வாணிப உலகம்
வணிகம் | பொருளாதாரம் | பங்குச்சந்தை | முதலீடு | சுய தொழில் | நாணயமாற்று
வாணிப உலகம் பகுதியில் வணிகம், பொருளாதாரம், பங்குச்சந்தை, முதலீடு, சுய தொழில், நாணயமாற்று பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
622 topics in this forum
-
ஜெர்மனியை சேர்ந்த தனியார் நிறுவனம் ஏர் டாக்சியை மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கி வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. விமானத்தை போல் இறக்கை, 36 மின்மோட்டார்கள் மற்றும் பேட்டரி உதவியுடன் இயங்கும் வகையில் லிலியம் என்ற நிறுவனம் 5 பேர் அமர்ந்து செல்லக்கூடிய ஏர் டாக்ஸியை உருவாக்கியிருந்தது. ரிமோட் கன்ட்ரோல் மூலம் இயக்கப்பட்டதும், நேரே மேலே எழும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஏர் டாக்ஸி, மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் வானில் பறந்து சோதனை முயற்சியில் வெற்றிப்பெற்றுள்ளது. இதையடுத்து அதே மாடல் ஏர் டாக்ஸியை உருவாக்கி, 2025ம் ஆண்டுக்குள் வணிக ரீதியிலான சேவையை தொடங்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த இலக்கை எட்டும் நோக்கிலும், தடையில்லா சான்று பெறவும் …
-
- 0 replies
- 413 views
-
-
உங்கள் எதிர்காலத்துக்கு ஒரு கோடி ரூபாய் போதுமா? உண்மையில் எவ்வளவு ரூபாய் தேவைப்படும்? கெளதமன் முராரி பிபிசி தமிழுக்காக 36 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, நிதி திட்டமிடல் உங்கள் எதிர்காலத்துக்கு எவ்வளவு பணம் தேவை என உங்களுக்குத் தெரியுமா? அதை எப்படி கணக்கிடுவது? அதை எப்படி சம்பாதிப்பது? இதுபோன்ற கேள்விகளுக்குத்தான் இங்கே விடை காணப் போகிறோம். மனிதர்களின் வாழ்கை தரத்தை நிர்ணயிப்பது எப்போதுமே சிக்கலான விஷயமாக இருக்கிறது. 40 ஆண்டுகளுக்கு முன் ஒரு வீட்டில் தொலைபேசி இருப்பது ஆடம்பரம், 30 ஆண்டுகளுக்கு முன் டிவி பெரிய வி…
-
- 0 replies
- 413 views
- 1 follower
-
-
இலங்கையில் அரசு முதியோர்களுக்கு ஒரு நல்ல முதலீட்டு திட்டத்தை தந்துள்ளது. அதாவதை நீங்கள் முதியவர் என்றால் ( 65 வயதுக்கு மேலானவர் ?, இலங்கை பிரசை) என்றால் 15 இலட்சம் வரை அசையாத முதலீடாக செய்து வருடம் 15% வட்டியை பெறலாம். அதாவது நீங்கள் ஒரு இலட்ச்சம் இலங்கை ரூபாவை முதலீடு செய்தால் வருடம் 15,000 ரூபாய்கள் கிடைக்கும் இது அரசின் வருமான வரிக்கும் விதி விலக்கானது. No change in 15% interest given to senior citizens : Tuesday, 6 August 2019 01:16 …
-
- 1 reply
- 413 views
-
-
