துளித் துளியாய்
தாயக மக்களுக்கு, அவர்களின் மறுவாழ்வுக்கு உதவுதல்/உதவி கோரல்கள்
துளித் துளியாய் பகுதியில் தாயக மக்களுக்கு, அவர்களின் மறுவாழ்வுக்கு உதவுதல்/உதவி கோரல்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தாயக மக்களின் மறுவாழ்வுக்கு உதவும் தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல் வேண்டும்.
தொண்டு, பரோபகாரம் என்பவை பற்றிய பொதுவான செய்திகள், கட்டுரைகள் தவிர்க்கப்படல் வேண்டும். அவை சமூகச் சாளரம் பகுதியில் இணைக்கப்படலாம்.
350 topics in this forum
-
ஆடி,ஆவணி,புரட்டாதி கணக்கறிக்கை PDF வடிவில். இந்த இணைப்பில் அழுத்தி கணக்கு விபரங்களை பார்வையிடலாம். நேசக்கரம் தன்னார்வத் தொண்டு அமைப்பின் உதவித் திட்டங்களினால் மூன்றாம் காலாண்டில் பயனடைந்தோரது விபரங்கள் , மற்றும் உதவியோரது விபரங்கள். 1)கல்விகற்கும் பாடசாலை மாணவர்கள் , பயனடைந்தோர் 765 மாணவர்கள். பயனடைந்த பாடசாலைகள் :- கனகபுரம் பாடசாலை (13மாணவர்கள்) , ஊற்றுப்புலம் அ.த.க (220மாணவர்கள்) , கிளிநொச்சி கனிஸ்ரா மகாவித்தியாலம் (6மாணவர்கள்). 239மாணவர்கள் பாடசாலைகள் ஊடாகவும் 136மாணவர்கள் வெளியிலிருந்தும் உதவிகள் பெறுகின்றனர். வழங்கப்பட்ட உதவிகள் கல்வி உபகரணங்கள் உடைகள் சத்துணவு மற்றும் வாழ்வாதார கற்றலுக்கான பண உதவிகள் என்பன வழங்கப்பட்டுள்ளன. வவுனியாவில் ஏ.எ…
-
- 6 replies
- 1.6k views
-
-
நேசக்கரம் ஆரம்பம் தொடர் பயணம். Sts தொலைக்காட்சியில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி.
-
- 0 replies
- 822 views
-
-
இப்பணமானது யாழ் இணைய உறுப்பினர்கள் வாசகர்கள் மற்றும் யாழ் இணையத்தின் விளம்பரப் பணம் என அனைத்தும் ஒன்றிணைக்கப்பட்டு வாசம் உதவும் உறவுகள் மூலம் ஏறாவூர் பற்று பிரதேச செயலக பிரிவில் கணவனை இழந்து குடும்ப சுமைகளை தாங்கிய தாய்மார்களுக்கான வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் முகமாக 20 குடும்பங்களுக்கு கோழிக் கூடும் நாட்டுக் கோழி குஞ்சுகளும் வழங்கப்பட்டு அதனை பராமரிக்கின்ற பயிற்சியும் மிருக வைத்தியர் ஊடாக ஆலோசனைகளும் வழங்கப்பட்டுள்ளது
-
- 14 replies
- 4.7k views
-
-
கண்டி வீதி – உசன் சந்தியில் கொளுத்தும் வெயிலிலும், கொட்டும் மழையிலும் பயணிகள் பேருந்துக்காகக் காத்திருந்த நிலைக்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டுள்ளது. நீண்ட காலமாகப் பயணிகள் நிழல் குடை இல்லாதிருந்த குறையை நிவர்த்தி செய்ய உசன் சிறி முருகன் விளையாட்டுக் கழகம் முன்வந்தது. அவர்களது செயற்திட்டத்துக்கு உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் – கனடா ஊடாக அனுசரணை வழங்க முன்நாள் இ.போ .ச நடத்துனர், அமரர் வெற்றிவேலு அவர்களின் குடும்பத்தினர் உறுதி அளித்தனர்.உசன் சிறி முருகன் விளையாட்டுக் கழகஉறுப்பினர்களின் முயற்சியில் கட்டப்பட்ட பேருந்து தரிப்பிட நிழல் குடை இன்றைய தினம் ஏப்ரல் 12 ம் திகதி , மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது , கழகத்தின் தலைவர் ,திரு.ரூபன் தலைமையில் நடைபெற்ற திறப்புவ…
