Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொங்கு தமிழ்

தமிழ் | தமிழர் | தேசியம் | வரலாறு | பண்பாடு

பதிவாளர் கவனத்திற்கு!

பொங்கு தமிழ் பகுதியில் தமிழ், தமிழர், தேசியம், வரலாறு, பண்பாடு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், தேசியம், வரலாறு சம்பந்தமான அவசியமானதும், நம்பகத்தன்மை உள்ளதுமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. கரிகால் சோழனுக்கு மணிமண்டபம்: முதல்வர் அறிவிப்பு. கல்லணையைக் கட்டிய கரிகால் சோழனுக்கு தமிழக அரசு சார்பில் மணி மண்டபம் கட்டப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார். தேனி மாவட்டம், லோயர்கேம்ப்பகுதியில் தமிழக அரசு சார்பில் கட்டப்பட்டுள்ள கர்னல் ஜான் பென்னி குவிக் நினைவு மணிமண்டபத்தை செவ்வாய்க்கிழமை திறந்து வைத்துப் பேசியபோது அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் பேசியது: வைகை படுகையில் வறட்சி ஏற்படுவதைத் தடுக்கும் வகையில், மேற்கு நோக்கிப் பாயும் பெரியாறு நதி நீரை வைகை படுகைக்குத் திருப்பும் வகையில் அணை கட்டும் திட்டத்தை அப்போதைய பிரிட்டிஷ் அரசாங்கம் தயாரித்தது. இத் திட்டத்தை பல்வேறு இடையூறுகளுக்கிடையே கர்னல் ஜான் பென்னி குவிக் கட்டி முடித்தார். இத் திட…

    • 0 replies
    • 529 views
  2. பொன்னியின் செல்வன்: பழுவேட்டரையர்கள் யார்? அவர்கள் ஆண்ட நாடு இப்போது எங்கே, எப்படி உள்ளது? முரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,LYCA PRODUCTIONS / MADRAS TALKIES படக்குறிப்பு, பெரிய பழுவேட்டரையராக சரத் குமார் மற்றும் சின்னப் பழுவேட்டரையராக ரா. பார்த்திபன் நடித்துள்ளதாக பொன்னியின் செல்வன் படக்குழு தெரிவித்துள்ளது. பொன்னியின் செல்வன் நாவலின் முக்கியக் கதாபாத்திரங்களாக வரும் பழுவேட்டரையர்கள் யார்? அவர்கள் ஆண்ட நாடு இப்போது தமிழ்நாட்டில் எங்கே இருக்கிறது? பிபிசி தமிழின் ஒரு நேரடி விசிட். கல்கி எழுதிய 'பொன்னியின்…

  3. கல்லில் ஒரு ‘ஸ்மார்ட் கிளாக்’!” தமிழனின் பழைமையான கேட்ஜெட் வேலூர் மாவட்டத்திலிருந்து 13 கி.மீ தொலைவில் உள்ள விரிஞ்சிபுரம் என்னும் ஊரில் இந்தக் கல் இருக்கிறது . பல்லவ மன்னர் ஆட்சி செய்த நேரத்தில், மார்கபந்தீஸ்வர் ஆலயத்தை கட்டியுள்ளனர். அப்போது ஆலயத்தின் வடக்குப் பகுதியில் காலம் கட்டும் கல்லையும் கட்டியிருக்கிறார்கள். (கீழே வலது பக்கப் படம்) பல்லாயிரக்கணக்கான ஆண்டு வரலாறு உண்டு என்பதால் தமிழர்களின் கண்டுபிடிப்புகள் மனிதனின் நாகரிக வளர்ச்சியில் நம் பங்கு முக்கியமானது. அதில் குறிப்பிடத்தக்க ஒன்றுதான் நம் முன்னோர்கள் கண்டுபிடித்த காலம் காட்டும் கல். இதை மணிகாட்டிக் கல் என அழைப்பதும் உண்டு. அறிவியல் அதிகமாக வளராத ஆதிக்காலத்திலையே சூரியனை எப்படிப் பயன்படுத்தலாம் என…

