வாணிப உலகம்
வணிகம் | பொருளாதாரம் | பங்குச்சந்தை | முதலீடு | சுய தொழில் | நாணயமாற்று
வாணிப உலகம் பகுதியில் வணிகம், பொருளாதாரம், பங்குச்சந்தை, முதலீடு, சுய தொழில், நாணயமாற்று பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
622 topics in this forum
-
துருக்கி நாட்டின் பொருளாதார மற்றும் வர்த்தக வளர்ச்சி மோசமடைந்த நிலையில் ஒட்டுமொத்த நாணய சந்தையைப் புரட்டிப்போட்டுள்ளது. இதனால் துருக்கி நாட்டின் நாணய மதிப்பு அமெரிக்க டாலருக்கு எதிராகக் கிட்டத்தட்ட 90 சதவீதம் வரையில் வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்நிலையில் துருக்கி நாட்டில் சுமார் 15 பில்லியன் டாலர் அளவிலான முதலீட்டை கத்தார் நாடு செய்யவதாக அறிவித்துள்ளது. இந்த முதலீட்டைத் துருக்கி வஹ்கி மற்றும் நிதியியல் சந்தை வழியாகச் செய்யவும் கத்தார் முடிவு செய்துள்ளது. இரு நாட்டு அதிபர்களும் சந்தித்து, துருக்கி லீராவின் மதிப்புச் சரிவு மற்றும் அரசியல் பிரச்சனைகள் குறித்து ஆலோசனை செய்த பின் இந்த முதலீடு குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது கத்தார். இதன் மூலம் துருக்கி நாட்டின் நாணய மதிப்…
-
- 1 reply
- 478 views
-
-
ஒரு தென்னை மரத்திலிருந்து ஆண்டுக்கு 150 தென்னை காய்களை பெற நிலத்தடி நீர் சொட்டு நீர்ப்பாசனம் மற்றும் உரம் (பசளை ) முக்கியமானது . இலங்கையில் தேங்காய் அறுவடையில் சுமார் 2/3 மகரந்தச் சேர்க்கை ஒழுங்காக நடைபெறாமல் மற்றும் தென்னை குரும்பைகள் உதிர்கின்றது. இதற்கு முக்கிய காரணம், ஒரு தென்னை மரத்திற்கு போதுமான நீர்ப்பாசனம் கிடைக்காதது. இலங்கையில் ஒரு தென்னை மரத்தின் சராசரி விளைவு ஆண்டுக்கு 40 முதல் 45 தேங்காய்களாகும் . ஆகும், அதே நேரத்தில் மழை பெய்யக்கூடிய பகுதிகளில் மட்டுமே, சராசரி தேங்காய் மரம் ஆண்டுக்கு 65-70 தேங்காய்கள் விளைவிக்கிறது. தென்னை செய்கையில் நீர் பாசனத்தின் முக்கியத்துவத்தை இது தெளிவாகக் காட்டுகிறது. இருப்பினும், இலங்கையில் வளர்க்கப்படும் பூர்வீக க…
-
- 2 replies
- 1.2k views
-
-
தென்மராட்சியில் மாம்பழச் செய்கையை ஊக்குவிக்க சிறப்பு வேலைத்திட்டம் மாம்பழங்களை உற்பத்தி செய்து அவற்றை உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் சந்தைப்படுத்தி வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்ளும் நோக்கில் தென்மராட்சியில் ஏற்றுமதிக்காக மாம்பழச் செய்கையை ஊக்குவிப்பதற்குச் சிறப்பான வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக தென்மராட்சியில் ஏற்றுமதிக்கான மாம்பழச் செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இத் திட்டத்துக்காக பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்குத் தற்போது மரக்கன்றுகள் வழங்கப்பட்டுள்ளன.இதற்காக மாம்பழ உற்பத்தியாளர் சங்கமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அந்தச் சங்கத்தில் அங்கத்துவம் பெறுவதன் ஊடாக உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தல் வாய்ப்புக்களை ஏற்ப…
