தமிழும் நயமும்
இலக்கணம் | இலக்கியம் | கலைச்சொற்கள் | பழந்தமிழ்க் காப்பியங்கள்
தமிழும் நயமும் பகுதியில் இலக்கணம், இலக்கியம், கலைச்சொற்கள், பழந்தமிழ்க் காப்பியங்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழ் மொழி, செவ்வியல் இலக்கியம், இசை, பெருங்காப்பியங்கள் சம்பந்தமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
694 topics in this forum
-
வீரமும் ஈரமும் - சுப. சோமசுந்தரம் தமிழரின் சங்க கால வாழ்வியலில் காதலும் வீரமும் தலையாயவை என்பதை மன்பதை அறியும். காதல் ஒரு மென்மையான உணர்வு என்பது வையத்தார்க்கு யாரும் சொல்லாமலே தெரிவது. சிலரே அதனை முழுமையாய் உணர்வர் என்பது தனிக் கதை. அக்கதை "மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன் செவ்வி தலைப்படு வார்" (குறள் 1289) எனும் வள்ளுவத்தால் உணரற்பாலது. தொடக்கம் முதலே மென்மையானதாய்க் காதலை வகைப்படுத்தலாம். கடமை, கொள்கை உறுதிப்பாடு போன்றவற்றால் வீரமானது முதலில் சற்றே கடுமையாய்த் தோன்றினாலும், தமிழர் தம் வாழ்வியல் நெறியில் அதுவும் மென்மையாய்…
-
- 0 replies
- 1.3k views
- 1 follower
-
-
தோட்டாமூன்றாவதுகண் கர்ணன் மஹாபாரதத்தின் விசித்திரமான கதாபாத் திரங்களில் ஒருவன். ஒருபுறம் தனது கவச குண்டலத்தையும் தானமளிக்கும் பெருஉள்ளம், மறுபுறம் குலப் பெண்மணியை சபையில் அவமானப்படுத்தும் சிறுஉள்ளம். ஒருபக்கம் நண்பனுக்காக உயிரையும் கொடுக்க தயாராக இருக்கும் விசுவாசம், மறுபக்கம் குருவிடமே பொய் கூறும் கபடத்தனம். அறச் செயல்களில் ஆர்வம் கொண்டு போரிடத் துடிக்கும் அதே இதயம், அதர்மவாதிகளையும் ஆதரிக்கின்றது. மொத்தத்தில், கர்ணன் முரண்பாடுகளில் சிக்கிய ஒரு கதாபாத்திரம். கர்ணன் - நல்லவனா, கெட்டவனா என்பது பலருக்கும் புரியாத புதிர். நற்குணம் படைத்தவன், ஆனால் தீயோரின் சகவாசத்தினால் அதர்மத்திற்கு துணை நின்று அழிந்து போனவன் என்பதே பெரும்பாலா…
-
- 0 replies
- 716 views
-
-
'ஆரியம் இறந்த கதை'யைச் சொல்லும் ஆங்கிலம்! மொழிகளின் இயற்கை புரிந்துவிடு! மனிதர்க்குத் தமிழே ஆதிமொழி!-4 பேராசிரியர் ந. கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம், திருநெல்வேலி. "பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!" - பாவேந்தர் பாரதிதாசன் "ஆரிய மொழிக்குடும்பத்தில், ஆங்கிலம், ஜெர்மன், பிரெஞ்சு போன்ற மொழிகளெல்லாம் இன்னும் செழிப்புடன் பேசப்பட்டு, உலகவழக்கில் இருக்கிறாப்ல! இந்திய ஆரியமொழியான சமற்கிருதத்தை ஏன் மக்கள் மறந்துவிட்டார்கள்?", என்று வருத்தத்துடன் கேட்டபடியே வந்தார் நண்பர். சமற்கிருதம் எக்காலத்தும் பேசப்படாத மொழியே! "சமற்கிருதம் எக்காலத்திலும் மக்களால் பேசப்படாத மொழி; சமயம், இலக்கியம், அறிவு நூற்கள் ஆகியன இந்தி…