  4. மரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார் அவையம் - 2015 நாள் : 05.02.2015 (ஐந்தாம் பதிவு) ஆங்கில ஆண்டு 2015க்கு இணையான தமிழ் ஆண்டின் இரண்டாவது முழு நிலவு 03.02.2015 அன்று தோன்றியது. தமிழ் ஆண்டுக் கணக்குப்படி சரியாக மூவைந்தான் முறை முற்ற 42வது நாளில் அமைந்தது அந்த முழு நிலவு. 24.12.2014 ஆண்டின் 1-வது நாள் 04.01.2015 முழு நிலவு 12-வது நாள் 03.02.2015 முழு நிலவு 42-வது நாள் இதுவரை தோன்றியுள்ள இந்த இரண்டு முழு நிலவுகளும் முறையே சரியாக 30 நாட்கள் இடைவெளியில் தோன்றின. இவற்றைப் போலவே இந்த ஆண்டின் மிச்சம் உள்ள 10 முழு நிலவுகளும் மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் வரையிலும் 30 நாட்களின் இடைவெளியைச் சரிவரக் காப்பாற்றுமேயானால் மொத்த ஆண்ட…

    • 0 replies
    • 643 views
  5. -சனிக்கிழமைய தொடர்ச்சி- *விடுதலையைக் கருவறுத்த வீடணர்கள் தொண்டைமான், ஆற்காடு நவாப், சரபோஜி.... 1833 இல் தொண்டைமானுக்கு `ஹிஸ் எக்ஸலன்சி' விருது வழங்கப்பட்டது. 1857 இல் இந்த விருது ரத்து செய்யப்பட்டது. கடனில் மூழ்கிய மன்னனுக்கு இந்த விருது வைத்துக் கொள்ள தகுதியில்லை என ஆங்கிலேய அரசு தெரிவித்துவிட்டது. விருதைத் திரும்பப் பெறுவதற்காக விவசாயிகளை மேலும், கசக்கிப் பிழிந்து வரி வசூலித்து கடனை அடைத்து, 1870 இல் மறுபடியும் விருதைப் பெற்று `கௌரவத்தை' நிலைநாட்டிக் கொண்டான். 1875 ஆம் ஆண்டு மதுரை வந்த வேல்ஸ் இளவரசன் தொண்டைமானுக்கு ஏதோ ஒரு மெடலைக் குத்திவிட்டான். 1877 ஆம் ஆண்டு விக்டோரியா ராணி, மகாராணியாக பட்டம் சூட்டிக்கொண்ட போது, புதுக்கோட்டையில் சிறப்பு தர்பார் கூட்டப்…

  6. சங்க இலக்கியத்தில் வெறியாட்டு என்ற வார்த்தையை அதிகம் கேள்விப் பட்டிருப்பீர்கள். இதைப்பற்றி இணையத்தில் பல கட்டுரைகளை காணலாம். அதைப் பற்றி விரிவாக யாழில் ஒரு திரி இடலாம் என்ற உந்துதலே இது. வெறியாடுதல் என்பதற்கு இரண்டு வகையான விளக்கம் கொடுக்கப்படுகிறது. -> வேலைக் கையிற்கொண்டு ஆவேசம் கொண்டு ஆடுதல். -> பருவ மகளிருக்கு காதல் கொண்ட காதலனை அடைய வேண்டும் என்ற அவாவும், அடைய முடியுமோ என்ற அச்சத்தினாலும் உண்டாகும் ஒருவகை மன நோய். இந்த எண்ணம் முற்றுபெற்று ஊண் உறக்கமின்றி உடல் நலிந்து பேய் பிடித்து போன்ற ஒரு நிலையை வெறி என்றும் அழைப்பர். சங்க இலக்கியத்தில் வரும் ஒரு வீரக் காட்சி....... தம்முடைய கணவன்மாராகிய வெட்சி மறவர்கள் போருக்குப் புறப்படுமுன், அந்தப் போரில் வ…

