செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7153 topics in this forum
-
இந்த நாடுகளில் காதலர் தினத்தை கொண்டாட முடியாது பெப்ரவரி மாதம் வந்துவிட்டாலே பலரது நினைவுக்கு முதலில் வருவது காதலர் தினம் தான். கிட்டதட்ட 1500 ஆண்டுகளுக்கும் மேலாக பெப்ரவரி 14, உலகம் முழுவதும் வேலண்ட்டைன்ஸ் டே ஆக கொண்டாடப்படுகிறது. காதலை கொண்டாட ஒரு நாள் போதாது தான். அதனால் தானோ என்னமோ சில நாடுகளில் ஒரு வாரம் கொண்டாடப்படுகிறது. இதே சமயம் வேலண்ட்டைன்ஸ் டே கொண்டாட சில நாடுகளில் தடையும் விதிக்கப்பட்டுள்ளது. மேற்கத்திய கலாச்சாரத்தை எதிர்ப்பதாலும், தங்கள் மதத்தின் கொள்கைகளுக்கு எதிரானதாக கருதப்படுவதாலும், இந்ததடை விதிக்கப்பட்டிருக்கிறது அவை எந்தெந்த நாடுகள் என்று இங்கு பார்க்கலாம் ஈரான்: ஈரான் நாட்டில் காதலர் தினம் தொடர்பான எந்தவித கொண்டாட்டங்களும், நடவடிக்கைக…
-
- 1 reply
- 715 views
-
-
இரண்டு உக்ரேனிய மாலுமிகள் இலங்கை கடற்பரப்பில் உயிரிழப்பு எகிப்தில் இருந்து இந்தியா நோக்கிச் சென்ற சரக்குக் கப்பலில் பணிபுரிந்து கொண்டிருந்த உக்ரேனிய கடற்படையினர் இருவர் இலங்கை கடற்பரப்பில் வைத்து உயிரிழந்ததையடுத்து காலி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கப்பல் தற்போது காலி துறைமுகத்திற்கு அப்பால் உள்ள கடற்பரப்பில் நங்கூரமிடப்பட்டுள்ளதாகவும், உயிரிழந்தமை தொடர்பான விடயங்கள் காலி நீதவானிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். சடலங்களை கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டு வருவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அங்கு பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படும் எனவும் அவர்கள் தெரிவித்தனர். உயிரிழந்தவர்கள் 41 மற்றும் 53 வயதுடைய உக்…
-
- 0 replies
- 285 views
-
-
தன்னைப் போன்ற தோற்றம் கொண்ட யுவதியை கொன்ற யுவதி ஜேர்மனியில் கைது By SETHU 01 FEB, 2023 | 05:06 PM தான் இறந்துவிட்டதாக காட்டிக்கொள்வதற்காக, தன்னைப் போன்ற முகத்தோற்றம் கொண்ட யுவதியை கொலை செய்தார் என்ற சந்தேகத்தில் யுவதியொருவரை ஜேர்மனிய பொலிஸார் கைது செய்தள்ளனர். ஜேர்மன் - ஈராக்கியரான 23 வயது யுவதி ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். இவர் 23 வயதான அல்ஜீரிய யுவதியை கொலை செய்தார் என ஜேரமனிய பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இக்கொலை தொடர்பில் 23 வயதான கொசோவோ இளைஞர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். மேற்படி ஜேர்மன் - ஈராக்கிய யுவதியை கடந்த வருடம் ஆகஸ்ட் 16 ஆம் திகதி முதல் காணவில்லை என அவரின் பெற்றோர் முறை…
-
- 0 replies
- 212 views
- 1 follower
-
-
