வாணிப உலகம்
வணிகம் | பொருளாதாரம் | பங்குச்சந்தை | முதலீடு | சுய தொழில் | நாணயமாற்று
வாணிப உலகம் பகுதியில் வணிகம், பொருளாதாரம், பங்குச்சந்தை, முதலீடு, சுய தொழில், நாணயமாற்று பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
622 topics in this forum
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,சதீஷ் பார்த்திபன் பதவி,பிபிசி தமிழுக்காக 8 மணி நேரங்களுக்கு முன்னர் அனைத்துலக வர்த்தகச் சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவு கண்டு வந்த நிலையில், 'ரூபாயைக் கொண்டு வர்த்தகம்' என்ற புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது இந்திய அரசு. இந்த அறிவிப்பையொட்டி இந்தியாவுடன் ஒத்துழைக்கும் நாடுகளின் பட்டியலும் வெளியாகி உள்ளது. மொத்தம் 18 நாடுகள் இந்தியாவுடன் 'ரூபாய்' உதவியுடன் வர்த்தகம் மேற்கொள்ள முன்வந்துள்ளன. அவற்றுள் தென்கிழக்கு ஆசியாவில் முக்கிய பொருளாதார மையமாக விளங்கும் மலேசியாவும் ஒன்று. இனி இவ்விரு நாடுக…
-
- 2 replies
- 311 views
- 1 follower
-
-
பெருந்தொற்றுக்கு முந்திய காலத்துடன் ஒப்பிடுகையில் 2022 ஆம் ஆண்டில் இலங்கையிலிருந்தான விசா விண்ணப்பங்கள் 68% வரை எட்டியது சர்வதேச எல்லைகளின் திறப்பு மற்றும் தளர்த்தப்பட்ட கொவிட் நெறிமுறைகளினால் 2022 ஆம் ஆண்டில் இலங்கையிலிருந்தான விசா விண்ணப்பங்கள் கணிசமான மீட்சியைக் கண்டது. அரசாங்கம் மற்றும் இராஜதந்திர பணிகளுக்கு உலகின் மிகப் பெரிய வெளிவாரி சேவை வழங்குனர் மற்றும் தொழில்நுட்ப சேவை நிபுணர்களாகவும் விளங்கும் VFS Global இற்கு இணங்க பெருந்தொற்றுக்கு முந்திய காலத்துடன் ஒப்பிடுகையில் இலங்கையிலிருந்தான விசா விண்ணப்பங்கள் 68% வரை எட்டியது. இது 2021ஆம் ஆண்டு சர்வதேச எல்லைகளின் திறப்புடன் ஒப்பிடுகையில், 2022 ஆம் ஆண்டில் இவ்விண்ணப்ப கோரிக்கைகள் மூன்று மடங்கு அதிகரிப்பை பதிவு…
-
- 0 replies
- 524 views
-
-
கஷ்டப்பட்டு உழைத்த பணத்தை இழந்துவிட வேண்டாம் ச.சேகர் இலங்கை பொருளாதார நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ள நிலையில், பொது மக்களுக்கு எவ்வாறான முதலீடுகளில் தம்வசமிருக்கும் பணத்தை முதலீடு செய்யலாம் என்பது தொடர்பில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளதை எம்மால் அவதானிக்க முடிகின்றது. குறிப்பாக, கடந்த ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு பெருமளவு வீழ்ச்சியடைந்தததைத் தொடர்ந்து, பொது மக்கள் சேமிப்பில் வைத்திருந்த பணத்தின் பெறுமதியும் வீழ்ச்சி கண்டது. இதனைத் தொடர்ந்து பணவீக்கமும் அதிகரித்திருந்த நிலையில், வாழ்க்கைச் செலவும் அதிகரித்துள்ளது. இவ்வாறான சூழ்நிலைகளைப் பயன்படுத்தி, விபரமறியாத மக்களை ஏமாற்றி, அவர்கள் தம்வசம் வைத்த…
-
- 0 replies
- 238 views
-
-