  7. அழிந்து வரும் தமிழர் இசைக்கருவிகள் – எருதுகட்டு மேளம்/ஜிம்பளங்கு கொட்டு – சரவண பிரபு ராமமூர்த்தி எருதுகட்டு மேளம்/ஜிம்பளங்கு கொட்டு – தோற்கருவி அமைப்பு உருளை வடிவத்தில் இருக்கும் சிறிய இசைக்கருவி ஜிம்பளங்கு கொட்டு. பலா மரம், வேம்பு, வேங்கை அல்லது பூவரசு மரத்தைக் குடைந்து உடல் பகுதி செய்யப்படுகிறது. மதுரையில் இருந்து மரம் வாங்கி வந்து ஆசாரிகளிடம் தந்து குடைந்து கொள்கிறார்கள். இக்கருவியை இசைப்பவர்களே இதை மேற்கொண்டு செய்துகொள்கிறார்கள். பெரும்பாலும் எருமைக் கன்றின் தோலும் மறுபுறம் ஆட்டின் தோலும், சிலர் மாட்டுத் தோலும் பயன்படுத்தி தட்டும் முகங்களை செய்துக்கொள்கிறார்கள். பிரம்பு அல்லது மூங்கில் வளையங்களில் தோலை ஒட்டி அந்த வட்டவடிவமான த…

    • 0 replies
    • 2.9k views
  8. உலக தாய்மொழி தினம், சில சிந்தனைகள்! பேராசிரியர். சி. மௌனகுரு. February 23, 2021 உலகதாய் மொழிதினத்தை தமிழ் மொழிதினமாக கொண்டாடி மகிழ்ந்து போயிருக்கிறார்கள். தமிழ்மக்கள். தமிழுணர்ச்சியை இளம் சிறார் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் கொண்டு செல்வதாகவும் தமிழ் இசையை முன்னெடுப்பதாகவும், தமிழுக்குத் தொண்டுசெய்வோரை பாராட்டுவதாகவும் சில முன்னெடுப்புகள் நடந்துமுள்ளன. வெளியில் கொண்டாட முடியாதவர்கள் வீட்டில் கொண்டாடி மகிழ்ந்து அவற்றை தமது முகநூலில் பதிந்துமுள்ளனர். மகிழ்ச்சிகரமாகவும் உணர்ச்சிகரமாகவும் ஒருநாள் கழிந்துள்ளது. அதுமிகவும் நல்லதே. தமிழ் மொழியின் பெருமையை மேலும் மேலும் உரக்க சொல்வதாகவும் ஆரவாரமாகவும் முடிந்திருக்கிறது உலக தாய்மொழி தினம…

  9. மரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார் அவையம் – 2016 5-ஆம் பதிவு நாள்: 24.02.2016 பெருந்தச்சு நிழல் நாள்காட்டியின்படி, இவ்வாண்டின் மூன்றாவது முழுநிலவு கடந்த 22.02.2016 அன்று மாலை 06.20-க்குத் தோன்றி நள்ளிரவை 12.25-க்கு இனிதே கடந்தது. இது இழு பறியான நிலைதான். அதற்கு முதல் நாள், நிலவு மாலை 06.10-க்குத் தோன்றி நள்ளிரவு 11.41-க்குக் கடந்த நிலையில் இந்த முழுநிலவு 14-ம் நாளிலேயே வந்து விட்டது என்ற கணிப்பை மாற்றி வியப்பிலும் வியப்பாகவும் விரைந்து இழப்பை ஈடுசெய்தும் வெற்றி பெற்றுள்ளது. நிலவு 23.02.2016 அன்று மாலை 07.20-க்குத் தோன்றியது. இந்த ஒரு மணி நேர இடைவெளி அதற்கு முதல் நாளில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது கடந்து சென்ற நிலவு பங்குனி உத்தரம்: இவ்வாண்ட…

    • 0 replies
    • 783 views
  10. யாழ்க்கள உறவுகளே வணக்கம். அப்பப்போ ஆங்காங்கே பல ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் பரதநாட்டிய அரங்கேற்றத்தைப் பார்க்கும் வாய்ப்புகள் கிடைப்பதுண்டு. அண்மைய வாரத்திலும் அப்படியொரு வாய்ப்புக்கிடைத்தது. மிகவும் அழகாகவும் நேர்த்தியாகவும் சலிப்பற்ற முறையிலும் அந்த அரங்கேற்றம் நடைபெற்றது. பலரது உரைகள் இடம்பெற்றது. அங்கே வாழ்த்திதழ் வழங்கிய ஒருவரின் உரை என்னைக் கீழ்வரும் வினாக்களை எழுப்பத் தூண்டியது. கீழேயுள்ள வினாக்களையொட்டி அல்லது பரதக்கலை சார்ந்து பயின்றவர்கள் ஆய்வுசெய்தவர்களிடமிருந்து, அறிந்துகொள்ளவும் தெளிவைப் பெறவும் விரும்புகின்றேன். எனவே கள உறவுகள் இது தொடர்பாக நீங்கள் அறிந்தவற்றையும் பகிர்ந்துகொள்ளுவீர்களென எதிர்பார்க்கின்றேன். பரதம் தமிழரின் கலையாக இருந்து அ…

