Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. அமெரிக்காவின் புளோரிடா காடுகளில் கடந்த 50 ஆண்டுகளில் முதன்முறையாக அரியவகை வானவில் பாம்பு கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பாக வனவிலங்கு ஆராய்ச்சி நிறுவனம் பதிவிட்டுள்ள பேஸ்புக் பதிவில், ஓர்லாண்டோவிற்கு((Orlando)) வடக்கே 47 மைல் தொலைவில் உள்ள ஓக்காலா வனப்பகுதியில் டிரேசி கவுதென் என்பவர் நடைபயணம் மேற்கொண்டபோது வண்ணமயமான 4 அடி நீள வானவில் பாம்பை கண்டதாக குறிப்பிட்டுள்ளது. பெரும்பாலும் நீர்வாழ் தாவரங்களில் மறைந்து வாழும் இந்த வானவில் பாம்புகள், தீங்கு விளைவிக்காதவை என்றும் எப்போதாவது அரிதாக நிலப்பரப்பிற்கு வருவதாகவும் உயிரியலாளர்கள் தெரிவிக்கின்றனர். https://www.polimernews.com/dnews/101442/50-ஆண்டுகளில்-முதன்முறையாககாட்டில்-கண்டறியப்பட்டவானவில்-பாம்பு

    • 0 replies
    • 764 views
  2. நான் இறந்துவிட்டேன்: எனது சொத்துக்கள் யாருக்கு சென்றடைய வேண்டும்- நித்யானந்தா வெளியிட்ட பரபரப்பு காணொளி தனது சொத்துக்கள் யாருக்கு சென்றடைய வேண்டும் என சாமியார் நித்யானந்தா புதிய காணொளியை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். உலகின் ஏதோ ஒரு இடத்தில் தலைமறைவாக இருந்துகொண்டு நித்தம் சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக இருந்துவருகிறார் சாமியார் நித்யானந்தா. அந்த வகையில் இப்போது அவர் வெளியிட்டுள்ள காணொளியில், “20 ஆண்டுகால போராட்டத்துக்குப் பிறகு கைலாசத்தைக் கட்டியமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ள. வாடிகனைப் போல இந்து மதத்துக்கென ஒரு இடத்தை உருவாக்க வேண்டும் என்ற எனது ஆசை நிறைவேறிவிட்டது. ஆனால், அதுகுறித்து வேறு எந்தத் தகவலையும் தரப்போவது இல்லை. …

  3. 99 ஸ்மார்ட் போன்களில் ஒரே நேரத்தில் கூகுள் மேப் செயலியை ஓப்பன் செய்த ஜெர்மானியர் ஒருவர், எல்லா போன்களையும் ஒரு தள்ளு வண்டியில் ஒன்றாக போட்டு பெர்லின் நகர வீதிகளில் அதை இழுத்துச் செல்ல ஒருவரை ஏற்பாடு செய்தார். இந்த கண்கட்டு வித்தையின் காரணமாக ஒரே நேரத்தில் 99 வாகனங்கள் வீதியில் செல்வதாக நினைத்து, நிஜத்தில் காலியாக கிடந்த பெர்லின் வீதிகள் அனைத்திலும் டிராபிக் நெரிசலைக் குறிக்கும் சிவப்பு வரிகள் கூகுள் மேப்பில் தோன்றின. பச்சை நிறத்தில் காணப்பட்ட பெர்லின் சாலைகள் எல்லாம் சிவப்பாக மாறியதால் கூகுள் மேப் உபயோகிப்பாளர்கள் திகைத்தனர். சைமன் வெக்கெர்ட் (Simon Weckert) என்ற இந்த ஜெர்மன் ஓவியர் எதற்காக கூகுள் மேப்பை ஏமாற்றி இந்த விளையாட்டை நடத்தினார் என்பது தெரியவ…