ரூபாயின் மதிப்பு உண்மையில் உயர்ந்துள்ளதா? ச.சேகர் அண்மைய சில நாட்களில் இலங்கை ரூபாயின் மதிப்பு உயர்வடைந்த வண்ணமுள்ளது என்பது பலர் மத்தியில் பரவலாக பேசப்படும் விடயமாக அமைந்திருப்பதுடன், இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் மற்றும் அரசாங்கத்தின் நிதி அமைச்சைச் சேர்ந்தவர்கள் இதற்கு அரசினால் மேற்கொள்ளப்பட்ட கொள்கைத் தீர்மானங்கள் காரணமாக அமைந்திருப்பதாக தெரிவித்திருந்தனர். பொருளியலைப் பொறுத்தமட்டில், ஏதேனும் ஒரு பண்டத்தின் அல்லது சேவையின் விலை அல்லது பெறுமதி உயர்வடைகின்றதாயின், அதற்கு காணப்படும் கேள்வி அதிகரித்திருக்க வேண்டும் அல்லது அதன் விநியோகம் குறைவடைய வேண்டும். இது சாதாரணமாக பாடசாலைக் கல்வியில் பொருளியல் பாடத்தில் கற்றுக் கொண்ட அடிப்படை விடயமாகும். இலங்கைச் …
-
- 1 reply
- 334 views
- 1 follower
-
-
அமெரிக்கா டர்ர்ர்....தங்கம் விலை விர்ர்ர் - ஏன்? (எளிய விளக்கம்) உங்ககிட்ட 1991ம் வருசம் ஆயிரம் ரூபாய் இருந்ததாக வைத்துக்கொள்வோம்..அதை ஒரு பீரோவில் பத்திரமாகப் பூட்டி வைக்கின்றீர்கள். இருபது வருடம் கழித்து இப்போது பீரோவைத் திறந்து பார்த்தால், உள்ளே எவ்வளவு இருக்கும்? http://2.bp.blogspot.com/-rq-VsIrvPsw/TlP0F3qZB1I/AAAAAAAAAvI/lKqS6xuaxWs/s320/money-house.jpg ‘என்னய்யா இது கூமுட்டைத்தனமான கேள்வி..ஆயிரம் ரூபாய் தான் இருக்கும்’ன்னு நீங்கள் டென்சன் ஆவது தெரிகின்றது.ஆனால் ஆயிரம் ரூபாய் அப்போது இருந்த அதே மதிப்புடன் தான் இப்போது இருக்கிறதா? அப்போது எங்கள் ஊர் தியேட்டரில் டிக்கெட் விலை 3 ரூபாய். 333 ஷோ இந்த ஆயிரம் ரூபாய…
-
- 0 replies
- 592 views
- 1 follower
-
-
உலகின் மதிப்புமிக்க நிறுவனங்களின் பட்டியல் இதோ… சா்வதேச அளவில் பெரும் நிறுவனங்களின் பிராண்ட் மதிப்பை ஆய்வு செய்யும் ‘பிராண்ட் ஃபைனான்ஸ்’ அமைப்பு வெளியிட்ட ‘குளோபல் 500’ அறிக்கையின் படி ஆப்பிள் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி அமேசான் நிறுவனம் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளது. உலகம் முழுவதும் உள்ள நிறுவனங்களின் பிராண்ட் மதிப்பை கணக்கிட்டு மதிப்புமிக்க முதல் 500 நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இப்பட்டியலில் கடந்த ஆண்டு முதலிடத்தில் இருந்த ஆப்பிள் நிறுவனத்தின் பிராண்ட் மதிப்பு 16 சதவீதம் குறைந்து 297.5 பில்லியன் அமெரிக்க டொலருடன் 2 ஆம் இடத்தைப் பெற்றுள்ளது. இதனிடையே கடந்த ஆண்டு 2 ஆம் இடத்தில் இருந்த அமேசான் நிறுவனத்தின் பிராண்ட் மதி…
-
- 0 replies
- 581 views
-
-
"தங்கம் விலை ஏறினாலும் சேமிப்புக்கு அதுதான் சிறந்த வழி" - வலியுறுத்தும் ஆனந்த் சீனிவாசன் கட்டுரை தகவல் எழுதியவர்,பிரமிளா கிருஷ்ணன் பதவி,பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES கடந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியாவில், ஒரு கிராம் தங்கத்தின் விலை 5,200 ரூபாயைத் தொட்டுள்ளது. இருப்பினும் இந்த நேரத்திலும் தங்கத்தில் சேமிப்பு செய்வது சரியாக இருக்கும் என்கிறார் பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன். தங்கத்தின் விலை அடுத்த ஆண்டிற்குள் ஒரு கிராம் 6,000 ரூபாய் வரை உயர வாய்ப்புள்ளதாகவும், விலை ஏறியுள்ள இந்த நேரத்திலும்கூட நடுத்தர குடும்…
