Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி / துணுக்கு

Bulk-Tamil-News-Paper-(minimum-3tons-or-images?q=tbn:ANd9GcTR6ykEv2M71ExTgJuS01F

  1. லூயிஸ் ஆரோன்ஸன் எங்கெங்கும் ஆண்கள் இறந்துகொண்டிருக்கிறார்கள். ஏழை, பணக்காரர், தொழிலாளர்கள், அலுவலகத்தில் பணிபுரிபவர்கள், அனைத்து இனங்களையும் சேர்ந்தவர்கள், அனைத்து மதங்கள், இனக்குழுக்கள் என்று அனைத்தையும் சேர்ந்த ஆண்கள் இறந்துகொண்டிருக்கிறார்கள். பாலினம் மட்டுமல்லாமல், இறந்துகொண்டிருக்கும் இந்த ஆண்களுக்குப் பொதுவான பண்பு ஒன்று உண்டு: அவர்கள் யாரும் இளைஞர்கள் அல்ல. கோடிக்கணக்கான ஆண்கள் அவர்களின் எதிர்பாலினத்தவர்கள் இருக்கும்போது இறந்துகொண்டிருக்கிறார்கள், அதை யாரும் கண்டுகொள்வதுபோல் இல்லையே, எப்படி? அமெரிக்கா முழுவதும், ஒட்டுமொத்த மக்கள்தொகையில் ஆண்களின் சதவீதம் 49. ஆனால், 65 வயதைக் கடந்தவர்களில் பெண்கள் 57%. அந்த வயதில் பிழைத்திருப்போர் எண்ணிக்கை பாலினம் ச…

  2. சென்னையிலிருந்து டெல்லி சென்ற பயணியைத் தாக்கும் இண்டிகோ விமான நிறுவன ஊழியர்..! விமானப் பயணி ஒருவரை 'இண்டிகோ' விமான நிறுவன ஊழியர்கள் தாக்குவது போன்ற வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில், கடந்த அக்டோபர் மாதம் 15-ம் தேதி நடந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. சென்னையிலிருந்து டெல்லி சென்ற இண்டிகோ விமானத்தில் ஏறுவதற்காக விமான நிறுவனம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேருந்தில் ஏற முயற்சிக்கும் 'ராஜீவ் கட்டியால்' என்ற பயணியிடம் விமான நிறுவன ஊழியர்கள் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். வாக்குவாதம் முற்றிய நிலையில், 2 ஊழ…

  3. "தமிழன்" என்று சொல்லிவிட்டு தமிழ் தேர்வில் வெற்றிப்பெற முடியாதா..?”: நீதிமன்றம் கேள்வி. "தமிழகத்தில் அலுவல் மொழியாக தமிழ் இருப்பதால், ஒவ்வொரு ஊழியர்களுக்கும் தமிழ் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும் என எதிர்பார்ப்பது தவறு என்று சொல்ல முடியாது..!" என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது. தேனி டி.கள்ளிப்பட்டியைச் சேர்ந்தவர் ஜெய்குமார். இவர் தேனி மின் பகிர்மான வட்டத்தில் 2018-ல் இளநிலை உதவியாளராக பணியில் சேர்ந்தார். இவர் பள்ளியில் தமிழ் வழியில் கல்வி பயிலாததால், பணியில் சேர்ந்து 2 ஆண்டிற்குள் டிஎன்பிஎஸ்சி நடத்தும் தமிழ் மொழித் தேர்வில் வெற்றிப்பெற வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது. இந்த நிபந்தனையை பூர்த்தி செய்யாததால் ஜெய்குமாரை பணிலிருந்து விடுவித்து கண்காணிப்…