  4. பல காலநிலைகளை கடந்து வந்துள்ள மனித இனம், கடுமையான இயற்கை சூழல்களை சமாளித்து இன்று வரை இந்த புவியில் வாழ்ந்து வருவதற்கான முக்கிய காரணமாக கூறப்படுவது பாக்டீரியாக்கள் தான். ஆம் நம் வயிற்றில் உள்ள பாக்டீரியாக்களே (குடல் பாக்டீரியா), மனித இனம் காலம் காலமாக இந்த பூமியில் நிலைத்து நிற்க காரணமாக உள்ளதாம். மனித இனத்தின் மூதாதையர்கள் புதுப்புது சூழல்களை எதிர்கொண்ட போது, அவர்கள் வசித்த இடங்களுக்கு அருகே கிடைத்த உணவுகளை சாப்பிடவும், புது வகை உணவுகளின் மூலம் சூழலுக்கு ஏற்றவாறு வாழ்வதற்கு ஏற்பவும் சில பாக்டீரியாக்கள் வயிற்றுக்குள் சென்றிருக்கின்றன. குடலில் அதிகம்: இந்த பாக்டீரியாக்கள் தான் நம் மூதாதயர்களை சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு வாழ வைத்திருக்கிறது என்று ஆய்…

    • 0 replies
    • 629 views
  5. சைபிரியா பிரதேசத்தில் உறைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பறவையின் உடல், 46,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஹார்ன்ட் லார்க் ((horned lark)) பறவையினுடையது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சைபிரியாவின் வடகிழக்கிலுள்ள பெலாய கோராவில் அந்த பறவையின் உடல் கண்டெடுக்கப்பட்டது. சுவீடன் ஆய்வாளர்கள் நிகோலஸ் டஸக்ஸ், லவ் டேலன் ஆகியோர் ஆய்வு செய்தபோது, இந்த விவரம் தெரியவந்தது.. இதேபோல் அங்கு கண்டெடுக்கப்பட்ட ஓநாய்கள், மம்மோத் எனப்படும் ராட்சத யானை, கம்பளி காண்டாமிருகங்களின் உடல் பாகங்களையும் ஆய்வாளர்கள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர். https://www.polimernews.com/dnews/101333/46,000-ஆண்டுகளுக்கு-முன்புவாழ்ந்த-ஹார்ன்ட்-லார்க்பறவையின்-உடல்

    • 0 replies
    • 270 views
  6. அமெரிக்க மாகாணமான யூட்டாவின் மாநில செனட் சபை, ஒரே ஆண் பல பெண்களுடனோ, ஒரே பெண் பல ஆண்களுடனோ, ஒரே சமயத்தில் திருமண உறவில் இருப்பதை பெரிய குற்றமில்லை என்று அறிவிக்கும் சட்டத்துக்கு ஒரு மனதாக ஒப்புதல் அளித்துள்ளது. தற்போதைய சட்டத்தின்படி, பலருடன் திருமண உறவு கொண்டுள்ளவர்கள் ஐந்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும். புதிய சட்ட வரைவின்படி, இரண்டு நபர்களுடன் ஒரே சமயத்தில் திருமண உறவில் இருந்தால் அது போக்குவரத்து விதிமீறல் போன்ற சிறு குற்றமாகவே கருதப்படும். எனினும், இந்த உறவில் தொடர்புடைய அனைத்து ஆண்கள் மற்றும் பெண்களின் ஒப்புதல் இருந்தால் மட்டுமே இது குற்றமாக கருதப்படாது. தமது கணவர் அல்லது மனைவிக்கு தெரியாமல், வேறு ஒருவரை திருமணம் செய்துகொள்வது தொடர்…