-
- 0 replies
- 319 views
- 1 follower
-
-
SL இல் INR ஐ சர்வதேச நாணயமாக நியமித்தல் ஒரு நாட்டில் பொருளாதார நெருக்கடி, வறுமை போன்ற சூழல் நிலவுகிறது என்றால் அந்நாட்டு அரசிடமும், மக்களிடமும் போதிய பணம் இல்லை என்று பொருளாகும். இலங்கையை பொறுத்தவரையில், நாளுக்கு நாள் நிலைமை மோசமடைந்து கொண்டே செல்கின்றது. கையிருப்பு குறைந்துவிட்டது. கஜானா முற்றாக காலியாகிவிட்டது. கையேந்தும் நிலையை விடவும் மாற்று வழிகளே இல்லை, இன்றேல் நாளுக்கு நாள் பணத்தை அச்சடிக்கவேண்டும். அந்தளவுக்கு பொருளாதாரம் ஆட்டங்கண்டுக்கொண்டிருக்கின்றது. சர்வதேச நாண நிதியத்தின் உதவிக்காக காத்திருக்கும் இலங்கை, நிதியத்தால் விதிக்கப்பட்ட நிபந்தனைகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றிக்கொண்டு வருகின்றது. அதற்காக சட்டங்களில் திருத்தங்களையும் மேற்கொண்டு வருகின்றத…
-
- 7 replies
- 1.3k views
- 1 follower
-
-
சர்வதேச பொருளாதார நிலை இருள்மயமானதாக காணப்படுகின்றது - சர்வதேச நாணய நிதியம் By RAJEEBAN 14 NOV, 2022 | 02:22 PM கடந்த மாதம் எதிர்வுகூறப்பட்டதை விடவும் சர்வதேச பொருளாதார நிலை இருள்மயமானதாக காணப்படுகின்றது என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. தொடர்ச்சியான பரந்துபட்ட அதிக பணவீக்கம் காரணமாக நிதிக்கொள்கைகள் இறுக்கமாக்கப்பட்டமை ,சீனாவின் பொருளாதார வளர்ச்சி வேகம் குறைவடைந்துள்ளமை,உக்ரைன் மீதான ரஸ்யாவின் போரினால் ஏற்பட்டுள்ள உணவு பாதுகாப்பின்மை மற்றும் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளமையே இதற்கான காரணம் என சர்வதேச நாணயநிதியம் தெரிவித்துள்ளது. கடந்த மாதம் சர்வதேச நாணய நிதியம் 2023 இல் உலக பொருளாதார வளர்ச்சி 2.7 வீதமாக காணப…
-
- 0 replies
- 152 views
- 1 follower
-
-
இந்திய வங்கிகள்: கடன் 'ரைட் ஆஃப்' என்பது பாமரர்களின் பணத்தை கொள்ளையடிப்பதா? கட்டுரை தகவல் எழுதியவர்,தினேஷ் உப்ரேதி பதவி,பிபிசி செய்தியாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES *** நூறு/ஆயிரம் கோடி ரூபாய் கடன் ரைட் ஆஃப் செய்யப்பட்டது. இது போன்ற செய்திகள், செய்தித்தாள்கள், டிவி, ஆன்லைன் போர்டல்கள் மற்றும் சமூக ஊடகங்களில் அடிக்கடி தலைப்புச் செய்திகளாக வருகின்றன. *** என்பதை பார்த்து நீங்கள் இங்கே ஏதோ ஒரு வார்த்தை தவறிவிட்டதாக நினைக்கிறீர்களா? அது அப்படி இல்லை. இந்த மூன்று நட்சத்திரங்களின் இடத்தில் ஏதேனும் ஒரு வங்…
-
- 0 replies
- 367 views
- 1 follower
-
-