-
- 0 replies
- 2.7k views
-
-
'கல் ஆனாலும் கணவன் புல் ஆனாலும் புருசன்' : வேந்தன் சரவணன் on 01-07-2009 06:23 Published in : சிறப்புக்கட்டுரை, சிறப்புக்கட்டுரை தமிழ்நாட்டில் மிகவும் புகழ் பெற்ற பழமொழி இது. இப் பழமொழியின் தாக்கம் பெண்களிடையே மிகுதி என்றால் அது மிகையாகாது. இந்தப் பழமொழியின் தவறான பொருள் விளக்கத்தால் நேர்ந்த விளைவுதான் இது. இந்தத் தவறுக்குக் காரணம் ஒரே ஒரு எழுத்துப் பிழைதான். அந்தப் பிழை என்ன என்று அறிந்து கொள்ளும் முன்னர் இப்பழமொழிக்கு தற்போது கூறப்படும் பொருள் என்ன என்று காண்போம். 'கல்நெஞ்சன் (முரடன்) ஆக இருந்தாலும் அவன் உன் கணவனே; புல்நெஞ்சன் (கெட்டவன்) ஆக இருந்தாலும் அவன் உன் புருசனே' ஆண்-பெண் இணைந்து வாழ்க்கை நடத்தும் இல்லறத்தில் மணமான ஒரு…
-
- 1 reply
- 3.1k views
-
-
'களவும் கற்று மற' தவறாகப் பொருள் கொள்ளப்பட்டுள்ள தமிழகப் பழமொழிகளில் இதுவும் ஒன்று. இதிலும் ஒரே ஒரு எழுத்துப் பிழையால் தான் பொருள் தவறு நேர்ந்துள்ளது. அதைப் பற்றிக் காணும் முன்னர் இதன் பொருள் என்ன என்று காணலாம். ' திருட்டுத் தொழிலைக் கூட கற்றுக்கொண்டு பின்னர் மறந்துவிடு.' - இதுவே இதன் பொருள் ஆகும். எப்படி இருக்கிறது பொருள்?. மிகவும் ஆச்சர்யப்படுத்துகிறது அல்லவா?. எப்படி இதுபோன்ற பொருளில் பழமொழிகள் உலாவருகின்றன என்பதே தெரியவில்லை. இப்படித் தவறான பழமொழிகள் புழங்குவதால் தான் சமுதாயத்தில் ஒழுக்கம் குன்றி தவறுகள் அதிகரித்து விட்டன. 'ஏன் தவறு செய்கிறாய்?' என்று கேட்டால், 'களவும் கற்று மற' என்று பெரியவர்கள் சொல்லி இருக்கிறார்களே அதனால் …
-
- 3 replies
- 29.3k views
-
-
குட்டு + உணி =குட்டுண்பவன், அதாவது குட்டுப்படுபவன். அந்தக் காலத்தில் 'குட்டுணி' என்ற ஒரு சொல் வழங்கியது. இங்ஙனம் குட்டுப்பட்டு அவமானப்படுபவர்களை அது குறித்தது. அறிவின்றிப் பிறரால் தண்டனைக்கு ஆட்படுபவர்களைக் 'குட்டுணி' என்றார்கள். இவ்வாறே காலப்போக்கில் 'குட்டு' என்ற சொல்லுக்குத் துன்பம், இடர், அனுபவம் என்றெல்லாம் குறியீட்டுப் பொருள்கள் ஏற்படலாயின. விவரம் தெரியாமல் ஒரு தொழிலைத் தொடங்கிவிட்டுத் தவிப்பர்களைப் பார்த்துக் 'குட்டுப்பட்டால்தான் புத்தி வரும்' எனப் பேசுவார்கள். ஒன்றைத் தொடங்கித் துயரப்பட்டு அனுபவப்படுவதும் இதில் குறிக்கப்படுகிறது. மிகவும் வாழ்வில் அடிபட்டு விட்டவனை 'நல்லாக் குட்டுப்பட்டு விட்டான்' என்று கூறி இரக்கப் படுவார்கள். ஒருவனைத் துன்பப்படுத்திக் கொண்டேயி…
-
- 0 replies
- 508 views
-
-