    • 3 replies
    • 505 views
  7. ஸ்வீடனைச் சேர்ந்த தொழிலதிபர் கிம். இவர், சில மாதங்களுக்கு முன், இந்தியாவிற்குச் சுற்றுப்பயணம் வந்தார். அங்கும் இங்கும் சுற்றித் திரிந்தவர், கோவையில் உள்ள ஈஷா யோக மையம் குறித்துக் கேள்விப்பட்டு, சில நாட்களுக்கு முன் அங்கு சென்றார். அங்கு சில நாட்கள் தங்கியிருந்தவர், பிறகு அங்கிருந்தும் வெளியேறினார். இந்நிலையில், கோவை ரயில்வே ஸ்டேஷன், கலெக்டர் அலுவலகம், காந்திபுரம் மற்றும் உக்கடம் பேருந்து நிலையம் என, கோவையில் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளுக்குச் சென்று, பிச்சையெடுத்து வருகிறார். பிச்சையிடுவோருக்கு இருகரம் கூப்பி, நன்றியும் வணக்கமும் தெரிவித்து வருகிறார்.இவரிடம் கல்லூரி மாணவர்களும், சமூக ஆர்வலர்களும், போலீசாரும், 'உங்களுக்கு ஏன் இந்த நிலை' எனக் கேட்டு வருகின்றனர். அவர்க…

    • 0 replies
    • 483 views
  8. குறித்த எலும்புக்கூடுகள் கிடைக்கப்பெற்ற இடங்களைப் பார்க்கும் போது பண்டைய மனிதர்கள் அடக்கம் செய்தல், சடங்குகள் செய்வதற்கு போதுமான அதிநவீன அறிவுடையவர்களாக இருந்துள்ளார்களா? என்பது பற்றிய விவாதத்திற்கு தம்மை இட்டுச் செல்வதாக அறிவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் ஈராக்கின் குறித்த சனிதர் குகையில் தற்போது கண்டுபிடிக்கப்பட்ட எழும்புக் கூடுகள் போன்று 1950 மற்றும் 1960களில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியின் போது 10 நியண்டர்டால் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆகியோரின் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. குறித்த எலும்புக்கூடு இரண்டு தசாப்தங்களின் பின் கண்டுபிடிக்கப்பட்ட முதல் நியண்டர்டால் எலும்புக்கூடு ஆகும். இந்த எலும்புகள் அவற்றின் அசல் நிலைகளிலிருந்த…

    • 0 replies
    • 352 views
  9. அமெரிக்க அதிபர் டிரம்ப் 24-25 தேதிகளில் வரவிருப்பதையொட்டி,குண்டு துளைக்காத the beast கார் இந்தியா வருகிறது. இக்கார் அதிபருக்காக தனிச்சிறப்புகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. காரின் ஜன்னல்கள் கண்ணாடி மற்றும் பாலி கார்பனோட்டால் செய்யப்பட்ட 5 அடுக்குகள் கொண்டவை. இவை குண்டு துளைக்காமல் தாங்கக்கூடியவை. கார் ஓட்டுனரின் ஜன்னல் மட்டும் 3 அங்குலம் அளவுக்குத் திறக்கக்கூடியது. இந்த காரில் துப்பாக்கித் தோட்டாக்கள், கண்ணீர் புகைக்குண்டுகள், ரத்த பைகள் இணைக்கப்பட்டுள்ளன. தீ எதிர்ப்பு சாதனங்களும் ஸ்மோக் ஸ்க்ரீன் டிஸ்பென்சர்களும் பொருத்தப்பட்டுள்ளன. ஓட்டுனர் பகுதியில் தகவல் தொடர்பு சாதனங்களும் ஜிபிஎஸ் கருவியும் பொருத்தப்பட்டுள்ளன. அமெரிக்க ரகசிய சேவை பிரிவின் பயிற்சி பெற…

