுத் கார…

  21. சிட்னி, நவ. 12- ஆஸ்திரேலியாவை சேர்ந்த காலண்டிணாவை சேர்ந்தவர் பிலிப்பேன் (வயது 32). இவர் குட்டி நாய் ஒன்றை வளர்த்து வந்தார். இதை சங்கிலியால் கட்டி கடற்கரை வழியாக அழைத்து சென்று கொண்டிருந்தார். அப்போது கடற்கரையில் இருந்த பெரிய நாய் ஒன்று ஓடி வந்து இந்த நாயை கடிக்க வந்தது. உடனே பிலிப்பேன் தனது நாயை கையில் தூக்கி வைத்துக் கொண்டார். அப்போதும் அந்த நாய் விடவில்லை. துள்ளி குதித்து இவர் கையில் இருந்த நாயை கடித்தது. இதனால் ஆத்திரம் அடைந்த பிலிப்பேன் அந்த நாயை பிடித்து காது, முகம் என கடித்து குதறிவிட்டார். இதை சற்றும் எதிர்பார்க்காத நாய் உடனே குட்டி நாயை கடிப்பதை விட்டு விட்டு அங்கிருந்து ஓடிவிட்டது. இதுபற்றி பிலிப்பேன் கூறும்போது எனது நாயை காப்பாற்ற வேறு வழ…

  22. உலகம் முழுவதும் வாழும் உயிரினங்கள் பற்றிய விவரங்களை ஐ.யூ.சி.என். என்ற நிறுவனம் இந்த ஆண்டு ரெட்டாட் என்ற புத்தகத்தில் வெளியிட்டுள்ளது. அதன் படி இந்த ஆண்டு 17,921 உயிரினங்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. கடந்த ஆண்டு 16,928 உயிரினங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த ஆண்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் படி 2800 புதிய உயிரினங்கள் கூடுதலாக இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டில் மட்டும் 293 வித பல்லிகளும், பாம்புகளும் உள்ளன. தற்போது பனாய் உடும்பு என்ற இனம் புதிதாக கண்டு பிடிக்கப்பட்டு சேர்க்கப்பட்டுள்ளது. நைஜீரியாவிலும், காம ரூனிலும் பீமன்தும்பி என்ற புதிய இனம் கண்டுபிடிக் கப்பட்டு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் பனாமாவில் மரத்தவளைய…

  23. இந்தியா, போரூரில் கனடாவில் குடியுரிமை பெற்ற ஈழத்தமிழர் ஒருவர் கடனட்டை மோசடி தொடர்பில் இந்திய பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். திரு ஹரிகுமார் என்பவரே கைது செய்யப்பட்டவர் ஆவர் .உமேஸ் என்ற இந்திய கடல்சார் பொறியியலாளரும் கைது செய்யப்பட்ட ஹரி குமார் என்ற கனேடிய தமிழரும் கடனட்டைகளை குளோனிங் செய்து புதிய அட்டைகளை உருவாக்கி அதன் மூலம் கொள்வனவுகளை மேற்கொண்டதாக கூறப்படுகின்றது. இவர்கள் மலேசியாவில் இருந்து வெற்று கடனட்டைகளை பெற்று கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள் தங்கியிருந்த வீட்டில் 24 இற்கு மேற்பட்ட அட்டைகள் எடுக்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

  24. தினசரி உணவாக அரைக் கிலோ மண் உண்ணும் இளைஞன் கள்ளக்குறிச்சி: நாளாந்தம் உணவாக அரைக் கிலோ மண்னை சாப்பிட்டு வருகிறார் காய்கறிக்கடை வியாபாரி கோபி(வயது 25). விழுப்புரம் மாவட்டம் தியாகதுருகத்தைச் சேர்ந்த இவர் தினசரி சாப்பிடும் மண்ணோடு இடைக்கிடையில் களிமண், ஆற்று மணல் போன்றவற்றையும் ருசித்து சாப்பிட்டு வருகிறார். அத்துடன் ஏரிக் களி மண்ணை மிகவும் விரும்பி சாப்பிடுகிறார். விழுப்புர மாவட்டத்தையே விசித்திரத்தில் ஆழ்த்தியுள்ள இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது மூன்று வயதிலிருந்தே இந்தப்பழக்கத்தை கொண்டுள்ள கோபி தனது காற்சட்டையில் தினசரி அரை கிலோவுக்கு மேலான மண்ணை சேமித்து வைக்கிறõர். பின்பு அதை வைத்திருந்து நாள் முழுவதும் சாப்பிடுகிறார் இவ்வாறு சாப்பி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.