'தனித்தமிழ்ப்பற்று' பிறமொழி வெறுப்பைக் குறிக்கிறதா? செம்மொழிப் புதையல்-2 பேராசிரியர் ந. கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம், திருநெல்வேலி. "பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!" - பாவேந்தர் பாரதிதாசன் சமற்கிருதமோ, ஆங்கிலமோ கலக்காமல் தனித்தமிழில் பேசிப்பாருங்கள்! நம்மவர் பலரும் உங்களைத் தீவிரவாதியைப் பார்ப்பதுபோலக் கலவரத்துடன் பார்ப்பார்கள். அத்தகைய பார்வையில் ஏதேனும் உண்மை உள்ளதா என்று சற்றே சிந்திக்கலாம். கவிதையின் கருதான் முக்கியமேதவிர, மொழி ஒரு பொருட்டல்ல. கவிதைக்கான உயர்ந்த கருப்பொருள் கவிஞனின் உள்ளத்தில் மேலோங்கிவிட்டால், கலப்புமொழியிலும் அக்கவிதை அற்புதமாக வெளிப்படும் என்று பேசும் படைப்பாளிகள் தற்காலத…
-
- 0 replies
- 1.1k views
-
-
'மேதகு’ என்னும் சங்கச் சொல் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் என்னும் மன்னன் உலகத்து இன்ப மாகிய இல்லறத்தோடு இருத்தலை மறந்து போர் ஒன்றையே இன்பப் பொருளாகக் கருதி வாழ்ந்தான் என்னும் பொருள்பட நக்கீரரால் நெடுநல்வாடை என்னும் நூல் இயற்றப்பட்டது. காதலும் வீரமும் சங்க காலத் தமிழர் வாழ்க்கையின் இரண்டு கூறு களாக இருந்தன என்பதைச் சங்க இலக்கியங்கள் வழி அறிகிறோம். இந்த இரண்டுள் போர் ஒன்றையே தொழிலாகக் கருதிப் பெருவீரனாக விளங்கிய பாண்டிய மன்னனை நோக்கிக் காதல் இன்பத் தையும் கண்டு வாழுமாறு நெடுநல்வாடையில் நக்கீரர் அறிவுறுத்தியுள்ளார். காதல் இன்பத்தைக் காணுமாறு கூறும் இந்நூற்பொருளின் தொடர்ச்சி யாகவே மதுரைக்காஞ்சி நூல் பாடப்பட்டுள்ளது. கா…
-
- 0 replies
- 664 views
-
-
‘எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும்” என்று தம் நூலான ‘வெற்றிவேற்கை”யின் முதல் அடியாக அதிவீரராம பாண்டியன் என்னும் தமிழ்நாட்டு மன்னன் சில நூற்றாண்டுகளுக்கு முன்பு கூறிப்போந்தான். ஆனாலும் தற்காலத்திய அறிஞர்கள் சிலர் தமிழர்க்கு இற்றைக்கு 2300 ஆண்டுகளுக்கு முன்பாக எழுத்தறிவு என்பது இம்மியளவும் கிடையாது. வடநாட்டில் ஆட்சி செய்த மௌரிய அரசன் அசோகன்தான் இந்தியாவிலேயே எழுத்தை உருவாக்கினான். அதிலிருந்துதான் தமிழர்கள் தமிழ் எழுத்தை உருவாக்கிக் கொண்டார்கள் என்றும், வேறு சிலர் வடநாட்டு வணிகர்கள் தெரிந்து வைத்திருந்த எழுத்திலிருந்துதான் தமிழ் வணிகர்கள் எழுத்தை உருவாக்கிக் கொண்டனர் என்றும் கூறிவருகின்றனர். இவர்கள் கூறுவது சரியானதுதானா என்று ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும். உலக நாடுகள் அ…
-
- 0 replies
- 1.3k views
-
-