வரிக் கொள்கையுடன் அரசினால் ஏற்படுத்தப்பட வேண்டிய ஏனைய சீராக்கங்கள் ச.சேகர் – business.tamilmirror@gmail.com நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ள பொருளாதாரத்தை சீராக்கும் வகையில், நிதி அமைச்சர் எனும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் புதிய வரிக் கொள்கை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனூடாக, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் நிர்வாகத்தினால் மேற்கொள்ளப்பட்ட வரிக் குறைப்புகளுக்கு முன்னர் 2019 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நிலவிய வருமான வீதத்துக்கு நிகரான அரச வருமானத்தை ஈட்டுவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. நடப்பு ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் நாடு திவாலாகியுள்ளதாக அறிவித்திருந்ததைத் தொடர்ந்து, வரி வருமான அதிகரிப்பு தவிர்க்கப்படமுடியாத விடயமாக மாறியிருந்தது. அத்துடன், சர…
-
- 0 replies
- 285 views
-
-
கூகுள், பேஸ்புக், அமேஸானின் மொத்தப் பெறுமதியைவிட அப்பிள் நிறுவன பெறுமதி அதிகரிப்பு By DIGITAL DESK 3 04 NOV, 2022 | 11:43 AM கூகுள், பேஸ்புக், அமேஸான் நிறுவனங்களின் கூட்டு சந்தைப் பெறுமதியைவிட அப்பிள் நிறுவனத்தின் சந்தைப் பெறுமதி அதிகரித்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. புதன்கிழமை நிறைவடைந்த பங்குச்சந்தை விற்பனைகளின் பின்னர் அப்;பிள் நிறுவனத்தின் சொத்து மதிப்பு 2.307 ட்ரில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது என யாஹூ நிதியியல் தரவுகள் தெரிவிக்கின்றன. அதேவேளை, கூகுளின் தாய் நிறுவனமான அல்பாபெட்டின் மொத்த சந்தைப்பெறுமதி 1.126 ட்ரில்லியன் டொலர்களாக இருந்தது. அமோஸானின் சந்தைப் பெறுமதி 939.78 பில்லியன் டொலர்களாகவு…
-
- 0 replies
- 129 views
- 1 follower
-
-
தீபாவளி: டிஜிட்டல் தங்கம் என்றால் என்ன? தற்போது ஏன் அது பிரபலம்? அஹ்மீன் கவாஜா பிபிசி நியூஸ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பல இந்தியர்கள் இந்த தங்க நகைகளை வாங்க கடைகளுக்கு சென்றாலும், இன்றைய இளைஞர்கள் 'டிஜிட்டல் தங்கம்' வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டுவதாக தெரிகிறது. ஒவ்வொரு ஆண்டும், உலகம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மக்கள் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள். இந்துக்கள் கொண்டாடும் இந்த பண்டிகை, இந்த ஆண்டு அக்டோபர் 24ஆம் தேதியன்று கொண்டாடப்படுகிறது. 2,500 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த சமயத்தில்…
-
- 0 replies
- 282 views
- 1 follower
-
-
சில சிறப்பு பயன்பாடுகளுக்கு விரைவில் CBDC(Central Bank Digital Currency) அறிமுகப்படுத்தப்படும் என்று RBI குறிப்பிட்டது. இது சில்லறை மற்றும் மொத்த பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், டிஜிட்டல் கரன்சி அல்லது ரிசர்வ் வங்கியின் இ-ரூபாய் என்றால் என்ன, அது எப்படி வேலை செய்யும் மற்றும் அதன் நன்மைகள் என்ன என்பதை தெரிந்துகொள்வோம்.
