செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7153 topics in this forum
-
யாழில் கத்திக் குத்தில் ஒருவர் படுகாயம் யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் இன்று (09) பிற்பகல் ஒருவர் மீது கத்திக்குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் படுகாயமடைந்த நபர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் உள்ள மோட்டார் சைக்கிள் விற்பனை நிலையம் ஒன்றில் பணியாற்றும் ஊழியர் மீதே கத்திக்குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். https://newuthayan.com/யாழில்-கத்திக்-குத்தில்/
-
- 0 replies
- 471 views
-
-
புன்னாலைக்கட்டுவன் ஆயாக்கடவை சித்தி விநாயகர் ஆலய திருப்பணி உண்டியல் ஆலய பூசகரால் உடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், இது குறித்து பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. புன்னாலைக்கட்டுவன் ஆலய உரிமம் சம்மந்தமான வழக்கில் ஆலய பூசகருக்கு சாதகமாக வழக்கு தீர்ந்ததும் அது சம்மந்தமான மேன் முறையீடு யாழ். மேல் நீதிமன்றில் இடம்பெற்று வருகின்றது. இது இவ்வாறு இருக்க ஆலய பூசகரால் திருப்பணி உண்டியல் நள்ளிரவில் உடைக்கப்பட்டுள்ளது. ஆலயத்தின் திறப்பு பரிபாலன சபையிடம் உள்ள நிலையில் அதனை வழக்கறிஞர் மூலமோ அன்றி நீதிமன்றம் ஊடாகவோ திறப்பை பெற்றுக்கொள்ளாமல், இரவில் உண்டியலை உடைத்த செயல் ஊர் மக்களிடை…
-
- 2 replies
- 618 views
-
-
மதுரையில் விழிப்புணர்வு ஏற்படுத்த முக கவச வடிவில் பரோட்டா விற்பனை மதுரையில் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஓட்டல் ஒன்றில் முக கவச வடிவிலான பரோட்டாக்கள் விற்பனை செய்யப்படுகின்றன. பதிவு: ஜூலை 09, 2020 14:39 PM மதுரை, மதுரையில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதுரை மாநகராட்சி பகுதிகள், பரவை பேரூராட்சி பகுதி, மதுரை கிழக்கு, மேற்கு மற்றும் திருப்பரங்குன்றம் பகுதிகளில் மட்டும் வருகிற 12ந்தேதி நள்ளிரவு 12 மணி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மதுரையில் நேற்று ஒரே நாளில் 335 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ண…
-
- 1 reply
- 346 views
-
-
ரூ.100 கோடி தங்கம் கடத்தல் : யார் இந்த ஸ்வப்னா சுரேஷ்...? தான் வேலைபார்க்கும் அனைத்து இடங்களிலும் தன்னை சுற்றி உள்ள ஆண்கள் மீது பாலியல் புகார் கூறும் பழக்கம் கொண்டவர் ஸ்வப்னா. பதிவு: ஜூலை 09, 2020 11:25 AM திருவனந்தபுரம் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் பெருமளவில் தங்கம் கடத்தப்படுவதாக புகார் வந்தது. இதனையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் விமான நிலைய சரக்கு பிரிவில் ஐக்கிய அரசு அமீரகத்தில் இருந்து மணப்பாடில் உள்ள அந்நாட்டு தூதரக முகவரிக்கு வந்த பெட்டியை திறந்து பார்த்தனர். அப்போது அதில் 30 கிலோ தங்கம் இருந்தது. அவற்றின் மத…
-
- 0 replies
- 293 views
-
-
யாழ். தெரிவத்தாட்சி அலுவலகத்தில் உத்தியோகஸ்தர் மீது வாள்வெட்டு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் உள்ள யாழ்.தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகம் (மாவட்ட செயலகம்) முன்பாக, இனம் தெரியாத நபர்களினால் உத்தியோகஸ்தர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. யாழ். மாவட்ட செயலகத்தில் கடமையாற்றும் மல்லாகத்தை சேர்ந்த பொன்னம்பலம் பிரகாஸ் எனும் சுற்றுச்சூழல் அதிகார சபை பிரிவில் கடமையாற்றும் உத்தியோகஸ்தர் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன் அவரது மோட்டர் சைக்கிளும் சேதமாக்கப்பட்டுள்ளது. குறித்த உத்தியோகஸ்தர் வழமை போன்று இன்றைய தினம் (08) காலை கடமைக்காக வந்த போது, அவரை பின் தொடர்ந்து இரண்டு மோட்டார் சைக்கிள் வந்த நால்வர், மாவட்ட செயலக வாயிலுக்கு அருகில் வழி மறித்து அவர் …