-
- 0 replies
- 612 views
-
-
யாழ்.இந்துக் கல்லூரியின் 2005 உயர்தர மாணவர்களால் கடந்த 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த 7 பாடசாலைகளுக்கு 45 சைக்கிள்கள் வழங்கப்பட்டன. கடந்த 3 வருடங்களாக யாழ் இந்துக் கல்லூரியின் 2005 உயர்தர மாணவர்கள் பல கல்விக்கான செய்ற்றிட்டங்களை குறிப்பாக வன்னிப் பகுதியில் யுத்ததினால் கடுமையாக பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மற்றும் பாடசாலைகளுக்கு மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் 2016ஆம் ஆண்டுக்கான கல்விக்கான செயற்றிட்டத்தின் முதற்கட்டமாக கடந்த பெப்ரவரி 9ஆம் திகதி தெரிவு செய்யப்பட்ட உயர்தர மற்றும் சாதாரணதர மாணவர்களுக்கான கடந்த கால வினாத்தாள்கள் மொத்தமாக பத்தொன்பது பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டன. அதன் அடுத்த கட்டமாக மேமாதம் 13ஆம் திகதி அம்பலவன்பொக்கணை அ.த.க…
-
- 0 replies
- 730 views
-
-
தேன்சிட்டு நாட்டார்பாடல் இசைவிருது 2013. தமிழ்க் கலைகளை வளர்க்கும் நோக்கிலும் கலைத்துறையில் ஆர்வம் மிக்க இளையோரை ஊக்குவித்து முன்னேற்றும் வகையிலும் நேசக்கரம் உப அமைப்பான நேசம் அமைப்பின் ஏற்பாட்டில் முதல் முயற்சியாக 04.11.2013 – 05.11.2013 வரையான இரண்டு நாட்களும் நாட்டார் பாடல் போட்டியினை நடாத்தியுள்ளோம். மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட போரால் பாதிக்கப்பட்ட இன்னும் பழைய வாழ்வுக்குத் திரும்பாத வறுமையும் வசதிகளாலும் பின்தங்கிய நிலமையில் இருக்கும் கதிரவெளியில் முதல் கட்டமாக 6பாடசாலைகளைச் சேர்ந்த தேர்வு செய்யப்பட்ட34 மாணவர்கள் தேன்சிட்டு நாட்டார்பாடல் இசைவிருது 2013 போட்டியில் பங்கெடுத்திருந்தனர். எமது உப அமைப்பான நேசம் அமைப்பின் அமைப்பாளர்; நே…
-
- 0 replies
- 678 views
-
-
Miss. M.DEVAMANOJINI is a Bio Science student of Highlands College, Hatton expecting university entrance in near future, she is suffering from LUMBER DISCECTOMY causing severe compression. AND expecting of Rs.450,000/= for her surgery on or before 27th of this month. The only source of income is from the earning of poor mother running a school canteen. The PPA of highlands college has decided to collect the money for her surgery and medication, the old students, well wishers and donors are requested to help her for immediate surgery. Please forward this message to your friends. Bank Account PPA-HIGHLANDS COLLEGE, SEYLAN BANK PLC, HATTON 039-010222764-001 Cont…
-
- 0 replies
- 1.1k views
-
-
France புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் + நேசக்கரம் = 35 குடும்பங்களுக்கான குடிநீர் வசதி அன்பார்ந்த உறவுகளே 35 குடும்பங்களுக்கான குடிநீர் வசதி அவசரமாகத்தேவை என யாழ்களத்தில் நேசக்கரத்தின் பொறுப்பாளர் சாந்திக்கா அவர்களால் கோரப்பட்ட கோரிக்கையை France புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் செயலாளர் Saspanithi SUPPIAH மற்றும் பொருளாளர் Logeswaran KANDASAMY ஆகியோரது கவனத்துக்கு கொண்டுவந்திருந்தேன். செயலாளர் சாந்தியக்காவினுடன் பேச்சுக்களை நடாத்தி அதற்கான பத்திரங்களை தயார் செய்தபடியிருக்க பொருளாளர் தனது வீட்டில் இதைப்பார்த்தபடி இருந்தபோது அதைக்கவனித்த அவரது மகன் Logeswaran சந்துரு (பட்டதாரி - கணக்காளர்) மக்களுக்கு தண்ணீர் தானே நானே செய்கின்றேன் எ…
-
- 50 replies
- 6k views
-
-
'கனடியத் தமிழர் தேசிய அவை- NCCT' கனடா வாழ் தமிழ் மக்களால் ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்டு, சட்ட ரீதியாக பதிவு செய்யப்பட்டு கனடிய மண்ணில் பல்வேறு பணிகளை கனடா வாழ் தமிழ் மக்களுக்கும் தமிழீழ தாயக மக்களுக்கும் ஆற்றி வருகின்றது. குறிப்பாக தமிழர்களின் மறுக்கப்பட்ட நீதியை வென்றெடுக்க சனநாயக ரீதியாக பெரும் பணியை செய்வதோடு 2009 முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை யுத்தத்தின் கோர வடுவால் பாரிய அளவில் பாதிக்கப்பட்ட தமிழீழ தாயக மக்களை அவல வாழ்வில் இருந்து மீட்டு மீண்டும் மறுவாழ்வு கொடுத்து வாழவைக்கும் பணியையும் 'மண்வாசனை' திட்டத்தினூடாக இந்த மண்ணில் இருந்து ஆற்றி வருகின்றது. முற்று முழுதாக தாயக மக்களின் துயர் துடைப்பை மையப்படுத்திய பணிகளை மட்டுமே கொண்டதாக கனடிய தமிழர் தே…
-
- 1 reply
- 459 views
-
-
-
தனியார் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் நன்கொடையாளர்கள் கவனத்துக்கு. இயற்றை அனர்த்த வேளைகளில் பாதிக்கப்பட்ட இடங்களில் வாழும் மக்களுக்கான நிவாரணங்கள் வழங்கும் நிறுவனங்கள் , நன்கொடையாளர்களால் வழங்கப்படும் உலருணவு நிவாரணப் பொருட்களை எமது நிறுவனம் மூலம் குறைந்த விலையில் பெற்றுக் கொள்ள முடியும். இதன் மூலம் கிடைக்கும் இலாபமானது நேசக்கரம் சமூக வேலைத்திடங்களுக்கு வழங்கப்படுவதோடு பாதிக்கப்பட்டவர்களுக்கான வேலை வாய்ப்பும் ஏற்படுத்திக் கொடுக்கப்படும். உதாரணமாக :- அரிசி 10கிலோ(கல் மண் நீக்கப்பட்ட சுத்தமான அரிசி) – 670ரூபா (கடைவிலை) எம்மால் போக்குவரத்துச் செலவோடு 620ரூபாவிற்கு வழங்க முடியும். மீன்ரின் – 220ரூபா (கடைவிலை) எம்மால் போக்குவரத்துச் செலவோடு 180ரூபாவிற்கு வழங்…
-
- 0 replies
- 712 views
-
-
அவனுக்கு இடுப்பின் கீழ் உணர்வற்று போனது 2009 இறுதி யுத்தத்தின் போது. ஒரு போராளியாய் தனது கடைசி நாட்களை களத்தில் செலவளித்த போதில் காலம் முழுவதும் மற்றவர்களுக்கு பாரமாகிவிடுவேனென்று கனவிலும் நினைத்திருக்கவில்லை. இறுதியாய் இராணுவத்திடம் சரணடைந்தவர்களுடன் அவனும் சரணடைந்தான். தடுப்பு மருத்துவமனையென்று 2011வரையும் அங்குமிங்கும் அலைவு. 2012இல் அவர்களை பராமரித்த மருத்துவமனையும் எல்லோரையும் வீடுகளுக்கு அனுப்பியது. அப்போதுதான் தனது அடுத்த கட்டத்தின் பயங்கரத்தை உணரத் தொடங்கினான். ஊனமில்லாது சுகதேகியாக இருந்திருப்பின் அக்காக்களுக்கும் அவன் இராசகுமாரனாக இருந்திருப்பான். ஆனால் நாட்டுக்காக போனவன் ஊனமாகி வீடு திரும்பிய போது யாரும் அவனை விரும்பியேற்கவில்லை. அன்பை எதிர்பார்த்து போன அக்…