-
- 0 replies
- 985 views
-
-
ஜேர்மனியில் பணிபுரியும் தமிழர் ஒருவர் தனது மகளுக்கு சமீபத்தில் திருமணம் செய்து வைத்த நிலையில் சுகாதாரம் காக்கப்பட வேண்டும் என்பதற்காக அவர் செய்த செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. தமிழகத்தின் காரைக்குடியை சேர்ந்தவர் முத்துசேகர். இவர் ஜேர்மனியில் ஊர்ந்து நகரக்கூடிய உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். முத்துசேகரின் மகள் திருமண நிகழ்ச்சி காரைக்குடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிலையில் அங்கு கழிவுகளைக் கொண்டு உரம் தயாரிக்கும் இயந்திரத்தை வைத்து அவர் அசத்தியிருக்கிறார். அவர் கூறுகையில், திருமண மண்டபங்களில் கொட்டப்படும் சாப்பாடுக் கழிவுகளால் துர்நாற்றம் வீசுவதோடு, நோய்தொற்று போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இதற்கு தீர்வு அளிக்…
-
- 0 replies
- 430 views
-
-
தேயிலை ஏற்றுமதியின் மூலம் கடந்த ஆண்டில் கூடுதலான வருமானம் ஈட்டப்பட்டதாக தேயிலை ஏற்றுமதியாளர் சங்கத்தின் தலைவர் சஞ்சய ஹேரத் தெரிவித்துள்ளார். கடந்த டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த 12 மாதங்களில் தேயிலை ஏற்றுமதி மூலமாக வருமானம் 240.6 பில்லியன் ரூபாவாக காணப்பட்டது. இது 2018 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 8.9 சதவீத அதிகரிப்பாகும். https://www.virakesari.lk/article/75860
-
- 1 reply
- 316 views
-
-
தொங்கி நிற்கும் பொருளாதார இலக்குகள் அனுதினன் சுதந்திரநாதன் / 2020 ஓகஸ்ட் 31 நல்லாட்சி அரசாங்கத்தால் அறிமுகம் செய்யப்பட்ட ‘ Vision 2025’ இலக்குகளை, இன்று நினைவில் வைத்திருக்கிறோமா ? 2020இல் அடையக்கூடிய இலக்குகள் என, 2015இல் இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டு இருந்தாலும், இடைநடுவே ஏற்பட்ட அதிகார மோதலின் காரணமாக, இவை அனைத்துமே, 2025ஆம் ஆண்டை இலக்காகக் கொண்டு மாற்றியமைக்கப்பட்டு இருந்தன. தற்போது, 2020இல் யாருமே எதிர்பாராத வண்ணம், அன்று எதிர்த்தரப்பில் இருந்தவர்கள், ஆளும் தரப்பாக மாறியிருக்கிறார்கள். அதுமட்டுமா ? மூன்றில் இரண்டு என்கிற அசுரபலத்துடன் ஆட்சிக்கு வந்திருக்கிறார்கள். இந்தநிலையில், கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக, நீண்டகால அடிப்படையில் திட்டமிடப…
-
- 0 replies
- 493 views
-
-
இலங்கையில் தொழிலாளர் வளம் எப்படி செறிந்து உள்ளதோ ? அதுபோல, எதிர்காலத்தில் தொழில்தருநர் வளமும் அதிகரிப்பதற்கான சாதக தன்மையை தொடக்கநிலை வணிகங்கள் (Startups) ஏற்படுத்தி இருக்கின்றன. குறிப்பாக, ஆசியாவில் தொடக்கநிலை வணிகங்கள் ஆரம்பிப்பதற்கு மிகசிறந்த இடங்களில் ஒன்றாக இலங்கையும் உள்ளது. அண்மைய காலத்தில் இலங்கையை நோக்கி படையெடுக்கும் அந்நிய முதலீட்டாளர்கள், தொடர்ச்சியாக நிகழ்த்தப்படும் துணிகர வணிக செயலமர்வுகள், தொடக்கநிலை வணிகங்களுக்கான போட்டிகள் என்பன இலங்கையின் புதிய முயற்சிகளுக்கு உலகளாவிய ரீதியில் வரவேற்புள்ளதையும், அதற்காக நிறுவனங்களும், தனிநபர்களும் நிதியைக் கொட்டி வழங்கத் தயாராகவுள்ளதையும் எடுத்துக் காட்டுகின்றது. இலங்கை மக்கள் அடிப்படையில், துணிகரவணிக முயற்ச…