தமிழ் மொழி கடல் கடந்தும் வாழும் என்ற நம்பிக்கையூட்டும் படியாக "ரஷ்யா நாடு தமிழைக் கொண்டாடுகிறது’’. தமிழன் தமிழில் எழுதினாலோ பேசினாலோ பாராட்டுவது நாமாகத்தான் இருப்போம். நம் மொழியை நாம் பேசவே பாராட்டுகிறோம். அந்த அளவு போய்விட்டது நம் மொழி. ஆனால், தமிழுக்குத் தொடர்பே இல்லாத ரஷிய நாடு தமிழைக் கொண்டாடுகிறது. அங்கிருக்கும் ரஷிய அதிபர் மாளிகையான கிரெம்ளின் மாளிகையின் பெயரை அவர்கள் அழகுத் தமிழில் எழுதியுள்ளார்கள். முதலாவதாக அவர்கள் தாய்மொழியான ரஷிய மொழியிலும், இரண்டாவதாக அண்டை நாட்டு மொழியான சீனத்திலும், உலகத் தொடர்புமொழி என்ற நோக்கில் ஆங்கிலத்திலும், நான்காவதாக தமிழிலும் எழுதியிருக்கிறார்கள். தமிழைவிட எத்தனையோ உலக மொழிகள் பெரும்பாலான மக்களால் பேசப்படுகின்றன. ஆனால், அவற்றையெ…
-
- 1 reply
- 790 views
-
-
தமிழ் இலக்கியத்தில் இயற்றப்பட்ட பேரிலக்கியங்களில் நந்திக் கலம்பகமும் ஒன்று. தொட்ட இடமெல்லாம் கவிச்சுவை சொட்டும் தேன்தமிழ் நூல். கலம்பகம் என்பது, பல பூக்களைக் கலந்து மாலை தொடுப்பது போல் பலவகையான செய்யுள் உறுப்புகளைக் கொண்டு அக, புறச் செய்திகளைக் கொண்டு திகழும் அரிய நூல். கலம்பக நூல்கள் கி.பி. 9-ஆம் நூற்றாண்டில் தொடங்கி இதுவரை பல தோன்றியுள்ளன. நந்திக் கலம்பகம் ஏனைய கலம்பக இலக்கண வரம்பிற்கு உள்படாது, பல்லவ மன்னன் மூன்றாம் நந்திவர்மனை பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடப்பட்டதாகும். அவ்வாறு மன்னனை வைத்துப் பாடப்பட்ட முதல் கலம்பகம் மட்டுமல்ல, கலம்பக நூல் வரிசையில் முதலாவதாக வைத்து எண்ணப்படுவதும் இந்த "நந்திக் கலம்பகம்'தான். இதற்குப் பிறகு மன்னர் மீது பாடப்பட்ட கலம்பக நூல் எதுவு…
-
- 0 replies
- 1.2k views
-
-
வணக்கம் கள உறவுகளே!! வழமைபோல் நீண்டதொரு வரலாற்றுத் தொடரில் உங்களை சந்திக்கின்றேன் . அகிலன் எழுதிய வேங்கையின் மைந்தன் வரலாற்று நாவலை உங்கள் முன் கொண்டுவருகின்றேன் . நாவல் இலக்கியம் சார்பானதால் தமிழும் நயமும் பகுதியில் இணைக்கின்றேன் . உங்கள் கருத்துக்களை இந்த இணைப்பில் மட்டும் எழுதுங்கள் . நேசமுடன் கோமகன்
-
- 30 replies
- 4.3k views
-
-
தேனினும் இனிய தெள்ளு தமிழில் வான் புகழ் வள்ளுவன் யாத்த 1330 குறட்பாக்களில் பல அதிசயச் செய்திகள் உள்ளன. இவைகளை அப்படியே நம்புவதா? அல்லது உவமைக்காகக் கூறப்படும் மரபுச் செய்திகளா? என்று தெரியவில்லை. இவைகள் குறித்து அறிவியல் முறையில் ஆராய்ந்தால் உண்மை புலப்படும். கவரி மானின் மயிர் நீங்கி விட்டால் அது இறந்து விடும் என்றும், முகர்ந்து பார்த்தாலே அனிச்சமலர் வாடி விடும் என்றும், பத்தினிப் பெண்கள் மழை பெய் என்றால் மழை பெய்யும் என்றும் பல அதிசயச் செய்திகளை அடுக்குகிறார் வள்ளுவர். தற்காலத்தில் திருக்குறளுக்குப் புதிய உரை எழுதி வருவோர் பழங்காலத்தில் உரை எழுதியோர் விஷயங்களைத் தள்ளி விட்டு வள்ளுவர்க்குப் புதிய "வியாக்கியானம்" செய்ய முனைந்துள்ளனர். இது தவறு. 1500 ஆண்டுகளுக்கு முன் வா…
-
- 0 replies
- 540 views
-
-