யாழ்.சர்வதேச வர்த்தக் கண்காட்சி ஆரம்பம் எம். றொசாந்த் / 2019 ஜனவரி 25 வெள்ளிக்கிழமை, பி.ப. 01:42 Comments - 0 வடக்கின் நுழைவாயில் எனும் தொனிப்பொருளில் வருடாந்தம் நடைபெற்று வரும் யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தக் கண்காட்சி இம்முறை 10 ஆவது தடவையாக யாழ்ப்பாணத்தில் நடைபெறுகின்றது. யாழ்.மாநகர சபை மைதானத்தில் இன்று (25) முதல் நாளை மறுதினம் (27)ஆம் திகதி வரை மூன்று நாட்கள் இக்கண்காட்சி நடைபெறவுள்ளது. இக் கண்காட்சி கூடங்களை இன்று (25) யாழ்.மாநகர சபை முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் திறந்து வைத்தார். 10 ஆவது வருடமாக நடைபெறும் இக் கண்காட்சியில் உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்கள் பங்குபற்றி தமது உற்பத்திகளை காட்சிப்படுத்தவுள்ளனர். அத்துடன் தொழில் வழிகாட்டல்கள், …
-
- 0 replies
- 413 views
-
-
பழனி முருகன் கோவில் பஞ்சாமிர்தத்திற்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. தமிழ்நாட்டில் இருந்து சர்வதேச அங்கீகாரம் பெற்ற முதல் பிரசாதம் இதுவாகும். ஏற்கனவே மதுரை மல்லிகை, ஈரோடு மஞ்சள், நீலகரி தேயிலை உள்ளிட்ட பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இந்த வரிசையில் 29வதாக இணைகிறது பழனி பஞ்சாமிர்தம். புகழ்பெற்ற பழனி பஞ்சாமிர்தம் தனிருசி கொண்டது. வாழைப்பழம், வெல்லம், பசுநெய், தேன், ஏலக்காய் ஆகிய 5 இயற்கையான பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் தனித்துவம் வாய்ந்த பஞ்சாமிர்தத்தம் முருகனுக்கு அபிசேகம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.திரவ நிலையில் இருந்தாலும் இதில் ஒரு சொட்டு நீரும் கலப்பதில்லை. பராமரிப்பதற்காக எந்த ஒரு கூடுதல் செயற்கைப் பொரு…
-
- 0 replies
- 411 views
-
-
புதிய 20 ரூபாய் இலங்கை நாணய குற்றிகள் மார்ச் 3ம் திகதி தொடக்கம் மக்கள் பாவனைக்கு..! இன்று ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.. இலங்கையில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் 20 ரூபாய் நாணய குற்றி மார்ச் மாதம் 3ம் திகதி தொடக்கம் மக்கள் பாவனைக்கு விடப்படுவதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் 70 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் வெளியிடப்பட்ட புதிய 20 ரூபாய் நாணயத்தை இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் டபிள்யூ.டி. லக்ஷ்மன் இன்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வழங்கினார். இது இலங்கை மத்திய வங்கியின் 70 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் வெளியிடப்பட்ட நினைவு சுழற்சி நாணயம் ஆகும். நாண…
-
- 0 replies
- 409 views
-
-
வடக்கு கடற்றொழிலாளர்களின் எதிர்காலம் இலங்கையின் பொருளாதாரம் ஒரு பெரும் நெருக்கடிக்குள் மூள்கிக்கொண்டிருக்கும் போது இலங்கை முழுவதுமிருக்கும் கடற்றொழிலாளர்கள் பாரிய பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்கிறார்கள். இங்கு வடக்கு கடற்றொழிற்றுறையில் வந்திருக்கும் நெருக்கடியென்பது ஏற்கனவே இலங்கையின் கடற்றொழில் கட்டமைப்பில் இருக்கும் பலவீனங்களையும் கருத்தில் கொண்டுதான் பகுப்பாய்வு செய்யமுடியும். குறிப்பாக கடற்றொழில் சார்ந்த ஏற்றுமதி இறக்குமதி, அதாவது திறந்த பொருளாதாரத்தினுடைய தாக்கம், நீண்டகால யுத்தத்ததின் பாதிப்பு, அதன் பின் வந்த இந்திய இழுவைப் படகுகளின் சுரண்டலால் ஏற்பட்ட இழப்புக்கள் தென்னக இடப்பெயர் மீனவர்களின் முரண்பாடு, மற்றும் கடற்றொழில் கூட்டுறவுச்சங…