  4. "குருமா" வருதுன்னு சொன்னாங்களா.. அதான் தலையில வேப்பிலை வச்சுக்கிட்டேன்..! வெள்ளந்தி பாட்டி. சென்னை: "எதுக்கு தலையில வேப்பிலை வெச்சிருக்கீங்க..?" என்று கேட்டதற்கு, "குருமா வருதுன்னு சொன்னாங்க, அந்த குருமாவுக்காக ஆண்டவனை வேண்டிக்கிட்டு வேப்பிலையை வெச்சிக்கிட்டேன்.. நிறைய பேர் குருமா நோவு வந்து சாகறாங்களாமே.. என்னமோ தீங்கு வருதாம் நமக்கு..!" என்று துப்புரவு பணியாளர் ஒருவர் வெகு இயல்பாகவும், வெள்ளந்தியாகவும் பதிலளிக்கிறார்.. இன்னும்கூட இந்த வைரஸின் பேர் வாயில் நுழையாமல் பல கிராம மக்கள் உள்ளனர். ஆனால் பெரிய நோய் என்று மட்டும் புரிந்து கொண்டுள்ளனர். கொரோனாவுக்கு கிராமப்புறங்களில் வேப்பிலை, மஞ்சள் கலந்த நீரை வீடு, வாசல்களில்…

  5. பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை; உள்துறை அமைச்சகத்துக்கு அறிக்கை அனுப்பவில்லை: ஆளுநர் மாளிகை திட்டவட்ட மறுப்பு ! முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் 7 பேரையும் விடுதலை செய்வது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அறிக்கை அனுப்பியதாக வெளியான தகவலை ஆளுநர் மாளிகை இன்று திட்டவட்டமாக மறுத்துள்ளது. மிகவும் சிக்கலான இந்த வழக்கில் சட்ட நுணுக்கங்களை ஆராய்ந்து தான் முடிவெடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 1991 மே 21-ம் தேதி ஸ்ரீபெரும்பதூரில் மனித வெடிகுண்டு மூலம் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த பூந்தமல்லி தடா நீதிமன்றம் 26 பேருக்கு மரண தண்டனை விதித்தது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறைய…

  6. வரதட்சிணை புகார்களில் உடனடி கைது நடவடிக்கை மேற்கொள்ளலாம்: உச்ச நீதிமன்றம் "வரதட்சிணை புகார்களில், காவல்துறையினர் உடனடியாக கைது நடவடிக்கை மேற்கொள்ளலாம்" என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. முன்னதாக, வரதட்சிணை புகார்களை குடும்ப நல குழுக்கள் விசாரித்த பிறகே, காவல்துறையினர் கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில், அதனை 3 நீதிபதிகள் அமர்வு தற்போது மாற்றியுள்ளது. வரதட்சிணை புகாருக்கு ஆளாகும் கணவர், அவரது குடும்பத்தினரை, காவல்துறையினர் உடனடியாக கைது செய்வதற்கு, இந்திய தண்டனையியல் சட்டத்தின் 498ஏ பிரிவு வழிவகை செய்கிறது. இந்தப் பிரிவு தவறாக பயன்படுத்தப்படுவதாகக் கூறி தாக்கல…

  7. கருணாநிதியின் புன்னகை தரிசனம்... உற்சாகத்தில் திமுக தொண்டர்கள் சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் புன்னகை தரிசனத்தை எட்டு மாதம் கழித்து பார்த்த தொண்டர்கள் உற்சாகமடைந்தனர். உடன்பிறப்பே என்று முரசொலியில் எழுதினாலும் சரி, மேடையில் அவர் அழைத்தாலும் சரி திமுக தொண்டர்களுக்கு உற்சாகம் கிளம்பிவிடும். விசில் அடித்து கரஒலி எழுப்பி தங்களின் அன்பை வெளிப்படுத்துவார்கள் திமுக தொண்டர்கள். முதுமை காரணமாக உடல் நலம் குன்றியதால் கடந்த டிசம்பர் மாதம் முதலே கருணாநிதியை பொது இடங்களில் காண முடியவில்லை. அவரது அறிக்கைகள், எழுத்துக்களையும் படிக்க முடியாத தொண்டர்கள் சற்றே சோர்ந்துதான் போய்விட்டனர். வீட்டிற்குள் கருணாநிதி திமுக தலைவர் கருணாநிதி கடந்த டிசம்பர் மாதம் மருத்துவமனையில…