-
- 4 replies
- 1.4k views
-
-
France புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் + பாராளுமன்ற உறுப்பினர் யோகேசுவரன் = அவசர வெள்ள நிவாரண உதவி (மட்டக்கிளப்பு) 24ந்திகதி மட்டக்கிளப்பிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் திரு. S. YEHESWARAN அவர்கள் புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் பிரான்சின் தலைவருக்கு நேரடியாக தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு மட்டக்கிளப்பின் தற்போதைய வெள்ள நிலையை எடுத்துக்கூறி அவசர நிதியுதவியைக்கேட்டார். புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் பிரான்சினால் வேறு வேலைத்திட்டங்கள் செயற்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கும் போதும் .... உடனடியாக நிர்வாக உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்து வெள்ளத்தால் ஏற்பட்ட அவசரநிலை என்பதாலும் கோரிக்கையை வைத்தவர் அந்த மக்களால் தெரிவு செய்ப்பட்டவர் தாயக மக்களுடன் அல்லும் பகலும் …
-
- 3 replies
- 907 views
-
-
-
- 19 replies
- 2k views
- 1 follower
-
-
Friday, December 26, 20140 comments (பத்ரா) வெள்ள நிவாரண நடவடிக்கைகளை கிழக்கு மாகாணசiபையும் மேற் கொள்ளவேண்டும் என வழியுருத்தி கிழக்கு மாகாணசபையின் எதிர்க் கட்சித் தலைவர் சி.தண்டாயுதபாணி அவர்கள் முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் மற்றும் பிரதம செயலாளர் உற்பட அணைத்து மாகாண சபை அமைச்சர்களுக்கும் கடிதம் ஒன்றை வழங்கியுள்ளார் அக்கடிதம் பின்வருமாறு அமைகிறது. கடந்த சில நாட்களாக இடைவிடாது பெய்து வரும் மழை காரணமாக கிழக்கு மாகாணத்தின் சகல மாவட்டங்களிலும் பல கிராமங்கள் வெள்ளத்தில் ஆழ்ந்துள்ளன. வீடுகள் வெள்ளத்தில் ஆழ்ந்துள்ளதினால் மக்கள் பாடசாலைகள், கோவில்கள் போன்ற பொது இடங்களில் தஞ்சமடைந்துள்ளனர். திருக்கோணமலை மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளிலு…
-
- 0 replies
- 462 views
-
-
ஒருலட்சரூபா முதலீட்டிற்கு மாதம் 5000முதல் 7500ரூபா இலாபத்தைத் தருவோம். எமது கைவினைப்படைப்பாளிகள்(HMC) நிறுவனமானது பெரிய வியாபாரா நிறுவனங்களின் விநியோக முகவராக இணைந்து தொழில் புரியக்கூடிய வாய்ப்பினைப் பெற்றுள்ளது. இத்தொழிலில் முதலீடு செய்ய விரும்புவோரையும் வரவேற்கிறோம். உங்கள் முதலீடு மூலம் வேலைவாய்ப்பை வழங்குவதோடு உங்கள் முதலீட்டுக்கான இலாபமும் வழங்கப்படும். விநியோக முகவர் மாவட்டம் மட்டக்களப்பு வங்கி உத்தரவாதம் 1000000.00 (பத்துலட்சரூபா) இப்பணம் குறித்த நிறுவனத்திற்கு வழங்கத் தேவையில்லை. எங்களது வங்கியில் வைப்பிலிட்டுக் காட்ட வேண்டும். சுழற்சி முறையில் வியாபார நிறுவனங்களுக்கு வழங்கும் பொருட்களுக்கு ஏற்ப தேவைகளுக்கு நாங்களே பணத்தைக் கையாள்வோம். மொத்…