    • 0 replies
    • 738 views
  11. பழந்தமிழ் மறத்தியரும் ஈழத்தமிழ் மறத்தியரும் - பேராசிரியர் அறிவரசன் பழந்தமிழ் மறத்தியர், நாட்டுக்காகக் தம் வீட்டிலிருந்து ஆடவரைப் போர்க்களத்திற்குத் தயங்காமல் அனுப்பினர். ஆயினும். அவர்கள் களம் சென்று போர் செய்தார் அல்லர். இன்று, ஈழத்தில், பெண்கள் ஆண்களுக்கு நிகராக அனைத்துப் போரியல் நிகழ்வுகளிலும் தம் ஆற்றலைக் காட்டுகின்றனர். வீட்டளவில் நின்ற பழந்தமிழ் மறத்தியரின் வழிவந்த ஈழத்தமிழ்ப் பெண்கள், இன்று புலிகளாய் மாறிப் போர்க்களத்தில் நிற்கும் திறம், வியந்து பாராட்டுதற்குரியது. பழந்தமிழ் மறத்தியர் தம் மாண்பு குறித்தும் இன்றைய ஈழத்துப் பெண்களின் ஏற்றம் குறித்தும் இக்கட்டுரையில் காணலாம். மனையுறை மகளிர்: வீட்டின் நீங்கி வெளியே சென்று பொருளீட்டுதல். போர் உடற்றுத…

  12. கட்டுரை தகவல் எழுதியவர், மாயகிருஷ்ணன் கண்ணன் பதவி, பிபிசி தமிழுக்காக 8 மணி நேரங்களுக்கு முன்னர் தற்காலத்தில் அரசுகள் தங்களுக்குள் ஒப்பந்தங்களைச் செய்துகொள்வதைப் போலவே, பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாகவும் அரசுகளுக்கு இடையே ஒப்பந்தங்கள் செய்துகொள்ளப்பட்டிருக்கின்றன. இந்த ஒப்பந்தங்கள் பற்றி கிடைக்கக்கூடிய கல்வெட்டுகள் பல சுவாரஸ்யமான தகவல்களை நமக்குத் தருகின்றன. விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூரில் ஒப்பில்லாமணீஸ்வரர் கோவிலில் ஒரு கல்வெட்டு காணப்படுகிறது. இந்தக் கல்வெட்டு, இதுபோன்ற ஒரு ஒப்பந்தத்தைப் பற்றிப் பேசுகிறது. கி.பி.1178ஆம் ஆண்டு முதல் கி.பி.1218ஆம் ஆண்டுவரை ஆட்சி செய்தவராகக் கருதப்படும் சோழ அரசரான மூன்றா…

  13. புதுக்கோட்டையில் டைனோசர் காலத்து கல்மரம் - 10 கோடி ஆண்டுகளுக்கு முந்தையது 42 நிமிடங்களுக்கு முன்னர் புதுக்கோட்டை மாவட்டத்தில் 10 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்மரம் கிடைத்துள்ளதை தொல்லியல் ஆய்வாளர்கள் கொண்டாடுகின்றனர். ` மண்ணியல் சார்ந்த ஆய்வுகளுக்கும் பழைய வரலாற்றை கண்டடைவதற்கும் இது பேருதவியாக இருக்கும்' என்கிறார் தொல்லியல் ஆய்வாளர் பாண்டியன். புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட நரிமேடு பகுதியில் சுண்ணாம்பு பாறைகளும் கூழாங்கற்களும் அதிகளவில் கிடைக்கின்றன. புதுக்கோட்டை மாவட்டத்திலேயே இந்தப் பகுதியின் நில அமைப்பின் மாறுபாட்டை உணர்ந்து பல ஆண்டுகளாக தொல்லியல் ஆய்வாளர்கள் இங்கு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இங்கு பல்லாயிரம் ஆண்டுக…