நாயின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உரிமையாளர் பலி அமெரிக்காவில் நாயின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் அறிவித்துள்ளனர். வேட்டைக்குப் பிறகு, குறித்த நபர் தனது துப்பாக்கியை டிரக்கின் பின் இருக்கையில் பாதுகாப்பின்றி வைத்து விட்டு ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்துள்ளார் , இதன்போதுபின் இருக்கையில் இருந்த நாய் குதித்து துப்பாக்கியை மிதித்ததால் துப்பாக்கி வெடித்துள்ளது. உயிரிழந்தவர் 30 வயதுடையவர் எனவும், கடந்த 21ஆம் திகதி வேட்டையாடச் சென்ற போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் கன்சாஸ் மாநில பொலிஸார் தெரிவித்தனர். இந்த மரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், வேட்டையாடச் சென்ற போது ஏற்பட…
-
- 1 reply
- 494 views
- 1 follower
-
-
குழந்தை பிறந்து 23 நிமிடங்களுக்குப் பிறகு இறந்த விவகாரம்: தேசிய சுகாதார சேவையின் அறக்கட்டளைக்கு அபராதம்! ஒரு குழந்தை பிறந்து 23 நிமிடங்களுக்குப் பிறகு இறந்ததற்கு வழிவகுத்த தவறுகளுக்காக தேசிய சுகாதார சேவையின் அறக்கட்டளைக்கு 800,000 பவுண்டுகள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நாட்டிங்ஹாமில் உள்ள குயின்ஸ் மெடிக்கல் சென்டரில் (க்யூஎம்சி) அவசரகால சிசேரியன் அறுவை சிகிச்சைக்குப் பிறகு, மூளைக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் 15 செப்டம்பர் 2019ஆம் ஆண்டு பெற்றோர்களான சாரா மற்றும் கேரி ஆண்ட்ரூஸிற்கு பிறந்த குழந்தை இறந்தது. 900க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மற்றும் 400க்கும் மேற்பட்ட பணியாளர்கள் மூத்த மருத்துவச்சி டோனா ஒகென்டன் தலைமையில் மகப்பேறு பராமரிப்ப…
-
- 0 replies
- 270 views
-
-
பிரிட்டனில் இரு பெண்களை வல்லுறவுக்குட்படுத்திய பின், பெண்ணாக மாறியவர் ஆண்கள் சிறையில் அடைக்கப்பட்டார் By SETHU 27 JAN, 2023 | 01:27 PM பிரிட்டனில் இரு பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய பின்னர் பெண்ணாக மாறிய நபரை பெண்கள் சிறையிலிருந்து ஆண்கள் சிறையொன்றுக்கு அதிகாரிகள் மாற்றியுள்ளனர். ஐலா பிரைசன் எனும் இக்கைதி தற்போது பெண்ணாக உள்ளார். எனினும், அவர் ஆணாகப் பிறந்தவர். பின்னர் பாலின மாற்றம் செய்துகொண்டு பெண்ணாக மாறினார். https://www.virakesari.lk/article/146832 அவர் அடம் கிரஹாம் எனும் பெயருடன் ஆணாக இருந்தபோது ஸ்கொட்லாந்தில் இரு பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக குற்றம் சுமத்தப்ப…
-
- 0 replies
- 339 views
- 1 follower
-
-
உலகிலேயே விலை உயர்ந்த மாணிக்க கல்லை விற்பனை செய்ய முடியாமல் தவிக்கும் இலங்கை 25 ஜனவரி 2023 புதுப்பிக்கப்பட்டது 26 ஜனவரி 2023 உலகிலேயே மிகவும் பெறுமதியானது என கூறப்பட்ட 510 கிலோகிராம் எடையுடைய மணிக்கக்கல் கொத்தணியை விற்பனை செய்ய முடியாத நிலைமையை இலங்கை எதிர்நோக்கியுள்ளது. இந்த மாணிக்கக்கல்லை விற்பனை செய்வதற்காக சுவிஸர்லாந்திற்கு கொண்டு சென்றிருந்த போதிலும், அந்த கல்லை விற்பனை செய்ய முடியாது மீண்டும் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த மாணிக்கக்கல்லை கொள்வனவு செய்வதற்கான கொள்வனவாளர்கள் இல்லாமையே, இதற்கான காரணம் என தேசிய மாணிக்கக்கல் மற்றும் தங்காபரண அதிகார சபை தெரிவித்துள்ளது. உல…
-
- 0 replies
- 789 views
- 1 follower
-
-