-
- 0 replies
- 390 views
-
-
தொற்று கிருமி அனுப்பிய பீஜிங்குடன் இனி வர்த்தகம் இல்லை - ட்ரம்ப் வாஷிங்டன்: கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பீஜிங்குடன் இரண்டாவது கட்ட வர்த்தக தொடர்பு குறித்து பேசப்போவதில்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே வர்த்தகப் போட்டி நிலவி வரும் நிலையில் ட்ரம்ப் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் சீன அதிபருடன் தற்போது பேசப் போவதில்லை என்று குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனியார் தொலைக்காட்சி சேனலுக்கு பேட்டி அளித்தார். அப்போது, சீனாவுடன் இரண்டாவது கட்ட வர்த்தக பேச்சுவார்த்தை குறித்து பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது பதிலளித்த ட்ரம்ப், ''பீஜிங்குடன் கடந்த ஜனவரி மாதம் முதல் கட்ட…
-
- 2 replies
- 531 views
-
-
தொற்று நோயில் இருந்து பொருளாதாரங்கள் மீட்சிபெற சீன ஜனாதிபதி கூறும் யோசனைகள் பெய்ஜிங், ( சின்ஹுவா) அதிகரித்துவரும் ஒருதலைப்பட்சவாதமும் ( Unilateralism) வர்த்தக தற்காப்புக்கொள்கையும் ( Protectionism) உலக கைத்தொழில் மற்றும் விநியோக சங்கிலித்தொடரை ( (Global industrial and supply chains)சீர்குலைக்கின்றன என்பதால் கொவிட் –19 தொற்றுநோயில் இருந்து உலக பொருளாதாரங்கள் மீட்சிபெறவேணடுமானால், அந்த இரு அணுகுமுறைகளும் இல்லாமல் போகவேண்டும். இவ்வாறு அண்மையில் சவூதி அரேபியாவில் நடைபெற்ற ஜி — 20 நாடுகளின் இணையவழி உச்சிமகாநாட்டுக்கு பெய்ஜிங்கில் இருந்து ஆற்றிய உரையில் சீன ஜனாதிபதி சி ஜின்பிங் கூறினார். உலக பொருளாதாரங்களை மீட்டெடுக்கும் இலக்கை நோக்கி…
-
- 0 replies
- 476 views
-
-
தொழிற் சட்டங்களும் தொழிலாளர்கள் நிலையும் அனுதினன் சுதந்திரநாதன் / 2020 பெப்ரவரி 24 இறுதியாக உள்ள தரவுகளின் பிரகாரம், 2013ஆம் ஆண்டில் மொத்த ஊழியப்படையின் வேதனத்தில், 56 சதவீதமான 2.6 மில்லியன் வேதனமானது, நிரந்தரத் தொழிலைக் கொண்டிராதத் தொழிலாளிகள் மூலமே பெறப்பட்டுள்ளது. இது, இலங்கையில் எத்தகையச் சட்டத் திட்டங்கள் உள்ளபோதிலும் தொழில்தருனரும் தொழிலாளியும், குறுகிய வருமானப் பெறுகைக்கானச் சட்டங்களுக்குப் புறம்பான தொழில் முயற்சிகளுக்கு முன்னுரிமை வழங்குவதை எடுத்து காட்டுகிறது. இதன்காரணமாக, இறுதியில் மோசமாகப் பாதிக்கப்படுபவர்களாக தொழிலாளிகள் உள்ளபோதிலும் அவர்களது அறியாமையும் வறுமையும், இைதயே தொடரச் செய்வதுதான், இன்றைய சாபக்கேடாக உள்ளது. அதுமட்டுமல்லாது, நிர…
-
- 0 replies
- 391 views
-
-