-
- 0 replies
- 409 views
-
-
கொரோனா அனர்த்தத்தின் மத்தியில் இலங்கையின் முன்னிருக்கும் பாரிய பொருளாதார நெருக்கடி கோவிட் 19 அனர்த்தம் உலக ரீதியில் பாரிய சமூக மற்றும் பொருளாதார பிரச்சினைகளை முன்கொண்டு வந்திருக்கிறது. இங்கு குறிப்பாக அபிவிருத்தியடையாத நாடுகளின் மீதான பொருளாதார பிரச்சினைகள் கணிசமானவையாக இருக்கும். அந்தவகையில் இலங்கையையின் தேசிய பொருளாதாரத்தை எடுத்து பார்க்கும் பொழுது இது இலங்கையின் சுதந்திரத்திற்கு பின்னர் ஏற்படப்போகும் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடி என்று கூட கருதலாம். 2001ம் ஆண்டு கட்டுநாயக்க விமானநிலையத்தின் மீது நடைபெற்ற தாக்குதலிற்கு பின்னர் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி,; 1970ம் ஆண்டுகளில் உலக எண்ணெய் நெருக்கடியுடன் வந்த பாரிய பொருளாதார வீழ்ச்சி மற்றும் 1953ம் ஆண்டு காலப்பக…
-
- 0 replies
- 409 views
-
-
மன்பிரட் மக்ஸ்-நீவ்: வெறுங்கால் பொருளாதாரம் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2019 ஓகஸ்ட் 15 வியாழக்கிழமை, மு.ப. 02:43Comments - 0 உலக வரலாற்றில் மனித குலத்தின் வளர்ச்சிக்காகவும் நன்மைக்காகவும் பலர் தொடர்ச்சியாகப் பங்களித்தும் போராடியும் வந்துள்ளார்கள். இன்று, மனித குலம் அடைந்துள்ள வளர்ச்சி, மனித குலத்தின் மீதும் சமூகத்தின் மீதும், அக்கறை உள்ள மனிதர்களாலேயே சாத்தியமானது. இன்று, மனிதன் செல்வதற்காகவும் இலாபத்துக்காகவும் தொடர்ச்சியாக ஓடிக்கொண்டிருக்கும், அமைப்பொன்றில் சிக்கி இருக்கிறான். இந்த அமைப்பு, அவனைச் சுரண்டி, அவனைத் தின்று கொழுத்து, அவனை அழித்துக் கொண்டிருக்கிறது. இந்த உண்மையை விளங்காமல், செல்வத்தைப் பெருக்குவது தான், வளமான வாழ்க்கைக்க…
-
- 0 replies
- 408 views
-
-
வர்த்தக ஏற்றுமதி உயர்வு... 41 Views இந்த ஆண்டு 18 பில்லியன் அமெரிக்க டொலரை இலக்காக கொண்டு செயற்படுவதாக இலங்கை ஏற்றுமதி ஊக்குவிப்பு முகவரகம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு 16 தசம் 1 பில்லியன் அமெரிக்க டொலர் ஈட்டப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வர்த்தக ஏற்றுமதிகள் 2019 ஆம் ஆண்டு 0.19 வீதத்தால் அதிகரித்தமை குறிப்பிடத்தக்கது http://www.hirunews.lk/tamil/business/233433/வர்த்தக-ஏற்றுமதி-உயர்வு
-
- 0 replies
- 408 views
-
-