    • 0 replies
    • 808 views
  10. எப்படி யோசிக்கிறாங்க… கடவுள் சிவனுக்காக ஒரு சீட் 'ரிசர்வ்' உத்தரப் பிரதேசம் வாரணாசியில் இருந்து 3 ஜோதிர் லிங்கங்களைக் காணும் வசதியுடன் அறிமுகப்படுத்தப்பட்ட காசி மஹாகால் எக்ஸ்பிரஸ் ரயிலில் கடவுள் சிவனுக்காக ஒரு படுக்கையை ரயில்வே துறை ஒதுக்கியுள்ளனர். உத்தரப் பிரதேசம் வாரணாசியில் இருந்து 3 ஜோதிர் லிங்கங்களைக் காணும் வசதியுடன் அறிமுகப்படுத்தப்பட்ட காசி மஹாகால் எக்ஸ்பிரஸ் ரயிலில் கடவுள் சிவனுக்காக ஒரு படுக்கையை ரயில்வே துறை ஒதுக்கியுள்ளனர். பிரதமர் மோடி தனது மக்களவைத் தொகுதியான வாரணாசியில் பல்வேறு வளர்ச்சித்திட்டங்களை தொடங்கிவைத்தார். அதில் வாரணாசியில் இருந்து மத்தியப்பிரதேசம் இந்தூர் வரை செல்லும் மஹாகால் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்துத் தொடங்கி…

    • 5 replies
    • 738 views
  11. பொதுவாக, பறவைகள் மரங்கள் நிறைந்த பகுதிகளில்தான் வாழும். அதுவும் குறிப்பாக, பழம் உண்ணும் வௌவால்கள் பழம் தரும் மரங்கள் அடர்ந்த இடங்களில்தான் வாழும். ஆனால், தமிழகத்திலேயே அதிக வெயில் அடிக்கும் பகுதியில், அதுவும் பழ மரங்களே இல்லாத ஓர் ஊரை ஆயிரக்கணக்கான வௌவால்கள் தங்கள் வாழ்விடமாக வைத்திருக்கிறது என்பது ஆச்சர்யம்தான். கரூர் மாவட்டம், க.பரமத்தி ஒன்றியத்தில் உள்ள கோடந்தூர் கிராமம்தான் வவ்வால்களின் விருப்பத்துக்குரிய பகுதியாக மாறியிருக்கிறது. க.பரமத்தி, கடந்த 3 வருடங்களாக வேலூரைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு அதிகம் வெயில் அடிக்கும் பகுதியாக, தமிழக அளவில் முதலிடம் பிடித்துவருகிறது. இந்தப் பகுதியில் பசுமையான மரங்களைப் பார்ப்பதே அரிது. இந்த ஊரையொட்டியிருக்கிற கோடந்தூர் கிராமத…

  12. கருவிலுள்ள குழந்தைகளுக்கு கருணை காட்டும் கொரோனா- அவசர ஆய்வில் கிடைத்த அற்புத தகவல் கொரோனாவின் கொடூரப் பார்வையில் இருந்து தப்பிக்க முடியாமல் தொடர்ந்து சின்னாபின்னமாகி வரும் சீனாவில், இதுவரை 1500இற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா (COVID-19) வைரஸ் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளுக்குக் குறைந்த அளவு பாதிப்புகளையே ஏற்படுத்தக்கூடும் என கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் மிக எளிதில் பரவக் கூடியதாகவுள்ளது. அந்த வைரஸால் பாதிக்கப்பட்ட ஒருவரால் மேலும் இருவருக்கு அதிவேகமாக கொரோனா பரவுகிறது. ஆனாலும் இதுவரை இந்த கொடிய வைரஸ்க்குக் குறைவான எண்ணிக்கையிலான குழந்தைகளே பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், கொரோனாவின் அறிகுறியான சுவாசப…