தொழில் வாய்ப்புகளுக்கு சவால்கள் நிறைந்த ஆண்டாக 2021 அமையும் ச. சேகர் கொவிட்-19 தொற்றுப் பரவலின் தாக்கம் பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், 2021ஆம் ஆண்டில் தொழில் வாய்ப்புகளுக்கு சவால்கள் நிறைந்து காணப்படும். உற்பத்தி மற்றும் சேவைகள் துறைகளில் தொழில் வாய்ப்புகள் குறைவடைந்து வரும் நிலையில், பெருமளவானோர் விவசாயத் துறைசார் தொழில் வாய்ப்புகளை பெற்று வருகின்றனர். . நாட்டின் மொத்தத் தேசிய உற்பத்தியில் 7 சதவீத பங்களிப்பை மாத்திரம் இந்தத் துறை வழங்கும் நிலையில், ஏற்கனவே மொத்த பணியாளர்களில் 27 சதவீதத்தை இந்தத் துறை தன்வசம் கொண்டுள்ளது. இதனால், இந்தத் துறையின் உற்பத்தித்திறன் தொடர்பில் சிக்கல்கள் தோற்றம் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் காணப்படுகின்றன. …
-
- 0 replies
- 590 views
-
-
தொழில்நுட்ப ஜாம்பவான்கள் பலவேறு நிறுவனங்களாக்கப்படும் ? அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் மிகவேகமாக மட்டுமல்லாது மிகவும் பெரிதாகவும் வளர்ந்துள்ளது. இவை நாளாந்த வாழ்க்கையில் அதிகாரம் செலுத்துகின்றன. இவற்றின் வளர்ச்சி அமெரிக்க அரசு அவற்றை, ஒரு நிறுவனத்தில் இருந்து பல சிறு நிறுவனங்களாக மாற்ற முயற்சிப்பதாக இன்றைய செய்தி கூறுகிறது. யார் அந்த நிறுவனங்கள் : 1. அல்பபெட் ( கூகிள்) 2. அமேசான் 3. பேஸ்புக் 4. ஆப்பிள் இந்த முயற்சி எவ்வளவு தூரம் சாத்தியமாகும் என்பது கேள்விக்குறியே. https://www.reuters.com/article/us-usa-technology-antitrust/us-moving-toward-major-antitrust-probe-of-tech-giants-idUSKCN1T42JH WASHINGTON (Reuters) - The U.S. governme…
-
- 0 replies
- 601 views
-
-
தமிழர்கள் தூக்கி கொண்டாட மறந்த தமிழன்!
-
- 3 replies
- 557 views
-
-
சிறந்த முகாமைத்துவத்தைப் பின்பற்றாத கால மாற்றத்துக்கு ஈடுகொடுக்கும் வகையில் தம்மை தீர்க்கதரிசனத்துடன் மாற்றிக் கொள்ளத் தவறும் நிறுவனங்கள் எவ்வாறு அடிச்சுவடே தெரியாமல் காணாமல் போக நேரிடும் என்பதற்கு 178 ஆண்டுகள் பழைமையான தோமஸ் குக் நிறுவனத்தின் வீழ்ச்சி ஒரு முன்னுதாரணமாகவுள்ளது. நீண்ட கால வரலாற்றைக் கொண்ட தனது நிறுவனத்தின் பெயருக்குள்ள கௌரவமும் நன்மதிப்பும் தம்மைக் காப்பாற்றும் என அந்த நிறுவனத்தின் முகாமைத்துவத்தினர் கொண்டிருந்த கணிப்பு கடந்த திங்கட்கிழமை கானல் நீரானது. முடக்கப்படுவதிலிருந்து அந்த நிறுவனத்தைக் காப்பாற்ற எந்தவொரு நிதி நிறுவனமோ அரசாங்கமோ முன்வராத நிலையில் திடீரென அந்த நிறுவனம் திவாலாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டமை அதன் பல்லாயிரக்கணக்கான வாடிக…
-
- 1 reply
- 480 views
-
-
நடப்ப நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி ஒரு சதவீதத்துக்கும் கீழாக வீழ்ச்சிஅடையும்: பிட்ச் ரேட்டிங்ஸ் கணிப்பு கரோனா வைரஸ் பரவலால் உலக நாடுகளில் ஏற்பட்டுள்ள பெரும் பொருளாதாரச் சரிவு, இந்தியாவில் அமல்படுத்தப்பட்ட லாக்டவுன் ஆகியவற்றால் நடப்பு நிதியாண்டில் (2020-21) நாட்டின் பொருளாதார வளர்ச்சி 0.8 சதவீதமாக அதாவது ஒரு சதவீதத்துக்கும் கீழாக வீழ்ச்சி அடையும் என பிட்ச் ரேட்டிங்ஸ் கணித்துள்ளது. இதற்கு முன் பிட்ச் ரேட்டிங்ஸ் நிறுவனம் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கடந்த நிதியாண்டில் 4.9 சதவீதம் வளர்ச்சி அடையும் எனக் கணித்திருந்த நிலையில் நடப்பு நிதியாண்டில் 0.8 சதவீதமாக வீழ்ச்சி அடையும் எனத் தெரிவித்துள்ளது. ஆனால், வரும் 2021-22ம் நிதியாண்டில்…
