செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7111 topics in this forum
-
மனிதர்களை அணு அணுவாய் சித்திரவதை செய்வதற்காக கண்டுபிடிக்கப்பட்ட வரலாற்றின் கொடூர கருவிகள்.! பல சித்திரவதை முறைகள் சுருக்கங்கள், தலை நொறுக்கிகள், மார்பக ரிப்பர் அல்லது கத்தரிகள் போன்றவை பாதிக்கப்பட்டவனை சிதைப்பதற்காக வடிவமைக்கப்பட்டவை, ஆனால் அவற்றின் இறுதி நோக்கம் மரணத்தை ஏற்படுத்துவதாக இருந்தது. சில சாதனங்களின் நோக்கம் வாழ்நாள் முழுக்க வேதனையையும், ஊனத்தையும் ஏற்படுத்துவதாக இருந்தது. மிக கொடூரமான வலியை ஏற்படுத்தும் வரலாற்றின் மோசமான சாதனங்கள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம். ஸ்கோல்ட் பிரிட்ல்(Scold’s Bridle) 16 ஆம் நூற்றாண்டில் ஸ்காட்லாந்தும் இங்கிலாந்தும் மந்திரவாதிகள், சூனியக்காரிகளாகக் கருதப்படும் பெண்கள் மீது அரசு ஸ்கோல்ட்ஸ் பிரி…
-
- 0 replies
- 609 views
-
-
பாப்பரசர், ஓரினச் சேர்க்கையை ஆதரிக்கவில்லை – வத்திக்கான் மறுப்பு பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் ஓரினச் சேர்க்கையாளர்கள் குறித்து தெரிவித்த கருத்து நோக்கத்துக்கு புறம்பாக பேசுபொருளாக்கப்பட்டுள்ளதாக வத்திக்கான் தெரிவித்துள்ளது. ரஸ்யாவை பிறப்பிடமாக கொண்ட இயக்குனர், இவெக்னி அஃபினீவெஸ்கி (Evgeny Afineevsky) தயாரித்த “பிரான்செஸ்க்கோ” எனும் ஆவணத் திரைப்படத்தில் ஒருபால் சேர்க்கை தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்த பரிசுத்த பாப்பரசர், ஓரினச் சேர்க்கையாளர்களும் குடும்பங்களுடன் சேர்ந்து வாழ்வதற்கான உரிமைகளை கொண்டவர்களே. அவர்களும் கடவுளுடைய பிள்ளைகள். யாரும் அவர்களை தூக்கி எறியவோ அவர்கள் மட்டில் பரிதாபப்படவோ கூடாது என்ற வகையில் கருத்துக்களை தெரிவித்திருந்தார். குறித்த கரு…
-
- 0 replies
- 324 views
-
-
-
திருகோணமலை மூதூர் பிரதேசத்தில் திருமணம் செய்த தன் மனைவிக்கு போதை ஊட்டி கூட்டு பாலியல் வல்லுறவுக்கு களம் அமைத்துக் கொடுத்த கணவருக்கு 15 வருட கடூழிய சிறை தண்டனையும் 10 இலட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்குமாறும் 2 ஆம் எதிரியான நண்பனுக்கு 5 வருட சிறைத்தண்டனையும் 5 இலட்சம் நஷ்டஈடு வழங்குமாறும் 3 ஆம் எதிரிக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனையும் 5 இலட்சம் நஷ்டஈட்டை பாதிக்கப்பட பெண்ணுக்கு வழங்குமாறு திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் நேற்று திங்கட்கிழமை (02) உத்தரவிட்டு தீர்ப்பளித்தார். கடந்த 2015 ஆம் ஆண்டு 4 மாதம் 14 ஆம் திகதி மூதூர் பிரதேசத்தில் தனது மனைவிக்கு போதை ஊட்டிய நிலையில் கணவர் உட்பட இருவர் கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக வழக்கு இடம்பெற்று வந்தது…
-
- 2 replies
- 612 views
-
-