  13. அறிவியல் மற்றும் தொழில்நுட்பங்களின் அபரிதமான வளர்ச்சி காரணமாக மனிதர்களின் சராசரி வாழ்நாளும் அதிகரித்து வருகிறது. வரும் 2030-ம் ஆண்டிற்குள் மனித இனத்தின் சராசரி ஆயட்காலம் 90-ஐ நெருங்கிவிடும் என்பது விஞ்ஞானிகளின் கணிப்பாக உள்ளது. தடுப்பூசி மற்றும் நோய்த்தடுப்பு மருந்துகள் உள்ளிட்டவற்றால் இந்த சராசரி ஆயுட்காலம் சாத்தியமாகி வருவதாக மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.உயிரினங்கள் சராசரியாக எவ்வளவு ஆண்டுகள் வாழ்கின்றன என்பது டிஎன்ஏ எனப்படும் மரபணுவில் எழுதப்பட்டிருக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். பல்வேறு உயிரினங்களின் மரபணுக்களில் ஏற்படும் மாற்றங்களை ஆய்வு செய்து இதனை கண்டறிந்துள்ளனர். மரபணு ஆய்வின்படி பார்த்தால் மனிதர்களின் இயல்பான ஆயுட்காலம் 38 ஆண்டுகள் மட்டுமே எ…

    • 0 replies
    • 374 views
  14. ரியாஸ் சொஹைல் பிபிசி உருது பாகிஸ்தானில் திருமணமாக இருந்த புது மாப்பிள்ளை ஒருவர், மண விழாவில் இருந்து அடித்துத் துரத்தப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதற்கு காரணம் அவருக்கு ஏற்கனவே ஒரு முறை அல்ல இரு முறை திருமணம் நடந்திருந்தது தெரியவந்ததுதான். அடி தாங்க முடியாமல் வாகனம் ஒன்றுக்கு கீழே சென்று ஒளிந்து கொண்ட புது மாப்பிள்ளை, பின்னர் அடையாளம் தெரியாத நபர்களால் மீட்கப்பட்டார். பாகிஸ்தானில் ஓர் ஆண் நான்கு பெண்கள் வரை திருமணம் செய்துகொள்ள சட்ட ரீதியாக அனுமதியுண்டு. ஆனால், ஏற்கனவே திருமணம் செய்துகொண்டு தன்னுடன் வாழும் பெண்களின் அனுமதியைப் பெற்ற பின்னரே அவர்கள் அடுத்த திருமணம் செய்துகொள்ள முடியும். ஆனால், ஆசிஃப் ரஃபீக் சித்திக்கி எனும்…

  15. ஜாக்பாட் திரைப்படம் போல அட்சயபாத்திரம் வைத்திருப்பதாக ஏமாற்றி தொழில் அதிபரிடம் 2 கோடி ரூபாயை பறித்த ஆந்திர, கர்நாடக மோசடி கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அள்ள அள்ள வற்றாமல் தங்க புதையல் தரும் அட்சய பாத்திரம் என ஓட்டை அட்டை பெட்டியை கொடுத்து கம்பி நீட்டிய 8 பேர் கம்பி என்னும் சம்பவத்தின் பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி ... ஜோதிகா - ரேவதி நடிப்பில் சில மாதங்களுக்கு முன்பு வெளியான ஜாக்பாட் என்ற படத்தில் அட்சயபாத்திரம் இருந்தால் தங்கம் அள்ள அள்ள வரும் என்று கதை சொல்லி இருப்பார்கள்..! அதே கதையை நிஜத்தில் சொல்லி 2 கோடியே 10 லட்சம் ரூபாயை அபேஸ் செய்த சம்பவம் வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் அரங்கேறி உள்ளது. திருப்பத்தூரை சேர்ந்த தொழில் அதிபர் நவீன்…