  14. ஈழவளத் திருநாட்டின் யாழ்ப்பாண மாநகரில் வீரமும் தியாகமும் உள்ள கிராமம் என்றால் அது உரும்பிராயையே குறிக்கும். அப்படியான அக்கிராமத்தின் பிரபல பாடசாலையான உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாலய அதிபரான பொன்னுத்துரை அன்னலட்சுமி தம்பதிகளுக்கு 1950ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26ஆம் திகதி பிறந்தவரே, தற்சமயம் தமிழ் மக்களிள் நெஞ்சங்களில் நிலைத்து வாழும் தியாகி பொன்.சிவகுமாரன் ஆவார். சிவகுமாரன் ஆரம்பக் கல்வியைத் தமது தந்தையார் கற்பித்த உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாலயத்தில் சிறந்த முறையில் கற்று வந்தார். அவரது எட்டாம் வயதில் அதாவது 1958ம் ஆண்டு ஏற்பட்ட இனக்கலவரம் காரணமாக கொழும்பு வாழ் யாழ்ப்பாண மக்கள் கொலை செய்யப்பட்டும் அடி, உதை வாங்கியும், சொத்துக்கள், உறவினர்களை இழந்தும் கப்பல் மூலம்…

  15. சோழ - பாண்டிய - ஐரோப்பிய நகரங்களுக்கிடையே ஒற்றுமை சப்பானிய தமிழறிஞர் கண்டுபிடிப்பு மொழிபெயர்ப்பு - விண்மணிவண்ணன் தமிழர்கள் 12-ஆவது நூற்றாண்டில் வாழ்ந்த வாழ்க்கை எவ்வளவு நாகரிகமாக அமைந்திருந்தது என்பது பற்றி உலகளாவிய பார்வை ஒன்று கிடைத்திருக்கிறது. அண்மையில் 26-07-2007- ஆம் நாளிட்ட இந்து நாளேட்டில் இது பற்றிய செய்தி வெளி யிடப்பட்டிருக்கிறது. அதன் தமிழாக்கத்தை நமது வாசகர்கள் அறிந்து கொள்ள வெளியிடுகிறோம். பிற்காலச் சோழர்கள் மற்றும் பாண்டியர்கள் காலத்தில் தமிழ்நாட்டில் நகரங்கள் மற்றம் வணிகத்தின் மாறுதல்களும் தன்மைகளும் ஐரோப்பிய மற்றும் சப்பான் நாடுகளில் ஏற்பட்டவைக்கு இணையாகவே அமைந்தன என்று சப்பானின் தாய்ஷோ பல்கலைக் கழகப் பேராசிரியரும் டோக்கியோ பல்கலைக…

  16. சிறிலங்காவின்; தேர்தல் மூலம் தமிழ்மக்களுக்கு விடிவு கிடைக்கப்போவதில்லை. எனினும் அத்தேர்தல்களை தமிழர்கள் தமது ஒரு கருவியாக பயன்படுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள், வரும் தேர்தலில் தமிழ்தேசியத்தை முன்னெடுத்துச் செல்கின்றவர்களாக, மக்களை நேரடிப்போராட்டத்தில் ஈடுபடுத்தக்கூடிய தலைமை தேர்வு செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். சமூகவலைத்தளத்தின் ஊடாக இடம்பெற்ற இணையவழி மக்கள் அரங்கம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்கும் போதே இக்கருத்தினை அவர் தெரிவித்துள்ள பிரதமர் வி.உருத்திரகுமாரன் மேலும் தெரிவிக்கையில், சிறிலங்காவின் தேர்தல் தொடர்பில் கொள்கை முடிவுகளே நாடுகட…