மட்டக்களப்பில் ஏ.ரி.எம் அட்டையைத் திருடி மதுபானம் வாங்கிய நபருக்கு விளக்கமறியல்! மட்டக்களப்பில் வைத்தியர் ஒருவரின் வங்கி ஏ.ரி.எம் அட்டையை திருடி 20,000 ரூபாவுக்கு மதுபானம் அருந்தியதாகக் கூறப்படும் 40 வயதுடைய ஒருவரை 14 நட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிவான் ஏ.சி.ஏ. றிஸ்வான் நேற்று (திங்கட்கிழமை) உத்தரவிட்டார். குறித்த வைத்தியரின் ஏ.ரி.எம் அட்டை காணாமல் போய்யுள்ள நிலையில், மதுபானக் கடை இரண்டில் 20,000 ரூபாவுக்கு மதுபானம் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக அவரின் வங்கிக் கணக்கில் பணம் கழிக்கப்பட்டு அவரின் கையடக்கத் தொலைபேசிக்கு வங்கியின் குறுந்தகவல் வந்துள்ளது இதனையடுத்து பொலிஸாருக்கு செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து பொலிஸார் மதுபானக் க…
-
- 1 reply
- 486 views
-
-
ஒரு வருடமாக போகப்போகின்றது விமானத்தில் போய், இந்த வீடியோவைப்பார்க்க பறக்கனும் போல் இருக்கு Captain க்கு சுத்த தமிழ் என்ன?? விமானத்தில் தமிழில் அறிவிப்பு செய்த முதல் விமானி நான் தான்
-
- 1 reply
- 372 views
-
-
கிராமத்துக்கு தண்ணீர் கொண்டுவர 30 வருடங்களாக வாய்க்கால் வெட்டிய ‘பைத்தியம்’ லோங்கி பூயா, இந்தியாவின் பீகார் மாநிலத்திலுள்ள வரண்ட ஒதுக்குப்புறமான கிராமமான கோதில்வாவைச் சேர்ந்த வறியதொரு குடிமகன். இக் கிராமத்தில் வாழும் 750 பேரும் தலித் மக்கள். மட்குடிசைகளில் வாழும் இவர்களுக்கு இரண்டே கிணறுகள் தான் இருக்கின்றன. அவையும் தண்ணீர் பற்றாக்குறையால் பெரும்பாலும் வரண்டுபோய்விடும். லோங்கி பூயா இவர்களின் குறையைத் தீர்க்கத் தனி ஒரு மனிதனாகப் புறப்பட்டவர் தான் லோங்கி பூயா. மூன்று கிலோமீட்டர்களுக்கு அப்பாலுள்ள பங்கீதா மலையிலிருந்து தண்ணீரைக் கால்வாய் மூலம் தன் கிராமத்துக்குத் திருப்பும் முயற்சியில் இறங்கினார். கையி…
-
- 2 replies
- 819 views
-
-
களுவாஞ்சிக்குடி சுகாதார வைத்திய அதிகாரி திடீர் மரணம் November 1, 2020 காரைதீவு நிருபர் சகா களுவாஞ்சிக்குடி மற்றும் வெல்லாவெளி பிரதேச சுகாதாரவைத்திய அதிகாரி டாக்டர் சீனித்தம்பி கிருஸ்ணகுமார் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை காலமானார். கல்முனை பாண்டிருப்பு மண்ணின் சொத்துக்களில் ஒன்றாக இருந்த இவர் 3 பிள்ளைகளின் தந்தையாவார். மகனொருவர் மருத்துவபீட மாணவராவார். கல்முனைப் பிராந்திய தமிழ், முஸ்லிம் மக்களின் மனங்களில் நீங்கா இடம் பிடித்த டாக்டர் கிருஸ்ணகுமார் தனது 60வது வயதில் காலமானார். நேற்றிரவு கூட களுவாஞ்சிக்குடிப் பகுதியில் கொரோனா தொற்றாளர் ஒருவரைக் கண்காணித்துவிட்டே வந்திருக்கிறார். பட்டிப்பளை வெல்லாவெளி சுகதார வைத்திய அதிகாரியாகவிருந…
-
- 2 replies
- 361 views
-
-
திருகோணமலையில் விகாரையின் விகாரதிபதி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு! October 31, 2020 திருகோணமலை மாவட்டத்தின் சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இலங்கைத்துறைமுகத்தில் உள்ள விகாரையின் விகாரதிபதி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இலங்கைத்துறைமுகத்தில் உள்ள பக்வத விகாகரையின் விகாராதிபதியே இவ்வாறு தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இன்று காலை கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற பொலிஸார் தூக்கில் தொங்கிய நிலையில் விகாராதிபதியை சடலமாக மீட்டுள்ளனர். குறித்த விகாராதிபதியின் மரணம் தொடர்பிலான விசாரணைகளை சேருநுவர பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர். https://www.meenagam.com/?p=16340