  8. தீபாவளிக்கு தில்லி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பட்டாசுகள் வெடிக்கத் தடை: உச்ச நீதிமன்றம் புது தில்லி: தீபாவளிக்கு தில்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பட்டாசுகள் வெடிக்கத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தில்லியில் பட்டாசுகளை வெடிக்கவும், விற்பனை செய்யவும் தடை பிறப்பித்து உச்ச நீதிமன்ற நீதிபதி மதன்வீர் லோகு தலைமையிலான அமர்வு உத்தரவிட்டுள்ளது. தில்லியில் தீபாவளி பண்டிகையின் போது பட்டாசுகள் வெடிப்பதால், மாசு அதிகமாக ஏற்படுவதாகத் தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இதையடுத்து, தீபாவளி பண்டிகை முடியும் வரை தில்லி மற்றும் தில்லியின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பட்ட…

  9. உண்மையான நேசமணி யார் என தெரியுமா ? ‘ப்ரண்ட்ஸ்’ படத்தில் வடிவேலுவின் நேசமணி கேரக்டர் தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வரும் நிலையில், இன்னொரு நேசமணியை பற்றியும் நாம் தெரிந்து கொள்வது அவசியம். இன்று தமிழகத்தின் கடைக்கோடி மாவட்டமாக திகழ்கிறது கன்னியாகுமரி. ஆனால் இந்த கன்னியாகுமரி தமிழகத்தோடு இணைந்தது வெறும் சாதாரணமாக நடைபெறவில்லை. அதற்கு பின் பல போராட்ட சம்பவங்களுக்கு உண்டு. தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் விளவங்கோடு வட்டத்தில் கடந்த 1895-ஆம் ஆண்டு ஜுன் மாதம் 12-ஆம் தேதி பிறந்தவர் நேசமணி. வழக்கறிஞரான இவர் குமரி தந்தை எனவும் மக்களால் அறியப்படுகிறார். குமரி தந்தை என நேசமணி அறியப்படுவதற்கு காரணமும் உண்டு. இந்தியா சுதந்திரம் ப…

  10. Nesamani: Who is he and why is the world praying for him? பிபிசி யில் வந்துள்ள செய்தி இது.. (இதில் முக்கியமான ட்விட்டை சிவப்பு எழுத்தில் கோடிட்டுக் காட்டியுள்ளேன்..! "...இந்தியாவே மோடி அரசை பற்றி பேசிக்கொண்டிருக்கையில், தமிழர்களாகிய நாங்கள் அதை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை, எங்கள் வழி தனி வழி, நேசமணி பற்றி பெருமை கொள்வோம், வாழ்க நேசமணி ..." என பொருள்பட எழுதியிருப்பது மிக அருமை..! தமிழனுக்கென்று ஒரு குணமுண்டு, அவன் தனித்துவமானவன் என்பதை பிற மக்கள் புரிந்திருப்பர்கள்..! ) Who is Nesamani and why is seemingly everyone in the world praying for him on Twitter? Many Indians were left wondering what was going on as #Pray_for_Neasamani and #Ne…

  11. ஆளைக்கொல்லும் ஆன்லைன் விளையாட்டு.. குழந்தைகளை பாதுகாப்பது எப்படி? சென்னை: உயிரை குடித்து வரும் 'ப்ளூவேல்' கேம்களின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில் தனது குழந்தை ஆன்ட்ராய்டு போனிலேயே மூழ்கிகிடக்கிறார் என்று பெருமை பேசுவதை பெற்றோர் நிறுத்திவிட்டு அவரது உயிரை காக்க முயற்சியுங்கள். அன்றைய காலகட்டங்களில் ஆண், பெண் என இருபாலருக்கும் தனித்தனி விளையாட்டுகள் விளையாடப்பட்டு வந்தன. ஆண்களுக்கு வீரம் கலந்து விளையாட்டுகளும், பெண்களின் உடல் அமைப்புக்கு ஏற்ற வகையிலான விளையாட்டுகளும் இருந்தன. உதாரணமாக, ஆண்களுக்கு ஜல்லிக்கட்டு, கபடி, கம்பு சுற்றுதல், சிலம்பம், மாடு பிடித்தல் உள்ளிட்ட விளையாட்டுகளும், பெண்களுக்கு கல்லாட்டம், ஸ்கிப்பிங், தாயம், பரமபதம், பல்லாங…