சேதுபதி மன்னரின் அவைப் புலவர்களில் ஒருவராக இருந்தவர் மதுரகவிராயர் . ராமநாதபுரத்துக்கு அருகில் வசித்து வந்தார். ஒரு நாள் அவரைப் பாம்பு கடித்துவிட்டது. அதனால் அவரது உயிர்நிலை அடங்கிப்போய்விட்டது. ஆனால் உறவினர்கள் அவர் இறந்துவிட்டார் என்று எண்ணி விட்டனர். ஆகையால் எல்லா இடங்களுக்கும் செய்தி சொல்லிவிட்டனர். சேதுபதி மன்னரும் தம்முடைய ஆஸ்தானப்புலவர் இறந்துவிட்டார் என்பதால் வரிசைகள் அனுப்பியிருந்தார். உடலை மயானத்திற்கு எடுத்துச் சென்றனர். அப்போது ராமேஸ்வரம் சென்றுகொண்டிருந்த வடநாட்டு பைராகிகள் கவிராயரின் உயிர்நிலை மட்டுமேஅடங்கியுள்ளதை அறிந்துகொண்டனர். கவிராயருக்கு காருட மந்திரப ்பிரயோகம், விஷ வைத்தியமெல்லாம் செய்து அவரை எழுப்பினர். சில பரிகாரங்களுடன் வீட்டில் சேர்த்துக்கொள்…
-
- 0 replies
- 684 views
-
-
"உயர் வள்ளுவம்".பற்றிய இந்த தொடர் சொற்பொழிவு, நாம் கற்ற திருக்குறளை வேறு கோணத்தில் அணுகுவதை பார்த்து, நீங்களே.. ஆச்சரியப் படுவீர்கள்.
-
- 3 replies
- 3.2k views
-
-
"ஐம்பெரும் காப்பியத்தின் இரு சுவைசொட்டும் வரிகள்" தனது கணவனின் குற்ற மற்ற தன்மையை பாண்டிய அரசன் நெடுஞ்செழியனிடம் வாதித்து நிருபித்த கண்ணகியின் சுவை சொட்டும் வரிகளை பாருங்கள். அதே நேரம் இப்ப இப்படி ஒரு கண்ணகி, கண்ணகியை பத்தினி தெய்வமாக போற்றும் நாடுகளிலாவது வாதிட முடியுமா? எனவும் சிந்தியுங்கள்! "தேரா மன்னா செப்புவது உடையேன் எள்ளறு சிறப்பின் இமையவர் வியப்பப் புள்ளுறு புன்கண் தீர்த்தோன் அன்றியும் வாயிற் கடைமணி நடுநா நடுங்க ஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சுசுடத் தான்தன் அரும்பெறல் புதல்வனை ஆழியின் மடித்தோன் பெரும்பெயர்ப் புகார்என் பதியே அவ்வூர் ஏசாச் சிறப்பின் இசைவிளங்கு பெரு…
-
- 0 replies
- 726 views
-
-
"ஓரெழுத்து சொற்கள்" / "ONE-LETTER WORDS" The total letters in Tamil are 247, out of these 45 letters are one letter word. That means these 45 letters have a separate meaning. Let us know them!! / 247 தமிழ் எழுத்துக் களில் 45 க்கும் மேலான எழுத்துக்களுக்கு தனியாக பொருள் உண்டு என்பது எத்தனை பேருக்கு தெரியும்? தமிழில் உள்ள அந்த ஓரெழுத்து வார்த்தைகளும் பொருளும் கிழே தரப்பட்டுள்ளன. வாசித்து மகிழவும். ஆங்கில மொழியில் அப்படி ஒரு 2 அல்லது 3 சொல் மட்டுமே உண்டு. அவை: 'A' – used when mentioning someone or something for the first time in a text or conversation. 'I' – Used to refer to oneself as speaker or writer. 'O' – Used to express surprise or strong emotion, …
-
-
- 2 replies
- 1.1k views
-
-
"கல்லும் கதை சொல்லும்" என்ற முற்றிலும் வித்தியாசமானதொரு தலைப்பில் ஈரோடு புத்தகத் திருவிழாவில் தா.பாண்டியன் அவர்கள் நிகழ்த்திய அழகிய சிற்பம்போல் செதுக்கப்பட்ட நேர்த்தியான உரை.