-
- 0 replies
- 214 views
-
-
பாகிஸ்தானில் தொடரும் அவலம்; கிறிஸ்தவ சிறுமியை கடத்தி, மதம் மாற்றி திருமணம் செய்த 44 வயது நபர் பாகிஸ்தான் நாட்டில் சிறுபான்மையினராக உள்ள இந்துக்கள், சீக்கியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட பல்வேறு சமூக இளம்பெண்களை கடத்தி சென்று, இஸ்லாமிற்கு மதமாற்றம் செய்து பின்னர் கட்டாய திருமணம் செய்து கொள்கின்றனர் என்ற குற்றச்சாட்டு நீண்ட காலம் ஆக கூறப்பட்டு வருகிறது. பாகிஸ்தான் நாட்டின் கராச்சி நகரில் வசித்து வருபவர் அலி அசார் (வயது 44). இவர் அர்ஜூ ராஜா என்ற 13 வயது கிறிஸ்தவ சிறுமியை கடத்தி சென்று, இஸ்லாம் மதத்திற்கு மாற்றி, ஆவணங்களிலும் மாற்றம் செய்து திருமணம் செய்துள்ளார். கடந்த 2007ம் ஆண்டு பிறந்த சிறுமியின் பள்ளி ஆவண பதிவிலும், சர்ச்சில் உள்ள ரெஜி…
-
- 0 replies
- 319 views
-
-
பெரம்பலூர் அருகே கிடைத்தது 12 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய டைனோசர்களின் முட்டைகளா...? பெரம்பலூர் அருகே பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசர்களின் நூற்றுக்கும் மேற்பட்ட முட்டைகள் உள்ளிட்ட ஏராளமான கடல் வாழ் உயிரினங்களின் படிமங்கள், ஒரே இடத்தில் கண்டெடுக்கப்பட்டு உள்ளன. பெரம்பலூர் அருகே குன்னம் பெரிய ஏரியில் நேற்று மண் எடுத்து கொண்டிருந்தபோது, அம்மோனைட் எனப்படும், கடல்வாழ் நத்தைகளின் படிமங்களும் சிதைவுற்ற நிலையில் கிடைத்துள்ளது. மேலும் அந்த ஏரியில் டைனோசர் முட்டை போல் பெரிய உருண்டை வடிவிலான படிமங்கள் கிடைத்துள்ளன. அதனை புவியியல் ஆய்வாளர் வந்து பார்வையிட்டு, அது டைனோசர் முட்டையா?, இல்லையா? என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளன…
-
- 5 replies
- 1.5k views
-
-
காற்று மாசும் கொரோனா உயிரிழப்புக்கு ஒரு காரணம்! 29 Views கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் நுரையீரல் மற்றும் இதய நோய் உள்ளவர்களாக உள்ளனர். அவர்களுக்கு காற்று மாசு அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது என சமீபத்திய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. சர்வதேச அளவில் நேரிட்ட 15 சதவீத கொரோனா உயிரிழப்புகளுக்கு காற்று மாசும் காரணமாக இருந்திருக்கிறது. இதுபற்றிய ஆய்வின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. பசுமை இல்ல வாயுக்களின் உமிழ்வுகளால் உடல்நலத்திற்குத் தீங்கு ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. ஏற்கெனவே நடத்தப்பட்ட ஆய்வில், அதிக புகை மற்றும் தொழிற்சாலை வெளியேற்றும் மாசுக்களால் ஒவ்வொரு மனிதரின் வாழ்நாளிலும் இரண்டு ஆண்டுகள் குறைவதாகத் தெ…
-
- 0 replies
- 495 views
-
-