  12. சிக்கும் பணம்: மக்கள் கோபம் சென்னை: தேர்தலுக்கு, 13 நாட்களே உள்ளன. கட்சிகள் தீவிர பிரசாரத்தில் இருக்கின்றன. தேர்தல் கமிஷனும், அதிகாரிகளை முடுக்கி விட்டுள்ளது.அனைத்தையும் தாண்டி, மக்கள் விவாதிக்கும் விஷயம்: பணம். "உங்க ஏரியாவில் குடுத்துட்டாங்களா...? எந்த கட்சில்லாம் குடுத்திருக்கு...? எவ்வளவு குடுத்தாங்க...? தவணையா, புல்லா...?" எந்த தொகுதியை சுற்றி வந்தாலும், காதில் விழும் விசாரணைகள் இப்படித்தான் இருக்கிறது.வேலுாரில், பல கோடி சிக்கிய செய்தி பரவியபின், மேற்படி கேள்விகள் வேகம் எடுத்திருக்கின்றன. 'ஓட்டுக்கு பணம் கொடுக்காதே' என்று கட்சிகளையும், 'ஓட்டை விலைக்கு விற்காதே' என்று மக்களையும் தேர்தல் கமிஷன் எச்சரிக்கிறது. சமூக ஆர்வலர்களும், தொண்டு நிறுவனங்களும் இந்…

  13. குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்தால், தென் மாவட்ட மக்களுக்கு இனிப்பான செய்தி குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்படுவதன் மூலம் நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகளால் தென் மாவட்ட மக்களின் வாழ்வாதாரம் மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் விண்வெளி ஆய்விலும், ராக்கெட்டுகளை விண்ணுக்கு செலுத்துவதிலும் அமெரிக்கா, ரஷியாவுக்கு சவால் விடும் வகையில் இந்தியாவின் இஸ்ரோ நிறுவனம் பல புதிய சாதனைகளை படைத்து வருகிறது. உலக அளவில் மிக மிக குறைந்த செலவில் விண்ணுக்கு ராக்கெட்டுகளை அனுப்புவதில் இந்தியாதான் முதலிடத்தில் உள்ளது. இதனால்தான் அமெரிக்கா, ரஷியா, இங்கிலாந்து உள்பட வளர்ந்து விட்ட அனைத்து நாடுகளும் தங்க…

  14. இந்தித் திணிப்புக்கு எதிராக இந்திய அளவில் டிரண்டாகும் ஹேஷ்டாக் - யுவன்சங்கர் ராஜா படத்தால் தொடங்கியது.. "#ஹிந்தி_தெரியாது_போடா" இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் புகைப்படம் ஒன்றினால் டிவிட்டரில் இந்திய அளவில் ’ஹிந்தி தெரியாது போடா’ என்ற ஹேஷ்டாக் டிரண்டாகி வருகிறது. மெட்ரோ படத்தில் நடித்த ஷிரிஷ் ட்விட்டரில் இசைமைப்பாளர் யுவன் சங்க ராஜாவும் தானும் பேசிக்கொண்டிருப்பது போன்ற புகைப்படம் ஒன்றை வெளியிட்டார். அதில் யுவன் சங்கர் ராஜா “நான் தமிழ் பேசும் இந்தியன்” என்ற வாசகம் கொண்ட டி-ஷர்டையும், மெட்ரோ ஷிரிஷ் ”ஹிந்தி தெரியாது போடா” என்ற வாசகம் கொண்ட டி-ஷர்டையும் அணிந்திருந்தனர். ஷிரிஷின் பதிவை ரீட்வீட் செய்த யுவன் சங்கர் ராஜா, அதற்கு ”த…