  16. பெண் நோயாளிகள் மீது பாலியல் துன்புறுத்தல் : மருத்துவருக்கு ஆயுள் தண்டனை பெண் நோயாளிகள் மீது 90 பாலியல் தாக்குதல்களை மேற்கொண்ட மருத்துவர் மனீஷ் ஷாவுக்கு மூன்று ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. குடும்பக் கட்டுப்பாடு மருத்துவ நிபுணராகப் பணியாற்றிய மனீஷ் ஷா (Manish Shah), லண்டனில் பணிபுரிந்தபோது 23 பெண்கள் மற்றும் 15 வயதுச் சிறுமிகள் மீது தனது தனிப்பட்ட இச்சைக்காக ஆக்கிரமிப்பு உடற்சோதனைகளை மேற்கொண்டார் என்று கூறப்பட்டுள்ளது. ரொம்ஃபேர்டைச் சேர்ந்த மனீஷ் ஷா, மே 2009 மற்றும் ஜூன் 2013 க்கு இடையில் காலத்தில் பெண்கள் மீது தேவையற்ற உடற்சோதனைகளை மேற்கொண்டார். நோயாளிகளின் ஆரோக்கியம் குறித்துப் பயமுறுத்துவதற்கு ஏஞ்சலினா ஜோலி (Angelina Jolie) மற்றும் ஜேட் கூடி (Jade G…

  17. உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் உயிர் கொல்லியான கொரோனா வைரஸ், சீனாவில் இளம்பெண் ஒருவரை காப்பாற்றியுள்ளது. பெயரை கேட்டாலே நடுங்க வைக்கும் அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள கொரோனா, இளம்பெண்ணை எப்படி காப்பாற்றியுள்ளது என்பதை பார்ப்போம். கொரோனாவின் மையமான வூகான் நகரில் இருந்து 3 மணி நேரம் பயண தூரத்தில் உள்ள நகரம் ஜிங்ஷான். இங்கு கடந்த வாரம் 25 வயது மதிக்கத்தக்க மர்ம மனிதன் ஒருவன் கொள்ளையடிக்கும் நோக்கத்தோடு, வீடு ஒன்றில் நுழைந்துள்ளான். அந்த வீட்டின் படுக்கையறையில் இளம்பெண் ஒருவர் தனியாக இருந்துள்ளார். இதனை கண்ட கொள்ளையன், அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்யும் நோக்கத்தோடு நெருங்கியுள்ளான். திடீரென தனது படுக்கை அறையில் மர்ம மனிதன் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடை…

  18. இந்த உலகத்தில் அழியாத செல்வம் ஒன்று உண்டென்றால் அது கல்வி செல்வமே. படிக்க வயது ஒரு தடை இல்லை என்பதை பலர் ஏற்கனவே நிரூபித்துள்ளனர். அந்த வரிசையில் கேரளாவை சேர்ந்த 105 வயதான மூதாட்டி ஒருவர் கல்வியில் செய்துள்ள சாதனை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. சிறப்பு: கேரள மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்த பகீரதி அம்மா என்ற மூதாட்டி நான்காம் வகுப்புக்கு இணையான தேர்வில் வெற்றி பெற்று அசத்தியுள்ளார். முதியவர்கள் தேர்வுகள் எழுதுவது அவ்வப்போது நடக்கும் விஷயம் என்றாலும், 105 வயதான பகீரதி அம்மாவின் கல்வி பயிலும் முயற்சியே இதில் சிறப்பான விஷயம். தன் 105 வயதில் பகீரதி அம்மா, நான்காம் வகுப்புக்கு இணையான கல்வியறிவு தேர்வை எழுதி, அதில் தேர்ச்சி பெற்று பெரும் சாதனை படைத்துள்ளார். …