-
- 1 reply
- 1.2k views
-
-
முக்கடலும் முத்தமிடுகின்ற குமரி மாவட்டத்து நாஞ்சில் நாட்டுப் பகுதியில் ஒளவையார்க்கு திருத்தலங்கள் அமைந்துள்ளன. அத் திருத்தலங்களில் தாழக்குடியிலும் குறத்தியறையிலும் உள்ள திருத்தலங்கள் முதன்மையானவையாகும். தாழக்குடி ஒளவையார் திருக்கோவில் தாடகை மலையடிவாரத்தில், தோவாளைச் சாணல் கரையோரத்தில் நாவற்மரச் சோலையும் மாந்தோப்புகளும் நிறைந்த பகுதியில் அமைந்துள்ளது. நாவற்சோலையைப் பார்க்கும்போது "பாலமுருகன் சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?'' என்ற கேள்வியினை எழுப்பி ஒளவையாரது அறிவினையும் ஞானத்தையும் சோதித்தது நமக்கு ஞாபகம் வருகிறது. நாஞ்சில் நாட்டு மக்கள் ஆடி மாத செவ்வாய்க்கிழமையும், தை மாத செவ்வாய்க்கிழமையும் "கூழுக்குக் கவிபாடிய கூனக் கிழவி' என வாயாற வாழ்த்துப் பாடிக் கொண்…
-
- 1 reply
- 645 views
-
-
"கேக்" இதற்கு சரியான தமிழ்சொல் என்ன? (நாளைக்கு பரீட்ச்சை உடனே சொல்லுங்கோ )
-
- 27 replies
- 23.4k views
-
-
"சங்க கால இலக்கிய காதலர்கள்: ஆதிமந்தி - ஆட்டனத்தி" / "Love story of Sangam lovers: Athimanthi- Attanathi [தமிழிலும் ஆங்கிலத்திலும்] உலகப் புகழ் பெற்ற காதலர்கள் ரோமியோ - ஜூலியட், சகுந்தலை - துஷ்யந்தன், லைலா - மஜ்னூன், மும்தாஜ் - ஷாஜஹான், கிளியோபட்ரா - மார்க்ஆண்டனி, அம்பிகாபதி - அமராவதி, தேவதாஸ் - பார்வதி, உதயணன் - வாசவதத்தை, போன்றோர்களுக்கு சமமான காதல் கதை ஒன்று எமது இரண்டாயிரம் ஆண்டுகளிற்கு முற்பட்ட சங்க இலக்கியத்தில் கூறப்பட்ட்டுள்ளது. இந்த காதலர்கள் ஆதிமந்தி - ஆட்டநத்தி என்ற ஆடுகளமகள் - ஆடுகளமகன் ஆகும். இது ஏனோ பலருக்கு இன்னும் தெரியாமல் இருப்பது ஒரு கேள்விக்குறியே? இந்த சோகக் காதல் கதையை குறுந்தொகை 31, அகநானுறு 45, 76, 135, 222, 236, 376, 396 மற்றும் ச…
-
- 2 replies
- 1.5k views
- 1 follower
-
-
-