  15. மதுரை உணவகத்தின் மெனுவில் 'பழைய சோறு..!' மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள "நெல்லு பேட்டை" என்ற உணவகத்தில் பழைய சோற்று கஞ்சி விற்பனை செய்து வருகின்றனர். இது அப்பகுதி மக்களிடையே அதிக வரவேற்பை பெற்று வருகிறது.வீட்டில் மிஞ்சிய சோற்றை குப்பையில் கொட்டும் நகர்புற கலச்சாரத்துக்கு மத்தியில் உடலுக்கு குளிர்ச்சியை தரும் பழைய சோறு ஜி.எஸ்.டியுடன் மதுரையில் உள்ள ஓட்டல் ஒன்றில் விற்பனைக்கு வந்துள்ளது. தற்போது உணவு பழக்கங்கள் மாறிவரும் இந்த நிலையில் மீண்டும் ஆரோக்கியமான உணவை நோக்கி மக்கள் நகர தொடங்கி இருக்கின்றனர் என்பதற்கான அறிகுறிதான் மதுரை மாட்டுதாவணியில் பழைய சோறு விற்பனை செய்து வருகின்றனர்.பழைய சோற்றில் மோர் கலந்து பச்சைமிளகாயும்…

  16. ‘செயல்திட்டம்’தான்; ‘காவிரி மேலாண்மை வாரியம் அல்ல’: உச்ச நீதிமன்றம் விளக்கம்! புது தில்லி: காவிரி வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் செயல்திட்டம் என்றுதான் குறிப்பிட்டிருக்கிறோமே தவிர, 'காவிரி மேலாண்மை வாரியம்' என்று கூறவில்லை என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு மனுவை விசாரணைக்கு ஏற்ற உச்ச நீதிமன்றம், மனுவை அடுத்த வாரம் ஏப்ரல் 9ம் தேதி திங்கட்கிழமை விசாரிப்பதாகக் கூறியுள்ளது. தமிழக அரசு தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை இன்றே விசாரிக்கக் கோரிய நிலையில், அடுத்த வாரம் திங்கட்கிழமை விசாரணைக்கு ஏற்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. 'தமிழகத்தின் நிலைமையை புரிந்து கொள்ள முடிகிறத…

  17. அதிமுக அமைப்பு செயலாளராக நடிகர் செந்தில் நியமனம்.. கோகுல இந்திரா நீக்கம்: தினகரன் அதிரடி அறிவிப்பு! சென்னை: அதிமுக அமைப்புச் செயலாளர் பொறுப்பில் இருந்து கோகுல இந்திராவை நீக்கிவிட்டு நடிகர் செந்திலை அந்த பொறுப்பிற்கு டிடிவி. தினகரன் நியமித்துள்ளார். அதிமுக அணிகள் ஒருங்கிணைந்து செயல்படத் தொடங்கியது முதல் அதிமுகவில் பல்வேறு நிர்வாகிகள் மாற்றத்தை அதிமுக அம்மா அணியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி . தினகரன் வெளியிட்டு வருகிறார். அமைச்சர்கள் காமராஜ், எம்.ஆர். விஜயபாஸ்கர், ராஜ்யசபா எம்பி வைத்திலிங்கம் உள்ளிட்டோரை கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்கி அவர்களுக்குப் பதிலாக புதிய நிர்வாகிகளை தினகரன் வெளியிட்டார். இந்நிலையில் இன்று அதிரடியான அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார். அதிமுக அமைப…