-
- 0 replies
- 176 views
- 1 follower
-
-
டொலருக்கு எதிராக... பவுண்ட் வரலாறு காணாத அளவுக்கு, வீழ்ச்சி! உலகளவில் புதிய முதலீட்டாளர்கள் அமெரிக்க நாணயத்தை நோக்கி விரைந்துள்ள நிலையில், டொலருக்கு நிகரான பவுண்ட், வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளது. ஸ்டெர்லிங் பவுண்ட், திங்கட்கிழமை ஆரம்பத்தில் கிட்டத்தட்ட 5 சதவீதம் சரிந்து 1.0327 பவுண்டாக இருந்தது. திறைசேரியின் தலைவர் குவாசி குவார்டெங், 50 ஆண்டுகளில் இல்லாத அளவு மிகப்பெரிய வரிக் குறைப்புத் திட்டத்தை வெளியிட்ட பிறகு 1985 ஆம் ஆண்டிற்கு பிறகு புதிய வீழ்ச்சியைக் கண்டது. 45 பில்லியன் பவுண்டுகள் வரி குறைப்பு தொகுப்பு பொது நிதி நிலைத்திருக்குமா என்பது குறித்த தீர்ப்பை சந்தை வழங்கியுள்ளது. ஆசிய வர்த்தகத்தில் திங்கட்கிழமை …
-
- 16 replies
- 1.4k views
- 1 follower
-
-
மீண்டும்... கச்சா எண்ணை, விலை உயர்வு! உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை நேற்று (வெள்ளிக்கிழமை) நிலவரப்படி அதிகரித்துள்ளது. அதன்படி, பிரன்ட் கச்சா எண்ணெய் பரல் ஒன்றின் விலை 91.79 டொலர்களாக பதிவாகியுள்ளது. முந்தைய நாளுடன் ஒப்பிடுகையில் சுமார் 30 டொலர்கள் அதிகரிப்பைக் காட்டுகிறது. https://athavannews.com/2022/1298463
-
- 0 replies
- 395 views
-
-
பணி ஓய்வுக்குப் பிறகு பணம் தேவையா? இந்த டிப்ஸ் உங்களுக்காக ஐ.வி.பி கார்த்திகேயா பிபிசி தெலுங்கு சேவைக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES நமது தலைமுறைக்கும் நமக்கு முந்தைய தலைமுறைக்கும் இடையே உள்ள முக்கிய வேறுபாடு 'பணி ஓய்வுக்கு பிறகு கிடைக்கும் ஓய்வூதியம்' என்று சொன்னால் அது மிகையாகாது. ஓய்வூதிய பாதுகாப்பு இல்லாத முதல் தலைமுறையாக நமது தலைமுறை இருக்கிறது. ஆகவே, நமது ஓய்வுக்குப் பிந்தைய காலம் எப்படி இருக்கும் என்பது ஊகங்கள் மற்றும் சில வழிமுறைகளை பொருத்தே அமைகிறது. ஆனால், பலருக்கும் அது குறித்த புரிதல் தெளிவாக இல்லை. அத்தகைய சூழ்நிலையில், ஓய்வுக…
-
- 0 replies
- 236 views
- 1 follower
-
-
உயரும் விலைவாசியை சமாளிக்க என்ன செய்ய வேண்டும்? - ஆனந்த் ஸ்ரீனிவாசன் கூறும் வழிகள் 6 மணி நேரங்களுக்கு முன்னர் கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவில் விலைவாசி உயர்வு கடுமையாக அதிகரித்துள்ளது. பணவீக்கமும் அதிகரித்திருக்கிறது. இதனால், மக்களின் கையில் உள்ள பணம் குறைவதோடு, பொருட்களின் விலையும் அதிகரித்திருக்கிறது. இந்தச் சூழல் எப்படி ஏற்பட்டது, இதனை எப்படிச் சமாளிக்கலாம் என்பது குறித்து பொருளாதார நிபுணர் ஆனந்த் ஸ்ரீநிவாசனுடன் உரையாடினார் பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதன். கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவில் விலைவாசி உயர்வு மிக வேகமானதாகவும் அதிகமானதாகவும் இருக்கிறது. என்ன காரணம்? மில்டன் ஃப்ரைட்…
-
- 3 replies
- 386 views
- 1 follower
-
-