சூப்பர் காரை வடிவமைத்த தாலிபான் அரசு - வியப்பில் உலகம்! தாலிபான் ஆளும் ஆப்கானிஸ்தான் தற்போது ஒரு சூப்பர் காரை வடிவமைத்துள்ளது உலகளவில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது ஆப்கானிஸ்தானில் நடைபெற்று வந்த அரசை வீழ்த்தி தற்போது அங்கு தாலிபான் ஆட்சி நடைபெற்று வருகிறது. தாலிபான் ஆட்சிக்கு வந்ததும் அங்குள்ள மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. மேலும் பெண்களுக்கு உண்டான உரிமைகளும் பறிக்கப்பட்டு வருவதாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்து வருகிறது. அதோடு அங்கு தாலிபானுக்கு எதிரான அமைப்புகள் தொடர்ந்து சண்டையில் ஈடுபட்டு வருவதால் அங்கு தொடர்ந்து பதற்ற நிலை இருந்து வருகிறது. இந்த நிலையில் பாகிஸ்தானுக்கும், ஆப்கானிஸ்தானுக்கு இடையே எல்லை பிரச்னைகள், பயங்கரவாதம்…
-
- 15 replies
- 1.4k views
-
-
கனிம வளங்கள், உப்பளங்கள், நிலக்கீழ் சுரங்கங்கள் நிறைந்த, Soledar நகரை பலமாதமாக தொடர்சியா போரிட்டு தம் படைகள் பூரண கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளதாக, ரஸ்யாவுடன் இணைந்து போரிடும் கூலிப்படையான வாக்னர் படையின் தலைவர் அதன் டெலிகிராம் குழுவில் அறிவித்துள்ளார். நகரை தாம் சூழ்ந்து விட்டதாயும், நகர் மத்தியில் இன்னும் சண்டை நடப்பதாயும் அதே குறிப்பில் சொல்லப்பட்டிருக்கிறது. பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சும் இந்த செய்தி அநேகமாக உண்மையாக இருக்கலாம் என கூறியுள்ளது. https://www.theguardian.com/world/live/2023/jan/11/russia-ukraine-war-live-wagner-may-make-up-quarter-of-russian-combatants-zelenskiy-strips-kremlin-allies-of-citizenship?filterKeyEvents=false&page=with:bl…
-
- 26 replies
- 1.4k views
-
-
யாழ்ப்பாணம் - மிருசுவில் தவசிகுளம் கண்ணகை அம்மன் கோயிலில் இருந்த பாம்பை நபர் ஒருவர் திருடிச் சென்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த திருட்டு சம்பவம் (14) சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது, கண்ணகை அம்மன் கோயில் அடியார்கள் நீண்ட காலமாக நாகபாம்பு ஒன்றை பால் ஊற்றி வளர்த்து வந்தனர்.இந்நிலையில் சம்பவ தினத்தன்று மாலை வேளையில் கோயில் முன்றலில் குரங்குடன் வந்த நபரொருவர், சிறுவர்களுக்கு குரங்கு ஆட்டம் காட்டியுள்ளார். அதனைத்தொடர்ந்து மகுடி வாசித்துள்ளார். மகுடி சத்தம் கேட்ட பாம்பு கோயில் முன் பகுதிக்கு வந்துள்ளது. அதன்போதே குறித்த நபர் பெட்டிக்குள் பாம்பை அடைத்து கொண்டு சென்று…
-
- 24 replies
- 1.5k views
- 1 follower
-
-
தடுப்பு முகாமிலுள்ள 'கிம்புலா எலே குணா' உட்பட 9 பேரை அழைத்து வருவதற்கு தமிழகம் விரையும் சிஐடியினர்! By T. Saranya 25 Jan, 2023 | 11:50 AM இந்தியாவின் தமிழகத்தில் உள்ள தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 'கிம்புலா எலே குணா' உட்பட 9 பேரை இலங்கைக்கு அழைத்து வருவதற்காக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று இன்றும் (ஜன 25) நாளையும் (ஜன 26) தமிழகம் செல்கிறது. கிம்புலா எலே குணா என்ற சின்னையா குணசேகரன், அழகப்பெரும என அழைக்கப்படும் கோட்டா காமினி, சுனில் காமினி பொன்சேகா, பம்மா என்ற ஸ்டான்லி கென்னடி பெர்னாண்டோ, அத்துருகிரியவைச் சேர்ந்த நளீன் சதுரங்க என்ற லடியா கெ…