-
- 2 replies
- 481 views
-
-
இரட்டை குட்டிகளை பெற்ற யானை மின்னேரிய தேசிய பூங்காவில் யானை ஒன்று இரட்டை யானைக் குட்டிகளை பெற்றெடுத்துள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது. இலங்கை வரலாற்றில் யானை ஒன்றுக்கு ஒரே பிரசவத்தில் இரட்டை குட்டிகளை பிரசவித்த முதல் சந்தர்ப்பம் இதுவாகும். https://newuthayan.com/இரட்டை-குட்டிகளை-பெற்ற-ய/
-
- 0 replies
- 448 views
-
-
யாழ்ப்பாணம் கோண்டாவில் கிழக்கு ஞானவைரவர் ஒழுங்கையில் அமைந்துள்ள சமுர்த்தி உத்தியோகத்தரின் வீடு இனந்தெரியாத நபர்களினால் நேற்று இரவு அடித்து உடைக்கப்பட்டுள்ளது. இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த நான்கு பேர் கொண்ட கும்பலே இந்த தாக்குதலை மேற்கொண்டுவிட்டு தப்பி சென்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் முழுமையான விபரங்கள் வெளியாகாத நிலையில், கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். https://www.ibctamil.com/srilanka/80/146474
-
- 0 replies
- 394 views
-
-
இரத்ததானம் வழங்கிய யாழ் டோனி ரசிகர் மன்றம் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் டோனியின் பிறந்தநாளான இன்று (07) யாழ்ப்பாண டோனி ரசிகர் மன்றத்தினர் இரத்த வங்கியில் இரத்த தானம் வழங்கியுள்ளனர். அத்துடன் கைதடி நவீல்ட் பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவும் வழங்கி வைத்தனர். https://newuthayan.com/இரத்ததானம்-வழங்கிய-யாழ்/
-
- 0 replies
- 326 views
-
-
சண்டியர்களாக மாறிய மருத்துவர்கள்..! வைத்தியசாலைக்குள் அடிதடி, சொத்துக்கள் சேதம், இருவரும் ஆளுக்கொரு வைத்தியசாலையில் படுத்துக்கொண்டனர்.. அம்பாறை- நிந்தவூர் ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையில் இரு மருத்துவர்களுக்கிடையில் ஏற்பட்ட முறுகல் மோதலாக மாறிய நிலையில் இருவரும் சண்டியர்களாக மாறி மோதிக்கொண்டனர். மோதல் முடிந்தவுடன் இரு மருத்தவர்களும் ஏட்டிக்குபோட்டியாக ஆளுக்கொரு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளனர். குறித்த சம்பவம் செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணியளவில் நிந்தவூர் ஆயுள்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது. இரு மருத்துவர்களுக்கும் இடையே இருந்த நீண்ட கால முறுகல் நிலையே இம்மோதலுக்கு பிரதான காரணம் என தெரிவிக்கப்படுகிறது. பணி நிமிர்த…
-
- 2 replies
- 455 views
-
-
தெல்லிப்பழையில் 9 ஆடுகளை கடித்துக் கொன்ற சிறுத்தை! யாழ்ப்பாணம் – தெல்லிப்பழை மாவை கலட்டி பகுதியில் வீட்டில் கட்டியிருந்த 9 ஆடுகளை சிறுத்தை ஒன்று கடித்து கொன்றுள்ளது. இன்று (07) காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது வீட்டில் கட்டப்பட்டிருந்த 19 ஆடுகளில் 9 ஆடுகள் கொல்லப்பட்டதுடன் ஐந்து ஆடுகள் காயமடைந்துள்ளது. https://newuthayan.com/தெல்லிப்பழையில்-9-ஆடுகளை/
-
- 12 replies
- 2.2k views
-
-