திரைப் படங்களில் வரும் பாடல்களில் உள்ள கற்பனைகள் சில சமயம் விமர்சனத்திற்குள்ளாவது சகஜம். கவிஞர் கண்ணதாசன் அவர்கள் எழுதிய ஒரு பாடலை கவிக்கோ அப்துல்ரகுமான் விமர்சனம் செய்தார். "தன்னுயிர் பிரிவதைப் பார்த்தவர் இல்லை என்னுயிர் பிரிவதைப் பார்த்து நின்றேன்” என்ற பாடலின் அர்த்தம் என்னவென்றால் தன்னுடைய உயிர் பிரிவதை யாரும் பார்க்க முடியாது. ஆனால் காதலன் தன்னைவிட்டுப் பிரிந்து செல்லும் போது அவளுடைய உயிரே பிரிந்து செல்வதைப் பார்த்து நிற்கின்றாளாம் காதலி எனச் சொல்லும் அற்புதமான கற்பனை இது. ஆனால் இப்பாடலை இந்திப் படப் பாடல் ஒன்றில் கேட்க நேர்கிறது கவிக்கோவிற்கு “யாராவது உயிர் போவதைப் பார்த்ததுண்டா? இதோ என் உயிர் போய்க்கொண்டிருக்கிறது" என்று காதலன் ஒருவன் இந்திப் படத்தில்…
-
- 0 replies
- 984 views
-
-
ராவணன் தமிழன் "தமிழர் காதல்", ஆயிரம் வருடங்களிற்கு முன்னரே தமிழர், தம் காதலை பாடி வைத்தார்கள், இப்படிதான். "யாயும் ,ஞாயும் யாரா கியரோ" , (நானும், நீயும் யார், எவர் என்று அறியாதவர்களாக இருக்கட்டும், நானும், நீயும், முன் ,பின்ன தெரியாதவர்களாக இருக்கட்டும், எப்படி யாவது இருதுட்டு போகட்டும், இழவு ) "எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளீர்", ( எம் இருவரது ,அப்பன், ஆத்தாள் முன்ன, பின்ன , எப்போதும், ஒருவருக்கு ,ஒருவர் அறிந்திருக்கு மாட்டார்கள், அதற்கான வாய்ப்பே இல்லை) "யானும், நீயும் எவ்வழி யறிதும்", ( நான் எப்படி பட்டவன், நீ எப்படி பட்டவள், பணம் , இருக்க, பந்தம் இருக்கா, சொந்தம் , இருக்கா, வேலை இருக்க, வெட்டி இருக்கா, கடவுள், இருக்கா, மதம், இருக…
-
- 1 reply
- 1.4k views
-
-
"தமிழுடன் ஒரு விளையாட்டு" - 01 கைத்தொலை பேசி, முகநூல் போன்ற எந்த வசதியும் இல்லாத பண்டைய தமிழ் நகரம் ஒன்றில், ஒரு இளைஞன், தனது காதலை ஒரு இளம் பெண்ணிடம் தனிமையில் சந்தித்து சொல்ல விரும்பினான். அவளோ அவளின் தந்தையுடன் சென்று கொண்டிருந்தாள். தந்தைக்கும் மற்றும் வீதியால் செல்லும் மற்றவர்களுக்கும் தெரியாமல் தனது விருப்பத்தை அவளிடம், அவளின் பின் நடந்து கொண்டே உரையாடலாக கூறினான். அவளும் அதை நன்றாக விளங்கிக்கொண்டு, தானும் தமிழில் சளைத்தவள் இல்லை என்பது போல, விடுகதை யாகவே பதிலைக் கூறினாள். அதை புரிந்துகொண்டு, "நான் எப்போது வரட்டும்? " என்ற அவனின் அடுத்த கேள்விக்கும் அவள் மீண்டும் விடுகதையாகவே தமிழுடன் அழகாக விளையா…
-
-
- 2 replies
- 1.6k views
-