  17. இந்தோனேசியாவில் தமிழர்கள் சாவகம் (ஜாவா), சுமத்திரா, பாலி, காலிமன்தான் (போர்னியோ), குலவேசி (செலிபிஸ்), இரியன் ஜயா (நீயூகினி) போன்ற 13,700 தீவுகள் அடங்கிய பகுதிகளைத்தான் இன்று இந்தோனேசியா என அழைக்கிறார்கள். இத்தீவுக் கூட்டங்கள் மலேயா தீபகற்பத்திலிருந்து நீயூகினி வரை பரவிக் கிடக்கின்றன. இரியன் ஜயாவின் கிழக்குப் பகுதியிலும், வட போர்னியாவின் பகுதிகளாக இருக்கும் சரவாக், சபா எல்லைகளிலும் மட்டும்தான் இந்தோனேசியாவின் நில எல்லை அமைப்புகளைப் பார்க்கலாம். தென்žனக் கடலும் பசிபிக் பெருங்கடலும் இந்து மாக்கடலும் 74,101 சதுர மைல்கள் அடங்கிய இத்தீவுக் கூட்டங்களைச் சுற்றிலும் அமைந்துள்ளன. தமிழர் குடியேறிய வரலாறு : சங்க கால நூல்களில் இந்தோனேசியாவைப் பற்றிய சில செய்திகள் நமக்குக் கிடைக…

  18. மலேசியாவில் யாழ்ப்பாணத்தமிழர்கள் என்னும் நூல் பற்றிய விபரத்துக்கு பிருத்தானியரின் ஆட்சிக்காலத்தில் வேலைவாய்ப்பை/பொருளீட்டலை நோக்கமாகக்கொண்டு ஈழத் தமிழர்கள் மலேசியாவிற்கு குடியகல்வுகளை மேற்கொண்டார்கள். இக்குடியகல்வில் இப்போதுள்ளது போன்ற உயிராபத்திற்காக புலம்பெயர்தல் என்ற நிர்ப்பந்தம் இருக்கவில்லை, ஒவ்வொருவருடைய தனிப்பட்ட விருப்பின் பேரிலேயே வேலை தேடி சென்றார்கள். அப்படியாக யாழ்ப்பணத்திலிருந்து மலேசியாவிற்கு ஈழத் தமிழர்கள் சென்று 125 ஆண்டுகள் ஆகிவிட்டது. வளப்படுத்தப்படாத மலேயாவிற்கு ஆரம்ப நாட்களில் வந்தவர்கள் கொடிய நோய்களுக்கு மத்தியில், தங்கள் குடும்பங்களைப் பிரிந்து, தனிமையில் பல இன்னல்களைக் கடந்து, பெரும்பாலும் தொடர்வண்டித்துறை, நில அளவைத் துறை, பொது அலுவலகத்த…

  19. [size=4]கவிதை எழுதுபவன் கவியன்று. கவிதையே வாழ்க்கையாக உடையோன், வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன், அவனே கவி[/size] [size=2][size=4]அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பது தில்லையே[/size][/size] [size=2][size=4]இச்சகத்து ளோரெலாம் எதித்து நின்ற போதினும்,[/size][/size] [size=2][size=4]அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே.[/size][/size] [size=4]துச்சமாக எண்ணி நம்மைத் தூறுசெய்த போதினும், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே. பிச்சைவாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்றுவிட்ட போதிலும், அச்சமில்லை யச்சமில்லை அச்சமென்பத் தில்லையே. இச்சகொண்ட பொருளெலாம் இழந்துவிட்ட போதிலும், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே. கச்சணிந்த கொங்க மாதர் கண்கள்வீசு போதினும், …

    • 0 replies
    • 1.3k views
  20. ஈழம் - சோலையின் புதிய புத்தகம் தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளர் சோலை திண்டுக்கல் மாவட்டம் அய்யன்பாளையத்தை பிறப்பிடமாகக் கொண்டவர். பத்திரிகைத் துறையில் ஐம்பது ஆண்டுகளுக்கு மேற்பட்ட அனுபவத்தை உடையவர். ஜனசக்தி, தீக்கதிர், நவமணி, அலை ஓசை, மக்கள் செய்தி, அண்ணா ஆகிய நாளிதழ்களில் தொடர்ந்து அரசியல் விமர்சனக் கட்டுரைகள் எழுதியவர். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் அண்ணா நாளிதழில் 9 ஆண்டுகள் பொறுப்பாசிரியராக பணியாற்றியவர். தமிழகத்தில் உள்ள இதழ்களில், நாளேடுகளில் அதிகமான அரசியல் விமர்சனக் கட்டுரைகள் எழுதியவரும் இவரே. புரட்சித் தலைவருக்கும் அமரர் ஜீவாவிற்கும் உற்ற நண்பனாக இருந்தவர். இவரது கட்டுரைகளை வெளியிடுவதன் மூலம் தங்களின் வாசகர் எண்ணிக்கையைப் பெருக்கிக் கொண்…