உய்குர் இன பெண்களின் தலைமுடியை வெட்டி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சீனா உய்குர் இன பெண்களின் தலைமுடியை வெட்டி அவற்றை வெளிநாடுகளுக்கு அழகுசாதான பொருள்களாக சீனா ஏற்றுமதி செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பதிவு: ஜூலை 07, 2020 14:11 PM நியூயார்க் சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் லட்சக்கணக்கான உய்குர் இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இஸ்லாமிய மதத்தை பின்பற்றும் இந்த மக்களை சீனர்களின் வாழ்க்கை முறைக்கு 5 ஆண்டுகளுக்குள் மாற்ற சீனா திட்டமிட்டுள்ளது. சீன அரசின் கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் உய்குர் இன மக்கள் அங்குள்ள, வதை முகாம்களில் அடைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்படுகின்றனர். சீனாவில் சிறுபான்மையின முஸ்லிம் வகுப்பினரான உய்குர் முஸ்லிம…
-
- 1 reply
- 382 views
-
-
ஆற்றில் குதித்து சிறுவனும் சிறுமியும் தற்கொலை கண்டி – கடுகஸ்தோட்ட பாலத்தில் இருந்து மஹாவலி ஆற்றில் குதித்து இருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இவ்வாறு 17 வயதுடைய சிறுவனும், 16 வயதுடைய சிறுமியுமே தற்கொலை செய்து கொண்டுள்ளனர். https://newuthayan.com/ஆற்றில்-குதித்து-சிறுவனு/
-
- 0 replies
- 370 views
-
-
பாலியல் சேட்டை புரிய முயன்ற நபருக்கு தர்ம அடி கொடுத்த பெண்! யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் வைத்து இளம் பெண் ஒருவரிடம் ரேட் எவ்வளவு என்று கேட்டு தரக்குறைவாக நடந்து கொண்ட நபரை அந்த பெண்ணே இழுத்துப் போட்டு உதைத்த்துள்ளார். இன்று (06) பிற்பகல் 2.15 மணியளவில் யாழ் பிராதான பஸ் நிலையத்திற்கு அருகில் இச் சம்பவம் இடம்பெற்றது. யாழ்.பிரதான பஸ் நிலையத்திற்கு அருகில் நடமாடித்திரிந்து அதிஸ்ரலாப சீட்டு விற்பனை செய்யும் நபர் ஒருவர் அங்கு வந்த இளம் பெண் ஒருவரிடம் ரேட் எவ்வளவு என்று கேட்டுள்ளார். தரக்குறைவான வார்த்தை பிரயோகம் செய்த அந்த நபரை முறைத்துப் பார்த்த அந்த பெண் விடயத்தை பெரிது படுத்தாமல் அங்கிருந்து சென்றுள்ளார். அங்குள்ள வியாபார நிலையம் ஒன்றில் பெருட்களை…
-
- 1 reply
- 491 views
-
-
யாசகரின் கணக்கில் 1400 இலட்சம் – போதைப் பொருள் டீலருடையதாம்! கொழும்பிலுள்ள யாசகர் ஒருவரின் வங்கிக் கணக்கில் 1400 இலட்சம் ரூபாய் பணம் வைப்பிலிடப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கல்கிஸ்ஸ சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் முன்னெடுத்த விசாரணையிலேயே இவ்விடயம் தெரியவந்துள்ளது. குறித்த பணமானது ஹெரோயின் போதைப்பொருள் டீலர் மர்வின் ஜானா என்பவருடையது என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தனியார் வங்கி ஒன்றில் கணக்குத் திறந்து பணம் வைப்பிலிடப்பட்டுள்ளதுடன் அது தொடர்பான வங்கி புத்தகம் மற்றும் வங்கி அட்டை ஆகியவை போதைப்பொருள் டீலர் மர்வின் மனைவியிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளதாகவும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர். குறித்த போதைப்பொர…
-
- 0 replies
- 324 views
-
-
தொலைபேசியில் வீடியோ கேம் விளையாடியவர் மூளை நரம்பு வெடித்து உயிரிழப்பு தொலைபேசியில் ஐந்து மணி நேரத்துக்கு மேல் வீடியோ கேம் விளையாடிய ஒருவர், மூளை நரம்பு வெடித்து உயிரிழந்த சம்பவம் கொழும்பில் பதிவாகியுள்ளது. கொழும்பு- கிரான்ட்பாஸ் பிரதேசத்தை சேர்ந்த 30 வயதுடைய ஒருவரே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். இவர் கடந்த 29 ஆம் திகதியே திடீர் மரணமடைந்திருந்தார். இந்நிலையில் இந்த திடீர் மரணம் தொடர்பாக மரண பரிசோதகர் இரேஷா தேஷானி விசாரணையை முன்னெடுத்திருந்தார். இதன்போதே அவரது மனைவி ஆனந்தன் தர்ஷிகா இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “எனக்கு தெரிந்தவரையும் அவருக்கு அல்சர் வருத்தம் மாத்திரமே இருந்தது வேறு எந்ததொரு நோயும் இருக்கவில்லை. கடந்த 2…