-
- 0 replies
- 353 views
-
-
நம் கைகளிலுள்ள பணம் தொடர்பில் அறிவோமா? அனுதினன் சுதந்திரநாதன் இவ்வுலகில் பணமானது பல்வேறு வகை பெயர்களுடன் பல்வேறு பரிணாமங்களில் பலமில்லியன் பேர்களின் கைகளில் கொட்டிக் கிடக்கிறது. அவற்றில் எவை எல்லாம் பரிமாற்றத்துக்கு உகந்தவை ? எவை எல்லாம் சட்டச் சிக்கல் நிறைந்தவை? என்பது தொடர்பில் சிறிதாவது நாம் அறிந்திருக்க வேண்டியது அவசியமாகும். அப்போதுதான், நம் கைகளில் உள்ள பணம் கறை படிந்ததா? இல்லையா? என்பதை உணர்ந்து செயற்பட முடியும். இன்றைய நிலையில், நாம் பணத்தைக் கொண்டு எதனை வேண்டுமானாலும் செய்யலாம் என்கிற நிலைக்கு வந்துவிட்டோம். அந்தளவு தூரத்துக்கு மக்களின் பணத்தேவையும் பணம் மீதான மதிப்பும் அதிகரித்து விட்டது என்றே சொல்ல வேண்டும். சாதாரணமாக பணமானது சேவை வழங்கல், உற்பத…
-
- 0 replies
- 292 views
-
-
நல்லாட்சி அரசாங்கத்திடம் நாட்டை கையளிக்கையில் 7311பில்லியனையே அரசாங்கம் கடனாகக் கொண்டிருந்தது. எனினும் கடந்த நான்கரை வருடங்களில் 500பில்லியனை அந்த அரசாங்கம் கடனாகப் பெற்றுள்ளதாக இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே பாராளுமன்றத்தில் தெரிவித்தார். எமது அரசாங்கம் துறைமுகங்கள், விமான நிலையங்கள், நெடுஞ்சாலைகள் என பல்வேறு பாரிய அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொண்டுள்ள நிலையில் நல்லாட்சி அரசாங்கம் மஹாபொல, வெளிநாட்டு வேலைவாய்ப்பு, கல்வி, நிதியமைச்சு, மின்சார சபை என அனைத்துத் துறைகளிலும் கொமிசன் பெற்றுக்கொண்டதை காணமுடிகிறது எனவும் குறிப்பிட்டார். நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில் விமான கொள்வனவு மோசடி தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போத…
-
- 0 replies
- 447 views
-
-
நவீன உலகின் பர்மா பஜார்.! - உங்களுக்காக.. யீவு… இந்தப் பெயரை நீங்கள் கேள்விப்பட்டிருக்கக்கூட மாட்டீர்கள். ஆனால், இந்த நகரில் இருந்து வரும் ஒரு டஜன் பொருட்களாவது இப்போது உங்கள் வீட்டில் இருக்கும். உங்கள் வாழ்நாளில் சில ஆயிரம் ரூபாயை இந்த ஊர்ப் பொருட்களுக்காகச் செலவழித்திருப்பீர்கள். கொசு பேட்டில் ஆரம்பித்து மொபைல், ரிமோட் என நாம் அன்றாடம் பயன்படுத்தும் பெரும்பாலான சீனப் பொருட்களின் தாயகம், சீனாவில் இருக்கும் `யீவு’ என்ற இந்த நகரம்தான். சீனாவின் ஷுஜியாங் மாகாணத்தில் இருக்கிறது யீவு. மற்ற சீன நகரங்களை ஒப்பிட்டால், இது பரப்பளவில் சிறியது. ஆனால், யீவுவின் வர்த்தகச் சந்தை மிகப் பெரியது. 17 முக்கியத் தொழில் துறைகளில் 4,20,000-க்கும் அதிகமான பொருட்கள் இங்கே கிடை…