ஃப்ரெஷ்வொர்க்ஸ்: அமெரிக்க பங்குச் சந்தையில் தடம் பதித்த டெக் தமிழர் கிரீஷ் மாத்ருபூத்தின் நிறுவனம் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES தகவல் தொழில்நுட்பம் மற்றும் அதைச் சார்ந்த நிறுவனங்களுக்கு அமெரிக்காவின் கலிஃபோர்னியா ஒரு மாபெரும் கனவு. கூகுள், ஃபேஸ்புக், ஆப்பிள் போன்ற உலகின் டாப் டெக் நிறுவனங்களின் கூடாரமது. அங்கு தன் நிறுவனத்தைத் தொடங்கி, இன்று உலகின் மிக முக்கிய பங்குச் சந்தைகளில் ஒன்றான நியூயார்க் பங்குச் சந்தையில் (நாஸ்டாக் குறியீடு) தன் நிறுவனத்தை பட்டியலிட்டு டெக் உலகத்தை திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் கிரீஷ் மாத்ருபூதம். 46 வயதாகும் இந்த திருச்சிக்காரர்தான் ஃப்ரெஷ…
-
- 0 replies
- 408 views
- 1 follower
-
-
-
- 0 replies
- 408 views
- 1 follower
-
-
கொரோனா வைரஸ் தாக்கமும் தொழிற்துறைகளின் மூடுவிழாவும் அனுதினன் சுதந்திரநாதன் கொரோனா வைரஸின் தாக்க அளவானது, இலங்கையில் குறைவாகவுள்ள நிலையில், இறுக்கமான கட்டுப்பாடுகளிலிருந்து விடுபட்டு, முழுமையாக இயங்குவதற்கான செயற்பாடுகளை இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது. மார்ச் 15இல் முழுமையாக முடக்கப்பட்ட இலங்கையின் தொழிற்றுறையானது, இன்று (ஜூன் 15) முதல், முழுமையாகச் செயற்பட ஆரம்பிக்க இருக்கிறது. ஆனால், கடந்த வாரங்களில் வீதிகளி…
-
- 0 replies
- 407 views
-
-
ரூபாயின் வீழ்ச்சி: நிதி அமைச்சிற்கு ஜனாதிபதி விடுத்துள்ள அறிவுறுத்தல்! ரூபாயின் வீழ்ச்சியைக் கட்டுப்படுத்துவதற்கு செப்டம்பர் இறுதி முதல் அமுலாகும் வகையில் சில நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டது. அந்தவகையில் இறக்குமதிகளுக்கு வரையறை விதிக்கப்பட்ட பொருட்கள் தொடர்பில் அறிக்கை ஒன்றை சமர்பிக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். எதிர்வரும் ஒரு வார காலத்திற்குள் குறித்த அறிக்கையை சமர்பிக்குமாறு நிதி அமைச்சிற்கு ஜனாதிபதி அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். அமைச்சுக்கள், திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள் மற்றும் மன்றங்களுக்கான வாகனங்களைக் கொள்வனவு செய்யும் செயற்பாடுகள் மீள் அறிவித்தல் வழங்கும் வரை இடைநிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. http://athav…
-
- 0 replies
- 406 views
-
-
இலங்கையில் வறுமையொழிப்புத் திட்டத்தின் ஒரு நடவடிக்கை சமுர்த்தி. இதன் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் இச் சமுர்த்தி கொடுப்பனவு திட்டத்திற்கு குடும்பங்கள் சேர்ந்த வண்ணம் உள்ளது. குறிப்பாக, தேர்தல் காலம் நெருங்கி வரும் நிலையில் இந்த கொடுப்பனவுகள் அதிகரித்து செல்லுகின்றது. http://www.samurdhi.gov.lk/web/index.php/ta/statistics.html மத்திய வங்கி ஆளுநர் இந்த திட்டத்திற்கு 500 மில்லியன்கள் அமெரிக்க டாலர்கள் அளவில் பணத்தை பண முறிவு ஊடாக திரட்ட உள்ளத்தாக கூறி உள்ளார். The Government will soon issue Request for Proposals (RFPs) to raise $ 500 million via Samurai bonds, which will be used to bolster reserves and finance debt repayment, Central Bank Governor Dr. Indraji…