-
- 41 replies
- 4.2k views
-
-
தங்க முகக்கவசம் அணியும் இந்தியா இந்தியாவைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் விசித்திரமாக தங்கத்தால் தயாரிக்கப்பட்ட முகக்கவசத்தை அணிந்து வருகிறார். புனே நகரைச் சேர்ந்த வர்த்கரான ஷங்கர் குர்ஹாடே என்பவரே இவ்வாறு தங்க முகக்கவசத்தை அணிகிறார். இந்த தங்க முகக்கவசம் 60 கிராம் தங்கத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் இலங்கை பெறுமதி 719,206 இலங்கை ரூபா ஆகும். https://newuthayan.com/தங்க-முகக்கவசம்-அணியும்/
-
- 4 replies
- 1.1k views
-
-
தடுப்புச்சுவரை தாண்டி செல்ல ‘குட்டி’க்கு பயிற்சி அளித்த தாய் யானை கூடலூர்: நீலகிரி மாவட்டம் கூடலூரில் இருந்து கீழ்நாடுகாணி வழியாக கேரள மாநிலம் பாலக்காட்டுக்கு மலைப்பாதை செல்கிறது. இந்த மலைப்பாதையில் இருபுறங்களிலும் அடர்ந்த வனப்பகுதி காணப்படுகிறது. இந்த வனப்பகுதியில் காட்டுயானைகள், புலிகள், காட்டெருமைகள், மான்கள், சிறுத்தைப்புலிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இதனால் மலைப்பாதையில் வனவிலங்குகள் நடமாட்டம் காணப்படும். குறிப்பாக காட்டுயானைகளின் நடமாட்டம் அதிகளவில் இருக்கும். தற்போது கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லும்…
-
- 0 replies
- 405 views
-
-
25 ஆயிரம் சிகரட்டுக்களுடன் சீன பெண்கள் கைது சட்டவிரோதமான வெளிநாட்டு சிகரட்டுகளை தம்வசம் வைத்திருந்த இரண்டு சீன பெண்கள் கொழும்பு – கல்கிஸை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது 25 ஆயிரத்து 600 சிகரட்டுக்கள் கைப்பற்றப்பட்டது. https://newuthayan.com/25-ஆயிரம்-சிகரட்டுக்களுட/
-
- 0 replies
- 386 views
-
-
வவுனியா செட்டிகுளம் பகுதியிலுள்ள கிராம அலுவலகர் ஒருவர் தனது வீட்டிற்குள் புகுந்த பக்கத்துவீட்டு உறவினரின் வளர்ப்பு நாய் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொண்டபோது சம்பவ இடத்தில் நாய் துடிதுடித்து உயிரிழந்துவிட்டதாக வளர்ப்பு நாயின் உரிமையாளர் செட்டிகுளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டினை மேற்கொண்டுள்ளார் . இவ்விடயம் குறித்து மேலும் தெரியவருகையில், இன்று பிற்பகல் வவுனியா செட்டிகுளம் கங்கன்குளம் 2 ஆம் பாம் வீதியிலுள்ள கிராம அலுவலகரின் வீட்டிற்குள் புகுந்த பக்கத்துவீட்டு உறவினரின் நாய் மீது குறிவைத்து குரங்குகள் சுடும் துப்பாக்கியைப்பயன்படுத்தி துப்பாக்கிச்சூடு மேற்கொண்டதாகவும் இதனால் குறித்த நாய்க்கு வலிப்பு ஏற்பட்டு சம்பவ இடத்தில் துடிதுடித்து உயிரிழந்துவ…
-
- 2 replies
- 1.2k views
-
-
ஓடிக் கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது கொழும்பு – வாட் ப்ளேஸில் இன்று (02) மாலை கார் ஒன்று தீப்பற்றி எரிந்து நாசமாகியுள்ளது. இயந்திர கோளாறு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவத்தில் எவரும் காயமடையவில்லை. https://newuthayan.com/ஓடிக்-கொண்டிருந்த-கார்-த/
-
- 7 replies
- 1.1k views
-
-