-
- 9 replies
- 2.4k views
-
-
முல்லைத்தீவு மாவட்டம் போரால் பாதிக்கப்பட்ட 100 விதவைகள் ஊனமுற்றவர்களுக்கான வாழ்வாதாரம். முல்லைத்தீவு மாவட்டத்தில் எம்மால் தெரிவு செய்யப்பட்ட 100குடும்பங்களுக்கான பழப்பயிர்ச்செய்கைக்கான பழக்கன்றுகளை உற்பத்தி செய்து வழங்கவுள்ளோம். எம்மால் வழங்கப்படும் பழக்கன்றுகளின் பழங்களையும் கொள்வனவு செய்து விற்பனை செய்யக்கூடிய சந்தை வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுக்கக் கூடிய ஒழுங்கினையும் செய்துள்ளோம். இதன் முதற்கட்டமாக 3மாதங்களில் பயன்தரும் பப்பாசிகளை உற்பத்தி செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளோம். 3மாதங்களில் பயன்தரத் தொடங்கும் பப்பாசிகள் ஒன்றரை வருடம் தொடக்கம் 2வருடங்கள் வரையில் தொடர்ந்து பயன்தரக்கூடியவை. பப்பாசி விதைகளை பதியமிட்டு 3வாரங்களில் கன்றுகளாக உருவாக்கிக் கொடுக்…
-
- 2 replies
- 677 views
-
-
நேசக்கரம் – எழுவான் அமைப்பின் தொழில் ஊக்குவிப்புக் கடன் மீளச்செலுத்தல். இவ்வருடம் எம்மால் மன்னார் மாவட்டத்திற்காக உருவாக்கப்பட்ட எமது உப அமைப்பான எழுவான் அமைப்பின் மூலம் 13 குடும்பங்களுக்கான வாழ்வாதார ஊக்குவிப்புக்கடன் வழங்கியிருந்தோம். எமது புலம்பெயர்வாழ் உறவுகளின் ஆதரவில் கிடைக்கப்பெற்ற 275000.00ரூபா (இரண்டு லட்சத்து எழுபத்தையாயிரம் ரூபா) உதவி மூலம் நடைமுறைப்படுத்தப்பட்ட இத்திட்டத்தில் பயனடைந்த பயனாளிகள் மாதாந்த அடிப்படையில் இதுவரையில் எமக்கு 60200.00ரூபா மீளச்செலுத்தியுள்ளனர். மீளச்செலுத்தப்பட்ட பணத்திலிருந்து யூலியஸ் என்பவருக்கு 25ஆயிரம் ரூபா மீன் வியாபாரத்திற்காக வழங்கியுள்ளோம். புதிதாக எம்மிடமிருந்து கடனைப் பெற்றுக் கொண்ட யூலியஸ் அவர்கள் மாதாந்தம் 2500 வீதம் மீள…
-
- 0 replies
- 625 views
-
-
சில நிறுவனத்தினர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தாயகத்தில் உதவி செய்து வருகின்றார்கள்....உங்களுக்கு தெரிந்த அல்லது அறிந்த தொண்டு ஸ்தாபனங்களின் உதவிகளை இங்கு பதிவிடுங்கள்.....
-
- 10 replies
- 1.3k views
-
-
நேசக்கரம் கிராம அபிவிருத்தி பட்டப்படிப்பு உதவி. படித்த மாணவர்களை அவர்களின் கிராமங்களை மேம்படுத்தவும் உள்ளுர் வளங்களைப் பயன்படுத்தி தொழில்சார் துறைகளில் முன்னேற்றவும் Brightfuture Nesakkaram அமைப்பின் ஒன்றரை வருட கற்கைநெறியினை ஆரம்பிக்கவுள்ளோம்.போரால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் வாழும் 19வயது தொடக்கம் 24வயதுக்கு உட்பட்டவர்கள் கிராம அபிவிருத்தி பட்டப்பட்டிப்பில் பங்கேற்க முடியும். கற்றலுக்குத் தேவையான தகைமை :- கல்விப்பொதுத்தராதரம் குறைந்தது 3பாடங்கள் சித்தியடைந்திருக்க வேண்டும். பாடத்திட்டம் :- 1) தகவல்தொழில்நுட்பம் 2) பொருளாதாரஅபிவிருத்தி 3) அனர்த்தமுகாமைத்துவம் 4) உளவியல் 5) சிறுவர்மேம்பாடு 6) கிராமிய வள முகாமைத்து…