-
- 1 reply
- 1.3k views
-
-
நவீன கைத்தொழில் ஒன்றின் பின்னடைவு March 31, 2021 — வேதநாயகம் தபேந்திரன் — தென்னம் மட்டையை (பொச்சுமட்டையை) தூசாக்கி உரம் மண் கலந்து உருவாகும் பசளைப் பொதி வெளிநாடுகளுக்கு அனுப்பும் கைத்தொழில் ஆசிய நாடுகளில் அண்மையில் அறிமுகமாகிய ஒரு தொழிலாகும். இந்தப் பசளைப் பொதிப் பயிர்ச்செய்கையில் கிடைக்கும் பசளை, பூந்தோட்டம், பூச்சாடிகளுக்கு குளிர்தேசங்களில் பயன்படுத்தப்படுகிறது. எம்மவர்கள் அதிகமாக வாழும் புலம்பெயர் தேசங்களுக்கும் இங்கிருந்து ஏற்றுமதியாகிறது. வடக்கில் வேகமாக வளர்ந்து வந்த இந்த நவீன கைத்தொழில் வறண்டுபோகும் நிலையை அடைந்துவிட்டது. பொச்சுமட்டை என அழைக்கப்படும் தேங்காய் மட்டைகளை தும்பு ஆக்கி, தூசு ஆக்கி ஏற்றுமதிக் கம்பனிகளுக்க…
-
- 20 replies
- 4.4k views
-
-
நவீன நாணயக் கோட்பாடு இலங்கைக்கு பொருந்துமா? – 01 July 24, 2021 புதிய நாணய அச்சடிப்பு : அரசியல் மற்றும் பொருளாதார தாக்கங்கள் என்ன? பகுதி 1. — வி.சிவலிங்கம் — இலங்கையில் தற்போது பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கோவிட் – 19 தொற்று நோயின் தாக்கம் காரணமாக உலகம் முழுவதிலும் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் காரணமாக, பெருமளவில் உள்நாட்டு உற்பத்தி தளர்ந்து வெளிநாட்டு இறக்குமதியிலும், உல்லாசப் பயணத்துறையிலும், மத்திய கிழக்கு இலங்கையர்களின் வருமானத்திலும் தங்கியிருந்த நாடு அவை பாதித்துள்ள நிலையில் வெளிநாட்டுச் செலாவணியின் பற்றாக்குறை காரணமாக பல பிரச்சனைகளை எதிர்நோக்கி உள்ளது. உள்நாட்டு உற்பத்திகளும் வீழ்ச்சியடைந்து, வ…
-
- 1 reply
- 734 views
-
-
நஷ்டத்தில் இயங்கும் 10 பொதுத்துறை வங்கிகளை, லாபத்தில் இயங்கும் மற்ற வங்கிகளுடன் இணைத்து மத்திய அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம், 27 ஆக இருந்த பொதுத்துறை வங்கிகளின் எண்ணிக்கை 12 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று வெளியிட்டார். நாட்டில் நிலவி வரும் பொருளாதார மந்தநிலையை போக்க மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக, வரி குறைப்பு மற்றும் ஆட்டோ மொபைல் துறைக்கு பல்வேறு சலுகைக்கான அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சில தினங்களுக்கு முன் வெளியிட்டார். அப்போது, பேட்டி அளித்த அவர், ‘தொழில்துறையை ஊக்குவிக்க மேலும் பல சீர்த்திருத்த நடவடிக்கைகள் தொடரும்’ எனதெரிவித்தார். அ…
-
- 0 replies
- 293 views
-
-
(இராஜதுரை ஹஷான்) நாட்டின் நிதி நிலவரம் தொடர்பில் தன்னுடன் நேரடி விவாதத்திற்கு வருமாறு எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு நிதியமைச்சர் மங்கள சமரவீர அழைப்பு விடுத்துள்ளார். கடந்த அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்திகள் யாவும் பயனற்றதாகவே காணப்படுகின்றது. தங்களின் அதிகாரத்தையும், ஆட்சி பெருமைகளையும் தக்கவைத்துக் கொள்வதற்காகவே பாரிய தேசிய நிதி செலவிடப்பட்டு அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட்டன. அந்த அபிவிருத்திகள் ஏதும் தேசிய வருமானத்தை ஈட்டும் விதமாக அமையவில்லை என்றும் அவர் சுட்டிகாட்டினார். நல்லாட்சி அரசாங்கம் பெற்றுக் கொண்டுள்ள அரச முறை கடன்கள் தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் மங்கள சமரவீர கடந்த வாரம் வெளியிட்ட ஊடக அறிக்கை தொடர்பில…