ஆற்றுக்குள் கைபேசியை தேடிய பொலிஸ் அதிகாரியை இழுத்து சென்ற முதலை! மாத்தறை – நடுகல, நில்வல ஆற்றில் விழுந்த பொலிஸ் அதிகாரியை முதலை இழுத்துச் சென்றுள்ளது. ஆற்றில் விழுந்த தனது கைபேசியை தேடிய போது தவறி ஆற்றுக்குள் விழுந்த குறித்த அதிகாரையை முதலை இழுத்து சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் அவரை தேடும் பணியில் கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர். https://newuthayan.com/ஆற்றுக்குள்-கைபேசியை-தேட/
-
- 0 replies
- 368 views
-
-
சினிமாவை போல் சம்பவம்: தங்கையை பாலியல் பலாத்காரம் செய்து மரணத்திற்கு காரணமாக இருந்தவன் திட்டமிட்டு கொலை சினிமாவை மிஞ்சும் சம்பவம் தங்கையை பாலியல் பலாத்காரம் செய்து அவரது மரணத்திற்கு காரணமாக இருந்த குற்றவாளையை திகார் சிறைக்கே சென்றௌ சகோதரன் கொலை செய்து உள்ளார். பதிவு: ஜூலை 02, 2020 08:27 AM புதுடெல்லி திகார் சிறையில் இருந்த இளைஞர் மெஹ்தாப் (28) கைதியை அதே சிறையில் இருந்த 22 வயது ஜாகிர் என்பவர் கத்தியால் பல முறை குத்திக் கொலை செய்து உள்ளார் தங்கையை பாலியல் பலாத்காரம் செய்து தற்கொலைக்கு காரணமாக இருந்த குற்றவாளியை 6 வருடங்கள் திட்டமிட்டு சகோதரன் கொலை செய்து உள்ளார். சினிமாவை மிஞ்சும் இந்த கொலை சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூற்றப்படுவதாவத…
-
- 0 replies
- 352 views
-
-
எப்படியாவது காப்பாத்திருவார்னு நினைச்சேனே.! அவசரப்பட்டுட்டேனே.! பரிதாபமாக உயிரை விட்ட பெண்.! மகாபலிபுரம் அருகே உள்ளது பூஞ்சேரி பகுதி.. இங்கு ஒரு வீட்டில் குடியிருந்து வரும் தம்பதி மனோகரன் - சவுமியா.. 2 குழந்தைகள் உள்ளனர்.. இந்நிலையில் கடந்த புதன்கிழமை மனோகரன் வீட்டை விட்டு வெளியே கிளம்பி வந்தார்.. அப்போது, அவரது வீட்டு உரிமையாளர் தனக்கு ஒரு பொக்கற் புரியாணி வாங்கி வருமாறு சொல்லி பணமும் தந்துள்ளார். இதை பார்த்த சவுமியாவும், தனக்கும் புரியாணி வேண்டும் என்று கேட்டார்.. ஆனால் மனோகரன் தன்னிடம் பணம் இல்லை, அப்பறமா வாங்கி தருவதாக சொல்லி உள்ளார். எனினும் வீட்டுக்கு வரும்போது, குஸ்கா வாங்கி வந்துள்ளார்.. குஸ்காவை பார்த்ததும் செம ரென்சன் ஆகிவிட்டார் சவுமியா…
-
- 3 replies
- 758 views
-
-
எட்டுக்கால்களுடன் இறந்து பிறந்த ஆட்டுக்குட்டி! வவுனியா – நெடுங்கேணி, நைனாமடுப் பகுதியில் எட்டுகால்களுடன் அதிசய ஆட்டுக்குட்டியொன்று பிறந்துள்ளது. எனினும் குறித்த ஆட்டுக்குட்டி இறந்த நிலையிலேயே பிறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு எட்டுக்கால்களைக் கொண்ட ஒரு தலையுடன் ஆட்டுக்குட்டி நேற்று இறந்து பிறந்துள்ளது. இதனைப் பார்வையிட சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த மக்கள் அங்கு அதிகமாக சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. https://newuthayan.com/எட்டுக்கால்களுடன்-இறந்த/
-
- 0 replies
- 374 views
-
-
15 கிலோகிராம் இரத்தினக் கல்: ஒரே இரவில் மில்லியனரான தன்சானிய சுரங்கத் தொழிலாளர்! தன்சானியாவில் ஒரு சிறிய சுரங்கத் தொழிலாளி, இரண்டு கரடுமுரடான தன்சானைட் கற்களை விற்ற பிறகு ஒரே இரவில் மில்லியனராகிவிட்டார். 15 கிலோகிராம் எடையுள்ள இரத்தினக் கற்களுக்காக, நாட்டின் சுரங்க அமைச்சகத்திலிருந்து சானினியு லைசர் என்பவர் 2.4 மில்லியன் பவுண்டுகள் (3.4 மில்லியன் டொலர்கள்) சம்பாதித்துள்ளார். இது நாட்டில் இதுவரை கண்டிராத மிகப்பெரிய தன்சானைட் கல் என கூறப்படுகின்றது. இதுகுறித்து 30 இற்க்கும் மேற்பட்ட குழந்தைகளின் தந்தை லைசர் கூறுகையில், ‘நாளை ஒரு பெரிய விருந்து இருக்கும்’ என கூறினார். டான்சானைட் வடக்கு தான்சானியாவில் மட்டுமே காணப்படுகிறது மற்றும் இது ஆபரணங்களை தயாரிக்க பயன்பட…
-
- 0 replies
- 735 views
-