-
- 0 replies
- 206 views
-
-
மட்டக்களப்பு நகரப்பகுதியில் உள்ள வீடு ஒன்றில் செய்வினை இருப்பதாக தெரிவித்து பூஜை தட்டில் பணமும் தங்க ஆபரணம் வைத்து பூஜை செய்து செய்வினையை அகற்றி தருவதாக பூஜை தட்டில் வைக்கப்பட்ட 60 ஆயிரம் ரூபா பணமும் தங்க மோதிரம் ஒன்றையும் திருடிச் சென்ற கொக்கட்டிச்சோலை பிரதேசத்தைச் சேர்ந்த இளம் பெண் பூசாரி ஒருவரை இன்று செவ்வாய்க்கிழமை (24 ஜனவரி) கைது செய்துள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர். கொக்கட்டிச்சோலை கடுக்காய்முனையைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த வருடம் டிசம்பர் 22 ம் திகதி மட்டக்களப்பு நகர் பகுதியில் குடியிருந்து வாழ்ந்துவரும் அறிமுகமானவர்களது வீட்டிற்கு சென்றுள்ளார். இதன்போது அந்த வீட்டின் பகுதியில் செய்வினை செய்திருப்பதாகவும் நான் நாககன்னி தெய்வம் ஆடி அதனை அக…
-
- 1 reply
- 306 views
-
-
யாழ் நகரப் பகுதியில் அமைந்துள்ள தங்குமிட விடுதி ஒன்றில், தங்கி நின்ற இளம் ஜோடியை யன்னல் வழியாக வீடியோ பதிவு செய்த விடுதி பணியாளர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த விடுதியில் உள்ள அனைத்து அறைகளிலும் உள்ள சுவர்களில் திருட்டுத்தனமாக கமெராக்கள் வைத்து, அதன் மூலமாக வீடியோ பதிவை தொடர்ச்சியாக செய்து வந்தமை கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்திருந்த தென்னிலங்கையை சேர்ந்த இளம் ஜோடி, குறித்த விடுதியில் தங்கியிருந்துள்ளனர். அப்போது யன்னல் வழியாக அவர்கள் உறங்குவதை ஒருவர் படம் பிடித்ததை அவதானித்தவர்கள் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். அவர்களின் முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட வேளை, விடுதியின் அனைத்த…
-
- 16 replies
- 1.4k views
-
-
நிலவில் கால் பதித்தவர் 93 வயதில் திருமணம் நிலவில் கால் பதித்த அமெரிக்க விண்வெளி வீரர்களில் ஒருவரான பஸ் ஆல்ட்ரின், தன், 93வது வயதில், நீண்ட காலமாக காதலித்து வந்த பெண்ணை திருமணம் செய்தார். கடந்த 1969 இல், அப்பல்லோ – 11 விண்கலம் வாயிலாக நிலவுக்கு பயணித்து, இதில் கால் பதித்த அமெரிக்க விண்வெளி வீரர்களில் ஒருவர் புஸ் ஆல்ட்ரின். இவருடன் பயணித்த மற்ற வீரர்களான நீல் ஆம்ஸ்ட்ராங், மைக்கேல் காலின்ஸ் ஆகியோர் ஏற்கனவே இறந்து விட்டனர். அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான, ‘நாசா’வில் பணியாற்றிய ஆல்ட்ரின், 1971இல் ஓய்வு பெற்றார். விண்வெளி ஆய்வு தொடர்பாக தனியாக ஒரு நிறுவனத்தை நடத்தி வந்தார். இவர், ஏற்கனவே மூன்று பெண்களை திருமணம் செய்து, அவர்களிடமிருந்து விவாகரத்து பெற்றார். இந்…
-
- 1 reply
- 510 views
-
-