ராகேஷ் ஜுன்ஜுன்வாலா மறைவு - பங்கு வர்த்தகத்தில் கோடிகளை குவித்தவர் 14 ஆகஸ்ட் 2022, 06:28 GMT பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ராகேஷ் ஜுஞ்சுன்வாலா இந்திய தொழிலதிபரும், பிரபல பங்குச்சந்தை வர்த்தகருமான ராகேஷ் ஜுன்ஜுன்வாலா, தனது 62 வயதில் இன்று மும்பையில் காலமானார். அவர் இறப்புக்கான காரணம் இதுவரை அலுவல் பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. பிபிசிக்கு கிடைத்த தகவல்களின்படி, அவர் சிறுநீரக செயலிழப்பால் இறந்திருக்கலாம் என்று தெரியவருகிறது. இந்தியாவின் 'வாரன் பஃபெட்' என்று அழைக்கப்படும் இவருடைய நிகர சொத்து மதிப்பு சுமார் 5.8பில்லியன் அமெரிக்க டாலர்கள் என ஃபோர்ப்ஸ் சஞ்சிகை மதிப்பிட்டுள்…
-
- 2 replies
- 353 views
- 1 follower
-
-
சர்வதேச அளவில்... "ஜோன்சன்ஸ் பேபி பவுடர்" விற்பனையை, நிறுத்த தீர்மானம்! எதிர்வரும் 2023ஆம் ஆண்டு முதல் சர்வதேச அளவில் ஜோன்சன்ஸ் பேபி பவுடர் விற்பனையை நிறுத்த இருப்பதாக ஜோன்சன் அண்ட் ஜோன்சன் நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்கு பதிலாக தற்போது பயன்படுத்தும் ‘டால்க்’ கனிமத்துக்கு பதிலாக சோள மாவு மூலப்பொருள் கொண்ட புதிய பவுடர் அறிமுகப்படுத்தப்படும் என அந்நிறுவனம் கூறியுள்ளது. அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயற்படும் பன்னாட்டு நிறுவனமான ஜோன்சன் அண்ட் ஜோன்சன் நிறுவனத்தின் பவுடருக்கு எதிராக சர்வதேச அளவில் ஆயிரக்கணக்கான நுகர்வோர் புகார் தெரிவித்து வழக்கும் தொடுத்துள்ளனர். இதையடுத்து கடந்த 2020ஆம் ஆண்டில் அமெரிக்கா மற்றும் கனடாவில் அந்த பவுடர…
-
- 0 replies
- 224 views
-
-
வரும் 2025ம் ஆண்டில் சர்வதேச ஆணுறை சந்தை வளர்ச்சி அதிகரிக்கும் ; அறிக்கை தகவல் சர்வதேச ஆணுறை சந்தை வளர்ச்சியானது வரும் 2025ம் ஆண்டில் 3.70 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயரும் என அறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது. நியூயோர்க், உலகில் பாலியல் சார்ந்த வியாதிகள் பற்றிய விழிப்புணர்வு அதிகரித்து வரும் சூழலில், சர்வதேச ஆணுறை சந்தை வளர்ச்சியானது வரும் 2025ம் ஆண்டில் 3.70 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரிக்கும் என அறிக்கையை வெளியிட்டு உள்ள டெக்னோவியோ என்ற சர்வதேச தொழில் நுட்ப ஆராய்ச்சி மற்றும் ஆலோசனை நிறுவனம் தெரிவிக்கின்றது. இந்த வளர்ச்சியானது, ஆண்டுக்கு 8 சதவீதம் என்ற அளவில் இருக்கும். இவற்றில், ஆசிய பசிபிக் பகுதிகளான சீனா, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகியவற்றில் 44 சத…
-
- 0 replies
- 271 views
-
-
20 ஆண்டுகளில் முதன்முறையாக, யூரோ (EUU) மற்றும் அமெரிக்க டாலருக்கு இடையிலான மாற்று விகிதம் சமநிலையை எட்டியுள்ளது -- அதாவது இரண்டு நாணயங்களும் ஒரே மதிப்புடையவை. செவ்வாயன்று யூரோ $1 ஐ எட்டியது, ஆண்டின் தொடக்கத்தில் இருந்து சுமார் 12% குறைந்தது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பால் ஏற்பட்ட உயர் பணவீக்கம் மற்றும் எரிசக்தி வழங்கல் நிச்சயமற்ற தன்மை ஆகியவற்றால் தூண்டப்பட்ட கண்டத்தில் மந்தநிலை பற்றிய அச்சங்கள் ஏராளமாக உள்ளன. போருக்கு முன்னர் ரஷ்ய குழாய்கள் மூலம் அதன் எரிவாயுவில் சுமார் 40% பெற்ற ஐரோப்பிய ஒன்றியம், ரஷ்ய எண்ணெய் மற்றும் எரிவாயுவை சார்ந்திருப்பதை குறைக்க முயற்சிக்கிறது. அதே நேரத்தில், ரஷ்யா சில ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு எரிவாயு விநியோகத்தைத் தடுத்து நிறுத்தியது ம…