  19. படத்தின் காப்புரிமை Getty Images கலகலப்பு திரைப்படத்தில் சந்தானம் உள்ளாட்சித் தேர்தலில் வெல்வதற்காகக் குழாய் மூலமாக சாராயம் வழங்குவது போல ஒரு காட்சி வரும். இப்போது அந்தக் காட்சி கேரளாவில் நிஜமாகி உள்ளது. தேர்தல் வெற்றிக்காகவெல்லாம் மதுபானம் வழங்கப்படவில்லை, அரசு அதிகாரிகளின் அஜாக்கிரதையால் வீட்டுக் குழாய்களில் மதுபானம் வந்திருக்கிறது. என்ன நடந்தது? கடத்தப்பட்ட அல்லது பதுக்கப்பட்ட மதுபான பாட்டில்களை கலால்துறை கைபற்றி வைத்திருக்கும் அல்லவா? அது போல திருச்சூர் மாவட்டம் சாலக்குடி அருகே உள்ள மதுபான விடுதியில் கைப்பற்றப்பட்ட மதுபானங்களை அப்புறப்படுத்த முடிவு செய்திருக்கிறார்கள். ஏறத்தாழ 6000 லிட்டர் பியர், பிராந்தி மற்றும் ரம் ஆகியவற்றை அப்புற…

    • 0 replies
    • 559 views
  20. டேவிற் கமரனின் பாதுகாவலர் விமானக் கழிப்பறையில் துப்பாக்கியைத் தவறவிட்டார் பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டேவிற் கமரனின் பாதுகாவலர் ஒருவர் தனது துப்பாக்கியை ஜெட் விமானத்தின் கழிப்பறையில் தவறவிட்டதாகக் கூறப்படுகிறது. நியூயோர்க்கின் ஜே.எஃப்.கே விமான நிலையத்திலிருந்து லண்டன் நோக்கிப் புறப்பட்ட பிரிட்ரிஷ் எயார்வேய்ஸ் விமானத்திலேயே இந்தச் சம்பவம் நடந்துள்ளது. விமானத்தின் கழிப்பறைக்குச் சென்ற பயணி ஒருவர் அங்கிருந்த துப்பாக்கியைக் கண்டெடுத்து விமான ஊழியர்களிடம் கொடுத்ததாக டெய்லி மெயில் செய்தி வெளியிட்டுள்ளது. முன்னாள் பிரதமர் டேவிற் கமரனுக்கு மெற்றோ பொலிற்ரன் பொலிஸார் தொடர்ந்தும் பாதுகாப்பு வழங்கி வருகின்றனர். துப்பாக்கியைத் தவறவிட்ட அதிகாரி உடனடியாகக் …

  21. தென்னாப்பிரிக்காவில் தாயில்லாத சிங்கக்குட்டியை பபூன் இன ஆண் குரங்கு ஒன்று தனது குழந்தையாக கருதி பராமரிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. குருகர் தேசிய வனவிலங்கு பூங்காவில் தாயில்லாமல் சுற்றித் திரிந்த சிங்கக்குட்டியை பபூன் குரங்கு ஒன்று தூக்கிச் சென்று பராமரித்து வருகிறது. மரத்தில் ஏறி உச்சிக்கு செல்லும்போதும், மரம்விட்டு மரம் தாவும்போதும் சிங்கக்குட்டியை தன்னுடனேயே தூக்கிச் சென்று பத்திரமாக வைத்து கொள்கிறது. ஹர்ட் ஸ்கல்ட்ஸ் (Kurt Schultz) என்பவரால் கடந்த 1ம் தேதி இக்காட்சி வீடியோவாக பதிவு செய்யப்பட்டது. அக்காட்சி சமூகவலைதளங்களில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது. https://www.polimernews.com/dnews/99303/தாயில்லாத-சிங்கக்குட்டியைதனது-குழந்தையாக-பாவித…

    • 0 replies
    • 599 views
  22. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் செயற்கை தலைமுடிகளை திருடியவருக்கு சிறைத்தண்டனை வன்கூவரில் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் குழந்தைகளின் செயற்கை தலைமுடிகளை திருடியவருக்கு, மூன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஈவா அன்ட் கோ. விக்ஸ் நிறுவனத்தில், கடந்த 2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், தலா 2,500 டொலர்கள் மதிப்புள்ள 150 செயற்கை தலைமுடிகளை 53 வயதான மார்ட்டின் வைகெல்ட் திருடியதாக குற்றஞ்சாட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் 2019ஆம் ஆண்டு தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். இந்த நிலையில் குறித்த நபருக்கு வன்கூவரில் உள்ள டவுன் ரவுன் சமூக நீதிமன்றம் மூன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. முடி உதிர்தல், புற்றுநோய் அல்லது அலோபீசியா போன்ற நிலைமைக…