ஆஸ்திரேலிய காட்டில் மனிதக் குழந்தையின் எடை கொண்ட ராட்சத தேரை பட மூலாதாரம்,QUEENSLAND DEPARTMENT OF ENVIRONMENT AND SCIENCE படக்குறிப்பு, ராட்சஷ கேன் தேரை 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஆஸ்திரேலியாவின் வடக்கு மழைக்காடு பகுதியில் ராட்சத கேன் தேரை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. முதலில் அதை பார்த்த வனத்துறை அதிகாரிகள் அது தேரை என்றே நம்பவில்லை. வழக்கமாக நாம் காணும் கேன் தேரைகளின் அளவை விட இந்த ராட்சஷ தேரையின் அளவு ஆறு மடங்கு பெரியதாக இருக்கிறது. அதேப்போல் சுமார் இரண்டரை கிலோவுக்கும் அதிகமான எடையில் மிகவும் பிரம்மாண்டமாக காட்சியளிக்கும் இந்த தேரை இதுவரை உலகில் …
-
- 0 replies
- 654 views
- 1 follower
-
-
அமெரிக்காவில் 3.7 கோடி ரூபாய்க்கு விற்பனைக்கு வந்த தீவு Posted on January 18, 2023 by தென்னவள் 9 0 மத்திய அமெரிக்காவின் நிகராகுவா பகுதியில் அமைந்துள்ள தீவு ஒன்று ரூ.3.7 கோடிக்கு விற்பனைக்கு வந்துள்ளதாக தகவல். இதே விலையில் இந்தியாவின் மும்பை அல்லது டெல்லி போன்ற நகரில் அப்பார்ட்மெண்ட் வாங்கலாம் என தெரிகிறது. நிகராகுவாவின் ப்ளூ ஃபீல்ட் கடற்கரையில் இருந்து சுமார் 19.5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ‘தி இகுவானா தீவு’தான் தற்போது விற்பனைக்கு வந்துள்ளது. இதை தீவுகளை விற்பனை செய்யும் நிறுவனம் ஒன்று அதன் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. 5 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்தத் தீவில், மூன்று படுக்கையறைகள், இரண்டு குளியலறைகள் கொண்ட வீடு இடம் பெ…
-
- 4 replies
- 922 views
-
-
கைலாசாவுடன் அமெரிக்கா, இந்தோனேசியா ஒப்பந்தம்! monishaJan 13, 2023 15:52PM ஷேர் செய்ய : அமெரிக்கா மற்றும் இந்தோனேசியா உடன் நித்யானந்தாவின் ஐக்கிய கைலாசா இருதரப்பு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. ஐக்கிய கைலாசா மற்றும் ஐக்கிய அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்திலுள்ள நெவார்க் சிட்டியும் “இருதரப்பு நெறிமுறை ஒப்பந்தத்தில்” கையெழுத்திடும் விழா நெவார்க் நகர அரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் ஐ.நா.வுக்கான கைலாசாவின் நிரந்தர தூதர் விஜயப்ரியா நித்யானந்தா, மேயர் பராகா, துணை மேயர் டிஃப்ரீடாஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மேலும், நியூ ஜெர்சியிலிருந்து கைலாசாவின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். இந்த விழாவின் போது கைலாசாவின் கொடி ஏற்றப்பட்டு க…
-
- 19 replies
- 1.3k views
-
-
யாழில் காதலனின் பிறந்த நாளுக்கு 10 இலட்சம் மதிப்பிலான பரிசுகளை சப்ரைஸ் டெலிவெரி மூலம் காதலி அவரது வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார். இச்சம்பவமானது நேற்று இடம்பெற்றுள்ளது. குறித்த நபருக்கு பிறந்தநாள முன்னிட்டு தனது காதலி சப்ரைஸ செய்வோம் என்ற எண்ணத்தில் அனுப்பியுள்ளார். இதனை நெட்டிசன்கள் பனிஸ் வாங்கி கொடுக்க கூட ஒரு தோழி இல்லை என போஸ்ட் செய்து தனது துயர்வினை பகிர்ந்து வருகின்றனர். அக்காதலியின் பரிசின் விவரங்கள் பின்வருமாறு : Samsug Galaxy S 22 22k Gold Chain 22k Gold Ring Cash 50000 Jack Daniels 03 Chocolate basket 21 letter Cake Heart Frames No France 12×15 frame Couple Frame Mug Magic pillow Prot…