-
- 4 replies
- 718 views
-
-
சுவிஸ்வாழ் இலங்கையரின் மனிதாபிமான செயல்! சுவிஸில் இருக்கும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வாமதேவன் தியாகேந்திரன் என்பவர் தனது சொந்த நிதியில் வடக்கில் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காணியுடன் 1000 வீட்டுத் திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார். வடக்கில் எவருமே முன்னெடுக்காத காரியத்தை இவர் கையில் எடுத்துள்ளார். இதன் முதற்கட்டமாக 60 பயனாளிகளுக்கான வீட்டுத்திட்டத்திற்கான காணிகளை யாழ்.கோப்பாயில் வாங்கியுள்ளார். பயனாளிகளைத் தெரிவு செய்து விரைவில் 60 பேருக்கான வீட்டுத்திட்டத்தை வழங்கவுள்ளார். இதனைத் தொடர்ந்து ஏனைய இடங்களில் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீட்டுத்திட்டத்தை வழங்குவதற்கான காணிகளை தெரிவுசெய்து வாங்கும் செயற்பாட்டில் இறங்கியு…
-
- 10 replies
- 1.4k views
-
-
ஒரு காலையும், கையையும் இழந்த ஒருவருக்கும், அங்கவீனமான அல்லது கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்ட நிலையிலும், தம்மையும் உறவினரையும் தமது உழைப்பில் பார்த்துக் கொள்ள வேண்டிய நிலையில் உள்ள ஐந்து பெண்களுக்கும், உதவி தேவையாக இருக்கிறது. இவர்களுக்கு சிறு தொழில் முயற்சிகள் தேவையாக இருக்கின்றன. சிறிய தென்னந்தோட்டத்தில் வரும் வருமானமும், கோழி வளர்ப்பும் இவர்களுக்கு சாத்தியமான தொழில்களாக இருக்கின்றன. தேவையான பணத்தின் அளவு பற்றி இன்னமும் கணக்கிடவில்லை. உங்களால் உதவ முடியுமானால் தொடர்பு கொள்ளுங்கள். பணஉதவி மட்டுமல்ல, தொழில்துறை சார்பான உபகரணங்களை பெற்றுக்கொடுப்பது முதல், தொழில்நுட்ப அறிவு, தொழிலை நட்டமடையாமல் வருமானம் வரக்கூடிய வகையில் நடத்துவதற்கு உதவுதல், போன்றவற்றில் பங்களிப்பு செய்ய…
-
- 0 replies
- 732 views
-
-
France புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் அரச சார்பற்ற நிறுவனமான சர்வோதயம் ஊடாக மட்டும் இதுவரை செய்தவை.... செயல் செயல் செயல்.......... இது போதாது தொடரும்.................
-
- 0 replies
- 807 views
-
-
-
கரவெட்டியின் சோகம் வறுமையில் உயிரிழந்த மாணவனின் நாதி யற்ற குடும்பம் ஒன்றுக்கு நோர்வே வாழ் ஏழு குடும்பங்கள் உதவி ! ராஜகிராமம் கரவெட்டி மேற்கை சேர்ந்த ஒரு குடும்பம் கருணாகரன் குடும்பம் . இக்குடும்பம் மிகவும் ஏழ்மை நிலையில் வாழ்ந்த பொது பட்டகாலில் படும் என்பது போல் கருணாகரனை கைது செய்து புனர் வாழ்வு முகாமில் வைத்துள்ளனர் .மூன்று பிள்ளைகளுடன் அன்றாடம் உணவுக்கே அல்லல் பட்டுக் கொண்டிருந்த பொது தலை மகனாக இருந்த பதினாறு வயது மகன் லீம்சன் ஏழ்மை நிலை காரணமாக சுருக்கிட்டு தற்கொலை செய்து மேலும் மோச நிலையை ஏற்ப்படுத்தி விட்டது மிகப் பரிதாபத்துக்குரியது .இன் நிலையில் இக் குடும்பத்துக்கு நோர்வேயில் உள்ள நல்ல மனம் உள்ள ஏழு குடும்பங்கள் இணைந்து ரூபா எண்பதினாயிரம் உதவியுள்ளது .ஆலை…
-
- 4 replies
- 803 views
-