  18. காவிரி: குழுவா? வாரியமா? 'கெடு' முடியும் நிலையில் உச்சநீதிமன்றத்திடம் விளக்கம் கேட்கும் மத்திய அரசு! டெல்லி: காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் வழங்கிய இறுதி தீர்ப்பில் பிறப்பித்த உத்தரவில் திட்டம் என குறிப்பிட்டுள்ளது குழுவா? இல்லை வாரியமா? என சந்தேகத்தை விளக்க வேண்டும் என்று மத்திய அரசு மனுதாக்கல் செய்ய முடிவு செய்துள்ளது. சுமார் 200 ஆண்டுகளாக காவிரி விவகாரம் நீடித்து வருகிறது. மத்தியில் எந்த தலைமையிலான ஆட்சி வந்தாலும் சரி காவிரி பிரச்சினை என்பது இடியாப்பச் சிக்கலாகவே இருந்தது. இந்நிலையில் கடந்த 2007-இல் காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை எதிர்த்தும் கூடுதல் நீர் கேட்டும் தமிழகம், கர்நாடகம், புதுவை, கேரளம் ஆகிய மாநிலங்கள் உச்சநீதிமன்றத்தில் மேல்மு…

  19. மனைவி என்பவர் சொத்து கிடையாது; தன்னுடன் வாழ, கணவன் கட்டாயப்படுத்த முடியாது: உச்ச நீதிமன்றம் அதிரடி மனைவி என்பவர், திடப் பொருளோ அல்லது சொத்தோ கிடையாது. தன்னுடன்தான் சேர்ந்து வாழ வேண்டும்! என்று கணவர் விரும்பினால் கூட, மனைவிக்கு விருப்பம் இருந்தால் மட்டுமே அது நடக்கும், அவரைக் கட்டாயப்படுத்தி வாழ வைக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கணவர் தன்னை கொடுமைப்படுத்துகிறார், அவரிடம் இருந்து தனக்கு விவாகரத்து பெற வேண்டும். ஆனால், அதற்கு கணவர் சம்மதிக்க மறுக்கிறார். தன்னுடன் வாழ தொடர்ந்து கட்டாயப்படுத்துகிறார் என்று பெண் ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவைத் தாக்கல் செய்த பெண்ணும், அவரின் கணவரும் நன்கு படித்தவர்கள், இ…

  20. ஜாக்கிரதை.. ஜாக்கிரதை..! அப்பாவிகளே, ஜாக்கிரதை...!!

  21. அத்துமீறிய தம்பிக்கு லத்தியடி..! உலகம் முழுவதும் கொரானா பயத்தில் ஒடுங்கிப்போய் வீட்டுக்குள் அடங்க, இந்த மைனருக்கு முதல்வர் வந்து ஏன் ஊரடங்கு என்று விளக்கம் சொல்ல வேண்டுமாம்..! நல்ல கவனிப்பு..!!

  22. தமிழ்நாடு தினம்: தமிழுக்கென்று தனி மாநிலம்! மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின்படி, மொழியின் அடிப்படையில் சென்னை மாகாணத்திலிருந்து கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்கள் தனி மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டு நவம்பர் 1, 1956 முதல் தனித்தியங்கத் தொடங்கின. அதேநாளில், தமிழகமும் தனி மாநிலமானது. திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஆளுகைக்கு உட்பட்டிருந்த பகுதிகள் கன்னியாகுமரி என்ற மாவட்டமாகத் தமிழகத்துடன் இணைக்கப்பட்டது. சென்னை மாகாணத்திலிருந்து பிரிந்த மாநிலங்கள் இந்நாளை விசேஷமாகக் கொண்டாடிவரும் நிலையில், தமிழ்நாடு அரசும் இந்த ஆண்டு முதல் நவம்பர் 1-ம் தேதியைத் தமிழ்நாடு தினமாகக் கொண்டாடத் தொடங்கியுள்ளது. சென்னை மாகாணத்திலிருந்து பிரிந்த மாநிலங்களில் தனி மாநில அந்தஸ்தைப் பெற்றதற…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.