காணி அபகரிப்பில் ஈடுபடும் கும்பல் ? October 28, 2020 யாழில் ஆட்களற்று பயன்பாடின்றி காணப்படும் காணிகளை ஊடக நிறுவனம் ஒன்றின் பெயரில் உறுதிகள் தயாரிக்கப்பட்டு , அபகரிக்கும் முயற்சிகள் இடம்பெற்று வருவதாக தான் அறிந்து கொண்டுள்ளதாகவும், அவை தொடர்பில் பிரதேச செயலர்கள் கூடிய கவனம் செலுத்துமாறும் யாழ்.மாவட்ட செயலர் க. மகேசன் தெரிவித்துள்ளார். அபிவிருத்தி மற்றும் வாழ்வாதாரத்திற்கு பிரதேச வளங்களை பயன்படுத்தல் எனும் திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணத்தில் உள்ள வளங்களை அடையாளப்படுத்துவது தொடர்பிலான கலந்துரையாடல் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. அதன் போது , யாழில் ஆட்களற்று , பாவனையின்றி காணப்படும் காணிகளை அபகரிக்கும் முயற்சியி…
-
- 0 replies
- 359 views
-
-
பிரித்தானிய இளவரசியின் அரண்மனையில் வேலைவாய்ப்பு: ஏறக்குறைய 20,000 பவுண்டுகள் ஊதியம்! பிரித்தானிய இளவரசி எலிசபெத்தின் வின்ட்ஸ்டர் காஸ்டில் அரண்மனையில் தூய்மை பணியாளருக்கு ஏறக்குறைய 20,000 பவுண்டுகள் ஊதியமாக வழங்கப்படுகின்றது. இளவரசி எலிசபெத்தின் அரண்மனையில் தூய்மைப் பணிகளை மேற்கொள்வது, பராமரிப்பது போன்ற பணிகளை மேற்கொள்ள ஆட்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு அரச இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இதற்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 13 மாதங்கள் பயிற்சி அளிக்கப்பட்டு, பிறகு முழு நேரப் பணியாளர்களாக பணியமர்த்தப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்குத் தேர்வானோர் வின்ட்சர் காஸ்டில் அரண்மனை மட்டுமல்லாமல் பக்கிங்காம் அரண்மனை உள்…
-
- 6 replies
- 776 views
-
-
விஞ்ஞானம் இவளவு வளர்ந்தும்கூட மரணத்தை எம்மால் எதுவுமே செய்யமுடியவில்லை ஆனால் சில பூச்சிகள் விலங்குகளால் சர்வசாதாரணமாக மரணத்தைக்கடந்தும் வாழ்தல் சாத்தியமாகியிருக்கின்றது ஒரு கரப்பான் பூச்சியினால் அணுகுண்டின் கதிர்வீச்சுக்களில் இருந்துகூடத்தன்னை பாதுகாக்கமுடியும் என்று கூறப்படுகின்றது நாம் பார்க்கப்போகும் சில உயிரினங்களால் தலை இல்லாமல் கூட வாழமுடிகின்றது இதுதான் இயற்கையின் அதிசயம் அவ்வாறு எமனுக்கே அல்வா கொடுக்கும் உயிரினங்களைப்பற்றித்தான் நாம் இப்போது பார்க்கப்போகின்றோம் கரப்பான் பூச்சி எம்மால் மிகவும் அருவருப்புடன் பார்க்கப்படும் பூச்சியினம்தான் கரப்பான் பூச்சி ஆனால் அதன் தலையை துண்டாக்கினால் கூட அதனால் உயிர்வாழமுடியும் ஒரு மனிதனின் தலையைத்துண்டாக்கினால் இ…
-
- 0 replies
- 874 views
-
-
பிரமிளா கிருஷ்ணன் பிபிசி தமிழ் துப்பிக்கப்பட்டது 5 நிமிடங்களுக்கு முன்னர் திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் யானை காந்திமதி, கடுமையான கட்டுப்பாடுகளை பின்பற்றி ஒரே ஆண்டில் சுமார் 300 கிலோ அளவுக்கு உடல் எடையை குறைத்திருக்கிறது. உடல் எடை குறைப்பில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு யானை காந்திமதியின் செயல் உத்வேகம் அளித்துள்ளது. 50 வயதான கோயில் யானை காந்திமதி, கடந்த ஆண்டு 4450 கிலோ எடை கொண்டிருந்தது. 2019 டிசம்பர் மாதம் தமிழக அரசின் சார்பில் நடத்தப்பட்ட யானைகள் புத்துணர்வு முகாமில் அதிக எடை இருப்பதாகவும், எடை அதிகரிப்பு காரணம…
-
- 0 replies
- 447 views
-
-