  23. நபர் ஒருவர் நடு வீதியில் மகிழுந்தை நிறுத்திவிட்டு தூங்கியுள்ளார். அவருக்கு €4,500 தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளது. Sables-d'Olonne, (Vendée) நகரில் இந்த சுவாரஷ்யமான சம்பவம் இடம்பெற்றுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி அளவில் இங்குள்ள வீதி ஒன்றுக்கு காவல்துறையினர் அழைக்கப்பட்டனர். நபர் ஒருவர் நடு வீதியில் மகிழுந்தை நிறுத்திவிட்டு தூங்கிக்கொண்டிருந்துள்ளார். அவர் தவிர மேல ஒருவரும் மகிழுந்துக்குள் உறங்கிக்கொண்டிருந்துள்ளார். இருவரையும் தட்டி எழுப்பிய காவல்துறையினர் நடந்த சம்பவங்களை கேட்டறிந்துள்ளனர். அதன்பின்னர் காவல்துறையினர் ஊடகங்களுக்கு தெரிவிக்கையில், குறித்த இருவரில் சாரதி மது அருந்திவிட்டு மகிழுந்தை ஓட்டியதாகவும், சமிக்ஞை விளக்கிற்…

    • 0 replies
    • 332 views
  24. கொஞ்சும் புறாவே 25,000 குற்ற்றப்பணம் செலுத்த வேண்டும் இல்லை என்றால் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும்”. இந்த முடிவு நீதிமன்றத்தால்அறிவிக்கப் பட்டதில் இருந்து Inge Euler (74) நிலை குலைந்து போயிருக்கிறார். இப்படி ஒரு தண்டனை கிடைப்பதற்கு Inge Euler அப்படி பாரிய ஒரு குற்றமும் செய்துவிடவில்லை. கருணையை வெளிப்படுத்தப் போய் அவர் சிக்கலில் மாட்டிக் கொண்டார். அவர் செய்தது புறாக்களுக்கு தீனி போட்டது மட்டுந்தான். அதனால் வந்த வினையே இது. 1989 இல் Ingeயின் பக்கத்து வீட்டில் இருந்தவர் தகவல்களைப் பரிமாறும் புறாக்களை (அஞ்சல் புறாக்கள்) வளர்த்துக் கொண்டிருந்தார். அவற்றின் மேல் பரிவும் விருப்பமும் கொண்டதால் Inge அவற்றை அவரிடம் இருந்து பெற்று தனது பல்கணியில் கூடு அ…

  25. வாவ்.. 10 நாளில் 1000 படுக்கைகள்.. ஆஸ்பத்திரி.. கட்டி முடித்து சாதித்தது சீனா! சீனாவின் வுகான் நகரில் 10 நாளில் 1000 படுக்கைகள் கொண்ட பிரம்மாண்ட மருத்துவமனையை அந்நாட்டு அரசு கட்டியுள்ளது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்வர்களுக்காக இந்த மருத்துவமனையை கட்டி முடித்துள்ளது சீனா. இது தொடர்பான வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் இதுவரை 300 பேர் உயிரிழந்துள்ளனர். 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார். சீனாவில் உள்ள வுகான் நகரம் மொத்தமும் மோசமான பாதிப்பில் இருந்து மீண்டு வருவதற்காக போராடி வருகிறது. இந்த கொரோனா வைரஸ் பாதிப்பு இப்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது. சீனாவைத்தாண்டி பிலிப்பைன்ஸில் முதல் உயிரிழப்பு ஏற்ப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.