-
- 1 reply
- 512 views
- 1 follower
-
-
டுவிட்டர் தளத்தை... 44 பில்லியன் டொலர்கள் கொடுத்து வாங்கும் ஒப்பந்தத்தை, இரத்து செய்தார் எலான் மஸ்க்! முன்னணி சமூகவலைதளமான டுவிட்டர் தளத்தை 44 பில்லியன் டொலர்கள் கொடுத்து வாங்கும் ஒப்பந்தத்தை இரத்து செய்வதாக, டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், உலகின் பணக்காரருமான எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். டுவிட்டர் தளத்தில் போலி அல்லது ஸ்பேம் கணக்குகள் பற்றிய தகவல்களை நிறுவனம் வழங்கவில்லை என்று எலான் மஸ்க் கூறியுள்ளார். பாதுகாப்பு மற்றும் பரிவர்த்தனை ஆணையத்தில் தாக்கல் செய்ததில், மஸ்கின் வழக்கறிஞர்கள், போலி கணக்குகள் குறித்து சரியான தகவலை டுவிட்டர் நிறுவனம் தரவில்லை என குறிப்பிட்டுள்ளனர். அத்துடன், தனது பல்வேறு கேள்விகள், சந்தேகங்களுக்கும் டுவிட…
-
- 3 replies
- 332 views
- 1 follower
-
-
மின்சார கார் - எதிர்காலம். மின்சார கார்கள் குறித்தும் இலன் மஸ்க் உடைய டெஸ்லா கார்கள் அதிகூடிய விலைக்கு வியாபாரமாவதும், அவர் இன்று உலகின் மிகப் பெரும் பணக்காரர் என்றும் பார்க்கிறோம். ஆனாலும், இந்த மின்சாரக்கார்களில், உள்ள முக்கிய பிரச்சனையே, சார்ஜிங் நேரமே. ஒவொரு காருக்கும், குறைந்தது 30 நிமிசம் தொடக்கம், 3 மணிநேரம் வரை நேரம் தேவை. அதேவேளை, போதிய சார்ஜிங் பாயிண்ட் இல்லாததால், இருக்கும் சார்ஜிங் பாயிண்ட்டில், லைனில் நின்று உண்டாகும் விரக்தியால், மின்சாரக் கார் களுக்கு இன்னும் மவுசு பெரிதாக வரவில்லை. உண்மையில், மின்சாரக்கார்களின் உற்பத்தி செலவு, பெற்றோல் கார்களின் உற்பத்தி செலவிலும் பார்க்க குறைவானது. ஒரு பாட்டரி, ஒரு மோட்டர் இரண்டுமே பிரதானமானவை. இவ…
-
- 3 replies
- 400 views
-
-
அடுத்தவருடம் சர்வதேச அளவில் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படலாம்- சர்வதேச நாணயநிதியம் சர்வதேச பொருளாதார நிலை எதிர்காலத்தில் எவ்வாறானதாக காணப்படும் என்பது குறித்த மதிப்பீடுகள் பொருளாதார நிலை கணிசமான அளவிற்கு இருள்மயமாக காணப்படும் என தெரிவிக்கின்றன என சர்வதேச நாணயநிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலீனா ஜோர்ஜியா ஆபத்துக்கள் உயர்நிலைக்கு சென்றுள்ளதால் அடுத்தவருடம் சர்வதேச பொருளாதார மந்தநிலைக்கான சாத்தியக்கூறுகளை நிராகரிக்க முடியாது என தெரிவித்துள்ளார். 2022 ஆண்டிற்கான சர்வதேசபொருளாதார வளர்ச்சி குறித்த எதிர்வுகூறலை 3.6 வீதமாக சர்வதேச நாணயநிதியம் குறைக்கும் என ரொய்ட்டருக்கு தெரிவித்துள்ள அவர்சரியான எண்ணிக்கையை மதிப்பிடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக கு…
-
- 0 replies
- 254 views
-