இப்படியும் ஒரு மானம்பு! உயரப்புலம் விநாயகர் ஆலயத்தில் ஐயர் காட்டிய வித்தை!😂
-
- 0 replies
- 479 views
-
-
53 நாடுகளின் தீப்பெட்டிகளை சேகரித்து வைத்து வைத்திருக்கும் யாழ் தீப்பெட்டிப் பிரியர் - ந.லோகதயாளன். October 25, 2020 வரலாற்றுச் சான்றுகளாக முத்திரை சேகரித்தல், நாடுகளின் நாணயங்ள் சேகரித்தல் ஏன் பேனா சேகரிப்பதும் உண்டு இன்னும் சிலர் லேஞ்சியினை சேகரிப்பதாகவும் அறியப்பட்டுள்ளது. ஆனால் யாழ்ப்பாணத்தில் ஒருவர் வித்தியாசமான சித்தனையில் வித்தியாசமான பொருள் ஒன்றைச் சேகரித்து யுத்தகாலம் முதல் இன்றுவரை பேணிப் பாதுகாத்து வருகின்றார். தனது தொழில் நிமித்தம் பல நாடுகளின் பணியாளர்களுடன் பழகும் சந்தர்ப்பம் கிட்டியதனால் அத்தனை நாடுகளினதும் ஓர் பொருளை சேகரிக்க எண்ணி இன்று 35 ஆண்டுகளிற்கு முன்பிருந்து ஓர் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அதன் மூலம் அத்தனை நாட்டுப் பணியாள…
-
- 0 replies
- 396 views
-
-
கொரோனாப் பரிசோதனை செய்வது இப்படித்தான்
-
- 1 reply
- 524 views
-
-
கொரோனா வைரஸைக் குணப்படுத்த சாத்தியமான சிகிச்சையை கண்டறிந்த அமெரிக்கா வாழ் இந்திய சிறுமி புதுடெல்லி: அமெரிக்க வாழ் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் அனிகா செப்ரோலு. இவருக்கு வயது 14. அவர், டெக்ஸாஸ் மாகாணத்தின் ஃப்ரிஸ்கோ பகுதியில் வசித்துவருகிறார். அவர், கொரோனா வைரஸைக் குணப்படுத்தும் சிகிச்சை முறையைக் கண்டறிந்ததற்காக 2020-ம் ஆண்டுக்கான இளம் விஞ்ஞானி விருதை வென்றுள்ளார். அவருக்கு 18 லட்ச ரூபாய் பரிசும் வழங்கப்பட்டுள்ளது. சிலிகோ முறையின் மூலம் தலைமை மூலக்கூறுகளைக் கண்டறிந்து அதன்மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட சார்ஸ் கோவிட் வைரஸின் கூட்டு புரதத்தை பிணைக்கலாம் என்ற சிகிச்சைமுறையைக் கண்டறிந்துள்ளார். அதற்காகக்தான் அனிகாவுக்கு பரிசு வழங்கப்பட்…
-
- 2 replies
- 561 views
-
-
ஒரே போத்தலில் தண்ணீர் பருகிய இருவர் மீது வழக்கு! கடமையிலிருந்த போது ஒரே போத்தல் தண்ணீரை பருகிய பொலிஸ் அதிகாரியொருவருக்கும் சிவில் பாதுகாப்பு பெண் அதிகாரியொருவருக்கும் எதிராக, சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாணந்துறை நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு காவலரணில் கடமையிலிருந்த இருவருக்கு எதிராகவே இவ்வாறு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமை குறித்த இருவருக்கு எதிராகவும் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் வழக்கு தொடரவும், ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கும் பாணந்துறை நீதிமன்ற நீதிவான் நடவடிக்கை எடுத்துள்ளார். https://newuthayan.com/ஒரே-போத்தலில்-தண்ணீர்-பர/
-
- 0 replies
- 513 views
-
-
மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் உள்ள வங்கி ஒன்றில் ஏ.டி.எம் இயந்திரத்தின் மூலம் பணம் எடுக்க வந்தவர்களுக்கு அதனை பயன்படுத்தி பணம் எடுக்க தெரியாததையடுத்து அவர்களுக்கு உதவி செய்வது போல் அவர்களின் ஏ.ரி.எம். காட்டை கொண்டு பணமோசடி செய்து வந்த காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரை போலி ஏ.டி.எம் காட்டுடன் இன்று வியாழைக்கிழமை கைது செய்துள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிசார் தெரிவித்தனர். குறித்த பிரதேசத்தில் உள்ள ஒருவர் அங்குள்ள வங்கியின் ஏ.டி.எம் காட்மூலம் பணம் பெறச் சென்றுள்ளார் அவருக்கு ஏ.டி.எம் இயக்கி பணம் தெரியாத நிலையில் அங்கு நின்ற குறித்த நபர் அவருக்கு உதவுவது போல அவரின் ஏ.டி.எம் காடட் மூலம் ஏ.டி.எம் இயந்திரத்தில் 4 ஆயிரம் ரூபா பணத்தை பெற்றுக் கொண்டு சென்ற…
-
- 0 replies
- 360 views
-
-
பிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு இருந்து வந்த தடையை நீக்கி பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு வெளியிட்டுள்ளது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தொடுத்த வழக்கிலேயே இந்த தீர்ப்பு வெளியாகியுள்ளது. அதேவேளை, பிரித்தானிய அரசாங்கத்தின் முடிவைப் பொறுத்தே இந்த தீர்ப்பு உறுதிசெய்யப்படும் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இது தொடர்பான மேலதிக விபரங்கள் இன்னும் சற்று நேரத்தில் .. https://www.ibctamil.com/uk/80/152753?ref=bre-news
-
- 15 replies
- 2.1k views
-
-
அரச வைத்தியசாலையிலுள்ள அறிவித்தல் பலகையில் தவறான தமிழ் சொற்பிரயோகம்: அசௌகரியத்திற்குள்ளாகும் நோயாளர்கள்..! பதுளை பிரதான அரசினர் மருத்துவமனையில் நோயாளர்கள் கவனத்திற் கெடுத்துக்கொள்ளப்படும் வகையிலான பல்வேறு அறிவுறுத்தல்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், அவ்வறிவுறுத்தல்கள் தவறான வார்த்தைப் பிரயோகங்களைப் குறிப்பதினால், நோயாளர்கள் பெரும் அசௌகரியங்களுக்குள்ளாகி வருகின்றனர். இவ்விடயங்களை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருவதாக, பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ. அரவிந்தகுமார், பதுளை மாவட்ட சுகாதாரப் பணிப்பாளருக்கு அனுப்பியுள்ள அவசரக் கடிதமொன்றில் குறிப்பிட்டுள்ளார். இக்கடிதத்தின் பிரதிகள், ஊவாமாகாண ஆளுனர் ஏ.கே.எம். முசாம்மில்,? ஊவா மாகாண சுகாதாரப் பணிப்பாளர…
-
- 0 replies
- 304 views
-
-
பிரதமர் பொரிஸ் ஜோன்சன் பதவி விலகுகிறாரா? பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் ஊதியம் போதவில்லை என்று கூறி தனது பதவியை எதிர்வரும் வசந்த காலத்தில் இராஜினாமா செய்யவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பெயரிடப்படாத நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் வெளியிட்ட தகவலை மேற்கோளிட்டு பிரித்தானிய டேப்ளாய்ட் தி டெய்லி மிரர் இந்த செய்தியினை வெளியிட்டுள்ளது. பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தற்போது 150,402 பவுண்டுகள் ஊதியமாகப் பெற்று வருகிறார். இது அவரது முந்தைய வருவாயோடு ஒப்பிடுகையில் மிகவும் குறைவு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொரிஸ் ஜோன்சன், பிரதமராவதற்கு முன்பு, நாளிதழ் ஒன்றில் தலையங்கம் எழுதி மாதம் 23,000 பவுண்டுகள் ஊதியமாக பெற்று வந்ததாக மேற்குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் கூறியுள்…
-
- 1 reply
- 395 views
-