-
- 0 replies
- 406 views
-
-
500 ரூபாய் முதல் 500 கோடி வரை... உலகின் ஆறாவது பணக்காரர் அனில் அம்பானி சாம்ராஜ்யம் சரிந்த கதைகாலம் ஒரு மனிதனை உச்சத்தில் கொண்டு போய் வைக்கும் அதே காலம்தான் படுபாதாளத்திற்கும் தள்ளி விடும். ஒரு காலத்தில் இந்திய பங்குச் சந்தையை தினசரி நிர்ணயம் செய்யும் சக்தியாக இருந்த அனில் அம்பானி குழுமத்தின் நிறுவன பங்குகள் தற்போது படு பாதாளத்தில் விழுந்துள்ளது பங்குச் சந்தை வல்லுநர்களை வருத்தமடையச் செய்துள்ளது. பத்தாண்டுகளுக்கு முன்பு உலகின் பணக்காரர்கள் பட்டியலில் ஆறாவது இடத்தில் இருந்த அனில் அம்பானியின் சாம்ராஜ்யம் சரிவடைய என்ன காரணம் என்று அலசலாம். எரிக்சன் நிறுவனத்திற்கு தரவேண்டிய கடன் தொகையை இன்னும் 4 வாரங்களுக்குள் தராவிட்டால் 3 மாத சிறைத் தண்டனை அனுபவிக்கவேண்டும் என்று உச்ச …
-
- 0 replies
- 406 views
-
-
வடக்கிற்கான பல்துறை நுழைவாயிலான யாழ் சர்வதேச வர்த்தக கண்காட்சி இலங்கையில் மிகவும் அபிமானம் பெற்ற வர்த்தகநாமங்கள் மற்றும் சேவைகள் பலவற்றை ஒன்றாக சேர்த்து வழங்கவுள்ளது. விற்பனைக்கும், கண்காட்சிக்கும் வைக்கப்படவுள்ள பல்வேறு வகைப்பட்ட உற்பத்திகள் இலங்கையில் இன்னமும் முழுமையான வாய்ப்புக்களை அடையப்பெறாமல் காணப்படும் பாரிய சந்தைகளில் ஒன்றில் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் காலடியெடுத்து வைப்பதற்கு வாய்ப்பளிக்கவுள்ளது. 11 ஆவது தடவையாகவும் இடம்பெறவுள்ள யாழ் சர்வதேச வர்த்தக கண்காட்சி நிகழ்வானது 2020 ஜனவரி 24 முதல் 26 வரை யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் (யாழ் கோட்டைக்கு அருகாமையில்) இடம்பெறவுள்ளது. “வடக்கிற்கான நுழைவாயில்“ என அறியப்படுகின்ற இந்நிகழ்வானத…
-
- 0 replies
- 405 views
-
-
இன்று எமது ஊர்ப்புதின செய்தியாக அதிகம் காணப்படுவது போதைப்பொருள் பற்றிய செய்திகள். இது தடை செய்யப்பட்ட ஒரு பாவனைப்பொருளாக இருப்பதால் இதில் உள்ள மோகம் அதிகமாக உள்ளது. நாளாந்தம் கைதுகள். இலஞ்சம்... இதை கனடா போன்ற அங்கீகரிக்கப்பட்ட நாட்டு புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன. அத்துடன், மக்களும் பாதுகாப்பான பொருட்களை வாங்கி சட்ட ரீதியாக முறையில், இவற்றை நுகர முடிகின்றது. எல்லாவற்றிற்கும் மேலாக, அரச திறைசேரியை நிரப்ப இது உதவுகின்றது. கனடா 1923-ஆம் ஆண்டில் அந்நாட்டில் கஞ்சா வைத்திருப்பது குற்றசெயலாக அறிவிக்கப்பட்டிருந்தது. உற்சாகத்திற்காக கஞ்சாபயன்படுத்துவதை அனுமதிக்கும் சட்டம் கனடாநாடாளுமன்றத்தில் கடந்த வருடம் ஐப்பசியில் நிறைவேற்றப்பட்டுள்ளது. கஞ்சா…
-
- 1 reply
- 405 views
-
-