  21. உடையார் பாரி வரலாறு -2 ` பாரிவள்ளல் மகள்களாகிய அங்கவை சங்கவைக்குத் திருமணம். ஔவையாரே முன்னின்று நடத்திவைக்கிறார். மணமகன் திருக்கோவலூர் மலையமானாகிய தெய்வீகன். விநாயகப் பெருமானிடம் சொல்லி சேர சோழ பாண்டியர்களுக்குத் திருமண அழைப்பு எழுதச ்செய்வித்தார். அவர்கள் ஏற்கனவே பாரியிடம் பெண்கேட்டுப் போர் தொடுத்தவர்கள். இரண்டு பெண்கள்; மூன்று பேர் பெண் கேட்டார்கள். எவ்வகையில் பார்த்தாலும் யாராவது ஒரு வேந்தன் போர் தொடுப்பான். அவர்கள் நோக்கம் போரேயன்றி மண உறவல்ல. யாருக்குமே கொடுக்கவில்லையென்றாலும் போர் தொடுப்பார்கள். பாரியின் இறப்புக்குப் பின்னர் மூவேந்தர்களும் பறம்புநாட்டை அபகரித்துக்கொண்டார்கள். பாரி மகளிர் அபலைகளாக அநாதைகளாக ஒரு காட்டின் ஓரத்தில் விறகு பொறுக்கி ஜீவனம…

  22. வீர மங்கை வேலு நாச்சியார் இந்திய விடுதலைப்போரில் பதினெட்டாம் நூற்றாண்டிலேயே பிரிட்டீஸ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக போராடிய முதல் பெண் வீரங்கனை வீரமங்கைவேலுநாச்சியார் ஆவார். தென்னிந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் மகத்தான போர் நடத்தி வெள்ளையரையும்,ஆற்காடு நவாப்பையும் புறங்காண செய்த வீரமங்கை வேலுநாச்சியார்தான். இராமநாதபுரம் மன்னர் (1749-62) செல்லமுத்து சேதுபதி, சிவகங்கைக்கு அருகிலுள்ள ‘சக்கந்தி” என்னும் ஊரைச் சேர்ந்த முத்தாத்தாள் நாச்சியார் தம்பதிகளுக்கு ஓர் அழகிய பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு வேலு நாச்சியார் எனப் பெயரிட்டார்கள்.சிறுவயதில் வேலுநாச்சியாருக்கு தெரிந்த ஒரே மூன்றெழுத்து வார்த்தை வீரம். தெரியாத மூன்றெழுத்து வார்த்தை பயம். வாள்வீச்சு, அம்பு…

    • 0 replies
    • 8k views
  23. https://app.box.com/s/3rv2nsuu2epb7t2rhkn7v7zrw62u5i12 தொழூஉப் புகுத்தல் - 34 பாடு இமிழ் பரப்பு அகத்து அரவு அணை அசை இய ஆடுகொள் நேமியான் பரவுதும் (முல்லைக் கலி: 105: 70-71) சுடர் திகழ்பு ஒல்லா மயலொடு பாடிமிழ்பு இழிதரும் மடங்கல் வண்ணம் கொண்ட கடுந்திறல் துப்பு (பதிற்றுப்பத்து 62: 6-9) பாடு இமிழ் பனிக்கடல் பருகி வலனேர்பு கோடு கொண்டு எழுந்த கொடுஞ்செலவு எமிலி (முல்லைப்பாட்டு 4-5) நேர்கொள் நெடுவரை நேமியின் தொடுத்த சூர்புகல் அடுக்கத்து ப்ரசம் காணினும் ஞெரேகரன நோக்கல் ஓம்புமின் உரித்தன்று! நிரைசெலல் மெல் அடி நெறி மாறு படுகுவிர் (மலைபடுகடாம் 238:41) நீல் நிற ஒரி பாய்ந்தென நெடுவரை நேமியின் செல்லும் நெய்க்கண் இறால் (மலைபடுகடாம் 524-525) …

    • 0 replies
    • 573 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.