-
- 0 replies
- 258 views
-
-
பங்கு சந்தையும் முதலீடும் முதலாவது நிறுவனம் ஒரு பில்லியன் டாலர் பெறுமதியை அடைந்தது - 1901 ஆம் ஆண்டில். பெயர் : யு எஸ் ஸ்டீல் நான்கு நிறுவனங்கள் இந்த வருடம் ஒரு த்ரிலியன் டாலர் பெறுமதியை அடையவுள்ளன : அமாசோன் ($AMZN) ; மைக்ரோ சொப்ட் ($MSFT) ; ஆப்பிள் ($AAPL) மற்றும் கூகிள் எனப்படும் அல்பபாட் ($GOOGL) ! இவை அனைத்தும் தொழில்நுட்பம் சார்ந்தவை என்பது கவனிக்கத்தக்கது. ஊபர் : வரும் நாட்களில் 'கிக்' பொருளாதாரம் என்ற சுய தொழில் முறையை வாகனம் மூலம் முன்னெடுத்த ஊபர் பங்கு சந்தைக்கு வர உள்ளது. இதன் பெறுமதி 85 பில்லியன்கள் அமெரிக்க டாலர்கள் என மதிக்கப்படுள்ளது. ஏற்கனவே லிப்ட் ($LYFT) ஒரு பொது நிறுவனமாக சித்திரை மாதம் பங்கு சந்தைக்கு வந்துள்ளது.
-
- 0 replies
- 438 views
-
-
நிதியியல் அறிவு அவசியமா? அனுதினன் சுதந்திரநாதன் / 2020 பெப்ரவரி 11 உண்மையில், நமது கல்வியறிவு விகிதமானது, நமது நிதியியல் சார்ந்த விடயங்களைச் சார்ந்தோ நிதிசார் தேவைகளை முழுமைபெறச் செய்வதாகவோ அமைந்திருக்க வேண்டியதில்லை. ஆனாலும், அதிகரித்த கல்வியறிவு விகிதமானது, நாளாந்த நமது நிதியியல் தேவைகளைப் பூர்த்தி செய்வதாகவோ அல்லது அடிப்படையான நிதியியல்சார் விடயங்களைப் பூர்த்தி செய்துகொள்ள உதவுவதாகவோ அமைந்திருக்க வேண்டியது அவசியமாகும். உதாரணமாக, கல்வியறிவு அதிகம் கொண்ட நம்மில் பலருக்கே, காசோலைகளை எப்படி நிரப்புவது, அதனை எப்படி வங்கியில் வைப்பிலிடுவது, பண வைப்பு மற்றும் பணம் மீளப்பெறல் இயந்திரங்களை எப்படி இயக்குவது, வங்கிக் கூற்றுகளை எவ்வாறு ஆய்வுசெய்வது, நிதிச் செயற்பாடுகளை…
-
- 2 replies
- 402 views
-
-
நிதியியல் மோசடி தொடர்பில் அவதானமாக இருங்கள் அனுதினன் சுதந்திரநாதன் இலங்கையில், கொரோனா வைரஸ் பரவலானது, மீண்டும் ஓர் அச்சநிலையை ஏற்படுத்தியுள்ளது. முழுமையான முடக்கத்தினூடாக, நாட்டை சுமூக நிலைக்கு கொண்டுவந்து, நாடு பழைய நிலையில் இயங்கிக்கொண்டிருந்தேபாது, மீண்டும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ளமை எதிர்பாராதது. அரசாங்கத்தினதும் பொதுமக்களதும் கவனயீனமே, இதற்கு முதன்மைக் காரணம் எனச்சொல்ல முடியும். இந்த நிலையில், நாடு தழுவிய பொது முடக்கத்தை நோக்கி, இலங்கை செல்வது தவிர்க்க முடியாத ஒன்றா எனும் எண்ணம் எல்லோரிடத்திலும் வர ஆரம்பித்துவிட்டது. இந்த சூழ்நிலை மிக மோசமான ஒன்று. காரணம், கடந்த காலத்தில் சுமார் மூன்று மாதங்களாக, நாம் அனுபவித்த முழுமையான பொது முடக்கம், நமது …
-
- 0 replies
- 495 views
-