மூன்று மாவட்டங்களில் நெல் கொள்வனவு 43 Views மூன்று மாவட்டங்களில் நெல்லைக் கொள்வனவு செய்வதற்கான சந்தர்ப்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது. அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் நெற்கொள்வனவை ஆரம்பிக்க முடியுமென சபை குறிப்பிட்டுள்ளது. இந்தத் தடவை, ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் மெற்றிக் தொன் நெற்கொள்வனவை மேற்கொள்வதற்கு எதிர்பார்த்துள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபை மேலும் குறிப்பிட்டுள்ளது. ஒரு கிலோகிராம் உலர்ந்த நெல், நிர்ணய…
-
- 0 replies
- 405 views
-
-
ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான ஈரான் ரியாலின் மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவு ஒரு லட்சத்து 28 ஆயிரம் ரியால் என்ற அளவில் சரிந்துள்ளது. அமெரிக்காவின் பொருளாதார தடையால் நாணய மதிப்பு வீழ்ச்சியடைந்து. பொருளாதார சிக்கலும், விலைவாசி உயர்வு ஏற்பட்டுள்ளதால் பெரும் நெருக்கடிக்கு ஈரான் ஆளாகியுள்ளது. கடந்த 2015-ம் ஆண்டில் அப்போதைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஆட்சிக் காலத்தில் ஈரானுக்கும் அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட 6 வல்லரசு நாடுகளுக்கும் இடையே அணு சக்தி ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறியது. இதைத் தொடர்ந்து ஈரான் மீது கடுமையான பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்து வருகிறது…
-
- 0 replies
- 404 views
-
-
'இது மிகவும் மோசமாக இருக்கும்': சிலிக்கான் பள்ளத்தாக்கில் AI குமிழி வெடிப்பது குறித்த அச்சங்கள் அதிகரித்து வருகின்றன. 3 நாட்களுக்கு முன்பு பகிர் சேமிக்கவும் லில்லி ஜமாலி டெக்னாலஜி நிருபர், சான் பிரான்சிஸ்கோ கெட்டி இமேஜஸ் சிலிக்கான் பள்ளத்தாக்கு ஆப்பிளின் வட்ட தலைமையகம் உட்பட பல முக்கிய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு தாயகமாகும். இந்த வாரம் OpenAI இன் DevDay இல் , OpenAI தலைவர் சாம் ஆல்ட்மேன், அமெரிக்க தொழில்நுட்ப தலைவர்கள் இப்போதெல்லாம் அரிதாகச் செய்வதைச் செய்தார்: அவர் உண்மையில் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார். "குமிழி கதையை எழுதுவது கவர்ச்சிகரமானது என்று எனக்குத் தெரியும்," என்று திரு. ஆல்ட்மேன் தனது உயர் அதிகாரிகளுடன் அமர்ந்தபடி என்னிடம் கூறினார். "உண்மையில்,…
-
- 6 replies
- 403 views
-
-
ரஷ்யாவில் இருந்து சீனாவுக்கு குழாய் மூலம் எரிவாயு வினியோகிக்கும் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. சுமார் 40 ஆயிரம் கோடி டாலர் மதிப்பிலான இந்த திட்டத்தில் 8100 கிலோ மீட்டருக்கும் அதிகமான தொலைவுக்கு இரு நாடுகள் இடையே குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. நாளொன்றுக்கு 38000 கன மீட்டர் அளவுக்கு இயற்கை எரிவாயு 2024 ஆம் ஆண்டு வரை வினியோகம் செய்யப்பட இருக்கிறது. ரஷ்யாவின் கேஸ்பிரோம் நிறுவனம் இதனை செயல்படுத்துகிறது. காணொலி முறையில் நடைபெற்ற இந்த திட்டத்திற்கான தொடக்க விழாவில் சீன அதிபர், ஜி ஜின்பிங், ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதின் ஆகியோர் ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்தனர். எரிசக்தி துறையில் இருநாடுளுக்கு இடையிலான உறவு இனி புதிய உயரத்திற்கு ச…