-
- 128 replies
- 9k views
-
-
நடுக்கடலில் பழுதான படகு, அறுந்த நங்கூரம், ஆளில்லா தீவு: ஒரு மாதம் போராடி உயிர் தப்பிய தமிழ்நாடு மீனவர்கள் கட்டுரை தகவல் எழுதியவர்,அஷ்ரப் படானா பதவி,பிபிசி செய்தியாளர் 15 ஜனவரி 2023, 11:20 GMT புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,ALAMY எடிசன் டேவிஸ் மற்றும் அகஸ்டின் நெமஸ் ஆகியோர் இந்தியாவின் தெற்கு கரையில் இருந்து கடந்த நவம்பர் 27ஆம் தேதி மீன் பிடிக்க கடலுக்குள் செல்வதற்கு முன்பாக, கிறிஸ்துமஸ் பண்டிகைக்குள் திரும்பி விடுவோம் என்று தங்கள் குடும்பத்தாருக்கு உறுதி அளித்துவிட்டு சென்றனர். ஆனால், வாரக் கணக்கில் அவர்களிடம்…
-
- 7 replies
- 930 views
- 1 follower
-
-
போலி தலதா மாளிகையொன்று உருவாக்கப்பட்டு நிர்மாணிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளதாக அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் கூட்டறிக்கை விடுத்துள்ளார். குருநாகல் வடகட வீதியில் பொத்துஹெர என்ற இடத்தில் ஜனக சேனாதிபதி என்ற நபரால் போலியான போலி தலதா மாளிகை நிர்மாணிக்கப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டியுள்ளது. போலி தலதா மாளிகை கட்டுக்கதையால் பல உள்ளூர் மற்றும் வெளியூர் மக்கள் ஏமாற்றப்பட்டு பணம், தங்கம் போன்றவற்றை நன்கொடையாக வழங்கி வருகின்றமையும் தெரியவந்துள்ளது. ஜனாதிபதிக்கு பறந்த அவசர கடிதம் மேலும், பௌத்த மக்களின் உள்ளங்களை புண்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்கள் ஊடாக பல்வேறு கருத்துக்கள் வெளியிடப்படுவது தொடர்பிலும் மகாநாயக்க தேரர்களின…
-
- 5 replies
- 691 views
- 1 follower
-
-
யாழ்ப்பாணம் சிவன் கோவிலடியில் அமைந்துள்ள பிரபல சைவ உணவகத்தில் வாங்கப்பட்ட வடை ஒன்றிற்குள் கரப்பான் பூச்சி இருந்த சம்பவத்தில், குறித்த உணவகத்திற்கு 80,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 04ஆம் திகதி வடையில் கரப்பான் பூச்சி இருந்ததாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்து, யாழ் மாநகர பொது சுகாதார பரிசோதகர் பா.சஞ்சீவனால் பரிசோதிக்கப்பட்டது. இதன்போது பல்வேறு குறைப்பாடுகள் கண்டறியப்பட்டன. இதனையடுத்து பொது சுகாதார பரிசோதகரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து இன்றையதினம் (16) நீதிமன்றில் வழக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்ட போது எதிராளிகள் குற்றத்தை ஏற்றுக்கொண்டதை அடுத்து உணவகத்திற்கு 60,000/= ரூபா அபராதமும், சமையற்கூடத்திற்கு 20,000/= அபராதம் விதிக்க…
-
- 4 replies
- 729 views
-
-
உக்ரேனிய சிப்பாயின் நெஞ்சிலிருந்து வெடிக்காத கிரனேட் அகற்றப்பட்டது By SETHU 16 JAN, 2023 | 02:58 PM உக்ரேனிய சிப்பாய் ஒருவரின் நெஞ்சுக்குள்ளிருந்து, வெடிக்காத கிரனேட் ஒன்றை அந்நாட்டு மருத்துவர்கள் சத்திரசிகிச்சை மூலம் அகற்றியுள்ளனர். சிப்பாயின் இதயத்துக்கு அருகில் இந்த கிரனேட் சிக்கியிருந்தது. இந்த கிரனேட் எந்த வேளையிலும் வெடிக்கும் அபாயம் இருந்ததால், இரத்தம் வெளியேறுவதை மின்சாரத்தால் கட்டுப்படுத்துவதை தவிர்த்து இச்சத்திரசிகிச்சை செய்யப்பட்டதாக உக்ரேனிய இராணுவ மருத்துவர்களின் பேஸ்புக் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரேனிய பாதுகாப்புப் படைகளின் மிகுந்த அனுபவமுள்ள சத்திரசிகிச்சை நிபுணர் மேஜர்…
-
- 0 replies
- 434 views
- 1 follower
-
-
பதவியிலிருந்து ஓய்வு பெறும் புடின் – கருங்கடலில் இரகசிய மாளிகை உக்ரைனுடனான போரை தொடர்ந்து கடுமையான அழுத்தத்தை சந்தித்துவரும் ரஷ்ய அதிபர் புடின், அமைதியான முறையில் ஓய்வு பெறுவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த முயற்சிப்பார் என அவரது முன்னாள் உதவியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். புடின் ஆற்றும் உரைகளை எழுத்துவடிவமாக்கும் பதவியிலுள்ள Abbas Gallyamov என்பவர், புடின் தனது பதவியிலிருந்து ஓய்வு பெறுவார் என தெரிவித்துள்ளார். ஓய்வுக்குப் பின், கருங்கடலில் அமைந்துள்ள, கவர்ச்சி நடனங்களைக் கண்டுகளிக்கும் வசதியுடைய தனது இரகசிய மாளிகையில் தனது கடைசிக்காலத்தை செலவிட புடின் திட்டமிட்டிருப்பதாகவும் Abbas தெரிவித்துள்ளார். 2024ஆம் ஆண்டு நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் போட்ட…
-
- 5 replies
- 727 views
-
-
பிலிப்பைன்ஸில் இறைச்சியைவிட வெங்காயத்தின் விலை அதிகரிப்பு By T. Saranya 14 Jan, 2023 | 10:17 AM பிலிப்பைன்ஸில் ஒரு கிலோ சிவப்பு வெங்காயத்தின் விலை தற்போது ஒரு கிலோ இறைச்சியை விட அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது. கிலோவுக்கு 600 பிசோஸ் (இலங்கை மதிப்பு ரூ.3998) என்ற விலையில் விற்கப்படுகிறது. இது கோழி இறைச்சியை விட கிட்டத்தட்ட மூன்று மடங்கு விலை அதிகம் ஆகும். பன்றி இறைச்சி அல்லது மாட்டிறைச்சியை விட 25-50 சதவீதம் அதிகம். ஒரு கிலோ வெங்காயம் வாங்கவேண்டுமானால் ஒரு நாள் வேலைக்கான பிலிப்பைன்ஸின் குறைந்தபட்ச ஊதியத்தை விட அதிகம் செலவு செய்ய வேண்டி உள்ளது. …
-
- 0 replies
- 197 views
-
-
வடக்கு மாகாண பெண்களின் நிலைமை-பொலிஸார் வெளியிட்ட தகவல் வடக்கு மாகாணத்தை சேர்ந்த யுவதிகள் மற்றும் பெண்கள் கொழும்புக்கு வந்து தவறான தொழிலில் ஈடுபடுவது அதிகரித்திருப்பதை காணக்கூடியதாக உள்ளது என பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் தெரிவித்துள்ளது. அண்மையில் பல சந்தர்ப்பதங்களில் இந்த விடயம் தொடர்பான நிலைமை தெரியவந்தாகவும் பணியகம் கூறியுள்ளது. கடந்த வாரம் பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தினர், கொழும்பு கோட்டை, மருதானை பிரதேசங்களிலும் மகரகமை பிரதேசத்திலும் 19 பெண்களை கைது செய்தனர். இவர்களிடம் விசாரணைகளை நடத்தியதில் இவர்களில் 11 பேர் மன்னார், வவுனியா மற்றும் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு வந்துள்ளதாக தெரியவந்துள்ளது. ஆரம்பத்தில் இந்த பெண்கள்…
-
- 9 replies
- 1.1k views
-