-
- 2 replies
- 403 views
-
-
பிரான்ஸ், பிரேஸில் உள்ளிட்ட நாடுகளுக்கு எதிராக புதிய வரி! பிரான்ஸ், பிரேஸில் மற்றும் ஆர்ஜென்டீனா ஆகிய நாடுகளுக்கு எதிராக புதிய வரியை விதிப்பதற்கு அமெரிக்கா தீர்மானம் எடுத்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பினால் இவ்வாறு புதிய வரி விதிக்கப்பட்டுள்ளது. 2.4 பில்லியன் பெறுமதியான பிரான்ஸ் தயாரிப்புகளுக்கும் பிரேஸில் மற்றும் ஆர்ஜென்டீனா ஆகிய தென் அமெரிக்க நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அலுமினியம் போன்ற பொருட்களுக்கும் இவ்வாறு புதிய வரி விதிக்கப்படவுள்ளது. இதன் காரணமாக பிரான்ஸின் சீஸ், கைப்பை, பெண்களுக்கான அலங்காரப் பொருட்கள் மற்றும் வைன் போன்ற பொருட்களுக்கு 100 வீத வரி அறவிடப்படவுள்ளது. http://athavannews.com/பிரான்ஸ்-பிரேஸில்-உள்ளி/
-
- 0 replies
- 403 views
-
-
அரசாங்க வங்கியொன்றை தனியார் மயப்படுத்துவதற்கான ஆயத்தங்கள் காணப்படுவதாக மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கம் ஒவ்வொரு மாதமும் தேசிய சொத்துக்களை விற்பனை செய்யும் நடவடிக்கைகளை செயல்படுத்தி வருவதாக அவர் இதன்போது குற்றம்சாட்டினார். http://www.hirunews.lk/tamil/218968/அரசாங்க-வங்கியொன்றை-தனியார்-மயப்படுத்த-ஆயத்தம்-ஜே-வி-பி மக்கள் வங்கியை தனியார் மயப்படுத்தும் நோக்கில் நிதி அமைச்சர் மங்கள சமரவீரவும் அரசாங்கமும் பல்வேறு உபாயமார்க்கங்களை வகுத்துவருவதாக மக்கள் விடுதலை முன்னணி குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது. நாட்டின் …
-
- 0 replies
- 403 views
-
-
நிதியியல் அறிவு அவசியமா? அனுதினன் சுதந்திரநாதன் / 2020 பெப்ரவரி 11 உண்மையில், நமது கல்வியறிவு விகிதமானது, நமது நிதியியல் சார்ந்த விடயங்களைச் சார்ந்தோ நிதிசார் தேவைகளை முழுமைபெறச் செய்வதாகவோ அமைந்திருக்க வேண்டியதில்லை. ஆனாலும், அதிகரித்த கல்வியறிவு விகிதமானது, நாளாந்த நமது நிதியியல் தேவைகளைப் பூர்த்தி செய்வதாகவோ அல்லது அடிப்படையான நிதியியல்சார் விடயங்களைப் பூர்த்தி செய்துகொள்ள உதவுவதாகவோ அமைந்திருக்க வேண்டியது அவசியமாகும். உதாரணமாக, கல்வியறிவு அதிகம் கொண்ட நம்மில் பலருக்கே, காசோலைகளை எப்படி நிரப்புவது, அதனை எப்படி வங்கியில் வைப்பிலிடுவது, பண வைப்பு மற்றும் பணம் மீளப்பெறல் இயந்திரங்களை எப்படி இயக்குவது, வங்கிக் கூற்றுகளை எவ்வாறு ஆய்வுசெய்வது, நிதிச் செயற்பாடுகளை…
-
- 2 replies
- 402 views
-